Wednesday 25 September 2013

முகத்தை பொலிவாக்கும் கற்றாலை ஜெல்!

By: Unknown On: 23:25
  • Share The Gag
  • Aloe vera gel for face bright


    அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல்  பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து  தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..


    கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதை அழகுக்கு பயன்படுத்தும் க்ரீமாகவும், முகம் கழுகும் போது உபயோகிக்கும் பேஸ் வாஸாகவும் பயன்படுத்தலாம்.



    அலோவேராவின் நன்மைகள்



    இது தோலுக்கு ஈரப்பதம் ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகின்றனர். கற்றாலை ஜெல்லில் ஹைட்ரேட்டுகள்  கொண்டுள்ளதால்  சருமத்தை இளமையாக்கி, உங்களின் சருமத்தை எந்த நேரங்களில் பார்த்தாலும் புதியதாக தேற்றமளிக்கும் தனமையை கொண்டுள்ளது. கற்றாலையில்  எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை கொண்டுள்ளதால் முகத்தில் தோன்றும் ஆக்னோ, பருக்கள் வராமல் தடுக்கும். இதில் இயற்கையாக நிகழ்வதற்கு  எதிராக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றத்தை கொண்டுள்ளதால் வயது மூப்பிலிருந்து சருமத்தை தக்கவைத்துக்கொள்கிறது.




    அலோ வேரா உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஏற்படக்கூடிய வலிகளையும், வீக்கங்களையும் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. இது  மருத்துவரீதியாக எரிகாயங்கள், பூச்சி கடி, எக்ஸிமா, வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது. வீட்டிலேயே கற்றாலை  பயன்படுத்தி ஜெல் தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து முகத்திறக்கு அவ்வப்போது பயன்படுத்தலாம். 


    முக அழகிற்கு சில டிப்ஸ்!

    By: Unknown On: 23:16
  • Share The Gag
  • Stark, austere beauty facial Tips



    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள்   இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை  காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால்,  முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.



    முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல்   பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ  வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.



    தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து  முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும்  மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.



    முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும் தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி  சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

    சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!

    By: Unknown On: 23:07
  • Share The Gag
  • Hair of the skin? Delete ... Prevent!




    நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை  நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு  சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.


    ‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல்  போவதே முக்கிய  காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை  என வேறு காரணங்களும் இதன்  பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந் தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்’’ என்கிற  ராஜம், அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.



    பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஸ் ஸ்டோ னில் தடவி  வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும்.  கடலை மாவு, பார்லி பவு டர், தேன் மூன்றும் தலா 1  டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து, ரோமம் நீக்க வேண் டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை  மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரைத் தெளித்து, சந்த னம் தடவி வைத்த பியூமிஸ் ஸ்டோனால், மிக மென்மையாக  ரோமத்தின் எதிர் திசையில் தேய்க்கவும். பிறகு அந்த இடத்தைக் கழுவ வும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம்  குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடையும்.



    விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர் விட்டு பேஸ்ட்  போலச் செய்து,  உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக  உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ,  தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.



    பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன்  வெல்லத் தண்ணீர்  கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும், மென்மையாக உரித்தெடுத்து விடலாம்.  தொடர்ந்து இப்படிச் செய்தால், பெண்  குழந்தைகள் பருவமடையும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.



    சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள்  எல்லாம் சம அளவு  கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது, மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித் தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.



    செய்யக்கூடாதவை...



    சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாம லிருப்பது  உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.



    கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்,  ரோமங்களை நீக்கிய  இடம், தடித்து, கருப்பதுடன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங்  கிரீம்களை உபயோகிப்பதும் ரோம  வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.



    ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு  சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி  நின்று விடும்.  அந்த இடங்களை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வை த்து, ஊறிக் குளிப்பது மூலம்  ஓரளவு நிவாரணம் காணலாம்.



    பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத்  தெரியாமல்  தற்காலிகமாக மறைக்கப்படும். ஆனால், பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி  ரோமங்கள் தம் பழைய  நிறத்துக்குத் திரும்பும். கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.


    நுகர் பொருள்களுக்கான 0% வட்டிக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி!

    By: Unknown On: 22:46
  • Share The Gag

  •  
     
     
     
    நுகர் பொருள்கள் வாங்குவதற்கு வட்டியில்லாத, அதாவது 0% வட்டிக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும், டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


    பொதுவாக நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க இதுபோன்ற சலுகை திட்டங்களை அறிவிப்பதுண்டு.


    குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு இலவச தவணை முறையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதை பெரும்பாலோர் தேர்வு செய்வதுண்டு. 0 சதவிகித வட்டி என்று ஆசை காட்டி வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் சுரண்டுவதால், இதற்கும் ரிசர்வ் வங்கி புதன்கிழமை தடை விதித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு முந்தைய விழாக்கால விற்பனை பெருமளவு பாதிக்கப்படும் என்று வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.


    மேலும், டெபிட் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு எவ்வித கட்டணத்தையும் நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.


    அதேசமயம் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பது போன்ற சலுகைகளை எந்த பொருள் வாங்குவதற்கும் காட்டக் கூடாது என்றும், பொருளின் விலை அதைத் தேர்ந்தெடுப்போருக்கு தெளிவாக விளக்கப்படவேண்டும், இதில் எவ்வித ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


    வட்டியில்லா கடன் என்பது இனி எந்தப் பொருளுக்கும் அளிக்கக் கூடாது. பொருள்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ஒரே சீரானதாக இருக்கவேண்டும் என்றும், பரிசீலனைக் கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்று வங்கிகளை ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


    உடல் சூட்டை தணிக்கும் முருங்கைப்பூ!

    By: Unknown On: 21:52
  • Share The Gag
  •   moringa flower in our country is a wonderful source product available anywhere, anytime.



    முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும். முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும்.


    பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும். நன்கு காய்ச்சிய பசுவின் பாலில் நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல புஷ்டி பெறும். முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மேகநோய் எனப்படும் பெண் சீக்கு குணமாகிவிடும். மேநோய்க்கு வேறொரு பக்குவமும் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை சாறெடுத்துக்கொள்ள வேண்டும். 




    இந்தச் சாற்றில் அரைக்கால் படி அளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் கூட்டி நூறு கிராம் அளவுக்கு வெல்லம் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டாலே மேகநோய் தணிந்து விடும். உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ நல்ல முறையில் பயன்படும். முருங்கைப்பூவை கஷாயம் முறையில் பக்குவம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு உடனேயே சரிபடும். பெண்களுக்கு பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிராபத்து ஏற்படக்கூடும். 




    இதற்கு முருங்கைப்பூ பெரிதும் பயன்படுகிறது. முருங்கைப்பூவை நன்றாக அரைத்து ஒரு தேங்காய் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவின் பாலும் தேங்காய் பாலும் படிக்கு அரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 25 கிராம் வெல்லத்தை கூட்டி எல்லாவற்றையும் சேர்த்து காய்ச்சி இலேகிய பதத்தில் இறக்கிவிடவேண்டும். இந்த லேகியத்தை எலுமிச்சை அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடவேண்டும். இவ்வாறு ஒரு வருடம் சாப்பிட்டால் பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு குணமாகிவிடும்.


    அமேசனின் புதிய இயங்குதளத்துடன் அறிமுகமாகியது Kindle Fire HDX டேப்லட் - Amazon Kindle Fire HDX new!

    By: Unknown On: 21:51
  • Share The Gag




  •  முதற்தர ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேசன் நிறுவனம் தனது தயாரிப்பில் டேப்லட்டினை அறிமுகப்படுத்தியிருந்தமை அறிந்ததே.



    இந்நிலையில் தற்போது Fire OS 3.0 எனும் புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுதுடன் அதனை அடிப்படையாகக் கொண்ட Kindle Fire HDX எனும் டேப்லட்களையும் அறிமுகம் செய்துள்ளது. 



    7 அங்குலம் மற்றும் 8.9 அங்குல அளவுடைய தொடுதிரையுடன் கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டேப்லட்களில் 2.2GHz Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியன காணப்படுகின்றன. 



    இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB மற்றும் 64GB ஆகிய கொள்ளளவுகளை உடைய பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 



     




     


    7-வது ஊதியக்குழு நியமனம் : பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு..!

    By: Unknown On: 21:36
  • Share The Gag



  •  மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இடையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மட்டும் விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்படுவது வழக்கம். இதுவரை 6 சம்பள கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக, 6வது சம்பள கமிஷன் கடந்த 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது.


    இது தனது அறிக்கையை கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசிடம் கொடுத்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள் உயர்த்தி வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு நிலுவை தொகை வழங்கப்பட்டது இதை தொடர்ந்து, மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு 6வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்தன.



    6வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.



    மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஜனவரி 1ம் தேதி முதல் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Seventh Pay comission aoopinted by Prime minister Manmohan singh
     

    குரங்கும்...இரண்டு பூனைகளும்- (நீதிக்கதை)

    By: Unknown On: 21:11
  • Share The Gag


  •  
     
    இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன....ஆனால் அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன.


    ஒரு நாள் அப்பூனைகளுக்கு அப்பம் கிடைத்தது.அவை இரண்டும் சாப்பிட நினைத்த போது ..அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் சண்டை வந்தது.


    பிறகு இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணின .அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.


    குரங்கிடம் அப்பத்தை சமமாக பிரித்துத் தரச்சொல்ல குரங்கும் சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்தது.


    அப்பத்தை இரண்டாக்கி தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்தது குரங்கு.தராசின் ஒரு தட்டு சற்று கீழே செல்ல,குரங்கு அந்த தட்டில் உள்ள


    அப்பத்தை ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது .இப்போது மற்றொரு தட்டு கீழே தாழ்ந்தது.அந்த தட்டில் இருந்த அப்பத்தை சிறிது


    கடித்து விட்டு மீண்டூம் போட்டது..


    இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ...குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை சாப்பிட்டது.


    அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் " இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்" என மீதமுள்ளதை கேட்டன


    ஆனால் குரங்கோ,மீதமிருந்த அப்பம் 'நான் இது வரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


    பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்...அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம்.ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


    நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும்,ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும்.
     

    காசிரங்கா தேசியப்பூங்கா - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 20:58
  • Share The Gag
  •                      காசிரங்கா தேசியப்பூங்கா
    ந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை 'ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்' உலவும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா.

    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் உள்ளதாம். இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகை பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.


    காசிரங்கா தேசியப் பூங்கா உருவானதன் பின்னணி சுவாரஸ்ய-மானது. பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் கர்சன்பிரபுவின் மனைவி மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார். அரியவகை மிருகங்களை பார்த்து ஆச்சரியப்-பட்டுப் போன அவர், தனது கணவர் கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை மிருகங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

     இத்தனை சிறப்புமிக்க காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள அரியவகை உயிரினங்களைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.காசிரங்கா தேசியப் பூங்காவுக்குள் அங்குள்ள வாகனங்களில் சென்று ரசிக்கலாம். யானை சவாரியும் உண்டு. வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்ல அனுமதி இல்லை. நவம்பர் மாதத்தின் மத்தியில் இருந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை காசிரங்காவிற்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
    எப்படிப் போகலாம்?
    காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உள்ளது.220கி.மீ தொலைவில் கவுகாத்தியிலும் 90கி.மீ தொலைவில் ஜோர்ஹட்டிலும் விமான நிலையங்கள் உள்ளன.இந்த இரு நகரங்கள் மற்றும் ஃபர்கெட்டிங் ஆகிய இடங்களில் ரயில்நிலையம் உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக தேசியப்பூங்காவிற்கு சென்று விடலாம்.

    ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படத்தின் தலைப்பானது!

    By: Unknown On: 20:52
  • Share The Gag


  • ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.
    ஒரு சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பைதான் அப்படியே புதிய படத்திற்கும் தலைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது என்று சொல்லலாம். 


    ஆமாங்க, அதற்கு பதிலாக முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட். அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது. அதாவது, பாபா படத்தில் ரஜினி பேசிய “கதம் கதம்” (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் ஒரு படத்துக்கு தலைப்பாகி இருக்கிறது. 


    இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்குகிறார். இதில் நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வச்சிருக்கேன் என்கிறார் இயக்குனர்.
     

    நானே ஹீரோ.. நானே வில்லன்!

    By: Unknown On: 20:47
  • Share The Gag

  •  
     
     
     
     
     
     
     
     
     
    'ஜெயம்' படத்தில் அப்பாவியாய் பார்த்த ரவியா இது..? முறுக்கேறிய கைகள், ஒட்டிய வயிறு, சற்றே கறுத்துப் போயிருக்கும் முகம் என அப்படியே வடசென்னைவாசியாகவே தோற்றமளிக்கிறார் ‘ஜெயம்' ரவி. பேச்சில் நிதானமும், நம்பிக்கையும் நிறைந்திருக்கிறது. இனி, 'ஜெயம்' ரவியுடனான நம் மழைநாள் சந்திப்பிலிருந்து.. 



    ‘ஜெயம்', ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' மாதிரி ரீமேக் படங்கள்ல நடிக்கிறது கியாரண்டி ஹிட். 'பேராண்மை', ‘பூலோகம்', ‘நிமிர்ந்து நில்' அப்படினு இப்ப நிறைய நேரடி தமிழ் படங்கள்ல தான் நடிக்கிறீங்க.. என்ன காரணம்?

     
    முதல்ல ரீமேக் படங்கள் எல்லாம் கியாரண்டி ஹிட் அப்படினு யார் சார் சொன்னது?. 10 லட்ச ரூபாய் இருந்தா ஒரு படத்தை டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணலாம். ஆனா ரீமேக் உரிமை வாங்கி அதை தமிழுக்கு ஏற்றமாதிரி மாத்தி பண்றது சுலபமில்லை. அதுக்கும் நிறைய உழைப்பு தேவை. ரீமேக் படங்கள்ல நடிச்சுக்கிட்டே தான், ‘தாஸ்', ‘பேராண்மை','தாம் தூம்' படங்கள்ல நடிச்சேன். ரீமேக் படங்கள்ல நடிச்சா மக்களுக்கு உடனே தெரிய ஆரம்பிக்குது அவ்வளவு தான். 


    'ஆதிபகவன்' படத்துக்காக நிறைய மெனக்கெட்டீங்க.. ஆனா படம் சரியா போகல.. வருத்தப்பட்டீங்களா?

     
    ரொம்ப வருத்தப்பட்டேன். மத்த படங்களைவிட அந்த படத்துக்காக நான் உழைச்சது அதிகம். அதுக்காக படம் சரியா போகலயேனு வருத்தப்பட்டுகிட்டே இருந்தா, அடுத்தடுத்த படங்கள்ல நடிக்க முடியுமா?. ஒரு ஜெயிப்பு எல்லாத்தையும் மறக்க செய்யும். அதுக்காக தான் ஓட ஆரம்பிச்சுட்ட்டேன். 


    'சாக்லேட் பாய்' ஜெயம் ரவி அதுக்குள்ள வில்லன் ஆகவேண்டிய அவசியம் என்ன?

     
    உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு. நான் 25 வயசுல தான் ஐ-போன் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்ப 3 வயசு பசங்களே ஐ-போன்ல பிரிச்சு மேயறாங்க.. இப்ப இருக்க டிரெண்ட்டுக்கு ஏத்தமாதிரி எதாவது வித்தியாசமா ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கணும். 25 படங்கள்ல நடிச்சப்பறம் தான் வில்லனா நடிப்பேன்னு அடம்பிடிச்சுகிட்டு நின்னா, காணாம போயிருவோம். எந்த ஒரு வித்தியாசமான கேரக்டர் வந்தாலும் ஸ்கோர் பண்றது தான் இப்போதைக்கு பெஸ்ட்னு பட்டுது. நம்ம மனசு தானே சரியான வழிகாட்டி. வந்த வாய்ப்புகளை பயன்படுத்திகிட்டேன். 


    ‘பூலோகம்' படத்துல பாத்தீங்கன்னா பாக்ஸர், ‘நிமிர்ந்து நில்' படத்துல ரெண்டு ரோல்ல நடிக்கறேன். அதுல வில்லன் ரோல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். கண்டிப்பாக ரெண்டு படங்களையுமே மக்கள் ஏத்துக்குவாங்கனு நம்பறேன். 


    உங்க வாரிசு ஆரவ் என்ன சொல்றார்? ஆரவ் கூட விளையாடற அளவுக்கு நேரம் இருக்கா? உங்க படங்களை பாக்க ஆரம்பிச்சாச்சா?

     
    ஆரவ்வுக்குகு என்னோட டான்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். இப்போதைக்கு ‘பேராண்மை', ‘ஜெயம்' ரெண்டு படத்தையும் அடிக்கடி பாக்கறார். ‘ஆதிபகவன்' படத்துக்காக ரெண்டரை வருஷம் நடிச்சேன். அப்ப ஆரவ் கூட செலவழிக்க நிறைய நேரம் கிடைச்சுது. ஆரவ் கூட இருக்குறப்ப நேரம் போறதே தெரியாது. ஆரவ் வளர்ச்சியை ரொம்ப உற்சாகமாக பாத்துகிட்டு இருக்கேன். 


    திரையுலக நண்பர்கள் கிட்ட ஜெயம் ரவிக்கு ரொம்ப நல்ல பேர்.. திரைக்கு வெளியே நண்பர்கள் இருக்காங்களா?

     
    (சிரித்துக் கொண்டே..) என்ன இப்படி கேட்டுட்டீங்க.. என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே. இப்பக் கூட டெல்லியிலிருந்து என்னோட நண்பன் சென்னை வந்தான். உடனே நாங்க எல்லாம் சேர்ந்து ஒண்ணா சுத்து சுத்துனு சுத்தினோம். புருஷ், உப்பிலி, திலீப், சசி அப்படினு நாலு பேர் இருக்காங்க. என்னோட ப்ளஸ், மைனஸ் ரெண்டும் தெரிஞ்சவங்க. ரெண்டு பேர் சி.ஏ பண்ணிருக்காங்க, ரெண்டு பேர் ஐ.டில இருக்காங்க. இவங்களோட சேர்ந்து மாடி கிரிக்கெட், சென்னையை சுத்துறது அப்படினு ஜமாய் தான். 


    'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்'னு படம் பண்ணிட்டிருந்த உங்கண்ணன் ராஜா, படார்னு விஜய் கூட கைகோத்து ‘வேலாயுதம்'னு மாஸ் கமர்ஷியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு..மறுபடியும் படம் ரெண்டு பேரும் சேர்ந்து படம் ஆரம்பிக்கப் போறீங்க..

     
    ஆமா. எப்போ படப்பிடிப்புனு ரொம்ப ஆவலா இருக்கேன். ஆனா, இந்த முறை ரீமேக் இல்லை. ரொம்ப நாளா எங்க அண்ணன் வைச்சிருந்த கதையை இப்போ எனக்காக இன்னும் கொஞ்சம் மெருக்கேத்தி இருக்கார். நயன்தாரா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. இது ‘வேலாயுதம்',‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ரெண்டும் சேர்ந்த ஒரு காக்டெய்ல் மாதிரி இருக்கும். 


    வரவர உங்க படங்கள்ல ஹாலிவுட் வில்லன்களா நடிக்கிறாங்க.. 'பேராண்மை', இப்ப ‘பூலோகம்'னு ஹாலிவுட்டையே புரட்டி எடுக்கறீங்க?

     
    எல்லாமே என்னோட இயக்குநர்கள் முடிவு தான். ‘பூலோகம்' படத்துக்காக நாதன் ஜோன்ஸ் கூட நடிச்சது ஒரு நல்ல அனுபவம். ஹாலிவுட் படங்கள்ல ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வாங்கன்னு நாதன் ஜோன்ஸ் சொன்னார். அவருக்கு இங்குள்ள WORKING STYLE ரொம்ப பிடிச்சிருக்கு. படத்தோட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கும்போது அவருக்கு கால்ல நல்லா அடிபட்டிருச்சு. அதக்கூட பெரிசா எடுத்துக்காம தொடர்ந்து நடிச்சு கொடுத்தார். இப்போதைக்கு நாதன் ஜோன்ஸ் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.! 


    பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!

    By: Unknown On: 20:24
  • Share The Gag

  • உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 கோடி டாலர் (ரூ.29,375 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.





    sep 25 - _BLACKBERRY_LOGO
     



    கனடாவின் டொரான்டோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஃபேர்ஃபேக்ஸ். இதன் தலைவர் பிரேம் வாத்சாவை கனடாவின் வாரன் பஃப்பெட் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நலிந்த நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்து, நிறுவனம் நல்ல நிலைக்கு திரும்பிய பிறகு பங்குகளை விற்று கணிசமான லாபம் பார்ப்பவர் வாரன் பஃப்பெட். 



    அதே பாணியில் பிரேம் வாத்சா பிளாக்பெர்ரியை வாங்குகிறார். நவம்பர் 4க்குள் நிர்வாகம் கைமாற வேண்டும். அதற்கிடையில் வேறு யாராவது கூடுதல் விலை கொடுக்க முன்வந்தால் பிளாக்பெர்ரி நிர்வாகம் தாராளமாக ஒப்பந்தம் செய்யலாம். அப்படி விற்கும்போது ஒரு பங்குக்கு 30 சென்ட் வீதம் ஃபேர்ஃபேக்ஸ் கம்பெனிக்கு பிளாக்பெர்ரி கொடுக்க வேண்டும். ராயல்டி, கமிஷன் மாதிரி. இது ஒரு பங்குக்கு அரை டாலர் வரை உயரலாம். 



    பிளாக்பெர்ரி நிறுவனம் 1984ல் தொடங்கப்பட்டது. எனினும், 2003ல்தான் முதலாவது ஸ்மார்ட்ஃபோனை விற்பனைக்கு கொண்டு வந்தது. பிசினஸ் ஃபோன் என பெயர் பெற்ற பிளாக்பெர்ரி சமூகத்தின் உயர் மட்ட பிரமுகர்களின் பிரிக்க முடியாத தகவல் தொடர்பு கருவியானது. தலைவர்கள், பிரதமர்கள், மன்னர்கள் பயன்படுத்தும் மொபைல்போனாக பிரபலமானது. அதிபர் ஒபாமா அதன் தீவிர ரசிகர். 


    எனினும் ஆப்பிள், சாம்சங் போன்களின் வருகையை தொடர்ந்து பிளாக்பெர்ரியின் மவுசு குறைய தொடங்கியது. சமீப காலமாக கம்பெனி ரொம்பவும் தள்ளாடியது. பிரேம் அதன் பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியது அதன் பிறகுதான். ஐதராபாத் நகரில் 1950ல் பிறந்த பிரேம், அங்குள்ள பப்ளிக் பள்ளியில் படித்து ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1985ல் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 


    Fairfax’s BlackBerry deal seeks to forgo Canada takeover review

    *********************************** 

    The investor that has struck a tentative $4.7 billion deal to take smartphone maker BlackBerry Ltd private is aggressively touting his group’s Canadian status to avoid the government reviews of foreign takeovers that have plagued recent attempts to buy Canadian companies.

    Microsoft's Surface 2 tablet follows faithfully in the footsteps of fail...

    By: Unknown On: 18:39
  • Share The Gag




  • Microsoft’s long-rumored Surface refresh became reality on Monday, and the revamped Surface Pro 2 shows that Microsoft has been listening to customer complaints. Relative to the original Pro model, the second-generation Pro is vastly more powerful, packs better speakers, and lasts longer on a charge, offering more than 10 hours of battery life when paired with a new Power Cover.
    The company has even introduced a new docking-station accessory that lets you convert the Surface Pro 2 from a laptop/tablet hybrid into a full-fledged workstation. Basically, it feels wonderful, and it should be a tremendous improvement over its already impressive predecessor. 


    Too bad you can’t say the same for the Surface 2 tablet. 




    Despite the fresh name and a handful of helpful tweaks, the Surface 2 is still saddled with the same ho-hum value proposition and half-baked Windows RT operating system as the original Surface RT—a disaster that ended up costing Microsoft nearly $1 billion in write-downs. The Surface 2 doesn’t look any more appealing.

    Refining the wheel

    “Surface has been one of the best products that Microsoft has ever built,” Surface honcho Panos Panay said at the launch event. “Reinventing the wheel is not the goal. Making it better is.”



    The Surface 2 is thinner and lighter than the Surface RT.
    To that end, Microsoft upgraded the processor in the Surface 2, making it far faster and more responsive than the original Surface RT. The tablet also got a much-needed bump to 1080p resolution, and—like the Surface Pro 2—a redesigned kickstand that makes the device easier to use on your lap. Overall, it’s thinner, lighter, and longer-lived than the Surface RT. Microsoft also includes a year of free Skype calls with the Surface 2, along with a free, two-year 200GB boost to your SkyDrive storage. 

    Oh, and you can get it in silver now. And did we mention the plethora of handy-dandy Surface accessories, such as the battery-boosting Power Cover and the music-minded Remix Cover?
    All are solid, welcome improvements. But none fix the core issues that doomed the first round of Surface RT tablets.

    Rotten at its core

    As fast and as pretty as the Surface 2 is, it still runs Windows RT. Designed for use on tablets with ARM processors, the Windows RT operating system is a crippled mess capable of running only Microsoft’s touch-friendly modern apps. Traditional desktop apps simply don’t function in Windows RT, despite the fact that a vestigial desktop lingers in the operating system. Except for Dell, every third-party PC maker abandoned Microsoft’s Windows RT vision over the past year. 

    The original version of Windows RT (and hence the Surface RT) had some glaring interface issues. The impending Windows RT 8.1 update found in the Surface 2 corrects most of those, but it can’t address Windows RT’s biggest problem: a lack of useful apps. 




    Photo: Caitlin McGarry
    That’s a lot of useful apps, but the number of notable no-shows is just as impressive.
    Panay tried painting a rosy picture of the Windows Store on Monday, declaring that Microsoft’s platform now offers more than 100,000 apps. 

    Unfortunately, we examined the state of the Windows Store in depth when Microsoft first trumpeted its breaking the 100,000-app barrier in July, and while we found the game and streaming-video genres to be well represented, the rest of the ecosystem is woefully underdeveloped. That isn’t such a big deal on Windows 8 devices, which can use traditional desktop apps, but it’s a massive problem for Windows RT. Worse, some of the big-name apps promised at July’s Build conference—most notably Facebook and Flipboard—have yet to appear in the Windows Store. 

    Yes, the Surface 2 will have some appeal to niche users who thirst for portable productivity, largely because it bundles the Office suite in a long-lasting package. But that alone won’t win over the masses, as the failure of the first Surface RT proved—especially considering the next factor.

    Shallow use, steep price

    The Surface 2 is $450—a cost that represents a $50 discount off the original iteration, but still puts the tablet in the pricing stratosphere alongside the iPad. 




    Adding insult to wallet injury, the $450 starting price for the Surface 2 doesn’t even include a Touch Cover or Type Cover.
    “Lowering that price by $50 certainly helps Microsoft, but I’m not sure it’s enough to change buyer’s minds,” IDC analyst Tom Mainelli told Computerworld.

    Although there’s no question that the Surface is beautifully designed, it simply doesn’t have anywhere near the robust app ecosystem or basic value proposition of the iPad. Asking $450 for the Surface 2 is sheer madness, especially since that price doesn’t even include the must-have Touch Cover or Type Cover so integral to the Surface experience. (The cost for a cover is an extra $120 or $130, respectively.) Great Android tablets, meanwhile, can be had for around $200.

    “I understand Microsoft thinks they are making Surface 2 more valuable with Office RT and other interesting services, but they are in a market competing with $200 Android tablets and even the $329 iPad mini,” Mainelli said. 

    People aren’t afraid to buy the Surface. Indeed, the Surface RT started flying off store shelves when it was reduced to $350. But history has shown that people won’t pay iPad prices for Microsoft’s ARM tablet, and that isn’t likely to change until the Windows Store matures.

    Large and not in charge




    At its core, the Surface 2 is a tablet, and most of the tablets selling these days have smaller screens than Microsoft’s 10.6-inch behemoth.
    Part of the Surface 2’s high price can no doubt be attributed to its 10.6-inch, 1080p display. While the Surface 2’s big screen pushes the productivity ideal, there’s no denying that the market has largely moved to smaller, 7- to 8-inch designs. Even Apple, long a stalwart against small-screen tablets, released the iPad mini in 2012.
    Despite Microsoft’s productivity push, Windows RT is better suited for consumptive tasks thanks to its sole focus on the finger-friendly modern UI—and people looking to immerse themselves in content are buying diminutive tablets, not large ones. Our time with the 8-inch Acer Iconia W3 proved that miniature Windows tablets can be surprisingly useful. Rumors suggest that a “Surface mini” is on the way, but the Surface 2 seems just as awkwardly positioned as its predecessor.

    Better in every way but the ones that count

    Faster, “sexier” (as Panay dubs it) hardware always helps, but glitz and glamor can’t rescue a fundamentally underwhelming user experience. The Surface 2 proves that Microsoft’s device team can design some truly impressive hardware, yet with Windows RT at its core and a sky-high sticker price, the Surface 2 seems poised to repeat the failures of its forefathers. 

    The Surface Pro 2, on the other hand, looks like it could be a truly appealing option for business or graphics professionals seeking one device to rule them all. But that’s another story for another day. 

    நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!

    By: Unknown On: 18:25
  • Share The Gag

  • நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ஏறிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள். இன்று லைட் அணைந்தால் நான் பொறுப்பில்லை.



    இந்த லயோலா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்புகளுக்கு கட் அடித்தேன். அதன் பிறகு கல்லூரியே என்னை மாற்றி விட்டது. இந்தக் கல்லூரியில் வெறும் பாடத்திட்டம் மட்டும் சொல்லி தருவதில்லை. வாழ்க்கையையும் சொல்லித் தருவார்கள். இங்கு வந்து விட்டால் நாம் மாறிவிடுவோம். அப்படி ஒரு தூண்டுதலும் ஊக்கமும் கிடைத்து விடும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு சோர்வோ சலிப்போ ஏற்படும் போது இந்தக் கல்லூரிக்குள் வந்து அங்குமிங்கும் சுற்றுவேன். சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். யாருக்கும் தெரியாது அப்படி இங்கு வந்து விட்டு போனாலே போதும் எனக்குள் அப்படி ஒரு சக்தியும் உற்சாகமும் வந்து விடும். அப்படி ஒரு தூண்டுதலை இங்குள்ள சூழ்நிலை கொடுத்து விடும்.



    ஏதோ வந்தோம் படித்தோம் என்று இல்லாமல் நாம் யார் நம் லட்சியம் எது நம் பாதை பயணம் என்ன என்பது இங்கு வந்ததும் தெளிவாகப் புரிந்து விடும். இங்கு கற்றுக் கொண்ட சின்ன சின்ன விஷயங்களை வைத்துதான் வாழ்க்கையையே ஓட்டுகிறேன்.இங்கு வந்த பிறகு தான் நான் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனர் ஆவது என்று முடிவெடுத்து விட்டேன். இங்கு படித்த போது நூலகத்திற்கு ஓரிரு முறைதான் போயிருப்பேன். இன்று ஒரு விருந்தினராக உள்ளே நுழைந்தது பெருமையாக இருக்கிறது.”என்று விஷால் பேசினார்.




    ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு!

    By: Unknown On: 17:50
  • Share The Gag

  • ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு வகை செய்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது.


    sep 25 -aadhar

     



    இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக நந்தன்நிலகேணியை தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் கோடியில் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.அரசின் சேவைகள், மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்காக அதற்கான மையங்களில் மக்கள்கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


    இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மானியங்கள். சலுகைகள், சேவைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது என நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டனர். இது மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஏற்கனவே கடந்த 2010–ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, 2010 டிசம்பரில் மேல்–சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் (நிதி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



    இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா, டெல்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஆதார் அட்டை தொடர்பாக நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–வரவுள்ள பாராளுமன்ற குளிர்காலக்கூட்ட தொடரின்போது இந்திய தேசிய அடையாள ஆணைய மசோதா–2010 (ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதா) கொண்டு வருவோம். சில திருத்தங்கள் செய்வதற்காக இந்த மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழுவால் திட்டக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் விரைவில் அதை மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வைப்போம். குளிர்காலக்கூட்ட தொடரின்போது அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.


    ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.ஆதார் அடையாள அட்டை ஒருவரின் அடையாளத்தை காட்டுகிறது. உறைவிட சான்றாக பயன்படுகிறது. ஆதார அடையாள அட்டை பெறுவது தாமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றுதான். கட்டாயம் அல்ல”என்று அவர் கூறினார்.


    Govt plans to give aadhaar legal weight

    *********************************** 

    A day after questions were raised in the Supreme Court over the legality of the Aadhaar project, the government on Tuesday fast-tracked a draft bill to give legal backing to the Unique Identification Authority of India (UIDAI) that issues the 12-digit number.The court had said no person should be denied welfare benefits or services for not possessing the unique identification number in what is being seen as set back to the UPA’s showpiece direct transfer cash scheme in an election year.

    ஹன்சிகாவோடு டூயட் பாடும் சிவகார்த்திகேயன்!

    By: Unknown On: 17:40
  • Share The Gag

  • மான் கராத்தே படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஹன்சிகா- சிவகார்த்திகேயன் ஜோடி. 

    எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே.

    இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார்.

    மேலும் நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர்.
    இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.

    இதனைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

    மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)

    By: Unknown On: 08:10
  • Share The Gag




  • ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.

    அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.

    மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.

    'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.

    எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.

    உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.

    'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.

    பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,

    மரம் அவனை விளையாட அழைத்தது.

    'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு வீடு ஒன்று வேண்டும்.அதற்கு உன்னால் உதவ முடியுமா' என்றான்'.

    மரம் தன் கிளைகளை உடைத்து இவற்றை வீட்டிற்கு உபயோகப்படுத்திக்கொள் என்றது.

    அவனும் பல மரக்கிளைகளை எடுத்து சென்றான்.

    மீண்டும் பல நாள் அவன் மரத்திடம் வரவில்லை.வயது முதிர்ந்து கிழவனாக ஒரு நாள் மரத்திடம் வந்தான்.

    மகிழ்ந்த மரம் 'இப்போது முன் போல் என்னிடம் விளையாடு' என்றது.

    எனக்கு வயதாகிவிட்டது .என்னால் விளையாட முடியாது.ஆனால் எனக்கு உட்கார்ந்து இளைப்பாற ஒரு சாய்வு நாற்காலி வேண்டும் என்றான்.

    மரமும் தன் கிளைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நாற்காலி செய்து கொள்ளச் சொன்னது.

    சிறிது காலம் கழித்து அவன் மீண்டும் வந்தான். இப்போது மரம் 'எனக்கும் வயதாகி விட்டது.என்னிடம் இப்போது பழங்கள் கூடக் கிடையாது..' என்றது.

    'என் வாழ் நாள் முழுவதும் உதவினாய் நீ...ஆனால் ,உன்னைப் பற்றி இதுவரை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே ''என்று வருந்தினான் அவன்.

    மரமோ 'அதற்காக வருத்தப்படாதே .யாரோ நட்ட செடியான நான் வளர்ந்து உனக்கு பலனளித்தேன். நீ ஒரு செடியை நடு அது மரமாகி வேறு யாருக்கேனும்

    பலனளிக்கும். எங்கள் வம்சமும் வளரும்' என்றது.

    நாமும் நம்மால் முடிந்தால் நம் வீடுகளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

    மரத்தினால் சுத்தமான காற்று கிடைக்கிறது. மழை வர மரங்களும் காரணமாக அமைகின்றன் என்பதை நாம் உணர வேண்டும்.

    ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியல்- பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டுமா?

    By: Unknown On: 08:09
  • Share The Gag

  • இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் அதாவது பெயரை சேர்த்தல், திருத்துதல் மற்றும் தவறான பெயர்களை சரி செய்து மாற்றுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. இணையதளத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள போதும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இணைய தளத்தை பயன்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களைக் காட்டிலும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனைக் களையும் வகையில் இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் பணிக்கு இணையத்தை மக்கள் பயன்படுத்தும் முறையை நடைமுறைப் படுத்த அரசு திட்டமிட்டது. அதற்காக விருப்பமுள்ள மையங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 



    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 86 இணையதள மையங்களும், தமிழகத்தில் இருந்து 944 இணையதள மையங்களும் வாக்காளர் பட்டியல் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. அந்தக் குறிப்பிட்ட இணையதள மையங்களுக்கு இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்த பயிற்சி தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் நடைபெற்றது. பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட இளையதள மைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 



    அவர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான விக்ரம் கபூர், மாநகராட்சி வருவாய் அதிகாரி(தேர்தல்) பெஞ்சமீன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி குறித்தும், தமிழக வாக்காளர்கள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது, ‘இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 75 சதவீத பேரும், ஆந்திராவில் 40 சதவீத பேரும் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். தகவல் நுட்ப தொழிற்துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் தமிழகத்தில் இணையதளம் மூலமாக 7.8 சதவீத பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


    கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை வாக்காளர் வரைவு பட்டியலுக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். இதில் இணையதளம் மூலம் 20 ஆயிரம் பேர் தான் விண்ணப்பித்து இருக்கின்றனர். இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பம் செய்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமும், மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையிலும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வரும் 1 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிப்போரின் இல்லத்துக்கு தேர்தல் அலுவலர்கள் வந்து பெயர், முகவரி உள்பட விவரங்களை சரிபார்ப்பார்கள். பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் 40 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

    200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்!

    By: Unknown On: 08:04
  • Share The Gag

  • tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



    திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று அறிவியல் விழப்புணர்வு கூட்டம் நடந்தது.  மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில், விஞ்ஞானிகள் பங்கேற்று வால்நட்சத்திரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி கூறியதாவது:



    ஐசான் என்ற புதிய வால்நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ள னர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம், 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும்.



    தொடர்ந்து, வால்நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும்போது சூரியனை உரசிச்செல்வது போல் தோன்றும். அப்போது, வால்நட்சத்திரம் சிதறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சிதறாமல், நுழைந்து விட்டால், இந்த நு£ற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.

    இந்திய சந்தையில் அமேசான் Kindle Fire HD 7 விலை குறைவு!

    By: Unknown On: 07:44
  • Share The Gag





  • இந்திய சந்தையில் 7 அங்குல variant கொண்ட அமேசான் Kindle Fire HD 7 டேப்லெட் விலை குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.11,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999 ஆகும்.


    அமேசான் Kindle Fire HD 7 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்பொழுது 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.18,999 ஆக இருந்தது. இந்த டேப்லெட் Amazon.in கிடைக்கின்றன.



    அமேசான் Kindle Fire HD 7 அம்சங்கள்:


    1280x800 பிக்சல் காட்சி தீர்மானம்,
    1.2GHz dual-core புரோஸசர் மூலம் இயக்கப்படுகின்றது,
    இமேஜினேஷன் SGX540 GPU,
    395 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது,
    11 மணி வரை தாங்கக்கூடிய 4400mAh பேட்டரி உள்ளது,
    1GB ரேம்,
    dual-band Wi-Fi,
    டால்பி ஆடியோ கொண்ட டூயல் ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள்,
    முன் எதிர்கொள்ளும் HD கேமரா,
    ப்ளூடூத் 3.0 உள்ளது,
    ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்கும். 

    செயலில் கவனம்..... (நீதிக்கதை)

    By: Unknown On: 07:24
  • Share The Gag




  •  
    ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தாள்.


    அவள் தன்னிடமிருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.


    ஒருநாள் அப்படிச் செல்லும் போது..இன்று பாலை விற்று வரும் பணத்தில்..சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன்.அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்..அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்..அது பால் கறக்கையில் சண்டித்தனம் பண்ணினால் அதை தலையில் பால் எடுத்துப் போகும் குடத்தால் இப்படி வீசுவேன்....என தன்னை மறந்து..தலையில் இருந்த குடத்தை எடுத்து வேகமாக வீச, அதில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது.குடமும் உடைந்தது.


    அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


    அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள். 


    எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும்.இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.