Friday 31 May 2013

எழில்மிகு ஏற்காடு!

By: Unknown On: 06:53
  • Share The Gag








  • சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் ஏற்காடு, அமைந்துள்ளது.
    இயற்கையின் அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 1623 மீட்டர் உயரத்திலும் அதாவது 5326 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. 
     
     
            சேலத்திலிருந்து ஏற்காடு செல்வதற்கு மலைப் பாதையின் வழியே 20 கொண்டை ஊசிவளைவுகளைக் கடந்து செல்லவேண்டும்......அப்படி பயணிக்கும் போது ..நம் முகத்தை தொட்டுச் செல்லும் சில்லென்ற மேகங்கள்,அந்த மேகங்களை தாலாட்டும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும்  கொண்டை ஊசி வளைவுகள், இதயம் வருடும் மென்மையான இனியக் காற்று..இவை நம்மை சொர்க்க பூமிக்கு அழைத்துச் செல்லும்...ஏற்காடு எனும் அதிசய பூமியில் கால் பதித்ததும் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்  என நம் மனதிற்குள் உற்சாகம் வந்து நம்மை பரவசப்படுத்தும்...இயற்கையின் அதிசயமாக விளங்கும் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என  அழைக்கப்படுகிறது..அதற்கேற்ப நம் மனதையும்  பர்சையும் ஆரோக்கியமாக வைக்கிறது ஏற்காடு.
     
     

         கி.பி.1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் என்பவர் ஏற்காட்டின் தந்தை எனப்படுகிறார்.ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக...கண்டறியப்படுவதற்கு....முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்ததாகவும்.  இவரது காலத்தில் தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
    சேர்வராயன் மலையில் காபி பயிரிடப்பட்டப் பின்பே..நீலகிரியிலும்,கொடைகானலிலும் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காபி பயிரிடுவது விரிவடைந்தது என்கிறார்கள். 
    இதனிடையில் 1836ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிஷர் என்பவர் சேலம் ஜமீன்தாரின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார்.
    அவரைத் தொடர்ந்து சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்கள் உள்ளடக்கிய நிலங்களை பெரிய பணக்கார முதலாளிகள் வாங்க முன்வந்தனர்.
    அதன்பின்னரே ஏற்காடு மலைப் பகுதி விரிவடைந்து வளர்ந்ததாக அரசு சுற்றுலா தகவலில் சொல்லப்படுகிறது. 
     
     

     
    இன்று 30 டிகிரி செல்சியசுக்கு மேலும், 13 டிகிரி செல்சியசுக்குக் கீழும் வெப்பநிலை செல்லாத அருமையான சீதோஷ்ண நிலையுள்ள ஏற்காட்டில் எப்போதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. ஊட்டி,கொடைக்கானல் போன்று இங்கு சீசன் என்று எதுவுமில்லை. எப்போதுமே இங்கு சீசன் தான்.
     
     
     
    இயற்கையின் எழிலோடு ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஏற்காட்டில் நாம் பார்த்து மகிழ, சிறந்த இடங்கள் எராளமான இடங்கள் உள்ளன
    அவ்வற்றில் அண்ணா பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் பால்ஸ், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சில்ரன்ஸ் சீட்..போன்றவை நம்மை ஆச்சர்யமூட்டும் அற்புத இடங்களாகும்.
     
     
     
    ஏற்காடு  ஏரி
     
    ற்காட்டில் அமைந்துள்ள ஏரியும், அதில் படகுச் சவாரியும், ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விஷயங்களாகும்.
    ஏரியைச் சுற்றி அழகான தோட்டமும், ஓங்கி வளர்ந்த மரங்களும் சொர்க்க பூமியில் நாம் இருப்பதைப் போன்ற உணர்வை தருவதால்
    எப்போதும் இங்கே கூட்டம் நிரம்பி வழியும்..இந்த ஏரிக்கு அருகே அண்ணா பூங்கா என்ற அழகான பூங்கா அமைந்துள்ளது. அது இந்த எரிக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது.இந்த ஏரியில் நாமே படகு சவாரி செய்து மகிழலாம். ஏரி முழுவதும் படகுப் பயணம் செய்ய தனியாக வாடகை செலுத்த வேண்டும்.
     
     

    லேடீஸ் சீட்
     
    ற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
    சேலம் மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க
    இந்த இடத்தை விட்டால் வேறு எங்கும் வாய்ப்பு கிடைக்காது.
    இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகரைப் பார்த்தால் ஒளி வெள்ளத்தில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே சேலம் மிதப்பது போல் தோன்றும். ஏற்காடு செல்பவர்கள் லேடீஸ் சீட் என்ற இப்பகுதியை பார்க்கத் தவறினால், ஏற்காடு சென்று வந்ததே வீணாகி விடும் அந்த அளவுக்கு மிகவும் பிரம்மிக்கத் தக்க இடமாக இருக்கிறது  லேடீஸ் சீட்.
     
     

    பகோடா பாயிண்ட்
     
    துவும் ஒர் அற்புத உணர்வை தரும் இடமாகும்.லேடீஸ் சீட் போன்று இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள்  இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.  ஏற்காடு செல்பவர்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

     

    கிளியூர் நீர்வீழ்ச்சி
     
    ற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. 
    சுமார் 3000 அடி உயர நீர்வீழ்ச்சி ஏற்காட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறது.
    இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் ஏராளமான இயற்கைக் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறதுமழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் நேரத்தில் இங்கு செல்வது நல்லது..
     
     
     
    சேர்வராயன் மலைக் கோயில்
     
    சேர்வராயன் மலையில். கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இது மிகவும் பழமையும் தொன்மையும் கொண்ட..பிரசித்திப் பெற்ற கோயிலாக திகழ்கிறதுமே மாதத்தில் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலமாகும். 
    இத்திருத்தலத்தின் மூலவராக அருள்மிகு சேர்வராயரும் மூலவத்தாயாராக அருள்மிகு காவேரி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
    இத்திருத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கொயில் அமைந்துள்ளது.
     
     

    தாவரவியல் பூங்கா
     
    18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800  வகையான செடிகளும் உள்ளன.  இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். இங்கே தான் ஏப்ரல், மே மாதங்களில் மலர்க்கண்காட்சி நடைபெறுகின்றது.
     
     
     
    இந்த வெயில் காலத்தில் சுட்டெறிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏற்காடு செல்லுங்கள்
    மனத்திற்கும்..உடலுக்கும் உற்சாகம் பெற்றிடுங்கள்........
     
     
     

    2050-ல் இந்திய அரசைக் கைப்பற்ற மாவோயிஸ்டுகள் திட்டம்?

    By: Unknown On: 06:11
  • Share The Gag







  •                    2050ஆம் ஆண்டில் இந்திய 

    அரசை கைப்பற்றுவது என்பதுதான் 

    மாவோயிஸ்டுகளின் நீண்டகால 

    திட்டம் என்று முன்னாள் உள்துறை 

    செயலர் ஜி.கே. பிள்ளை  

    தெரிவித்துள்ளார். 



                   சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பெருந்தாக்குதல் நாட்டை அதிர வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையை சத்தீஸ்கர் மாநிலத்தில் இறக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் இலக்கு வைத்து தொடங்கியிருக்கும் வேட்டை எங்கே போய் முடிகிறதோ தெரியவில்லை.



                      இது தொடர்பாக ஆங்கில நாளேட்டுக்கு முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை அளித்துள்ள பேட்டியில், இந்திய மத்திய அரசை உடனடியாக தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்டுகள் திட்டம் அல்ல.. அது அவர்களது கனவு. ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்பது அவர்களது நீண்டகால செயல்திட்டம். 





                    2050ஆம் ஆண்டு இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம். மாவோயிஸ்டுகளின் உள்வட்ட ஆவணங்களில் இத்திட்டம் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிச்சயமாக முறியடிக்கும்.
     



                     தூக்கி எறியப்பட்ட மாவோயிஸ தத்துவம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறைவாக இருக்கிறது. மக்கள் நலக் கொள்கைகள் என்ற அடிப்படையில் அப்பாவி மக்களை தம்வசப்படுத்துகின்றனர் மாவோயிஸ்டுகள். ஆனால் அது போலியானது. சீனா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளிலேயே மாவோயிஸ தத்துவம் தூக்கி எறியப்பட்டுவிட்டது.


                     ஆண்டுக்கு ரூ1200 கோடி வசூல் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ரூ1200 கோடியை சுரங்க நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். தொலைதூர இடங்களுக்கான போக்குவரத்துகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்கினால் அவர்கள் நிச்சயம் பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவர்.



                      45 ஆயிரம் போலீசார் தான்.. 


                  டெல்லியைவிட 5 மடங்கு பெரிய பிரதேசம் பஸ்தார் பிரதேசம் மட்டும். டெல்லியிலோ 95ஆயிரம் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கே 45 ஆயிரம் போலீசார்தான்..

    Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!

    By: Unknown On: 05:14
  • Share The Gag


  •  ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!








     உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 



    இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா?



     அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctor ஆகும்.



     இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.


    மொபைல் battery doctor


    இது உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க என்ன தான் செய்கின்றது ?




     

      இதனை ஒருமுறை இதனை Click செய்வதன் மூலம் உங்களது Android சாதனத்தின் சக்தியை சேமிக்க முடியும். (One-tap power saving)


        Android சாதனம் இன்னும் எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருக்குமென்பதனை துல்லியமாக காட்டுகின்றது.


        உங்களது Android சாதனத்தில் குறிப்பிட்டஒரு செயல்பாடு இயக்கப்படுவதன் காரணமாக எவ்வளவு நேர சக்தி வீண் விரயமாகின்றது என்பதுடன் அதனை முடக்குவதன் மூலம் எவ்வளவு நேர சக்தியை சேமிக்கலாம் என்பதனையும் கணக்குப்போட்டு காட்டுகின்றது.







        உங்கள் Android சாதனத்தின் சக்தியை எவ்வாறு சேமிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதுடன். தேவைக்கேற்ற விதத்தில் சில வசதிகளை செயற்படுத்தியும் தேவையற்ற வசதிகளை முடக்கியும் பயன்படுத்த உதவுகின்றது.


        அமைதியாக Battery இன்  சக்தியை வீண் விரயம் செய்யும் மென்பொருள்களை கட்டுப்படுத்துகின்றது.(Task Killer)


        Battery இன்  சக்தியை அதிகம் எடுத்துக்கொள்ளும் மென்பொருள்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

        குறிப்பிட்ட ஒரு நேரத்தில் Battery இன்  சக்தியை சேமிக்கும் வசதியை தருகின்றது. (Pre-made saving mode along with schedule feature)



    மேலும் பல வசதிகளுடன் கட்டண மென்பொருளுக்கு ஈடான வசதிகளை வழங்கும் இந்த முற்றிலும் இலவசமான மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.
      




                                                                                                   நன்றி! தகவல்தொழில்நுட்பம்

    இந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்!!!

    By: Unknown On: 03:06
  • Share The Gag






  •           இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.




                  இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.




                 இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 




                   சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.





    சீறும் சூரியன்: சில புகைப்படங்கள்!!!

    By: Unknown On: 02:25
  • Share The Gag






  • சூரியனில் அவ்வப்போது ஏற்படும் தீச்சுவாலை சீற்றங்களை நாஸாவின் விண்வெளி ஓடம் எடுத்த துல்லியமான சில புகைப்படங்களின் தொகுப்பு இது.




    மே 12 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள் காலகட்டத்தில் சூரியனில் நான்கு உக்கிரமான தீச்சுவாலை சீற்றங்கள் காணப்பட்டன. இந்த வருடத்தில் சூரியனில் அவதானிக்கப்படும் மிக மோசமான தீச்சுவாலை சீற்றங்களாக இவை கருதப்படுகின்றன.
     




     இவ்வாறாக தீப்பிழம்பை பீய்ச்சி அடிக்கும் சீற்றம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.






    இந்த சீற்றத்தால் சூரியத் துகள்கள் விண்வெளியில் நெடுந்தூரத்துக்கு வீசியெறியப்படுகிறது. இந்தப் படத்தில் வீச்சு எந்த அளவுக்கு பரவுகிறது என்பதைக் காட்டுவதற்காக சூரியனின் விட்டம் வரை கருப்பு தகடிட்டுக் காட்டப்பட்டுள்ளது





     சூரிய தீப்பிழம்பு சீற்றதால் வீசியெறியப்படும் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும்போது துருவப் பகுதிகளில் வானில் ஒளிப் பிம்பங்கள் தோன்றுகின்றன.





     சூரியனைப் பார்க்கும்போது அதில் கருப்பு புள்ளிகளாக தோன்றும் இடங்கள் இந்தச் சீற்றத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன.





     அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் எஸ் டி ஓ என்ற விண்கலம் சக்தி வாய்ந்த காமெராக்களைக் கொண்டு துல்லியமான வீடியோ பதிவுகளை அனுப்புகிறது.






    சூரியனின் மேற்பரப்பில் காந்த சக்தியால் ஏற்படும் இந்த வளையங்களும் வண்ணமயமானவை.





    எட்டு மணிநேர இடைவெளீயில் இரண்டு படங்களை எடுத்து அதனை ஒரு முப்பரிமாண படமாக மாற்றி இந்த வண்ணமய படங்களை நாஸா விண்கலம் உருவாக்குகிறது.



    பேபி கீப்பர் பேசிக்!! குழந்தையை பராமரிக்க நவீன தொட்டில்!

    By: Unknown On: 01:28
  • Share The Gag







  •                  பொதுவாக குழந்தை பிறந்து விட்டால் அதை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. கைக் குழந்தையாய் இருந்தால் கண் கொத்தி பாம்பு போல எந்நேரமும் அதன் மீது ஒரு பார்வை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலில் இருந்து விழும், தொட்டிலில் இருந்து விழும். தவழும் குழந்தையாக இருந்தால் வீடு முழுக்க ரவுண்ட் அடித்து அலம்பல் பண்ணும். கண்டதையும் எடுத்து வாயில் போட்டு கொள்ளும். தத்தி நடக்கும் குழந்தையாய் இருந்தால் டேபிள், சேர் மீது ஏறி பொருட்களை கீழே தள்ளி விடும். அம்மாக்கள் சமைக்கும் போது வந்து புடவையை இழுக்கும். கொதிக்கும் பாத்திரத்தை தள்ளும். இதில் விபரீதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.




                    இந்த பிரச்னைகளை சமாளிக்கதான் நம்ம ஊரில் பல விஷயங்களை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப அம்மாக்கள் கையாண்டு வருகின்றனர். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் போடுகின்றனர். அல்லது புடவையில் தூளி கட்டி, குழந்தையை படுக்க வைக்கின்றனர். தவழும் குழந்தையாக இருந்தால் இடுப்பில் கயிறு கட்டி வீட்டில் எங்காவது கட்டி விடுகின்றனர். அல்லது அம்மாக்களே இடுப்பில் குழந்தையை வைத்து கொண்டு ஒரு கையாலேயே வேலை செய்கின்றனர்.





                       இந்த பிரச்னைகளை சமாளிக்க அமெரிக்காவில் பேபி கீப்பர் என்ற பெயரில் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த 2 அம்மாக்கள்தான் இந்த நவீன பையை கண்டுபிடித்துள்ளனர். பேபி கீப்பர் பேசிக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ள இந்த பையை, மொபைல் தொட்டில் என்று கூறலாம். இந்த பையில் குழந்தையை உட்கார வைத்து அதில் உள்ள கொக்கிகளை சுவரில் மாட்டி விட்டால் போதும். கண்ணெதிரிலேயே குழந்தையை பார்த்தபடியே, கொஞ்சி கொண்டே அனைத்து வேலைகளை யும் முடித்து விடலாம். குழந்தை என்ன செய்கிறதோ என்ற பயம் இல்லை. 






                  சியாட்டில் நகரில் வசிக்கும் 4 குழந்தைகளுக்கு தாயான டோன்ஜா கிங் மற்றும் 6 குழந்தைகளுக்கு தாயான எலிசா ஜான்சன் ஆகியோர்தான் இதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அம்மாக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை பற்றிய டென்ஷன் இல்லாமல் வேலைகளை முடித்து கொள்ளலாம். 35 பவுண்டு எடை வரை உள்ள குழந்தைகளை இந்த பை தாங்கும். எங்கு சென்றாலும் குழந்தையை அதில் உட்கார வைத்து கண்ணெதிரிலேயே மாட்டி வைக்கலாம். எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்லலாம் என்று டோன்ஜா வும் எலிசாவும் கூறுகின்றனர். 



    Thursday 30 May 2013

    "மீண்டும் உயிர் பெற்றது!!- 400 ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து போன தாவரம்"

    By: Unknown On: 15:52
  • Share The Gag






  •                கனடாவின் வடக்கு பகுதி வடதுருவத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பனி பகுதியில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்த பனிமலைகள் தற்போது வெப்ப உயர்வு காரணமாக உருகி  தரைப்பகுதி தெரிந்தது.






                  அந்த இடத்தில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருந்தன. இந்த தாவரங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனி உறைந்தபோது இவையும் உறைந்துபோய் இருந்தன. இதனால் இந்த தாவரங்கள் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.






                 ஆனால் இப்போது பனி விலகியதும் மீண்டும் அந்த தாவரங்கள் உயிர்பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




    ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினர் சுட்டதால் இறக்கவில்லை ,தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக தகவல்!!!

    By: Unknown On: 11:33
  • Share The Gag







  • அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலாவரும் நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.




    பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 'சீல்' படையினர் நெருங்குவதற்குள் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.





    ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து, மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.





    ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.






    அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.



    நன்றி! தமிழ் +

    அறிய புகைப்படங்கள் - எவரெஸ்ட் சிகரத்தை எட்டி 60 ஆண்டுகள்'!!!

    By: Unknown On: 09:37
  • Share The Gag






  •                  நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.






                 நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியாக இரண்டாம் எலிசபத் முடிசூட்டப்பட்ட நாளில் இவர்கள் உலகின் உச்சத்தை அடைந்த செய்தி லண்டனை எட்டியது.

     




                   அன்று முதல் இன்று வரை எவரெஸ்ட் சிகரத்தில் 5000இற்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். மனித முயற்சிக்கு இயற்கை அளிக்கும் இந்த உயரமான சவாலை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது. மலையேறுபவர்களுக்கு உதவும் கருவிகள் அறிவியல் முன்னேற்றத்தால் துல்லியமானவையாகவும் – எடை குறைந்தவையாகவும் தற்போது உள்ளன. பருவநிலையையும், மலை மீதுள்ள ஐஸ் நகருவது குறித்தும் தற்போது உறுதியான தகவல்களை உடனுக்குடன் பெறும் வசதி உள்ளது.




                   கடந்த 1990 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று கிளம்பியவர்களில் 18 சதவீதம்பேர்தான் உச்சியை அடைந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 56 சதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 234 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது கால் பதித்தினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1983 இல் ஒரே நாளில் அதிக பட்சமாக வெறும் 8 பேரால்தான் எவரெஸ்ட்டை அடையமுடிந்தது.

     



                   ஆரம்ப காலத்தில் சாதனை மனப்பாங்கு கொண்ட – அபாயமான சூழ் நிலைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் கொண்டவர்களே எவரெஸ்ட்டுக்கு செல்ல முடியும் என்று இருந்தது. ஆனால் தற்போது எவரெஸ்ட் மலையேற்றம் என்பது நேபாளத்தில் நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாக இருக்கிறது. 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர்கள் வரை கொடுத்து அதற்கேற்ற வசதிகளைப் பெற்றுக் கொண்டு ஒருவர் மேலே ஏறமுடியும். எவரெஸ்ட்டுக்கான வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் – அங்காங்கே உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் – பணத்துக்கு சுமைகளை சுமந்து வர ஷெர்பாக்களும் இப்போது அதிகரித்துவிட்டனர்.
     



                   தற்போது மலையேறுதல் என்பது ஒரு வணிக நடவடிக்கையாக மாறிவிட்டதாகக் கூறும் விமர்சகர்கள், அங்கு அளவுக்கு அதிகமான சனக்கூட்டத்தை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், அதனை பல மலையேறிகள் மறுக்கிறார்கள்.





    உலகின் மிக உயர்ந்த சிகரமான, எவெரெஸ்ட் மீது , 1953 மே 29ம் தேதி, சர் எட்மண்ட் ஹிலாரியும், ஷெர்பா டென்ஸிங் நோர்கேயும் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.






     மலையின் தெற்குப் புறமாக கடும் முயற்சிக்குப் பின் அவர்கள் உள்ளூர் நேரப்படி காலை 1130 மணிக்கு ஏறினர்






    மலையில் பல்வேறு காட்சிகளையும், ஷெர்பா டென்ஸிங் , பிரிட்டன், நேபாளம், இந்தியா மற்றும் ஐ.நா மன்றக் கொடிகளை அசைப்பதையும், படமெடுத்தார் ஹிலாரி





    சிகரத்தில் படர்ந்திருந்த பனியில், கடவுளுக்கு பிரசாதமாக, டென்ஸிங் நோர்கே, சில இனிப்புகளையும் ,பிஸ்கட்டுகளையும் புதைத்தார்.






    அடித்தள முகாமில் தேவையான வழங்கு பொருட்களை ஷெர்பாக்குழு ஒன்று எடுத்து சென்றது. புகைப்படத்தின் வலது பக்கம், லோ லா மலைச் சரிவு. அதற்கப்பால் கும்பு பனி ஏரியும், திபெத்தும் இருக்கின்றன. லோ லாவின் சரிவுகள் பார்ப்பதற்கு எளிதாக ஏறக்கூடியவை போலத் தெரிந்தாலும், அது சிகர உச்சியிலிருந்து பொழியும் பனிவீழ்ச்சியியால் அடிக்கடிப் பாதிக்கப்படும்




     நூற்றுக்கணக்கான ஷெர்பாக்கள் இந்த மலையேறும் குழுவிற்கு வேண்டிய பொருட்களைச் சுமந்து சென்றனர். இவர்களுக்கு வழிகாட்டவும் ஷெர்பாக்கள் உதவினர்.




    எடுத்துச்சென்ற பிராண வாயு குறைய ஆரம்பித்ததால், டென்சிங்கும், ஹிலாரியும், எவெரெஸ்ட் உச்சியில் 15 நிமிட நேரமே இருந்தனர்




    அவர்கள் எடுத்துச் சென்ற மலையேறும் கருவிகளில் பல அப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டவை, மேலும் அவை பரீட்சார்த்தமானவையும்கூட
     




     அவர்களது மலையேறும் முயற்சி ஏப்ரல் 12ம்தேதி ஆரம்பமானது. சிகரத்தைத் தொட்ட நல்ல செய்தி ஜுன் 2ம் தேதி, அதாவது, பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு நாளன்று, அறிவிக்கப்பட்டது






    இந்த மலையேறும் குழுவினர், அடித்தள முகாம்களுக்கிடையே கம்பியில்லா (ரேடியோ) செய்தி அனுப்பும் தூண்களை ( டவர்கள்) நிலை நிறுத்தினர். இதன் மூலம் அவர்கள் வாக்கி டாக்கி கருவிகளை பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக்கொண்டனர். பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா குறித்த செய்தி குறித்த வானொலி ஒலிபரப்பையும் அவர்களால் கேட்கமுடிந்தது.







    மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் மீது ஏறும் முன்னர், அந்த மாதிரியான உயரமான இடத்தில் இருக்க பழகிக்கொள்ள அவர்களுக்கு ஏழு முகாம்கள் எவெரஸ்ட் சிகரத்தின் மீது ஏறும் வழியில் அமைக்கப்பட்டன






    1953ல் சென்ற இந்த பிரிட்டிஷ் மௌண்ட் எவெரெஸ்ட் மலையேறும் குழு, இந்த சிகரத்தை அடைய முயல பிரிட்டிஷ் குழுக்களினால் எடுக்கப்பட்ட ஒன்பதாவது முயற்சி. இதுதான் அந்த முயற்சிகளில் வெற்றி கண்ட முதல் முயற்சியும்கூட. 





    இந்த பயணத்திற்குத் தலைமை தாங்கியவர் கர்னல் ஜான் ஹண்ட். இதற்கு நிதி உதவி செய்த அமைப்பு, கூட்டு இமாலயக் குழு. அனைத்துப் புகைப்படங்களும் வழங்கிய அமைப்பு ராயல் ஜாக்ரபிக் சொசைட்டி மற்றும் ஐபிஜி


    இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை - 'ரோபோ' ஜெல்லி மீன்`

    By: Unknown On: 08:05
  • Share The Gag









  •                 கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபா' ஜெல்லி மீனை ஈடுபடுத்தி இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

     



                  அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷசாங் பிரியா. பிளாக்ஸ்பர்கை சேர்ந்த இவர் விர்ஷினியா தொழில் நுட்ப கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் பேராசிரியராக பணிபுரிகிறார்.







                 இவர் தலைமையிலான குழுவினர் ரோபோ எந்திர ஜெல்லி மீன் தயாரித்துள்ளனர். 5 அடி 7 இஞ்ச் நீளமும், 170 பவுண்ட் எடையும் கொண்டது. இதற்கு சைரோ என பெயரிட்டுள்ளனர்.

     






                   எந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஜெல்லி மீன் தானாக சுதந்திரமாக இயங்க கூடியது. இதன் மூலம் கடல் பகுதியை மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இது உளவாளியாக செயல்படுவதால் கடலுக்குள் புதிதாக நுழைபவர்கள் பற்றியும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை, கடல் மட்டத்தின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.



    மொழிகள் தொடர்பான தகவல்கள் - உங்களுக்கு!

    By: Unknown On: 07:35
  • Share The Gag







  •                   உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. 

     

                   உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்
    .





                      உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி. 




                    உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும். 




                     உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 





                     ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.


     



    ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !!!

    By: Unknown On: 05:58
  • Share The Gag



  • Facebook Share Image - 12









           ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை !



         எத்தனை யானைகள் களத்தில் வேலை செய்திருக்கும் ! 



       இந்த யானைகளை எத்தனை வருடம் பழக்கி இருப்பார்கள் ! 



           எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் ! 



           எத்தனை சிற்பிகள் இவற்றை செதுக்கி இருப்பார்கள் !



         மலைகளே இல்லாத தஞ்சையில், இவ்வளவு டன் பாறைகளை எப்படி கொண்டு    வந்திருப்பார்கள் ! 



                இவர்களை யார் கண்காணித்திருப்பார்கள் ! 



        நினைக்கும் போதே தலை சுற்றுகிறதே ! 



    ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !

    உலக பிரபலங்களின் கையெழுத்து!!!

    By: Unknown On: 05:31
  • Share The Gag



  • Facebook Share Image - 11







    Wednesday 29 May 2013

    அணு மூலக்கூறு உள்பகுதியை முதன் முறையாக போட்டோ எடுத்த விஞ்ஞானிகள்!

    By: Unknown On: 14:46
  • Share The Gag







  •                               முதன் முறையாக அணு மூலக்கூறு உட்பகுதியை படமெடுத்து நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்ர் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.!.





                       இந்த உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை.இந்த அணுக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 





                          அப்படி பிரிக்கப்பட்ட அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் எர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே இது போன்று அணுவை வெற்றிகரமாக பிரித்ததால் அணுப் பெளதிகவியலின் தந்தை என்று கருதப்படுகின்றார்.அத்துடன் இவரை இரண்டாம் நியூட்டன் எனறும் அழைக்கிறார்கள்.











                            இந்நிலையில் பிரிக்கப்பட்ட அணு மூலக்கூறின் உள் பகுதியின்  வடிவமைப்பை யாராலும், எந்த சூழ்நிலையிலும் இதுவரை போட்டோ எடுக்க முடியவில்லை. ஏனெனில் அணு சோதனையின்போது அவற்றின் துகள்கள் உடனடியாக அழிந்துவிடும்.






                           ஆனால், சமீபத்தில் நடந்த சோதனையின்போது நெதர்லாந்து விஞ்ஞானிகள் லேசர் கருவிகள் மற்றும் மைக்ராஸ்கோப் உதவியுடன் ஹைட்ரஜன் துகள்களை பார்த்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற துகள்களை பார்த்ததில்லை.











                           எனவே, அவற்றின் உள் அமைப்பை உடனடியாக போட்டோ எடுத்தனர். இதற்காக அவர்கள் 20 ஆயிரம் மடங்கு பெரிதாக காட்டும் விசேஷ லென்சையும், மிகப் பெரிதாக காட்டும் மைக்ராஸ்கோப்பையும் பயன்படுத்தினார்கள்.




                          தற்போது அணு மூலக்கூறின் உள் அமைப்பை போட்டோ எடுத்ததன் மூலம் எலெக்ட்ரானிக்சின் புதிய அமைப்பை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




    Amazing! First ever photograph inside a hydrogen atom:-
     


                   Scientists have captured the first ever photo of an electron’s whizzing orbit within a hydrogen atom, thanks to a unique new microscopy technique.