Thursday 19 September 2013

பயன்தரும் 10 - இணையதளங்கள்!

By: Unknown On: 21:36
  • Share The Gag

  • கம்பியூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
     

    அதனால், எளிய முறையில் குறிப்பு களைத் தரும் தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் தற்போது பார்க்கலாம்.


    www.quotedb.com
     
    நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.
    சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.


    www.photonhead.com
     
    டிஜிட்டல் கெமரா வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு மையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கெமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாயாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள் ளன. சிலேட்டர் றையில் ஒரு கெமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், கொஞ்சம் பழைமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


    www.downloadsquad.com
     
    சொப்ட் வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தத் தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன், வேடிக்கையாகவும் சில சமயம் செய்தி களைத் தரும்.


    www.stopbadware.org
     
    இது பக்கத்து வீட்டுக் காவல்காரன்போல் செயற்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவு களைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது.


    www.techcrunch.com
     
    இணையதள வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகி றது. குறிப்பாக, வெப் 2.0 குறித்த அண் மைக்காலத்திய செய்திகள் அதிகம்.


    www.gmailtips.com
     
    கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கை யில் குறிப்புகள், டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.


    www.thegreenbutton.com
     
     
    இதுவும் கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக் கான தகவல் களஞ்சியம். இதிலும் பல் வேறு விதமான, அதிகளவு எண்ணிக்கை யிலான குறிப்புகள், மற்றும் ட்ரிக்ஸ் தரப் பட்டுள்ளன.


    www.tweakguides.com
     
    உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? அதற்கு இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்ததளம் மூலம் மேம்படுத்தி உங்கள் கொம்பியூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


    www.ilounge.com
     
     இதனுடைய பெயர் தெரிவிப்பது போல் இது ஐபாட் மற்றும் ஐட்யூன் ஆகியன குறித்த தக வல்களை தரும் தளம். இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படிப் பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்தத் தளத்தை ஒரு கடல் எனலாம். இதில், ஐபாட் 2.2 வழி காட்டி இபுக்காக உள்ளது. இதில், 202 பக்க தகவல்கள் ஐபாட் குறித்து உள் ளன.


    www.goaskalice.com
     
    அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தும் மெடிக்கல் இணையதளம். சிலர் கேட்கக் கூச்சப்படும் கேள்விகளை, யாரென்று காட்டிக்கொள்ளாமல் இங்கு இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.
     

    இணையத்தில் நாம் காணும் ஒரு பக்கத்தை pdf ஆக மாற்ற வேண்டுமா?

    By: Unknown On: 21:19
  • Share The Gag


  • இன்று நாம் இணையத்தில் ஒரு தளத்தின் பக்கத்தை(page) எவ்வாறு  pdf ஆக மாற்றுவது என்பதை பற்றி பாப்போம் ... 


    நாம் சில நேரங்களில் ஒரு தளத்தை படித்துக்கொண்டிருக்கும்போது அந்த பக்கத்தில் தகவல்கள் நிறைய இருந்தால் நாம் உடனடியாக அதை பூக்மார்க் செய்துகொள்வோம் எத்தனை நாள் இப்படி பூக்மார்க் செய்வது ?அப்படி செய்துகொண்டே போனால் நம்முடைய பூக்மார்க் அதிகமாக மாறி நம்மால் குறிப்பிட்ட பக்கத்தை அல்லது ஒரு தளத்தை கண்டுபிடிக்க கஷ்டமாக போய்விடும் ...இக்குறையை தீர்க்க நாம் அந்த பக்கத்தையோ அல்லது ஒரு தளத்தையோ  pdf ஆக மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவே பிறகு தேவைப்படும்போதெல்லாம் அதை பார்த்துக்கொள்ளலாம் இணைய இணைப்பும் தேவை இல்லை ......


    இதற்கு நமக்கு எந்த மென்பொருளும் தேவையில்லை இவ்வாறு இணையத்தில் ஒரு பக்கத்தையோ அல்லது ஒரு தளத்தையோ  pdf  ஆக மாற்ற ஒரு தளம் நமக்கு உதவுகிறது அங்கே சென்று நீங்கள் விரும்பிய பக்கத்தின் url நிரலை பேஸ்ட் செய்து convert to pdf என்பதை கிளிக் செய்தால் ஒரு சிலம் நொடிகளில் அந்த பக்கம் உங்களுக்கு pdf ஆக மாறி விடும் அதை நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் ....


    அதிலே options என்ற ஒன்றை கிளிக் செய்து நீங்கள் பல தகவல்களை அந்த pdf கோப்பிற்கு தரலாம் உதாரணமாக கடவுச்சொல் தரலாம் அந்த pdf இல் plugins enable செய்யலாம் இன்னும் நிறைய அனால் இந்த செயல்களை டவுன்லோட் செய்யாததற்கு முன்பே செய்துவிடவும் .........பிறகு convert to pdf என்பதை கிளிக் செய்து கன்வெர்ட் ஆனவுடன் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள் ...


    சரி தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் 
     


    பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள் .....பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யவும் ....

    வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?

    By: Unknown On: 19:23
  • Share The Gag
  • வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?


    முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம். சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும். 


    அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும் கூட தானே செய்து கொள்ளக் கூடாது. இனி வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முகத்தினை நரம்புகள் தெரியாமல் மசாஜ் செய்யக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி விட்டு சில வகை பேக்குகளை மட்டுமே போடலாம். 



    - உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் வாசலீன் அல்லது கிளிசரின் தடவவும், பால், ஓட்ஸ், பாதம் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும். 




    - சாதாரண சருமம் உள்ளவர்கள் ஒரு பிடி புதினா, இரண்டு வேப்பிலை, இரண்டு துளசி இலைகளை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறிய பின் முகத்தைக் கழுவலாம். 



    - எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு, ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம். 



    - முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயிறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் பேக் போல் வாரம் ஒரு முறை போட்டு சில நிமிடங்கள் ஊறி பிறகு கழுவ வேண்டும். 



    - ரசாயன வகை கிரீம்களையும் மற்ற அழகு சாதனங்களையும் உபயோகிக்கும் போது முகம் உடனடியாக பளபளப்பாகி பலன் அளிப்பது போல் தோன்றினாலும், நாளாவட்டத்தில் முகத்தின் பொலிவு மறைந்து விடும். அதுவே மூலிகைகளை உபயோகித்து வந்தால் பலன் தெரிய சில காலம் ஆனாலும் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

    மாசு மருவற்ற சருமத்திற்கு தேன்!

    By: Unknown On: 19:20
  • Share The Gag
  • மாசு மருவற்ற சருமத்திற்கு தேன்


    கத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள். 


    பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும். 



    அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும். சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள். 



    பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள். தீப்புண் தழும்புகள் நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா? உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள். 



    தேனுக்குக் காயத்தினை ஆற்றும் தன்மையும், கிருமி நாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.


    “கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!

    By: Unknown On: 19:16
  • Share The Gag

  • ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல்கள் எழிலரசு, சூரியபகவான்தாஸ், வினோத், சட்டக்கல்லூரி மாணவர் திசைஎந்திரன் ஆகியோர் கடந்த 16-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.



    sep 19 - judgement



    இதனால் அவர்களது உடல்நிலை மோசமானது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரி டாக்டர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது வக்கீல் வினோத் உடல்நிலை மோசமாக இருந்ததால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 



    இதற்கிடையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் நேற்று ஐகோர்ட்டு கிளைக்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விடுவதற்கு மறுத்து விட்டனர். தடையை மீறி ஐகோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மேலும் 45 பேர் ஊர்வலமாக வந்தனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே வந்த அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். 



    இந்த நிலையில், போராடும் வக்கீல்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று, நீதிபதி சாமி தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையிலான விதிமுறை ரத்து செய்யப்படும் என்றும், அவர் அறிவித்தார்.


    நேற்று மாலை 3.30 மணிக்கு, உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களிடம் மதுரை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் உறுதிமொழி பற்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற வேண்டும்” என்று வற்புறுத்தினார்கள்.அதை ஏற்றுக்கொண்ட வக்கீல்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

    கண்களை கவனமாக பராமரிக்க சில டிப்ஸ்!

    By: Unknown On: 19:09
  • Share The Gag

  • பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. கண்களின் பார்வையில் பல அர்த்தங்களும் உண்டு. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவையே. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 



    இவ்வளவு முக்கியமான கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவு, எமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும் தொழில், தூக்கமின்மை என்பனவற்றுடன் நாம் அவற்றை சரியாக பராமரிக்காது விடுவதுமே முக்கிய காரணிகளாகும்..கண் பார்வைக் குறை ஏற்படாதிருக்க அவற்றிக்கு வேண்டிய போசாக்கான உணவு அவசியம். விற்றமின் “ஏ” யும் “சீ” யும், இரும்புச் சத்தும் முக்கியமாக கண்களிற்கு தேவைப்படுகின்றன. அவை பழங்களிலும், மரக்கறிகளிலும், கீரைகளிலும் போதுமான அளவு கிடைக்கின்றன.



    sep 19 - eye.MINI
     



    போதை வஸ்து, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கும் போது அவற்றில் உள்ள நஞ்சுப் பொருள்கள் இரத்தத்தில் சேர்ந்து மிகவும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட கண்களின் பார்வையை பாதிக்கின்றன.. எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.நாம் வாழும் சூழ்நிலை மாசு பட்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், நச்சுப் புகையுள்ளதாகவும், பசுமையற்றதாகவும் இருக்கும் போது விழித்திருக்கும் கண்கள் அவற்றால் தாக்கமடைந்து பார்வை பாதிப்படைகின்றது. 



    நாம் செய்யும் தொழிலும் எமது கண்பார்வையை கெடுத்து விடுகின்றது. அதிக நேரம் கணினி பாவித்தல், தொழிற் சாலைகளில் தெறித்து வரும் உலோகத் துண்டுகளின் தாக்கங்களும், இரசாயன வாயுக்கள் கலந்த காற்றும் கண்பார்வையை கெடுத்து விடுகின்றன. அச்சந்தற்பங்களில் தவறாது பாதுகாப்பு கவசம் அணிதல் வேண்டும்.காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..



    கண் எரிச்சலைப் போக்க


    கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.


    புத்துணர்ச்சி பெற


    வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.

    வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


    கருவளையம் போக்க


    வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.


    கண்கள் குளிர்ச்சி பெற


    உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.

    சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.


    வசீகர கண்கள்


    கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.


    ப்ளீச் வேண்டாமே


    முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.


    உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

    ஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ!

    By: Unknown On: 18:24
  • Share The Gag

  • 2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.


    இதன் பயன்கள் பல இருப்பதால் – முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.
    1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிற்து.


    2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.


    3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.


    sep 19 ravi phone
     


    4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.


    5. டூ நாட் டிஸ்டர்ப் – ஒரு செம்மை ஆப்ஸ் – பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.


    6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.


    7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றும் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.


    8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.


    9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கண்க்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.


    10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ்ச ஓவர்


    11. ஐ டியூன்ஸ் ரேடியோ – சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது – அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே – கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.


    12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை – நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.


    13. ஆப்ஸ் ஸ்டோர் – ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.


    14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் – மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.


    15. பேட்டரி லைஃப் – இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.

    யாசகன்: திரை முன்னோட்டம்!

    By: Unknown On: 17:55
  • Share The Gag




  • இது ஒரு  தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைச் சூழல் வெவ்வேறானது என்றாலும் எல்லோரும் தன் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவரின் பாசப் பிணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


    நம்முடைய  அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் நமக்கு நம் பிரச்னைகள்தான் கண் முன் தெரியும். இது  ஒரு சராசரி மனிதனின் இயல்பு. இதிலிருந்து மாறுபட்டு  வாழ்பவன்தான் எல்லோராலும்  கொஞ்சம் கவனிக்கப்படுகிறான் அப்படி வாழும்  இளைஞன்தான் கதையின் நாயகன் சூர்யா.


    மதுரை மாநகரில் நடுத்தரவாசிகள் வசிக்கும்  ஓர் பகுதியில் தன் வாழ்க்கையை தொடங்கும் சூர்யா தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும், தன்னைச்சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழும் போது உலகம் அவனை கீழ்நிலையில் வைத்து பார்க்கிறது. அவன் யாரைப் பற்றியும் கவலை படுபவனாக தெரியவில்லை.


    தேடி வந்த காதலை கூட நீண்ட யோசனைக்குப்பிறகு ஏற்றுக்கொண்டவன் பிறிதொரு சமயத்தில் அந்த காதலியே பிரிந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது கூட புன்னகைத்து விடை கொடுக்கிறான். அவள் அவனை முழுமையாக புரிந்து கொண்டதால்தான் வலிகளோடு ஒரு வாழ்க்கை இருப்பதை நினைத்து விடைபெறுகிறான்.


    பழிகளைச் சுமந்து இழி வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட சூர்யா தன் குடும்பத்தார் உற்றார் உறவினர் எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் படுகிறான்.
    அன்பு, பாசம், காதல், பிரிவு, வேதனை, இழிவு, பழி, இயலாமை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவன் இவ்வுலகில் வாழவே ஆசைப்படுகிறான். வாழ வைத்ததா இந்த  உலகம்?


    யாசகன்

    இயக்குநர்   : துரைவாணன் (அமீர், எம்.சசிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்)
    ஒளிப்பதிவாளர்  : வே.பாபு
    (கே.வி.ஆனந்திடம்  பணியாற்றியவர்)
    இசை    : சதீஷ் சக்ரவர்த்தி
    (கனிமொழி,  லீலை)
    படத்தொகுப்பு   : ராஜா முகமது
    (தேசிய  விருது பெற்றவர்)
    பாடல்கள்   : கங்கை அமரன், அறிவுமதி, யுகபாரதி
    கலை இயக்குநர்  : ஆனந்த்
    நடன இயக்குநர்  : சிவசங்கர்
    சண்டை இயக்குநர்  : ராஜசேகர்
    உடைகள்   : நடராஜ்
    ஒப்பனையாளர்  : சண்முகம்
    பி.ஆர்.ஓ   : நிகில் முருகன்
    விளம்பர வடிவமைப்பு : ஜெ.ஏ.அப்துல்
    தயாரிப்பு  :  அகரம் புரொடக்ஷன்ஸ் கே.கே. சந்தோஷபாண்டியன் மற்றும் ஸ்ரீ தாரினி புரொடக்ஷன்ஸ் சி.இளங்கோ

    ----------------------

    யாசகன்
    கதாநாயகன்   : மகேஷ்
    கதாநாயகி   : நிரஞ்சனா (அறிமுகம்)
    கதாநாயகன் அப்பா  : ஜெயச்சந்திரன்
    கதாநாயகன் அம்மா : பவானி
    கதாநாயகி அப்பா  : பரமசிவம்
    கதாநாயகி அம்மா  :
    கதாநாயகன் சகோதரி : ஜனனி

    வேலூர் கோட்டை - சுற்றுலாத்தலம்!

    By: Unknown On: 17:49
  • Share The Gag

  •  
    வேலூர் கோட்டை
     
     
     
    வேலூர் கோட்டை
     

    மிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழித்தடத்தில் 145 கிலோமீட்டர்  தொலைவிலும்
    காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மூன்று  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை.
    வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். பிரமிக்கவைக்கும்  பரந்த சுற்றளவு....ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.... பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக வானுயர்ந்து நிற்கும் உறுதி.... வரலாற்றுப் பக்கங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு சாந்த சொரூபி போல் வீற்றிருக்கும்  அழகு.... இந்த அடையாளங்களின் பெயர் தான் வேலூர் கோட்டை
     
    பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் தலைவர்கள் , திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால்  வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக கட்டப்பட்டது இந்த வேலூர் கோட்டை. காலச் சூழலின் காரணமாக நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர். இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.
     
    தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. சுற்றிலும் சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு பாதுகாப்பு அரணாக விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. ஆனால்இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது
     
    அந்த காலத்தில் வெளியிலிருந்து கோட்டைக்கு செல்ல வேண்டுமானால் மரப் பாலத்தை கடந்து தான் செல்லவேண்டும் ..எதிரிகள் வந்தால் மரப் பாலத்தை உள்  பக்கமாக இழுத்துவிடுவார்களாம் அவர்கள் அகழியை கடந்து தான் உள்ளே செல்லமுடியும் அகழியில் ஏராளமான  முதலைகள் இருந்ததால் அப்படி யாரும் எளிதில் அகழியை கடந்து உள்ளே செல்ல முடியாது
    ஆனால் தற்போது தற்போது மரப்பாலம் இல்லை. அகழியின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    கோட்டையின் முதற் சுவர்; அழகிய கருங்கல் வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் அம்பெய்யும் மாடம் கூர்மையான தாமரைப்பூ வடிவம் கொண்ட கொத்தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்சுவர் தஞ்சைப் பெரிய கோவிலின் மதில் பாணியில் அமைந்துள்ளது.
    அதற்கும் உட்பகுதியில் யானை அல்லது தேர் செல்லக்கூடிய அளவில் சுமார் 12 அடி அகலம் கொண்ட உயர்ந்த மண் பாதை போன்ற சுவர் அமைந்துள்ளது.
     
    ஜலகண்டேஸ்வரர்  கோவில்
     
    க்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி,சமேத ஜலகண்டேஸ்வரர்  கோவில் உள்ளது. ஏழுநிலை ராஜகோபுரமும். இடப்புறத்தில் கலையழகு மிக்க கல்யாண மண்டபமும். வலப்புறத்தில் தீர்த்தமும். 
    உள்ளே  நான்குநிலை உள்கோபுரமும், அமையப்பெற்ற தொன்மையான கோவில் இது
    உள் பிரகாரத்தில்  செல்வவிநாயகர், வெங்கடேசப் பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரே நந்தா விளக்கு இருக்கிறது.
    தங்க வெள்ளிப் பல்லிகள், பாம்புகள், சூரிய சந்திரர்கள் பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் உள்ளன.
    அடுத்து  கங்கை பாலாறு ஈஸ்வரன் சந்நிதி . அருகே காலபைரவர் சந்நிதி. அடுத்து நந்திதேவரும் கொடிமரமும் அமைந்திருக்கின்றன
    இங்கிருக்கும் நடராஜர் சந்நிதியில் இருந்து விரிஞ்சிபுரத்தில் இருக்கும் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு ஒரு சுரங்கப் பாதை உள்ளதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது
    அடுத்து கோட்டையினுள்ளே 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது.
    1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இதனால் இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன.
     
    சிப்பாய் கலகம்
    ந்த கோட்டையினுள்ளே தான் வரலாற்று சிறப்பு கொண்ட சிப்பாய் கலகம் நடந்தது சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சியான வேலூர் சிப்பாய் புரட்சி 10-7-1806 அன்று நடைபெற்றது.
    1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.சிப்பாய்கள் அனைவரும் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால் இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். இதனால் அவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.
     இந்த நடவடிக்கை அவர்களுக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான்
    இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி
    அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர்.
    350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது.
    கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை  காண முடியும்


    பிரமாண்டத்தையும் வரலாற்று பக்கங்களின் வடுக்களையும் தாங்கி  நிற்கும் வேலூர் கோட்டை நிச்சயம் நாம்  பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்  ....
    அன்று  மன்னர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கோட்டை அகழி இன்று படகு சவாரி செய்யும் சுற்றுலா தளமாக மாறியுள்ளது...தினமும்  அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது.
    மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச காட்சி தரும் கோட்டையை காணும் போது அன்று விளக்கொளி இல்லாத காலங்களில் இந்த கோட்டையில் வாழ்ந்த மனிதர்களின் காலத்தை அசைபோட மனம் நினைக்கிறது  

    சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின!

    By: Unknown On: 17:30
  • Share The Gag
  • சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின


    ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்த்தில் வெளிவந்த படம் 'சிங்கம் II'. இந்தப் படம் 50 நாட்களையும் தாண்டி ஓடி வருகிறது. அதன்பின் சூர்யா சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

    தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்பட வேலைகள் துவங்கியுள்ளன. இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஆக்சன் கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்துக்கு 'ரவுடி' என பெயர் வைத்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.

    இன்னொரு புறம் சூர்யாவை வைத்து கவுதம்மேனன் இயக்கும் படவேலைகளும் ஆரம்பித்துள்ளன. இதில் ஜோடியாக நடிக்க திரிஷாவை பரிசீலிக்கின்றனர். இரண்டிலும் மாறிமாறி நடிக்க உள்ளார்.

    சூர்யா ஏற்கனவே கவும்மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத. 


    சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது? ஹன்சிகாவின் தாய் பதில்

    By: Unknown On: 17:26
  • Share The Gag



  • ஹன்சிகாவுக்கு இப்போதைக்கு திருமணம் கிடையாது என்று அவருடைய தாய் மோனா மோத்வானி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். 


    சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், இருவரும் தங்களது காதலை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அடுத்தது இப்போதைக்கு கேள்வி இவர்களது திருமணத்தை பற்றியதுதான். ஆனால் இந்த கேள்விக்கும் அவ்வளவு சீக்கிரம் விடை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 


    சமீபத்தில் நடைபெற்ற சிமா திரைப்பட விழாவிற்கு ஹன்சிகா அவருடைய தாய் மோன மோத்வானியுடன் வந்திருந்தார். அப்போது சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என ஹன்சிகாவின் தாயிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 


    அதற்கு ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்... கல்யாணம் என்ற யோசித்து பார்க்ககூட நேரமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை, ஆனால் கல்யாண வேலைகள் திட்டமிட்டபடி எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும் இப்போதைக்கு சாரி என அவர் தெரிவித்தார்.

    எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. (நீதிக்கதை)

    By: Unknown On: 16:47
  • Share The Gag




  • அசோக் என்பவன் தான் இருக்கும் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது.


    நான்கு மைல் நடந்துதான் அவ்வூருக்கு செல்ல முடியும்,


    அவன் காலை கிளம்பினான்.


    செல்லும் வழியில் வயலில் பூசணிக்கொடிகள் பரவியிருந்தன.ஒவ்வொன்றிலும் அவற்றில் பல பூசணிக்காய்கள் காய்த்திருந்தன..அதைப் பார்த்தவாறு நடந்தான்.


    சிறிது நேரத்தில்..வெயிலின் கொடுமை அதிகமாயிற்று.அசோக்கிற்கு வேர்வை வழிந்தோடியது..அவன் களைப்பானான்.சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு செல்ல தீர்மானித்தான்.



    அப்போது..சற்றுத் தொலைவில் அரசமரம் ஒன்றிருப்பதைக் கண்டான்.அம்மரத்தின் அடியில் சென்று அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.


    மரத்தில் சிறு சிறு காய்கள் நிறைய இருந்தன.

    உடனே ..'கடவுள் ஏன் அறியாமல் சிறிய பூசணிக்கொடிக்கு பெரிய காயையும்..பெரிய இந்த மரத்திற்கு சிறிய காய்களையும் படைத்துள்ளார் ' என்று நினைத்தான்.



    அப்போது மரத்திலிருந்து சிறிய காய் ஒன்று உதிர்ந்து அவன் தலையில் விழுந்து..அவனுக்கு சற்று வலியை ஏற்படுத்தியது.

    உடனே..'கடவுள் காரணமில்லாமல் இப்படி படைக்கவில்லை.இந்த மரத்தில் பூசணி அளவு காய்கள் இருந்திருந்தால்..இவ்வளவு நேரம் என் தலை போயிருக்குமே' என உணர்ந்தான்.


    தனது அறிவீனத்திற்கு வெட்கமடைந்தான்.


    இறைவன் காரணமில்லாமல் எந்த ஒன்றையும்   செய்வதில்லை..படைப்பதில்லை!

    'ஆலப்புழா' - சுற்றுலாத்தலம்

    By: Unknown On: 07:54
  • Share The Gag

  • 'ஆலப்புழா'

    ஆலப்புழா
     
    'லப்புழா' என்றதும் பெரிய பெரிய படகு வீடுகளும் அலைஇல்லாத கடலும்,முகத்துவாரம் என்னும் கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்ப்பரப்பும் தமிழ் மற்றும் கேரள  சினிமாக்களின் கனவு பாடல் காட்சிகளும் நினைவுக்கு வரும்  சுற்றிலும் நீலநிறத்தில் தண்ணீரும்.. பச்சை நிறத்தில் மரங்களும் சூழ்ந்த அந்த அற்புத பூமியை  இப்போது அறிவோம் 
     
    ஆலப்புழா இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு இணையான அமைப்பை உடையது. வெனிஸ்  நகர மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதென்றால் கூட படு வழியாகத்தான் பயணம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஆலப்புழாவும் அப்படிப்பட்டதுதான். அனைத்து பொருட்களும் படகு வழியாகத்தான் வீடுகளுக்கு வருகிறது.
    இதனால் ஆலப்புழாவை கேரளாவின் வெனிஸ் என்று அழைக்கிறார்கள். ஆலப்புழா அத்துணை ரம்யமான நகரம். காதல் ஜோடிகள் முதல், கல்யாணம் ஆன தம்பதிகள் வரை அனைவரும் விரும்பும் ஓர் இடமாக ஆலப்புழா விளங்குகிறது.

    ஊரை சுற்றிலும் ஆறுகள், ஏரிகள், அடர்ந்த பசுமையான மரங்கள் இவை அனைத்தும் இயற்கை அன்னையின் மடியில் நம்மை தவழச் செய்கிறது
    இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பாம்பு படகு சவாரி உலக புகழ் பெற்றது. மற்றும் விடுமுறை காயல் வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது.
    கடல் வரை பரந்து காணப்படும் இங்குள்ள கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது.  இக்கடற்கரை மிகத்தூய்மையாகவும், அழகாகவும் ராமரிக்கப்படுகிறது இக்கடற்கரையின் தெற்குப் பகுதியில் குழந்தைகள் விளையாட தனிப்பூங்கா ஒன்றும்அமைக்கப்பட்டுள்ளது.
     
    படகு இல்லம்:
     
    லப்புழாவில் இருக்கும்போது நாம் காணும் மிகவும் அருமையான ஒரு அனுபவம் படகு இல்லப் பயணமாகும்.
    நாம் ஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் காணலாம்.
    அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவது வழக்கம்.
    கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இது அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும்.பின்னர் ஒரு ஹோட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு இல்லங்கள் இப்போது வந்துவிட்டன
    கேரள சுற்றுலா துறையின் மூலமாகவும் பல்வேறு படகு இல்லங்கள் உள்ளன. படகு இல்லங்கள் சாதரணம் முதல் நவீனம் வரை உள்ளது.  பயணிகளின் பொருளாதார வசதிகளை பொறுத்தது. இந்த படகு இல்லங்களில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 7000 ரூபாய் வரையும் செலவாகலாம். மூன்று வேலை உணவும் உங்களுக்கு அதில் வழங்கப்படும்.
    ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டு மகிழலாம் என்பது இப்பயணத்தின் சிறப்பாகும்
     
    இப்போது நாம்  வள்ளத்தில் பயணிப்போம் ;

    முதலில் நாம் ஆலப்புழாவிலிருந்து ஒரு படகினை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
    கண்களை மூடி அப்படியே அமைதியாக சிறிது நேரம் பயணம் மேற்கொண்டுவிட்டு பின்னர் கேரளாவின் மிகப்பெரிய காயலான வேம்பனார் ஏரியின் அழகில் மனதைப் பறிகொடுத்தபடி மனதை வருடும் காற்றை நுகர்ந்தபடி பிரயாணம் செய்யலாம்.பின்னர் நாம் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான குமரகோம் நோக்கிச் செல்வோம். வேம்பநாடு காயல்வழியாகச் செல்லும்போது காயல் கிராம வாழ்க்கை மற்றும் காயல் செயல்பாட்டுக் காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். இரு ஓரங்களிலும் தென்னந்தோப்புகளும் வயல்வெளிகளும் உள்ள கால்வாய்கள் வழியாக பொழுதுபோக்காக நீர்வழிப் பயணம் செல்லலாம்.
     
    குமரகோமை அடைந்ததும் நாம்  இன்னொரு விந்தையான உலகிற்குள் நுழைந்தது போல உணரமுடியும்  . தீவுக்கூட்டம் நிறைந்த இந்த சிறிய காயல் கிராமத்தின் தனக்கென பிரத்தியேக வாழ்க்கை முறையும் மெல்லிய அழகான மனதை வருடும் காட்சிகள் ஒலிகள் மற்றும் நறுமணம் யாவும் நம்மை  அப்படியே கட்டிப்போட்டு விடும்.குமரகோமில் சிறிது தங்கி இளைப்பாறிவிட்டு வைக்கமிற்குச் செல்லலாம்.

    வைக்கம்  இது பல மனோரம்மியமான காட்சிகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்முன் கொண்டு நிறுத்துகிறது . இங்கு  நாம் கேரள மிகமதிப்பான பாரம்பரிய மாதிரி பொருட்களைக் காணலாம். இந்த நகரின் முதன்மை கவர்ச்சி மிக பிரசித்திபெற்ற சிவன் கோவிலாகும்.
    இங்குள்ள பச்சை வயல் வெளிகள் நமக்கு  மற்றுமொரு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
    வைக்கத்திலிருந்து கேரளாவின் சுவையான உணவை உண்டு தெம்பாகிய பின்னர் நாம்  சைனைஸ் மீன்பிடி வலைகள் மற்றும் வரலாற்று இடங்கள் நிறைந்த ஃபோர்ட் கொச்சிக்கு  செல்லலாம்.

    ஃபோர்ட் கொச்சிக்கு விடைகொடுத்து விட்டு நாம் பால்கட்டி தீவை நோக்கி செல்வோமானால்
    அதுதான் நாம் இறுதியாக சென்றடையும் சுற்றுலா தளமாகும். பால்கட்டி  தீவிற்குச் செல்லும் வழியில்நாம் முக்கிய இடமான எர்ணாகுளத்தின் அழகிய காட்சியைக் காணலாம். இதன் தொடுவானம், கப்பல்தளம் ஆகியவை பார்க்கத்தக்கவை ஆகும். பால்கட்டிக்குள் சென்றுவிட்டால் திரும்பிவர மனம் வராது. மெல்லிய தென்றல் காற்று மனதை அள்ளும்.
    அழகிய சூரிய வெளிச்சம் ஆகியவை நம்மை பிரியவிடாமல் செய்யும்.அந்த இனிய நினைவுகள் நம்மை எல்லா வருடமும் இங்கு வரத்தூண்டும்

    ஆலப்புழாவில் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப படகுகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிறிய நாட்டுப் படகுகள், ஆடம்பரப் படகுகள், சிறிய விரைவு படகுகள், பெரிய பயணிகள் மோட்டார் படகுகள் என்று எல்லாவிதமான படகுகளும் இங்கு கிடைக்கும். சிறிய படகுகள் கால்வாய்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உதவும்.
    நீங்கள் பிரயாணம் மேற்கொள்ள தயாராகிவிட்டால் ஆலப்புழாவைச் சுற்றியும் உள்ளேயும் பயணம் செய்ய கால்வாய் வழி பயணம் முறைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வது இனிய அனுபவமாக இருக்கும்.

    கிருஷ்ணர் கோவில் :

    லப்புழாவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அற்புதமான கிருஷ்ணர் கோவில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும்.
    இக்கோவிலின் மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் வியப்பூட்டும்  விதத்தில் அமைந்துள்ளது. இங்கு பள்ளிபானா என்ற பெயரில்
    மாயமந்திர நிகழ்ச்சி   12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது
    இங்குள்ள கோவிலில் பிரசாதமாக பால் பாயசம் வழங்கப்படுகிறது.

    காயங்குளம்-கிருஷ்ணாபுரம் அரண்மனை:
    18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆலப்புழாவில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரள மன்னர்களின் கட்டட கலைக்கு சிறப்பான உதாரணமாக இது திகழ்கிறது.
    இரண்டு அடுக்குகளால் ஆன இந்த அரண்மனையில்  பல்வேறு புராதான பொருட்கள் உள்ளது. அதனை பாதுகாக்கும் விதமாக ஒரு அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், வெண்கல சிற்பங்கள், சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவை அரண்மனையின் வரலாற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
     
    சக்குலத்து பகவதி கோவில் :
    மபலப்புழா நீராட்டுபுரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்ஹா, விஷ்ணு, சிவன், ஆகிய முக்கடவுல்களையும் உருவாக்கிய மகா சக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள்.
    இங்கு நடக்கும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இதல் நாடு முழுவதிலுமிருந்து பெண்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.
     
    எடத்துவா தேவாலயம் :

    லப்புழாவில் இருந்து சும்மார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ தேவாலயம் 1810ல் கட்டப்பட்டது. ஐரோப்பாவின் கட்டடக்கலையை பின்பற்றி இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இங்கு வந்து மனம் ஒன்றி பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு, உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலுமிருந்து கிறித்துவ அன்பர்கள் வந்துசெல்லும் புனித தளமாக, சக்திவாய்ந்த இடமாக,
    தேவனின் கருணை நிரம்பும் இடமாக இந்த தளம் அமைந்துள்ளது.
     
     
    நேரு ஸ்னேக் கோப்பை படகுப் போட்டி
    வ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 2-ம் சனியன்று இங்கு பிரசித்திபெற்ற படகுப் போட்டி நடைபெறும்.
    பல தினுசுப் படகுகள் அலங்கரிக்கப்பட்டு, அதில் 100 துடுப்பாளர்கள் துடுப்பு போடுவார்கள். இந்தப் படுகுச் சவாரிப் போட்டி, நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வேம்பாநந்த் ஏரியில் நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகள் எல்லா கடைகளிலும் விற்கப்படும்.

    ஆலப்புழாவில் எங்கு தங்குவது?
     
    1. ஹோட்டல் கய்லோரம்
    2. மராரி பீச்
    3. கேரளா ஹவுஸ் போட்
    4. கேரளீயம் ஆயுர்வேதிக் லேக் ரிசார்ட்
    ஆகிய ஹோட்டல்களில் தங்கலாம்.

    ஆலப்புழா செல்வது எப்படி :
    பிற பகுதியில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி சர்வேதேச விமானநிலையம் அமை
    ந்துள்ளது. இதனால் விமானம் மார்கமாக வர விரும்பும் பயணிகளுக்கு ஏதுவான வசதிகள் உள்ளது.
    சென்னையிலிருந்து தினமும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். ஆலப்புழா எக்ஸ்பிரஸ் தினமும் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் .ஆலப்புழாவில் தம்பதிகள் இருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இரண்டுநாட்கள் தங்க சுமார் 15000 வரை ஆகும்.
    செலவு குறைக்க விரும்பினால் சாதாரண விடுதிகளை தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆலப்புழாவிலிருந்து 15 கிலோமீட்டர் வெளியில் தங்கி அங்குள்ள விடுதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆலப்புழாவை சுற்றிபார்க்க 2 நாட்கள் தேவை. ஆலப்புழாவில் உணவுவகைகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக கரிமீன், மற்றும் சில மீன் வகைகள் நிறைந்த உணவு கிடைக்கும். அது மட்டுமா கேரளாவின் பாரம்பரிய உணவுகள் எங்கும் மணக்கும்.

    'தல' அஜித்தின் தனிமனிதப் போராட்டம்!

    By: Unknown On: 07:49
  • Share The Gag




    ”கதைக்கு ஏற்ற தலைப்பு 'ஆரம்பம்'. இந்த தலைப்பு வைத்ததே படத்திற்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது” என்று அடக்கமாக பேசுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதிகட்ட பணிகள், இசை வெளியீடு என மும்முரமாக பணியாற்றி கொண்டிருந்தவரிடம் பேசினோம். 


    'ஆரம்பம்' ஏன் இவ்வளவு லேட்?

     
    “படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால் 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று கேட்க மாட்டீர்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா (கெஸ்ட் ரோல்), சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர் மட்டுமன்றி, அக்‌ஷ்ரா கெளடா என்ற பெண்ணையும் இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன். இவ்வளவு நடிகர்களின் கால்ஷீட் வாங்கி, படப்பிடிப்பு போக வேண்டும். படம் தாமதம் என்று நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அதுமட்டுமல்ல நான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தவே இல்லை என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.” 


    படத்தலைப்பிலும் நிறைய குழப்பம் இருந்தது போல?

     
    “படத்தலைப்பில் குழப்பம் இருக்கிறது நான் எப்போதாவது நான் கூறினேனா? நான் முதலில் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் படத்தலைப்பு பற்றி யோசிக்கவில்லை. 'ஆரம்பம்' என்ற டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றவுடன் வைத்தேன். அவவளவு தான். அந்த தலைப்பு வைத்தவுடன், இணையத்தில் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.” 


    விஷ்ணுவர்தன் படம் என்றாலே அஜித் அல்லது ஆர்யா இருப்பார் என்றாகிவிட்டதே... வேறு நடிகருடன் படம் பண்ணும் ஐடியா எதும் இல்லையா?

     
    “விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் இதனை பிரேக் பண்ணுவேன். அதுமட்டுமன்றி எனக்கு அஜித், ஆர்யா இருவரிடம் நடிகர்கள் என்பதையும் கடந்து நட்பு இருக்கிறது அதனால் நான் அவர்கள் இருவருடன் பணியாற்றும் போது மிக நன்றாக செயல்பட முடிகிறது. நல்ல சூழல் கிடைக்கிறது.” 


    'பில்லா' நயன்தாரா - 'ஆரம்பம்' நயன்தாரா எப்படி இருக்காங்க?

     
    “பில்லா' படத்தில் ரொம்ப கிளாமரா நடிச்சு இருப்பாங்க. ஆனால் இப்படத்தில் அப்படியில்லை. 'ஆரம்பம்' படத்தில் அஜித்திற்கு ஜோடி என்பதையும் தாண்டி ஒரு நல்ல பாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார்.” 


    'ஆரம்பம்' கதை என்ன? அஜித்திற்கு என்ன ரோல்?

     
    “ஒரு வரிக்கதையினை கூறினால் படத்தின் கதை உங்களுக்கு தெரிந்துவிடும். ஒரு தனிமனிதப் போராட்டம் தான் 'ஆரம்பம். அஜித் சார் என்ன பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் இன்னும் ஒரு சில பணிகள் இருக்கின்றன். 19ம் தேதி இசை வெளியீடு இருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும். படத்தின் பைனல் எடிட் பார்த்தேன். 'ஆரம்பம்' மிகவும் ஸ்டைலீஸாகவும், பரபரப்பாகவும் வந்து இருக்கிறது. படம் பார்க்கும் ஒருவருக்கு கூட 'ஆரம்பம்' போர் அடிக்காது.


    காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)

    By: Unknown On: 07:35
  • Share The Gag


  • ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.

    அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.

    மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.

    அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.

    அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.

    காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.

    காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.
     

    சாம்சங் நோட் 3 ஸ்மார்ட் போன் அறிமுகம்!

    By: Unknown On: 07:27
  • Share The Gag
  • புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தின் புதிய நோட்-3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மற்றும் ஐடி பிரிவுத் தலைவர் விநீத் தனேஜா (இடது), இயக்கநர் மனு சர்மா.



    செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,900 ஆகும். வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


     ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது. 


    இந்நிறுவனம் முதல் முறையாக கையில் அணியக்கூடிய தண்ணீர் புகாத கேலக்ஸி கியரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,900 ஆகும். இந்த இரு தயாரிப்புகளும் செப்டம்பர் 25 ம் தேதி முதல் சந்தையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். 


    விற்பனையை அதிகரிக்க நோட் 3 ஸ்மார்ட் போனுக்கு எளிய தவணை முறைத் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜியில் செயல்படும் வகையிலானது நோட் 3 ஸ்மார்ட்போன். இந்த செல்போனில் திருடுபோனால் கண்டறியும் வசதியும் உள்ளது.

    கடலில் பாய்ந்து தோழர்களை மீட்ட தைரிய சிறுவன்!

    By: Unknown On: 07:21
  • Share The Gag


  • கண்ணெதிரே ஒருவர் அடிபட்டுக் கிடந்தாலும், 'ஓரமா படுக்க வையுங்க சார்' என்று சொல்லிவிட்டு ஒதுங்கிப் போகும் இரக்க சிந்தனையாளர்களின் உலகம் இது. அவர்களுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமான காரியம் ஒன்றை செய்திருக்கிறான் சிறுவன் ரிஷி. 



    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் இருக்கிறது திருமுல்லைவாசல் கிராமம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் ரிஷி. பள்ளிக்குள் நுழைந்து ரிஷி என்று சொன்னதுமே நம் கைபிடித்து அழைத்துச் சென்று தலைமையாசிரியர் தமிழ்ச் செல்வனுக்கு முன் நிறுத்தி, 'சார் நம்ம ரிஷியைப் பார்க்க வந்திருக்காங்க' என்று அறிமுகப்படுத்துகிறார்கள் சக மாணவர்கள். திடீர் பிரபலமாயிருக்கும் அந்த சிறுவனுக்கு தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியம் எதுவும் தெரியவில்லை. என்னவோ ஏதோ என்று பயந்து கொண்டே உள்ளே வந்தவன் கையை கட்டிக்கொண்டு நிற்கிறான். அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஷமீர் பாரிஸுக்கும் சகாபுதீனுக்கும் தகவல் தெரிந்து அவர்களும் அங்கே வருகிறார்கள். இருவரும் உள்ளே நுழைந்ததுமே ரிஷியை பார்த்துவிட்டு ஓடிவந்து கட்டிக் கொள்கிறார்கள். 




    ''ஞாயித்துக்கிழமை (15.9.13) காலையில நான், அமிருதீன் (இதேபள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்) சகாபுதீன் மூணு பேரும் கடலுக்கு குளிக்கப் போனோம். நேரம் போறது தெரியாம ரொம்ப நேரமா கடல்ல ஆடிக்கிட்டு இருந்தோம். அப்ப, திடீர்னு ஒரு அலை வந்து, அமிருதீனை இழுத்துருச்சு. அவன காப்பாத்துறதுக்காக நானும் சகாவும் பின்னாடியே போனோம். ஆனா, அதுக்குள்ள அவன் ஏழு பாவம் தூரம் (கிட்டதட்ட 200 மீட்டர்) போயிட்டான். பாதி தூரம் போனவுடனே எங்களூக்கும் ஆழம் நிலைக்கல. முழுவ ஆரம்பிச்சட்டோம். ஒருத்தரை ஒருத்தர் பிடுச்சுகிட்டாலும் ஒண்ணும் செய்ய முடியல. ஆனாலும், தாக்கு பிடிச்சு தத்தளிச்சுக்கிட்டே இருந்தோம். அப்பதான் ரிஷி தூரத்தில ஒரு மரத்துல வேகமா வரது தெரிஞ்சுது. அவன், கிட்ட வந்ததும் அந்த மரத்தை எட்டி பிடிச்சுகிட்டோம்”' என்று படபடப்புடன் விவரித்தான் ரிஷியால் உயிர் பிழைத்திருக்கும் சிறுவன் ஷமீர்பாரிஸ்.
    "நானும் எங்க தெரு பசங்களும் அங்கதான் குளிச்சிக்கிட்டிருந்தோம். 




    இவனுங்க அந்த பக்கம் குளிச்சுகிட்டு இருந்துருக்காங்க. அமிருதீனை அலை இழுத்துகிட்டு போனதும் எல்லா பசங்களும் மேடேறிட்டானுங்க. பக்கத்துல பெரியாளுங்க வேற யாரும் இல்லை. உடனே நான் எப்பவும் வைச்சு வெளையாடற மரத்தை எடுத்துகிட்டு கடலுக்குள்ள போயிட்டேன். மரத்துல படுத்துக்கிட்டு, வேகமா இவங்ககிட்ட போனேன். கிட்டப் போனதும்தான் பயமே வந்துச்சு. இவங்கள காப்பாத்தப் போயி நம்மளும் சிக்கிக்கிட்டா.. என்ன பண்றதுன்னு பயம். ஆனது ஆகட்டும்னு மரத்துல ஒரு மொனையில நான் படுத்துகிட்டு இன்னொரு மொனையில இரண்டு பேரையும் தொத்த வைச்சேன். அப்படியே கையால தண்ணிய தள்ளி தள்ளியே ரெண்டு பேரையும் கரைக்கு கொண்டாந்துட்டேன்" என்று தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியம் தெரியாமல் சர்வசாதாரணமாய் சொன்னான் ரிஷி. 




    தாமதமாக செய்தியைக் கேள்விப்பட்ட மீனவர்கள், படகுகளில் போய் அமிருதீனை மீட்டிருக்கிறார்கள். ஆனால், தண்ணீரை அதிகம் குடித்திருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அமிருதீனின் உயிர் பிரிந்துவிட்டது. அப்போதுதான், இன்னும் இரண்டு சிறுவர்களை ரிஷி காப்பாற்றிய விஷயம் பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியவந்திருக்கிறது. 



    '' இவனுக்கு கடல்ல பயமே கிடையாது சார். இவன்பாட்டுக்கு நீந்தி நடுக்கடலுக்கு போயிடுவான். ஏதாவது மர துண்டைப் பிடுச்சுகிட்டு நாள்பூராவும் கடல்ல மிதப்பான். இவன் சரியான கடல்சுறா”” என்கிறது ரிஷியின் வாண்டு வட்டம். ‘'அலை வேகமா இருக்கு, பின்னால இழுக்குது, குளிக்க போகாதீங்கடான்னு எங்க தெரு பெரியபசங்க சொன்னாங்க. ஆனா அமிருதீன், அதையெல்லாம் கேட்காமதான் எங்களையும் இழுத்துட்டுப் போனான். ரிஷி மட்டும் இல்லைன்னா அமிருதீன் போன எடத்துக்கே நாங்களும் போயிருப்போம். நாங்க செத்துப் பொழைச்சிருக்கோம்; எங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கான் எங்க ரிஷி. இனி, அவன்தான் எங்களுக்கு கடவுள்” - சகாபுதீனின் இந்த வார்த்தைகளில் புகழ்ச்சி இல்லை, நெகிழ்ச்சிதான் இருந்தது.