Saturday, 2 August 2014

ராஜமவுளியை வருத்தப்பட வைத்த சூர்யா!

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுளி. இவர் தற்போது பாஹுபலி படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இப்படம் தான் இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படம் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் அஞ்சான் படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது, இதில் சிறப்பு விருந்தினராக ராஜமவுளி கலந்து கொண்டார்.

இதில் பேசிய சூர்யா ‘சில வருடங்களுக்கு முன் ராஜமவுளி ஒரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுவாகத்தான் இருக்கும், அதற்காக பாஹுபலி படத்தில் ஒரு காட்சிகள் நடிக்க அழைத்தாலும் நான் ரெடி’ என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment