Saturday 30 August 2014

ஏ.ஆர்.முருகதாஸ்-பாக்ஸ் ஸ்டார் கூட்டணியின் உருவாகும் 'ரங்கூன்'

By: Unknown On: 23:36
  • Share The Gag
  • இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் நிறுவனமான  ஏ .ஆர்.எம்  புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது.

    அவர்களது கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு 'ரங்கூன்'. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க அனிருத் இசை அமைக்க  உள்ள இந்த படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார் ராஜ் குமார் பெரியசாமி . இவர் இயக்குனர் முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

    ' ரங்கூன்' படத்தை பற்றி தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்ட கௌதம் கார்த்திக் ' பாக்ஸ் ஸ்டார் , ஏ .ஆர்.முருகதாஸ்  ஆகியோருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாகும்.இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி தன்னுடைய கதை சொல்லும் நேர்த்தியாலும் , தனக்கு தேவையானதை கிடைக்கும் வரை தளர்வடையாத குணத்தாலும் என்னை மிகவும் கவர்ந்து உள்ளார். அனிருத்தின்  இசையில் நடிப்பது என்ற எண்ணமே என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது' என்றார் .

    இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி  கூறுகையில்'இது இளைஞர்களை பற்றிய இளைஞர்களுக்கான படம்.என்னுடைய அபிப்ராயத்தில் கௌதம் கார்த்திக் இன்றைய இளைஞர்களின் அப்பட்ட பிரதிநிதியாவார். அவரது உற்சாகமும் , வேகமும் படத்துக்கு உயிர்  கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெயரை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக்  கொள்ளும் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை அமைப்பில்,ஒளிபதிவாளர் எம் .சுகுமாரின் ரம்மியமான ஒளிப்பதிவில் நாங்கள் இணைந்து செயல்படும் 'ரங்கூன்'  நிச்சயம் பேச படும் படமாக இருக்கும் என நம்புகிறேன்.பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மூலமும், முருகதாஸ் சாரின் மூலமாகவும் அறிமுகமாவது எனக்கு மிக பெரிய பெருமை ஆகும்.அக்டோபர்  மாதம் துவங்க உள்ள ' ரங்கூன்' படத்தின்  கதாநாயகி தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. எல்லா தரப்பு மக்களையும் 'ரங்கூன்' கவரும் என்பதில் ஐயம் இல்லை ' என்றார்.

    பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை....

    By: Unknown On: 22:15
  • Share The Gag
  • பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

    வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்
    வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
    வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

    வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
    வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்
    வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

    வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்
    வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
    வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
    வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

    வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்
    வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.
    வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
    வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

    கீதாசாரம்

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றோருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

    - பகவான் கிருஷ்ணர்

    பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது...?

    By: Unknown On: 22:15
  • Share The Gag

  • ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

    ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

    நிறம்:


    ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

    முக தோற்றம்:


    ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ  தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

    உடை அலங்காரம்:


    பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

    பேச்சு திறன்:


    முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

    இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

    வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!

    By: Unknown On: 22:14
  • Share The Gag

  • தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

    இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

    இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

    1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

    2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

    3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

    4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

    5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

    ◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

    ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

    மிருகங்களுக்கு உரிய குணம்...?

    By: Unknown On: 22:13
  • Share The Gag

  • ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

    ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.



    அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

    நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

    இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

    பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

    விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

    “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

    சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர்

    By: Unknown On: 20:42
  • Share The Gag
  • நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கன்னட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

    கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராவ். சமீபத்தில் கன்னட செய்தி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேசனின்போது, செக்ஸ் விவகாரங்களில் இவர் வீக்கானவர் என்பது அம்பலமானது.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பது போல ஒரு பெண்ணை அனுப்பி, ரகசிய கேமரா மூலமாக ஓம் பிரகாஷ் நடவடிக்கைகளை பதிவு செய்தபோது, அவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்பது பதிவானது. மேலும் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் இவ்வாறு செய்த பிறகுதான் அவர்களுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்ததும் அதில் பதிவானது.

    இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கன்னட சேனலில் காண்பிக்கப்பட்டதும் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இந்த ஒரு இயக்குநர் மட்டுமின்றி மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் செக்ஸ் ஒப்பந்தத்தையும் அந்த சேனல் அம்பலப்படுத்தியது.

    இதில் ஓம்பிரகாஷ் ராவ் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். "எனது தவறான நடத்தைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த விஷயத்தில் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

    ஐ பாடல்கள் வெளியீடு: அர்னால்டுடன் ரஜினி, கமல் பங்கேற்பு

    By: Unknown On: 19:40
  • Share The Gag
  • விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் ரூ.180 கோடி செலவில் தயாராகியுள்ளது. ஷங்கர் பிரமாண்ட படமாக இதை இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சைனீஸ், தைவான் உள்ளிட்ட பல மொழிகளில் ‘ஐ’ படம் வெளியிடப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படுகின்றன.

    ‘ஐ’ படத்தின் தமிழ், தெலுங்கு பாடல்கள் வெளியிட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. ‘ஐ’ தமிழ் பட பாடல் வெளியீட்டு விழாவை சென்னையிலும் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவை ஐதராபாத்திலும் நடத்துகின்றனர்.

    தமிழ் பாடல்களை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு வெளியீடுகிறார். தெலுங்கு பாடல்களை ஜாக்கிசான் வெளியீடுகிறார்.

    ஆஸ்கார் பிலிம்ஸ் பட இணை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு நேரில் சென்று அர்னால்டுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது ‘ஐ’ படத்தில் விக்ரம் நடித்த சில காட்சிகளை அவருக்கு காட்டினார். 100 கிலோவரை எடையை கூட்டியும், 50 கிலோவரை குறைத்தும் இந்த படத்தில் விக்ரம் நடித்து இருப்பதை பார்த்து அர்னால்டு வியந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறாரே என்று விக்ரம் நடிப்பை பாராட்டினாராம். பாடல் வெளியீட்டு விழாவுக்கு கண்டிப்பாக வருவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

    அர்னால்டு பங்கேற்கும் இந்த விழாவில் ரஜினி, கமலும் கலந்து கொள்கிறார்கள். பாடல்களை அர்னால்டு வெளியிட ரஜினியும், கமலும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர். அர்னால்டு பங்கேற்கும் விழா என்பதால் தமிழ் திரையுலகின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் விழாவுக்கு அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

    சர்ச்சிலின் சாமர்த்திய பேச்சு...!

    By: Unknown On: 18:48
  • Share The Gag
  •  ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் தனது நண்பர்களுடன் விருந்து ஒன்றில் பேசிகொண்டிருந்தார்.

    அப்போது அவரை மட்டம் தட்ட நினைத்த அவரது நண்பர் ஒருவர், அவர் வெளியே சென்ற தருணம் பார்த்து அவரது கைகுட்டையில் தனது பேனாவை எடுத்து கழுதை படம் ஒன்றை வரைந்து வைத்தார்.

    திரும்பி வந்து பார்த்த சர்ச்சில், என்ன சொன்னார் தெரியுமா?

    "என் கைகுட்டையில் யார் முகம் துடைத்து? அவர் முகம் அப்படியே பதிந்துவிட்டதே" என்று கூற, அனைவரும், செய்வதறியாது விழித்தனர்.

    விஜய் சேதுபதிக்கு அடிச்சது ஜாக்பாட்

    By: Unknown On: 17:27
  • Share The Gag
  • தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது தயாரிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது மீண்டும் தன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிக்க முதல் முறையாக நயன்தாரா நடிக்கிறார்

    ஏற்கனவே ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட போது உடனே நயன்தாரா என்றார், அவரது ஆசை மிக விரைவில் நிறைவாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

    இப்படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்க "நானும் ரவுடி தான்" என்று டைட்டில் வைத்து உள்ளனர்

    தன்னை தானே செதுக்கியவர்கள்!

    By: Unknown On: 17:02
  • Share The Gag
  • தமிழ் சினிமா என்பது சாமனிய மக்களுக்கு ஒரு நிழல் உலகம் தான். அதை நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த களத்தில் வெற்றி பெறுவது, தண்ணீரில் நடப்பதற்கு சமம். அப்படி தன்னை தானே செதுக்கி திரையுகில் வெற்றி பெற்றவர்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

    எம்.ஜி.ஆர்

    ஒரு மலையாளியாக இருந்து தமிழ் திரையுலகில் வெற்றி பெற சென்னை வந்தவர். சினிமாவில் இவர் முகத்தை காட்ட அடைந்த கஷ்டங்களை வார்த்தையாலும், வரிகளிலாலும் சொல்லமுடியாதவை. ஆனால் இவரின் கடின உழைப்பால் சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் யாரும் நிரப்பு முடியாத முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவாஜி

    தஞ்சாவூரில் பிறந்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்த அவருக்கு சினிமாவின் மீது திடீரென்று காதல் ஏற்பட்டது. சென்னை வந்து பல நாடக கம்பெனிகளில் வேலை பார்த்து, பின் பல நாடகங்களில் நடித்து கலைஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த பராசக்தியில் சக்சஸ் என்ற வசனுத்துடன் ஆர்ம்பித்து, தன் வாழ்நாள் இறுதி வரை தமிழ் சினிமாவில் சக்சஸ் ஆனவர்.

    ரஜினி

    ’சில மனிதர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை, சாதரண பஸ் நடத்துனர் இன்று சூப்பர் ஸ்டார், அதனால் ஆச்சரிங்கள் இருக்கிறது நான் நம்புகிறேன்’ என்று அவரே ஒரு விருது விழாவில் கூறினார். முதல் முதலாக ஹீரோயிஸித்திற்கான அத்தனை வரைமுறைகளையும் உடைத்து வெற்றி பெற்றவர் இவர் தான்.

    விஜயகாந்த்

    மதுரைக்கும் தமிழ் சினிமாவிற்கும் என்றுமே ஒரு தொடர்பு இன்று வரை இருந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் மதுரை மண்ணில் இருந்து சென்னை வந்து வெற்றி பெற்றவர்களில் மிகவும் முக்கியமானவர் விஜயகாந்த். ரஜினிக்கு பிறகு கருமை தேகத்துடன் வெற்றி கொடிகட்டியவர். மேலும் இவரின் எதார்த்தமான முகம் தமிழக கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

    அஜித்

    சிறிய மெக்கானிக்காக தன் வாழ்க்கையை தொடங்கி, பின் சில டெக்ஸ்டைல் கம்பெனிகளில் வேலை பார்த்து, மாடலிங் துறைக்கு வந்தவர் அஜித். இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் தோல்வியை தந்தாலும், இவரின் தனிப்பட்ட குணத்திற்காகவே இவருக்கு அதிக ரசிகர் வட்டம் வந்தது. இன்றைய இளம் ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் நிறைய பேருக்கு இவர் ரோல் மாடலாக விளங்குகிறார்.

    மாதவன்

    சின்னத்திரை பிரபலமாக தொலைக்காட்சியில் தோன்றி, இன்று வெள்ளித்திரை நாயகனாக வலம் வருகிறார் மாதவன். இன்றும் இவரது சிரிப்பிற்கு மயங்காத பெண்களே இல்லை.

    விக்ரம்

    இவருடைய அப்பா சினிமாவில் இருந்தவர் தான், ஆனால் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முழுக்க, முழுக்க தன் முயற்சியை மட்டும் நம்பி பல வருட போராட்டத்திற்கு பிறகு பாலாவின் கண்ணீல் பட்டு சேதுவாக மறுபிறவி எடுத்தார். சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்கு பிறகு அந்த வரிசையை நிரப்பியவர் இவர் தான்.

    சிவகார்த்திகேயன்

    எந்த ஒரு சினிமா பின் பலமும் இல்லாமல் தன்னிடம் இருக்கும் திறமையை மட்டும் நம்பி, சின்னத்திரையில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையை தொடங்கி, இன்று முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

    விஜய்சேதுபதி

    துபாயில் சொல்லிகொள்ளும் படி நல்ல வேலையில் இருந்து சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், அந்த வேலையையும் விட்டு கோடம்பாக்க வாசலிலேயே நின்றவர். தூக்கிவிடுவதற்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல், தன் சொந்த முயற்சியால் மட்டுமே இன்று மினிமம் கேரண்டி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

    சினிமாவில் இருப்பவர்களே தான் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற நிலை மாறி, சாமனியனுக்கும் கோடம்பாக்க வாசல் திறந்திருக்கும், நாம் நம் முயற்சியில் உண்மையாக இருந்தால் வெற்றி தேடி வரும் என்பதற்கு இவர்களே உதாரணம்.

    உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

    By: Unknown On: 13:44
  • Share The Gag
  • செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.

    ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.

    இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில செடிகளைப் பார்ப்போமா...

     

    மூங்கில்

    மூங்கிலை வீட்டினுள் வளர்த்தால், அந்த மூங்கிலின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அது நம்பிக்கை மட்டுமின்றி, பலர் உணர்ந்ததும் கூட. ஆகவே வீட்டினுள் மூங்கில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

    துளசி

    துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.

    ஹனிசக்கிள் (Honeysuckle)

    இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.


    மல்லிகை

    மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். மேலும் இந்த செடியானது மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

    லாவெண்டர்

    லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அந்த அளவில் இதன் நறுமணமானது இருக்கும். அதுவும் இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீட்டும் நல்ல வாசனையோடு இருக்கும்.

    ரோஜா

    அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். அதிலும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.


    மந்தாரை/ஆர்க்கிட் (Orchid)

    வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.

    ரோஸ்மேரி

    ரோஸ்மேரி மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது வீட்டில் நல்ல பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.

    சேஜ்

    சேஜ் செடி, அதன் பாதுகாப்பு குணங்களால் அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் இதனை வளர்த்தால், இது இறப்பின்மை, ஆயுள், ஞானம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

    முட்டை வெந்துவிட்டதா ? அறிந்து கொள்ள எக் டைமர் !!

    By: Unknown On: 13:44
  • Share The Gag

  • சமையலறையில் பல புதிய விஷயங்கள் புகுந்துவிட்டன. ஆனால் அது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற விஷயங்களைப் பற்றி பார்த்ததில் எக் டைமர் தான் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே அது பற்றி ஒரு கண்ணோட்டம்…

    பொதுவாக உணவு பொருளை நாம் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள, அதனை கையால் நசுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் வெந்துவிட்டதை அறிந்து கொண்டு இறக்கிவிடுவோம்.

    அதே போல குக்கரில் வேக வைக்கும் போது உணவு பொருளுக்கு ஏற்ப விசில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுப்பை அணைத்து விடுவோம். ஆனால் இதில் எல்லாம் கண்டு பிடிக்க முடியாத ஒரு வகை உணவு பொருள்தான் முட்டை. ஆம். அழுத்திப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. குக்கரிலும் வேக வைக்க முடியாது. எப்படித்தான் முட்டை வேகும் நேரத்தை சரியாக கண்டுபிடிப்பது?

    இதென்ன பெரிய விஷயமா? 10 நிமிடம் அல்லது முட்டை ஓடு உடைந்தால் முட்டை வெந்து விட்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், முட்டை சரியாக வெந்துவிட்டதா என்பதை கண்டறிய ஒரு சாதனம் உள்ளது. அதுதான் எக் டைமர்.

    முட்டை வேக வைப்பதை கண்டுபிடிக்க ஒரு சாதனமா என்று வியக்காதீர்கள். அதிலும் எத்தனையோ வகை உள்ளது என்பது தான் விஷயமே. டிஜிட்டல் டைமர், ஹவர்கிளாஸ் வகை என பல வகைகளில் உள்ளது. டிஜிட்டல் டைமர் என்பது முட்டை வேகும் நேரத்தை டிஜிட்டல் கடிகாரம் போல கணிக்கிறது. ஹவர்கிளாஸ் வகையில், அதில் உள்ள மணல் போன்ற துகள், கீழுள்ள குவளையில் விழுவதைக் கொண்டு முட்டை வேகும் நேரத்தை கணித்துக் கொடுக்கிறது. முட்டையைப் போன்றே வடிவமுள்ள ஒரு சாதனமும் வந்துவிட்டது. அதனை வேக வைக்கும் முட்டையுடன் போட்டுவிட வேண்டுமாம். அது நிறம் மாறியதும் முட்டை வெந்துவிட்டதாக அர்த்தமாம்.

    அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக்கிடக்கும் இடங்கள்!

    By: Unknown On: 13:43
  • Share The Gag
  • இந்தியாவில் மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன.

    அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


    மேக்னடிக் ஹில்

    உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம்.
    ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.



    இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.


    கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.


    இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.

    அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


    காற்றில் மிதக்கும் கல்

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.

    200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது.

    எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.


    ரூப்குந்த் லேக்

    1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

    அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன.

    ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


    பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

    அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


    அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

    அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


    ஷனி ஷிங்க்னாபூர்

    ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

    திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    எச்சரிக்கை! கணவன் மனைவி பிரச்சனை!

    By: Unknown On: 13:43
  • Share The Gag
  • கணவனுக்கும்
    மனைவிக்கும்
    குழந்தைக்கு பேர்
    வைப்பதில் தகராறு,
    அவங்க அவங்க
    அப்பா பேரை தான்
    வைக்கணும் என்று.

    எதிர்த்த வீட்டுக்காரர்
    வந்து யோசனை சொன்னார்,

    உங்க அப்பா பேர்
    சீனுவாசன்
    உங்க கணவர்
    அப்பா பேரு கிருஷ்ணன்
    ரெண்டையும்
    சேர்த்து சீனிவாச
    கோபால கிருஷ்ணன்
    ன்னு வையுங்க என்றார்.

    அதிர்ந்த மனைவி கேட்டார்,
    அது சீனிவாசகிருஷ்ணன் தானே?
    சரி இடையிலே கோபால்
    எங்கிருந்து வந்தார் ??

    எதிர் வீட்டுக்காரர்
    சொன்னார்
    ஹி ஹி அது எங்க
    அப்பாவோட பெயர்
    சும்மா இருக்கட்டுமே என்றார்..

    கணவன்
    மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால்
    இப்படி தான் ஆட்கள்
    பூந்துதுடுவாங்க ...

    பால் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருகிறது? தண்ணீர் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருவதில்லை?

    By: Unknown On: 12:10
  • Share The Gag
  •  பாலில் தண்ணீர், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப்பொருட்கள் அடங்கி உள்ளன.

    பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.

    தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 டிகிரி செல்சியஸ். பாலில்
    உள்ள கொழுப்பு 50 டிகிரி செல்சியஸ்ல் உருக ஆரம்பித்து விடுகிறது.
    பாலை காய்ச்சும்போது 50 டிகிரி செல்சியஸ் நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது.

    எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப்படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கிவழிகிறது.
    பால் காய்ச்சும்போது தொடர்ந்து துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழி வதில்லை ஏன்?
    பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும். எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படு கிறது.
    தண்ணீர் காய்ச்சும்போது  ஏன்  பொங்கி வருவதில்லை?
    தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ கிடையாது. எனவே மேற்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.

    பூஜாவிற்கு முத்தம் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய பாலா!

    By: Unknown On: 11:48
  • Share The Gag
  • தன் தரமான படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பாலா. இவர் படங்களில் கூட எந்த ஒரு ஆபாசமான காட்சிகள் இருக்காது, என்று அனைவருக்கும் தெரியும்.

    காதல் காட்சிகளை கூட மிக நாகரிகமாக எடுக்க கூடியவர். ஆனால் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பூஜாவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

    இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை. ஏனெனில் அண்ணன், தங்கை போன்ற உறவு தான் அவர்களுக்கிடையே, ஆனால் எப்போதும் தனக்கென ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் பாலாவின் இந்த மாற்றம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இயற்கை அதிசயங்கள்...!!!

    By: Unknown On: 10:55
  • Share The Gag
  • உலகில் குறைந்தது ஒரு கோடி பேராவது உங்கள் பிறந்தநாளன்று தங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்.

    ஒவ்வொரு முறை தும்மும் போதும் நமது மூளையில் சில அணுக்கள் இறக்கின்றன.

    ஹவாய் தீவு வருடத்திற்கு 10 சென்டிமீட்டர் ஜப்பானை நோக்கி நகர்கின்றது.

    பார்த்ததை 5 நிமடங்களுக்குள் மறப்பவை தங்க மீன்கள்.

    ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

    மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது.பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும்.

    நம் கண்களில் "லாக்ரிமல் கிளாண்ட்" என்ற சுரப்பியால் சுரக்கப்படும்

    லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.