Tuesday 12 November 2013

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

By: Unknown On: 23:18
  • Share The Gag
  • விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.



    சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.


    இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.


    இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது.


    "x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப் (kill) படுகின்றன”.


    இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை



    என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

    உயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்!

    By: Unknown On: 23:11
  • Share The Gag
  • இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.

    ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது.

    இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது.

    பேஸ்புக்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.
    கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர். (பார்க்க: usatoday.com) கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை

    வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. கூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

    * புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.

    * சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.

    * வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், கூகுள் Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளஸ் தளத்திற்கு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ கிளிப் பைல்களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வீடியோ படங்களைத் தயாரிக்க முடியும்.

    மேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 டாலர் என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

    கூகுள் ஒதுக்கித் தள்ளியவை!

    By: Unknown On: 23:06
  • Share The Gag
  • கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.

    1. கூகுள் ரீடர் (Google Reader RSS reader): சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர். சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.

    2. ஐகூகுள் (iGoogle): இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது. எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.

    3. லேட்டிட்யூட் (Latitude): ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.

    4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time): கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள். கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.

    5. பில்டிங் மேக்கர் (BUILDING MAKER): கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள். இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.

    6. க்ளவ்ட் கனெக்ட் (CLOUD CONNECT): இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.

    7. பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ் (GOOGLE VOICE APP FOR BLACKBERRY): ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.

    8. கூகுள் சிங்க் (GOOGLE SYNC (Consumer version): இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது. ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும். மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.

    தனுஷ் (நடிகர்) - வாழ்க்கை வரலாறு!

    By: Unknown On: 21:29
  • Share The Gag
  •  Actor-Dhanush

    ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார். தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.


    2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

    பிறப்பு: ஜூலை 28, 1984

    பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

    பணி: நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்

    நாட்டுரிமை: இந்தியன்


    பிறப்பு


    நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார்.

    ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

    அவர், தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

    திரையுலகப் பிரவேசம்

    தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2௦௦2 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, அவர் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி, இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டார்.

    திரையுலக வாழ்க்கை

    தனது ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ (2௦௦3) திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ (2௦௦4), ‘சுள்ளான்’ (2௦௦4), ‘ட்ரீம்ஸ்’ (2௦௦4), ‘தேவதையைக் கண்டேன்’ (2௦௦5), ‘அது ஒரு கனாக்காலம்’ (2௦௦5), ‘புதுப்பேட்டை’ (2006), ‘திருவிளையாடல் ஆரம்பம்’ (2006), ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ (2007), ‘பொல்லாதவன்’ (2007), ‘யாரடி நீ மோகினி’ (2008), ‘படிக்காதவன்’ (2009), ‘குட்டி’ (2010), ‘உத்தமபுத்திரன்’ (2010), ‘ஆடுகளம்’ (2011), ‘சீடன்’ (2011), ‘மாப்பிள்ளை’ (2011), ‘வேங்கை’ (2011),       ‘மயக்கம் என்ன’ (2011), ‘3’ (2012) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் தனுஷ்      

    2013, அவர் ஆனந்த் எல். ராய் அவர்கள் இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெற்ற அப்படத்தை, ‘பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்துள்ளது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

    பிற சாதனைகள்

    நடிகராகப் பெரிதும் சாதித்த அவர், தான் நடித்த ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வந்தார். அவர் பாடிய அனைத்து பாடல்களும் பிரபலமாகி, மக்களிடையே வரவேற்பையும் பெற்றுத் தந்தது எனலாம். அவ்வாறு பாடியதே, அவரை சுயமாகப் பாடல்கள் எழுதவும் தூண்டியது. அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் அவர், ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பெற, அவர் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியப் படமான ‘3’ (2012) படத்தில், அனைத்து பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் ‘எதிர் நீச்சல்’ (2013) படத்தில் ‘நிஜமெல்லாம்’, ‘பூமி என்னை சுத்துதே’ மற்றும் ‘மரியான்’ (2013) படத்தில் ‘கடல் ராசா நான்’ போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

    நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ (2012) மற்றும் ‘எதிர் நீச்சல்’ (2013) போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.

    இல்லற வாழ்க்கை

    அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, 2004 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.

    விருதுகள்

    •2008 – ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.

    •2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது’ வென்றார்.

    •2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ மற்றும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ பெற்றார்.

    •2011 – ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகப் பெற்றார்.

    •2012 – ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றார்.

    •2012 – அவர் எழுதிப் பாடிய பாடலான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.

    300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

    By: Unknown On: 20:33
  • Share The Gag
  •  

    இரண்டாம் உலகம்’ திரைப்படம் 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

    ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கியிருக்கும் மெகா பட்ஜெட் படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் தமிழகம் முழுவதும் 22ம் தேதி 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதற்காக திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக ‘ஆரம்பம்’, ‘பாண்டிய நாடு’ படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் ‘இரண்டாம் உலகம’ படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது.

    மேலும் இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது.  தெலுங்கில் இப்படம் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் த்ரில்லான அனுபவமாக படம் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் செல்வராகவன்.

    17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா!

    By: Unknown On: 20:27
  • Share The Gag
  •  

    சுமார் 17 ஆண்டுகள் கழித்து ‘ரோஜா’ மதுபாலா தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

    ‘காதலில் சொதப்புவது எப்படி’ இயக்குனர் அடுத்து இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘வாயை மூடி பேசவும்’ . இதன் மூலம் மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

    இவைதவிர, ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்த நடிகை மதுபாலா தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார். இந்தப் படத்தில் அவர், நஸ்ரியாவின் உறவினராக, ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலான மதுபாலா சுமார் 17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறார்.

    தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை. மூணாரில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் வரும் 19ஆம் தேதி முதல் மதுபாலா கலந்துகொள்கிறார்.

    மங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்...

    By: Unknown On: 20:12
  • Share The Gag

  • செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக  1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான்  விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.

    இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களின் நட்சத்திர பலன்கள்!

    By: Unknown On: 20:05
  • Share The Gag
  • ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.

    1.அசுவினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.

    2.பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.

    3.கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.

    4.ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.

    5.மிருகசிரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.

    6.திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.

    7.புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.

    8.பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.

    9 ஆயில்யம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.

    10.பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.

    11.உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.

    12.அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.

    13.சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.

    14.சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.

    15.விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.

    16.அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.

    17.கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.

    18.மூலம்: குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.

    19.பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.

    20.உத்திராடம்: பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.

    21.திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.

    22.அவிட்டம்: சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.

    23.சதயம்: பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.

    24.பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.

    25.உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.

    26.ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.

    27.மகம்: ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்

    64 கலைகள்!

    By: Unknown On: 19:57
  • Share The Gag
  • 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
    2. எழுத்தாற்றல் (லிபிதம்);
    3. கணிதம்;
    4. மறைநூல் (வேதம்);
    5. தொன்மம் (புராணம்);
    6. இலக்கணம் (வியாகரணம்);
    7. நயனூல் (நீதி சாத்திரம்);
    8. கணியம் (சோதிட சாத்திரம்);
    9. அறநூல் (தரும சாத்திரம்);
    10. ஓகநூல் (யோக சாத்திரம்);
    11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
    12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
    13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
    14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
    15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
    16. மறவனப்பு (இதிகாசம்);
    17. வனப்பு;
    18. அணிநூல் (அலங்காரம்);
    19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
    20. நாடகம்;
    21. நடம்;
    22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
    23. யாழ் (வீணை);
    24. குழல்;
    25. மதங்கம் (மிருதங்கம்);
    26. தாளம்;
    27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
    28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
    29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
    30. யானையேற்றம் (கச பரீட்சை);
    31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
    34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
    35. மல்லம் (மல்ல யுத்தம்);
    36. கவர்ச்சி (ஆகருடணம்);
    37. ஓட்டுகை (உச்சாடணம்);
    38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
    39. காமநூல் (மதன சாத்திரம்);
    40. மயக்குநூல் (மோகனம்);
    41. வசியம் (வசீகரணம்);
    42. இதளியம் (ரசவாதம்);
    43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
    44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
    45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
    46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
    47. கலுழம் (காருடம்);
    48. இழப்பறிகை (நட்டம்);
    49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
    50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
    51. வான்செலவு (ஆகாய கமனம்);
    52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
    54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
    55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
    56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
    57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
    58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
    59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
    60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
    61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
    62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
    63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
    64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

    கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை….!! அவசியம் படிக்க வேண்டும்!!

    By: Unknown On: 19:43
  • Share The Gag
  • ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
    கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
     திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

    என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
     வந்து பார்த்தா அந்த நாய் வாயில
     ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

    கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
     சீட்டை எடுத்து அதில் உள்ள
     சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
     அதே பையில் நாய் கழுத்தில்
     மாட்டிவிட்டார். ..

    நாய் திரும்பி நடக்க
     ஆரம்பிச்சுது..

    . கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
     பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

    அந்த நாய் தெருவை கடந்து மெயின்
     ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..

    அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

    பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

    கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…

    அது பின்னாலே அதன் வீடு செல்ல
     முடிவெடுத்தார். ..
    அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
     நின்றது..

    ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
     பேருந்தில் ஏறியது..

    கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
     பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
     கொடுத்தார்..

    இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
     பேருந்தில் இருந்து இறங்கியது…

    கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்…

    நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
     நின்று கதவை தட்டியது…

    கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்…

    நாயின் கழுத்தில் உள்ள
     பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்….
    கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
     அடிக்கறீங்க??

    அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
    சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
     எடுத்துகிட்டு வருது அதை போய்
     அடிக்கறீங்களே …???

    அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
     எடுத்துட்டு போகாம வந்து கதவ
     தட்டுது பாருங்க..

    நாய்க்கு கொஞ்சம் கூட
     பொறுப்பே இல்லன்னு….

    # # # #
    நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
     பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
     பெயரே கிடைக்காது.

    எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?

    By: Unknown On: 18:58
  • Share The Gag
  • ரயில்ல டிக்கெட் எடுக்காம வந்துட்டு தேவையில்லாததை
     எல்லாம் பேசறான் சார் இவன்…!
    -
    அப்படி என்ன பேசறான்?
    -
    ஓட்டல்ல டிபன் சாப்பிட்டு, காசு இல்லேன்னா,
    மாவாட்டற மாதிரி, இங்கே டிக்கெட் இல்லாததுக்கு
     ஒரு மணி நேரம் டிரெயின் ஓட்டறேன்னு சொல்றான்…!
    -
    ——————————————————————————-
     -
    யோவ்…படம் ஓடிட்டிருக்கும்போது தொண
     தொணன்னு பேசறீங்களே…எதுவும் புரியலே…!
    -
    இது எங்க பெர்சனல் மேட்டர்…உனக்கு ஏன் புரியணும்..!
    -
    ———————————————————————————

    -
    எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?
    -
    எலெக்ஷன் பூத்துல போறதுக்கு முன்னாடி பணம்
     கிடைக்கும், ஏடி.எம்.பூத்துல போன அப்புறமாத்தான்
     பணம் கிடைக்கும்…!

    நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது!

    By: Unknown On: 18:37
  • Share The Gag
  •  நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது

    do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது.


    idiots movie என்று டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "அஜித் படம்" என்று காண்பிக்கிறது.

    http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள்.

    கூகிள் டிரான்ஸ்லேஷனில் சஜஷன்ஸ் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் எதிர்ப்பாளர்கள் யாரோ விளையாடி விட்டார்கள் போல.

    உங்கள் Mobile Phoneல் இருந்து Computerயை இயங்க வைப்பது எப்படி?

    By: Unknown On: 18:29
  • Share The Gag
  • அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

    இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

    Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

    Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.

    left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

    Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

    இதை தரவிறக்கம் செய்ய...

    https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

    கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!

    By: Unknown On: 18:03
  • Share The Gag
  •  ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம்.

    அப்போது இன்னும் பலருக்கு கணக்கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?


    இதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.வரும் பகுதியில் “Accounts and Import” என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Grant access to your account” என்பதற்கு வரவும். அதில் “Add another account” என்பதை கிளிக் செய்யுங்கள்.

    இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் “Send Email to Grand Access” என்பதை கொடுத்து விடவும்.
    இப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும்.

    இதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும்.

    இதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.

    உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.

    மேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.
    இதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.


    இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் “You have granted access to your account toxxxxxxx @gmail.com. This notice will end in 7 days.” என்று இருக்கும்.

    வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

    By: Unknown On: 17:46
  • Share The Gag
  • தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

    இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.

    ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

    இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

    1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

    2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

    3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

    4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

    5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

    ◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

    ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

    உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்….

    மெழுகு பூசப்பட்ட “கப்’ – விழிப்புணர்வுக்காக...!

    By: Unknown On: 17:22
  • Share The Gag
  • ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

    அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’ களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

    தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

    இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

    அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
    “டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்’ என்று கூறினார் டாக்டர்.

    அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

    கேள்விப்பட்ட தகவல்!

    By: Unknown On: 17:11
  • Share The Gag

  • 1) மனித கண்கள் ஒரு டிஜிட்டல் கேமிராவாக இருந்தால் அது 576 மெகா பிக்சலுக்கும் அதிகமாக செயல்படும்!.

    2)கொட்டாவி வரும்போது நாக்க தொட்டிங்கன்னா கொட்டாவி சட்டுன்னு நின்னுரும்!!

    3) பிரபல பொழுதுபோக்கு தளமான டிஸ்னிலாண்ட் 17 நாடுகளை விடப் பெரியது!
    ...
    4) பேஸ்புக்க விட ட்விட்டர் பக்கம் எடுத்துக்கொள்ளும் டேட்டா யூஸ்சேஜ் அளவு குறைவு

    5) முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணிநேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்!!

    6) மூளையிலிருந்து மற்ற இடங்களுக்கும் மற்ற இடங்களிலிருந்து மூளைக்கும் செல்லும் கட்டளைகள் சுமார் 274கி.மீ வேகத்தில் அனுப்படுகின்றன!.

    7) ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி!! டிவிட்டரின் டிபால்ட் புரொபைல் பிக்ச்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்! நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு

    மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்!

    By: Unknown On: 16:56
  • Share The Gag
  • நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

    nov 12 - tec heart

    அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஸ்கேனிங் முறையின் மூலம் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்த தொழில்நுட்பம், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஆபத்தான பொருட்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளிர வைத்து அதிகக் கூர்மையுள்ள ஸ்கான்களின் மூலம் அவைகளை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மாரடைப்பு ஏற்பட்ட 40 பேர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் , இந்த ஸ்கேன், 37 நோயாளிகளின் இதயத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டியது குறிப்பிடத்தக்கது .

    Heart disease health centre

    **********************************************


    1th November 2013 – University of Edinburgh researchers have developed a new scanning technique that could help identify people who are at a high risk of having a heart attack.A PET- CT scan is used along with a radioactive tracer called 18F- sodium fluoride or 18F-NaF. This is already in use for bone scans, but is now showing promising results for heart patients after a small study.

    நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

    By: Unknown On: 16:49
  • Share The Gag
  • இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.

                                      

    நவீன இந்தியாவை உருவாக்க காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று படேல் விரும்பினார். அதன் முதல் கட்டமாக தனியாக உறுப்பினர்கள் கட்சி அமைப்பு மற்றும் திட்டம் கொண்டிருப்பவர்களை காங்கிஸ் கட்சியின் உறுப்பினர்களாக அனுமதிக்கும் இரட்டை உறுப்பினர் கொள்கையை எதிர்த்தார். இந்த இரட்டை உறுப்பினர் முறையைத் தடை செய்யும் தீர்மானத்தை 1948ல் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நிறைவேற்ச் செய்தார் படேல். இதனால் காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்து வந்த காங்கிரஸ் சோசலிச கட்சி காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. இது நேருவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் கட்சியை மீண்டும் பலப்படுத்த நேரு தொடர்ந்து முயற்சித்தார்.

    1950ல் பட்டேலின் மரணத்திற்கு முன் காங்கிரஸ் தலைமை பொறுப்பை கைப்பற்ற கட்சிக்குள் தீவிர போராட்டமே நடைபெற்றது. இதனால் கட்சி தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற தேர்தலில் பட்டேல் ஆதரித்த புருஷோத்தம் தாஸ் தான்டனுக்கு எதிராக ஜெ.பி.கிருபாளினியை தனது தரப்பு வேட்பாளராக நேரு ஒருதலைபட்சமாக அறிவித்தார். தான்டன் விஷயத்தில் நேருவிற்கும், பட்டேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது. இதன் பிறகு தான்டனை நேரு தொடர்ந்து பல்வேறு விதங்களில் விமர்சித்து வந்தார். டில்லியில் நடைபெற்ற அகதிகள் மாநாட்டில் தான்டன் கலந்து கொண்டதையும் நேரு கடுமையாக விமர்சித்தார். நேரு கையாண்ட இந்த போலி மதசார்பின்மை, கட்சியின் கொள்கைகளுக்கும் பண்புக்கும் எதிராக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல சமயங்களில் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.

    கட்சி தலைவராக தான்டன் தேர்வு செய்யப்பட்டால் தான் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலகி விடப் போவதாகவும் நேரு மிரட்டல் விடுத்தார். இறுதியாக தலைவர் தேர்தலில் தான்டன் 1306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நேரு நிறுத்திய கிருபாளினியால் 1092 ஓட்டுக்கள் மட்டுமே பெற முடிந்தது. சொன்னபடி நேருவும் கட்சியில் இருந்து விலகவில்லை.

    பட்டேலின் மரணத்திற்கு பின் கட்சிக்குள் இருந்த ஜனநாயக கட்டுப்பாடு காணாமல் போனது. நேருவின் ஆதரவாளரான எஸ்.கே.சின்கா பீகாரின் முதல்வராக்கப்பட்டு காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இணைந்தார். பின்னர் நேருவின் நிர்பந்தத்தால் லோக்சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான்டனுக்கு எதிராக சக்ரவியூகத்தை நேரு கையாண்டார். அதன் விளைவாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலக தான்டனுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இறுதியாக தான்டன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தான்டன் தொடர்ந்தார்.

    நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. அஜ்மீர் வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஷங்கர் பிரசாத்தை தலைமை செயலராக நியமிக்க பட்டேல் உறுதியுடன் இருந்தார். ஆனால் நேரு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் பின்னர் ஹச்.வி.ஆர்.ஐயங்காரை தற்காலிக செயலாளராக நியமித்தார். இதுவே இவர்கள் இருவருக்கிடையேயான கொள்கைகளுக்கிடையே மோதலாக உருவானது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சட்ட ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்க வேண்டும் என நேரு வலியுறுத்தினார். மதக்கலவரங்களின் போது பயங்கரவாதிகள் என சிறுபான்மையினரை கைது செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு இணையாக இந்துக்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் நேரு தெரிவித்தார். இதனை பட்டேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மகாத்மா காந்தியிடம் ராஜினாமாவை அளித்தனர். ஆனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வேறு வழியின்றி இருவேறு கொள்கைகளைக் கொண்ட இருவரும் ஒரு விசித்திர கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினர்.

    இந்திய வரலாற்று புத்தகங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இதுபோன்ற வேற்றுமைகள் மறைக்கப்பட்டும், புறம்தள்ளப்பட்டும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே குடியுரிமை உள்ள ஒரே நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று அரசியல் நிர்ணயசபை உறுதி அளித்திருந்தது. ஆனால் நேருவின் குறுகிய நோக்கத்தால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. அவர் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்ற வாத அடிப்படையில் ஓரங்கட்டினார். இத்தகைய போலி மதசார்பின்மை கொள்கை காங்கிரசில் புதிய தலைவர்கள் உருவாவதை தடுத்தது. இந்த போக்கு குறித்து அன்றைய காங்கிரஸ்காரர் டி.பி.மிஸ்ரா கூறுகையில், “களிமண்ணில் இருந்து தலைவர்களை உருவாக்கினார் காந்திஜி; ஆனால் நேருவின் தலைமையோ அந்த தலைவர்களை வெறும் ஜடங்கள் ஆக்கிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

    ‘கொக்கைன்’ மற்றும் ஹோமோ மோகத்தில் வளர்ந்தவர் ஒபாமா!

    By: Unknown On: 16:37
  • Share The Gag
  • அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.

                                  nov 2 - obama

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,”பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.

    அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது. வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்தது.”என்று அவர் கூறியுள்ளார்.

    Obama Was A Cocaine-Using Gay Hustler, Says Woman Who Claims To Have Been Hawaiian Classmate

    *********************************************************
     

    A woman who claims to have been a classmate delivered some bizarre claims about President Barack Obama in an interview.As Right Wing Watch first reported, Mia Marie Pope told right-wing preacher James David Manning that she believes that Obama was not only active within the gay community, but also a heavy cocaine user during his years in Hawaii.

    தமிழரின் கலைகள் - களரிப் பயிற்று!

    By: Unknown On: 08:02
  • Share The Gag
  • முன்னுரை:

    சமூக அமைப்பில் பொழுதுபோக்கிற்காகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்ற கலைகள் பலவாகும். அவற்றுள் சில உடல்உரத்தையும் வீரத்தையும் வளர்க்கும் வீரக் கலைகளாக வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த வீரக் கலைகள் ”தற்காப்புக் கலைகள்” என்று வழங்கப்படுகின்றன. பண்டைக் காலங்களில் கோயில் திருவிழாக்களில் பிறரை மகிழ்விப்பதற்காகவும் போர்க்காலங்களில் எதிரியைச் சமாளிப்பதற்காகவும் இக்கலைகள் பயன்பட்டன. (க. இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). தற்காப்புக் கலைகளாக குத்து, சுருள், கட்டாரி, களரிப்பயிற்று, சிலம்பம், வர்மம் போன்றவைகள் இடம் பெறுகின்றன. இதில் களரிப்பயிற்று பற்றியும் களரியில் சிலம்பம், வர்மம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

    களரிப்பயிற்று:

    களரிப்பயிற்று என்ற கலை ”களரி” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம் (கழகத் தமிழகராதி) என்றும் பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைந்து ”களரி பயிற்றுவித்தல்” என்று வழங்கப்படுகிறது. களரி பயிற்றுவித்தல்” என்ற தமிழ்ச்சொல் ”களரிப்பயிற்று” என்று மருவி வழங்கப்படுவதாகக் கருதப்படுகிறது. (க.இரவீந்திரன் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை) இது தமிழகத்தின் பழமையான வீரவிளையாட்டுக் கலையாகும். எதிரியைத் தாக்கவும் மடக்கவும் இக்கலை உதவுகிறது.

    களரிப்பயிற்றின் வகைகள்:

    மக்களிடையே இக்கலை வழங்கப்படும் நோக்கில் இரண்டு வகை, மூன்று வகை, நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். வடக்கன் களரி, தெக்கன் களரி, என இரண்டு வகைப் பிரிவுகள் உள்ளன. (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை). வடக்கன் களரி, தெக்கன் களரி, மத்திய களரி என மூன்று வகைப் பிரிவுகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர் (கோபுடா எஸ்.கிருஷ்ணமூர்த்தி உலக தற்காப்புக் கலைகள்). வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் களப்பணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் திருவிதாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெக்கன் களரி உருவானதாகவும் கேரளாவில் மலபார், கோகர்ணம் போன்ற பகுதிகளில் வடக்கன் களரி உருவானதாகவும் குறிப்பிடுகின்றனர். கோட்டயம், திருச்சூர் போன்ற பகுதிகளில் தெக்கன் களரி மற்றும் வடக்கன் களரி கலந்த பயிற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது. இதை மத்திய களரி என்று வழங்குகின்றனர். இக்கலையை முற்காலங்களில் சத்திரியர்களும் போர் வீரர்களும் அரச குடும்பத்தினரும் கற்றுள்ளனர். நாளடைவில் சாதி மத அடிப்படை இல்லாமல் அனைத்து மக்களும் கற்று வருகின்றனர்.

    களத்தின் அமைப்பு:

    களரிக் களமானது 42 அடி நீளமும் 21 அடி அகலமும் சுற்றிலும் 9 அடி உயரத்திற்கு மதில் சுவர் கட்டப்பட்டதாகவும் இருக்கும். 42 அடி நீளமும் 21 அடி அகலமும் கொண்ட களம் தரை மட்டத்திற்குக் கீழ் அமைக்கப்பட்டு மேல் பகுதியில் தென்னங்கீற்றுக் கூரை வேயப்பட்டிருந்தால் அது ”குழிக் களரி” என்று அழைக்கப்படுகிறது. களரிக் களத்தின் தென் மேற்கு மூலையில் (கன்னி மூலை) கால் வட்ட வடிவில் ஏழு படிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஏழாவது படியில் களரி தெய்வத்தை (சிவன் அல்லது விஷ்ணு) வைத்து பூஜிப்பர். இந்தப் பகுதிக்கு ”பூத்தறை” என்று பெயர். இந்த படிகளின் இரு பக்கங்களிலும் ஆயுதங்களை நிரப்பி வைத்திருக்கின்றனர்.

    பயிற்சியின் வகைகள்:

    வாய்த்தாரி, மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கதாரி, வெறுங்கைப் பிரயோகம் என்னும் பயிற்சி முறைகள் உள்ளன.

    வாய்த்தாரி:

    வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்வர். இவ்வாறு வாய்மொழியாகப் பாடும் பாடலை வாய்த்தாரி என்று வழங்குகின்றனர். இப்பாடல் பிறருக்குப் புரியாத அடையாள வார்த்தைகளால் அமைக்கப்பட்டிருக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.


    ”தொழுது மாறினு வச்சு வலத்து சவுட்டி
    வலந்திரிஞ்நு இடது கொண்டு இடது காலின்றெ வெள்ள தொட்டு
    கைநீர்த்தி கைக்கு நோக்கி கை நெற்றிக்கு வச்சு வணங்கியமர்ந்து
    வலத்து நேரே மும்பில் சவுட்டி இடத்து கொண்டு
    இடது காலின்றெ…..”


    மெய்த்தாரி:

    மெய்த்தாரி என்பது களரிப்பயிற்சி முறைகளை மிக நன்றாகச் செய்யும் வண்ணம் உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.


    ”கை தொழுது மாறத்துப் பிடிச்சு வலத்து சவுட்டி
    வலபாகம் திரிஞ்நு நீர்ந்து இடது காலின்றெ வெள்ள தொட்டு
    தொழுதமர்ந்து முட்டூந்தி கும்பிட்டு……”


    அங்கதாரி:

    ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறைகளை அங்கதாரி என்று அழைக்கின்றனர். இதனைப் பின்வரும் பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.


    ”அமர்ந்து அங்கம் தொட்டு வந்திச்சு
    அங்கமெடுத்து களரிக்கு வந்நிச்சு கைகூட்டி
    நெஞ்சத்து வச்சு வணங்கியமர்ந்து பொங்கி உளவு
    மாறி வலத்துளவுட இத்துளவு…….”


    கோல்த்தாரி:

    கோல்த்தாரி என்பது கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையாகும்.

    வெறுங்கைப்பிரயோகம்:

    கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் பயிற்சி முறையாகும்.

    ஆசனங்கள்:

    ஆசனங்கள் என்பவை உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சி முறைகளாகும். ஆசனங்களை யோகாசனங்கள் என்றும் அழைக்கின்றனர். ஆசனங்களின் வகைகளாக பத்மாசனம், சிரசாசனம், உத்கட்டாசனம், பசுமுகாசனம், மயூராசனம், ஏகபாதாசனம், மகராசனம், புஜங்காசனம், மேருதண்டாசனம், சலபாசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், வஜ்ராசனம், சவாசனம் போன்றவற்றைத் தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆயுதங்கள்:

    கோல்த்தாரியில் இடம் பெறும் ஒரு சாண் கம்பு, முச்சாண் கம்பு(மூன்று சாண் கம்பு) ஆறு சாண் கம்பு, ஒற்றைக் கம்பு, பன்னிரண்டு சாண் கம்பு மற்றும் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு (இது தரையிலிருந்து ஒரு மனிதனின் மூக்கு வரை நீளமுடையது) ஆகியவையும் அங்கதாரியில் வாள், வடிவாள், சுரிகை, உறுமி (சுருட்டுவாள்), கடாரி, கடகோரி (கெட்டுகாரி), வெண்மழு, குந்தம் (ஈட்டி), பரிஜை (கேடயம்), கெதை ஆகிய ஆயுதங்களும் இடம் பெறுகின்றன.

    களரியும் வர்மக்கலையும்:

    உடலில் மறைந்துள்ள முக்கியமான இடங்களைக் கணித்து அவற்றைத் தாக்கி எதிரியை நிலை குலையச் செய்யும் கலை. நாடி நரம்புகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலைத் திகழ்கிறது வைத்திய முறைக்கும் பங்களிக்கிறது உடலில் அடிப்பட்ட இடத்தில் வர்மம் கொண்டிருந்தால் அதற்கேற்ப வைத்திய சிகிச்சை முறையை மேற்கொள்வர் இந்த முறையை ”சித்த வர்ம வைத்தியம்” என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர் (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). இந்த சிகிட்சை முறையை களரி ஆசான்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

    களரிப்பயிற்றில் சீடர்கள் பயிற்சியின் போது வர்மம் கொள்ள நேர்ந்தால் ஆசான்கள் உடனடியாக சிகிச்சை செய்து அவர்களைக் காப்பாற்றுவர். களரி பயிற்றின் வாரி, ஆனவாரி இவை போன்ற பூட்டுகள் வர்மப் புள்ளிகளைக் குறிவைத்தே செய்யப்படுகின்றன. இந்த வர்மமும் வர்ம வைத்திய முறையும் அகத்திய முனிவரின் தலைமையிலான சித்த முனிவர்களால் எழுதிவைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. ஒரு மனிதனின் உடம்பில் 108 வர்மப் புள்ளிகள் காணப்படுகிறது. வர்மப் புள்ளிகளை உடம்பில் கொள்ளச் செய்யும் முறையின் அடிப்படையில் தொடுவர்மம் 96, படுவர்மம் 12 மொத்தம் 108 என்றும், இதே வர்மப் புள்ளிகளை உடம்பின் கண்டங்களின் அடிப்படையில் தலையில் 25, கழுத்து முதல் நாபி வரை 45, நாபி முதல் மூலம் வரை 9, கையில் 14, காலில் 15 மொத்தம் 108 என்றும், தோஷங்களின் அடிப்படையில் வாத வர்மம் 64, பித்த வர்மம் 24, சிலேத்தும வர்மம் (கப வர்மம்) 6, உள் வர்மம் 14 மொத்தம் 108 எனவும் குறிப்பிடுகின்றனர்.

    களரியும் சிலம்பும்:

    சிலம்பம் என்று அழைக்கப்படும் சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் களரியில் கோல்த்தாரியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஒத்தது. களரியில் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையையே சிலம்பம் என்று வழங்குகின்றனர். சிரமப் பயிற்சி பார்வையாளர்களை எளிதில் ஈர்க்கும் சுவடுகள் அடங்கியது ஆகும். எனவே அதை மட்டும் பயின்று சிலர் அதை ஒரு தனிக்கலையாக உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    முடிவுரை:

    கலைப் பொக்கிஷங்களின் வரிசையில் களரி என்ற தற்காப்புக் கலை மிகவும் சிறப்பிடம் பெற்றுத் தனித்தன்மை வாய்ந்த கலையாகத் திகழ்கிறது. தவ முனிவர்கள் தந்த இக்கலையை அதன் மகிமையை அறிந்து முற்காலத்தில் பலர் பயின்று தேர்ச்சிப் பெற்ற ஆசான்களாகவும் மிகச் சிறந்த போர் வீரர்களாகவும் திகழ்ந்தனர். தற்போதைய இளைஞர் சமுதாயம் இக்கலையின் பழமையையும், பெருமையையும் அதன் உயிரோட்டமான நயங்களையும் அறியாததால் அதை விரும்பிப் பயில ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தல் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியின் குண்டுகளைக் கூட இக்கலையை பயின்று தேர்ச்சிப் பெற்றவர்களால் தடுக்க இயலும். மேலும் மனிதன் தன்னைத் தானே புரிந்து கெண்டு பிறருக்கு உதவிச் செய்யக்கூடிய நல்லுள்ளம் கொண்ட ஒரு முழு மனிதனாக வாழ இந்த கலை உதவிச் செய்கிறது. எனவே இன்றைய இளைஞர்கள் இக்கலையை ஆர்வமுடன் பயின்று அவர்களும் பயன்பெற்று அழிந்து வரும் உயிரோட்டமான இக்கலையை உயிர் பெறச் செய்து சமுதாயத்திற்கும் உகந்த கலையாகப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை

    அழகிய குறிப்புகள்...

    By: Unknown On: 07:57
  • Share The Gag
  •  ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?

        அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

    நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.

    உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    · மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும். எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் நல்லது.

    · நீர் அருந்த வேண்டும். சீரகம் கலந்து நன்கு காய்ச்சிய கொதிநீரை ஆறவைத்து குடிக்க வேண்டும்.

    · இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம், பழுத்த கொய்யா மற்றும் அந்த அந்த சீசனில் அதிகளவு விளையும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களில்தான் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

    · கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    · எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    · அதிகம் குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ முகத்தைக் கழுவக் கூடாது.

    · முகத்தைத் துடைக்க மென்மையான பருத்தித் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.

    · வெள்ளரிப் பிஞ்சை வாங்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சாத பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதை எடுத்து முகத்தின் மீது தடவினால் முகம் பொலிவுறும்.

    · முகத்தில் பருக்கள் தோன்றினால் அதைக் கிள்ளக் கூடாது.

    · இரவு படுக்கைக்கு முன் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். பின் சுத்தமான சந்தனத்தோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

    · தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் செய்துவந்தால் உங்கள் முகமும் கண்ணாடி போல் ஜொலிக்கும் .

    · மன அழுத்தம், அடிக்கடி கோபம், பயம், எப்போதும் ஒரே சிந்தனை போன்றவற்றின் தாக்கம் முதலில் முகத்தில்தான் ஆரம்பிக்கும்.

    · திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது வசம்பு, ஜாதிக்காய் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மாறும்.

    · சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

    · மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    · உணவில் அதிக காரம், உப்பு சேர்க்கக் கூடாது.

    · தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வது நல்லது.