Sunday 31 August 2014

கமல் வழியை பின்பற்றலாமே!- முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் யோசனை

By: Unknown On: 23:15
  • Share The Gag
  •  நடிகர் கமல்ஹாசன் வழியை பின்பற்றலாமே என்று முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் யோசனை தெரிவித்துள்ளார்.

    சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'காவியத்தலைவன்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஃபேஸ்புக் இணையத்தில் எப்போதும் தீவிரமாக இயங்கும் இயக்குநர் வசந்தபாலன், தற்போது கமல்ஹாசனைப் பற்றி ஒரு நிலைத்தகவலை வெளியிட்டுள்ளார்.

    "இன்று தற்செயலாக கமல்ஹாசன் அவர்களின் imdp யை நோண்டிக்கொண்டிருந்தேன். தன் காலத்தில், கமல் அவர்கள் ஒரு பக்கா கமர்சியல் படத்திற்கு நடுவே நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ஒரு தரமான அழகான கலையம்சம் கொண்டு க்ளாஸிக் படத்தையும் பண்ணியுள்ளார்.

    அந்த படங்கள் தான் கமல் அவர்களை வளர்த்தது. மற்றவர்களில் இருந்து அவரை பிரித்து காட்டியது. இன்றுவரை நடிகர் கமல் அவர்களை பற்றி நம்மை பேச வைத்துள்ளது. அவருடைய நடிப்புத்திறமையையும் வெளியே கொண்டு வந்துள்ளது. நடிகர் திலகத்திற்கு பிறகு உலக நாயகன் தான் என்று சொல்ல வைத்தது.

    1982 மூன்றாம்பிறை \ சகலகலாவல்லவன்

    1983 தூங்காதே தம்பி தூங்காதே\ சலங்கை ஒலி

    1984 ஒரு கைதியின் டைரி\ ஜப்பானில் ஒரு கல்யாணராமன்

    1985 காக்கி சட்டை \ சிப்பிக்குள் முத்து

    1986 விக்ரம்\ புன்னகை மன்னன்

    1987 நாயகன் \ வெற்றி விழா \ காதல் பரிசு

    1992 தேவர் மகன்\ சிங்காரவேலன்

    1993 கலைஞன் \ மகராசன்\ மகாநதி

    1996 குருதிப்புனல்\ இந்தியன் \ அவ்வை சண்முகி

    இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தமிழ் கதாநாயகர்கள் கமல் அவர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு கமர்சியல் படங்களும் கிடைக்கும், நல்ல படங்களும் கிடைக்கும். அவர்களும் நடிப்புத்திறமையை நிருபிக்கக்கூடிய படங்களில் நடித்தது போல் ஆகிவிடும்.

    பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் யார் கமல் அவர்களை பின்பற்றுகிறார்கள்." என்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த தடவை தமன்னா - சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஸ்பெஷல்

    By: Unknown On: 21:56
  • Share The Gag
  • வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இப் படத்துக்கு பிறகு மான் கராத்தே படத்தின் மூலம் முதன்முறையாக ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைளுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

    தற்போது டாணா படத்தில் ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடி சேருகிறார்.

    இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார், நவம்பர் கடைசி வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இப் படத்துக்கு பிறகு மான் கராத்தே படத்தின் மூலம் முதன்முறையாக ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைளுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.
    தற்போது டாணா படத்தில் ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடி சேருகிறார்.
    இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார், நவம்பர் கடைசி வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107923/#sthash.auGBflIo.dpuf

    வயிற்று நோய்கள் நீங்க...

    By: Unknown On: 21:36
  • Share The Gag
  •  சர்க்கரையுடன் தேன் மெழுகு தடவிவர பால் பருக்கள் உதிர்ந்து விடும்.

    அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலைபாரம், தலைவலி நீங்கும்.

    இயற்கை அன்னை நமக்கு அளித்த அருமருந்தாக திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், கருவபட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஆ

    திப்பிலி இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து, ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

    ஜாதிக்காயை தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் வயிற்று நோய்கள் நீங்கும். ஜாதிக்காய் விதைகளை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

    தாதிரிப்பூவை தூளாக்கி நல்லெண்ணை கலந்து தேய்த்தால் தோல் நோய்கள் அண்டாது. பொடி செய்து தயிருடன் கலந்து குடித்து வந்தால் நன்கு ஜீரணம் ஆகும்.

    கடுகு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் ஆறி விடும். தாமரைப்பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் படை, புள்ளிகள் நீங்கும். சருமம் ஜொலி ஜொலிக்கும்

    ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர்

    By: Unknown On: 21:09
  • Share The Gag
  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆனதுக்கு பிறகு முதன்முறையாக உலக பிரயாணம் தற்போது மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த உள்ளாராம் ,இதனிடைய ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து .

    ஒரு ரசிகர் தன் உடம்பு முழுவதும் ரஜினி படத்தை போட்டு ஊர்வலம் வந்தாராம்.இதை கவனித்த மோடி அந்த ரசிகனை கூப்பிட்டு இவர் யார் என்று தெரியுமா என்று கேட்டதுக்கு சூப்பர் ஸ்டார் என்றும் ,பாட்ஷா படத்தில் வரும் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்று டயலாக் சொல்லி காட்டினராம், அது மட்டுமில்லாமல் பல ரஜினி ரசிகர்களை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி .

    இதை வைத்து அவரை அரசியலில் கொண்டு வரலாமே என்று மோடியின் சிஷ்யர்கள் மோடிக்கு யோசினை தெரிவித்துள்ளனர்.

    எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

    By: Unknown On: 19:07
  • Share The Gag
  • 1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

    2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

    3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

    5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

    6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

    7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

    8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

    9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

    மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

    பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்

    By: Unknown On: 17:35
  • Share The Gag
  • தற்போது பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அறிந்த விஷயம். ஆனால் இப்படம் உருவாவதற்கு பாலா போட்ட மாஸ்டர் பிளானில் ஆடிபோனார் மிஷ்கின்.

    அதாவது போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், ரமேஷின் மூத்த மகன் ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனால் அறிமுகமானார்.

    ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு தொடங்குவதற்கு முன்பு பாலா அலுவலகத்துக்கு சென்று உங்க படத்தில் நான் நடிக்க வேண்டும் எவ்ளோ செலவு என்றாலும் ஓகே என்றாராம். முதலில் நான் சொல்ற இயக்குனரிடம் நடி பிறகு என் படத்தில் நடிக்கலாம் என்று சொல்லி உடனே பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்.

    ஏற்கனவே பாலாவிடம் பிசாசு கதை சொல்லி காத்திருந்த மிஷ்கினே கூப்பிட்டு தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி.

    அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

    வேறு வழியில்லாமல் படத்தை இயக்கி கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்

    தற்போது பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அறிந்த விஷயம். ஆனால் இப்படம் உருவாவதற்கு பாலா போட்ட மாஸ்டர் பிளானில் ஆடிபோனார் மிஷ்கின்.
    அதாவது போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், ரமேஷின் மூத்த மகன் ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனால் அறிமுகமானார்.
    ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு தொடங்குவதற்கு முன்பு பாலா அலுவலகத்துக்கு சென்று உங்க படத்தில் நான் நடிக்க வேண்டும் எவ்ளோ செலவு என்றாலும் ஓகே என்றாராம். முதலில் நான் சொல்ற இயக்குனரிடம் நடி பிறகு என் படத்தில் நடிக்கலாம் என்று சொல்லி உடனே பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்.
    ஏற்கனவே பாலாவிடம் பிசாசு கதை சொல்லி காத்திருந்த மிஷ்கினே கூப்பிட்டு தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி.
    அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
    வேறு வழியில்லாமல் படத்தை இயக்கி கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/gossip/107916/#sthash.LqzdwPqg.dpuf

    சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்! திரைவிமர்சனம்!

    By: Unknown On: 08:46
  • Share The Gag

  • "நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.

    நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!!

    கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்!

    விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல!

    புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.

    சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

    விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்!

    கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது!

    மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!

    உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன்..?

    By: Unknown On: 08:11
  • Share The Gag

  • கால்களை உதைத்து
     கர்ப்பப்பையை
     கிழித்தாகிவிட்டது.

    தொப்புள்கொடியை
     யாரோ
    அறுத்தனர்.

    முதல் பால் அருந்த
     முன்வரிசையில்
     காத்திருந்தேன்.

    யாரும் என்னை
     கவனிப்பவராக இல்லை.

    விட்டேன் ஒரு
     குவா குவா
     சத்தம்

     சாதம் ரெடி !

    ஓ பிள்ளைக்கு
     பசிக்குது
     நீங்களே பால் குடுங்க
     நாங்கள் வெளியில் நிக்கிறோம்.

    கண்ணை மூடியிருந்த
     இருட்டிலும்
     ஏதோ கரங்கள் என்னை தூக்கி
     மார்போடு அணைத்தது
     அப்பொழுது எரிந்தது
     என்னிடம் முதல் முறையாக
     அகல் விளக்கு.

    பன்னீர்க்குடத்து
     நீரையெல்லாம்
     பகல் இரவாய் குடித்த எனக்கு
     பத்தினியின் முலைமார்பில்
     முதல் விருந்து
     முதல் அமிர்தம்.

    யாரப்பா அது
     எனக்கு நீ பால் தர

     எல்லாமே
     இருட்டாயிருக்கே
     எப்படித் தேடுவது அவளை
     என்றிருக்கையில்

     என் செல்லம்
     என் குஞ்சு
     முத்த முத்திரைகளை
     முகமெல்லாம்
     குத்தியவர் யார்

     பஞ்சு விரல்கள் என்
     உடலை வருடி
     தென்றல் காற்றை பிடித்து என்
     தேகமெல்லாம் விட்டது யார்

     பிரசவ வலியென்னும்
     மிச்சமிருக்கையில்
     கொஞ்சிக்கொண்டே
     தாலாட்டு தமிழில் பாடியவர் யார்

     வந்த களைப்பில்
     உறங்கிக் கொண்டிருந்த
     மார்பு யாருடையது.
    இலவம் பஞ்சைவிட
     அதுவேன் மென்மையாக
     இருந்தது

     கண்ணை விழிதொருநாள்
     கறுப்பு வெள்ளையில்
     படம் பார்த்தேன்
     பக்கத்தில் நின்றவள்
     ஈன்றவள்
     இவளா என் .. அம்மா

     உன்னை
     இன்றும் அம்மா என்று கூப்பிட
     ஆசை வருதே ஏன்

     உன் முலைப்பாலில்
     முதல் பாலில்
     முழு அன்பையும் கரைத்தது
     உன்னுடைய இரகசியம்

     அதுவே இந்த
     வசியம்.
    வாத்தியமாய் இசைக்கிறேன்
     விடியும் வரை
     முடியும் வரை
     அம்மா அம்மா ..

    பெண்களின் பெருமைகள்!

    By: Unknown On: 08:10
  • Share The Gag

  • 1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

     3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

     4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

    5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

    6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

    7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

    8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

    9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

    10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

    11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

    12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

    13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

    14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

    15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

    16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

    17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி சானியாமிர்ஸா.

    18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

    19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

    20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

    21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

    22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

    23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

    24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

    25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.

    வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!

    By: Unknown On: 08:09
  • Share The Gag

  • காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


    சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


    நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


    ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்


    நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

    பிரஸ்ஸல்ஸ்

    முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

    சோளம்

    சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

    ப்ரோக்கோலி

    முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

    முட்டைக்கோஸ்

    முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

    பீன்ஸ்
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

    பீட்ரூட்

    சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

    மறந்து போன மருத்துவ உணவுகள்....?

    By: Unknown On: 08:08
  • Share The Gag

  •                                                பிரண்டைச் சத்துமாவு

     தேவையானவை:

    நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ,

    புளித்த மோர் – ஒரு லிட்டர்,

    கோதுமை – ஒரு கிலோ,

    கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


    செய்முறை:


    பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.

    பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.

    இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


    மருத்துவப் பயன்:


    உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.

    கர்ப்பிணிகளுக்கு நல்ல தூக்கம் வர வழிகள்!

    By: Unknown On: 00:24
  • Share The Gag
  • கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும்.  வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது. மேலும் தூங்குவதற்கு வசதியே இருக்காது. அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் தூங்குவதில் அவஸ்தை ஏற்படுகிறது.

    அதில் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.

    ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது. கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு முயற்சி செய்தாலும் தூங்க முடியவில்லையா அப்படியானால் கீழே கொடுக்கப்பட்ட சில டிப்ஸ்களைப் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

    • பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது..

    • கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    • கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.

    • தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் மற்றும் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும். நல்ல தூக்கமும் வரும்.

    • குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால், அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது.

    • கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரில்  குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.

    எப்படியெனில் வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.

    தலைவலி அடிக்கடி வருதா?

    By: Unknown On: 00:23
  • Share The Gag
  • அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

    அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

    இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி;


    ஈரமான கூந்தல்


    காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

    அளவுக்கு அதிகமான வெப்பம்

    வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

    வாசனை திரவியங்கள்

    உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

    கம்ப்யூட்டர் திரை

    கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

    தொலைக்காட்சி திரை

    கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

    படுக்கையில் படித்தல்


    படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதிக குளிர்ச்சி

    அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

    ஆல்கஹால்


    ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

    சரியான தூக்கம்
    தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    நீண்ட தூர பயணம்
    பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

    குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...

    By: Unknown On: 00:22
  • Share The Gag

  • நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்றவற்றை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும். சொல்லப்போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிடமாட்டோம். அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சளி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவர்.

    இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். ஏனெனில் உடலில் சத்துக்கள் இல்லாவிட்டால், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் கடைகளுக்கு ஒரு முறை பர்சேஸ் செய்யப் போகும் போதே, எந்த உணவுப் பொருட்களையெல்லாம் மறக்காமல் வாங்க வேண்டும். மேலும் எதற்கு அவற்றை தவிர்க்காமல் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!


    ஆரஞ்சு


    குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் போன்றவை அதிகம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது. அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பசலைக் கீரை

    பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

    வேர்க்கடலை


    வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

    கொய்யாப்பழம்

    இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

    கேரட்

    கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

    கிவி


    இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

    சிக்கன் சூப்

    சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

    கொக்கோ

    கொக்கோவை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய்க்கு வராமல் தடுக்கும். ஆகவே இந்த கொக்கோவை, உணவு உண்ட பின்பு சிறிது குடிப்பது நல்லது.

    நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

    சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால், உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட, உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.

    மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

    By: Unknown On: 00:20
  • Share The Gag

  • முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

    வாயு தொல்லை நீங்க?
    Drumstick bark, root mukkarattai, umattan leaf, garlic and add equal amounts, grind on joint swelling parrupமுருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி  ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

    நரம்பு தளர்ச்சி நீங்க?

    முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம்  ஆகும்.

    நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

    நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக்  கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில்  கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம்  சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

    முழங்கால் வாதம் ?


    ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம்  இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில்  வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

    எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு  அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

    மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு  வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம்  கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

    சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!

    By: Unknown On: 00:20
  • Share The Gag

  • சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.

    ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

    சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது?
    சூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.

    அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.

    குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும்.

    ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது.

    Saturday 30 August 2014

    ஏ.ஆர்.முருகதாஸ்-பாக்ஸ் ஸ்டார் கூட்டணியின் உருவாகும் 'ரங்கூன்'

    By: Unknown On: 23:36
  • Share The Gag
  • இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் நிறுவனமான  ஏ .ஆர்.எம்  புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது.

    அவர்களது கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு 'ரங்கூன்'. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க அனிருத் இசை அமைக்க  உள்ள இந்த படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார் ராஜ் குமார் பெரியசாமி . இவர் இயக்குனர் முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

    ' ரங்கூன்' படத்தை பற்றி தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்ட கௌதம் கார்த்திக் ' பாக்ஸ் ஸ்டார் , ஏ .ஆர்.முருகதாஸ்  ஆகியோருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாகும்.இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி தன்னுடைய கதை சொல்லும் நேர்த்தியாலும் , தனக்கு தேவையானதை கிடைக்கும் வரை தளர்வடையாத குணத்தாலும் என்னை மிகவும் கவர்ந்து உள்ளார். அனிருத்தின்  இசையில் நடிப்பது என்ற எண்ணமே என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது' என்றார் .

    இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி  கூறுகையில்'இது இளைஞர்களை பற்றிய இளைஞர்களுக்கான படம்.என்னுடைய அபிப்ராயத்தில் கௌதம் கார்த்திக் இன்றைய இளைஞர்களின் அப்பட்ட பிரதிநிதியாவார். அவரது உற்சாகமும் , வேகமும் படத்துக்கு உயிர்  கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெயரை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக்  கொள்ளும் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை அமைப்பில்,ஒளிபதிவாளர் எம் .சுகுமாரின் ரம்மியமான ஒளிப்பதிவில் நாங்கள் இணைந்து செயல்படும் 'ரங்கூன்'  நிச்சயம் பேச படும் படமாக இருக்கும் என நம்புகிறேன்.பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மூலமும், முருகதாஸ் சாரின் மூலமாகவும் அறிமுகமாவது எனக்கு மிக பெரிய பெருமை ஆகும்.அக்டோபர்  மாதம் துவங்க உள்ள ' ரங்கூன்' படத்தின்  கதாநாயகி தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. எல்லா தரப்பு மக்களையும் 'ரங்கூன்' கவரும் என்பதில் ஐயம் இல்லை ' என்றார்.

    பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை....

    By: Unknown On: 22:15
  • Share The Gag
  • பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

    வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்
    வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
    வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

    வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
    வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்
    வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

    வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்
    வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
    வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
    வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

    வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்
    வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.
    வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
    வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

    கீதாசாரம்

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றோருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

    - பகவான் கிருஷ்ணர்

    பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது...?

    By: Unknown On: 22:15
  • Share The Gag

  • ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

    ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

    நிறம்:


    ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

    முக தோற்றம்:


    ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ  தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

    உடை அலங்காரம்:


    பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

    பேச்சு திறன்:


    முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

    இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

    வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!

    By: Unknown On: 22:14
  • Share The Gag

  • தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

    இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

    இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

    1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

    2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

    3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

    4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

    5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

    ◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

    ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

    மிருகங்களுக்கு உரிய குணம்...?

    By: Unknown On: 22:13
  • Share The Gag

  • ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

    ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.



    அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

    நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

    இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

    பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

    விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

    “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

    சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர்

    By: Unknown On: 20:42
  • Share The Gag
  • நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கன்னட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

    கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராவ். சமீபத்தில் கன்னட செய்தி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேசனின்போது, செக்ஸ் விவகாரங்களில் இவர் வீக்கானவர் என்பது அம்பலமானது.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பது போல ஒரு பெண்ணை அனுப்பி, ரகசிய கேமரா மூலமாக ஓம் பிரகாஷ் நடவடிக்கைகளை பதிவு செய்தபோது, அவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்பது பதிவானது. மேலும் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் இவ்வாறு செய்த பிறகுதான் அவர்களுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்ததும் அதில் பதிவானது.

    இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கன்னட சேனலில் காண்பிக்கப்பட்டதும் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இந்த ஒரு இயக்குநர் மட்டுமின்றி மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் செக்ஸ் ஒப்பந்தத்தையும் அந்த சேனல் அம்பலப்படுத்தியது.

    இதில் ஓம்பிரகாஷ் ராவ் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். "எனது தவறான நடத்தைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த விஷயத்தில் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

    ஐ பாடல்கள் வெளியீடு: அர்னால்டுடன் ரஜினி, கமல் பங்கேற்பு

    By: Unknown On: 19:40
  • Share The Gag
  • விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் ரூ.180 கோடி செலவில் தயாராகியுள்ளது. ஷங்கர் பிரமாண்ட படமாக இதை இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சைனீஸ், தைவான் உள்ளிட்ட பல மொழிகளில் ‘ஐ’ படம் வெளியிடப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படுகின்றன.

    ‘ஐ’ படத்தின் தமிழ், தெலுங்கு பாடல்கள் வெளியிட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. ‘ஐ’ தமிழ் பட பாடல் வெளியீட்டு விழாவை சென்னையிலும் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவை ஐதராபாத்திலும் நடத்துகின்றனர்.

    தமிழ் பாடல்களை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு வெளியீடுகிறார். தெலுங்கு பாடல்களை ஜாக்கிசான் வெளியீடுகிறார்.

    ஆஸ்கார் பிலிம்ஸ் பட இணை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு நேரில் சென்று அர்னால்டுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது ‘ஐ’ படத்தில் விக்ரம் நடித்த சில காட்சிகளை அவருக்கு காட்டினார். 100 கிலோவரை எடையை கூட்டியும், 50 கிலோவரை குறைத்தும் இந்த படத்தில் விக்ரம் நடித்து இருப்பதை பார்த்து அர்னால்டு வியந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறாரே என்று விக்ரம் நடிப்பை பாராட்டினாராம். பாடல் வெளியீட்டு விழாவுக்கு கண்டிப்பாக வருவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

    அர்னால்டு பங்கேற்கும் இந்த விழாவில் ரஜினி, கமலும் கலந்து கொள்கிறார்கள். பாடல்களை அர்னால்டு வெளியிட ரஜினியும், கமலும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர். அர்னால்டு பங்கேற்கும் விழா என்பதால் தமிழ் திரையுலகின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் விழாவுக்கு அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

    சர்ச்சிலின் சாமர்த்திய பேச்சு...!

    By: Unknown On: 18:48
  • Share The Gag
  •  ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் தனது நண்பர்களுடன் விருந்து ஒன்றில் பேசிகொண்டிருந்தார்.

    அப்போது அவரை மட்டம் தட்ட நினைத்த அவரது நண்பர் ஒருவர், அவர் வெளியே சென்ற தருணம் பார்த்து அவரது கைகுட்டையில் தனது பேனாவை எடுத்து கழுதை படம் ஒன்றை வரைந்து வைத்தார்.

    திரும்பி வந்து பார்த்த சர்ச்சில், என்ன சொன்னார் தெரியுமா?

    "என் கைகுட்டையில் யார் முகம் துடைத்து? அவர் முகம் அப்படியே பதிந்துவிட்டதே" என்று கூற, அனைவரும், செய்வதறியாது விழித்தனர்.

    விஜய் சேதுபதிக்கு அடிச்சது ஜாக்பாட்

    By: Unknown On: 17:27
  • Share The Gag
  • தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது தயாரிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது மீண்டும் தன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிக்க முதல் முறையாக நயன்தாரா நடிக்கிறார்

    ஏற்கனவே ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட போது உடனே நயன்தாரா என்றார், அவரது ஆசை மிக விரைவில் நிறைவாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

    இப்படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்க "நானும் ரவுடி தான்" என்று டைட்டில் வைத்து உள்ளனர்

    தன்னை தானே செதுக்கியவர்கள்!

    By: Unknown On: 17:02
  • Share The Gag
  • தமிழ் சினிமா என்பது சாமனிய மக்களுக்கு ஒரு நிழல் உலகம் தான். அதை நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த களத்தில் வெற்றி பெறுவது, தண்ணீரில் நடப்பதற்கு சமம். அப்படி தன்னை தானே செதுக்கி திரையுகில் வெற்றி பெற்றவர்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

    எம்.ஜி.ஆர்

    ஒரு மலையாளியாக இருந்து தமிழ் திரையுலகில் வெற்றி பெற சென்னை வந்தவர். சினிமாவில் இவர் முகத்தை காட்ட அடைந்த கஷ்டங்களை வார்த்தையாலும், வரிகளிலாலும் சொல்லமுடியாதவை. ஆனால் இவரின் கடின உழைப்பால் சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் யாரும் நிரப்பு முடியாத முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவாஜி

    தஞ்சாவூரில் பிறந்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்த அவருக்கு சினிமாவின் மீது திடீரென்று காதல் ஏற்பட்டது. சென்னை வந்து பல நாடக கம்பெனிகளில் வேலை பார்த்து, பின் பல நாடகங்களில் நடித்து கலைஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த பராசக்தியில் சக்சஸ் என்ற வசனுத்துடன் ஆர்ம்பித்து, தன் வாழ்நாள் இறுதி வரை தமிழ் சினிமாவில் சக்சஸ் ஆனவர்.

    ரஜினி

    ’சில மனிதர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை, சாதரண பஸ் நடத்துனர் இன்று சூப்பர் ஸ்டார், அதனால் ஆச்சரிங்கள் இருக்கிறது நான் நம்புகிறேன்’ என்று அவரே ஒரு விருது விழாவில் கூறினார். முதல் முதலாக ஹீரோயிஸித்திற்கான அத்தனை வரைமுறைகளையும் உடைத்து வெற்றி பெற்றவர் இவர் தான்.

    விஜயகாந்த்

    மதுரைக்கும் தமிழ் சினிமாவிற்கும் என்றுமே ஒரு தொடர்பு இன்று வரை இருந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் மதுரை மண்ணில் இருந்து சென்னை வந்து வெற்றி பெற்றவர்களில் மிகவும் முக்கியமானவர் விஜயகாந்த். ரஜினிக்கு பிறகு கருமை தேகத்துடன் வெற்றி கொடிகட்டியவர். மேலும் இவரின் எதார்த்தமான முகம் தமிழக கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

    அஜித்

    சிறிய மெக்கானிக்காக தன் வாழ்க்கையை தொடங்கி, பின் சில டெக்ஸ்டைல் கம்பெனிகளில் வேலை பார்த்து, மாடலிங் துறைக்கு வந்தவர் அஜித். இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் தோல்வியை தந்தாலும், இவரின் தனிப்பட்ட குணத்திற்காகவே இவருக்கு அதிக ரசிகர் வட்டம் வந்தது. இன்றைய இளம் ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் நிறைய பேருக்கு இவர் ரோல் மாடலாக விளங்குகிறார்.

    மாதவன்

    சின்னத்திரை பிரபலமாக தொலைக்காட்சியில் தோன்றி, இன்று வெள்ளித்திரை நாயகனாக வலம் வருகிறார் மாதவன். இன்றும் இவரது சிரிப்பிற்கு மயங்காத பெண்களே இல்லை.

    விக்ரம்

    இவருடைய அப்பா சினிமாவில் இருந்தவர் தான், ஆனால் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முழுக்க, முழுக்க தன் முயற்சியை மட்டும் நம்பி பல வருட போராட்டத்திற்கு பிறகு பாலாவின் கண்ணீல் பட்டு சேதுவாக மறுபிறவி எடுத்தார். சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்கு பிறகு அந்த வரிசையை நிரப்பியவர் இவர் தான்.

    சிவகார்த்திகேயன்

    எந்த ஒரு சினிமா பின் பலமும் இல்லாமல் தன்னிடம் இருக்கும் திறமையை மட்டும் நம்பி, சின்னத்திரையில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையை தொடங்கி, இன்று முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

    விஜய்சேதுபதி

    துபாயில் சொல்லிகொள்ளும் படி நல்ல வேலையில் இருந்து சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், அந்த வேலையையும் விட்டு கோடம்பாக்க வாசலிலேயே நின்றவர். தூக்கிவிடுவதற்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல், தன் சொந்த முயற்சியால் மட்டுமே இன்று மினிமம் கேரண்டி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

    சினிமாவில் இருப்பவர்களே தான் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற நிலை மாறி, சாமனியனுக்கும் கோடம்பாக்க வாசல் திறந்திருக்கும், நாம் நம் முயற்சியில் உண்மையாக இருந்தால் வெற்றி தேடி வரும் என்பதற்கு இவர்களே உதாரணம்.

    உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

    By: Unknown On: 13:44
  • Share The Gag
  • செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.

    ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.

    இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில செடிகளைப் பார்ப்போமா...

     

    மூங்கில்

    மூங்கிலை வீட்டினுள் வளர்த்தால், அந்த மூங்கிலின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அது நம்பிக்கை மட்டுமின்றி, பலர் உணர்ந்ததும் கூட. ஆகவே வீட்டினுள் மூங்கில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

    துளசி

    துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.

    ஹனிசக்கிள் (Honeysuckle)

    இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.


    மல்லிகை

    மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். மேலும் இந்த செடியானது மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

    லாவெண்டர்

    லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அந்த அளவில் இதன் நறுமணமானது இருக்கும். அதுவும் இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீட்டும் நல்ல வாசனையோடு இருக்கும்.

    ரோஜா

    அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். அதிலும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.


    மந்தாரை/ஆர்க்கிட் (Orchid)

    வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.

    ரோஸ்மேரி

    ரோஸ்மேரி மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது வீட்டில் நல்ல பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.

    சேஜ்

    சேஜ் செடி, அதன் பாதுகாப்பு குணங்களால் அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் இதனை வளர்த்தால், இது இறப்பின்மை, ஆயுள், ஞானம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

    முட்டை வெந்துவிட்டதா ? அறிந்து கொள்ள எக் டைமர் !!

    By: Unknown On: 13:44
  • Share The Gag

  • சமையலறையில் பல புதிய விஷயங்கள் புகுந்துவிட்டன. ஆனால் அது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற விஷயங்களைப் பற்றி பார்த்ததில் எக் டைமர் தான் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே அது பற்றி ஒரு கண்ணோட்டம்…

    பொதுவாக உணவு பொருளை நாம் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள, அதனை கையால் நசுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் வெந்துவிட்டதை அறிந்து கொண்டு இறக்கிவிடுவோம்.

    அதே போல குக்கரில் வேக வைக்கும் போது உணவு பொருளுக்கு ஏற்ப விசில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுப்பை அணைத்து விடுவோம். ஆனால் இதில் எல்லாம் கண்டு பிடிக்க முடியாத ஒரு வகை உணவு பொருள்தான் முட்டை. ஆம். அழுத்திப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. குக்கரிலும் வேக வைக்க முடியாது. எப்படித்தான் முட்டை வேகும் நேரத்தை சரியாக கண்டுபிடிப்பது?

    இதென்ன பெரிய விஷயமா? 10 நிமிடம் அல்லது முட்டை ஓடு உடைந்தால் முட்டை வெந்து விட்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், முட்டை சரியாக வெந்துவிட்டதா என்பதை கண்டறிய ஒரு சாதனம் உள்ளது. அதுதான் எக் டைமர்.

    முட்டை வேக வைப்பதை கண்டுபிடிக்க ஒரு சாதனமா என்று வியக்காதீர்கள். அதிலும் எத்தனையோ வகை உள்ளது என்பது தான் விஷயமே. டிஜிட்டல் டைமர், ஹவர்கிளாஸ் வகை என பல வகைகளில் உள்ளது. டிஜிட்டல் டைமர் என்பது முட்டை வேகும் நேரத்தை டிஜிட்டல் கடிகாரம் போல கணிக்கிறது. ஹவர்கிளாஸ் வகையில், அதில் உள்ள மணல் போன்ற துகள், கீழுள்ள குவளையில் விழுவதைக் கொண்டு முட்டை வேகும் நேரத்தை கணித்துக் கொடுக்கிறது. முட்டையைப் போன்றே வடிவமுள்ள ஒரு சாதனமும் வந்துவிட்டது. அதனை வேக வைக்கும் முட்டையுடன் போட்டுவிட வேண்டுமாம். அது நிறம் மாறியதும் முட்டை வெந்துவிட்டதாக அர்த்தமாம்.

    அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக்கிடக்கும் இடங்கள்!

    By: Unknown On: 13:43
  • Share The Gag
  • இந்தியாவில் மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன.

    அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


    மேக்னடிக் ஹில்

    உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம்.
    ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.



    இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.


    கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.


    இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.

    அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


    காற்றில் மிதக்கும் கல்

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.

    200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது.

    எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.


    ரூப்குந்த் லேக்

    1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

    அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன.

    ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


    பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

    அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


    அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

    அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


    ஷனி ஷிங்க்னாபூர்

    ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

    திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    எச்சரிக்கை! கணவன் மனைவி பிரச்சனை!

    By: Unknown On: 13:43
  • Share The Gag
  • கணவனுக்கும்
    மனைவிக்கும்
    குழந்தைக்கு பேர்
    வைப்பதில் தகராறு,
    அவங்க அவங்க
    அப்பா பேரை தான்
    வைக்கணும் என்று.

    எதிர்த்த வீட்டுக்காரர்
    வந்து யோசனை சொன்னார்,

    உங்க அப்பா பேர்
    சீனுவாசன்
    உங்க கணவர்
    அப்பா பேரு கிருஷ்ணன்
    ரெண்டையும்
    சேர்த்து சீனிவாச
    கோபால கிருஷ்ணன்
    ன்னு வையுங்க என்றார்.

    அதிர்ந்த மனைவி கேட்டார்,
    அது சீனிவாசகிருஷ்ணன் தானே?
    சரி இடையிலே கோபால்
    எங்கிருந்து வந்தார் ??

    எதிர் வீட்டுக்காரர்
    சொன்னார்
    ஹி ஹி அது எங்க
    அப்பாவோட பெயர்
    சும்மா இருக்கட்டுமே என்றார்..

    கணவன்
    மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால்
    இப்படி தான் ஆட்கள்
    பூந்துதுடுவாங்க ...

    பால் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருகிறது? தண்ணீர் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருவதில்லை?

    By: Unknown On: 12:10
  • Share The Gag
  •  பாலில் தண்ணீர், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப்பொருட்கள் அடங்கி உள்ளன.

    பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.

    தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 டிகிரி செல்சியஸ். பாலில்
    உள்ள கொழுப்பு 50 டிகிரி செல்சியஸ்ல் உருக ஆரம்பித்து விடுகிறது.
    பாலை காய்ச்சும்போது 50 டிகிரி செல்சியஸ் நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது.

    எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப்படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கிவழிகிறது.
    பால் காய்ச்சும்போது தொடர்ந்து துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழி வதில்லை ஏன்?
    பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும். எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படு கிறது.
    தண்ணீர் காய்ச்சும்போது  ஏன்  பொங்கி வருவதில்லை?
    தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ கிடையாது. எனவே மேற்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.

    பூஜாவிற்கு முத்தம் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய பாலா!

    By: Unknown On: 11:48
  • Share The Gag
  • தன் தரமான படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பாலா. இவர் படங்களில் கூட எந்த ஒரு ஆபாசமான காட்சிகள் இருக்காது, என்று அனைவருக்கும் தெரியும்.

    காதல் காட்சிகளை கூட மிக நாகரிகமாக எடுக்க கூடியவர். ஆனால் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பூஜாவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

    இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை. ஏனெனில் அண்ணன், தங்கை போன்ற உறவு தான் அவர்களுக்கிடையே, ஆனால் எப்போதும் தனக்கென ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் பாலாவின் இந்த மாற்றம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இயற்கை அதிசயங்கள்...!!!

    By: Unknown On: 10:55
  • Share The Gag
  • உலகில் குறைந்தது ஒரு கோடி பேராவது உங்கள் பிறந்தநாளன்று தங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்.

    ஒவ்வொரு முறை தும்மும் போதும் நமது மூளையில் சில அணுக்கள் இறக்கின்றன.

    ஹவாய் தீவு வருடத்திற்கு 10 சென்டிமீட்டர் ஜப்பானை நோக்கி நகர்கின்றது.

    பார்த்ததை 5 நிமடங்களுக்குள் மறப்பவை தங்க மீன்கள்.

    ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

    மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது.பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும்.

    நம் கண்களில் "லாக்ரிமல் கிளாண்ட்" என்ற சுரப்பியால் சுரக்கப்படும்

    லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.

    Friday 29 August 2014

    இடை மெலிய எளிய உடற்பயிற்சி!

    By: Unknown On: 11:09
  • Share The Gag
  • இடை மெலிய எளிய உடற்பயிற்சி


    இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல  பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர். 


    மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும். 



    முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும். 



    பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.

    பலன்கள்:

    முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.

    COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

    By: Unknown On: 11:08
  • Share The Gag
  •  


    நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


    C  - Common
    O  - Oriented
    M  - Machine
    P  - Particularly
    U  - Used for
    T  - Trade
    E  - Education and
    R  - Research


    COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and

    திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Album Maker!

    By: Unknown On: 11:08
  • Share The Gag

  • திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீக செய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.





    இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.





    இதில் Add.,Add All.Delete.90+ Text.Auto Adjust.Background Music.More Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதில் சில புகைப்படங்கள் vertical மற்றும்  Horizontal போஷிஷனில் ;இருக்கும். இவ்வாறு Vertical போஷிஷனில் இருக்கும் புகைப்டத்தினை நாம் Horizontala மாற்ற இதில் உள்ள 90+ கிளிக் செய்து அட்ஜஸ்ட் செய்யலாம்.மேலும் இதில் உள்ள Test கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.






     இதில் Transition.Pans& Zoon.Text.Artclips.subtilte process என ஆறுவிதமான டேப்புகள் இருக்கும். இதில் உள்ள Transtion கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப்படங்களுக்கு இடையில் வரும் Transtion Effect தேர்வு செய்யலாம். இதில் உள்ள Transtion Effect களை கீழேகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள...






     இதில் உள்ள Text கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வேண்டிய பாண்ட்அளவினையும் எபெக்ட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.






    இதில் அடுத்துள்ள Art Clips கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 வித நிகழ்ச்சிகளுக்கான விதவிதமான ஆர்ட் கிளிப்புகள் இருக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.







    அடுத்துள்ள டேப்பில் சப் டைட்டில் இருக்கும் நாம் நமக் குதேவையான சப் டைடிலை தேர் வு செய்துகொள்லாம்.







    சில புகைப்படங்கள் வெளிச்சம் அதிகமாகவும் சில புகைப்படங்கள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும. அவ்வாறான புகைப்படங்களுக்கு இதில ;உள்ள பிரைட்,கான்ட்ராஸ்ட் கிளிக் செய்வது மூலம நாம புகைப்படத்தின்  தரத்தினை மேம்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.





    நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய வசதியாக இதில வலது புறம் நாம் தேர் வுசெய்த புகைப்படங்கள் வரிசையாக இருக்கும் தேவையானதை கிளிக் செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.








    இந்த அனைத்து பணிகளும் முடிந்தபின் இதில் உள்ள Done அழுத்தவும். பின்னர மெயின் விண்டோவிற்கு வரவும். இதில் Album Photo.Transition & Music.Album Theme என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Album Photo வில் தான் நாம் இவ்வளவு வேலைகளையும் செய்தோம். இனி இரண்டாவதாக உள்ள Transition &Music கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் கம்யூட்டரில் இருந்து தேவையான பாடல்களை தேர்வு செய்யவும். திருமணத்திற்கு ஏற்ற பாடலை தேர்வு செய்யவும்.சோக பாடல்களை தவிர்த்துவிடவும்.பாடலை கட் செய்யும் வசதி உள்ளதால் தேவையான வரிகளை மட்டும் சேர்க்கலாம். 






    இப்போது இதில் உள்ள Transition பற்றி பார்க்கலாம் நாம் விரும்பமான எபெக்ட் கொண்டுவந்து அது எவ்வளவு நேரத்தில் மாற வேண்டும் என செகண்ட் களும ;இதில செட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.






    இறுதியாக இதில விதவிதமான தீம் கள் உள்ளது. அதில் வரும் கூடுதல் எபெக்ட்களும் நாம் செட் செய்து அதனையும் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது. 



    இதில் இரண்டாவது டேப்பில் உள்ள Choose Menu கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பபன் ஆகும். இதில் திருமணம் ம்ட்டும் அல்லாமல் பிறந்தநாள் காதுகுத்தல் வேறு விஷேஷங்களுக்கும் நாம் இதில செட் செய்துகொள்ளலாம். இதில் திருமணத்திற்கு என்று 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள்.





    வலதுபுற விண்டோவில் விதவிதமான டிசைன்களை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் ;தேவையானதை கிளிக் செய்தால் போதும் உங்கள் புகைப்படத்தின் முகப்பில வந்து அந்த டிசைன் அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள.







    அனைத்துபணிகளும் முடிந்ததும் நாம் இதில் உள்ள ப்ரிவியூவிண்டோவில் நாம் செட் செய்த ஆல்பத்தினை ப்ரிவியூ ஓடவிடலாம். தவறுகள் மாறுதல்கள்இருந்தால் நாம் திருத்திக்கொள்ளலாம்.ஒரு படம் ஓடும் சமயம்தான் அதில் உள்ள நிறை குறைகள் நமக்கு தெரியவரும். நண்பர் அல்லது உறவினர் வைத்துகொண்டு இதில் உள்ள குறை நிறைகளை நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள் ளவிண்டோவில் பாருங்கள்.





    இறுதியாக இதில் உள்ள Burn Disc கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் இதில் நாம் நமது வீடியோவினை நமது கம்யூட்டரில் சேமித்துவைக்கலாம். அல்லது டிவிடியாக கூட இதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

     








    வீடியோ பார்மெட் வகைகளை கீழே உள்ள விண்டோவில் காணலாம் நாம் வீடியோவினை எங்கு பார்க்கபோகின்றோமோ அதற்கு ஏற்ப வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் இதில் செல்போன்;,யூ டியூப்,ஆன்ட்ராயிட்,வெப் ஆல்பம்,புளு ரே டிஸ்க்.எப்எல்வி மூவி,டிவிக்ஸ் என நமக்கு தேவையான பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கீழே அவர்கள் கொடுத்துள்ள பார்மெட்டுக்களை பாருங்கள்.





    இறுதியாக இதில் உள்ள Create Now பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள் ஆல்பமாக மாற ஆரம்பிக்கும்.. எவ்வளவு நேரம் ஆகும் என்பதனை இதில் உள்ள ஸ்லைடர் மூலம் நாம் எளிதில அறிந்துகொள்ளலாம்.









    இரண்டு மூன்று முறை முயற்சி செய்துபாருங்கள் இறுதியில் அட்டகாசமான வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.. இதனை நண்பர்கள்.உறவினர்களுக்கும்  பகுதிநேர வேலையாக செய்து கொடுத்து பணம் பெறலாம்.