Wednesday 18 December 2013

மரங்களை வெட்டுங்கள்......??

By: Unknown On: 21:37
  • Share The Gag


  • உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


     மண்ணின் வில்லன்

     அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

     நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


    ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


    இதன் கொடூரமான குணங்கள்


    இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


    இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

    தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
       
       
    உடம்பு முழுதும் விஷம்



    இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


    ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


    காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.


    அறியாமை


    நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


    கேரளாவின் விழிப்புணர்வு


    நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


    ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


    நல்ல மரம் ஆரோக்கியம்


    வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .


    சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


    இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....


    இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!  நம் மண்ணின் மாண்பை காப்போம்..

    லெனோவா வைப் எக்ஸ் ரூ.25.999 விலையில் அறிமுகம்!

    By: Unknown On: 20:46
  • Share The Gag



  • லெனோவா தனது முதல் வைப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.25.999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா வைப் எக்ஸ் இந்த வாரத்திற்குப் பின் கடைகளில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனில் பிரீமியம் பாலிகார்பனேட் உடற்பாகங்கள் மற்றும் ஒரு மேம்பட்ட மோல்ட், லேசர் என்க்ரேவ்ட் (engraved) 3D டேக்டில் ஃபினிஸ் (tactile finish) கொண்டுள்ளது.

    சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இது 121 கிராம் எடையுடையது. லெனோவா வைப் எக்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. வைப் எக்ஸ் முனைகளில் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3, 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 440ppi பிக்சல் அடர்த்தி உள்ளது.

    போனில் 1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, ரேம் 2GB உள்ளது மற்றும் 16GB உள்ளடிக்கிய சேமிப்பு வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் இயங்குகின்றது. லெனோவா வைப் எக்ஸ் எல்இடி ப்ளாஷ் மற்றும் பேக் இலுமினேடட்(back illuminated) சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

    வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. வைப் எக்ஸ் 2,000 mAh பேட்டரி ஆதரவு உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.  இது 144x74x6.9mm மெஷர்ஸ் உள்ளது.

    லெனோவா வைப் எக்ஸ் முக்கிய குறிப்புகள்:

    1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே,
    440ppi பிக்சல் அடர்த்தி,
    1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர்,
    ரேம் 2GB,
    16GB உள்ளடிக்கிய சேமிப்பு,
     13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா,
    வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
    Wi-Fi,
    ப்ளூடூத்,
    AGPS,
    3G,
    121 கிராம் எடை,
    ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்,
     2,000 mAh பேட்டரி.

    நோக்கியா ஆஷா 502 இந்தியாவில் ரூ.5,739 விலையில் அறிமுகம்!

    By: Unknown On: 20:36
  • Share The Gag



  • நோக்கியா நிறுவனம் தனது சமீபத்திய ஃபோனான ஆஷா 502 இந்திய சந்தையில் ரூ.5,739 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா ஆஷா 502 இப்பொழுது நோக்கியாவின் ஆன்லைன் கடைகளில் கடைக்கும். நோக்கியா ஆஷா 502, நோக்கியா ஆஷா ப்ளாட்ஃபார்ம் 1.1 அடிப்படையாக கொண்டுள்ளது மற்றும் ஃபெர்ம்வேர் over-the-air (FOTA) மேம்படுத்தல் ஆதரிக்கின்றது.


    இது 240x320 (QVGA) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. ஆஷா 502 மட்டுமே நோக்கியா ஈசி ஸ்வாப் தொழில்நுட்பத்துடன் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) வேரியன்ட் வருகின்றது அத்துடன் இரட்டை காத்திருப்பு ஆதரிக்கின்றது. குறிப்பாக, வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக ஆஷா 502 ஃபோனில் மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.


    இது 1010mAh பேட்டரியுடன் வருகிறது. இது 99.6x 59.5x11.1mm மெஷர்ஸ் மற்றும் 100 கிராம் எடையுடையது. நோக்கியா ஆஷா 502 எல்இடி ஃபிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. இது microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு ஆதரவு கொண்டு வருகிறது.


    நோக்கியா ஆஷா 502 முக்கிய குறிப்புகள்:


    240x320 (QVGA) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே,

    இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),

    99.6x 59.5x11.1mm மெஷர்ஸ்,

    100 கிராம் எடை,

    எல்இடி ஃபிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,

    microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு,

    1010mAh பேட்டரி.

    கூகுளில் 2013-ல் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம்

    By: Unknown On: 20:11
  • Share The Gag



  • 2013ம் ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் திரைக் கலைஞர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.


    2013 கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலை அறிவித்திருக்கிறது. http://www.google.com/trends/topcharts இணையத்தில் யாரெல்லாம் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளலாம்.


    TOP TRENDING பட்டியலில் முதல் இடத்தினை சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் பிடித்திருக்கிறது. TOP TRENDING என்பது கூகுள் இணையத்தில் அதிகமாக பேசி, விவாதிக்கப்பட்டது என்று அர்த்தமாகும். சென்னை எக்ஸ்பிரஸ், ஐபில் 2013, Aashiqui 2, க்ரிஷ் 3, பிக் பாஸ் 7, பால் வால்க்கர், ஜியா கான், ராம் லீலா ஆகியவை முதல் பத்து இடங்களை பிடித்திருக்கின்றன.


    அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் படங்கள் பட்டியலில் Aashiqui 2, MOST SEARCHED பட்டியலில் IRCTC தளம், அதிகமாக தேடப்பட்ட செய்திகள் பிரிவில் "பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி", மக்களால் தேடப்பட்ட பிரிவில் சன்னி லியோன், மொபைல் போன் பிரிவில் SAMSUNG GALAXY S4, அரசியல்வாதிகள் பிரிவில் நரேந்திரா மோடி, விளையாட்டு வீரர்கள் பிரிவில் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முதல் இடத்தினை பிடித்திருக்கிறார்கள்.


    அதிகமாக தேடப்பட்ட தென்னந்திய நடிகர்கள் பிரிவில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அஜித், ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.


    கூகுள் இணையத்தில், விஜய் முதல் இடத்தை பிடித்திருப்பதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் #VijayTheMostSearchedSouthIndianActorInGoogle என்ற டேக்கை ட்விட்டர் தளத்தில் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    இரயில் பயணத்தில்....... ?

    By: Unknown On: 19:56
  • Share The Gag



  • ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

    அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

    "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

    அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

    கொஞ்ச நேரம் கழித்து,

    " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

    இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

    "இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

    அதற்கு அந்த தந்தை சொன்னார்,

    "ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."


    "ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

    சாகித்ய அகாடெமி விருது பெறுகிறார் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

    By: Unknown On: 19:38
  • Share The Gag



  • 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது, தமிழில் கொற்கை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார்.


    எழுத்தாளர்களுக்கான உயரிய கவுரமாக கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் இந்த ஆண்டு விருதுக்கான பரிந்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. இந்த முறை கவிஞர்களே அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். பெங்காலி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 மொழி கவிஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.


    தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.


    2014 மார்ச் மாதம் 11ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    ‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு...சினிமா விமர்சனம்..!,

    By: Unknown On: 18:42
  • Share The Gag



  • நடிகர் : சரத்குமார்

    நடிகை : சனுஷா

    இயக்குனர் : ஓம்கர்

    இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்

    ஓளிப்பதிவு : விஸ்வாஸ் சுந்தர்



    நிவாஸ், ஜீவா, யாசர் ஆகிய மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவர்களின் நட்பு கல்லூரி வரை தொடர்கிறது. படிப்பு மற்றும் தொழில் முறையில் இவர்களின் ஈடுபாடு வெவ்வேறாக இருந்தாலும் எண்ண ஓட்டம் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.

    முதலில் ஒரு போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஒரு ரவுடியை காப்பாற்றுகிறார்கள். பிறகு அவன் மூலம் துப்பாக்கி வாங்குகிறார்கள். மூன்று நண்பர்களில் ஒருவரான யாசருக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். யாசரின் நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். இவர் மேட்ச் பிக்சிங் மூலம் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். இவர் ரிலீஸ் ஆவதற்கு யாசர் போராட்டம், மறியல் செய்து வெளியே கொண்டு வருகிறார். வெளியில் வரும் அவர் யாசரை சந்திக்க செல்கிறார். இருவரும் சந்தித்த அடுத்த சமயத்தில் யாசர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கிரிக்கெட் வீரரை யாரோ கடத்தி சென்று விடுகிறார்கள்.

    ஜீவா சினிமாவில் ஈடுபாடு உள்ளவர். சினிமா ஸ்டார் பெரிய தம்பியிடம் ஜீவாவின் தந்தை ரசிகனாகவும், அவருடைய படத்திற்கு கட் அவுட், பேனர் வைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தவர். இதேபோல் பெரிய தம்பியின் மகன் சின்ன தம்பியும் சினிமாவில் நடிக்கிறார். அவருடைய படத்தின் வெற்றி விழாவில் பெரிய தம்பி கடத்தப்படுகிறார். இந்த களேபரத்திற்கு மத்தியில் ஜீவா கொல்லப்பட்டு கிடக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களை துப்புதுலக்கும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார்.

    நிவாஸ் அரசியலில் ஈடுபாடு உடையவர். ஒரு விழாவில் எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சிக்கிறார் நிவாஸ். அப்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் எம்.எல்.ஏ.வை காப்பாற்றி நிவாசை கைது செய்கிறார்.

    இவர் எதற்காக எம்.எல்.ஏ.வை கொலை செய்ய வந்தார்? கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர் கதி என்ன? எதற்காக கடத்தப்பட்டார்கள்? நண்பர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற மீதிக்கதையை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்புடனும் சொல்லியிருக்கிறார்கள்.

    படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹவிஸ், இன்னும் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களாக ஜீவா, யாசர் கதாபாத்திரத்தில் வருபவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள்.

    நாயகியான சனுஷா, நடிப்பில் அழகு. மற்றொரு நாயகியான அபிநயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவு. சுமன், ஆசிஷ் வித்யார்தி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர், அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். போலீசாக வரும் சரத்குமார் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்துகிறார்.

    படத்தில் பாடல்கள் அடிக்கடி வருவதால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. ஆனால் பாடல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை. பின்னணி இசையிலும் ஸ்கோர் பண்ணுகிறார் ஜோஸ்வா ஸ்ரீதர். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஓம்கர்.

    மொத்தத்தில் ‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு.

    அற்புதமான விளக்கம் மனைவிக்கு.....?

    By: Unknown On: 18:22
  • Share The Gag




  • ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.

    எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.


    கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.


    மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்?" என்று.


    அதற்கு மனைவி சொன்னால் " கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் மிகவும் அன்புக்குரியவர்" என்று புன்னகையோடு பதிலளித்தாள்.


    கனவனும் புன்னகையோடு "இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆபத்தானவைதான். ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன், என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு எவ்வித பயமுமில்லை என்றான்...!

    இசைக்கு மருந்தென்றே பெயர்!

    By: Unknown On: 18:07
  • Share The Gag



  • ‘நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு விருப்பமான ஒலிநாடாவை வைத்துக் கேட்கிறீர்கள். சட்டென்று உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு முளைத்து, மனம் ‘ரிலாக்ஸ்’ ஆகிறது. இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ் மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள் பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம், நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குணநலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏன்? பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத் அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

    சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள் உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன. வடஇந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார், இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மனநிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும் மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால் ஒன்று, நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை மனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் படேல்.

    உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம் போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற குணம் உண்டு. பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்குக் குழம்பும் மனத்தை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.

    இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ, மாலை அல்லது இரவிலோ செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கெடுவுக்குள் இதைப் பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது. காலியான வயிற்றுடன் இருக்கக் கூடாது. இதற்குக் கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப் படுத்திவிட வேண்டும்" என்கிறார்.

    அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகியவற்றுக்கெல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு. சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை நன்றாக எதிர்கொள்கிறார்கள். ‘ஆட்டிஸம்’ - கற்கிற குறைபாடு போன்ற சிலவற்றுக்கு இது பயனானது." என்கிறார் டாக்டர்.

    ‘மியூசிக் தெரபி’ குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள் செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன. ‘அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்’ இவற்றுக்கு ஆதரவு அளிக்கின்றன.

    சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா இசை - நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு, பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன என்பதை விளக்குகிறார்.

    நாட்டை - ஆஸ்துமா குணமாகிறது. வாசஸ்பதி - நாசி பிரச்சினை தீரும். ஹம்சவர்த்தினி - தலைச்சுற்றல் நீங்கும். நாத நாமக்கிரியா - வயிற்றுவலி தீரும். பேகடா - ரத்த அழுத்தம் சரியாகும். ஆனந்த பைரவி, சிந்து பைரவி - உயர் ரத்த அழுத்தம் சீராகும். மத்திய மாவதி - ஒற்றைத் தலைவலி நீங்கும்.

    ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு; வயிற்றுவலி சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான நாத நாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உதவியிருக்கின்றன," என்கிறார்.

    இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது. பல தனிமனித அனுபவங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை இறைவனின் மகா வஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.

     (‘கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்’ நூலில் இருந்து)

    புதுக்குறள்.....?

    By: Unknown On: 17:46
  • Share The Gag



  •                                             ******புதுக்குறள் *******


    1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
    ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

    2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
    மூஞ்சியில் குத்தி விடல்...

    3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
     செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

    4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
     சோகாப்பர் hack செய்யப்பட்டு.

    5.விரும்பிய மனம் விரும்பா விடின்
     துரும்பா இளைப்பார் தூய காதலர்..

    6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
    மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

    7.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
     வாயினால் சுட்ட வடை

    8.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
     அரியவாம் கடலைபோ டுதல்

    9.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
     ஆறாதே லேடியால் கெட்ட மனம்

    10.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
     தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

    11.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

    இந்திய தொழில்நுட்பம்!

    By: Unknown On: 17:16
  • Share The Gag



  • இந்தியா சைனாவைப் போல் ஒரு பெருமைமிகு செயலில் இறங்கியுள்ளது அதுதான் சூப்பர் கம்யூட்டர் ஆராய்ச்சி. இந்த தொழில்நுட்பமானது சூப்பர் கம்யூட்டர்  PARAM yuva-II, ஆகும்.



    இது ஒரு புதிய 500-teraflop/s veesion ஆகும். இந்த PARAM yuva-வின் computing பவரானது 54 teraflop/s to 254 teraflop/s ஆகும்.


    இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உலக நாடுகளின் மத்தியில்  இந்தியாவின் மதிப்பு உயரும்.


    அமெரிக்கா முதன் முதலில் GPS ஐ(Global Positioning System) இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடித்தது. அதனை தொடர்ந்து சைன, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டுபிடித்தன.





    தற்பொழுது வளர்ந்து வரும் நாடுகள் தரவரிசையில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் இந்தியா 2014- ஆம் ஆண்டு Satellite Based Navigation System 'GAGAN' என்ற GPS தொழில்நுட்ப்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் புகழ் உலக அராங்கில் பதிவுசெய்யப்படும்.

    ஓர் வரலாற்று அதிசயம்...?

    By: Unknown On: 07:59
  • Share The Gag



  • இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...


    மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.


    அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 டன்    எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரசெலி மலைத்தொடரில் இருந்து எவ்வாறு இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன என்ற வினாக்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. 82 வரையான நீல பளிங்கு கற்களால் அமைந்த முதலாவது வட்டம் கி.மு 2150 வருடங்களுக்கு முன்பு முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. பின்னர் 150 வருடங்கள் கழித்து மேல் உள்ள கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதவாது கி.மு 2000 ம் ஆண்டளவில் இது நடைபெற்றிருகின்றது.


    இத்தகைய பிரமிப்பு ஊட்டும் செயற்றிட்டம் தொழில்நுட்ப வசதிகள் எதுமற்றிருந்த அக்காலத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அதிகளவான மனித வலு பயன்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும் இராட்சத விலங்குகள், அபூர்வ சக்திகள் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கற்பனைக்கதைகளும் இதன் பின்னணியில் உள்ளன. இத்துணை சிரமங்களோடு இக்கற்தூண்களால் வடிவமைக்கப்பட்ட வட்டம் ஏன் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை உறுதியாக அறியப்பட்டிருக்கவில்லை. பெருமளவான வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதுபோல் அது ஒரு முக்கிய சமய வழிபாட்டு ஸ்தலமாக இருக்கலாம் என்ற கருத்துக்களே மேலோங்கியிருக்கின்றன. எனினும் இது வரலாற்றில் ஓர் நிர்வாக மையம், பாதுகாப்பு அரண், ஆய்வகம் போன்று இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் உண்டு.


    எப்படியிருந்த போதும் எந்த மதமும் உரிமைகோராத ஒரு வரலாற்று சின்னமான இது ஆதி சமூகங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை.

    தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

    By: Unknown On: 07:40
  • Share The Gag



  • தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.


    முருங்கைகீரை சூப் செய்யும் முறை:


    முருங்கைகீரை - 2 கப்

    வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்

    கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்

    உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு


    முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.



    அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

    சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்!

    By: Unknown On: 07:31
  • Share The Gag


  • ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

    நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

    இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”


    மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.

    வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
    வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

    சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

    இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

    தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

    அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.

    ‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.

    துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

    "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!

    By: Unknown On: 07:15
  • Share The Gag



  • "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"


    நேர் விளக்கம்

    நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

    அறிந்த விளக்கம் :

    உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.

    அறியாத விளக்கம் :

    இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

    இதன் விளக்கம்,
    நாயகன் = கடவுள்
    "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
    நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

    கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

    திருமூலர் சொன்னதைப் பாருங்கள்

    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    ---------------
    தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

    ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.
    யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை. 

    ஒரு அழகான நாளில்... ?

    By: Unknown On: 02:08
  • Share The Gag



  •  கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

    அவர் அருகில் ஒரு பலகையில்,

    "எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார். இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.

    அவ்வழியில் சென்ற ஒரு நபர் அந்த பலகையில் இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார்.

    அடுத்த‌ நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர்.

    பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் ,

    "இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?" என கேட்டார்.

    அந்த நபர் வாசித்தார்,

    "இந்த நாள் மிகவும் அழகான நாள், ஆனால் என்னால் பார்க்க முடிய வில்லை!!!"

    நம்முடைய கருத்தை வெளிபடுத்தும் விதம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

    புதுமை படைத்தல்?

    By: Unknown On: 01:54
  • Share The Gag

  •                                                                                                                                 

    புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.


    புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.


    டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர்.  அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள்’ என்று மட்டுமே சொன்னார்.


    புதுமை படைப்பதற்கான வழிகள்:


    ·         மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

    ·         அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

    ·         மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?


    புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.

     புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.

    வெற்றி ....?

    By: Unknown On: 01:46
  • Share The Gag


  • “நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

    இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

    அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

    அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.

    பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

    நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

    “நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

    யோகா,யோகா என்று சொல்கிறார்களே, யோகா என்றால் என்ன..?

    By: Unknown On: 01:28
  • Share The Gag



  • பதில்:

    யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.

    உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,

    மூச்சைப் பிடித்துக் கொள்வது,

    தலையில் நிற்பது,

    இவையெல்லாம் யோகா அல்ல.


    யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

    அதாவது

    உடல்,

    மனம்

    இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.

    மற்றும்,

    யோகா என்றால்,

    நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,

    நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,

    நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,

    நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,

    நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

    அப்படி இருந்தால் அதுதான் யோகா.

    எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.

    கேள்வி..

    யோகா என்பது எல்லோருக்குமானதா..?

    இல்லை இது இந்து மதத்திற்கு மட்டும் உரித்ததா..?



    நிச்சயமாக இது எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனதுதான்.

    ஏனென்றால்,

    ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது.

    ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை,

    அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ,

    உணர்ச்சியின் மூலமாகவோ,

    தங்கள் உடலின் மூலமாகவோ,

    தங்களின் சக்தியின் மூலமாகவோ,

    ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் நாள்தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    அதை சற்று முறைப்படுத்தி செய்தால் பலனுடையதாக இருக்கும்.

    மற்றும்,

    மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல.

    கேள்வி...

    பிராணாயம் என்றால்..?


    மூச்சை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனம்,உயிர் ஆற்றலை கட்டுப்படுத்தும் பயிற்ச்சிக்குத்தான் பிராணாயாமம் ஆகும்.

    கேள்வி...

    தியானம்.....?


    ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து
    உள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலோடு கலக்கும் பயிற்ச்சியால் மனதை விரிக்கும் முயற்ச்சியே தியானம் ஆகும்.

    வரலாற்று குறிப்பில் இருந்து...

    By: Unknown On: 01:03
  • Share The Gag


  • நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார்.


    காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.


     "அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அம்பேத்கர் பதில் கூறினார்.

    வெளி நாட்டு வாழ்க்கை....

    By: Unknown On: 00:51
  • Share The Gag


  • வெளி நாட்டு வாழ்க்கை....


    தெரியாத ஊர்...

    அறியாதமொழி...

    புதிதான சூழல்...

    புரியாத சுற்றம்...

    அனைத்தும் தாண்டி நாம்

     அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...

    முதலில்

     வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம்

     தகுதியானவர்கள் இல்லை

     பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும்

     தகுதியானவர்கள்...

    இங்கே

     முடிந்தால் சாப்பிடுவோமே தவிர

     மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...

    முடிவெட்டினால் கூட

     ஒட்ட வெட்டுவோமே தவிர

     ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...

    இது

     எங்களின் கஞ்சதனமில்லை

     நான் அசிங்கமானாலும் பரவாயில்லை

     என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற

     அபூர்வ குணமே....

    அது போல

     வெளிநாட்டு வாழ்க்கை

     சில பிரிவை தந்தாலும்

     பொருத்துக்கொள்வோம்

     ஏனென்றால் அதுதானே

     நமக்கு பிழைப்பையும்

     தந்திருக்கிறது.

    விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள் !

    By: Unknown On: 00:41
  • Share The Gag






  • சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர்.


    மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரித்து விட்டனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு மண்டல மருத்துவமனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர். வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடினமான சிகிச்சை.


    எனவே நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறினர். அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டுசெடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்துகள் மூலம் பாதுகாத்தனர். சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன.


    இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர். தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    உண்மை வரிகள்.....?

    By: Unknown On: 00:26
  • Share The Gag


  • உண்மை வரிகள்.....


    1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !


    2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..


    3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?


    4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப் பெயருண்டு..


    5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.


    6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..


    7. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் அமெரிக்காவால் .


    8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல.