Wednesday, 30 July 2014

அஜித்தை ஒதுக்கிவிட்டு ஜெயம் ரவிக்கு தலையாட்டிய அரவிந்த்சாமி!

தமிழ் திரையுலகின் 90களின் சாக்லேட் பாய் என்றால் கண்டிப்பாக அரவிந்த் சாமி தான். இவர் நீண்ட நாட்களாக சினிமாவில் தலைக்காட்டாமல், தன் நண்பர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் மட்டும் நடித்தார்.

தற்போது ஜெயம் ராஜா தன் தம்பியை வைத்து தனி ஒருவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க, ஆர்யா மற்றும் ஜீவாவிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் இந்த கதாபாத்திரத்தை செய்ய அரவிந்த சாமியே சம்மதித்துள்ளாராம்.

இதற்கு முன்பு ஆரம்பம் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது இவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment