Wednesday 18 September 2013

டாப் 20 சமையல் குறிப்புகள்!

By: Unknown On: 21:43
  • Share The Gag

    1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
    2. முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
    3. அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.
    4. மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.
    5. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.
    6. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
    7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.
    8. பச்சை மிளகாய் வாடாமல் இருக்க அதன் காம்பை கிள்ளிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் வரும்.
    9. ஃப்ரிட்ஜ் இல்லாதவங்க கீரைகளை ஈரத்துணியில் லேசாக சுற்றி வைக்கலாம்.பச்சை மிளகாயையும் ப்ரெஷ்-ஆ மாதிரி வைக்கலாம்.
    10. தேங்காய் துண்டுகளை ஒரு பிளஸ்டிக் டப்பாவில் தண்ணீர் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரும்.
    11. காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.
    12. உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
    13. பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
    14. தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.
    15. தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
    16. சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.
    17. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
    18. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
    19. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
    20. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
     

    நெஞ்சை அள்ளும் தஞ்சை - சுற்றுலாத்தலம்!

    By: Unknown On: 21:35
  • Share The Gag

  • நெஞ்சை அள்ளும் தஞ்சை


    வரலாறு:
     
    மிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நகரம் தஞ்சை. இந்த  பகுதியை  ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே கொண்டு இந்நகரம் "தனஞ்சய ஊர்"
    என்று அழைக்கப்பட்டு பின்பு அதுவே மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றதாக கூறப்படுகிறது.
         கி.பி. 850-ல் தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் கைப்பற்றித் தஞ்சையில்  சோழர் ஆட்சியைத் நிறுவினான். இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் பெற்றது. கி.பி. 1532-ல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு
    ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்ததால் தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.
         
            கி.பி 1676-ல் மராட்டிய மன்னனர் சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி  ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட
    ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன.
    1832-1855 காலத்தில் ஆண்ட இரண்டாம் சிவாஜி மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் சென்றது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.


     
    தஞ்சை பிரகதீசுவரர் கோயில்:
            
    க்கோயில் பெருவுடையார் கோயில் என்றும் தஞ்சை பெரிய கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது . இக்கோயில் உலக பரம்பரியச் சின்னமாகா யுனெஸ்கோவினால்
    அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அமைப்பானது பண்டைய தமிழர்கள் கட்டடக்கலையில் கொண்ட நுட்பமான அறிவை காட்டுகிறது.
         இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே வைத்து கோயில்கள் கட்டப்பட்டுகொண்டிருந்த அக்காலத்திலேயே இக்கோயில் 15 தளங்களைக்  கொண்டு சுமார் 60 மீட்டர் உயரத்தில்  கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டது ஆகும். இதன் உயரம் 14 மீ, நீளம்      7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


    சரசுவதிமகால் நூலகம்:


          லகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாக உள்ளது  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். இந்த நூலகம்  சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் நாயக்கர்  மன்னர்கள் மற்றும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களாலும் வளர்ச்சிப்பெற்றது.

        கல்வெட்டுகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி முதலில் இந்நூலகம் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம்   என அழைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் பணியாற்றிவர்களை சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டனர்.

           இந்நூலகத்தில்  தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,  இலத்தீன், கிரேக்கம் முதலிய  பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 25,000 சமஸ்கிருத நூல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'நந்திநாகரி' என்னும் எழுத்து வடிவத்தில் உள்ள சுவடிகளும் இங்கு உள்ளன.
         கி.பி. 1703-ல் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 'சீவகசிந்தாமணி' நூல் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட 'சாமுத்திரிகா' என்ற அரியநூல் ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது .





    தஞ்சை ஓவியங்கள்:
            ந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள்  என்ற ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இத்தஞ்சை ஓவியத்தினை குலதொழிலாக கொண்டனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் கலைகளின் மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்பதால் இவர்களுக்கு வேண்டுமளவிற்கு வாய்ப்புக்களை வழங்கி ஆதரித்து வந்தார்.
    கி.பி. 16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள்,  ஆகியோர்  தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். இதனால் தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.
    மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது.


    தஞ்சாவூர் அரண்மனை

     
          நாயக்கர்களால் பாதியும் மீதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டது. கிழக்குப் பிரதான வீதியில் உள்ள இந்த அரண்மனை வரிசைத் தொடராகக் கட்டங்களாக இருக்கும். இதன் நுழைவாயில் நான்கு கட்டுகள் கொண்டு அரசவைக்கு கொண்டுசெல்வதாக இருக்கிறது. அங்கிருந்து வடக்கு, கிழக்கு புறவாயில்களுக்குச் செல்லும் வகையில் சுற்றுச்சுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

       

     மூன்றாவது கட்டின் தெற்குப்புறத்தில் 190 அடி உயரத்தில் எட்டு அடுக்கு கொண்ட கோபுரம் உள்ளது. இதுவே இந்த அரண்மனையின் கண்காணிப்புக் கோபுரமாகவும், ஆயுதக் கிடங்காகவும் கி.பி. 1855 வரை இருந்து வந்துள்ளது.
     


    தஞ்சை தலையாட்டி பொம்மை:
            லைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சையில் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் உருவானதுதான் தலையாட்டி பொம்மைகள். தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தினை பறைசாற்றும் இப்பொம்மைகள் காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படுகிறது. இப்பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப் படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப  செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன, முதலில் ராஜா ராணி பொம்மைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பிறகு நடன மங்கை பொம்மை, தாத்தா, பாட்டி பொம்மை என காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகின்றன.
    தமிழ் பல்கலைக்கழகம்:
               மிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளின் உயர் ஆய்வினை நோக்கமாகக் கொண்டு 1981 செப்டம்பர் 15 ஆம் நாள்  தமிழ் மொழிக்கென்று 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்தில் தமிழில் உயர்கல்வி, மற்றும் ஆய்வுகள் இங்கு நடந்து வருகின்றன. பழைய நாணயங்கள், இசைக்கருவிகள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன. இப்பல்கலைகழகதின் முதல் துணைவேந்தர் மொழியியலாளர் திரு. வ.ஐ. சுப்பிரமணியம் ஆவார்.

    பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை - சுற்றுலாத்தலம்

    By: Unknown On: 20:49
  • Share The Gag

  • பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை
     
       ன்னியாகுமரி மாவட்டத்தின்  தக்களைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மை. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியபோது கட்டப்பட்டது. நுணுக்கமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய 14 கட்டிடங்கள், 144 ராட்சத அறைகள் கொண்ட இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
     மேலும் இந்த அரண்மணையில் எங்குமே மின் விளக்குகள் கிடையாது. சூரியனின் ஒளியினாலே இந்த அரண்மனைக்கு வெளிச்சம் கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனை தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

    வரலாறு :
      கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்ட இந்த அரண்மையை பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது.1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    அரண்மனையின் முகப்பு:
       கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம்.. பிரமாண்டமான அரங்குகளும் தகதகக்கும் அலங்காரங்களும் இந்த அரண்மனையில் இல்லையென்றாலும், அரண்மனைக்கேயுரிய  செழிப்பானது , அரண்மனையின் உட்புற , வெளிப்புற வடிவமைப்பில் காணலாம்.
    பூமுகத்து வாசல்:
      ரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன்மை மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம்பரியத்துக்கே யுரித்தான கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும். ஒன்றிலொன்று வேறுபட்ட 90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை மிகவும் பிரசித்தமானது.
    இங்கு பொதுமக்களின் பார்வைக்காக, சீனர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிம்மாசனம், முற்றிலும் முழு கருங்கல்லால் செய்யப்பட்ட சாய்மனைக்கதிரை, உள்ளூர் மக்களால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் உள்ளன.
    மந்திரசாலை:
       பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை இருக்கிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது, மரத்தால் ஆனது. அதனால் அப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும். பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாக சொல்லப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையில் சலாகைகள் மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
    மணிமாளிகை:
       ந்திரசாலையைக் கடந்து படிகளால் கீழே இறங்கினால் வருவது மணிமாளிகைக்குச் செல்லலாம். கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக் கூட்டின் பின்னனியிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளிருக்கும் எல்லோராலும் கேட்க முடியும்.
    அன்னதான மண்டபம்:
      ணிமாளிகையைக் கடந்துச் சென்றால் வருவது, அன்னதான மண்டபம். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த கூடியதாக இம்மண்டபம் உள்ளது.
       ஊறுகாயை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட  சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இந்த அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்தும்.
    தாய்க்கொட்டாரம்:
      ன்னதான மண்டபத்தை அடுத்து வந்தால் வருவது இந்த  மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகையாக இருக்கும் தாய்க்கொட்டாரம். இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய வீட்டமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகைகளால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகளும் இங்கு காணப்படுகின்றன.

    இதற்கு வடக்கு பகுதியில் யாகங்கள் செய்ய ஹோமபுரம் உள்ளது. இதற்கு கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோயிலும் உள்ளது. இக்கோயிலில் இருக்கு சரஸ்வதி திருவுருவம் நவராத்திரி சமயத்தில் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
    உப்பரிகை:
        ப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகையில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
    முதலாம் மாடியில் மருத்துவக் குணம் கொண்ட மரத்தாலான மருத்துவக் கட்டில் உள்ளது. இரண்டாவது மாடி, மன்னனின் ஓய்வெடுக்கும் பகுதியாகக் காணப்படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.

    இந்திர விலாசம்:
       ண்டபத்தின் வழியே சென்றால் வருவது இந்திர விலாசம். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் விருந்தினர்களுக்காக  அமைக்கப்பட்ட மாளிகை தான் இந்த இந்திரவிலாசமாகும். அரண்மனையின் மற்ற பகுதிகளைப் போல் இல்லாமல் இம் மாளிகை மேல் நாட்டு பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கதவுகளும் சன்னல்களும் பெரியதாகவும்,. கூரை உயரமாகவும் உள்ளது. விருந்தினர் மாளிகையின் சன்னல்கள், அந்தப்புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியபடி  அமைந்துள்ளது.
    நவராத்திரி மண்டபம்:
      ந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். இங்குள்ள கருங்கல் மண்டபமும், ரஸ்வதி ஆலயமும்,  மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் கட்டப்பட்டதாகும். மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த இந்த நவராத்திரி மண்டபம் பயன்படுத்தப்பட்டது. மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
    பாதுகாப்பு அமைப்பு:
       டுக்கமான வாசலும், பாதையும் கொண்ட பத்மநாபபுரம் அரண்மனை ஒருவர்பின் ஒருவராக சொல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. கலகம் ஏற்படும் காலங்களில் கலகக்காரர்களை எளிதாக எதிர்கொள்வதற்காக இப்படி வடிவமைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட இதனையே பறைசாற்றுகிறது.
    வெளியிலிருந்து அரண்மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக சன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.

    மனதை மயக்கும் மைசூர் - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 18:21
  • Share The Gag
  • மனதை மயக்கும் மைசூர்
    ர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மைசூர். இந்நகரமே பண்டைய கால மைசூர் இராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. இவ்வூரை சங்க காலத்தில் மையூர் என்றும் எருமையூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
    சங்க காலத்தில் இந்நகரை ஆண்டவன் மையூர் கிழான் என்பவன் ஆவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை சிறுவன் என்று எண்ணி  சேர, சோழ மன்னர்களுடன் சேர்ந்து போரிட்டு தோற்ற வேளிர் அரசர்களில் இவனும் ஒருவன் ஆவான். பின்னர் 1399இல் இந்நகர் ஒரு பேரரசாக அமைக்கப்பட்டதோடு விஜயநகர பேரரசின் வீழ்ச்சி வரை அதன் கீழ் சிற்றரசாக இருந்தது. தற்போதும் இந்நகரை சுற்றி அமைந்துள்ள மைசூர் அரண்மனை, பிருந்தாவன் தோட்டம், மைசூர் அருங்காட்சியகம், மைசூர் ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் போன்றவைகள் இந்நகரின் பெருமையை பறைசாற்றிவருகின்றன.


    மைசூர் அரண்மனை:
    வியக்க வைக்கும் பிரமாண்டத்துடன் வராலாற்று பின்னணியை கொண்டது மைசூர் அரண்மணை. திராவிடம், இந்தோ-சராசனிக், ஓரியண்டல், ரோமன் போன்ற அனைத்து கட்டிடக்கலை அம்சங்களுடன் அமைக்கப்ப்ட்டுள்ள அரண்மனைதான் மைசூர் அரண்மனை. மூன்று அடுக்குகளுடன், சாம்பல் நிற சலவைக்கற்களால் உருவாக்கப்பட்டு மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மேற்கு பகுதியில் தங்கத்தாலான அலங்காரகலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 
    கோம்பே தொட்டி என்று சொல்லப்படும் வாசல் வழியாக மட்டுமே இந்த அரண்மனையினுள் செல்ல முடியும். இங்கு 19,20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் முன்புறம் வைக்கப்பட்டுள்ள 7 பீரங்கிகள் தசரா பண்டிகை துவங்கும் போது முடியும் போது இந்த பீரங்கிகள் முழக்கப்பட்டு அவ்விழாவினை கௌரவபடுத்தப்படுகிறது. 

    மேலும் இந்த அரண்மனையில் மரத்தால் செய்யப்பட்ட யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிப்பட்டுள்ளதோடு அரண்மனை சுவர்களில் சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்ற சிறந்த ஓவியர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையின் உள்ளே  வெவ்வேறு கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்ட 14 கோயில்கள் உள்ளன.

    பிருந்தாவன் கார்டன்:

     மைசூரிலிருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்த்துள்ள பிரம்மாண்டமான தோட்டம் பிருந்தாவன் கார்டன் ஆகும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே, காஷ்மீரிலுள்ள புகழ் பெற்ற ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன் 60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான புல்வெளிகள், மலர் படுக்கைகள், நீர் தடாகங்கள், நீர் ஊற்றுகள் என பல எழிழ் நிறைந்த அம்சங்களோடு வடக்கு பகுதியில் இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பூங்காவின் மையத்தில் சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

    ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி:

    1995 ஆம் ஆண்டு சாமுண்டி மலையடிவாரத்திலுள்ள கரன் ஜி ஏரிக்கரையில் அமைக்கட்டதுதான் இந்த ரீஜினல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகம்.இங்கு இயற்கை சுற்றுச் சூழல், விலங்குகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை இங்கு தெரிந்து கொள்வதோடு உயிரியல் பரிணாம வளர்ச்சி, உயிரியல் பன்முகத்தன்மை, இயற்கை பாதுகாப்பு ஆகியவற்றையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

    சாமுண்டி மலை:

    மைசூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள மலைதான் சாமுண்டி மலையாகும். இம்மலையில் ஸ்ரீ சாமூண்டிஸ்வரி கோயில் அமைந்துள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இப்பழமையான கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுபிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
    இக்கோயிலின் முக்கியமான சிறப்பம்சம் ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் 5 மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள நந்தி சிலையாகும். மேலும் இக்கோயிலின் எதிரில் அசுர குல மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 


    ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் பூங்கா:


    1892 ஆம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரால் 250 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா இந்தியாவிலேயே புகழ் பெற்ற உயிரியல் பூங்காவாகும்.இப்பூங்கா முதலில் அரண்மனை விலங்குக்கூடம் என்றழைக்கப்பட்டது.  அழிந்து வரும் விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இங்கு திட்டமிட்ட இனப்பெருக்க முறைகள், பராமரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனால் இங்கு யானைகள், மனிதக்குரங்குகள், காட்டெருமை சிறுத்தை, புலி, பார்பெரி மலை ஆடு, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, ஈமு, நீர் யானை, கங்காரு,போன்றவை பராமருக்க்கப்பட்டு  இனவிருத்தியும் செய்யப்படுகின்றன.

    மேலும் அரியவகை விலங்குகளான எலி மான், நான்கு கொம்பு காட்டு மான், கேரக்கேல் எனும் அதிசய காட்டு பூனை, சிவட் எனும் உடும்பு , நீலகிரி லாங்குர் எனப்படும் கருங்குரங்கு , சிங்காரா எனும் அரிய வகை கலைமான், பின்டுராங் என்று அழைக்கப்படும் அதிசய பூனைக்கரடி, சிறுத்தை போன்றவைகளும் பராமரிக்கப்படுகின்றன.

    ஜகன்மோகன் அரண்மனை:

    மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் இந்த ஜகன்மோகன் அரண்மனை. இந்த அரண்மனையின் தர்பார் ஹால் என்றழைக்கப்படும் விதானத்தில் தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்தநாளை விழாவை சிறப்பாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் பெரிய மரக்கதவில் தசாவதார காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசர்களின் ஓவிங்களும், அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

    ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன்:


    1905 ஆம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரின் மகள் இளவரசி ஜயலட்சுமிக்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் மரம், இரும்பு, செங்கல், சுண்ணாம்பு குழம்புகளை கொண்டு 300 ஜன்னல்கள், 127 அறைகள், 287 அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளுடன் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது இந்த அரண்மனையாகும்.




    செயிண்ட் பிலோமினா சர்ச்:

    ரோப்பிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டது செயிண்ட் பிலோமினா சர்ச். செயிண்ட் ஜோசப் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது. சிலுவையை ஒத்த வடிவத்தில் இத்தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தேவாலயத்தில் சிலுவையின் நெடுக்கில் செல்லும் தூணைக் குறிக்கும் பகுதி பக்தர்கள் கூடும் சபையாகவும் குறுக்காக செல்லும் சிலுவைப்பகுதியை குறிக்கும் பகுதியின் இரு பக்கத்தில் ஒன்றில் பலிபீடமும் மற்றொன்றில் ஸ்தோத்திர இசைக் கூடமும் வருமாறு இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயத்தில் பலிபீட த்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலவறைத்தளத்தில் 3ம் நூற்றாண்டை சேர்ந்த தெய்வீக பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கிறிஸ்துவி பிறப்பு, கடைசி விருந்து, சிலுவைத் தண்டனை, உயிர்த்தெழுதல் போன்ற காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

    குரங்கும்..குருவியும் (நீதிக்கதை)

    By: Unknown On: 18:12
  • Share The Gag



  • நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது...


    குளிரில் நடுங்கியபடி குரங்கு ஒன்று மரத்தடியில் ஒதுங்கி நின்றது.


    மரத்தில் கூடுகட்டிக் கொண்டு , அதில் இருந்த தூக்கணாங்குருவி தலையை வெளியே நீட்டி குரங்கைப் பார்த்து..'குரங்காரே! இப்படி மழை காலத்தில் மழையில் நனைகிறீர்...வெயில் காலத்தில் வெயிலில் வாடுகிறீர்..இதையெல்லாம் தடுக்க..ஒரு வீடு கட்டிக் கொள்ளக் கூடாதா.? கைகள் இல்லாத நானே கூடு கட்டிக் கொண்டுள்ளேன்..இரு கைகள் உள்ள நீங்கள் ஏன் சோம்பித் திரிந்து, பின் அவதிப் படுகிறீர் கள்' என்றது.


    குருவியின் அறிவுரையைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. உடனே மரத்தில் ஏறி குருவியின் கூட்டைக் கலைத்தது. 'எனக்கு வீடு கட்டிக் கொள்ள சோம்பேறித்தனம் தான்..ஆனால் கூட்டை பிய்ப்பதற்கு அல்ல..இப்போது கூடின்றி நீயும் அல்லல் படு' என்று சொல்லிச் சென்றது.


    முட்டாள்களுக்கு புத்தி சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்..நமக்குத்தான் தீங்கு வரும். 
     

    ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’

    By: Unknown On: 17:46
  • Share The Gag

  • உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.


    உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.


    sep 18 - health water
     


    பலரு‌ம் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ப‌க்கமே‌ போக மா‌ட்டா‌ர்க‌ள். அ‌ப்படியானவ‌ர்களது உட‌‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவ‌ர்களது நெ‌ஞ்சே ஒரு ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று ‌விடு‌ம்.த‌ண்‌ணீ‌ர் ந‌ம்மை பு‌த்‌துண‌ர்‌ச்‌சியாகவு‌ம், ஆரோ‌க்‌கியமாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌கிறது. த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதை ஒரு பழ‌க்கமாக‌க் கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். நாளொ‌ன்று‌க்கு 8 முத‌ல் 10 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். கோடை கால‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம்.



    அ‌வ்வ‌ப்போது த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளையு‌ம் அடி‌க்கடி த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வையு‌ங்க‌ள்.ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் குழ‌ந்தைக‌ள் பலரு‌ம் த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக அரு‌ந்த மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் க‌‌ழிவறையை அடி‌க்கடி பய‌ன்படு‌த்த முடியாது எ‌ன்பதுதா‌ன்.
    எனவே ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலைமையை சொ‌ல்‌லி‌ப் பு‌ரிய வையு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் போதுமா‌ன ‌நீ‌ர் கொடு‌த்தனு‌ப்பு‌ங்க‌ள்.




    என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினாலு‌‌ம் குறையாத உடல் எடை, அ‌திக‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் குறைவதை‌க் க‌ண்கூடாக பா‌ர்‌க்கலா‌ம்.உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வ‌யிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது.எனவே அ‌திகமாக‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருபவ‌ர்களு‌க்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கு‌ம்.



    மேலும் தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்னால் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கவும், அதன் பிறகு பல் துலக்க வேண்டும். ஆனால் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. 45 நிமிடங்கள் கழிந்த பிறகு வழக்கம் போல சாப்பிடலாம், தண்ணீர் பருகலாம்.


    மிக மிக முக்கியமான விஷயம்
    இந்த தண்ணீர் சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இந்த 3 க்கும் பிறகு அடுத்த 2 மணி நேரம் எதையும் சாப்பிடவோ, பருகவோ கூடாது. இந்த சிகிச்சையில் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, குறிப்பிட்ட நாளைக்கு என்றில்லாமல் தினமும் இந்த பழக்கத்தை தொடர்ந்தால் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.




    தலைவலி, உடம்புவலி, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், ஆர்த்ரைடிஸ், காசநோய், உடலில் அதிகபடியான கொழுப்பு சேர்வது, வயிற்றுபோக்கு, கிட்னி மற்றும் யுரினரி பிரச்சனைகள், பைல்ஸ், சர்க்கரை வியாதி, மாதவிடாய் பிரச்சனைகள், கண் நோய்கள், காது, முக்கு, தொண்டை பிரச்சனைகள் இப்படி பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்….. என்கிறது ஜப்பானிய மருத்துவ முறை.

    இயல்பு வாழ்க்கையில் இவர்கள்!

    By: Unknown On: 17:37
  • Share The Gag


  • எடிசன்



    மிகப் பெரிய ஆளுமைகள் என்று நாம் கொண்டாடுபவர்கள் தங்கள் உறவினர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள். இதோ ஒரு சுவையான பதிவு.


    எடிசன் வாங்கிய 'பல்பு'

    வெகுகாலம் முயன்று மின்சார பல்பை வெகு நேரம் எரிய வைக்கும் இழையை கண்டறிந்துவிட்டு எடிசன் குதூகலித்துக்கொண்டு இருந்தார். யாரிடமாவது தன்னுடைய சாதனையைக் காட்டவேண்டும் என்று கைகள் பரபரத்தன. வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் மனைவியைத் தவிர வேறு யாரை எழுப்புவது? அவரை எழுப்பி, “டியர் எத்தனை அளப்பரிய சாதனை செய்திருக்கிறேன் நான் பார்!” என்று சொன்னதும், அவரின் மனைவி, “நடுராத்திரியில விளக்கை இப்படியா எரியவிடுவீங்க? கண்ணெல்லாம் எரியுது. தூங்கவிடுங்க!” என்று சொன்னபோது, எடிசனின் முகம் எப்படி ஆகி இருக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.


    புத்தரின் உறுதிமொழி


    புத்தர், சித்தார்த்தனாக இருந்த காலத்தில், அவரோடு பிணைந்திருந்த உறவுகளைக் காண நேரிட்டது. அவரின் தந்தை சுத்தோததனரை கண்டு வெகு இயல்பாக அவர் பேசினார். யசோதையை மனைவியாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதும், புன்னகை மாறாமல் தன்னை நோக்கி வந்த யசோதையை புத்தத் துறவியாக தீட்சை கொடுத்துவிட்டு, “அன்னையே!” என்று அழைத்தார். கூடவே, கூடுதல் இணைப்பாக மிக இளைய சிறுவனான ராகுலனுக்கும் துறவை அவர் கொடுத்து விடவே, “இனி நான் என் அரசை ஆள எனக்குப்பின் யாரிருக்கிறார்? புத்தரே எனக்கொரு வாக்கு கொடுங்கள்... இனிமேலே பெற்றோரின் அனுமதி இல்லாமல் இளையவர்களுக்கு துறவு தரமாட்டீர்கள் என்கிற உறுதியை நீங்கள் எனக்குத் தர வேண்டும்!” என்று அவர் கதற, புத்தர் அதற்கு பின் அவ்வாறே நடந்துகொண்டார்.


    ஐன்ஸ்டீனும் நிலாவும்


    ஐன்ஸ்டீன் புது மாப்பிள்ளை ஆனார். கல்யாணம் முடிந்த சில நாட்களில் அவர் கைகளில் ஒரு தாளை அவரின் இளம் மனைவி திணித்தார். “நிலவைப் பற்றிய கவிதை இது!” என்று அவர் சொல்ல, ஐன்ஸ்டீன் அதை வாங்கி சலனமில்லாமல் படித்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும். உதட்டை பிதுக்கிவிட்டு, “என்ன இப்படி ஆஹா ஓஹோ அப்படின்னு நிலாவை புகழ்ந்து இருக்கே? நிலாவில் காற்றில்லை, முழுக்க மலைகள்தான். அங்கே ஒருத்தரும் வாழ முடியாது. முழுக்க அலங்கோலம். அதைப்போய் அழகு என்று கவிதை வேறு! என்ன பொண்ணுமா நீ?” என்று கடிந்துகொண்டார் ஐன்ஸ்டீன்.


    செப்.20 வெளியாகும் ‘6’: சுதீப் பாராட்டு!

    By: Unknown On: 17:15
  • Share The Gag





    துரை இயக்கத்தில் ஷாம் நடித்திருக்கும் ‘6’ திரைப்படம், செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.


    ஷாம், பூனம் கவுர், மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘6’ படத்தினை இயக்கி இருக்கிறார் வி.இசட். துரை. ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.


    சுமார் மூன்று வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. ஷாம் 6 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமன்றி இப்படத்தின் ஒரு கெட்டப்பிற்காக தூங்காமல் இருந்து கண்ணுக்கு கீழ் எல்லாம் வீங்கி விட்டது. அவ்வாறு இப்படத்திற்கு பெரும் சிரத்தினை எடுத்து நடித்து இருக்கிறார்.


    இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டாலும், பெரிய படங்கள் வெளியீட்டால் இப்படத்தினை ஒத்திவைத்து வந்தார்கள். தற்போது இப்படத்தினை அபி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டூடியோ 9 நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளன.


    இப்படத்தினை பார்த்துவிட்டு ‘நான் ஈ’ பட வில்லன் சுதீப் தனது ட்விட்டர் தளத்தில் “ஷாம் நடித்த ‘6’ படத்தினைப் பார்த்தேன். மிக அற்புதமான படம். அவரது கடின உழைப்பிற்கு எனது பாராட்டு. படம் பார்த்ததும் அவர் மீதிருந்த மரியாதை இருமடங்காகிவிட்டது. படம் முடிந்தவுடன் எழுந்து நின்று கைதட்டினேன். ’6’ மாதிரி ஒரு படத்தினை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள். இது கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் “


    செப்டம்பர் 20ம் தேதி 200 திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஷாம் நடித்து வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘6’ என்பது குறிப்பிடத்தக்கது.


    தடுப்பு மருந்துக்குக் கட்டுப்படாத நோய்கள்!

    By: Unknown On: 17:07
  • Share The Gag
  • தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு.



    அமெரிக்காவில் ஆண்டுதோறும் 23,000 பேர் நோய்த் தொற்றுகளால் மட்டும் உயிரிழக்கின்றனர். நோய்த் தடுப்பு மருந்து மாத்திரைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டுப்படாத நோய்த் தொற்றுகளால் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு உடல்நலம் கெடுகிறது. இது இப்போது மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. எனவேதான், அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் முதல் முறையாக நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாதவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்.
    "உயிரிழந்தவர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிடக் குறைவாக இருக்கிறது. காரணம், தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்த் தொற்று இறந்தவர்களிடத்தில் இருந்தாலும் அதனால்தான் இறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாததால் பலருடைய மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 



    ‘நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்ல மருந்துகளை நாம் தயாரித்தாலும், அந்த மருந்துகளால் பாக்டீரியாக்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பிறகு அது பல மடங்கு வீரியத்துடன் வந்து சமூகத்தைத் தாக்குகிறது. அப்போது சாதாரண நோய்த் தொற்றுக்கே மனிதர்கள் இறக்க நேரிடும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். எனவேதான், இப்போதைய உயிரிழப்புகள் கவனமுடன் ஆராயப்படுகின்றன. தோராயமாகக் கணக்கிட்டு இறப்பு எவ்வளவு என்று முன்னர் கூறிவந்தவர்கள் இப்போது துல்லியமாகக் கணக்கிட்டு தெரிவிக்கின்றனர்" என்று டப்ட்ஸ் பல்கலைக்கழக நுண்ணியிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் லெவி தெரிவிக்கிறார். நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவோடு பயன்படுத்துவதற்கான சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். 



    உலகமெங்கும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று 2007-ல் மதிப்பிடப்பட்டது. சிலவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகளால் இந்த மரணங்கள் ஏற்பட்டது. ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் பல பலனற்றுப் போய்விடவில்லை என்று இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. இந்தக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே இறப்பைக் குறைத்துக் காட்டியிருப்பதாக டாக்டர் ஸ்டீவன் சாலமன் தெரிவிக்கிறார். "நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இறப்பு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்த இறப்புகளை மட்டும் கணக்கில் சேர்க்குமாறு கூறப்பட்டது" என்றார். 



    அமெரிக்காவில் உள்ள பால், இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழி, வாத்து போன்ற பறவைப் பண்ணை களில்தான் 70% நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைச் சரியாக ஆராய அந்தப் பண்ணைகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. நோய்த் தடுப்பு மருந்துகளைக் கால்நடைகளும் உட்கொள்வதால் அவற்றின் இறைச்சியை உண்ணும் மனிதர்களின் உணவிலும் அப்படியே உடலிலும் இவை சேருகின்றன. எனவே நோய்த்தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களைப் பற்றிய ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. பிராணிகளுக்குப் பண்ணையில் நோய்த்தடுப்பு மருந்து நோய் வராமல் இருப்பதற்காக மட்டுமல்ல, வேகமாக வளர்வதற்காகவும் தரப்படுகிறது. 



    இப்படி பிராணிகளுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் பெரும்பாலானவை அவற்றுக்குத் தேவையானவையே அல்ல, அத்துடன் பொருத்தமானவையும் அல்ல. மனிதர்களுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்து ரகங்களிலும் பாதிக்கு மேல் பொருத்தமானவை அல்ல.
    பாக்டீரியாக்களில் 17-வகையும் ஒரு பூஞ்சையும்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமி வகை களை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


     நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 பெரிய மருத்துவமனைகளிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டன. "சி.ஆர்.இ. என்று பெயரிடப்பட்ட ஒருவகை பாக்டீரியா இப்போது அமெரிக்காவில் விற்கப்படும் எல்லாவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது. இது மிகவும் அபூர்வமானது ஆனால் ஆண்டுக்கு சுமார் 600 பேர் இதற்குப் பலியாகின்றனர். வியப்பு என்னவென்றால் இது அமெரிக்காவின் 44 மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் காணப்படுகிறது. 


    இந்த ஆராய்ச்சியில் நாங்கள் தீர்வை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று டாக்டர் மைக்கேல் பெல் நம்பிக்கையுடன் கூறுகிறார். 



    "எம்.ஆர்.எஸ்.ஏ. என்று அழைக்கப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத மற்றொரு வகை பாக்டீரியாவின் தாக்குதலும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் மருத்துவமனை அல்லாத பிற இடங்களில் இந்த நோய்த் தொற்று இரட்டிப்பாகிவிட்டது. அது மருத்துவமனைகளில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது. மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்த லாம் என்றால் அவை வேறு இடங்களுக்குச் சென்று பரவுவது குறிப்பிடத்தக்கது" என்கிறார் அயோவா பல்கலைக்கழக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு துறையைச் சேர்ந்த எலி பெரன்சிவிச் தெரிவிக்கிறார். 


    "கால்நடைப் பண்ணைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரில் 38% பேருக்கு எம்.ஆர்.எஸ்.ஏ. வகை பாக்டீரியாக்களின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


    மிருதுவான தோல் அல்லது திசுக்கள் உள்ளவர்கள் இந்த பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றனர். இதற்குப் பண்ணைகளில் உள்ள நோய் எதிர்ப்புக் கிருமிகளைவிட வேறு காரணங்களும் இருக்கலாம்" என்று இந்த ஆய்வுகளில் ஈடுபடாத ஆனால் தகவல் தெரிந்த ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.
    நோய்த்தடுப்பு மருந்து மாத்திரைகள் விற்பனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரூபாய்களில் நடக்கிறது. டாக்டர்கள் தங்களுடைய அனுபவம், படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். 


    ஆனால் அவற்றுக்கும் கட்டுப்படாமல் பாக்டீரியாக்கள் வலுப்பெற்று வருவதை இந்த ஆய்வுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன. 


    அகராதி படைத்த சாமுவேல் ஜான்சன்!

    By: Unknown On: 16:42
  • Share The Gag

  • சாமுவேல் ஜான்சனின் இல்லம்


    ஆங்கில மொழியை உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள் என்று நமக்கு தெரியும். அம்மொழி அவர்களின் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயன்பாட்டில் அருகி இருந்தது என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பிரெஞ்சும்,லத்தீனும் அதன் இடத்தை பிடித்துக்கொண்டு சிரித்தன. 



    பின்னர் மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்று இல்லை என்கிற குறை இருந்தது. அதை நீக்கியவர் சாமுவேல் ஜான்சன். 


    சாமுவேல் ஜான்சனின் அப்பா மிகவும் ஏழை. படிக்க புத்தகங்கள் வாங்கித்தரக் கூட காசில்லை, அந்த புத்தக வியாபாரியிடம். 



    “வா மகனே! “ என்று உடன் உட்கார வைத்துக்கொண்டு புத்தகங்களுக்கு பைண்டிங் போடுகிற வேலை கொடுப்பார் தந்தை. அப்படி வரும் நூல்களை படித்து படித்து தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொண்டார் அவர். 



    எளிமையான முறையில் தன்னை விட இருபது வருடம் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் எனும் பெண்ணை மணந்தார். இவரின் நேரமோ என்னவோ பெரும் பணக்காரியான அப்பெண் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமை,வறுமை மட்டுமே. இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல,கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று இவரிடம் சில வியாபாரிகள் வந்தார்கள். 



    பிரெஞ்சு அகராதி உருவாவதற்கு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். இருந்தாலும், நம்பிக்கையோடு 'மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்' என்று வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி ஏகத்துக்கும் வேலை வாங்கி தொலைத்தது. செஸ்டர்பீல்ட் கனவானிடம் உதவி கேட்டார்; அவர் முகத்தை திருப்பிக் கொண்டார். 



    காசநோய், விரை புற்றுநோய், பல்மோனரி பிப்ரோசிஸ், தௌரேட் சிண்ட்ரோம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அம்மாவை அடக்கம் பண்ணகூட காசில்லாமல் வாடிய சம்பவம் நடந்தது. ஒரு முறை ஐந்து பவுண்ட் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிறை போய் மீண்டதும் நடந்தது. எல்லாவற்றிலும் உடனிருந்த அன்பு மனைவியும் இறந்துபோயிருந்தார். மனிதர் அசரவில்லை. ஒன்பது வருடகாலத்தில் அந்த ஒற்றை மனிதரின் உழைப்பில் அகராதி எழுந்தது. 



    இந்த புள்ளிவிவரம் அது எத்தகைய உழைப்பு என்பதை காட்டும். 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். நூல் செம தடியாக இருந்தது. ஐந்து பதிப்புகள் வந்து நாட்டை கலக்கி எடுத்தது. உலகம் முழுக்க மனிதரின் புகழ் பரவியது. பணமே தராத செஸ்டர்பீல்ட் கனவான், தான் உதவி இவர் அகராதியை முடித்தது போல கடிதங்கள் எழுதி வெளியிட்டார். இவர் மெல்லிய நகைச்சுவை இழையோட, “ஏழாண்டு காலம் உங்கள் வீட்டின் முன் காத்திருந்தும் இரங்காதவர் அல்லவா நீங்கள் ? “ என்று பொங்கிவிட்டார். 



    அவரது அகராதி நூற்றி ஐம்பது வருடங்களுக்கு ஆங்கிலத்தின் இணையற்ற பொக்கிஷமாக நிலைத்து நின்றது.அலங்கார வார்த்தைகளைக் கொண்டிருந்த ஆங்கில கவிப்போக்கை விமர்சனம் செய்து எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுத வலியுறுத்தினார். “வாழ்க்கை வரலாறுகள் புகழ்பாடும் நூல்களாக இருக்க வேண்டியதில்லை” என உரக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரையும் விமர்சித்து எழுதினார். 



    சாகிற வரை அவரை வறுமை தான் துரத்தியது. என்றாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இப்பொழுது எண்ணற்ற அகராதிகள் வந்துவிட்டாலும் எல்லாவற்றுக்கும் முதல் மாதிரி என சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன அவரின் வரிகளான,”மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்,குறைசொல்லிக்கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்பது அவரின் வாழ்வுக்கே பொருந்தும். ஆனால்,அந்த வாழ்வில் அவர் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார் என்பதே நமக்கான பாடம். 



    சாமுவேல் ஜான்சன் என்கிற இணையற்ற இலக்கிய மேதைக்கு இன்று (செப்.18) பிறந்தநாள். அயராது பங்காற்றி ஆங்கில இலக்கிய உலகின் போக்கை மாற்றியவர் அவர் என இன்றைக்கு அவரை கொண்டாடுகிறார்கள். 

    "நாம் வெற்றி பெற".- (நீதிக்கதை)

    By: Unknown On: 08:38
  • Share The Gag


  •  
    இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.

    தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை...
    இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது.

    ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை விட்டது...

    மற்ற குட்டித் தவளையோ நம்பிக்கை உள்ளது.
    பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்து உதைத்தது.
    நீச்சல் போட்டது...உந்தி..உந்தி கலக்கியது.

    பால் கலங்க ஆரம்பித்து அதில் ஆடை படர்ந்தது...மேலும்..மேலும் .. அதை தவளை உதைக்க..சிறிது..சிறிதாக வெண்ணைய் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.

    நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறி...பின் வெளியே தாவிப் பாய்ந்தது...

    எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காதவன் தோல்வியை சந்திக்கமாட்டான்...

    நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் அக்காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
     
     

    துாக்க மாத்திரை இல்லாமலே நிம்மதியான தூக்கத்தை தரும் மல்லிகை...

    By: Unknown On: 08:01
  • Share The Gag

  • News Service


     

















    சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள்.


    ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது. அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை, சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும். இப்போது அந்த மாதிரியான உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் வாசனைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    காபி

    உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும்.

    லாவெண்டர்

    லாவெண்டரின் மணமானது டென்சனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. எனவே அதிகமாக டென்சன் அடையும் போது, அப்போது லாவெண்டர் எண்ணெயை தலைக்கு தடவி, ஊற வைத்தால், மனம் அமைதியடையும்.

    சிட்ரஸ்

    சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும்.

    யூகலிப்டஸ்

    அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால், அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை சிறு துணியில் விட்டு, அதனை அவ்வப்போது நுகர வேண்டும்.

    மல்லிகை

    தூக்கம் சரியாக வரவில்லையா? அதற்கு தூக்க மாத்திரை போடாமல், மல்லிகையை நுகர்ந்தால், நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

    புதினா

    புதினாவின் நறுமணம் புத்துணர்ச்சி மற்றும் தெளிவான மனதை தரும். மேலும் இதன் மணமானது படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றை படிக்கும் போது நுகர்ந்தால், படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும்.

    ரோஜா

    இரவில் தூங்கும் போது மனம் வருத்தத்தால், கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியெனில் இரவில் தூங்கப் போகும் போது, ரோஜாவை நுகர்ந்து பார்த்து, மனம் அமைதியடைந்து, இரவில் நல்ல இனிமையான கனவுகள் வரும்.

    சாக்லேட்

    சாக்லேட்டின் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், உடலில் உள்ள வலியானது பறந்து போய்விடும். அதிலும் மனஅழுத்தத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அப்போது சிறிது சாக்லேட்டை நுகர்ந்து பாருங்கள்.

    சந்தனம்

    சந்தனம் என்று சொன்னாலே, அது மனமை அமைதிப்படுத்தும் என்று நன்கு தெரிகிறது. எனவே தெளிவாக மனம் மற்றும் ஆர்வத்தை அதிகப்படுத்த, இந்த பொருள் சிறந்தது.

    குங்குமப்பூ

    பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி. அது என்னவென்றால், மாதவிடாய் வருவதற்கு முன்னர், பெண்கள் ஒருவித மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அத்தகைய மனஅழுத்தத்தை போக்க குங்குமப்பூவை நுகர்ந்தால், தவிர்க்கலாம்.

      

    கொத்தமல்லி கீரையின் மருத்துவ குணங்கள்..

    By: Unknown On: 07:57
  • Share The Gag


  • News Service


















    கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.


    வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

    கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

    உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

    கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

    ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

    இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

    கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

    பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

    தோல் நோய்களை குணமாக்குகிறது

    மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

    4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

    ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

    புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

    கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

    வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

    தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

    தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

     

    ஜில்லா விஜய் சொல்ல வந்த கதை!

    By: Unknown On: 07:46
  • Share The Gag


    தலைவா படத்தின் வெற்றியைக் கொண்டாடக்கூட 'ஜில்லா' படத்திற்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் விஜய். அவரை இயக்கிக்கொண்டிருப்பவர் டைரக்டர் நேசன். ஷூட்டிங் இடைவேளைக்கு நடுவில் அவரைச் சந்தித்து 'ஜில்லா'வின் பல்ஸ் பார்த்தோம்.


    விஜய் இப்போது தமிழில் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் அவரது கால்ஷீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?

    'வேலாயுதம்' படமத்தின் சூட்டிங் சுமார் 1.5 ஆண்டுகள் நடைபெற்றது. அப்போது விஜய்யுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சார் உங்களுக்காக 2 கதைகள் வைத்து இருக்கிறேன் என்று கூறி, 2 கதையையும் சொன்னேன். அதில் அவர் டிக் அடித்த கதைத் தான் ஜில்லா. இக்கதையை கேட்டவுடன் கண்டிப்பாக நான் தான் இப்படத்தினை செய்வேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் கொடுத்த நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் கழித்து 'ஜில்லா' படப்பிடிப்பினை துவங்கி இருக்கிறோம்.”


    விஜய் ரசிகர்களுக்கு எந்த விதத்தில் 'ஜில்லா' ஸ்பெஷலாக இருக்கும்?

    “தலைவா படத்தைத் தொடர்ந்து இந்த படம் வெளிவருவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதை எல்லாம் நிறைவேற்றும் வகையில் ஜில்லா இருக்கும். கலர்புல் பாடல்கள், பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள், செண்டிமெண்ட் என ஒரு கலர்புல் கலவையாக இந்தப் படம் இருக்கும்.

    விஜய் - மோகன்லால் காம்பினேஷனை எப்படி பிடிச்சீங்க?

    'ஜில்லா' படத்தோட கதையைக் கேட்டதும், 'நாம இதை பண்றோம்”ன்னு விஜய் சொல்லிட்டார். படத்தில் அவருக்கு சமமான ஒரு பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு நாள் மோகன்லால் சார் நடிச்சா நல்லா இருக்குமே என்று தோன்றியது. விஜய்யிடம் சொன்னேன் சூப்பர் சாய்ஸ் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார்.
    எனக்கு மோகன்லால் என்ன சொல்லுவாரோ என்ற பயம் இருந்தது. கேரளாவிற்கு சென்று சந்தித்து கதையைச் சொன்னேன். உடனே நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். விஜய் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், கூடவே மோகன்லாலும் நடிக்கிறார் என்றவுடன் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரெண்டு பேரையும் வைத்து காட்சிகள் இயக்கும் வேளையில், மானிட்டரைப் பார்க்கும் போது 'ஜில்லா' கண்டிப்பாக வெற்றிப் படம் தான் என்று என் மனது எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

    படம் எப்போது ரிலீஸ்?

    படம் 60 சதம் வரை முடிந்து விட்டது. இன்னும் படப்பிடிப்பு நடத்த நிறைய காட்சிகள் இருக்கிறது. அனைத்தையும் முடிந்தவுடன் தான் படம் எப்போது வெளியாகும் என்பதை முறைப்படி அறிவிப்போம். இணையத்தில் வரும் 'ஜில்லா' வெளியீடு குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்பதினை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    'துப்பாக்கி' ஹிட் ஆனதால்தான் இந்தப் படத்திலும் காஜல் அகர்வாலை ஹீரோயினாக போட்டீர்களா?

    “அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. விஜய் கிட்டதட்ட அனைத்து நாயகிகளுடன் நடித்து விட்டார். அவருடன் நடிப்பு, டான்ஸ் என அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த வகையில் காஜல் அகர்வால் எனக்கு பொருத்தமாக இருந்தார். இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக 'துப்பாக்கி' படத்தை விட பேசப்படும்.

    'ஜில்லா' கதை தான் என்ன?

    “இப்போதைக்கு கேட்காதீர்கள். அதே நேரத்தில் இணையத்தில் இந்தப் படத்தின் கதை என்று இப்பவே 10 கதைகளை எழுதி தள்ளிட்டாங்க. எதுவுமே உண்மையில்லை. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது 'நீங்க எழுதின கதையை விட.. எதிர்பாக்குறதை விட 'ஜில்லா' இரண்டு மடங்கு இருக்கும்' என்பது மட்டும் உண்மை.