Wednesday, 9 July 2014

ஐந்தாவது முறையாக ஹரி இயக்கத்தில் சூர்யா!

லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படம் ஆகஸ்டு வெளியீடாக வரவுள்ளது.இந்நிலையில் படத்தின் புரமோஷன்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சூர்யா வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க முடிவு எடுத்துள்ளார்.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் 'மாஸ்' படத்தில் நடித்து வரும் சூர்யா அப்படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத்  தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் 'ஆறு', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம்2' ஆகிய நான்கு படங்களில் சூர்யா நடித்துள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக ஹரியுடன் கைகோர்க்கும் சூர்யா அப்படம் 'சிங்கம்-3' ஆக இருக்குமா என்பது குறித்து தகவல் கூறவில்லை.

அதேபோல் தனது தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ஆதரவு அளிக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதன்மூலம், சூர்யா நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment