Tuesday 3 December 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !

By: Unknown On: 23:55
  • Share The Gag


  • 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!


    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு  ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.


    2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!


    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


    3. புகை பிடித்தல்...!


    மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வி..............




    பொன்மொழிகள்!

    By: Unknown On: 23:32
  • Share The Gag

  • * துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான். 


    —தாமஸ். 



     * தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி


    . —லெனின். 



     * பிறருடைய அன்புக்

                                            பொன்மொழிகள்! Click

    குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 23:14
  • Share The Gag
  • ஒரு ஊரில் எலித்தொல்லை.

    அதைப் பார்த்த ராஜா,'

     'ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.

    மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு

     அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்............




    ஆரோக்கியமாக வாழ...!

    By: Unknown On: 22:58
  • Share The Gag
  • தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்;
    பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

    சிறிது நேரம் வாய்க்குள்
     தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.


     * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில்
     ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள்.
    அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள்
    போன்றவைகளை கண்டறியலாம்.

     * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வ

    வெங்கட்பிரபுவுடன் இணையும் சூர்யா!

    By: Unknown On: 22:45
  • Share The Gag


  • 'மங்காத்தா' படம் முடிந்ததும் சூர்யாவிடம் கதை சொன்னார் வெங்கட்பிரபு.


    ஆனால், அப்போது சூர்யாவால் வெங்கட்பிரபு சொன்ன கதையில் நடிக்க முடியவில்லை.


    'மாற்றான்', 'சிங்கம் 2', படங்...................





    அறுசுவை உணவு...! - சமையல்!

    By: Unknown On: 22:30
  • Share The Gag


  • காரம்:

    உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.


    கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


    கசப்பு:

    உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டு.....


    அறுசுவை உணவு...! Click


    "கடமையை செய் பலனை எதிர்பாராதே!"

    By: Unknown On: 22:08
  • Share The Gag
  • கடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும்.


    நீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக,.....



    பரங்கிக்காய் அடை - சமையல்!

    By: Unknown On: 21:45
  • Share The Gag
  •  

     தேவையானவை:

    புழுங்கலரிசி - 1 கப்,

    உளுத்தம்பருப்பு - அரை கப்,

    துவரம்பருப்பு - முக்கால் கப்,

    பாசிப்பருப்பு - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 10,

     சோம்பு - அரை டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1 சிட்டிகை,

    சின்ன வெங்காயம் - 6,

    உப்பு - தேவைக்கேற்ப,

    மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு,

    பிஞ்சு பரங்கிக்காய் - 1 துண்டு,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும்.

    மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து சோம்பு, மிளகாய், உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும்.

    மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு, சற்று பெருபெருவெனவும், பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும்.

    பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும்.

    துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையைக் கலக்கவும்.

    பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து, இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு, பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும்.

     (ஈரப்பதம் இருக்கும்போதே பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்).

    காதலை எதிர்ப்பதா?

    By: Unknown On: 21:32
  • Share The Gag
  • மௌனத்தின் மொழி பேசிய மனித இனத்தின் மூதாதையர்கள் முதன் முதலில் பேசிய மொழிதான் காதல். எத்தனை காதலர்களை கடந்து வந்திருந்தாலும், எத்தனை தோல்வி, வலி மிகு காவியங்களை உலகிற்கு தந்திருந்தாலும், இன்றும் ஈர்க்கின்றது  காதல்  என்ற சொல்.



    கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியின் வழித்தோன்றல்கள் என்று பீற்றிக் கொள்கிறோம் நாம். ஆனால், தமிழ் பேசும் முன்பே மனிதன் பேசிய மொழியை சாதி, மதம், பணம் போன்றவைகளால் தீண்டத்தகாதவர்களாகி நிற்கிறோம். வள்ளுவன் புகட்டிய காமத்துப்பாலை குடித்த மூதாதையர்களின் இளைய தலைமுறைகளின் காதலுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து கொண்டிருக்கிறது.........நம் தமிழ்ச் சமூகம்.



    காதல் என்றதும் இங்கே ஆண்-பெண் காதல் என்று பொருள் கொள்ளவும். அது இயல்பானது. வயது-உடல் முதிர்ச்சி அடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக தோன்றும் ஈர்ப்பு, பின்பு வரும் மதிப்பு இவை கலந்ததே காதல் என்று கொள்ளலாம். இதில் காதல் வேறு, காமம் வேறு என்ற பட்டிமன்றம் வேறு நடக்கிறது.

    இக்காலத்து இளசுகளுக்கு காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசமே தெரியலை, உண்மையான காதலெல்லாம் தற்காலத்தில் இல்லை, தமிழ் பண்பாடு சீரழிஞ்சு போகுது போன்ற வசனங்கள் நாம் இன்று பல இடங்களில் சந்திப்பவை. ஆனால், இதை பேசும் பழைய ஓட்டை உடசல்களின் பண்பாடு எதுவாக இருந்தது?

    பெண்ணை கோவிலிற்கு பொட்டு கட்டி விடுவது, விதவை திருமணத்தை,மறுமணத்தை மறுத்தது, பெண்ணை உடன்கட்டை ஏறச் சொன்னது போன்ற ஆணாதிக்க லூசுத்தனங்களை செய்ததுதான் இவர்கள் பண்பாடு. இன்றைய தலைமுறைக்கு பண்பாடு சொல்லித்தரும் அளவிற்கு அன்றைய தலைமுறையினருக்கு தகுதியிருக்கிறதா? என்ற கேள்வி இன்றைய தலைமுறையின் சார்பாக வருகிறது.

    ஆனால், இந்த பெரிசுகளின் பொது உளவியலில் எழும் கேள்வி, அல்லது இன்றைய தலைமுறையினர் நம்பி வரும் காதலில் உள்ள புனிதத்தன்மை நம்பிக்கைகள் பற்றி நாம் உரையாடாமல் விட்டோமானால், சார்புத்தன்மையுடதையாக ஆகிவிடும்.



    அந்த புனித கற்பிதத்தில் காதலில் சொல்லப்படும் முக்கியமான வசனம் காதல் வேறு? காமம் வேறு என்பதுதான்

    உண்மையிலே காதல் வேறு? காமம் வேறா?

    இது குறித்தான விவாதத்திற்குள் நாம் உட்புகும் முன் தந்தை பெரியார் காதலை பற்றி கூறியதை கொஞ்சம் கவனிப்பது உகந்ததாக இருக்கும்.

    பெரியார் காதலை பற்றி என்ன சொல்கிறார் கேளுங்கள்....



     உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்


    காதல் என்பது “ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.”

    “இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.”

    “அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.”

    பெரியாருடைய கருத்து மறுத்தது எதையென்றால் இயற்கையான உணர்வுக்கு சமூகத்தின் பிற்போக்குத்தனத்திடம் அனுமதி கோரி நிற்பதைத்தான்.

    காதலை சொல்வது என்பது ஆண்பெண் சேர்க்கையில், இணைந்து வாழ்வதற்கான ஒரு நாகரீகமான அணுகுமுறைதானேயன்றி வேறில்லை....

    நம் சமூகத்தில் காமம் என்ற இயற்கையான உணர்வை பற்றிய சரியான விழிப்புணர்வு, உரையாடல்கள் இல்லாமைதான் இன்று காதலா? காமமா?என்ற குழப்பத்தில் கொண்டு போய்விடுகிறது. தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையையும், பக்குவத்தையும் இச்சமூகத்தின் இளைய தலைமுறைக்கு வழங்கிவிட்டால், காதலாக இருந்தாலென்ன, காமமாக இருந்தாலென்ன? யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்று நாம் இந்த கட்டுரையை முடித்துவிடலாமென்று கருதினால், பிரச்சினைகள் இருக்கிறது என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    அது சாதியின், மதத்தின், வர்க்கத்தின் உருவில் வந்து கத்துகிறது, சில நேரங்களின் பிரியமானவர்களின் கழுத்தையும் அறுக்கிறது. தாம் பெற்ற குழந்தைகள் என்பதை தாண்டி, சமூகத்தில் தான் நம்பி வந்த போலியான வரையரைகளை தன் பிள்ளைகளும் கடைபிடிக்க வேண்டும் என்று பிடிவாதமும் செய்கிறது.

    தமது பிள்ளைகள் போலியான இந்த சமூக மதிப்பை காப்பாற்றுவதற்காகவே தன்னால் ஒரு பெண்ணோடு இணைந்து பெற்றெடுக்கப்படுகிறார்கள், என்று சொல்லாமல் சொல்கிறது இந்த பெற்றோர்களின் நடவடிக்கைகள். இதை எழுத்துவடிவில் படிக்கும்போது முகம் சுழித்துவிட்டு, வீட்டிற்கு சென்று நீங்கள் தாங்கள் நம்பும் போலியான மதிப்பீடுகளையே தூக்கி சுமந்து கொண்டு ஓடினீர்களென்றால், அறிவு வளர்ச்சி உங்களையும் சேர்த்தே குப்புற தள்ளிவிட்டு முதுகிலேறி பயணிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இளைஞர்களே!!! உங்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், வாழ்க்கைப்பாதையில் சாதிக்க காதலை ஒரு தடையாக வைத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் உணர்வு நேர்மையானதாக இருந்தால்,சரியான துணையை தேர்ந்தெடுப்பதாக உறுதியாக நம்புவீர்களானால், பரஸ்பர புரிதல் சரியாக இருந்தால் , சமூகத்தின் பிற்போக்குத்தனங்களின் பிரநிதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி பணியாதீர்கள். அந்த பிரநிதிகள் உங்கள் பெற்றோராகவும் இருக்கலாம்....

    பி.எஸ்.எப்., சின்னத்தில் மாற்றம் : தமிழர் சுட்டி காட்டியதால் நடவடிக்கை !

    By: Unknown On: 21:21
  • Share The Gag
  •  

    "தேசிய கொடியில் காணப்படும் அசோக சின்னத்தின் கீழ், "வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டால் மட்டுமே, தேசிய சின்னம் முழுமை பெறும்' என, அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை பயன்படுத்தாமல், 61 ஆண்டுகளாக, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) சின்னம் பயன்பட்டு வந்ததை, தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதி சுட்டிக் காட்டியதால், விரைவில், திருத்தி வெளியிட, எல்லை பாதுகாப்பு படை ஒப்புக் கொண்டுள்ளது.


    நாட்டின் தேசிய சின்னம், 1947ல், வடிவமைக்கப்பட்டது. அதே போல், 1952ல், எல்லை பாதுகாப்பு படையின் சின்னம் வடிவமைக்கப்பட்டது. மூன்று சிங்கங்கள் கொண்ட, அசோக சின்னத்தின் கீழ், "பி.எஸ்.எப்.,' என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும். அதை சுற்றி இரண்டு சிறகுகளும், அதற்கு கீழே, "டூட்டி அன் டு டெத்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.அசோக சின்னத்தை பயன்படுத்தும் போது, சிங்கங்களுக்கு கீழே, "சத்ய மேவ ஜெயதே' அதாவது, "வாய்மையே வெல்லும்' என, எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் மட்டுமே, அச்சின்னம் முழுமை பெறும் என, அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், 61 ஆண்டுகளாக, "சத்ய மேவ ஜெயதே' என்ற வார்த்தை, எழுதப்படாமலேயே, பயன்படுத்தப்பட்டு வந்தது.


    காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் மருவத்தூரைச் சேர்ந்த காந்தியவாதி, கண்ணன் கோவிந்த ராஜு என்பவர், எல்லை பாதுகாப்பு படைக்கு, இத்தகவலை தெரிவித்து, சின்னத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் பற்றி, இரண்டு மாதங்களுக்கு முன் எழுதினார்.இதைத் தொடர்ந்து, சமீபத்தில், அவருக்கு பதில் எழுதியுள்ள, எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம், தொப்பி, அதிகாரிகளின் பெல்ட், கொடி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சின்னத்தில், விரைவில் மாற்றம் செய்யும் என, பதில் அளித்துள்ளது.அது மட்டுமின்றி, எல்லை பாதுகாப்பு படையின், அனைத்து பிரிவுக்கும், மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து கடிதம் எழுதியுள்ளதோடு, விரைவில், மாற்றத்தை செய்து முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது

    நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    By: Unknown On: 21:07
  • Share The Gag
  • தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் தந்தையைப் பார்த்தே அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்தார்கள். குடித்ததில் செலவானது போக மீதமிருந்தது தான் குடும்பச்செலவுக்கு. அது போதவில்லை என்பதால் தாயும் வேலைக்குப் போய் தன்னால் முடிந்ததை சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து குடும்பத்தை சமாளித்தாள். சில சமயம் அவள் சம்பாதித்ததையும் அவள் கணவர் பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவதுண்டு. வீட்டில் தினமும் சண்டை, தகராறு, அடி, உதை, அழுகை....


    அந்த நிம்மதியற்ற சூழ்நிலையில் வளர்ந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் தந்தையைப் போலவே குடிகாரனாக மாறி விட்டான். இப்படி ஆனது ஏன் என்று அவனைக் கேட்ட போது அவன் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் வருத்தத்துடன் சொன்னான். "தினமும் நான் பார்த்து வளர்ந்த அந்த சூழ்நிலை என்னையும் இப்படி ஆக்கி விட்டது"


    இன்னொரு சிறுவன் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதித்து பணம் சேர்த்து அதை வைத்து தொழில் ஆரம்பித்து பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபரானான். அவன் வெற்றிக்குக் காரணம் கேட்ட போது அவனும் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் சொன்னான். "எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."


    ஒரே விதமான அனுபவத்திலிருந்து இருவரும் இருவேறு படிப்பினைகள் பெற்றதைப் பாருங்கள். எதுவும் நாம் பார்க்கும் விதத்திற்கேற்ப மாறுகிறது. அதைப் பொறுத்தே அதனால் பலனடைகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.


    ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகான கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.


    "Two men looked out from prison bars
    One saw mud, the other saw the stars"


    சிறைக்கம்பிகளின் வழியே வெளியே பார்த்தனர் இரு கைதிகள். ஒருவன் சேற்றைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான். இருந்த இடம் ஒன்று தான். ஆனால் பார்வைகள் போன இடங்கள் வேறு. எதைப் பார்க்கிறோம் என்பதை இருக்கும் இடமும், சூழ்நிலையும் தீர்மானிப்பதில்லை. நாமே தீர்மானிக்கிறோம்.


    இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாசிகளிடம் சிக்கி பலவித சித்திரவதைகளை அனுபவித்து உயிர் பிழைத்த எத்தனையோ பேர் போர் முடிவுக்கு வந்த பின்னும் அந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் மன நோயாளிகளாக மாறி விட்டனர். சகஜ நிலைக்கு வர பலருக்கு கவுன்சலிங், மருந்துகள் தேவைப்பட்டனர். ஆனால் அதே சித்திரவதைகளை அனுபவித்த ஒரு சிலருக்கு அவை ஒரு பாடமாக அமைந்தன. சுதந்திர வாழ்க்கையே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதையும் அதில் தேவையில்லாமல் கவலைகளில் மூழ்கி வாழ்வை அனுபவிக்க மறப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தார்கள். அந்த நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பின் எந்த நாளும் நல்ல நாளே என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதி பெரும் பணம் சம்பாதித்தார்கள். ஒரே விதமான அனுபவங்கள் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.


    எனவே நான் இப்படியாக மாற மற்றவர்கள் தான் காரணம், சூழ்நிலைகள் தான் காரணம் என்பது மிகப் பெரிய பொய். முன்பு சொன்ன குடிகாரத் தந்தையின் இரு மகன்கள் எதிர்மாறான இருவேறு நிலைகளை அடைய வைத்தது அவரவர் பண்புகளே. இரண்டாம் உலகப் போர்க்கைதிகளில் பலர் மன நோயாளிகளாக மாற, சிலர் பக்குவப்பட்டு மகிழ்ச்சியான மனிதர்களாக மாறியதும், சிலர் அதைப் பற்றி எழுதிப் பணம் பார்த்ததும் அந்த அனுபவங்களை அவர்கள் எடுத்துக் கொண்ட விதத்தினாலேயே. அவர்களை மட்டுமல்ல எவரையும் எதுவாகவும் ஆக்குவது அவரவர் பார்வைகளே.


    நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    சோலார் பேனல் மான்யத்திற்கு ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம்!

    By: Unknown On: 20:53
  • Share The Gag
  •  

     வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதன்படி ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம். - தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது.


    இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.


    இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.


    தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும்.


    இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.




    ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.


    ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது.


    பேட்டரியின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பிறகு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டியதுவரும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.


    ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும்


    அதாவது ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

    ஆண்கள் பெண்களை வெறுக்கும் சில காரணிகள்!

    By: Unknown On: 20:41
  • Share The Gag
  • சில பெ‌ண்களை பெ‌ண்களு‌க்கே‌ப் ‌பிடி‌க்காது.. ஆ‌ண்களு‌க்கு‌ப் ‌பிடி‌க்குமா? 

     எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்... ஆனா‌ல் அத‌ற்கு ‌பிடி‌‌க்கு‌ம் எ‌ன்பதுதா‌ன் ப‌தி‌ல். ஒரு பெ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம், ஒரு ஆ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம் மாறுபடு‌கிறது.


    சில‌ர் பா‌ர்‌த்து‌ப் ‌பிடி‌த்தது‌ம் காத‌லி‌க்க‌த் துவ‌‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்‌க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌பிறகுதா‌ன் அ‌ந்த‌ப் பெ‌ண்ணை‌ப் ப‌ற்‌றி பு‌ரி‌ந்து கொ‌ண்டு மன‌ம் பேத‌லி‌த்து‌ப் போவா‌ர்க‌ள்.


    முத‌ல் வகை...


    எ‌ப்போது‌ம் எதையாவது ஒ‌ன்றை சொ‌ல்‌லி ந‌ச்ச‌ரி‌ப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.


    ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம், காதல‌ர் ‌விரு‌ம்பு‌ம் நப‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம் அ‌திக‌க் குறை கூறுவா‌ர். எதை‌ச் செ‌ய்தாலு‌ம் இவரது ‌விரு‌ப்ப‌த்தை ‌பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாதவராகவு‌ம் இரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ந்த பெ‌ண்ணை எ‌ந்த‌ ஆணு‌ம் வெறு‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடுவா‌ர்‌.


    ச‌ந்தேக‌ப் ‌பிரா‌ணிக‌ள்



    ம‌ற்ற பெ‌ண்களை‌ப் பா‌ர்‌த்தாலோ, பே‌சினாலோ அத‌ற்கெ‌ல்லா‌ம் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டு ச‌ண்டை போடுபவ‌ளை முத‌லி‌ல் ர‌சி‌த்தாலு‌ம், போக‌ப் போக ஆ‌ண் வெறு‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடுவா‌ர்‌. இ‌துபோ‌ன்ற பெ‌ண்ணுடனான காதலை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ஆ‌ண், ‌விரை‌வி‌ல் அவனது ந‌ல்ல பெ‌ண் தோ‌‌ழிகளை இழ‌க்க நே‌ரிடு‌ம். தோ‌‌ழிக‌ள் ம‌ட்டும‌ல்ல.. ஆ‌ண் ந‌ண்‌ப‌ர்களையு‌ம் இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை வரலா‌ம். இதுபோ‌ன்ற‌ப் பெ‌ண்ணை காத‌லி‌க்க‌த் துவ‌ங்கு‌ம் போது, அவளது ச‌ண்டைகளை ர‌சி‌க்கு‌ம் ஆ‌ண், போக‌ப் போக தனது சுத‌ந்‌திர‌த்தை இழ‌ந்து கொ‌‌ண்டிரு‌ப்பதை உண‌ருவா‌ர்க‌ள். அ‌ப்போது காத‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம்.


    ஓ‌ட்ட வா‌ய்


    ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.


    ஆனா‌ல், எ‌ப்போது‌ம் வளவளவெ‌ன்று பே‌சி‌க் கொ‌ண்டே இரு‌க்கு‌ம் பெ‌ண்ணையு‌ம் ஆ‌ண்க‌ள் அ‌திக‌ம் ‌விரு‌ம்புவ‌தி‌ல்லையா‌ம். அவ‌ளிட‌ம் எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ப் போ‌ய்‌விடு‌ம் எ‌ன்ற கரு‌த்து‌ம், ஓ‌ட்ட வா‌ய் எ‌ன்ற ப‌ட்ட‌ப் பெயரு‌ம் வை‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.


    எனவே, மே‌ற்க‌ண்ட வ‌ற்‌றி‌ல் ‌நீ‌ங்க‌ள் வ‌ந்தா‌ல், உடனடியாக உ‌ங்‌களது பழ‌க்க‌த்தை ச‌ற்று மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌‌ங்க‌ள். காத‌ல் இ‌னி‌க்கு‌ம்.
     

    அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

    By: Unknown On: 20:27
  • Share The Gag
  •  

    1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

    · தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

    · எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

    · கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

    · புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

    · பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

    · நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

    · தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

    · ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

    · அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

    · காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

    · சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

    · உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

    · எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

    · எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

    · அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

    · எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

    · எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

    · வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

    · எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

    · உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

    · நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

    · இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

    · இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???

    ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு! தெரிந்து கொள்வோம்!.

    By: Unknown On: 15:40
  • Share The Gag

  • 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்


    2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி


    3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


    4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்


    5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்


    6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)


    7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)


    8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்


    9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை


    10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை


    11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)


    12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்


    13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


    14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)


    15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)


    16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]


    17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )


    18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)


    19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)


    20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)


    21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்


    22. கோயில் நகரம் – மதுரை


    23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


    24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்


    25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

    வேகமான சிந்தனை - குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 10:59
  • Share The Gag

  • ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.


    அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.


    புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே


    அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.


    இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.


    குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.


    குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...


    பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...


    - வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் '

    கையால் மலம் அள்ளுவது சரியா..?

    By: Unknown On: 10:46
  • Share The Gag

  • இது ஒரு "மனிதத் தன்மையற்ற செயல்" என்று ஐ.நா. சபை கூட அறிவித்துள்ளது. இந்திய அரசாலும் இப்படிப்பட்ட உலர் கழிவறைகளை (கையால் மலம் அல்லும் கழிவறை) 1993ல் தடை செய்யப்பட்டது. ஆனால் நடந்தது என்ன..?

    இந்தியாவில் இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் 53,000 கழிவறைகள் இருக்கிறது.

    இதில் இன்னொரு கவலைப்பட வேண்டிய விஷயம் என்றால், இதை வைத்தே நம் நாட்டில் இந்த சாதியைச் சேர்ந்தவன் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற கொடுமை, இன்றைய தினங்களில் கூட எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்.

    என்னவென்றால், ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று கூறுகிறது : கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள்.

    இப்படிப்பட்ட 7 லட்சம் உலர் கழிவறைகளில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் தெரியுமா..? இப்படிப்பட்ட மனித தன்மையற்ற தொழிலில் யார் வேலை செய்வார்.? என்று எண்ணிவிட வேண்டாம்.

    இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.

    கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், 7 லட்சம் கழிவறைகளில் 1.18 லட்சம் வேலை செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு தொழிலாளியும் தலா 5 முதல் 8 கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தானே உண்மை.

    இப்படிப்பட்ட தொழிலார்களுள் பலர் நோய் தாக்கியோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து விடுகிறார்கள்.

    அப்படி மலம் அள்ளி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா.? என்று அவர்கள் இருந்துவிட முடியாது.

    ஏனென்றால் அவர்களைப், பற்றி இருப்பது வறுமை என்னும் கொடிய நோய். நம் நாட்டை முதலாளி வர்க்கத்திற்கு தாரை வார்த்ததின் விளைவு, வறுமை அவர்களை துடிக்க துடிக்க கொன்றுவிடுகிறது.

    இதைப் பற்றி எந்த ஊடகங்களோ பெரிதாக இவர்கள் படும் கஷ்டங்களை வெளியிடவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

    காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்!

    By: Unknown On: 09:39
  • Share The Gag
  • காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம்.


    எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.


    இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:-


    வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், காவல்துறையினரிடம் அதை காண்பிக்க முடியும்.


    மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும்.


    காவல்துறையினருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

    யார் புத்திசாலி! ! ! !

    By: Unknown On: 09:25
  • Share The Gag

  • ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.

    அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

    4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது .

    எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.

    உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக்கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.
    இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.

    இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.

    எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...

    பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் தளத்தின் புதிய தொழில்நுட்பம்!

    By: Unknown On: 09:03
  • Share The Gag
  •  


    ஒன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவரும்


    பிரபலமான  நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஆனது தற்போது புதிய



    யுக்தி ஒன்றினை கையாள  முற்பட்டுள்ளது.


    இதன்படி கொள்வனவு செய்யப்படும் பொருட்களை குறித்த
     

    வாடிக்கையாளருக்கு டெலிவரி  செய்வதற்காக ஒக்டோ கொப்பர் (Octocopter)


    எனும் சாதனத்தினை பயன்படுத்தவுள்ளது.



    இச்சாதனமானது 8 விசிறிகளைக் கொண்டுள்ளதுடன்


     60 நிமிடங்களிற்கு தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.


    இதனால் இந்த பறப்பு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அமேசான்


    தனது புதிய  சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Note 4

    By: Unknown On: 08:20
  • Share The Gag
  •  


    முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங்


     ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.


    20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்படுகின்றது.


    இதேவேளை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 3


    ஆனது 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும்,


    எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Samsung Galaxy S5


    ஆனது 16 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ளன.

    முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

    By: Unknown On: 07:59
  • Share The Gag
  •  

    'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம்.


    கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது.


    ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. இம்முறை, சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    வெங்கட்பிரபு கூறிய கதையை கேட்ட சூர்யா, நல்லாயிருக்கு இப்படத்தினை எனது டி2 நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.


    'பிரியாணி' படத்தினைப் போலவே இப்படமும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை தானாம். லிங்குசாமி படத்தினை முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறாராம் சூர்யா.

    கேழ்வரகு தோசை - சமையல்!

    By: Unknown On: 07:42
  • Share The Gag
  •  

     தேவையானவை:


     கேழ்வரகு மாவு - 1 கப்,

    ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    சின்ன வெங்காயம் - 15,

    பச்சை மிளகாய் - 2,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - தேவையான அளவு.


    செய்முறை:


    கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).


     வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.


    மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்


    . இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

    அமைதியான மனம் பெற இதோ சில வழி முறைகள் ...

    By: Unknown On: 00:54
  • Share The Gag
  • கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்

    பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.


    மறக்கவும்... மன்னிக்கவும்...

    இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.


    பாராட்டுக்காக ஏங்காதீர்கள்

    உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.


    பொறாமைப்படாதீர்கள்

    நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.


    சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்

    தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைபீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதர்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.

    தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

    இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.


    செய்ய முடிவதையே செய்யுங்கள்

    இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.


    தினமும் தியானிங்கள்

    தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.


    மனதை இருட்டறையாக்கதீர்கள்

    நமது மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் அதில் கெட்ட எண்ணங்கள் புகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நல்ல விஷயங்களில் நமது மனதை ஈடுப்படுத்த வேண்டும். நமக்கேற்ற நமது விருப்பத்திற்கேற்ற பொழுதுபோக்கும் காரியங்களில் நேரத்தை செலவிடலாம். நமக்கு பணம் முக்கியமா அல்லது மன அமைதி முக்கியமா என்று முடிவு எடுக்க வேண்டும். சமுக சேவை, இறை சேவை போன்றவை நமக்கு செல்வத்தை கொடுக்காது. ஆனால் மன நிறைவையும் திருப்தியும் கொடுக்கும். உடல்ரீதியான் ஓய்வெடுக்கும் போதும் ஆரோக்கியமான விஷயங்களை படித்தல், கடவுள் நாமத்தை உச்சரித்தல் போன்றவற்றை செய்யலாம்.

    காரியத்தை தள்ளிப்போட்டு பின்பு வருந்தாதீர்கள்


    இதை செய்யலாமா செய்யக்கூடாதா என்று தேவை இல்லாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவேண்டும். வாழ்க்கையில் யாராலும் எதிர்காலத்தை சரியாக கணித்து முழுமையான திட்டத்துடன் வாழ முடியாது. நம்மிடம் உள்ள நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டமிட வேண்டும். நாம் நமது தப்புகளிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம். அடுத்தமுறை அது போன்ற காரியங்களில் வெற்றி கொள்ளலாம். இந்த வேலையை நாம் செய்யவில்லை என்றோ இந்த வேலையை நாம் சரியாக செய்யவில்லை என்றோ வருத்தப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே ஒழிய வருத்தப்பட கூடாது.