Monday, 7 July 2014

விஜய் சேதுபதியின் கொலைவெறியியை காட்டும் 'எடக்கு'

இதுவரை காமெடி, செண்டிமெண்ட், திகில் என்று நடித்து வந்த விஜய் சேதுபதி, முதல் முறையாக கொலைவெறியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 'எடக்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.சிவன் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, கொலைவெறியுடன் திரயும் ஒரு ஆக்ரோஷமான வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக அவர் நீண்ட தலைமுடியையும் வளர்த்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மற்றொரு ஹீரோவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறது தயாரிப்பு தரப்பு.

No comments:

Post a Comment