Wednesday 10 September 2014

நித்திரை இன்றி அவதியா .? இதை பண்ணுங்க நித்திரை ஓடிவரும் .

By: Unknown On: 23:03
  • Share The Gag
  • நம்மை நாமே வாழ்க்கைப் போராட்டத்திலும் வேலைப் பழுவிலும் மெல்ல மெல்லத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்
    . அதனால் ஏற்படும் மனவேதனையில் எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி என நிம்மதியைத் தேடுகிறோம். உண்மையில் நிம்மதி
    நம்மிடமே இருக்கின்றது. அதைத்தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. நிம்மதி வேண்டுமாயின் உங்கள் உடலுக்கும்
    உள்ளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஓய்வு அவசியம். உடலுக்கு முழுமையான
    ஓய்வைக் கொடுப்பது நித்திரையே.

    முன்பெல்லாம் மனிதர் உடலால் உழைத்து வாழ்ந்தனர். ஒவ்வொரு நாளும் பெருந்தூரம் நடந்தனர். அதனால் அவர்களால்
    நன்றாக நித்திரை கொள்ள முடிந்தது. இந்தக் கணினி யுகத்தில் பெரும்பாலும் இருந்த இடத்திலேயே வேலை செய்கிறோம்.

    மனிதனின் உடல் உழைப்பு குறைந்து மூளைக்கு வேலை கூடிவிட்டது. உடல் உழைப்பு இல்லாததால் நித்திரைக்கும் மருந்து
    குடிக்க வேண்டிய நிலையில் வாழ்கிறோம்.
    நித்திரை இன்மைக்கு பொதுவாக உடல்நலக் குறைவு, மனஉளைச்சல் (கோபம், பொறாமை, பயம், காதல் போன்ற உணர்வுகள்)
    காரணம் என்றாலும் வேறுகாரணங்களும் இருக்கின்றன. இக்காலப் பழக்கங்களான
    நேரம் போவது தெரியாது தொலைக்காட்சி பார்ப்பது.
    செல்போனில் மணிக்கணக்கில் பேசுவது.
    வலைத்தளத்தில் அரட்டை அடிப்பது.

    அதிக உணவை வயிறு புடைக்க உண்பது.
    உண்ணாமலே உறங்குவது.
    போன்றவைகளும் நித்திரையைக் குறைக்கின்றன.
    நித்திரை குறைந்தாலும் கூடினாலும் உடல்நிலை பாதிக்கப்படும். மெலட்டோனின் (melatonin) என்னும்
    ஓமோன் சுரப்பதாலேயே எமக்கு நித்திரை வருகின்றது. அந்த ஓமோன் அதிகமாகச் சுரந்தால் நித்திரையும்,
    குறைவாகச் சுரந்தால் நித்திரை இன்மையும் ஏற்படுகின்றது. அவ்வோமோன் வெளிச்சத்தில் குறைவாகவும்
    இருளில் அதிகமாகவும் சுரக்கின்றது. ஆதாலால் இருளான இடத்தில் நன்றாக நித்திரை கொள்ளலாம்.

    மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் ஓய்வைக் கொடுத்து புத்துணர்ச்சியைத் தருவது நித்திரையே. நித்திரைக்கும்
    ஞாபகசக்திக்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். ஆழ்ந்த நித்திரை கற்கும்
    ஆற்றலைக்கூட்டும். படித்து களைத்திருக்கும் மூளை நித்திரையால் புத்துணர்ச்சி பெறுகிறது. அதனால் காலையில்
    எழும்பும் பொழுது ஞாபக்சக்தியும் கூடுகிறது. சோர்வு, கவனக்குறைவு, மறதி போன்றவை நித்திரை இன்மையால் உண்டாகின்றன.

    மனவுளைச்சல்களால் வரும் மன அழுத்தத்தின் போது கோர்டிசோல் (cortisol) எனும் ஓமோன் சுரக்கின்றது. அதனால்
    நித்திரை இன்மை ஏற்படுவதோடு இரத்த அழுத்தமும் கூடும். அது இரத்த நாடிகளில் கல்சியப்படிவை உண்டாக்கி
    அவற்றைத் தடிப்படையவும் செய்யும். அதனால் இருதய நோய்க்கு நித்திரை இன்மை காரணமாகின்றது. எனவே
    மனித வாழ்க்கைக்கு நித்திரை மிகவும் முக்கியமாகும். நித்திரையின் போது சுரக்கும் ஓமோன்கள் உடலின்
    கொழுப்பைக் குறைத்தல், தசைகளைப் பழுது பார்த்தல், தோலைப்புதுப்பித்தல் போன்றவற்றைச் செய்து
    உடலின் வளர்ச்சிக்கும் நோயற்ற வாழ்வுக்கும் உதவுகின்றன.
    உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா? கவலைகளை ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு சூடான பாலில்
    2 தேக்கரண்டி தேன்விட்டு கலக்கிக் குடியுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள சத்தம் இல்லாத, இருளான இடத்தில் உறங்குங்கள்.

    உங்கள் இமைகள் நித்திரையைத் தழுவ, நிம்மதி உங்களைத் தழுவிக்கொள்ளும்

    பீர் குடித்தால் ஆண்மை குறைபாடு பிள்ளைகள் பெற முடியாது

    By: Unknown On: 21:44
  • Share The Gag
  • தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள். பீர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

    ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, மலடுத்தன்மை குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் உடனடி காபி பவுடர் வாங்கி காபி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த பொருட்களில் உள்ள ஒருவகை அமிலமே இந்த குறைபாடு ஏற்பட காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரசாயன கலப்பு

    பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.

    இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகினர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் கண்டர் குஹேல், தெரிவித்துள்ளார்.மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வு மது மற்றும் பீர் பிரியர்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.

    ஐ படத்தின் பெயர் மாற்றம்!

    By: Unknown On: 20:37
  • Share The Gag
  • ஐ படம் எப்போது வரும் என நாளுக்கு நாள் ஆவல் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலில் சின்ன மாற்றம் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    இதுநாள் வரை ஐ என்ற தலைப்பை ஆங்கிலத்தில் Ai என்று கூறிவந்த நிலையில், நேற்று வந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'I' என்று குறிப்பிட்டு இருந்தது.

    ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

    சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

    By: Unknown On: 19:32
  • Share The Gag
  • சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
    1. தலை 307

    2. வாய் 18

    3. மூக்கு 27

    4. காது 56

    5. கண் 96

    6. பிடரி 10

    7. கன்னம் 32

    8. கண்டம் 6

    9. உந்தி 108

    10. கைகடம் 130

    11. குதம் 101

    12. தொடை 91

    13. முழங்கால் கெண்டை 47

    14. இடை 105

    15. இதயம் 106

    16. முதுகு 52

    17. உள்ளங்கால் 31

    18. புறங்கால் 25

    19. உடல்உறுப்பு எங்கும் 3100

    ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

    உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

    கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

    குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

    கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

    குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

    குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

    கிருமிகள் உருவாகக் காரணம்

    கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

    அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

    நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

    கண் நோய் :

    கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

    பொதுக் காரணங்கள் :

    வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

    சிறப்புக் காரணம் :

    சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

    காசநோய் :

    கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

    வெள்ளெழுத்து

    கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

    கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

    தலைநோய் :

    உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

    தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

    ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

    கபால நோயின் வகை :

    வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

    தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

    அம்மை நோய் :

    அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

    இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

    சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

    1. பனை முகரி 2. பாலம்மை

    3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

    5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

    7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

    9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

    11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

    13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

    என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

    சூர்யா ஒதுக்கியதால் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! கௌதம் மேனன் ஓபன் டாக்!

    By: Unknown On: 17:38
  • Share The Gag
  • தல-55 படப்பிடிப்பில் பிஸியாக பறந்து கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு செய்தியாவது சொல்லுங்கள் என அனைவரும் கேட்க, வழக்கம் போல் மௌனத்தை மட்டும் பதிலாக கூறி வந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் மனதில் உள்ள கருத்துகளை எல்லாம் கூறியுள்ளார். இதில் சூர்யாவுடனான கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு விளக்கமான பதில் அளித்தார்

    அவர் கூறுகையில் ‘சூர்யாவுடன் படப்பிடிப்பு, பின் நின்றது வரை எல்லாம் உங்களுக்கே தெரியும், ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்று இன்று வரை தெரியவில்லை, இருந்தாலும் அவர் என்னை ஒதுக்கியதால் தான் அஜித் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அந்த விதத்தில் எனக்கு சந்தோஷம் தான்’ என்று கூறினார்.

    பாதுகாப்பாக மின்சாரத்தை கையாள்வது எப்படி?

    By: Unknown On: 17:28
  • Share The Gag


  •     மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும்.

        ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே, பயன் படுத்த வேண்டும்.

        மின் பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், எடுப்பதற்கு முன்னும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்

        ப்ரிட்ஜ் , கிரைண்டர் போன்றவற்றிற்கு நிலைஇணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ளமின், ’ப்ளக்’குகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

        ஈ.எல்.சி.பி.,யை வீடுகளில், மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.

        உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.

        ‘டிவி’ ஆண்டனாக்களை மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகே கட்டக் கூடாது. ‘டிவி’ ஆண்டனாவின் ஸ்டே ஒயரை மின் கம்பத்தில் கட்டக் கூடாது.

        ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான, ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து, பராமரிக்க வேண்டும்.

        சுவிட்சுகள், ’பிளக்’குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

        ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வெண்டும்.

        மின் கம்பத்திற்காக போடப்பட்ட ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணி காயவைக்கக் கூடாது.

        குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி., பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.

        மின் இணைப்பிற்கு எக்ஸ்டென்ஷன் கார்டுகள் உபயோகிக்கும் போது, அவைகளில் பழுதுகள் இருக்கக் கூடாது.

        மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன் படுத்தக் கூடாது. அவற்றின் மீது விளம்பரபலகைகளை கட்டக் கூடாது.

        மழைக் காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்லக் கூடாது. எங்கேனும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே போதுமான இடைவெளி விட்டு கட்டடங்களை கட்ட வேண்டும்.

        டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

        உயர் மின் அழுத்த கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவர்களை அணுக வேண்டும்.

        அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில், மின் கருவிகளின் சுவிட்சுகள் இருக்க வேண்டும். உபயோகிக்காத நேரங்களில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.

        மின் தீ விபத்துகளுக்கு உரிய தீயணைப்பான்களை மட்டுமே அதற்கு பயன் படுத்த வேண்டும். தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை,உலர்ந்த ரசாயனப் பொடி, கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம்.

        மின்சாரத்தால் தீவிபத்து நேர்ந்திருந்தால், உடனே மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

        எந்த மின் சர்க்யூட்டிலும் பளு ஏற்றக் கூடாது. ஸ்விட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது, சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.

        இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடங்கள், வீடுகள், பஸ்கள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும்.

        மேலும், குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். அருகில் உரிய இடம் இல்லை எனில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

        இடி, மின்னலின் போது, ‘டிவி’, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசியை பயன் படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.

    இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி

    By: Unknown On: 17:19
  • Share The Gag

  • இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங் போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம் கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.



    இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


    குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில் பேசிக்கொள்கிறார்கள் என்று பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தால் இந்த வெப்சைட்டுக்கு அவசியம் செல்ல வேண்டும்.


    www.noslang.com/index.php


    இங்குள்ள சர்ச் பாக்சில் உங்களுக்கு புரியாத அந்த சங்கேத மொழியை கொடுத்தால் அதற்குரிய அர்த்தம் விளக்கப்படுகிறது. குறிப்பாக, lol என்ற வார்த்தைக்கு, laughing out loud என்பது அர்த்தம் என்று தெரிய வரும். இதே போல், 10 - thank you, 10x - thanks, 2b - to be, b4n - bye for now, cb - come back, coz - because


     சில உதாரணங்கள்..

    absnt  -  absent

     abt  -  about

     abwt  -  about

     acc  -  account

     acct  -  account

     acgaf -  Absolutely couldn't give a Fuck

      aiadw  -  ALL IN A DAYS WORK

     aiamu  -  and I'm a monkey's uncle

     aicmfp -  and I claim my five pounds

     aight  -  Alright

     aightz  -  alright

     aiic  -  as if I care

     aiid  -  and if I did

     aiight  -  all right

     aim  -  AOL instant messanger

     ain't  -  am not

    aite  -  Alright

    aitr  -  Adult in the room

    aiui  -  as I understand it

    aiws  -  as i was saying

    ajax  -  Asynchronous Javascript and XML

    aka  -  also known as

    akp  -  Alexander King Project





    உள்ளிட்ட வார்த்தைகள் இன்டர்நெட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்க மொழி. இது போன்ற ஏராளமான வார்த்தைகளை இந்த வெப்சைட் தொகுத்துள்ளது.


    உங்களுக்கு இதே போன்ற வார்த்தைகள் தெரிந்தால் கூட நீங்களும் இந்த வெப்சைட்டுக்கு வழங்க தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


    அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் வார்த்தைகள் எவை என்பதை தனிப்பக்கத்தில் காணலாம். இன்டர்நெட்டுக்கு என தனி வட்டார மொழி உருவாகி விட்டது என்பதை இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



    தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

    By: Unknown On: 17:17
  • Share The Gag

  • உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


    வெள்ளைப் பூண்டு:


    பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.


    இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


    வெங்காயம்:


    வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


    காரட்:


    நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


    ஆரஞ்சு :


    வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


    பருப்பு வகைகள் :


    பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


    கோதுமை ரொட்டி :


    நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    இறால், மீன் மற்றும் நண்டு :


    அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


    தேநீர் :


    தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


    பாலாடைக்கட்டி :


    சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


    முட்டைக்கோஸ் :

    குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

    மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

    கை கழுவ கத்துக்கோங்க..

    By: Unknown On: 17:15
  • Share The Gag
  • கை கழுவ கத்துக்கோங்க..

    தேவையில்லாத எத்தனையோ விசயங்களை “கை கலுவியாச்சு” என்ற ஒற்றை வார்த்தையால் அலட்சியம் செய்கிறோம். ஆனால், கை கழுவுவது என்பது அன்றாட ஆரோக்கியத்துக்கு அவசியமான விடயம். சாப்பாட்டுக்கு முன்பும் (பலபேருக்கு அதற்குக்கூட பொறுமை இல்லை), சாப்பிட்ட பிறகும் மட்டுமே கை கழுவுவோர் நம்மில் பலர்.


    வெதுவதுப்பான நீரிலோ அல்லது சுத்தமான நீரிலோ கையை கழுவ வேண்டும். கை கழுவத்தானே என்று அசுத்த நீரைப் பயன்படுத்தினால், கைகளில் இருக்கும் கிருமிகள் போதாது என்று நீரில் உள்ள கிருமிகளும் சேர்ந்து கொள்ளும்.


    ஒரு நபரைச் சந்திததும் மேலைநாடுகளில் வழக்கப்படி, கை கொடுத்துக் கொள்கிறோம். இந்த வழக்கம், பல தொற்று  நோய்களை எளிதில் பரப்புவதாக ஆய்வுகள் கூறுகிறது. தண்ணீரில் அலசி, உதறினால் போதும் என்று எண்ணாமல், கைகளை சோப்பு கரைசல் கொண்டு, முன்னும் பின்னும் 20 நொடிகள் நன்றாகத் தேய்த்து, துய்மைப்படுத்திப் பாருங்களேன். ஜலதோஷம், இருமல் போன்ற தொல்லைகள் நீங்குவதை நீங்களே உணரலாம்.

    மனைவி பாராட்ட வேண்டுமா?

    By: Unknown On: 17:06
  • Share The Gag

  • குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும்.

    தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

    • மனைவியைக் கவுரவமாக நடத்துங்கள்.

    • வெளியில் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புகிவீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள்

    • ஆடம்பர செலவுகளைக் குறையுங்கள்

    • மனைவிக்கு அவசர செலவுகளுக்கு சிறிது பணம் கொடுங்கள்

    • உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு அவரிடம் விவாதியுங்கள்

    • அவர் தனது பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதார காது கொடுத்து கேளுங்கள்

    • வருங்காலத்துக்கு ஒரளவு பணம் சேமித்து வைக்க பாருங்கள்

    • குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதாநேரமும் உங்களுக்கு இருக்கட்டும்

    • பயணங்களால் மனைவியைப் பிரியும்போதும் வீட்டுக்குள் வரும் போதும் முத்தமிடுங்கள் அல்லது புன்னகையாவது பூத்தல் அவசியம்

     இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் மனைவி உங்களை ஆஹா...ஓஹோ என புகழ்வது உறுதி.

    தாய் மடியில் தலைவைத்த காலம் வருமா ?

    By: Unknown On: 17:03
  • Share The Gag

  • வயல்வெளி பார்த்து
    வறட்டி தட்டி
    ஓணாண் பிடித்து
    ஓடையில் குளித்து
    எதிர்வீட்டில் விளையாடி
    எப்படியோ படித்த நான்
    ஏறிவந்தேன் நகரத்துக்கு !
    சிறு அறையில் குறுகிப் படுத்து
    சில மாதம் போர்தொடுத்து
    வாங்கிவிட்ட வேலையோடு
    வாழுகிறேன் கணிப்பொறியோடு !
    சிறிதாய்த் தூங்கி
    கனவு தொலைத்து
    காலை உணவு மறந்து
    நெரிசலில் சிக்கி
    கடமை அழைக்க
    காற்றோடு செல்கிறேன்
    காசு பார்க்க !

    மனசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    மாறிப் போகுமோ ?
    மௌசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    பழகிப் போகுமோ ?

    வால்பேப்பர் மாற்றியே
    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ ?

    சொந்த பந்த
    உறவுகளெல்லாம்
    ஷிப் பைலாய்
    சுருங்கிப் போகுமோ?

    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ
    மொத்தமும்!
    புரியாது
    புலம்புகிறேன்
    நித்தமும்!

    தாய் மடியில் தலைவைத்து
    நிலவு முகம் நான் ரசித்து
    கதைகள் பேசி
    கவலைகள் மறந்த காலம்
    இனிதான் வருமா ?

    இதயம் நனைத்த
    இந்த வாழ்வு
    இளைய தலைமுறைக்காவது
    இனி கிடைக்குமா ?
    சொந்த மண்ணில்
    சொந்தங்களோடு
    சோறு திண்பவன்
    யாரடா ?
    இருந்தால் அவனே
    சொர்க்கம் கண்டவனடா!

    இசையமைப்பாளர் ஆகிறார் ஆன்ட்ரியா?இசையமைப்பாளர் ஆகிறார் ஆன்ட்ரியா?

    By: Unknown On: 08:11
  • Share The Gag
  • கம்ப்யூட்டர் மியூசிக் வந்த பின்பு கர்நாடகமாவது? சங்கீதமாவது? தற்போதைய சூழ்நிலையில் ஆளாளுக்கு கீபோர்டை அமுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலரது இசை தேன். சிலரது இசை தேள் கொடுக்கை விடவும் பயங்கரமான விஷம். இப்படியெல்லாம் இவர்கள் ரசிக மஹா ஜனங்களை படுத்தி எடுக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் சம்பளம். பாடல்கள் சுமாராக ஹிட்டாகிவிட்டாலே, சம்பளத்தை கோடிக்கு கொண்டு போய்விடுகிறார்கள் இந்த இசை விற்பன்னர்கள். (இசை விற்பனையாளர்கள்?)

    வச்சா குடுமி… சிரைச்சா மொட்டை என்றொரு பழமொழி உண்டு தமிழில். ‘என் படத்திற்கு இசையமைத்தால் எ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கணும். இல்லேன்னா நானே…’ என்று முடிவெடுத்த டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா ‘என்னத்தை போட்டு வச்சுருக்கார்’ என்பதை அறிய இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். படத்திற்கே ‘இசை’ என்று பெயர் வைக்கிற அளவுக்கு தன் மியூசிக் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் அவர். தனுஷின் அப்பா கஸ்துரிராஜாவே கூட ஒரு மியூசிக் டைரக்டர்தான் என்பது அச்சத்தை வரவழைக்கும் இன்னொரு நியூஸ்.

    இந்த இசையுலகத்திற்கு வந்த இக்கட்டான நேரத்தில்தான் பொன்னான இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்திருக்கிறது. அது? விரைவில் நடிகை ஆன்ட்ரியா ஒரு படத்திற்கு இசையமைக்கப் போகிறாராம். கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றவர் அவர் என்கிறார்கள். அது மட்டுமல்ல, பியானோவில் மாஸ்டராம். குரல் வளமும் நன்றாகவே இருக்கிறது. இவ்வளவு இருந்தால் போதாதா? அவரை இசையமைப்பாளர் ஆக்குவதற்கு கோடம்பாக்கத்தின் முன்னணி முகங்கள் முண்டா தட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

    அவர்களில் முதல் பெருமையை தட்டிக் கொண்டு செல்லவிருப்பவர் கவுதம் மேனன் என்கிறது கோடம்பாக்கத்தின் சந்து பொந்து தகவல்கள். பந்து பொறுக்குன மாதிரியும் ஆச்சு. பயிற்சி எடுத்த மாதிரியும் ஆச்சு! நடத்துங்க…கம்ப்யூட்டர் மியூசிக் வந்த பின்பு கர்நாடகமாவது? சங்கீதமாவது? தற்போதைய சூழ்நிலையில் ஆளாளுக்கு கீபோர்டை அமுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலரது இசை தேன். சிலரது இசை தேள் கொடுக்கை விடவும் பயங்கரமான விஷம். இப்படியெல்லாம் இவர்கள் ரசிக மஹா ஜனங்களை படுத்தி எடுக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் சம்பளம். பாடல்கள் சுமாராக ஹிட்டாகிவிட்டாலே, சம்பளத்தை கோடிக்கு கொண்டு போய்விடுகிறார்கள் இந்த இசை விற்பன்னர்கள். (இசை விற்பனையாளர்கள்?)

    வச்சா குடுமி… சிரைச்சா மொட்டை என்றொரு பழமொழி உண்டு தமிழில். ‘என் படத்திற்கு இசையமைத்தால் எ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கணும். இல்லேன்னா நானே…’ என்று முடிவெடுத்த டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா ‘என்னத்தை போட்டு வச்சுருக்கார்’ என்பதை அறிய இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். படத்திற்கே ‘இசை’ என்று பெயர் வைக்கிற அளவுக்கு தன் மியூசிக் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் அவர். தனுஷின் அப்பா கஸ்துரிராஜாவே கூட ஒரு மியூசிக் டைரக்டர்தான் என்பது அச்சத்தை வரவழைக்கும் இன்னொரு நியூஸ்.

    இந்த இசையுலகத்திற்கு வந்த இக்கட்டான நேரத்தில்தான் பொன்னான இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்திருக்கிறது. அது? விரைவில் நடிகை ஆன்ட்ரியா ஒரு படத்திற்கு இசையமைக்கப் போகிறாராம். கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றவர் அவர் என்கிறார்கள். அது மட்டுமல்ல, பியானோவில் மாஸ்டராம். குரல் வளமும் நன்றாகவே இருக்கிறது. இவ்வளவு இருந்தால் போதாதா? அவரை இசையமைப்பாளர் ஆக்குவதற்கு கோடம்பாக்கத்தின் முன்னணி முகங்கள் முண்டா தட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

    அவர்களில் முதல் பெருமையை தட்டிக் கொண்டு செல்லவிருப்பவர் கவுதம் மேனன் என்கிறது கோடம்பாக்கத்தின் சந்து பொந்து தகவல்கள். பந்து பொறுக்குன மாதிரியும் ஆச்சு. பயிற்சி எடுத்த மாதிரியும் ஆச்சு! நடத்துங்க…

    சுவையான தகவல்கள் சில....

    By: Unknown On: 07:53
  • Share The Gag
  • எறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

    ஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

    ‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.

    எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

    ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
     
    தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ். 

     உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.

     குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.

    ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

    தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ கீதகவசம்’.

    புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
     
    திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.
    இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.

    கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).

    திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.

    மயில் தேசியப்பறவையானது எப்படி?

    By: Unknown On: 07:51
  • Share The Gag
  • டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.



     அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.


     ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

    ஆறு தவறுகள்!

    By: Unknown On: 07:50
  • Share The Gag

  • மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள்.


    பிறரை அழித்துதனக்கு லாபம் பெற முயற்சிப்பது.


    திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து
     கவலைப்படுவது.


    நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய
     முடியாது என்று சாதிப்பது.


    சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது.


    மன வளர்ச்சிஇல்லாமை ,பக்குவம்பெறாமை ,பொறாமை


     நாம் செய்வது போலவே மற்றவர்களும் செய்து வாழ வேண்டும் என்று
     பிறரைக் கட்டாயப் படுத்துவது.


    2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும் அறிஞருமான சிசரோ கூறியது.

    "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது!

    By: Unknown On: 07:48
  • Share The Gag
  • தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.

    அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

     "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே..., அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.

    மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.

    அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.

     "அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.

     "அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.

    அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.

    இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.

    தீபங்களால் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்ற சில டிப்ஸ்...

    By: Unknown On: 07:45
  • Share The Gag

  •  தீபங்களில் உள்ள எண்ணெய் தரையில் சிந்தாமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக சிந்தும் வாய்ப்புகள் அதிகம். நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சரி எண்ணெய் சிந்துவதற்கான வாய்ப்புகள் அதிகமே. தீபங்கள் எரிய எரிய எண்ணெய் மெதுவாக தரையில் படரும். இதுவே தரையில் கறையை ஏற்படுத்திவிடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பல வழிகள் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் அமிலங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவைகளை பயன்படுத்தி கரைகளை சுலபமாக நீக்கினாலும் கூட, அது தரையை பாழாக்கி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.
    ஆகவே பாதுகாப்பான முறையில் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்றுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

    பூனை கூட உங்களுக்கு உதவலாம்

    பூனையை போலவே அதன் சிறுநீரும் கூட உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எண்ணெய் சிந்தி சிறிது நேரம் தான் ஆனது என்றால், உங்கள் பூனையின் சிறுநீரை அதன் மீது தெளியுங்கள். ஒரு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, மறுநாள் கழுவி விடுங்கள். கறையை நீக்க இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
     
    மரத்தூளும் பெயிண்ட் தின்னரும் கூட கை கொடுக்கும்

    பெயிண்ட் தின்னர் மற்றும் மரத்தூளை ஒன்றாக கலந்து கறை படிந்த இடத்தில் தடவவும். அதனை எண்ணெய் கறையின் மீது ஒரு 20 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இந்த கலவையை தடவலாம். தீபங்களினால் ஏற்படும் கறையை நீக்க இது ஒரு சுலபமான வழியாக தோன்றுகிறதா?

    பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்

    பேக்கிங் சோடாவை சமையலுக்கு எப்படி பயன்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியும். அதை எண்ணெய் கறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கார்த்திகை தீபத்தன்று தீபங்களால் ஏற்பட்டுள்ள எண்ணெய் கறையை எப்படி நீக்குவது என்ற கவலை ஏற்படுகிறதா? ஒன்றே ஒன்றை செய்யுங்கள். கடைக்கு செல்லும் போது கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் கறையின் மீது கொஞ்சம் பேக்கிங் சோடாவை தெளித்து பின் வெந்நீரில் அந்த இடத்தை கழுவுங்கள்.

    பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட்


    தீபங்களினால் ஏற்படும் எண்ணெய் கறையை நீக்க மற்றொரு சுலபமான வழியாக விளங்குகிறது பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட். அதனை கறை படிந்த இடத்தில் தூவி கொஞ்ச நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அந்த நேரத்தில் கொஞ்சம் நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்த பின் கறை படிந்த இடத்தில் அதனை ஊற்றி நன்றாக கழுவவும்.

    கவலைகள் கைக்குழந்தைகள் அல்ல!

    By: Unknown On: 01:24
  • Share The Gag
  • கவலைக்குள் இருக்கின்றது ஒரு வலை. அதுதான் சின்னச் சின்ன நூல் இழைகளால் சிலந்தி கட்டும் வலை. அந்த வலைக்குள் வந்து வண்டுகளும், பூச்சிகளும் வீழ்ந்துவிடுவதைப் போல், கவலை என்னும் வலைக்குள்ளும் பலர் சிக்கி வீழ்ந்து விடுகிறார்கள்.

    முன்பு இருந்தது போல் இப்போது இல்லை வாழ்க்கை. உணர்ச்சி, வேகம், பரபரப்பு, பகைமை, மோதல்கள் இப்படி எத்தனை எத்தனையோ பிரச்சினைகள். இதனால் பல கவலைகள். இந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி கொள்வதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்கள் 'கவலை'க்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

    வாழ்க்கை நமக்குக் கணக்கற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கையில் துன்பமும் உண்டுதான். அந்த துன்பமும் இணைந்த வாழ்க்கைப் பயணத்தில் இன்பம் காண்பவரே வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவர்.

    கண்கள் காணும் காட்சிகள் பலவிதம். ஒரு தெரு, அந்தத் தெருவில் இரண்டு விதமான காட்சிகள். ஒரு வீட்டில் சாவுமணி அடிக்கிறது. இன்னொரு வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கிறது. ஒரு வீட்டில் கணவனோடு சேர்ந்திருக்கின்ற மனைவி, மலர்களைச் சூடி மகிழ்ச்சியோடு இருக்கின்றாள். இன்னொரு வீட்டில் பிரிந்திருக்கின்ற ஒருத்தி கண்ணீர் சிந்துகிறாள். இதுதான் வாழ்க்கை. இந்த இரண்டும் கலந்த வாழ்க்கையில் இன்பத்தைக் காண்பவரே வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவர். இதைத்தான்,

    ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
    ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண் கண் பனிவார் புறைப்பப்
    படைத்தோன் மன்ற அப்பண்பிலான்
    இன்னாது அம்ம இவ்வுலகம்
    இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே

    என்கிறது ஒரு புறநானூற்றுப்பாடல்.

    கவலை எல்லோருக்கும் சொந்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கவலை. கல்லுக்குள் தேரையை வைத்த இறைவன் அதற்கான உணவையும் வைத்திருக்கிறான். நமக்கான உணவை, நமக்கான பதிலை, நமக்கான தீர்வைக் கண்டறிய வேண்டியது நாம்தான். படைப்பின் நோக்கமே வாழ்வதுதானே தவிர, கவலைகளால் மடிவது அல்ல.

    காலம் எழுதுகிற கணக்குப் பேரேட்டில் துன்பத்தை அடையாதவர் யார்? தனிமையில் அமர்ந்து சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய துன்பங்கள் தூரப் போய்விடும்.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    என்றார் கவியரசர் கண்ணதாசன்.

    இந்த உலகத்திலே நிலையாக சுகத்தை மட்டுமே அனுபவித்தவர்கள் உண்டா? மருத்துவரிடம் போகிறோம். அவர் பெரும்பாலும் கசப்பான மருந்துகளையே தருவார். கசப்பாக இருக்கிறதே என்று சாப்பிட மறுத்தால் நோய் குணமாகாது. அதைப் போலத்தான் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் சில நேரங்களில் கவலைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    சுழன்று கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டேதானிருக்கும். இது நியதி. இது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைப் பாடம்.

    எதிர்ப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் நாம் எதையும் சாதிக்க முடியாது. வானத்தில் பட்டங்கள் பறப்பதைப் பார்க்கின்றோம். அது பூமியிலிருந்து பறக்க விட்டதும் உடனே மேலே போய் விடுவதில்லை. மெதுவாக மேல்நோக்கிச் செல்கிறது. அப்போது காற்று எதிர்க்கின்றது. எதிர்ப்பைத் தாங்கிக் கொண்டு அது மேலே பறக்கின்றது. மேலே பறப்பதற்கு கீழே இருக்கின்ற கைகள் உதவி செய்கின்றன. முயற்சி செய்தால் துயரங்களைத் துரத்தி உயரத்தை எட்டலாம். இதைத்தானே பறக்கின்ற பட்டங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன!

    வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முதல் எதிரி கவலைதான். அதனால் எந்தக் காரணம் கொண்டும் கவலையை நம் அருகிலேயே அனுமதிக்கக் கூடாது. அப்படியானால் அதை எப்படி விரட்டுவது என்கிறீர்களா? இதோ, இளைஞர்களின் விடிவெள்ளி விவேகானந்தர் சொன்னதைச் சொல்லுகிறேன்...

    ஒருநாள் ஒரு துறவி மலை மேல் ஏறிக் கொண்டிருந்தார். திடீரெனப் பல குரங்குகள் அவரைத் துரத்தத் தொடங்கின. துறவி மிகவும் அச்சமடைந்தார். ஓட்டமாய் ஓடலானார். ஓட ஓடக் குரங்குகள் பாய்ந்து விரட்டின. துறவி களைப்படைந்தார், தப்பிக்க வழியில்லாமல் திகைத்தார்.

    அப்போது அவர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒருவர் திரும்பிப் பார்த்தார். துறவியின் நிலையைப் புரிந்து கொண்டார். அவரைப் பார்த்து, 'அப்படியே நில்லுங்கள்!' என கட்டளையிட்டார். சிறிதுநேரம் கழித்து, 'எதிர்த்துச் செல்லுங்கள்' என அறிவுறுத்தினார். துறவி அவர் சொன்னபடியே செய்தார். குரங்குகள் திகைத்தன. பயந்து பின்வாங்கின. பின்னர் ஓடி ஒளிந்து கொண்டன. வாழ்க்கையில் வரும் கவலைகளும், இந்தக் குரங்குகளைப் போலத்தான். பயந்தால் நம்மைத் துரத்தும். எதிர்த்து நின்றால் ஓடி ஒளிந்து கொள்ளும்.

    கவலைகளுக்குக் காரணம் பயம்தான். நாளைக்கு என்ன நடக்குமோ, இதைச் செய்தால் இப்படி ஆகி விடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் கவலைகளை அதிகரிக்கின்றன. நாளை நடக்கப்போவதை இன்றே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட இன்றைக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மன உறுதியுடன் ஈடுபட்டால் வாழ்க்கையில் வரும் கவலைகள் காணாமல் போய் விடும்.

    ஆழ்ந்த அர்ப்பணிப்போடு ஒரு வேலையில் ஈடுபடுவதை பணிப் பண்பாடு என்பார் சிந்தனையாளர் இறையன்பு. இந்தப் பணிப் பண்பாடு ஒவ்வொருவருக்கும் வாய்த்து விட்டால் கவலை எப்படி வரும்? எனவே, கவலைகள் தாக்கும்போது ஆக்கபூர்வமான ஒரு பணியில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

    சுறுசுறுப்புடன் இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். தேங்கி நிற்கிற நீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அது போல் சோம்பி நிற்கின்றவர்களிடத்தில்தான் கவலைகள் உற்பத்தியாகின்றன. ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். சோர்வு, கவலைகளை உண்டாக்கும். கவலைகள் முகத்தின் அழகை அழித்து விடுகின்றன. கண்களின் ஒளியைக் குறைத்து விடுகின்றன. நெற்றியில் சுருக்கங்களை உண்டாக்கிவிடுகின்றன. ஏன், மதிப்புமிக்க இளமைப் பருவத்தையே இல்லாமல் செய்து விடுகின்றன!

    'இலேசான இதயம் நெடுநாள் வாழும்!' என்றார் ஷேக்ஸ்பியர். கவலைகளை வெற்றி கொள்ள, 'போதும்' என்கிற மனதைப் போற்றுவோம். இதயத்தை மென்மையாக்குவோம்.