Friday 3 January 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

By: Unknown On: 23:11
  • Share The Gag
  •  

     மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


    மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.


    மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

    நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.....!?

    By: Unknown On: 22:52
  • Share The Gag




  • திருமணம் முடிந்த ஆறே மாதத்தில்
     ஒத்துவராது என
     முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும்

     ஏனோதானோவென
     வாழ்ந்து இப்போது ஆறு வருடம்
    கழித்து விவாகரத்து
     தீர்ப்பிற்காய் மகள்

     தீபாவோடு கோர்ட்டில்
     காத்திருந்தனர்.

    குழந்தையை யார்
     பங்கு போட்டுக்கொள்வது என்ற
     பிரச்னையில் இருவரும்
     உரிமை கொண்டாட

     குழம்பிப்போன
     நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை
     கேட்டார்.

    அங்கிள் ரெண்டு பேருமே ஏன்
     பிரியறாங்க..? என்ற
     எதிர்பாராத தீபாவின் கேள்வியில்

     ஆடிப்போனார் நீதிபதி.
    அது… வந்து…
    அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா
     பேசறது அம்மாவுக்கும்
     புரியலையாம்.அதான் பாப்பா..
    அவங்க பிரியறாங்க… என
     சமாளித்தார்.

    அங்கிள்
     ரெண்டு பேருமே பெரியவங்க.
    அவங்க பேசறதே
     அவங்களுக்கு புரியலைன்னா,நான்

     இன்னும் சின்னப்
     பொண்ணு. நான் பேசறதை அவங்களால
     எப்படி புரிஞ்சுக்க முடியும்?

    அதனால என் பேச்சை கேட்டு,
    புரிஞ்சு எனக்கு
     எல்லாம் செய்யற வேலைக்காரப்
     பாட்டி வீட்டிற்கே

     போயிடறேன் என்ற தீபாவின் பேச்சைக்
     கேட்ட
     நீதிபதியின்
     பேனா தானாகவே உடைந்தது!

    குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...

    By: Unknown On: 22:41
  • Share The Gag




  • குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...



    காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது.


    மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை காதுக்குள் நுழைய விடாமலும் தடுக்கும். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமாக வேக்ஸ் உருவாகும் போது மருத்துவரை அணுகுவது நல்லது. அனுபவமுள்ள மருத்துவர் குழந்தையின் காதுகளில் இருக்கும் வேக்ஸ் மற்றும் அழுக்குகளை பாதுகாப்பாக எடுத்து விடுவார். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த காட்டன் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. காதுகளை சுத்தப்படுத்தும் முறைகளில் அதிக இடர்பாடு நிறைந்த தேர்வாக அது கருதப்படுகிறது.


    காதுகளை சுத்தப்படுத்தும் போது தவறு ஏற்பட்டால் அதன் விளைவு பெரிய ஆபத்துக்களில் போய் முடியும். இதனால் தொற்றுக்களும் உண்டாகும். காதுகளை சுத்தப்படுத்த சரியான முறையை கையாளாவிட்டால் செவிச்சவ்வு உடையும் அபாயமும் உண்டு. இதனால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது கூடுதல் கவனமும் பொறுமையும் கண்டிப்பாக தேவை. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளோம். அவைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் உங்கள் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்துங்கள். குளிக்கும் போது சுத்தப்படுத்தவும் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் வேளையே உகந்ததாக விளங்கும்.


    ஈரத்துடன் இருக்கும் போது குழந்தைகளின் காதுகளை எளிதில் சுத்தப்படுத்தி விடலாம். நீரில் நனைத்த துணியை கொண்டு காதின் வெளிப்புறங்களை துடைத்து கொள்ளவும். அதன் பின் காதுகளின் உட்புற மடிப்புகளை துடைக்கவும். பின் எஞ்சியிருக்கும் வேக்ஸ்களை அகற்றவும். வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைக்கவும் உங்கள் குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் காதுகளை வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைத்திடுங்கள். உங்கள் குழந்தையின் காதுகள் சுத்தமாக இருக்க இதனை சீரான முறையில் செய்தாலே போதுமானது. காதுகளில் சேர்ந்துள்ள செத்த அணுக்கள் மற்றும் வேக்ஸ் ஆகியவற்றை இது நீக்கிடும். காட்டன் பட்ஸ் குழந்தைகளின் காதுகளுக்குள் காட்டன் பட்ஸை நுழைக்கவே கூடாது. பொதுவாகவே குழந்தைகளின் காதுகளுக்குள் ஆழமாக எந்த பொருளையுமே நுழைக்க கூடாது.


    இது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸாகும். இது செவிச்சவ்வை பாதித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும். காதுகளுக்கான சொட்டு மருந்து குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமான வேக்ஸ் உருவாகியிருந்தால் அதனை நீக்க மேற்கூறிய டிப்ஸ் எடுபடாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் காதுகளுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும். இவ்வகையான சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சுயமான வழிமுறைகளை தவிர்க்கவும் மருத்துவ ரீதியான வழிமுறையை பின்பற்றாமல் சில பேர் வீட்டு சிகிச்சை முறையை பின்பற்ற கூடும். அப்படி எதையும் முயற்சி செய்யாதீர்கள். அது குழந்தையின் காதுகளை பாதித்து விடலாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


    வறண்டு காணப்படும் நேரத்தில் சுத்தப்படுத்தாதீர்கள் 


     ஈரப்பதம் இல்லாமல்வறண்டு காணப்படும் நேரத்தில் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்தாதீர்கள். அது சருமத்தில் எரிச்சலையும் சிராய்ப்புகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த எப்போதுமே நீரில் நனைத்த துணியையே பயன்படுத்துங்கள். முடிந்த வரை குழந்தையை குளிப்பாட்டி விடும் நேரத்திலேயே காதுகளையும் துடைத்து விடுங்கள்.


    கவனமாக இருங்கள்


    பொதுவாக காதுகளை சுத்தப்படுத்தும் போது குழந்தைகள் உங்களோடு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. துடைத்து கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் தலையை ஆட்டி விடும் அபாயம் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பதால் விபத்துகளை தவிர்க்கலாம்.

    ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

    By: Unknown On: 22:32
  • Share The Gag


  • தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.


    நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.


    நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.


     ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.


    நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.


    ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.


    இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும்.


    எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

    செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!

    By: Unknown On: 22:16
  • Share The Gag



  • நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


     செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.


    இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும், 52 பேர் ரஷ்யாவிலிருந்தும் தேர்வாகியுள்ளனர்.


    தேர்வான விண்ணப்பதாரர்கள் குறித்து மார்ஸ் ஒன் இணை நிறுவனரான பஸ் லன்ஸ்டோர்ப் கூறுகையில் புதிய மனிதக் குடியிருப்பு குறித்த உறுதியான பார்வையாக இந்தத் தேர்வு வெளிப்படும் என்று குறிப்பிட்டார். இத்தனை அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறித்து தங்களின் பாராட்டுதல்களையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாகக் கூறிய லன்ஸ்டோர்ப் உடற்தகுதியிலும், மனத்தகுதியிலும் செவ்வாய்க் கிரகத்திற்கான தூதுவர்களாகச் செயல்படும் திறன் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


    வரும் 2018 ஆம் ஆண்டில் தங்களது முதல் ஆளில்லா செவ்வாய்க் கிரக பயணத்தைத் தொடங்கும் இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு நான்கு ஆண்களையும், ஒரு பெண்ணையும் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்ப உள்ளது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு தேர்வாளர்களை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாக இந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவுக்கு பெரிய சவாலான‌ – ஜி எஸ் எல் வி 5 – சக்ஸஸ் ஆகுமா?

    By: Unknown On: 22:02
  • Share The Gag



  • இந்தியன் ஸ்பேஸ் ரிஸர்ச் ஆர்கனைசேஷனுக்கு ஒரு பெரிய சவால் நாளை மறு நாள் காத்து கொண்டு இருக்கிறது அது என்ன? ஏற்கனவே மூன்று முறை தோற்று போன ஜி எஸ் எல் வி ராக்கெட் இம்முறையாவது சக்ஸஸ் ஆக விண்ணில் பாய வேண்டும் என்பதே? இந்தியா தான் அடிக்கடி ராக்கெட் அனுப்புதே அப்புறம் என்ன கதைன்னு கேக்குறவங்களுக்கு – அது பி எஸ் எல் வி ரக ராக்கெட்கள் அதில் இந்தியா சூப்பர் பெர்ஃபார்மென்ஸ்.


    ஜி எஸ் எல் வி என்றால் – ஜியோசின்கரனஸ் சாட்டிலைட் லான்ச் வெகிக்கிள் (geosynchronous satellite launch vehicle) என்னும் இந்த வகை ராக்கெட்கள் மூலம் சாட்டிலைட்டை நினைத்த இடத்தில் நிலை நிறுத்த முடியும். இது புவியீர்ப்பு சக்த்திக்கு அப்பார்பட்ட இடமாக இருக்கும் இடமாகும். இது வரை இந்தியா இதை பிரன்ச் கயானா என்னும் இடத்தில் இருந்து மூன்றாம் கம்பெனி ராக்கெட் மூலம் நமது சாட்டிலைட்டை லாஞ்ச் செய்தது. இதற்க்கு தேவையான பவர்ஃபுல் கிரைஜினிக் எஞ்சினை இந்தியா இன்னும் மாஸ்டர் செய்ய முடியவில்லை. இதில் எக்ஸ்பர்ட்டான யு எஸ் எ ஆர் என்னும் பழைய சோவியத் யூனியன் இதை இந்தியாவுக்கு தர ஒப்பு கொண்டது பழைய கதை.


    ஆனால் USSR துண்டு துண்டாய் உடைந்து போனதால் ரஷியா இதை தர் ஒப்பு கொண்டாலும் அமெரிக்கா இதற்க்கு தடை விதித்து வெறும் ஏழு எஞ்சின்களை மட்டும் கொடுக்கலாம் என்று கண்டிஷன் போட்டது பழைய கதையாகும். இதை வைத்து முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு லாஞ்ச் செய்தது செயல்பாடு சரியில்லாமல் ஃபெயிலாகி போனது. அடுத்து 2003 – 2004 இரண்டு முறையும் சக்ஸஸ் ஆகினாலும் கொடுத்த 7 எஞ்சின்களில் 6 முடிந்து போனது. கையில் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு 2010 ஆம் ஆண்டு செலுத்த முயலுகையில் சில நொடிகளிலே ஃபெயில் ஆகி போனது. கொஞ்சம் சரி செய்து அதே வருடத்தில் டிசம்பர் மாதம் அட்டம்ப்ட் செய்த போதும் ஃபெயில் ஆகியது. சரியென்று கடைசியாக கவனமாக ஆராய்ந்து 2013ல் ஆகஸ்ட் மாதம் லாஞ்ச் செய்யும் கடைசி நேரத்தில் பியூல் லீக் அகி அதுவும் ஃபெயில் ஆகி போனது.


    இந்த என்சின் திரவ் ஆக்ஸிஜனையும், ஹைட்ரஜனையும் கொண்ட கலப்பு எரிபொருள். இது நேற்று திருச்சியில் இருந்து ஹரிகோட்டா வரை பலத்த போலீஸ் ராணுவம் உதவியோடு தரைவழியாக ஸ்பெஷல் கன்டெயினர் மூலம் எடுத்து வரபட்டது – அதை நிறைய பேர் பார்த்திருக்க வாய்ப்புண்டு இப்போது எல்லாவற்றிக்கும் ரெடி ஆகி நாளை கவுன்ட் டவுன் ஆரம்பித்து 5 ஆம் தேதில் லாஞ்ச் செய்ய ஏற்பாடு ஆகி இருக்கிறது. இது மேலே போய் ஜிஸாட் 4 ( 2004ல் லான்ச் செய்யபட்டது) பல தமிழ் இந்திய சேனல்களின் உயிர் நாடியான இந்த சாட்டிலைட்டுக்கு பதில் போய் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். இந்தியா இதில் சாதிக்கும் என நம்புவோமாக..!

    தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!

    By: Unknown On: 18:30
  • Share The Gag



  • இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட் ஆம்லெட், பிரெட் மசாலா என்று செய்து சாப்பிடுவதால் பெரிய ஆபத்தும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.


    உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் பி.பி. உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வரும் என்பது எல்லோரக்கும் தெரிந்த விஷயம். வேறு எந்த தொந்தரவுக்காகவும், நீங்கள் டாக்டரிடம் போனால் முதலில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லித்தான் டாக்டர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.


    தினசரி 0.5 மில்லி கிராம் அளவக்குத்தான் உடலில் உப்பு சேர்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம் சாப்பிடும் சிலைஸ் பிரெட்டில் 230 மில்லி கிராம் உப்பு உள்ளது. இவ்வளவு உப்புள்ள பிரெட்டை அடிக்கடி சாப்பிடும்போதுதான் உடலில் உப்பின் அளவு கூடுகிறது என்கிறார்கள். அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள்.


    இந்த மையம் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து விரிவான கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அதில் பரிசோதனை செய்தவர்களில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின் அளவு மிக திகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு முக்கியக் காரணம் தினமும் சிற்றுண்டியாக பிரெட், பிரெட் ஆம்லெட் போன்றவற்றை அவர்கள் உண்டு வந்திருக்கிறார்கள்.


    “பிரெட்டைத் தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே இதை தொடர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.


    ஏன் பிரெட் கூடாது?



    எப்போதாவது சாப்பிடுவதால் பிரெட்டால் தீமை இல்லை. மாறாக நன்மைதான். குழந்தைகளுக்கு பிரெட் ஆம்லெட் என்பது நல்ல ஊட்டச்சத்துதான். ஆனால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதற்காகவும், பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எப்படியோ எதையாவது சாப்பிட்டுக் கொண்டு போனால் போதும் என்றோ நினைத்து பிரெட் ஐட்டங்களை அடிக்கடி கொடுப்பதுதான் ஆபத்து.


    குழந்தைகள் முதலே பிரெட் வகைகளாக சாப்பிட, அதில் உள்ள உப்பானது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். அது அப்படியே துளித்துளியாக சேர்ந்து பெரியவர்கள் ஆனதும், ரத்த அழுத்த நோய்க்கு இட்டுச் செல்லும்.


    “எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் என்கு பி.பி என்கிறார் டாக்டர்’ என்று சொல்வதெல்லாம் இந்த ரகம்தான். ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணமும் இதுதான்.


    தீர்வு என்ன?



    1. பிரெட் வகைகளை உண்ணக் கூடாது என்று சொல்லவில்லை. தினந்தோறும் அல்லது அடிக்கடி சாப்பாடாக இதையே எடுத்துக் கொள்ளக் கூடாது.


    2. வெறும் பிரெட் ஜாம், பிரெட் மசாலா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரெட் சாப்பிட்டவுடன் கூடவே இரண்டு துண்டு பழங்கள் சாப்பிட பழக்க வேண்டும்.


    3. பிரெட் சுவையாக இருக்க முழு முதற்காரணம் அதில் உள்ள உப்பு சுவைதான். அதனால் சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உப்பு அதிகம் கலக்காத பிரெட் கேட்டு வாங்கி உண்ணலாம்.


    4. பிரெட் ஆம்லெட் நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் தினந்தோறும் சாப்பிட்டால், பிரெட்டில் உள்ள உப்பும், ஆம்லெட்டில் உள்ள மஞ்சள் கருவும் சேர்ந்து கூடுதல் கொழுப்பை உருவாக்கும். ரத்தக்குழாய்கள் அடைபட இதைவிட காரணம் தேவையில்லை. வாரம் ஒருநாள் ஒரு பிரெட் ஆம்லெட் நல்லது.


    5. பிரெட் உப்புமா செய்யும்போது, மேலும் கொஞ்சம் உப்பைச் சேர்ப்பது வழக்கம். அது எவ்வளவு கெடுதல் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.


    6. நாகரிக மோகத்தில் சிலர் பிரெட், சிப்ஸ், பீசா என்று அடிக்கடி சாப்பிடுவது கவனத்திற்கு உரியது. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் தேவையான உப்பை உடல் எடுத்துக் கொண்டதுபோக, மீதமுள்ளவற்றில் ஒரு சிறிதாவது உடலில், ரத்தத்தில் கலக்க வாய்ப்பு உண்டு. அப்படி சேமித்து சேமித்து வைப்பதால்தான் பிற்காலத்தில் அது நோயாக உருவெடுக்கிறது.


    7. அவசர காலம் என்றாலும், வேக வைத்த உணவுகள், காய்கறிகள் போன்வற்றை கொஞ்சம் சுவையாக தயாரித்து உண்ணப் பழகுங்கள்.

    சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்..!!

    By: Unknown On: 18:13
  • Share The Gag



  • சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பவுள்ளார்.


    ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


    திருமணம் மூலம் பிரச்னையை சந்தித்த பிரசாந்த் அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு இடைவெளி விட்டு மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் சரியாக போகாததால் எந்த இயக்குனரும் அவரை கண்டுகொள்ளவில்லை. சிறிது காலம் பொறுத்து பார்த்த பிரசாந்த், தற்போது மீண்டும் சொந்த தயாரிப்பில் படம் எடுக்க களம் இறங்கியுள்ளார்.


    சாகசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவருமே பிரசாந்த்தான். வில்லன் கேரக்டருக்காக உடம்பை ஏற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். ஜிம்மிற்கு சென்று ஆறுமணிநேரம் தினசரி உடற்பயிற்சி செய்து வருகிறார்.


    சாகசம் என்ற தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள்தானாம். இதனை அவரே புத்தாண்டு அன்று அறிவித்துள்ளார்.

    அம்மாவாக அமலாபால்....?

    By: Unknown On: 17:58
  • Share The Gag



  • இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் அமலாபால்.


    தமிழ் சினிமாவில்தான் கதாநாயகிகள் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தயங்குகிறார்கள்.


    ஆனால், மலையாள சினிமாவில் அப்படியல்ல. எத்தனை வயது குழந்தைகளுக்கும் தாயாக நடிக்கிறார்கள்.


    அந்த வகையில், தமிழில் யூத்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையாளத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.அப்படமும் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறதாம்.


    அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக்கிறாராம்.


    மேலும் இதற்கு முன்பு நரைமுடி கதாநாயகர்களுடன் நடிக்க தயங்கி நின்ற அமலாபால், இப்போது மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஹீரோக்களுடனான வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு வருகிறாராம்.

    ‘ஜில்லா’வுக்கு 3 இடத்தில் கத்தரி..?

    By: Unknown On: 16:36
  • Share The Gag




  • விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.


    பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது.படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.


    இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.


    படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ள இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போடப்பட்டுள்ளது.


    மேலும் மதுரை பக்கத்து கெட்ட வார்த்தை வரும் ஒரு காட்சிக்கும் கத்தரி போடப்பட்டுள்ளது.


    ஜில்லா தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.