Friday 11 October 2013

'சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்'!

By: Unknown On: 19:26
  • Share The Gag


  • யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது.


    ஜிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், யானைகள், முழுமையாக நிரப்பப்பட்ட உணவு வாளிகளை, மனிதர்கள் சுட்டிக்காட்டும்போது, காலியான உணவு வாளிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவையாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.


    சுட்டிக்காட்டும் சைகை, மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு, உயிர்வாழ மிகவும் முக்கியமாக உள்ள சிக்கலான சமூகங்களில் , மிகவும் பயனுள்ள ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ந்திருக்கின்றன என்பதை இது காட்டுவதாக இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய ஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட் பைர்ன் கூறினார்.

    அமைதிக்கான நோபல் பரிசு!

    By: Unknown On: 17:43
  • Share The Gag

  • 2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.

    11 - nobel pease winner

     


    இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.

     
    இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (ஓ.பி.சி.டபுள்யூ) வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.


    நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு 1997ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றும் இந்த அமைப்பின் ரசாயன ஆயுத ஒழிப்பு குழுவினர், தற்போது சிரியாவில் ரசாயன ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    Nobel Peace Prize 2013:

    ******************************************
     

    The weapons watchdog the Organisation for the Prohibition of Chemical Weapons has been announced as the winner of the Nobel Peace Prize 2013.

    தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!

    By: Unknown On: 17:37
  • Share The Gag

  • தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


    11 - tajmahal -miss-universe.j


    உலக அழகி ஒலிவியா கல்போ. 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
    நேற்று உலக அழகி ஒலிவியாவை வைத்து தாஜ்மகாலில் படப்பிடிப்பு நடத்தியது. ஒலிவியா விதவிதமான மாடல்களில் செருப்புகளை அணிந்து இருந்தார்.



    மேலும் தாஜ்மகாலில் உள்ள ‘டயானசீட்’ என்ற இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார். இது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா நினைவாக சலவைக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.1992–ல் டயானா ஆக்ரா வந்து தாஜ்மகாலை பார்வையிட்டதன் நினைவாக ‘டயானா சீட்’ உருவாக்கப்பட்டது. இங்குதான் டயானா அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
    இதற்கிடையில் தாஜ்மகாலின் உள்ளே எந்த படப்பிடிப்பும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தடையை மீறி உலக அழகியை வைத்து படப்பிடிப்பு நடத்தியது பற்றி தாஜ்மகால் நினைவுச்சின்ன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதையடுத்து உலக அழகி ஒலிவியா கல்போ மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் என்.கே.பதக் தெரிவித்தார்.


    Miss Universe in police case over Taj Mahal photos

    Indian police said Thursday they had filed a case against Miss Universe for conducting an unauthorised footwear fashion shoot at the Taj Mahal which was slammed as an “insult” by the monument’s caretaker.


    “ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட்!

    By: Unknown On: 16:21
  • Share The Gag


  • சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

    இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.


    11 - surya-gautham-menon-

     


    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


    என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாக கருதுகிறேன்.


    இயக்குநர் கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.


    சிங்கம் 2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ‘ஒரு டெஸ்ட் ஷுட்’ செய்து ‘கெட்டப்’ மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.


    முன்பே கெளதம் அவர்கள் ‘சென்னையில் ஒரு மழைகாலம்’ படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.


    ஆறுமாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.


    ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம் அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!

    By: Unknown On: 16:14
  • Share The Gag

  • தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


    11 - erode one rs hotel.Main

     


    இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.


    இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும். 


    சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.


    ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.


    கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.


    சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.


    ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


    நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.


    எல்லோரும் தொழில் செய்வது லாபம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்தே என்ற போதிலும், லாபத்தைத் தாண்டி தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.

    வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

    By: Unknown On: 12:43
  • Share The Gag

  • A herb garden at home!



    “மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும் நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதையாகின்றன. குறிப்பாக உணவு   உற்பத்தி  முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க வேண்டிய - உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு,  இர வுப்பணி, ஒரே இடத்தில்  அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற்பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தா மல் இருப்பது, ரசாயன பூச்சிக்கொல்லிகளின்  பயன்பாடு போன்றவை பிரச்னைகளின் காரணிகள்.

    சில சாதாரண விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினாலே பல நோய்களை தவிர்க்க முடியும். இக்கவனம் இல்லாமல் போனதால்  எதிர்ப்பு சக்தியை  இழந்து, பல நோய்களை நாமே வரவழைக்கிறோம். சில நோய்களை எளிமையாக மூலிகைகள் கொண்டு குணப்ப டுத்த முடியும்... தவிர்க்கவும்  முடியும்” என்கிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். இதோ... வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க சில  அபூர்வ மூலிகைகள்!பி.கு: தீவிர நிலை  நோயாளிகளுக்கு இவை பலன் தராது. மருத்துவர் ஆலோசனையைப் புறக்கணிக்க வேண்டாம்.

    நீரிழிவு

    இன்சுலின் செடி: இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

    கள்ளிமுடையான்: கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற் றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

    சர்க்கரைக்கொல்லி: கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

    சிறியாநங்கை: கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

    ஸ்டீவியா என்னும் சீனித்துளசி: தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.

    அஜீரணம்

    அருவதா: இதனை ‘பிள்ளை வளர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள். இளம் குழந்தைகளின் அஜீரண கோளாறுகளுக்கு நல்லது.

    புற்றுநோய்

    கோதுமைப்புல் சாறு:
    கோதுமைப்புல் சாறு சிறந்த நிவாரணி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை ‘பச்சை ரத்தம்’ என அழைக்கிறார்கள். வீட்டிலேயே எளி தாக வளர்த்து  தயாரிக்க முடியும். 10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி  வீதம் விதைக்க, பத்தாவது  நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும். இதனை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண் டும். அறுவடை செய்த தொட்டியில் திரும்ப  விதைக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும். இப்போது பெருநகர அங்காடிகளில்  பாக்கெட்டுகளில் கோதுமைப்புல் கிடைக்கிறது.

    எலுமிச்சம் புல்: எலுமிச்சம் புல் சாறிலுள்ள ‘சிட்ரால்’ வேதிப்பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (கிஜீஷீஜீtஷீsவீs) செய்து கொள்வதாக  கூறியுள்ளனர்  இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். அதே வேளையில் நல்ல செல்களுக்கு ஒன்றும்  ஆவதில்லை என்றும்  கண்டறிந்தனர். 2006ல் நடைபெற்ற ஆய்வு இது.

    முள்ளு சீதா: ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படுவது முள்ளு சீதா. இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம். அங்குள்ள பழங்குடியினர்  பல்வேறு  நோய்களைக் குணப்படுத்த இப்பழத்தை உபயோகிக்கின்றனர். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் நோய்களை  குணமாக்க  பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால்  இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்றும்  அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. தமிழகத்தில் நன்கு  வளர்கிறது.

    வெண்தேமல்: காலையில் வெறும் வயிற்றில், கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு  கைப்பிடி  சேர்த்து மிக மெதுவாக மென்று விழுங்க வேண்டும். பத்தியம் உண்டு. வெள்ளை சர்க்கரையை ( கீலீவீtமீ ஷிuரீணீக்ஷீ)  கண்டிப்பாக தவிர்க்க  வேண்டும்.

    சிறுநீர் கோளாறுகள்

    சிறுபீளை : சிறுநீரைப் பெருக்கி, சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது.

    வாழைத்தண்டு:
    பொரியல் செய்து உட்கொண்டால் சிறுநீர் கோளாறுகள் குறையும்

    மூலநோய்:
    மெக்சிகோ நாட்டுத் தாவரமான ‘ஐயப்பனா’ (Ayapana triplinervis) அறுவை சிகிச்சை நிலையில் இருக்கும்  மூல  நோயாளியைக்கூட மிக எளிதாக குணப்படுத்தும் என்கிறார்கள்.  காலையில் பல் சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சுமார் 5  இலைகளை உட்கொண்டு  சிறிது சுடுநீர் அருந்த வேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையைப்  பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகக்  கூடும்.

    சளி, இருமல்

    துளசி: துளசிமாடம் இன்றைய வாழ்வியல் முறையில் மறைந்து வருவது வருந்தத்தக்கதே. துளசியில் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப் பிடலாம்.  இருமல், சளி, ஜலதோஷம், தொற்று நீக்கும். சிறந்த கிருமிநாசினியும் கூட.

    தூதுவளை:
    இதன் இலை கோழையை அகற்றும். தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். சுவாசக் கோளாறுகளுக்கும் நல்லது.

    ஆடாதொடை
    : மிளகுடன் இலையை உண்ண கபத்தை அகற்றும்.

    கற்பூரவல்லி:
    குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஏற்பட்டால் கொடுக்கலாம்.

    அழகு
    மஞ்சள் கரிசலாங்கண்ணி:
    உடல் வனப்பு பெறவும், கூந்தல் கருமையாக இருக்கவும் இதனை உபயோகிக்கின்றனர். வள்ளலார் விரும்பிய மூலிகை இது.

    ரோஸ்மேரி:
    மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து இறக்குமதியானது. தேநீருடன் சேர்த்து அருந்த புத்துணர்ச்சி ஏற்படும். அசைவ உணவுக்கு  மணமூட்டி  சுவையையும் அதிகரிக்கிறது. கூந்தல் பராமரிப்பிலும் அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுகிறது.


    நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?

    By: Unknown On: 12:38
  • Share The Gag

  • Considerations when using non stick tava?


    நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும்  பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட  கோட்டிங் பாழாகிவிடும்.


    நான்ஸடிக் பொருட்களை துடைக்கும் போது மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தால் போதுமானது. உபயோகிக்கும்  முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் போது சோப்புத்தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  கிளீனிங் பவுடர் பயன்படுத்தக்கூடாது.



    கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை நான்ஸ்டிக் பாத்திரத்தில் பயன்படுத்தக்கூடாது. மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக்  கரண்டியோ பயன்படுத்துவது நல்லது. நான்ஸ்டிக் பாத்திரங்களை மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல் அதற்கென்று உள்ள ஆணியிலோ  அல்லது தகுந்த இடங்களிலோ மாட்டி பயன்படுத்த வேண்டும்.



    பலமுறை உபயோகித்த பின்னர் சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம் பாத்திரத்தின் பாதி  அளவிற்கு நீர் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் ப்ளீச்சிங்பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும் பிறகு மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள்  சூடேற்றவும். கொதிவரும் நிலையில் மரக்கரண்டி கொண்டு கறை போக அழுத்தமில்லாமல் தேய்த்தால் சுத்தமாகிவிடும். பின் சோப்பு நீரில் கழுவி  சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.  


    சூரியன் இல்லாத புதிய கோள் கண்டுபிடிப்பு!

    By: Unknown On: 12:20
  • Share The Gag

  • பூமியில் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியன் போன்ற நட்சத்திரம் எதுமின்றி தன்னந்தனியே சுற்றி வரும் இளைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.


    அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த இளைய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


    இது, வியாழன் கோளை விட ஆறு மடங்கு பெரிதாக உள்ளது. சுமார் 1 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தக் கோளுக்கு "பிஎஸ்ஓ ஜே318.5-22' என்று பெயரிடப்பட்டுள்ளது. 


    இதுவரையில் சூரியன் இல்லாமல் தனியாகச் சுற்றும் கோள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.





    Astronomers say they've spotted lonesome planet without a sun


    Eighty light-years from Earth, there's a world that's just six times more massive than Jupiter, floating all alone without a sun to keep it warm, astronomers reported Wednesday.


    Such free-floaters have been reported before, but in the past, it hasn't always been clear whether these were orphaned planets or failed stars. This time, the scientists say they're sure it's a planet.
    "We have never before seen an object free-floating in space that that looks like this," team leader Michael Liu of the Institute for Astronomy at the University of Hawaii at Manoa said in a news release.


     "It has all the characteristics of young planets found around other stars, but it is drifting out there all alone. I had often wondered if such solitary objects exist, and now we know they do."

    The heat signature of the world, known as PSO J318.5-22, was identified by the Pan-STARRS 1 wide-field survey telescope on Haleakala, on the Hawaiian island of Maui. The light coming from the object is about 100 billion times fainter in optical wavelengths than the planet Venus. Most of its energy is emitted in infrared wavelengths.


    In a report being published in Astrophysical Journal Letters, Liu and his colleagues said the object has properties similar to those of gas-giant planets found orbiting young stars.


    Past reports of "rogue planets" have been murky, due to the fact that it can be hard to discriminate between large planets and a class of failed stars known as brown dwarfs. Some astronomers insist on a definition of planets that would apply only to objects that form around stars. They'd prefer to call objects like PSO J318.5-22 "planetary-mass objects," or planemos for short.


    PSO J318.5-22 was discovered while the researchers was combing through data from Pan-STARRS 1 for readings from brown dwarfs. Brown dwarfs are typically faint and red, but Liu and his colleagues said PSO J318.5-22 stood out because it was redder than the reddest known brown dwarfs.


    They followed up with observations using the Gemini North Telescope and the NASA Infrared Telescope Facility telescopes on the summit of Hawaii's Mauna Kea, and concluded that its infrared signature was more consistent with a young planetary-mass object. The science team also monitored the object for two years using the Canada-France-Hawaii Telescope, to determine its direction of motion and its distance from Earth. That's how they figured out it was 80 light-years away.


    The team concluded that PSO J318.5-22 is associated with a collection of young stars called the Beta Pictoris moving group, which formed about 12 million years ago. The best-known star in that group, Beta Pictoris, is known to harbor a gas-giant planet that's about eight times as massive as Jupiter.


    Gravitational perturbations may have kicked PSO J318.5-22 out of its planetary cradle soon after it was born, or it may have been formed by a different method. Either way, Niall Deacon of the Max Planck Institute for Astronomy in Germany, a co-author of the study, said PSO J318.5-22 should help scientists get a better understanding of other planets that aren't quite as lonely.


    “Planets found by direct imaging are incredibly hard to study, since they are right next to their much brighter host stars," Deacon said in the news release. "PSO J318.5-22 is not orbiting a star, so it will be much easier for us to study. It is going to provide a wonderful view into the inner workings of gas-giant planets like Jupiter shortly after their birth.”

    பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

    By: Unknown On: 12:09
  • Share The Gag

  • கனடா நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவம், இயற்பியல், ரசாயனம், பொருளாதாரம், அமைதிக்கான சமூக சேவை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், ரசாயனத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்நிலையில் நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா நாட்டை சேர்ந்த அலைஸ் முன்ரோவுக்கு(வயது 82) அறிவிக்கப்பட்டது.

    சிறுகதை எழுத்தாளரான முன்ரோ சிறு நகரங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஏழைகளின் துயரங்களை மையமாக வைத்து ஏராளமான கதைகளை எழுதியுள்ளார்.

    இவரது படைப்புகளுக்கு ஏற்கனவே புக்கர் விருது, காமன் வெல்த் எழுத்தாளர் விருது உள்ளிட்ட பரிசுகள் கிடைத்துள்ளன.

    இவர் எழுதிய Dear Life, Dance of the Happy Shades உள்ளிட்ட கதைகள், இவருக்கு ஏராளமான வாசகர்களை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.



    Canada's Alice Munro wins 2013 Nobel literature prize

    Canada's Alice Munro won the Nobel literature prize on Thursday for her short stories that focus on the frailties of the human condition, becoming just the 13th woman to win in the history of the coveted award.

    The Swedish Academy honoured Munro, 82, as a "master of the contemporary short story".

    It hailed her "finely tuned storytelling, which is characterised by clarity and psychological realism. Some critics consider her a Canadian Chekhov."

    "Her stories are often set in small town environments, where the struggle for a socially acceptable existence often results in strained relationships and moral conflicts -- problems that stem from generational differences and colliding life ambitions," it said.
    Tipped as one of the favourites in the days before Thursday's announcement, Munro is just the 13th woman to win the Nobel literature prize since it was first awarded in 1901.

    She is also the first Canadian to win the prestigious honour.
    Munro will receive the prize sum of eight million Swedish kronor ($1.24 million, 915,000 euros).

    She will be presented with her award at a formal ceremony in Stockholm on December 10, the anniversary of prize founder Alfred Nobel's death in 1896.

    Last year, the award went to Chinese novelist Mo Yan.
    Alice Munro sets her taut, acutely observed stories in the rural Ontario countryside where she grew up, focusing a stark lens on the frailties of the human condition.

    Despite her vast success and an impressive list of literary prizes awarded over the past four decades, Munro, 82, remains as unassuming and modest as the characters in her collections of short stories and novels.

    These are usually women who do not fit the normal stereotype of the beautiful, ravishing heroine, possibly reflecting the puritan values of her childhood.

    "She is not a socialite. She is actually rarely seen in public, and does not go on book tours," commented American literary critic David Homel.

    As brilliant, dignified and elegant as Munro is, she is sometimes described as the complete opposite of another great dame of Canadian literature -- Margaret Atwood.

    Born on July 10, 1931 in Wingham, Ontario, she grew up in the countryside. Her father Robert Eric Laidlaw raised foxes and poultry, while her mother was a small town schoolteacher.
    At just 11 years old, she decided she wanted to be a writer, and never wavered in her career choice.

    "I think maybe I was successful in doing this because I didn't have any other talents," she explained in an interview posted on YouTube.

    "I'm not really an intellectual," Munro said. "I was an okay housewife but I wasn't that great. There was never anything else that I was really drawn to doing so nothing interfered in the way life interferes for so many people."

    "It always does seem like magic to me."

    Munro's first story "The Dimensions of a Shadow" was published in 1950 while she was studying at the University of Western Ontario.

    It was at school that she met her first husband James Munro. The couple married in 1951 and moved to Vancouver in westernmost Canada, where they raised three girls.

    In 1963, they bought a house in Victoria and opened a bookstore, Munro's Books, described by author Allan Fotheringham as "the most magnificent bookstore in Canada, possibly in North America."

    Munro was three times awarded the Governor General's Award for fiction, first for "Dance of the Happy Shades" published in 1968. "Who Do You Think You Are" (1978) and "The Progress of Love" (1986) also won Canada's highest literary honor.

    Her short stories often appeared in the pages of prestigious magazines such as The New Yorker and The Atlantic Monthly, with her latest collection "Dear Life" appearing in 2012.
    "She writes about women for women, but does not demonize men," said Homel.

    Her subjects and her writing style, such as a reliance on narration to describe the events in her books, have earned her the moniker "our Chekhov," in reference to the 19th century Russian playwright Anton Chekhov -- a term affectionately coined by Russian-American short story writer Cynthia Ozick.

    Munro herself has said she writes about the "underbelly of relationships," adding she sets her stories in Canada "because I live life here at a level of irritation which I would not achieve in a place that I knew less well."

    "There are no such things as big and little subjects," she has said. "The major things, the evils, that exist in the world have a direct relationship to the evil that exists around a dining room table when people are doing things to each other."

    In a 2010 interview, she said she wanted readers "to feel something is astonishing -- not the 'what happens' but the way everything happens," she explained, adding that "long short story fictions do that best" for her as opposed to full-length novels.

    After Munro's first marriage ended in divorce in 1972, she took a post as a writer-in-residence at her alma mater in Ontario.
    Four years later, she remarried, to geographer Gerald Fremlin, and published new works every four years on average.

    Munro said earlier this year that she was "probably" not going to write anymore. She insisted in an interview with the New York Times that she meant to retire and said "Dear Life" would be her last work.

    Her story "The Bear Came Over the Mountain" was adapted for the screen by Sarah Polley as the film "Away from Her," and in 2009 she won the prestigious Man Booker International Prize for her body of work.

    The Booker panel praised her originality and depth.
    "Alice Munro is mostly known as a short story writer and yet she brings as much depth, wisdom and precision to every story as most novelists bring to a lifetime of novels," they said.
    "To read Alice Munro is to learn something every time that you never thought of before."

    “லைப் ஆப் பை” - உணர்வை ஏற்படுத்துமாம் “ராவண தேசம்”!

    By: Unknown On: 11:29
  • Share The Gag

  • திரு.கே.ஜெகதீஸ்வரரெட்டி அவர்கள் நல்லாசியுடன், நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படம் ராவண தேசம்.


    இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்குபவர் அஜெய்.
    கதாநாயகியாக ஜெனிபர் நடிக்கிறார், இவர்களுடன் அல்லலுரமேஷ், சந்தோஷ் கௌடில்யா, பாரதிராவ், சிரீஷா, பிரபாகர், மைனர் ஆகியோர் நடிக்கிறார்கள்.


    படம் பற்றி இயக்குனரும் நடிகருமான அஜெய் நூத்தகி கூறுகையில், இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தங்களை காத்துக் கொள்ள வேண்டி நடக்கும் போராட்டக்களமே கதை கரு.


    கடல் வழியாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சி மிகு போராட்டம் தான் ராவண தேசம்.


    கடல் மீது நடந்த சம்பவங்களின் தொகுப்பான “லைப் ஆப் பை” எப்படி ஒரு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு நிகரான பாதிப்பை உணர்வில் பதிக்கக்கூடிய படைப்பாக ராவண தேசம் இருக்கும்.


    காதல், எமோஷன்ஸ், நகைச்சுவை, ஆக்ஷன், பொழுதுபோக்கு என எல்லா அம்சங்களும் இதில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


    தொழில்நுட்ப கலைஞர்கள்

    ஒளிப்பதிவு - வி.கே.ராம்ராஜ்.
     

    இசை - ஆர்.சிவன்.
     

    எடிட்டிங் - கார்த்திகா சீனிவாஸ்.
     

    கலை - பி.எஸ்.வர்மன்.
     

    நடனம் - ஜெனிபர்.
     

    பாடல்கள் - சுரேஷ்ஜித்தன், ஷண்முகவேல்.
     

    ஸ்பெஷல் சவுண்ட் - சீனிவாசன் DARK VFX.
     

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அஜெய் நூத்தகி.
     

    தயாரிப்பு - லஷ்மிகாந்த்.

    ஜில்லாவின் கதை - "மோகன்லால் தாதா - விஜய் போலிஸ்"!

    By: Unknown On: 11:19
  • Share The Gag

  • ஜில்லா படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாகவும், மோகன்லால் தாதாவாகவும் நடிக்கிறார்கள். 


    ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா.
    துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.



    படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.



    படத்தில் மோகன்லால் தாதாவாக நடிக்கிறார், அவரது மகனாக வரும் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.



    ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.


    படத்தின் முதல்பாதி காதல், கொமடி என்று கலகலவென இருக்க இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.

    இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இதைப் படிங்க!

    By: Unknown On: 10:46
  • Share The Gag

  • வங்கிகள்  தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன்  முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி பல வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன
    இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை தருவோரிடம் தங்கள் உறவினர் பெயரில் டிபாசிட் செய்ய சொல்கின்றனர். 


    பின்னர் சி.பி.ஐ.,அல்லது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது பணம் செலுத்திய நபரின் விவரங்களை வங்கிகளிடம் கேட்கின்றனர். எனவே தான் வங்கி வாடிக்கையாளராக இல்லாதோர் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்தும் போது அடையாள ஆவணங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் முறைகேடான பண பரிமாற்றம் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


    முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) அதன் வாடிக்கையாளராக இல்லாதவர்கள் வெளியூரில் உள்ள அதன் வாடிக்கையாளருக்கு பணம் செலுத்தும் போது அந்த நபரின் விவரங்களை அறியும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்துவோர் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும், ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வங்கியில் வழங்கப்படும்,


    11 - money rupee

     



    அந்த கிரீன் ரெமிட் கார்டு’ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பின் வங்கியில் இருந்து ‘கிரீன் ரெமிட் கார்டு’ என்ற கார்டு வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கார்டு மூலம் ஒருவர் கணக்கில் மட்டுமே பணம் செலுத்த முடியும். அதிலும் ஒரு மாதத்திற்கு ஒருவர் கணக்கில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இதற்காக எஸ்.பி.ஐ. கிளைகளில் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வரவேற்பு காணப்பட்டாலும், பணம் செலுத்த வழங்கப்படும் ‘கிரீன் ரெமிட் கார்டு’க்கு கட்டணம் வாங்காமல் இலவசமாக வழங்குவதுடன் பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Know about Green Channel Counter of SBI


    *************************


    State Bank of India has started ‘Green Channel Counter’ on 1st July, 2010, at 57 Pilot branches across the country, as an innovative step towards paperless ‘Green Banking’ for deposit, withdrawal and remittance transactions. Based on the Customers favourable response, this initiative has now been rolled out to more number of branches.


    சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்!

    By: Unknown On: 10:39
  • Share The Gag

  • “வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவிகள் செல்போனில் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.”என்று நம்பிக்கை தெரிவிக்கின்ற்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள்.


    11 - TEC FISH MOBIL

     


    இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சர்வதேச கடல் எல்லையில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், பின்னர் தமிழகத்தில் இருந்து அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு அவர்களை விடுவிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.


    இந்தப் பிரச்சினைக்கு அறிவியல்பூர்வமான முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆய்வுகளை, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள் எஸ்.வேல்விழி, ஸ்ரீநாத், டி.சுவிதா ஆகியோர் கொண்ட குழு மேற்கொண்டது. தற்போது செல்போன் மூலம் தகவல் பறிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.


    இதுகுறித்து கேட்டபோது வேல்விழி, ஸ்ரீநாத், சுவிதா ஆகியோர்,”மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்கு தேவையான தகவல் செல்லும் கிராம அறிவு மையம் என்ற திட்டம் 1998-ம் ஆண்டில் புதுச்சேரியில் தொடங்கினோம்.


    மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “இன்கோர்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து, கடல் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்போம். மீன் அதிகம் கிடைக்கும் பகுதி, காற்றின் வேகம், அலையின் உயரம், வானிலை ஆகியவை உட்பட்ட தகவல்கள் அதில் இருக்கும்.


    தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், அந்தந்த மீன்பிடி பகுதிகளில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற தகவல்களை கொடுத்து வந்தோம். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் உலக இடம் நிர்ணயக் கருவி (ஜி.பி.எஸ்.) பொருத்தப்பட்ட படகுகளுக்கு, தகவல்களை தமிழில் மொழி பெயர்த்து அனுப்பினோம்.


    இந்த தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து மீனவர்களிடம் பரவலாக கருத்துகளைக் கேட்டு பெற்றோம். அவர்கள் கூறிய அம்சங்களையும் தொழில்நுட்பம் மூலமாக தகவல் பரிமாற்றத்தில் புகுத்தினோம்.
    இதற்காக டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பப்படி, மீனவ நண்பன் கைபேசி- முதல் பாகம் என்ற திட்டத்தைத் தொடங்கினோம். இதில், டாடா போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் எழுத்துத் தகவல்கள், குரல் தகவல்கள் கிடைக்கும் நிலை இருந்தது.


    எனவே அனைத்து மீனவர்களும் பயன்பெறும் வகையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின்படி, அதன் இரண்டாம் பாகம் என்ற திட்டத்தைத் டாடா கன்சல்டன்சி, குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து தயார் செய்து வருகிறோம்.


    இதன்படி, ஆண்ட்ராய்ட் 4.0 என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 3ஜி இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட செல்போன்களில், நாங்கள் கொடுக்கும் அனைத்துத் தகவல்களையும் மீனவர்கள் பெற வகை செய்யப்பட்டுள்ளது.


    அந்த செல்போன்களில் மீனவர்களுக்கான தனி “ஐ.கான்” கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் அதிக மீன் பிடிக்க வாய்ப்புள்ள பகுதி, ஜி.பி.எஸ்., கடல்நிலை முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான அரசுத் திட்டங்கள், மீன் சந்தை விலைத் தகவல்கள், உள்ளூர் செய்திகள், முக்கிய தொடர்பு எண்கள் ஆகியவை இருக்கும்.
    அதில் தேவையானதை கிளிக் செய்து தகவல் பெறலாம். யார் யார் எந்தெந்த பகுதிகளில் மீன் பிடிக்கிறார்களோ, அந்தந்த கடலில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். கடல் வழியாக வேறு மாவட்டத்துக்கு சென்றுவிட்டால்கூட, அந்தப் பகுதியின் விவரங்களையும் அறிய முடியும்.


    அதுமட்டுமல்லாமல், மீன்களைப் பிடித்து வெளியே கொண்டு வரும்போது, அந்தந்த வகை மீன்களின் விலையை கடலுக்குள் இருக்கும்போதே அறிந்து கொள்ளலாம்.


    இதுதவிர இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையில் உள்ள அச்சரேகை, தீர்க்கரேகை ஆகியவற்றின் இருப்பிடத்தையும் பதிவு செய்து வைத்துள்ளோம். எனவே இந்த செல்போனை கொண்டு சென்றால், கடல் எல்லைக்கு 5 கி.மீ. தூரத்தில் வரும்போதே, செல்போன் அலறத் தொடங்கிவிடும். இதன் மூலம் கடல் எல்லையை காட்டித் தரப்பட்டுவிடும். அதற்கேற்ற தொழில்நுட்பத்தை அதில் புகுத்தி இருக்கிறோம்.


    எனவே எல்லை குறித்த எச்சரிப்பை மீனவர்கள் அறிந்து அதற்கேற்றபடி செயல்படலாம். தற்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள 100 மீனவர்களுக்கு, 100 செல்போன்களை பரீட்சார்த்த முறையில் கொடுத்துள்ளோம். அவர்கள் அந்த செல்போன்களை பயன்படுத்திப் பார்த்து, மேலும் தகவல்களை சேர்க்கும்படி கேட்டுக்கொண்டால், அதையும் சேர்த்து தொழில்நுட்பத்தை முழுமையாக்குவோம்.


    இந்தப் பணிகள் முடிவதற்கு 6 மாதங்கள் ஆகும். எனவே முழுமை அடைந்த பிறகு அந்த ஐ.கானை கூகுள் போன்ற இணையதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்காக போட்டுவிடுவோம். எனவே நவீன வகை செல்போன் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களும் இந்த ஐ.கானை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.


    கடல் எல்லையை மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், இதுபோன்ற கருவிகள் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.கடல் எல்லை என்பது, கண்ணினால் தெரியும் அளவுக்கு ஏற்படுத்தவில்லை. தெரியாமல் எல்லையைக் கடந்து செல்லும் மீனவர்களுக்கு உயிர்காக்கும் தோழனாக இந்த செல்போன் இயங்கும்.” என்று தெரிவித்தார்கள்.


    Mobile phones distributed to fishermen

    ******************************* 


    Small mechanised boat fishermen of a couple of coastal villages in the district will enjoy a few extended benefits of safe fishing — by getting forecast information about the rough sea, bad weather; they can access information about their exact location in the waters thereby avoiding any trespassing in to the international marine boundary line. Further, they will get to know the information about marketing techniques.

    சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!

    By: Unknown On: 10:33
  • Share The Gag

  • இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.



    11 - international baby child day

     


    தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


    வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. 


    அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளை செய்வதில் நேரத்தை செலவிடாமல், பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.குழந்தைகள் பள்ளிக்கும், டியூஷனுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தைகளை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும்.


    பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா விஷயங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.


    இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    சேலம் மாவட்டத்தின் வரலாறு"!

    By: Unknown On: 10:13
  • Share The Gag




  • தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம்

    மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம்

    நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.  மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா

    என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில்

    நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

    சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.

    இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் 'சாலிய

    சேரமண்டலம்' எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின்

    கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக

    கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது
    நகரின் மைய பகுதியாக உள்ளது.

    சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.



    சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 10:07
  • Share The Gag

  •       சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
    லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
     
    சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
     
    கலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு கலைநயத்துடன் சாளுக்கியர் எழுப்பிய 10ஆலயங்களை உலக பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ 1987-ல் அறிவித்தது. இவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு வைபவமும் இங்கு நடந்திருப்பது இன்னொரு சிறப்பு.
     
    விருபாக்ஷர் ஆலயம்:
     
    சாளுக்கிய பேரரசி லோகமகாதேவி அமைத்த ஆலயம் இது. 'லோகேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தன் பல்லவர்களை வென்றதன் நினைவாக இதை கட்டியிருக்கிறார். காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டதாக கூறப்-படுகிறது. லிங்கோத்பவர், நடராஜர், உக்கிர நரமிம்மர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
     
    சங்கமேஸ்வரர் ஆலயம்:
     
    'விஜயேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சாளுக்கிய மன்னர் விஜயாதித்யா சத்யஸ்ரேயா. இந்த ஆலயத்தில் திராவிட கட்டடக்கலை மிளிர்கிறது. உக்கிர நரசிம்மர், நடராஜர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கோபுரம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
     
    மல்லிகார்ஜுனா ஆலயம்:
     
    விருபாக்ஷர் ஆலயத்தின் சிறிய வடிவம்தான் மல்லிகார்ஜுனா ஆலயம். விருபாக்ஷர் ஆலயம் கட்டப்பட்ட புதிதிலேயே இதுவும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
     
    காட சித்தேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயங்கள்:
     
    இவை இரண்டுமே சம காலத்தில் கட்டப்பட்டவை. காட சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் திரிசூலம் ஏந்திய சிவன் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
     
    பாபநாதர் ஆலயம்:
     
    ராமாயண, மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் பாபநாதர் ஆலயத்தில் நிறைய உள்ளன. இதே போல கல்கநாதா ஆலயம், ஜெயின் ஆலயம், நாகநாதர் ஆலயம், மகா குட்டேஸ்வரர் ஆலயம் ஆகியவையும் பல வரலாறுகளை உணர்த்தி வருகின்றன.
     
    எப்படிப் போகலாம்?
     
    பெங்களூரில் இருந்து சுமார் 495 கி.மீ தொலைவிலும், படாமியில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் பட்டாடகல் அமைந்துள்ளது. சுமார் 24கி.மீ தொலைவில் படாமியில் ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூரில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.   

    பட்டாடகல்லில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாளுக்யா உற்சவம் என்ற பெயரில் மூன்று நாட்கள் நாட்டியவிழா நடத்தப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாவை வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஆலயங்களின் பின்னணியில் பார்த்து ரசிப்பது பரவசம் தரக்கூடியது.
     
     

    பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-1- வரலாறு!

    By: Unknown On: 10:01
  • Share The Gag

  • உலகில் முதன் முதலாக வரையப்பட்ட வரைபடத்திலிருந்து நவீன காலம் வரை உள்ள வரைபடங்களை ஒரு பதிவாக இடலாம் என்று இந்த பதிவை ஆரம்பித்துள்ளேன்.



         உலக வரைபடங்கள் பண்டைய காலங்களில் வரையப்பட்டதில் பல்வேறு நிலைபாடுகள் காணப்பட்டன. மனித நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் ஆப்ரிகா, பாரசீகம், பாபிலோனியா சுற்றிய பகுதி தான் உலகம் என நினைத்துக்கொண்டிருந்தனர் உலகின் முதல் வரைபடமும் அப்படி தான் வரையப்பட்டுள்ளது 
     பின்பு உலகம் தட்டையானது என்ற நினைத்தனர். பின்பு உலகம் உருண்டை என பின்னால் வந்த அறிவியலாளர்கள் கூறினார். இருப்பினும் ஆதி காலத்திலேயே பூமி உருண்டையானது போன்ற வரைபடம் துல்லியமாக வரையப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் எப்படி வரைந்திருக்கமுடியும்? மேலே இருந்து வந்த வேற்று கிரக வாசிகள் தான் உதவியிருக்கவேண்டும் மேலும் பிரமிட்களை கட்டியிருக்கவேண்டும் என்பதற்கு பலமான சான்றுகள் உள்ளன எனினும் நிரூபிக்க முடியவில்லை. இனி உலகின் முதல் வரைபடம் பற்றி பார்ப்போம்.



    உலகின் முதன்மையான மிகவும் பழமையான நாகரிகமாக கருதப்படும் பாபிலோனியர்களால் வரையப்பட்டது. மேலும் உலகின் முதல் map ஆகவும் இது கருதப்படுகிறது.வரையப்பட்ட ஆண்டு தெளிவாக தெரியவில்லை.


    இரண்டாம் நூற்றாண்டு வரைபடம்:









    எகிப்து நாட்டை சேர்ந்த Claudius Ptolemaeus (Ptolemy) என்ற கணிதவியல் அறிஞரால் கி.பி 150 இல் வரையப்பட்டது.


    நான்காம் நூற்றாண்டு வரைபடம்:








                    நான்காம் நூற்றாண்டில் வரையப்பட்ட ரோம் நாட்டு map. மேலும் இது ஐரோப்பா, ஆசியாவின் ஒரு பகுதி(இந்திய), வட ஆப்ரிக்கா கவர் செய்கிறது.


    ஆறாம் நூற்றாண்டு வரைபடம்:







    அலெக்சாண்ட்ரியா நாட்டை சார்ந்த cosmas Indicopleustes என்ற கிரேக்க துறவியால் கி.பி 550 ஆண்டு வரையப்பட்ட வரைபடம். மேலும் இந்தியாவுடன் வாணிப தொடர்பு வைத்திருந்த இவர் பல முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இவரின் கருத்துப்படி  உலகம் தட்டையானது


    ஏழாம் நூற்றாண்டு வரைபடம்:




     



              ஸ்பெயின் நாட்டு அறிவியலாளரால் வரையப்பட்ட வரைபடம் இது வரைந்தவர் பெயர் மற்றும் ஆண்டு தெரியவில்லை..



    எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து அடுத்த பதிவில் பார்ப்போமா....





    வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)

    By: Unknown On: 09:47
  • Share The Gag



  •  
    ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது.


    அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச் சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ வெயிலில் விளையாடலாமே' என்றது.

    அதற்கு எறும்பு...மழைக்காலத்தில் வெளியே எவரும் செல்லமுடியாது...அதனால் அந்நேரம் தேவையான உணவை இப்போதே நான் என் புற்றில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்' என்றது.

    'மழைக்காலம் வர இன்னும் நாள் இருக்கிறது'என்று கூறிக்கொண்டே...வெட்டுக்கிளி நடனமாட ஆரம்பித்தது.

    மழைக்காலமும் வந்தது.

    'தான் சேகரித்த உணவை உண்டு ..தன் புற்றுக்குள்ளேயே இருந்தது எறும்பு....

    அப்போது உணவு ஏதும் கிடைக்காததால் எறும்பிடம் வெட்டுக்கிளி வந்து ..சிறிது உணவளிக்க வேண்டியது.

    தன்னிடமிருந்த அரிசியில் சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு ....'அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று எனக்கும் ஏன் இன்று உனக்கும் உதவியது...இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல்..வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்' என்றது.

    சோம்பலில்லாமல் கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.