Wednesday 4 December 2013

சிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்!

By: Unknown On: 23:22
  • Share The Gag

  • என் இதயத்தை கொள்ளைகொண்ட சிகரட்டே ....

    உன் முன்னால் காதலன் எழுதும் கடைசி மடல் , உனக்கு கடிதமா என யோசிக்காதே .

    நீயும் என் காதலிதான்

    இதுவும் நிச்சயம் காதல்கடிதம்தான்

    காதலியை அணைத்தபின் அனுபவிப்பேன்

    உன்னை அனுபவித்து பின் அணைப்பேன் .

    நீயும் என் காதலிதான் உன் வேலையும் இதயத்தில் நுழைவதுதானே .

    நம் உறவும் காதலைப்போல் தானே துவங்கியது , நண்பர்களால் அறிமுகமானாய் , முதன்முதலில் நீ எனக்கு எப்போதாவது நண்பர்களின் உதவியோடு ஊருக்குள் மறைவாய் யாருமில்லா இடங்களிலே ,உன்னை முதன்முறை பார்க்கையில் உடனே பிடிக்கவில்லை உன்னுடனான தொடர்பு நண்பர்களினூடே தந்த கௌரவம் எனை மாற்றியதோ .

    என் இதழ்களுடனான உன் முதல் சந்திப்பு அத்துனை இதமாய் இருந்திருக்கவில்லை , அதன் பின் இரண்டாம் முத்தம் இதமாய் மூன்றாம் முத்தம் சுகமாய் நான்கைந்தில் அடிமையாக்கினாய் , என் இதழுடனான உன் உறவு அதிகமாக , உன்னை சந்திக்கவே பல நாட்கள் என் நண்பர்களை சந்தித்திருக்கிறேன் தெரியுமா .

    உன்னுடனான எனது தொடர்பு என் வீட்டில் பல நாள் தெரிந்து போய் என் தந்தையிடமும் தாயிடமும் எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் தெரியுமா , எல்லாம் உனக்காக! உன்னொடு என்னை என மாமன் பார்த்துவிட்டு அடித்த அடி எத்தனை வலித்தது தெரியுமா . எல்லாம் எதற்காக உனது உறவுக்காய் . காதலில் வலியும் வேதனையும் சகஜம் தானே .

    நண்பர்களின் உதவியோடு உனை சந்தித்த அந்த பால்ய பருவம் கடந்து போய் நானே உன்னை சந்திக்க விழைந்தேன் . அத்தனிமையில் இனிமையாய் உன்னை என் உதடுகளின் மத்தியில் வைத்து பிடித்து ......... ஆனந்தம் . நண்பர்களுடன் பேசும் சமயங்களைவிட உன்னை தனிமையில் சந்திக்கையில் உன்னை அதிகம் விரும்பினேன் . எப்போதும் விரும்புவேன் .

    காலம் ஓடியது , நம் உறவு பிரிக்க முடியாததும் , உடைக்க முடியாததுமாய் நானும் நீயும் பின்னி பிணைந்து என் உடலில் கலந்து உயிரிலும் கலந்து விட்டாய் .

    இப்போதெல்லாம் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்பது போல எந்நேரமும் என் விரலிடுக்கில் , உதடிடுக்கில் என எப்போதும் காலை முதல் மாலைவரை உன்னை நினைக்காத நொடியில்லை . என் இதயத்தில் எந்த காதலியும் இத்தனை சீக்கிரம் பிடித்திடாத இடத்தை நீ பிடித்து விட்டாய் . இதயம் மட்டுமல்ல நுரையீரல்,கல்லீரல் ,கணையம் என எந்த காதலியும் அமர முடியாத இடத்திலெல்லாம் நீதான் நீ மட்டும்தான் . நீ காதலியை விடவும் உயர்ந்தவள் .

    உன்னால் என் இதயத்தில் கோளாறு வருமாம் என் உயிருக்கே ஆபத்தாம் , அஞ்சமாட்டேன் இதற்கெல்லாம் , கேன்சர் என்றால் பயந்து விடுவேன் என்று நினைத்தாயோ , நம் உறவு அதையும் தாண்டி புனிதமானது . உனை பிரிந்து நான் எப்படி , சோறின்றி கூட பட்டினி கிடப்பேன் உன்னை பிரிந்து ஐயகோ நினைக்கவே அச்சமாக இருக்கிறதே .

    நம் இணைபிரியா உறவை சிதைக்க அரசாங்கம் கூட முயல்கிறது , இதோ போட்டுவிட்டான் தடையுத்தரவு , என்ன கொடுமை கோல்டு பில்டரே!!....

    பொது இடத்தில் உன்னை சந்திக்கத் தடையாம் , இனி உன்னை வீட்டில் மட்டுமே சந்திக்க வேண்டுமாம். இயலுமா , நாம் அப்படியா பழகியிருக்கிறோம் , என்றுமே நம் காதல் கள்ளக்காதல்தானே . அலுவலகத்தில் , பேருந்து நிறுத்தத்தில் , பொது இடத்தில் எங்கும் இனி நாம் சந்திக்க இயலாதாம் .

    எவன் தடுத்தாலும் விடேன் , அந்த எமன் தடுத்தாலும் விடேன் , மறைவாய் உன்னை சந்திக்க ஆயிரம் இடமிருக்கையில் எனக்கென்ன கவலை என அடித்தேன் அடித்தேன் விடாமல் அடித்தேன் மறைவாய் சந்தில் பொந்தில் இண்டு இடுக்கு என யார் கண்ணிலும் படாமல் உனை அனுபவிக்கிறேன் , நிறைய நிறைய நிறைய நிறைய......

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ? என கவியரசர் பாடிச்சென்ற வரிகளும் பொய்யே , உனது சுவடுகள் நான் இறந்து மக்கி மண்ணாகும் வரை என் நெஞ்சுக்குள் நிலைத்திருக்கும் . நிக்கோடின் சுவடுகளாய் .. என் உயிர் பிரிந்தாலும் உனைப்பிரியேன் ;-)

    ஆனால் ஒரு பத்து நாட்களாக என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை , இறுமல் அதிகமாகி அதிகமாகி இதயமே வாய் வழியாய் வந்துவிடும் போலிருந்தது . டாக்டரிடம் கேட்டால் காசநோயாம் !!! அட கருமம் புடிச்ச பன்னாடை பரதேசி நாய்ங்களா ... கேன்சர்தானடா வரும்னு சொன்னீங்க தீடீர்னு இது வந்திருச்சுனு சொன்னேன் , அதெல்லாம் ஒத்துக்கமுடியாது னு சொன்னாலும் வந்தது வந்ததுதான் நொந்தது நொந்ததுதான் என்று இளையராஜா வாய்ஸில் பாடுகிறார் .

    அடிப்பாவி உன்னை காதலிச்ச பாவத்துக்கு என் நெஞ்சத்தான் கிழிச்சி தொங்கவிட்டனுபாத்தா கொஞ்ச கொஞ்சமா என் என் கு.........கு.......கு............குட்டி நுரையீரலையுமில்ல காலிபண்ணிட்ட..

    பிறகென்ன ... ம்ம் வந்தது வந்துதான் நொந்தது நொந்தது தான்........

    எப்போதும் போல எல்லா காதல் கதைகளின் முடிவும் இதுதானே ரோமியோ போல் , அம்பிகாபதியைபோல அமரக்காதல்னா கடைசியில் காதலனுக்கு முடிவு சங்குதானேதானே..

    இப்படிக்கு...

    நெஞ்சு பஞ்சா போயி பஞ்சரான

    பஞ்சாபகேசன் ( இப்பல்லாம் எல்லாரும் நான் இருமுறத பாத்து கஞ்சாபகேசன்னுதான் கூப்பிடறாங்க ... எல்லாம் உன்னாலே உன்னாலே , சங்கூதினப்பறம் இப்படிலாம் கடிதமெழுத முடியாது அதான் முன்னாடியே , சாகறதுக்கு முன்னாடி சமாதி கட்ற மாதிரி.... )

    தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் எவ்வாறு புகார் தெரிவிப்பது?

    By: Unknown On: 23:00
  • Share The Gag
  • தொலைத் தொடர்பு சேவையை நடத்தி வரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எம்என்பி (மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி) விண்ணப்பங்களை நிராகரித்தால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று புதிதாக வந்திருக்கும் தொலைத் தொடர்பு விதிகள் (டிஆர்எஐ) கூறுகின்றன.


    அதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை சரியான இடத்தில் புகார் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் எடுத்து செல்ல வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எம்என்பி விண்ணப்பங்களை நிராகரித்தால் அதை எவ்வாறு புகார் செய்வது.


    முதலில் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தின் டோல் பிரீ எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்ய வேண்டும். உடனே டெல்கோவிலிருந்து, நாம் புகார் செய்த நேரம், எண், மற்றும் தேதி ஆகிய குறிப்புகள் அடங்கிய எஸ்எம்எஸ் நமக்கு வரும். அவ்வாறு எஸ்எம்எஸ் வரவில்லை என்றாலும் கஸ்டமர் கேர் நபரிடம் பேசும் போதே அவர் புகார் எண்ணைத் தருவார் அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எப்போது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்பதையும் அவர் தெரிவிப்பார். அதையும் நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


    இரண்டாவதாக அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்த பிறகும் நமக்கு திருப்தி இல்லை என்றால் அல்லது அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் ரிடெசஸல்க்கான உயர் அப்பலட் அதிகாரிகளை அனுகலாம். அவர்களின் தொடர்பு எண்கள் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வெப்சைட்டில் இருக்கும். அல்லது சிம் கார்டு வாங்கும் போது தரப்படும் சிறிய புத்தகத்தில் அவர்களின் தொடர்பு எண்கள் இருக்கும்.


    அப்பலட் அதிகாரிகளிடம் நமது புகார்களைத் தெரிவிக்கும் போது, குறைகளை சரி செய்யக்கூடிய குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை அவர்கள் நமக்கு தருவார்கள். அவற்றை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேற்சொன்ன ஆலோசனைகளை கடைபிடித்தால் நமது குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.


    அவ்வாறு நிவர்த்தி செய்யப்படாத பட்சத்தில் நாம் இந்திய தொலைத் தொடர்பு துறையை அணுகலாம். அல்லது நீதிமன்றத்தை (டிஒடி)அணுகலாம். அதாவது ஒரு மனுவை எழுதி DoT, Facilitation Counter, Sanchar Bhawan, 20,Ashoka Road, New Delhi-110001 என்ற முகவரிக்கோ அல்லது Public Grievances Cell, Deptt. Of Telecom, Room No. 518, Sanchar Bhawan,20,Ashoka Road, New Delhi 110001 முகவரிக்கோ அனுப்பலாம்.


    அல்லது 011- 23357777 என்ற எண்ணுக்கு பேக்ஸ் செய்யலாம். அல்லது 011- 23356666 என்ற எண்ணுக்கு அழைத்து நமது புகாரைத் தெரிவிக்கலாம். மேலும் www.pgportal.gov.in என்ற இணைய தளத்திற்குள் சென்று புகார் தெரிவிக்கலாம்.

    இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்!

    By: Unknown On: 22:50
  • Share The Gag

  •  உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

     * துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

     * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

     * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

     * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

     * அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

     * கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

     * பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

     * சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

     * குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

     * காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

     * வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

    நடைப்பயிற்சி அணி!

    By: Unknown On: 22:32
  • Share The Gag
  • காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.

    வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.


    அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.


    தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, "வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, "வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!

    ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

    By: Unknown On: 22:19
  • Share The Gag
  • “ அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும்.

    “ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?.

    இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர்.

    ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்லவே. ஐந்தாவது மாடியில் தான் தேவையான பொருள் கிடைக்கிறது என்றால் அந்த மாடிக்கே கடைசியில் தான் போவார்கள்.

    ஆண்கள் அரைமணி நேரத்தில் வாங்கிய பொருட்களுடன் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களோ அத்தனை மணி நேரம் சுற்றி வாங்கி வந்த பொருளைக் கூட முழுமையாய் விரும்பாமல், இன்னும் கொஞ்சம் நல்லதாய் வாங்கியிருக்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

    பல வேளைகளில் வாங்கச் சென்ற ஒரு பொருளை வாங்காமல் நான்கு பை நிறைய பொருட்களை அள்ளிக் கொண்டு வருவதும் நடந்து விடுகிறது.

    காரணம் ஆண்களுடைய மனம் ஒரு செயலை உள்ளுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டு சட்டென சென்று முடித்துவிட்டு வரும் கொள்கை வகையைச் சார்ந்ததாம்.

    ஆண்கள் மனம் முடிவை மையமாய் கொண்டு இயங்குவது போல, பெண்கள் மனம் பார்வை சார்ந்து இயங்குகின்றது. அவர்களுக்கு சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்த்து, கடையை அலசி, பல கடைகளில் அந்த பொருட்களைப் பார்த்த பின்பே முடிவு ஏற்படுகிறதாம். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கே நிறைய நேரம் பிடிப்பதால் தான் அதிக நேரத்தைக் கடைகளில் செலவிடுகின்றனராம்.

    ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் ஆண்கள் சட்டென அதை செய்து விடுவதும், பெண்களோ தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் விசாரித்து விட்டே செயல்களில் இறங்குவதும் இத்தகைய இயல்பு சார்ந்ததே.

    ஆண்களும் பெண்களும் வாங்கும் புத்தகங்களில் கூட பல உளவியல் கூறுகள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களை வசீகரிக்க ஒரு கவர்ச்சிப் படமே போதும். பெண்களுக்கோ நல்ல இலட்சியவாதிகளான, உயர்ந்த கொள்கைகளை உடைய, வாழ்வில் வெற்றி பெற்ற பெண்கள் வேண்டும்.

    காரணம், ஆண்களுடைய சிந்தனை அட்டைப் படத்தில் அழகிய ஒரு பெண்ணைக் கண்டவுடன்

    “எனக்கு அவள் வேண்டும்” என விரிகிறதாம்.

    பெண்களுடைய சிந்தனையோ, “அவளைப் போல ஆக வேண்டும்”  என விரிகிறதாம்.

    மரண‌ம் எ‌ன்பது எ‌ன்ன?

    By: Unknown On: 22:10
  • Share The Gag
  • இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?


    உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.


    இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.


    ‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌். இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.


    ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்தா‌ன் தானமாக அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.


    எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்

    குடும்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க Tips!

    By: Unknown On: 21:54
  • Share The Gag
  • பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

    அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.

    "இல்லவே இல்லை நாங்கள் இதுநாள்வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்` எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். நான் மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.

    இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` எனக் கூறுவார்கள். தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.

    இவ்விடயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம். கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளைக் கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள். இந்தக் காலத்தில் கணவனெல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய புராணத்தை இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. கணவன் மனைவி இருவமே வேலைக்குச் செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர்.
           
    அவ்வாறு இல்லாவிடினும் தற்போதைய நிலைமைகளில் குடும்பத்தை கொண்டு நடாத்துவது மிகக்கடினம். இவ்வாறு இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி கணவனுக்கு முன் வேலை முடிந்த வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால் வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்து மனமகிழ்ச்சி அடைவார். அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை கதைத்துக் கொண்டே அவரது சேட், ஷநிக்களை கழற்றிவிடும் போது சொல்லவும் வேண்டுமா அவர்களது சந்தோசத்தை அதேபோல் கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை தான்“ நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கலயா?` என்று கூறாதீர் கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.

    அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம் உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையே இருண்டு விடும். வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள். அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததம் "ஒரு கிழமையா உப்பு முடியப்போகுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே` என்று பொரிந்து தள்ளாதீர்கள்.

    உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒழித்துக் கதைப்பதால் எப்போதாவது கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி உங்களுடன் இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப் பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள்.

    கூடியவரை அவர்களை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?` என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாகக் கதையுங்கள். தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றி கதைக்காதீர்கள்.

    மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவு தான். அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும். அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும்.. பொதுவாக ஆண்களின் செக்ஸ் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது எழுத்து ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ் விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள். நீங்கள் அருவருக்காதீர்கள். அல்லது அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேறு விடயங்களுக்கு மறுப்பது வேறு இவ்விடயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து விடும். இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸ் இற்குரிய இடமென்ற கருதாதீர்கள். வீட்டின் மற்றய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும். ஆக மொத்தத்தில் உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் சிறக்கும். .

    சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

    By: Unknown On: 21:43
  • Share The Gag


  •  தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.

    அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.

    சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.

    ஆவி பிடித்தல்

     தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    தண்ணீர்

     கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

    சுத்தமான மூக்கு

     தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

    உப்புத் தண்ணீர்

     சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.

    இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.

    யூகலிப்டஸ் எண்ணெய்

     கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.

    மூலிகைத் தேநீர்

     சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.

    மஞ்சள் தூள்

     சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

    காரமான உணவுகள்

     காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

    வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.!

    By: Unknown On: 21:14
  • Share The Gag


  • திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம்.

    அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் என நினைக்கும் பணிகளை எல்லாம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மற்றபடி உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ள தனியே கணக்கு துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டி தொல்லையும் இல்லை.

    திட்டமிட்டு செயல்படுவது என தீர்மானித்தவுடன்,இந்த தளத்தில் உங்களுக்கான குறிப்பேட்டில் ஒவ்வொரு தினத்திற்கான பணிகளை குறித்து வைக்ககத்துவங்கி விடலாம்.செய்ய நினைப்பதை டைப் செய்து சேமிக்க என கிளிக் செய்தால் போதும், அந்த கட்டளை நம் நினைவூட்டலுக்காக காத்திருக்கும்.இப்படி ஒவ்வொரு செய‌லையும் சேமித்துக்கொள்ளலாம்.

    டைப் செய்யத்துவங்கியதுமே நமக்கான தனி இணைய முகவரி உருவாக்கப்பட்டு விடுகிறது.அடுத்த முறையில் இருந்து அந்த பிரத்யேக ,முகவரியில் உள்ள குறிப்பேட்டை பயன்படுத்தலாம். தின‌மும் செய்ய விரும்புவதை இப்படி டைப் செய்து குறித்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த குறிப்பேட்டை பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளலாம். செய்து முடித்தால் அதையும் குறித்து கொள்ளலாம்.

    புதிய பணிகளை குறித்து வைக்க,திருத்த என்னும் இடத்தில் கிளிக் செய்தால் பழைய குறிப்பேடு வந்து நிற்கிறது.அதில் நாட்காட்டி போல வரிசையாக தேதி அடிப்படையில் குறித்து வைத்த பணிகளை காணலாம்.

    திட்டமிடலை எப்படி நிறைவேற்றியிருக்கிறோம் என பத்து நாள் கழித்தோ ,மாத கடைசியிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.

    எளிமையான தளம் என்றாலும் நேர்த்தியானது. ஆங்கிலத்தில் தான் டைப் செய்ய வேண்டும். ஆனால் தமிழில் பயன்படுத்த விரும்பினால் வேறு ஒரு செயலியில் டைப் செய்து இங்கே பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

    பயன்படுத்தி பாருங்கள். திட்டமிடல் உங்களுக்கு வெற்றி தரட்டும்.

    திட்டமிட… http://www.dailytodo.org/

    நல்லெண்ணையின் மகத்துவங்கள்...!

    By: Unknown On: 21:04
  • Share The Gag



  • அனைவரும் ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம்.

    ஆனால் நல்லெண்ணெயிலும் அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது.

    மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

    ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.

    ஆரோக்கிய இதயம்


    நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

    நீரிழிவு

    நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

    வலுவான எலும்புகள்

    நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

    எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

    அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    செரிமான பிரச்சனை

    மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

    இரத்த அழுத்தம்

    நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

    அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

    பளிச் பற்கள்

     
    தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

    அழகான சருமம்

    நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.

    By: Unknown On: 20:50
  • Share The Gag


  • இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம். நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் தகவல் சொல்லிவிட்டு மெயில் வந்திருக்கிறதா? பார்த்து சொல்லுங்கள் என கேட்டிருப்பார். நீங்களும் இன்பாக்சில் கிளிக் செய்து கொண்டே இருப்பீர்கள் ஆனால் அந்த மெயில் மட்டும் எட்டிப்பார்க்காது.

    பொதுவாக,இமெயில்கள் அனுப்பிய சில நொடிகளில் எல்லாம் வந்து சேர்ந்து விடும் போது சில மெயில்கள் மட்டும் தாமதமாவது ஏன்?என்ற கேள்வி குழம்ப வைக்கும்.

    அனுப்பிய‌ இமெயில் முகவரி சரி தானா என்று பார்ப்பீர்கள். இன்டெர்நெட் இணைப்பு ஒழுங்காக இருக்கிறதா என சோதிப்பீர்கள். சர்வர கோளாறா,இல்லை இணைத்து அனுப்பட்ட கோட்டுகளால் சிக்கலா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும். அப்படியும் மெயில் வந்திருக்காது.பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்த மெயில் வந்து நிற்கும். அதற்குள் கிளிக் செய்து செய்து வெறுத்து போயிருப்பீர்கள்.

    ஏன் இந்த தாமதம்?

    இந்த கேள்விக்கு விடை அறிய விரும்பினால் அதற்கான வழி இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட இமெயில் ஏன் தாமதமாக வந்த்து என தெரிந்து கொள்ளலாம்.இந்த பதில் உங்களுக்கு வந்த மெயில்லேயே இருக்கிறது.




    ஜிமெயிலில் அந்த மெயிலை ஓபன் செய்து அதில் மூலத்தை பார்ப்பதற்கான ஷோ ஒரீஜினல் என்னும் கட்டளையை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு அந்த மெயில் பயணம் செய்த இணைய பாதையும் அதில் சந்தித்த சர்வர்களும் வந்து நிற்கும்.அந்த மெயில் எந்த ஐ.பி முகவரிகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறது என இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

     இப்படி இணையத்தில் எங்கெங்கோ சுற்றி மூச்சிறைக்க வந்ததால் தான் இன்பாக்சிற்கு தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

    இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இமெயில் பயணித்து வரும் முறை பற்றிய அறிதல் இருந்தால் அடுத்த முறை ஏதேனும் மெயில் உடனடியாக வந்து சேராவிட்டால் டென்ஷ்னாகமல் இணைய எதார்தத்தை புரிந்து கொண்டு கூலாக இருக்கலாம் அல்லவா?

    அதோடு நீங்கள் ஒரு மெயில் அனுப்பி அது இன்னும் வரவில்லையே என யாரேனும் உங்களை தொல்லை செய்தால் இந்த விளக்கத்தை சொல்லி பார்க்கலாம்.

    கூகுள் குரோமின் சார்ட்கட் கீ தொகுப்பு!

    By: Unknown On: 20:34
  • Share The Gag

  •  குரோம் பிரௌசர் பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்:

    குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Space Bar – Page down one full screen at a time

     Page Down — Page down one full screen at a time

     Down Arrow – Scroll Down

     Shift + Space Bar – Page up one full screen at a time

     Page Up — Page up one full screen at a time

     Up Arrow – Scroll Up

     Home – Go to the top of the webpage

     End – Go to the bottom of the webpage

     Ctrl + P – Print the current page

     Ctrl + S – Save the current page

     Ctrl + O – Open a file from your computer in Google Chrome

     F5 – Reload the current page

     Esc – Stop page loading

     Ctrl + F5 – Reload the current page (ignore cached content)

     Ctrl + D – Bookmark the current webpage

     Ctrl + Shift + D – Save all open pages as bookmarks in a new folder

     Alt + Click on link – Download link

     Ctrl + F – Open the search box

     F3 – Find the next match for your input in the search box

     Shift + F3 – Find the previous match for your input in the search box

     F11 – Open page in full screen mode

     Ctrl + + – Make the text larger

     Ctrl + – – Make the text smaller

     Ctrl + 0 – Return text to normal size

     Ctrl + Shift + B – Toggle the bookmarks bar

     Ctrl + H – View the History page

     Ctrl + J – View the Downloads page

     Shift + Esc – View the task manager

     Ctrl + Shift + Delete – Open the Clear Browsing Data Dialog

     F1 – Open the Help Center in a new tab

     Ctrl + U – View page source code

    குரோம் பிரௌசர் விண்டோவை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்:


    குரோம் ப்ரௌசரில் இயக்க மற்றும் மற்ற விண்டோ(window) பக்கங்களை இயக்க குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Ctrl + N – Open a new window

     Ctrl + Shift + N – Open a new window in incognito mode (Pages viewed in incognito mode won’t show in browser history or search history. They also won’t leave cookies or other traces)

     Alt + F4 – Close the current window

     Shift + Click on link – Open the link in a new window


    குரோம் பிரௌசர் டேப் (TAB) இயக்க குறுக்கு வழிகள்:


    குரோம் ப்ரௌசரில் ஒரு விண்டோவில் உள்ள டேப்(tab) பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Ctrl + Click on link – Open link in a new tab in the background

     Ctrl + Shift — Click on link – Open the link in a new tab and switch to the newly opened tab

     Ctrl + T – Open a new tab

     Ctrl + Shift + T – Reopen the last tab that was closed

     Ctrl + 1 through Ctrl + 8 – Switch to the tab at the specified position

     Ctrl + 9 – Switch to the last tab

     Ctrl + Tab – Switch to the next tab

     Ctrl + Shift + Tab or Ctrl + PgUp – Switch to the previous tab

     Backspace – Go to the previous page in your browsing history for the tab

     Shift + Backspace – Go to the next page in your browsing history for the tab

     Ctrl + W – Close the current tab or pop-up

     Alt + Home – Go to your homepage in the current tab

     Ctrl + Click the Back Arrow, Forward Arrow, or Go button – Open destination in a new tab in the background

     Drag a link to a tab – Open the link in the tab

     Drag a link to a blank area on the tab strip – Open the link in a new tab

     Drag a tab out of the tab strip – Open the tab in a new window

     Drag a tab out of the tab strip and into an existing window’s tab strip – Open the tab in the existing window

     Press ESC while dragging a tab – Return the tab to its original position

    குரோம் பிரௌசர் அட்ரெஸ் பாரை(address bar) இயக்க குறுக்கு வழிகள்:

    குரோம் ப்ரௌசரில் அட்ரஸ் பாரை(address bar) இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

    Type a search term, then press Enter – Perform a search using your default search engine

     Type a search engine URL, then press TAB, type a search term, and press Enter – Perform a search using search engine associated with the URL

     Ctrl + Enter after typing base web address – Automatically add ‘www.’ and ‘.com’ what you have typed in the address bar and open that web address.

     F6 – Highlight address bar contents

     Type a web address then Alt + Enter – Open web address that appears in the address bar in a new tab

     Ctrl + K – Initiate a Google search with the address bar. After typing the shortcut key, a ‘?’ will appear in the address bar. Type your query then press Enter.

     Ctrl + Right Arrow – Jump to the next word in the address bar

     Ctrl + Backspace – Delete the previous word in the address bar

     Select an entry from the drop down menu in the address bar, then press Shift — Delete – Delete the entry from the browsing history

     Click an entry in the address bar drop down list with the Middle Mouse Button – Open that URL in a new tab

    குரோம் பிரௌசர் மவுஸ் இயக்கங்களில் குறுக்கு வழிகள்:


    குரோம் ப்ரௌசரில் மவுஸ் இயக்கங்களில் என்னென்ன குறுக்கு வழிகள் உள்ளன என கீழே தரப்பட்டுள்ளது.


    Middle click on link – Open the link in a new tab in the background

     Shift + Middle click on link – Open the link in a new tab and switch to the newly opened tab

     Middle click on tab – Close the tab

     Click the Back Button, Forward Arrow, or Go button with Middle Mouse Button – Open destination in a new tab in the background

     Shift + Scroll Wheel – Scroll horizontally

     Ctrl + Scroll Wheel – Increase or decrease text size

    சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.!

    By: Unknown On: 20:19
  • Share The Gag


  • குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான்.


    பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர்.

    1. சக பணியாளர் விடுமுறை கேட்டால், உண்மையிலேயே அவருக்கான “உலகத்தை காப்பாற்ற வேண்டிய” வேலை ஏதும் இன்று அலுவலகத்தில் இல்லையென்றால் உடனே விடுப்பு கொடுத்துவிடுங்கள். 99% விடுமுறை காரணங்கள் பொய்கள் மட்டுமே. தமது தாத்தா பாட்டிகளை மீண்டும் மீண்டும் பாடையில் ஏற்றுவர். மனக் கசப்புடன் வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே எதுவும் நினைத்தபடி இருக்காது.

    2. அவர்களுடன் உணவருந்துங்கள். தயவு செய்து அலுவலகத்தில் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாதீர்கள். நான் சொல்வது வருடத்தில் இரு முறை வெளியே அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்று அனைவருடனும் சகஜமாகப் பேசி உணவருந்துங்கள். அலுவலகத்தில் இதை முயற்சித்தால் அங்கே மயான அமைதி மட்டுமே நிலவும். மதிய உணவு சாப்பிடும் நேரம் தான் உலகப் புரணிகளை பேசும் மேடை.

    3. கண்டிப்பாக பாராட்டுங்கள். உண்மையாகவே அவர் உங்களை சிறிதேனும் திருப்தி செய்திருந்தாலும் இன் சொற்களால் அவர்களை மகிழ்வியுங்கள்.

    4. ஒருவரிடம் அவரின் குறை பற்றி பேச ஆரம்பிக்கும் முன். அவர் செய்த ஓரிரு சிறப்பான காரியங்களை பாராட்டி பேசுங்கள். பின்னர்., இது போல் சிறப்பாக செயல்பட்ட உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்… ஆனால் நீங்கள் உங்களின் முழு திறமையையும் காட்டவில்லையே ஏன் எனக் கேளுங்கள். இது போன்ற குறை மற்றும் தவறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை மதித்து அவர்களின் குறைகளை சொல்லுங்கள். அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இதே முறையை தான் கையாளுகிறார்கள்.

    5. ஆலோசனை கேளுங்கள்:
    அவர்கள் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் அவர்களையும் மதித்து ஆலோசனை கேளுங்கள். நீங்கள் இந்தப் பதவியில் இருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள் எனக் கேளுங்கள். ஒரு வேலை ஆச்சரியமூட்டும் தீர்வுகள் கிடைக்கலாம்.

    6. புகழ்ச் சொற்களை சொன்னால்., அவர்களை வாயடைக்கும் விதமாக “நீங்களா இருந்தா என்னைவிட அற்புதமா செஞ்சு இருப்பீங்க… நீங்க தான் பெரிய ஆள்…” னு சொல்லுங்க… அவரின் ஆயுதத்தை அவருக்கே திருப்பி விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியா வேலை செய்யலாம்.

    7. உங்களின் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் மேல் கோவம் கொண்டால் உங்களின் உறவு கடைசி வரை மாமியார் மருமகள் உறவு போல மாறிவிடும். அவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்களிடம் நியாயமான கோரிக்கை இருந்தால் முடிந்த அளவிற்கு உங்களின் விதிகளில் மாற்றம் செய்யுங்கள். அவர்கள் 4 கோரிக்கை வைத்தால் இந்த இரண்டை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் இந்த இரண்டை தளர்த்த மறு பரிசீலனை செய்கிறேன் எனச் சொல்லுங்கள். இது போன்ற விவாதத்தில் ஏற்கனவே அனைத்திற்கும் உடன்பட்ட அலுவலர் நான்கு பேர் மற்றும் உடன்படாத இரண்டுபேர் 4:2 என அமர வைத்து விவாதியுங்கள்.

    8. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும்… உங்க தமாதத்ிற்கான காரணம் எனக்குத் தேவையில்லை இன்றைக்கு இந்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என பொறுப்புகளை அதிகமாகக் கொடுங்கள்.

    9. அவதூறு சொல்வதும், புறங்கூறுவதும் நிறுத்த இயலாத ஒன்று. என்னதான் நீங்கள் நட்பாகப் பழகினாலும் உங்களைப் பற்றி அவர்கள் தனி நபர் விமர்சனம் செய்துகொண்டே தான் இருப்பர்.

    அதனால் யாருக்கும் சல்லி காசு உபயோகம் இல்லை. இது ஒரு போதை போன்றது. தமது ஆசிரியரையோ அலது மேலதிகாரியையோ திட்டுவது அல்லது பட்டப் பெயர் சொல்லி அழைப்பது ஒரு போதையும் திருப்தியும் தரும். இது போன்றோர் எப்போதும் திறமையற்ற வெட்டிப் பேச்சு வீரர்கள் தான். இது போன்ற ஆட்களிடம் சற்று அதிக மரியாதையுடன் பேசுங்கள் பிறர் முன்னிலையில். ஒருவேளை பாராட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவர் முன்னும் அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை மனதளவில் தலை குனியச்செய்யும் ., உங்களைப் பற்றி அவதூறு பேச பிறர் முன் அவர் நா எழாது.

    10. மேலாளர் பணி என்பது., சக ஊழியர் சரியா வேலை செய்கிறாரா எனக் கண்கானித்து தார் குச்சி வைப்பது அல்ல. அவர்களை தன்னம்பிக்கையுடன், வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக வேலை செய்ய வைப்பது மட்டுமே. அவர்களை அடிமை போல் எண்னாதீர்கள்.

    நீங்கள் பணியாளராக இருக்கும் போது உங்கள் மேலாளர் இப்படி நடந்திருந்தால் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என யோசித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாழுங்கள்.

    கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!

    By: Unknown On: 20:09
  • Share The Gag

  • இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான்.

    கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன.

    இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது.

    ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது.

    ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது.

    ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது.

    ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு.

    மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை.

    ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான்.

    படித்ததில் பிடித்தது......

    By: Unknown On: 20:00
  • Share The Gag
  • பேசும் முறைகள்...


    தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!


    தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!


    ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!


    துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!


    சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!


    சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!


    குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!


    உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!


    நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!


    அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!


    வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!


    வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!


    தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!


    அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!


    இறைவனிடம் - மெளனமாக பேசுங்கள்..!

    இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்.. (முழுவதுமாகப் படிக்கவும்)

    By: Unknown On: 19:52
  • Share The Gag



  • சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான். அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

    ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

    சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும்" என்றான்.

    மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது"

    சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான். அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

    மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம்" வா, வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

    மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது. மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

    வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

    காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு, மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

    எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

    அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.

     நீதி :
    கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

    கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

    நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.

    தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!!

    By: Unknown On: 19:42
  • Share The Gag


  • 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.


    2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.


    3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.


    4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.


    5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.


    6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.


    7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.


    8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.


     மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

    மனிதனின் பொக்கிஷம்....!

    By: Unknown On: 18:55
  • Share The Gag



  • ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.
     ,

    ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,


    மூன்று சிலிண்டரின்விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,


    ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது....... .,


    அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,


    மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்...

    ஐக்கிய நடுகள் சபை (ஐ.நா)

    By: Unknown On: 18:39
  • Share The Gag




  • ஐ.நா. அமைப்புக்கள் (UN Associated Agencies)


     1.சர்வதேச அணுசக்திக் கழகம்.

    Intenational Autamic Engery Agency (IAEA)


     2.ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரக் கழகம்.

    United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO)


     3.சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.

    International Labour Organsation (ILO)


     4.உணவு மற்றும் விவசாய நிறுவனம்.

    Food and Agriculture Organisation (FAO)


     5.உலகச் சுகாதார நிறுவனம்.

    World Health Organisation (WHO)


     6.சர்வதேச நிதி நிறுவனம்.

    International Monetary Fund (IMF)


     7.சர்வதேச சீரமைப்பு மற்...........


    பிச்சைக்காரன் கேரக்டரில் வித்யாபாலன்!

    By: Unknown On: 18:25
  • Share The Gag


  • தியா மிர்ஸா தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகும் படம் 'பாபி ஜஸூஸ்'. வித்தியாசங்களை விரும்பி ஏற்கும் வித்யாபாலன் இதில் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். 


    இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் வித்யாபாலன்.


    இந்தப் படத்திற்காக ஹோம் ஒர்க் செய்து நிறைய ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.


    படத்தில் ஒரு காட்சியில் பிச்..................
     
     

    தூதுவளை தோசை - சமையல்!

    By: Unknown On: 18:03
  • Share The Gag


  •  தேவையானவை: 


    புழுங்கலரிசி - 1 கப்,


    தூதுவளை இலை - 15,


    மிளகு - 10,


    சீரகம் - அரை டீஸ்பூன்,


    பச்சை மிளகாய் - 2,


    உப்பு - தேவைக்கேற்ப,


    எண்ணெய் + நெய் - தேவையான அளவு.


    செய்முறை: 


    புழுங்கலரிசியை 3 மணி நேர...........


    டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க....

    By: Unknown On: 17:47
  • Share The Gag
  • காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...


    மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


    அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடி.................



    விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!

    By: Unknown On: 17:28
  • Share The Gag


  • தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.


    விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.


    ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்து............


    நான் இன்னும் கன்னிப்பையன்(?)தான்: சல்மான் கான் அதிரடி ஸ்டேட்மெண்ட்!

    By: Unknown On: 07:50
  • Share The Gag


  • தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும் 47 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளர். 


    பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் சல்மான் கான். மான்வேட்டை தொடங்கி அவர் ஆடாத வேட்டையே இல்லை எனலாம். அவர் குறித்த எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் பாலிவுட்டின் ஸ்வீட் ராஸ்கலாக சல்மான் இன்னும் கோலோச்சுகிறார். 


    ஐஸ்வர்யா ராய் தொடங்கி சல்மானுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் அநேகம்பேர் உண்டு. அதிலும் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முறிந்த பின்னர் ஒருநாள் குடிபோதையில் ஐஸ்வர்யா ராய் வீ.............