Monday 4 November 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்!

By: Unknown On: 20:47
  • Share The Gag

  • இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.


    தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற பல வகையான சிறப்பம்சங்கள் கொண்ட கருவிகளில் சிறப்பான ஒன்றை வாங்குவது என்பது புதியவர்களுக்கு சிரமமான காரியமே. இதற்காக நமக்கு உதவும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

     1.GeekaPhone.com


    Compare Smartphone Specifications Online

    எளிமையான தோற்றத்தை உடைய இத்தளத்தில் காட்டபடும் போன்களை தேர்வு செய்து ஒப்பிடலாம். இதில் மொபைல்களின் அனைத்து விவரங்களான display, processor, camera, video, battery, music போன்றவற்றை ஒரே பக்கத்தில் ஒப்பிடலாம். ஒரே நேரத்தில் 5 மொபைல்களை ஒப்பீடு செய்ய முடியும். மேலும் Popular Comparison களும் இருக்கின்றன.

    2.PhoneRocket.com



    Compare Smartphone Specifications Online

    இந்த தளத்தில் அனைத்து Specifications களுடன் Difference, Benchmarks, Reviews போன்றவையும் அவற்றிற்கான மதிப்பெண்களும் இடம்பெறுகின்றன. மேலும் ஒவ்வொரு வசதியிலும் சிறப்பான மொபைல்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உதாரணமாக Most Processing Power, Fastest Web Browser, Fastest 3D and 2D Graphics, Longest Battery Life போன்றவற்றில் சிறப்பான மொபைல்களை தனித்தனியாக பார்க்கலாம்.

    இத்தளம் தான் எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. மேலும் அடுத்து வரும் தளங்கள் அனைத்தும் இவர்களின் நெட்வொர்க் தான். கண்டிப்பாக ஒரு முறை பார்த்து விடுங்கள்.

    3. TabletRocket.com

    Compare Tablet Specifications Online

    இந்த தளத்தில் அனைத்து வகையான டேப்ளட்களை ஒப்பீட முடியும். மேற்கண்ட மொபைல் ஒப்பிடும் தளம் போல இடைமுகம், வசதிகள் தான் இதிலும். ஆனால் இதில் இயங்குதளங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் டேப்ளட்களை Sort செய்து பார்க்கவும் முடியும். ஒவ்வொரு வசதியிலும் Best Tablet களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடியாக அமேசானில் வாங்கவும் இணைப்பு உள்ளது.

    4. CameraRocket.com


    Compare Cameras Specifications Online
    இதில் எல்லாவகையான புதிய கேமராக்களையும் ஒப்பீட்டுப் பார்க்கலாம். இத்தளத்தில் Best image quality in low light, Highest resolution, Cheapest full frame cameras, Fastest focusing போன்றவற்றில் சிறந்த கேமராக்களை அறிந்து கொள்ள முடியும்.

     5.ReaderRocket.com


    Compare E-readers Specifications Online

    புத்தகங்கள் படிக்க, ஆன்லைன் வசதிக்கு உதவும் Amazon Kindle போன்ற பலவகையான Reader Device களை ஒப்பிட இத்தளம் உதவுகின்றது. மேலும் இதில்  The best E-Ink readers,Fastest web browser,The best 5" e-readers, The best 6" e-readers போன்ற சிறந்த ரீடர்களை தெரிந்து கொள்ள முடியும்.

    'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

    By: Unknown On: 20:12
  • Share The Gag
  • ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை


    பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


    இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.


     tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


    இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து,  ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம். எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

    By: Unknown On: 17:31
  • Share The Gag
  • தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் நடந்தேறியதால், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் மக்கள் தரமான உணவைப் பெற முடியவில்லை.


    nov 4 - edit food_security_

    கிராமப்புறங்களில் சரிபாதிக்கும் மேலான குழந்தைகளும் சிறுவர்களும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள முடியாமல் பசி பட்டினியில் வாடுகிறார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் நமது விவசாய உற்பத்தி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனும் புள்ளிவிவரமும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சகாய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கான செலவினம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவில் செய்யப்படும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக, விநியோகத் திட்டத்தை நிர்வகிப்பதில்தான் குளறுபடி என்பது நிரூபணமாகிறது.


    “”மக்கள் பசியில் வாடும் நிலைமைக்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான உணவு இல்லை என்பதை விடவும், தேவையான உணவு மக்களிடம் போய்ச் சேரும்படி நிர்வாகம் நடக்கவில்லை என்பதே உண்மை” என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், “”இந்தியாவின் ஏழ்மையும் பசியும்” என்ற பொருள் பற்றி பேசும்போது குறிப்பிடுகிறார்.
    அதுபோலவே இன்றைய நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய பசி நீக்கும் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏழை மக்களின் பசியைப் போக்கும் திட்டமாக வெற்றியடைய முடியுமா என்பது நம் நாட்டில் பொது விநியோகத் திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதில்தான் இருக்கிறது.


    நமது பொது விநியோகத் திட்டம் என்பது ஒரு சல்லடையில் நீரை ஊற்றி பின் நீர் ஒழுகிறதே என நாம் குறை சொல்வது போன்ற கட்டமைப்பில் இருக்கிறது என்பது உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தெரியும். “மானிய விலையில் நம் நாட்டில் விநியோகிக்கப்படும் 59 சதவீத கோதுமையும் 39 சதவீத அரிசியும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை’ என சமீபத்திய புள்ளி விவரம் கூறுகிறது.


    2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் மிகவும் வெளிப்படையாக “மிக அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்கள் கடத்தப்பட்டு வெளிமார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது’ என ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி விநியோகத்திற்காக கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கெட்டு அழிந்து போகின்றன. 2008-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் 36,000 டன் உணவுப் பொருள்கள் சீரழிந்து போய்விட்டன. உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதும், திருடப்படுவதும், கள்ளக்கணக்கினால் காணாமல் போவதும் இதனுள் அடங்கும்.


    உலக சுகாதார இயக்கத்தின் அளவுகோள்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 250 கிராம் உணவு என்ற கணக்கின்படி இந்த அளவு உணவுப் பொருள்களை 14 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும்.


    உணவுப் பொருள்கள் மட்டுமின்றி நீல நிறமாக்கப்பட்ட மண்ணெண்ணெயும் மானிய விலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2004-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 39 சதவீத மண்ணெண்ணெய் கள்ளத்தனமாக வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது.


    ஆக இதுபோன்ற ஓட்டை ஒழுகலுடன் நடக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் பசிப்பிணியை நிவர்த்தி செய்து விடுவோம் என இன்றைய மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல.


    பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக 1939-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் அன்றைய பம்பாய் நகரில் உணவுப் பொருள்களைச் சரியான விலைக்கு குறிப்பிட்ட மளிகைக் கடைகள் மூலமாக விற்பனை செய்தபோது தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை.


    அன்றைய நிலைமையில் உணவுப் பொருள்கள் மார்க்கெட்டில் விலையேற்றத்தைச் சந்தித்தபோது, அரசின் கட்டுப்பாட்டில் விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். பின் 1943-ஆம் ஆண்டில் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது கொல்கத்தா நகரில் முதன்முறையாக ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு உணவுப் பொருள்களை அரசாங்கம் விநியோகம் செய்தது.


    பிற்காலங்களில் இந்த ரேஷன் கடைகள் பல வகையிலும் சீர்செய்யப்பட்டு, சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் இடமாக 1992-ஆம் ஆண்டு உருவாகின. இன்றைய நிலைமையில் நாடெங்கிலும் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 18 கோடி ஏழைக்குடும்பங்கள் தரமான உணவுப் பொருள்களை மானிய விலையில் பெறுகின்றன. இதுபோன்ற பெரிய அளவிலான உணவு விநியோகம் உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.


    ஆனால், சரியாக நிர்வகிக்கப்படாததால், ஊழலும், பொருள்கள் சேதமும் பெரிய அளவில் நடைபெற்று, உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடும் இதுதான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2005-ஆம் ஆண்டில் மத்திய திட்டக் கமிஷன் நம் நாட்டின் பொது விநியோக முறையின் நிலைமையை ஆராய ஒரு கமிட்டியை நிறுவியது. அந்தக் கமிட்டியின் அறிக்கை அகில இந்தியாவிலும் மானிய விலையில் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்களில் 58 சதவீதம் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களைச் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
    இதற்கான காரணம், ஏழைக் குடும்பங்களைக் கணக்கிடுவதில் ஏற்படும் தவறு, ஊழல் மற்றும் திட்டமிட்ட திருட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் உணவு தானியம் கிடைக்க அரசு 3.65 ரூபாய் செலவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி அரசின் பணம் ஒரு ரூபாயில் 27 பைசாதான் ஏழை மக்களைச் சென்றடைந்தது எனலாம்.


    பிகார், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் மிக அதிக அளவில் (75 சதவீதம் வரை) உணவு தானியங்கள் திருடப்பட்டன. ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீத பொருள்கள் கொள்ளை போயின. அசாம், குஜராத், ஹிமாசல பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 25 சதவீதம் உணவு தானியங்கள் ஏழை மக்களைச் சென்றடையவில்லை எனவும் கமிட்டி சுட்டிக் காட்டியது. ஆந்திரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் 25 சதவீதத்திற்கும் கீழ் உணவுப் பொருள்கள் களவாடப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டனவாம்.


    இதுபோன்று வேறு சில கமிட்டிகளும் 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு பொது விநியோகத் திட்டத்தை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தன. அவ்வறிக்கைகளின்படி இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று, ஏழைக் குடும்பங்களைப் பட்டியலிடுவதில் உள்ள குளறுபடி. வசதி படைத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவதும், ஏழைகள் விடுபடுவதும்தான் இந்தக் குளறுபடிக்குக் காரணம். இரண்டாவதாக, சரியான கணக்கீடு இல்லாமையால் ஒரே நபர் பல ஊர்களின் பட்டியல்களில் இடம்பெறுவதும், சிலர் எந்தப் பட்டியலிலுமே சேர்க்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. மூன்றாவதாக, பொய்யான நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உரிய தானியங்களை ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்களும் கீழ்நிலை அரசு ஊழியர்களும் கடத்தி வெளிச்சந்தையில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.


    “மிகவும் தவறான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பகல் கனவே’ எனக் கூறுவோரும், “அரசு ஊழியர்களை உபயோகிக்காமல் கணினிமயமாக்கிய நடைமுறையில் உணவு விநியோகத்தைச் சரிசெய்யலாம்’ எனக் கூறுவோரும் உள்ளனர்.


    “கணினியை இயக்குபவர்களும் தவறு செய்யலாமே’ என சந்தேகிப்பவர்களும் உண்டு.


    “சரி நமது நாட்டில் எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதால் அரசு பணம் 1 ரூபாயை செலவு செய்து, அதில் 27 பைசாக்களாவது ஏழைகளைச் சென்றடைகிறதே’ என்று திருப்தியடைபவர்களும் உண்டு.


    ஆனால் மிகுந்த சிரத்தையுடன் நமது தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பொது விநியோகத் திட்டநிர்வாகத்தின் ஊழல்களையும் சீர்கேடுகளையும் களைந்து ஏழை மக்களுக்குத் தரமான உணவு கிடைக்க வழிசெய்தால் சாமுவேல் ஜான்சன் கூறியது நிறைவடைந்து நமது நாகரிகம் அவர்களைப் பாராட்டும்.

     “”ஏழைகளுக்குச் செய்யப்படும் தரமான ஒரு சேவைதான் ஒரு நாகரிகத்திற்கான உண்மையான சோதனை” என்றார் அந்த மாமேதை!

    வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

    By: Unknown On: 11:38
  • Share The Gag

  • தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள்,... தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


    சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

    அறிகுறிகள் என்ன ?

    முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

    தைராய்டு பிரச்சினை

    பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

    5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

    ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

    பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
    வீட்டு வைத்தியம்

    சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

    பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

    வாழைத்தண்டு

    முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
    வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

    எதை சாப்பிடக்கூடாது?

    சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்!

    By: Unknown On: 11:14
  • Share The Gag

  • Photo: பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்  செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .  பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.  வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.  சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்  “ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப் பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும் மின்னே விடுபூ முடி “  சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்  ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும் ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.  வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்  பகல் நீட்டிப்பை காண வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி டு என்பது ஆனி பூ என்பது ஆடி மு என்பது ஆவணி டி என்பது புரட்டாசி இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்  மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை  வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே வ = 1/4 நாழிகை வா= 1/4 நாழிகை வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம் இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது  ~பகல் நீட்டிப்பு~  வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம் ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம் ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்  ~இரவு நீடிப்பு~  கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம் மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம் மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்  நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.  தமிழ் திங்கள் (மாதம்) “““““““““““““““` பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக வழங்கி வந்தன.  அவை:–  மேழம் (சித்திரை) விடை (வைகாசி) ஆடவை (ஆனி) கடகம் (ஆடி) மடங்கல் (ஆவணி) கன்னி (புரட்டாசி) துலாம் (ஐப்பசி) நளி (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவம் (தை) கும்பம் (மாசி) மீனம் (பங்குனி)  இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.  தகவல் - இணையம்

     பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்


    செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .


    பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்... . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.


    வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.



    சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்



    “ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
    ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
    பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
    மின்னே விடுபூ முடி “


     
    சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

    ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
    ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.


    பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.



    வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

    பகல் நீட்டிப்பை காண


    வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் 


    வி என்பது வைகாசி
     

    டு என்பது ஆனி
     

    பூ என்பது ஆடி
     

    மு என்பது ஆவணி
     

    டி என்பது புரட்டாசி
     

    இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
     
    மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

    வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
     

    வ = 1/4 நாழிகை
     

    வா= 1/4 நாழிகை
     

    வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 
    நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
     

    இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது
     

    ~பகல் நீட்டிப்பு~

    வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
     

    ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
     

    ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
     

    ~இரவு நீடிப்பு~

    கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்


    மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
     

    மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

     

    நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

    தமிழ் திங்கள் (மாதம்)


    “““““““““““““““`
     

    பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
    வழங்கி வந்தன.

    அவை:–

    மேழம் (சித்திரை)


    விடை (வைகாசி)


    ஆடவை (ஆனி)


    கடகம் (ஆடி)


    மடங்கல் (ஆவணி)
     

    கன்னி (புரட்டாசி)
     

    துலாம் (ஐப்பசி)
     

    நளி (கார்த்திகை)
     

    சிலை (மார்கழி)
     

    சுறவம் (தை)
     

    கும்பம் (மாசி)
     

    மீனம் (பங்குனி)
     

    இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

    சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்கள்!

    By: Unknown On: 10:29
  • Share The Gag
  • இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

    20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.


    உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் செயின்களை அமைத்திருக்கின்றன. இதைத்தவிர இந்திய வர்த்தகர்களும் அச்சு அசலாக மேலைநாட்டுப் பாணியில் சூப்பர் மார்க்கெட்களைத் திறந்திருக்கிறார்கள்.


    அட்லான்டாவிலுள்ள (அமெரிக்கா) ஒரு சூப்பர் மார்க்கெட்
    மொத்தத்தில் நீங்கள் வசிப்பது ஐரோப்பாவோ, வட அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றோ, சூப்பர் மார்க்கெட்கள் உங்கள் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகி விட்டது.

    வட அமெரிக்காவில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை நீங்கள் செலவு செய்வது சூப்பர் மார்க்கெட்களில் என்கிறது கனேடிய பாவனையாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரம். இது ஒரு ஆவரேஜ் சதவீதம். ஐரோப்பாவிலும் மற்றய மேலை நாடுகளிலும் இருப்பதும் கிட்டத்தட்ட இதே ஆவரேஜ்தான். ஆசியாவில் வசித்தால் நீங்கள் செலவு செய்வது இதைவிடச் சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

    இந்தக் கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவராக நீங்கள் இருந்தால், ஒரு காரியம் செய்யுங்கள். – அடுத்துவரும் 1 மாத காலத்திற்கு ஒவ்வொரு தடவையும் நீங்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், ரசீதுகளை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். 1 மாதம் முடிந்ததும் அவற்றிலுள்ள டாலர், யூரோ, அல்லது ரூபா பெறுமதியைக் கூட்டி வரும் தொகையை 12 ஆல் பெருக்குங்கள்.

    வரும் விடை அல்லது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் தொகை ஆயிரக் கணக்கில் இருக்கும். உங்களுக்குத் தலைசுற்றும்.

    இந்தத் தொகைதான் நீங்கள் வருடமொன்றுக்கு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்களுக்கு செலவு செய்யப்போகும் ஆவரேஜ் தொகை.

    நான் ஏற்கனவே கூறியதுபோல இந்தத் தொகை ஆளாளுக்கு அல்லது வேறு வேறு குடும்பங்களுக்கு வேறுபடும். சிலருக்கு வருட வருமானத்தில் 30 சதவீதமாக இருக்கலாம். வேறு சிலருக்கு வருட வருமானத்தில் 20 சதவீதமாக இருக்கலாம். புள்ளிவிபரப்படி கனேடிய ஆவரேஜ் 25 சதவீதம்.

     
    பிரான்சிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வைன் பிரிவு
    “சரி. இதற்கு என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு அப்படி” என்று வழமைபோல செலவு செய்துகொண்டு இருப்பதானால், நீங்கள் இதைப் படிக்க வேண்டியது அவசியமல்ல. அவசியம் எங்கே வருகிறது என்றால், கனேடியப் புள்ளிவிபரம் கொடுக்கும் மற்றொரு தரவில்!

    அந்தத் தரவு என்ன? மொத்த வருமானத்தின் 25 சதவிகித தொகையை சூப்பர் மார்க்கெட்டில் செலவு செய்யும் ஒரு குடும்பத்தில் செலவு செய்யும் முழுத்தொகையின் 80 சதவீதம்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி வேஸ்ட் ஆகப் போய்விடுகிறது. அடடா!

    அதாவது நீங்கள் 5000 டாலருக்கு ஷாப்பிங் செய்திருந்தால் 4000 டாலருக்கு வாங்கும் பொருட்களைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மிகுதி 1000 டாலர் பெறுமதியான பொருட்களை வீணடிக்கிறீர்கள் அல்லது உபயோகிக்காமல் எறிகிறீர்கள். இதில் பத்து நாட்களுக்குமேல் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அழுகி எறியும் தக்காளி முதல், 2 வாரம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருந்த பாதிப் பாக்கட் பால் எக்ஸ்பயரி தேதி முடிந்து எறிவது வரை அடங்கும்.

    விஷயம் அத்துடன் முடிந்துவிடவில¢லை. கனேடியப் புள்ளிவிபரத்தில் மேலும் ஒரு தரவு இருக்கிறது. அதன்படி, நீங்கள் செலவு செய்யும் தொகையின் 10 சதவீதம், நீங்கள் தேவையில்லாமல் வாங்கும் பொருட்களில் செலவாகின்றது. அதாவது வருடத்திற்கு 5000 டாலர் செலவு செய்தால், சுமார் 500 டாலர் பெறுமதியான பொருட்களை நீங்கள் தேவையில்லாமல் அல்லது அவசியமில்லாமல் வாங்குகிறீர்கள்.


    ஜப்பானிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் டிஸ்பிளே ஸ்டைல்.
    கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தக் கணிப்பு சரி என்பது புரியும்.

    மலிவாகப் போட்டிருக்கிறார்கள், அல்லது இந்த வாரம் மாத்திரம் இந்தப் பொருள் தள்ளுபடி விலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கப்படும் பொருட்கள் இந்த வகை. அதே நேரத்தில், புதிதாக அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களின் விளம்பரத்தால் கவரப்பட்டு வாங்கப்படும் பொருட்களும் இந்த வகையில் வரும்.

    இந்த 10 சதவீத பொருட்களின் தள்ளுபடி விலை விளம்பரங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படாதிருந்திருந்தால், சூப்பர்மார்க்கெட்டில் இவை உங்களின் கைகளில் தட்டுப்பட்டிருக்காது. உங்கள் வீடுவரை வந்துமிருக்காது.

    மேலேயுள்ள தரவுகள் இரண்டையும் கூட்டினால், சூப்பர் மார்க்கெட்களில் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் சுமார் 30 சதவீதத்தை வேஸ்ட் செய்கிறீர்கள். இது ஒருபுறம் இருக்க, மிகுதி 70 சதவீதம் செலவு செய்து நீங்கள் வாங்கிவரும் பொருட்களின் நிஜமான பெறுமதி அதுதானா? – அதை வேறுவிதமாகக் கேட்டால், நீங்கள் வாங்கிய பொருட்களை அதைவிட மலிவாக வாங்கியிருக்க முடியாதா?

    நீங்கள் எந்தளவுக்கு ஷாப்பிங் புலி என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சராசாரி வட அமொரிக்கப் பாவனையாளர் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக வாங்கும் அதே பொருட்களை 15 சதவீதம் குறைவான விலையில் வாங்குவது சாத்தியம் என்கிறது அதே கனேடியப் புள்ளிவிபரம்.


    கனடாவிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்புறத் தோற்றம். இதைச் சொல்வது ஃபிளெக்ஸ் ப்ரைசிங் என்று. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் இங்கு சொல்லப் போகின்றோம்.

    நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்? இன்று? நேற்று? கடந்த வாரம்? அது எப்போதாக இருந்தாலும், அந்த சூப்பர் மார்க்கெட்டின் உட்புறத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.

    வழமையாக சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும், அது எந்த நகரத்தில் இருந்தாலும், பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திராவிட்டால் நாங்கள் இப்போது சொல்லப்போகும் சில அம்சங்கள் நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    1) சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் ஆட்களில் அனேகமானவர்கள் வைத்திருக்கும் ஷாப்பிங் லிஸ்டில் இருக்கும் ஒரு அவசியப் பொருள் பால். இது நீங்கள் பயன்படுத்தும் பாலாகவோ, அல்லது குழந்தைகளுக்கான பாலாகவோ இருக்கலாம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தமது வருகையின் 70 சதவீதமான ட்ரிப்களில் பால் வாங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

    அதை வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் 10 தடவைகள் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதில் 7 தடவைகள் உங்களது ஷாப்பிங் லிஸ்ட்டில் பால் இருக்கிறது. சரி. கேள்வி என்னவென்றால், இப்படி அதிகமானவர்களால் வாங்கப்படும் பால், ஏன் சூப்பர் மார்க்கெட்டின் வாயிலருகேயோ காஷியருக்கு அருகேயோ வைக்கப்பட்டிருப்பதில்லை?


    2) அநேக சூப்பர் மார்க்கெட்களின் உள்ளே வாத்திய இசை ஒலிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ஒலிக்கும் இசை எந்த வகையான இசை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா. கவனித்திருந்தால் அதை இப்போது ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
    3) நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட், சிப்ஸ், பாப்கார்ன் சூயிங்கம் போன்றவை உள்ளே ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதே பொருட்கள் நீங்கள் பணம் செலுத்தும் கேஷியருக்கு அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்திருப்பீர்கள். ஒரே பொருட்கள் ஏன் இரண்டு வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

    பிரிட்டனிலுள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் செயின்.
    மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக சூப்பர் மார்க்கெட்களில் அமைந்து விடுவதல்ல. இவை காரணமாக அமைக்கப்பட்டடிருப்பவை. காரணம் -சைக்காலஜி. மனோத்ததுவம். மனோதத்துவ ரீதியாக உங்களை மடக்குவதுதான் திட்டம்.

    சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.

    முதலாவதாகக் கூறப்பட்ட பால் விவகாரத்தையே பாருங்கள். சூப்பர் மார்க்கெட்கள் பாவனையாளர்களின் வசதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதானால், கடைக்குள் நீங்கள் நுழைந்தவுடன் கையில் எடுக்கும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சூப்பர் மார்க்கெட்டுக்கு நீங்கள் 10 தடவைகள் சென்றால், 7 தடவைகள் பால் வாங்கச் செல்கிறீர்கள்.


    ஆனால் பால் வைக்கப்பட்டிருப்பது சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெகுதொலைவில் வைக்கப்பட்டிருப்பதன் காரணம், உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே அதிகதூரம் நடக்கவைப்பது.


    ஏன் நடக்க வைக்கிறார்கள்? ஏதாவது பாதயாத்திரை பயிற்சியா?

    இல்லை. அதிக நேரம் உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்குள் தங்க வைக்க விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால்தான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகநேரம் உங்கள் கண்களில் படும். அதிகநேரம் கண்களில் படும்போது, அந்தப் பொருட்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் இலவச விளம்பரம்.

    ஒரு புத்திசாலித்தனமான சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் வாயிலில் இருந்து பால் இருக்கும் இடத்துக்கு நடந்து செய்லும் பாதையின் இருபுறமும் பரொமோஷனல் ஐட்டம்கள், உங்களின் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.


    சூப்பர் மார்க்கெட்டில் பால் வைக்கப்பட்டிருப்பது எங்கே?
    ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த புரொமோஷனல் ஐட்டம்கள் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கின்றன என்று பாவனையாளருக்குத் தெரியப்படுத்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? விளம்பரம் செய்ய வேண்டும்.

    பத்திரிகையிலோ, டிவியிலோ, ரேடியோவிலோ, இணையத்தளத்திலோ அதை விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும், அந்த விளம்பரத்தை உங்களைப் பார்க்க வைத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு வரவைக்கவும் வேண்டும். ஒருவேளை விளம்பரத்தைப் பார்த்து 3 நாட்களின்பின் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது, அந்த விளம்பரம் உங்களது மனதிலிருந்து மறைந்தும் விட்டிருக்கலாம்.

    ஆனால், இதோ நீங்கள் பால் எடுக்கச் செல்லும் பாதையில் அவர்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய பொருட்களையே கவர்ச்சிகரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். விளம்பரச் செலவு கிடையாது. பத்திரிகை விளம்பரத்தை நீங்கள் பார்த்துவிட்டு 3 நாட்களில் அதை மறந்து விடுவது போல இல்லாமல், விளம்பரப்படுத்தப்படும் பொருள் உங்கள் கைக்கெட்டிய தொலைவிலேயே இருக்கிறது.

     
    இலவச விளம்பரம்! உடனடி விற்பனை!!


    இரண்டாவது பாலை மாத்திரம் வாங்கும் உத்தேசத்துடன் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தால், அவை வாயிலுக்கு அருகே வைக்கப்பட்டடிருந்தால் அவற்றை எடுத்து, காசைக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்து விடுவீர்கள். சூப்பர் மார்க்கெட்டில் டிஸ்பிளே செய்யப்பட்டிருக்கும் மற்ற எந்தப் பொருளும் உங்கள் கண்களில் பட்டிருக்காது.


    தாய்லாந்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்


    அதனால்தான் பாவனையாளர் அதிக தடவைகள் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்றிருக்கும் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தொலைவில் வைக்கிறார்கள். அதை எடுக்கப் போகும்போது நீங்கள் மற்றைய பொருட்களையும் பார்க்கப் போகின்றீர்கள். அப்போது உங்கள் மனதில் சில எண்ணங்கள் தோன்றுப் போகின்றன.

    “அட இந்தப் பொருளைத்தானே வீட்டில் மறக்காமல் வாங்கிவரச் சொன்னார்கள். நல்லவேளை இப்போது கண்களில் பட்டதே”

    “இந்தப் பொருள் பார்க்க நன்றாக இருக்கிறதே. சும்மா ஒரு தடவை வாங்கிப் பார்க்கலாமா?”

    “ஓகோ இந்தப் பொருளும் இங்கே விற்பனையாகிறதா? எங்கே வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”

    “வாவ். இந்தப் பொருளின் விலை இவ்வளவுதானா, மலிவாக இருக்கிறதே. வாங்கிப் பார்க்கலாமா?”

    பால் பாக்கட்டை எடுப்பதற்கு சூப்பர் மார்க்கெட்டின் கடைசி ஷெல்ஃப்வரை நடக்கும் பத்துக்கு இரண்டு பேருக்காவது மேற்கண்ட யோசனைகளில் ஏதாவது தோன்றினால் சூப்பர் மார்க்கெட்காரருக்கு வெற்றி. பத்துக்கு நான்கு பேருக்கு தோன்றினால் அதிஷ்டம். அதற்குமேல் தோன்றினால் தீபாவளி!!

    பார்த்தீர்களா? எல்லாமே மனோத்துவ ரீதியான தந்திரம்தான்.


    அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் ஒலிக்கும் இசை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது யோசித்துப் பாருங்கள். அந்த இதை மிகவும் மென்மையான, ஸ்லோ மியூசிக்காக இருந்திருக்கும்.

    அதற்குக் காரணம் என்ன? எல்லா சூப்பர் மார்க்கெட்காரர்களுக்கும் வேகமான தடாங் படாங் இசை பிடிப்பதில்லையா? அப்படியல்ல.

    விஷயம் என்னவென்றால், மனோதத்துவ அடிப்படையில் மென்மையான ஸ்லோவான இசை உங்களின் மனசை இலோசாக்குவதுடன், உங்களது இயங்கு திறனையும் குறைக்கின்றது.

    நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் கார்ட் ஒன்றைத் தள்ளியபடி ஒவ்வொரு ஷெஃப்பாகப் போய் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகை ஸ்லோவான இசை உங்களது நடையையும் ஸ்லோவாக்கிவிடும்.


    ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளியபடி அங்கு ஒலிக்கும் இசையைக் கேட்டபடி நடந்து பாருங்களேன்!


    சாதாரணமாக நீங்கள் நடக்கும் வேகத்தில் சூப்பர் மார்க்கெட்டின் ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃப்பை நீங்கள் கடக்க எடுக்கும் நேரத்தைவிட, அதிக நேரம் எடுக்கப்போகின்றீர்கள். உங்களையறியாமல் அதிக நேரம் ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் போகின்றீர்கள். அதிக நேரம் பார்க்கும்போது, அவை அதிகநேரம் உங்கள் மனதில் பதியப் போகின்றன.

    இந்த வேகக் குறைவால், வழக்கத்தைவிட ஓரிரு பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்குவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகின்றது. இல்லையா.


     பிரிட்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்.
    அதேபோல சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே சொக்லட், சூயிங்கம் போன்ற பொருட்கள் உள்ளே ஒரு இடத்தில் இருக்கும். அதே போருட்கள் நீங்கள் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு பணம்செலுத்த தயாராக கேஷியருக்கு முன்னால் நிற்கும்போதும் வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவா.


    அதிலும் ஒரு சிறிய மனோதத்துவ தந்திரம் இருக்கின்றது.

    அது என்னவென்றால், கேஷியரிடம் பணம் செலுத்த வருமுன்னர் நீங்கள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். எல்லாம் முடிந்து கேஷியருக்கு முன்னே வரும்போது அங்கே வரிசையாக ஆட்கள் பணம் செலுத்த நிற்பார்கள். நீங்களும் அந்த வரிசையில் போய் இணைந்து கொள்வீர்கள்.

    ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் இருந்து எப்போதாவது தாவி இறங்கியிருக்கிறீர்களா? அப்படி இறங்கியிருந்தால், நீங்களும் பஸ் செல்லும் திசையில் சிறிது தூரம் ஓடித்தான் நிற்க முடியும் என்பது தெரிந்திருக்கும். இங்கு நடப்பதும் கிட்டத்தட்ட அதே ரிஃப்ளெக்ஷன்தான்.

    கடந்த பல நிமிடங்களாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்கைள எடுத்து ஷாப்பிங் கார்ட்டுக்குள் போட்ட உங்கள் கைகள் கேஷியருக்கு முன்பு ஓரே இடத்தில் காத்திருக்கும்போது துறுதுறுக்கும். அப்போது நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து எட்டக்கூடிய தொலைவில் எதையாவது எடுக்கும்படி உங்கள் மனம் தூண்டும்.


    கேஷியருக்கு அருகேயுள்ள ஷெல்ஃபில் இருக்கிறது உங்களுக்கான இரண்டாவது வலைவிரிப்பு!
    ஆனால் எட்டக்கூடிய தொலைவில் இருக்கும் பொருள் விலையுயர்ந்த பொருளாக இருந்தால் நீங்கள் கைவைக்க மாட்டீர்கள். விலை அதிகமில்லாத நொறுக்குத்தீனி அருகே இருந்தால் அதிலும் ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள்.

    அதைத் தவிர நீங்கள் குழந்தைகளுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தால், அவர்களை கேஷியருக்கு முன்னாலுள்ள வரிசையில் சில நிமிடங்கள் காத்திருக்க வைத்தபடி நிற்கையில், குழந்தைகளின் கண்களில் படும்படி சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தால் என்னாகும்?

    அடுத்த தடவை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் கேஷியருக்கு முன்னால் நிற்கும்போது, அங்கே உங்களுக்கு முன்னால் நிற்பவர்களில் எத்தனைபேர் அருகிலிருக்கும் சிறு பொருட்களை வாங்குகிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். பத்தில் இரண்டு பேராவது வாங்குவார்கள்.

    இவர்களில் யாரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தின்பண்டங்கள் விற்கும் பிரிவில் இதே பொருட்கள் இருந்தும், அங்கே எடுக்காமல் தவிர்த்துவிட்டு, கேஷியர்வரை வந்தவர்கள். கடைசிக் கிளைமாக்ஸில் மாட்டிக் கொண்டார்கள்.

    சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்களில் இவை ஒரு சிறு துளிதான். வேறு சில தந்திரங்களை அடுத்துவரும் வாரங்களில் இக் கட்டுரையின் 2ம் 3ம் பாகங்களில் பார்க்கலாம். 

    வடதுருவம் போறீங்களா?

    By: Unknown On: 10:10
  • Share The Gag
  • வாழ்க்கையில் வாய்ப்பு கிடைத்தால்... ஒரு முறை அண்டார்டிகாவையும், ஆர்க்டிக் கடல் பிரதேசத்தையும் கண்டுகளித்து விட வேண்டும். அப்போதுதான் இயற்கையின் வித்தியாசமான பரிமாணத்தை நம்மால் உணர இயலும்.

     அதிலும் ஆர்க்டிக் கடல் தனியாக செல்ல இயலாத பூமி...

     நார்வே நாட்டிற்கு சென்று அங்குள்ள பெர்ஜின் பகுதியை அடைந்து அங்கிருந்து கப்பலில் 12 நாள் பயணம் செய்ய வேண்டும். பயணத்தின்போது 5 நாட்களுக்கு மொபைல்... இன்டர்நெட் என எதுவும் வேலை செய்யாது. அதனால் தொடர்பு நோசான்ஸ்!

     கம்பூட்... கைகிளவுஸ், மாத்திரை மருந்துகள்.. குளிர் புகாத அளவில் உள்ள ஆடைகள்... குளிர்ந்த பகுதியை அடையும்போது விறைத்துப் போகாமல் இருக்க 5 ஆடைகளை ஒன்றின் மீது ஒன்று அணியும் நிலையும் வரலாம். வடதுருவத்தில் எத்தனை தூரம் செல்ல அனுமதி உண்டோ அத்தனை தூரம் வரை இந்த கப்பல் அழைத்துச்
     செல்லும்!

     பிரும்மாண்ட பனிப்பாறைகளை நாம் கேள்விப்பட்டிருக்கலாம்! அதேபோன்று கடல் மட்டத்திற்காக ஈடாக மிதந்து செல்லும் ஐஸ் தகடுகள் ஆச்சரியமானவை.. காட்டிற்குச் சென்றால் மிருகங்களை எப்படி நம் கண்கள் தேடுமோ, அதேபோன்று இங்கு கடல் சிங்கம் மற்றும் பனிக் கரடிகளைத் தேடுவோம். இந்த ஐந்து நாட்களும் தூக்கம் கிடையாது. இதற்கு முதற் காரணம். இருட்டே வராது. அடுத்து எந்த நிமிடமும் நாம் ஏதாவது அதிசயத்தை காண வேண்டி வரலாம் என்ற ஆர்வமே முக்கிய காரணமாம்.

     மொத்த பயணம் 12 நாட்கள்! 40 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தை உணரும் இடங்களில் உடம்பு நடுங்கும். சில இடங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் குளிர் காற்று வீசும்... இங்கு நீள திமிங்கலத்தை காணும் வாய்ப்பு கிட்டலாம். ஸ்குவாஸ் என்ற அபூர்வ புத்திசாலிப் பறவையைக் காணலாம். நடுவில் நடைபாதைப் பயணமும் உண்டு. ரெயின்டீரில் பயணமும் உண்டு. மார்ஸ் கிரகம் இருக்கட்டும். முதலில் ஆர்க்டிக் சென்று வித்தியாசத்தை அனுபவியுங்க.

     நார்வே ஆஸ்லோ நகரில் உள்ள நேஷனல் ஜியோகிராபிக் சுற்றுலா கப்பல் மூலமும் ஆர்க்டிக் கடலுக்கு சென்று வரலாம்.

     சூரியனை அறவே மறைக்கும் மற்றும் பொதுவான கூலிங் கிளாஸ்கள் கட்டாயம் தேவை. இல்லாவிடில் வெள்ளை வெளேர் பூமி. நம் கண்களைச் சில நிமிடங்களிலேயே எரிய வைத்து விடும்...

     கேமிராவுடன் எடுத்துச் செல்லப்படும் பேட்டரி, கடும் பனியினால், வேலை செய்யாமல் போகலாம். ஆக இவற்றுடன் பேக் அப் பேட்டரியும் எடுத்துச் செல்ல வேண்டும்.
     மொத்த 12 நாட்களில் குறைந்தது 5 நாட்கள் முழுமையாகத் தொலைதொடர்பு வசதிகள் கிடையாது. ஆக தொடர்பு கொள்ள மாட்டேன் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடவும்.

     சீதோஷ்ண நிலை, எதிர்பார்த்துச் செல்வதை விட, சில நேரங்களில் மேலும் கடுமையாக மாறலாம்.. கடும் குளிர் வீசலாம். கடல் பிராணிகளினால் எதிர்பாராத தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால் இவற்றை எதிர்கொண்டு, அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை பெற உடனே புறப்படுங்க.

    நண்பர்களுக்கு உதவும் விஜய சேதுபதி!

    By: Unknown On: 10:00
  • Share The Gag
  •  Vijaya sethupathy help to friends
     
    'விஜய சேதுபதி படமா, நம்பி தியேட்டருக்கு செல்லலாம்' என்று, ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, கிடு கிடு வென வளர்ந்து விட்டார்.


     அவர். ஆனால், கைவசம் எட்டு படங்கள் வரை வைத்திருப்பதாக சொல்லும் விஜய சேதுபதி, 'இன்னும் இரண்டு, மூன்று ண்டுகளுக்கு, என் கால்ஷீட் டைரி புல்லாக உள்ளது' என்று, புதிய படங்களை ஏற்க தயங்கி வருகிறார்.


     அதேசமயம், தன் நிலையை சிலரிடம் கூறும் அவர், தனக்காக ஆண்டுக்கணக்கில் வீணாக காத்திருக்காமல், அந்த கதையை வேறு நடிகர்களை வைத்து படம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார்.


     மேலும், தன் நட்பு வட்டார நடிகர்கள் சிலரையும் கைகாட்டி விடும் விஜய சேதுபதி, தன் டங்களில் நடித்த, சில வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு சிபாரிசு செய்து, அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி வருகிறார்.

    செம்பை விருதுக்கு கத்ரி கோபால்நாத் தேர்வு!

    By: Unknown On: 09:49
  • Share The Gag
  •  Temple images

    குருவாயூரப்பன் கோவிலின், செம்பை விருதுக்கு, பிரபல, சாக்ஸபோன் இசைக்கலைஞர், கத்ரி கோபால்நாத், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானம் சார்பில், கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு, இசை மேதை, செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவாக, ஆண்டு தோறும், செம்பை விருது வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டிற்கான, செம்பை விருதுக்கு, பிரபல, சாக்ஸபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தேவஸ்தான நிர்வாக சமிதி உறுப்பினர், பரமேஸ்வரன் உட்பட, பலர் அடங்கிய, நடுவர் குழுவினர், விருதுக்குரிய கலைஞரை தேர்வு செய்துள்ளனர்.வரும், 28ம் தேதி நடக்கும், குருவாயூர் செம்பை சங்கீத விழாவில், கத்ரி கோபால்நாத்திற்கு விருது வழங்கப்படும்.

    ஷங்கர் விளக்கம் - 'ஐ' படத்துக்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன்?

    By: Unknown On: 08:48
  • Share The Gag
  • ஷங்கர் டைரக்ட் செய்து வரும் பிரமாண்ட படம் 'ஐ'. விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறார். நல்ல அழகான இந்திய நடிகைகள் தமிழ் நடிகைகள் இருக்கும்போது வெளிநாட்டு வெள்ளைக்கார பெண்ணான எமி ஜாக்சனை ஹீரோயினாக்கினார் ஷங்கர். அது ஏன் என்பதற்கு இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது: 'ஐ' என்றாலே அழகை குறிக்கும் சொல். படத்திலும் அழகிற்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அழகை பற்றித்தான் படம் பேசுகிறது. அதற்கு அழகான ஹீரோயின் தேவைப்பட்டார். நூற்றுக்கணக்கான இந்திய பெண்களை ஆடிசன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருமே அழகுதான், ஆனால் என் மனசுக்குள் இருந்த அந்த அழகு தேவதை உருவத்துக்கு யாரும் செட்டாகவில்லை.

    அப்புறம்தான் எமி சாய்சுக்கு வந்தாங்க. பிரிட்டீஷ் பொண்ணு சரியா வரமாட்டாங்கன்னுதான் தோணிச்சு. பி.சி.ஸ்ரீராம்தான் ஆடிசன் பண்ணி பார்த்துடலாமுன்னு சொன்னார். அதன்படி அவரை அழைச்சிட்டு வந்து ஆடிசன் பண்ணினோம். ஸ்கிரீன்ல தெரிஞ்சது எமி இல்லை. என் மனசுக்குள்ள இருந்த கேரக்டர். அவரையே நடிக்க வச்சோம்.

    நடிப்பிலும் நான் எதிர்பார்த்ததை விட ஸ்கோர் பண்ணினாங்க. வசனத்தை தமிங்கிலீசில் எழுதிக் கொடுத்துடுவோம். ராத்திர பூரா உட்கார்ந்து மனப்பாடம் பண்ணிட்டு மறுநாள் காலையில எக்ஸ்பிரசனோடு பேசி அசத்திடுவாங்க. படம் பார்க்கும்போது என் சாய்ஸ் சரிதான்னு உங்களுக்கும் தெரியும் என்கிறார் ஷங்கர்.

    விஸ்வரூபம்-2 வாய்ப்பு வந்தது எப்படி? இசை அமைப்பாளர் ஜிப்ரான் விளக்கம்!

    By: Unknown On: 08:28
  • Share The Gag
  • கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வரூபம்-2 இதற்கு பின்னணி இசை அமைத்து வருகிறவர் ஜிப்ரான்.

    வாகை சூடவா குட்டிப்புலி படங்களுக்கு இசை அமைத்தவர் அடுத்து ஒரே ஜம்ப்பில் கமல் படத்துக்கு வந்துவிட்டார். இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி ஜிப்ரான் கூறியிருப்பதாவது:


     "பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே இசை ஆர்வம். பத்தாவதோடு படிப்பை -முடிச்சிட்டு கீ போர்டில் 8வது ஸ்டேஜ் வரைக்கும் படிச்சேன். விளம்பர படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருந்தப்போ சற்குணம் நட்பு கிடைச்சுது.

    அதன் மூலமா வாகைசூடவா கிடைச்சுது. சற்குணம் சிபாரிசுல குட்டிப்புலி கிடைச்சுது. என்னோட வாகைசூடவா பேக்ரவுண்ட் மியூசிக் கமல்சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்ததாம். வைரமுத்து சார்கிட்ட சொல்லியிருக்காரு. திடீர்னு ஒரு நாள் கமல்சார் ஆபீசிலிருந்து போன் பண்ணி, சார் உங்களை மும்பை வரச்சொன்னாருன்னு சொன்னாங்க. என்னால அந்த இன்ப அதிர்சியை தாங்க முடியல.

    அடிச்சுபிடிச்சு மும்பைக்கு போனா கமல்சார் ரொம்ப கூலா "வாங்க ஜிப்ரான் ஒர்க்க சார்ட் பண்ணிடலாமா?"ன்னு கேட்டார். அவரோடு உட்கார்ந்து வேலைய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல அவரோட ஒர்க் பண்றது கஷ்டமா இருந்திச்சு. இசையோட அத்தனை ஏரியாவையும் தெரிஞ்சு வச்சிருக்காரு. அவரே மியூசிக் பண்ணிடலாம்.


    நேரம் இல்லாமத்தான் என்கிட்ட கொடுத்திருக்கார்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ 75 சதவிகித வேலையை முடிச்சிட்டேன். விஸ்வரூபம்-2 என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போவுதுன்னு எனக்கே தெரியல" என்கிறார் ஜிப்ரான்.

    டிகிரி முடித்தவர்களுக்கு கத்தோலிக் சிரியன் வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு!

    By: Unknown On: 07:28
  • Share The Gag
  • இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை வங்கிகளில் கத்தோலிக் சிரியன் வங்கி முக்கியமான ஒன்று. இது சுதேசி இயக்க காலத்திலேயே கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கிறது.இந்த வங்கியில் புரொபேஷனரி துணை மேலாளர்கள் பதவியில் உள்ள 300 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

                                   nov 4 - vazhiatti bank
     
    வயது :

    கத்தோலிக் சிரியன் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


    தகுதிகள் :

     குறைந்த பட்சம் பட்டப் படிப்பு தேவை. அறிவியல் மற்றும் பொறியியல் புலத்தை சார்ந்தவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடனும், இதர பிரிவினர் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


    விண்ணப்பிக்கும் முறை :

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட இதர 6 மையங்களில் நடத்தப்படும்.முழுமையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் பயோ-டேடா படிவத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


    விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.11.2013

    முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி 


    ‘மனித-கணினி’ - சகுந்தலா தேவி!

    By: Unknown On: 00:33
  • Share The Gag
  • Shakuntala Devi 

    சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

    பிறப்பு: நவம்பர் 04, 1939

    இடம்: பெங்களூர், கர்நாடகா

    இறப்பு: ஏப்ரல் 21, 2013

    பணி: கணிதமேதை, ஜோதிடர் 

    நாட்டுரிமை: இந்தியா

    பாலினம்: பெண்

    பிறப்பு: 

    இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

    ஆரம்ப வாழ்க்கை:

    சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

    சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:

    சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

    சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:

    தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

    ‘புக் நம்பர்ஸ்’,

    ‘பெர்ஃபெக்ட் மர்டர்’,


    ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,


    ‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,


    ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’


    போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

    இறப்பு

    சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

    ‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.