Monday, 7 July 2014

'லிங்கா' படத்திற்கு கிராம வாசிகளால் வந்த பிரச்சனை..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. இப்படத்தில் நாயகிகளாக சோனாக்சி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 40 நாட்களாக ஆந்திரா ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு நடந்த வேளையில் கிராமவாசிகள் இடையூறு கொடுத்துள்ளனர்.

ஆந்திராவின் அனஜ்பூர் கிராமத்தில் லிங்கா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த கிராமவாசிகள் அங்கிருக்கும் ஏரியை அசுத்தப்படுத்துவதாக பிரச்சினை கொடுத்துள்ளனர்.

மேலும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு அனுமதி பெற்ற கடிதத்தை கிராம பஞ்சாயத்து யூனியனிடம் காண்பித்த பிறகே கிராமவாசிகள் களைந்து சென்றுள்ளனர்.

1 comment:

  1. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete