Tuesday, 15 July 2014

மீண்டும் களத்தில் அமலா!

தமிழ் திரையுலகின் எண்பதுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. இவர் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.

பின்பு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனை திருமணம் செய்துக் கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் திரையில் தோன்ற முடிவு செய்துள்ளார்.

அதற்காக தற்போது முன்னணி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ’கதை எனக்கு பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment