Saturday 23 November 2013

அஜித்தின் 'வீரம்' எக்ஸ்க்ளூசிவ் !

By: Unknown On: 23:54
  • Share The Gag
  •  

    வருகிற பொங்கலுக்கு அஜித்தின் 'வீரம்'  ரசிகர்களுக்குப் பெரிய பொங்கல் விருந்து.

    வீரத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் உங்களுக்காக:

    *அஜித் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் . வில்லேஜ் கதையில் அவ்வளவு பொருத்தமாக அஜித் பின்னி எடுத்திருக்கிறார்.

    *எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' மாதிரியும், ரஜினியின் 'முரட்டுக்காளை' மாதிரியும் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்ஷன் படம்.

    *படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.அஜித்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள்.

    *சந்தானம், அப்புக்குட்டி, வித்யூலேகா ராமன், கிரேன் மனோகர், மயில்சாமி, இளவரசு, இவர்களுடன் அஜித் அடிக்கும் காமெடி லூட்டிகள் சிரிப்புப் பொங்கல்தான். முதன் முறையாக அஜித் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம்.

    *நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

    *கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு களைகட்டும்.

    *தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் பட்டையக் கிளப்பும்.

    *படத்தில் நோ பன்ச் டயலாக். ஆனால்,  காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ச் டயலாக் எஃபெக்ட் இருக்கும்.

    *ஷூட்டிங் அனைத்தும் முடிந்து, பின்னணி இசை கோர்ப்பு, கிராபிக்ஸ், கலர் கரெக்ஷன், டப்பிங், எட்டிட்டிங் என வீரத்துக்கு அழகு சேர்க்கும் பணிகள் வேகமா நடந்துக்கிட்டிருக்கு.

    *சோறு சாம்பாரு, ரசம், தயிர்னு வெஜ் அயிட்டமும் உண்டு, வெடக்கோழி குழம்பு, வஞ்சிரம் மீனு, மட்டன் மசாலான்னு நான் வெஜ் அயிட்டமும் உண்டு.

    தல வைக்கும் பொங்கல் விருந்தை சாப்பிடத் தயாராகிட்டீங்களா?

    ஹனிமூன் (தேன்நிலவு ) என்று பெயர் வரக் காரணம் தெரியுமா ?

    By: Unknown On: 23:43
  • Share The Gag
  •  

    திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.

    எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.

    புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம். இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.

    எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.

    ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

    By: Unknown On: 23:29
  • Share The Gag
  •  
     கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது.

    இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.  அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, 4-ஆம் தேதி வரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம்.

    எனினும் கோயில் 24-ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

    வினோத நம்பிக்கைகள்!

    மாமியார்-மருமகள் கல்! : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது.

     ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!


    அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!
     
    திருடர்கள் கோயில் :

     ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

    அணையா தீபம் :

    ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் (இந்த ஆண்டு - அக்டோபர் 5) கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

    கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்?! :

    கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    வாடா மலர்கள் :

    ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

    ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

    வரலாறும், புராணமும்! ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதொடு, கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப்பெயரை பெற்றதாக சொல்லப்படுகிறது.

    அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டு வந்த ஹாசன் நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர்கள்) வருகைக்கு பிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

    ஹாசனாம்பா கோயில் திறப்பு!


     ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தளவார் குடும்பத்தினர் கோயில் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்துவிடப்படுகிறது. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்துவரப்படும் ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

    அதன்பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத்துக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்த சமயங்களில் கோயிலில் பெருங்கூட்டம் காணப்படுவதால் சிறப்பு தரிசனம் செய்ய 250 ரூபாய்க்கு தனி வழி பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. எப்படி அடைவது? ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் (KSRTC) இயக்கப்படுகின்றன.

    பெங்களூர்-ஹாசன் பேருந்து அட்டவணை :

    21:35, 21:59, 21:00, 11:05, 21:15, 14:05, 22:30, 23:00, 23:15, 21:15, 21:35, 21:06, 22:00, 05:00, 07:45, 06:30

    ஹாசன்-பெங்களூர் பேருந்து அட்டவணை :


    11:00, 20:30, 14:00, 22:01, 21:05, 22:29, 22:50, 22:45, 19:30, 07:00, 06:01, 06:31, 13:30, 10:30, 11:30

    மூன்று விஷயங்கள்.....

    By: Unknown On: 23:12
  • Share The Gag
  • மூன்று விஷயங்கள்.....

    1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
    நேரம்
     இறப்பு
     வாடிக்கையளர்கள்

    2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
    நகை
     மனைவி
    சொத்து

    3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
    புத்தி
     கல்வி
     நற்பண்புகள்

    4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
    உண்மை
     கடமை
     இறப்பு

    5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
    வில்லிலிருந்து அம்பு
     வாயிலிருந்து சொல்
     உடலிலிருந்து உயிர்

    6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......
    தாய்
     தந்தை
     இளமை

    7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......
    சொத்து
     ஸ்திரி
     உணவு

    8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....
    தாய்
     தந்தை
     குரு

    பொது அறிவு - தெரிந்துக் கொள்ளுங்கள்!

    By: Unknown On: 22:07
  • Share The Gag
  • 1. தேசியகீதம் முதன் முதலில் ஜப்பானில்தான் தோன்றியது.

    2. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 450 அடி நீளமுள்ள வலையைப் பின்னுகிறது.

    3. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதல் தேதியை மீன்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

    4. முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு அதன் வயதைக் கணிக்கிறார்கள்.

    5. புல் வகையில் மிக உயரமாக வளரக்கூடியது மூங்கில். 36 மீட்டர் உயரம் வரை இது வளரும். ஒரு நாளைக்கு அரை மீட்டர் அளவு வளரும்.

    6. மண்புழுவிற்கு கண்ணும் காதும் கிடையாது. ஆனால், ஒளியையும் அதிர்வையும் உணரக் கூடிய ஆற்றல் உண்டு.

    7. "வீனஸ் கிர்டில்' என்பது நாடா போன்ற, இரண்டடி நீளமுடைய ஒரு வகை மீன். இது கடல் நீரில் பல நிறங்களில் தோன்றும். இதை, கிரேக்கர்களின் அழகுத் தேவதை அணியும் ஒட்டியாணம் என்று சொல்வார்கள்.

    8. கண்ணாடி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், வெண்கலத் தகடுகள்தான் முகம் பார்க்கப் பயன்பட்டன.

    9. நில நடுக்கத்தை அளக்கும் கருவிக்கு "ரிக்டர் ஸ்கேல்' என்று பெயர். சார்லஸ் ரிக்டர் எனும் அமெரிக்கரே இதைக் கண்டுபிடித்தார்.

    10. "அறிவியலின் தந்தை' என்று போற்றப்படுபவர் கலிலியோ. இவர் இத்தாலிய வானியல் மேதை. தேவாலய விளக்கு காற்றில் அசைவதைப் பார்த்ததன் மூலம் - ஊசல் தத்துவம் எனும் பெரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.

    11. "மேக்மா' என்பது பூமிக்குள் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பின் பெயர்.

    12. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.

    13. வளர்ச்சியடைந்த மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் இருக்கும்.

    14. ஒரு மரத்தின் பெயரால் அழைக்கப்படும் நாடு "பிரேசில்.'

    15. சவுதிஅரேபியா நாடு, பொதுமக்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதில்லை.

    சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:

    By: Unknown On: 21:44
  • Share The Gag

  • சுருக்கமாக: அகிம்சை முறையில்
     போராடி கொண்டு இருந்த
     காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார்.

    அகிம்சை முறையில் போராடினால்
     பல ஆண்டுகளாக இந்த போராட்டம்
     இழுத்து கொண்டே போகும்.
    கோடிகணக்கான
     இந்தியர்களை வெறும் இருபதாயிரம்
     வெள்ளையனைக் கொண்ட ராணுவம்
     அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது.

    ஏன் அந்த
     ராணுவத்தை அடித்து விரட்ட
     கூடாது. அவர்களை நான் ஆயுத
     ரீதியாக எதிர்கொள்ள திட்ட
     மிட்டு இருக்கிறேன். உங்களின்
     கருத்து என்ன என்று காந்தியிடம்
     கேட்ட
     போது அகிம்சையை போதிக்கும் நான்
     இதை ஒருநாளும் ஏற்று கொள்ள
     மாட்டேன் என்று சொன்னார்.
    இருவருக்கும் நிறைய கருத்து மோதல்
     வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள்
     தனித்து போராட தயாராகினார்.
    முதல் கட்டமாக
     தமிழ்நாடுக்கு வந்தார்.

    வந்து துடிப்பான
     இளைஞ்சர்களை சந்தித்து.
    வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக
     தான் எதிர்கொள்ள வேண்டும்
     அதற்காக நாம் ராணுவ
     கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
    என்று இளைஞர்களிடம் பிரச்சாரம்
     செய்தார்.
    பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில்
     மற்ற மாநிலங்களுக்கும்
     சென்று இளைஞ்சர்களின்
     ஆதரவை திரட்டினார்.

    ஆனால்
     அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும்
     ஆயுதம் எடுத்து போராட முன்
     வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த
     போது தமிழகத்தில் உள்ள ஆயிர
     கணக்கான இளைஞர்கள் சுபாஷ் சந்திர
     போஸ் அவர்களின்
     போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள்.

    அந்த இளைஞர்களுக் கெல்லாம்
     மறைமுகமாக
     பயிற்சி அளிக்கப்பட்டது.
    தமிழகத்தில் காந்தியின்
     ஆதரவாளர்கள்
     எண்ணிக்கை நாளுக்குநாள்
     குறைந்து கொண்டே போனது.
    தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின்
     போராட்டத்தில்
     நம்பிக்கை கொண்டு ராணுவத்தில்
     இணைய ஆரம்பித்தார்கள்.
    அப்போது சுபாஷ் சந்திரபோஸ்
     தலைமையில் ஆயுத
     புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள்
     என்று வெள்ளையர்களுக்கு தெரியவர,
    இவர்களை எல்லாம் வெள்ளையர்கள்
     வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள்.


    சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும்
     தமிழ் இளைஞர்கள்
     இணைந்து கொண்டதை அறிந்த
     காந்தியின் ஆதரவாளர்கள். சுபாஷ்
     சந்திரபோசை காட்டி கொடுக்கவும்
     ஆரம்பித்தார்கள். அதனால் அவரால்
     இந்தியாவில்
     இருந்துகொண்டு செயல்பட
     முடியாமல் போனது.
    வெள்ளையர்களிடம்
     இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ்
     வெளிநாடுக்கு சென்றார்.
    சில
     வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின்
     ஆதரவை திரட்டினார்.

    ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான
     ஆயுத தளவாடங்களை ஹிட்லர்
     மூலம் சேகரித்தார். எல்லாம் தாயாரான
     பின்பு இந்தியாவில் இருக்கும்
     வெள்ளையர்களின் ராணுவ
     முகாம்களின்
     எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர்
     இருக்கிறார்கள்
     என்று உளவு பார்த்து தகவல்
     அறிந்து கொண்ட பின்னர்.

    தமிழ் நாட்டில் இருக்கும் அவரின்
     ஆதரவாளர்களுக்கு தகவல்
     அனுப்பினார். நான் வெளிநாட்டில்
     மிகப்பெரிய ராணுவ
     கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன்.
    இந்த ராணுவத்தில்
     இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக
     ஆயுதம் எடுத்து போராட
     விரும்புபவர்கள். என்னுடன்
     இணைந்து கொள்ளலாம் என்று தகவல்
     அனுப்பி இருந்தார்.


    இந்தியா முழுவதும் இந்த தகவல்
     பரவியது. இதை அறிந்த தமிழக தேச
     பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான
     இளைஞர்கள் படகு மூலம்
     வெளிநாட்டுக்கு செல்ல
     ஆரம்பிதார்கள்.
    அங்கே எல்லோருக்கும் போர்ப்
     பயற்சி அளிக்கப்பட்டது.
    அப்போது போராளிகளிடம்
     சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் .
    எமது தேசத்தில் வெறும்
     இருபது ஆயிரம் வெள்ளையனின்
     ராணுவம் இருக்கிறது. நாம்
     இங்கு மிகப்பெரிய ராணுவ
     கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.


    அவர்களை நாம் கப்பல் மூலம்
     சென்று டெல்லி வரை தாக்க
     போகிறோம் டெல்லியில் தான்
     வெள்ளையனின் முழு பலமும்
     இருக்கிறது எனவே டெல்லி வரை நாம்
     சென்று தாக்க போகிறோம்
     என்று சொன்னார். ஆனால் இந்த
     ராணுவத்தில் பெரும்பாலானோர்
     தமிழர்கள் என்பது குறிப்பிட
     தக்கது .


    ஒரு பக்கம் காந்தியின்
     அகிம்சை போராட்டம்
     நடந்து கொண்டிருந்தது.
    சுபாஷ்சந்திரபோஸ்
     திட்டமிட்டபடி யுத்த ஆயுத
     கப்பல்கள் மூலம்
     சென்று டெல்லி வரை வெள்ளையர்களின்
     ராணுவத்தை அடித்தார்கள்.
    அப்போது வெள்ளையர்கள் பாரிய
     உயிரிழப்புக்களை சந்தித்தார்கள்.
    வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில்
     இருந்து வரும் ஆயுத
     உதவிகளை தடுத்தார்கள்
     முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ்
     சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள்
     வந்தது. அதனால்
     தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம்
     செய்யஇயலாமல் ஆயுத
     பற்றாகுறை வந்தது.

    பொருளாதார
     பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது.
    தொடர்ந்து அவர்கள் இந்தியாவில்
     இருப்பது பற்றி கேள்விகுறியானது.
    சுபாஷ்சந்திரபோஸ்
     ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும்
     சண்டையில் வெள்ளையர்கள்
     தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள்.
    இந்த தோல்வியை அவர்களால்
     ஒப்பு கொள்ள முடியவில்லை.
    அதனால் வெள்ளையர்கள்
     இந்தியாவை விட்டு வெளியேற
     முடிவு செய்தார்கள்.

    ஆனால்
     இந்தியா முழுவதும்
     சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின்
     ராணுவ போராட்டம் தெரியவந்தது .
    அதனால் காந்தி வழியில்
     போராடி கொண்டிருந்தவர்களுள்
     பெரும்பாலானோர் சந்திரபோஸ்
     அவர்களின் பின்னால் செல்ல
     ஆரம்பித்தார்கள். இதனால்
     வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க
     முடியாத நிலைமை ஏற்ப்பட்டது.
    ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள்
     கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ்
     சந்திர போஸ் மக்களை தவறான
     வழியில் கொண்டு செல்கிறார்
     என்றும் கூறி வந்தார்.


    காந்தியின் ஆதரவாளர்களால்
     சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க
     பட்டார்.
    அவரை கைது செய்து சிறையில்
     அடைத்தார்கள் வெள்ளையர்கள்.
    ஆனால் சிறையில்
     வேலை செய்தவர்களின் உதவியுடன்
     சுபாஷ் சந்திர போஸ்
     தப்பித்து வந்தார். அதன்
     பிறகு ஆயுத போராட்டம் கடும்
     தீவிரம்
     அடைந்து வந்தது வெள்ளையர்கள்
     வெளியேறும் நிலைமையும் வந்தது.
    ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக
     தோற்கடித்து இந்தியாவில்
     விரட்டியடிக்க பட்டோம்
     என்று வந்து விடக்
     கூடாது என்பதற்காக.

    அப்படி ஒரு அவமானம் வந்து விட
     கூடாது என்பதற்காக
     காந்தியை நாடினார்கள்
     வெள்ளையர்கள்.
    வெள்ளையர்கள் அகிம்சை ரீதியாக
     போராடும்
     காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள்
     அகிம்சை போராட்டத்தால்
     உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க
     போகிறோம் நாங்கள்
     இந்தியாவை விட்டு போக
     போகிறோம் என்று சொன்னார்கள்.
    காந்தியின்
     அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன்
     இந்தியாவிற்கு சுதந்திரம்
     கொடுத்து விட்டு வெளியேறினான்.
    ஆனால் தற்போது இந்திய
     அரசாங்கமும் இந்திய மக்களும்
     சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள்.

    அவரின்
     மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட
     மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம்
     காந்தியின் அகிம்சை போராட்டம்
     பாதித்து விடும் இந்த
     வரலாறு மறைந்து விடும்
     என்பதற்காக.

    டீசல் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான சில வழிமுறைகள்!

    By: Unknown On: 21:07
  • Share The Gag
  • அட வேற ஏதாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். உச்சம் என்று குறிப்பிட்டுள்ளது மைலேஜைதான். பெட்ரோல் விலை விரட்டி அடித்து அரட்டி வரும் வேளையில் டீசல் கார்கள்தான் சிறந்த தீர்வாக இருக்கின்றன. அதிக மைலேஜ்தான் இதற்கு முக்கிய காரணம். குறைவான சப்தம், நவீன தொழில்நுட்பம் கொண்டதாக டீசல் எஞ்சின்கள் மேம்பட்டிருக்கின்றன.

    இருந்தாலும், பெட்ரோல் கார் போன்று டீசல் கார்கள் உடனடி பிக்கப் கொடுப்பதில்லை. பெட்ரோல் காரை போன்று ஓட்டினால் நிச்சயம் அது மைலேஜில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, டீசல் கார் ஓட்டும்போது டிரைவிங் பழக்கத்தை சிறிதளவு மாற்றிக் கொண்டால் சிறப்பான மைலேஜ் பெறுவதோடு, ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும். டீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்.

    பிக்கப்:

    டீசல் கார்கள் குறைந்த எஞ்சின் சுழல் வேகத்தில்(ஆர்பிஎம்) அதிக டார்க்கை வெளிப்படுத்தும். எனவே, காரை கிளப்பும்போது மிதமான வேகத்தில் ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும். வேகமாக கிளப்பினால் என்ன என்கிறீர்களா?, ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கும் 2 லிட்டர் டீசலை கூடுதலாக ஊற்ற வேண்டியிருக்கும்.

    இதனை ஒப்பிடும்போது கிட்டதட்ட பெட்ரோலுக்கு இணையான தொகையை டீசலுக்கும் அழ வேண்டியிருக்கும். எனவே, காரை கிளப்பும்போது ஆக்சிலேட்டரை மிதமாக கொடுத்து வேகமெடுக்க பழகிக்கொள்ளுங்கள். சிலர் டீசல் கார் மைலேஜ் கொடுக்கவில்லை என்று புலம்புவதும் அவர்களின் டிரைவிங் பழக்கத்தால் கூட இருக்கலாம். எனவே, டீசல் காரை பூப்போல கையாள பழகிக் கொள்ளுங்கள். மைலேஜில் உச்சத்தை நிச்சயம் தரும்.

    குரூஸ் கன்ட்ரோல்:

    நெடுஞ்சாலைகளில் செல்லும்போது குரூஸ் கன்ட்ரோல் இருந்தால் அவசியம் பயன்படுத்துங்கள். காலால் ஆக்சிலேட்டரை கொடுத்து ஓட்டும்போது சீரான வேகத்தில் செல்ல முடியாது. எனவே, குரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தி ஓட்டினால் அதிக மைலேஜ் பெறுவதோடு, காரின் எஞ்சினும் சிறப்பாக இயங்கும். நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்வதை தவிர்த்தாலும் அதிக மைலேஜ் பெறலாம்.

    கியர் மாற்றும் கலை:

    சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் கியரை மாற்றினால் அதிக மைலேஜ் கிடைக்கும். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லும்போது அதிக கியர்களில் (4 அல்லது 5 வது கியர்) செல்வதை தவிர்க்கவும். வேகத்துக்கு தக்கவாறு கியர் என்பது கூடுதல் மைலேஜுக்கு உத்தரவாதம். சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கியரில் வைத்தும் காரை எஞ்சினை நிறுத்த வேண்டாம். நியூட்ரலில் வைத்து மட்டுமே நிறுத்தவும்.

    ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்களை தேவையில்லாதபோது பயன்படுத்துவதை தவிருங்கள். சீட் வார்மர், டிஃப்ராஸ்ட் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம்.

    கர்ப்பிணிகளின் சோர்வை போக்கும் உணவுகள்!

    By: Unknown On: 20:51
  • Share The Gag
  •  

    கருவுற்றிருக்கும் காலத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் தாயின் உணவைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. இந்த ஒன்பது மாத காலமும் ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமப்பது என்பது எளிதான காரியம் அல்ல.

    ஒவ்வொரு பெண்ணும் தான் கருவுற்றிக்கும் காலத்தை பெரிதும் விரும்புவார்கள். குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும், தாய்க்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதிக சோர்வு இருக்கும். அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் சோர்வு என்பது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

    சிலர் கருவுற்றிக்கும் காலம் முழுவதுமே சோர்வாக உணர்வார்கள். எனினும் சிலர் அந்த சோர்வு நாளடைவில் குறைவதை உணர்வார்கள். நிறைய பெண்கள் கருவுற்றிக்கும் காலத்தின் தொடக்கத்திலேயே, அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் முன்பே, சோர்வுடன் இருப்பதை உணர்வார்கள்.

    இத்தகைய சோர்வை சமாளிக்க கர்ப்பிணிகள் ஒருசில உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

    • குடைமிளகாய் உடலில் உள்ள இரும்புச்சத்தை செயல்படுத்த உதவுவதுடன் மட்டுமல்லாது, இயற்கையான வலிமையூட்டியாக செயல்பட்டு வரும். மேலும் உடல் சூட்டையும், ஆக்சிஜன் உட்கொள்வதை அதிகரிக்கவும் உதவும். அதிலும் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி சத்தானது, குடைமிளகாயில் 300% நிறைந்துள்ளது.

    • ப்ளூபெர்ரி பார்க்க சிறிதாக இருந்தாலும், அவை நமது ஊக்கத்தின் அளவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கையான சர்க்கரை அதிகம் நிறைந்துள்ளது. சில வகை பழங்களைப் போல, இது உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை அதிகரிப்பது இல்லை. அதனால் நம்மை இது அதிக நேரம் சக்தியுடன் இருக்கச் செய்யும்.

    • வெண்ணெய் பழங்கள் வலிமையை மெதுவாக வெளிக்கொண்டு வருவதற்கு மூலதனமாக இருக்கும். அதில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்து நிறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. ஒரு முழு வெண்ணெய் பழத்தில் உள்ள 14 கிராம் நார்ச்சத்து, நாம் சாப்பிடும் பிரட் மற்றும் தவிடு உணவு தானியங்களுக்கு போட்டியாக இருந்து, நமது ஜீரணசக்திக்கு உதவும்.

    • வாழைப்பழங்களில் உள்ள தனித்தன்மையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மதியம் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலுக்கு சக்தி அளிக்க உதவும். பொட்டாசியத்தை மூலதனமாக கொண்டுள்ள இவை தளர்ச்சி, தசைப்பிடிப்பு மற்றும் நீர் நீக்குதல் போன்றவற்றை எதிர்த்து செயல்படும்.

    • வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஆகவே சோர்வைப் போக்க எளிதான வழி சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ எலுமிச்சையை பிழிந்து குடிப்பதாகும். இதனால் அது நீர் சேர்தல் மற்றும் ஆக்ஸிஜனேட் செய்து, உடலை புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் இருக்கச் செய்யும்.

    நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

    By: Unknown On: 20:36
  • Share The Gag
  • ஒருவர் எதற்கெடுத்தாலும்
     மனைவியுடன்
     சண்டைப் போடுவார்..

    ஒருநாள் 'ஆபீஸ்' போய்
     வேலை செய்து பார்..
    சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
     என்று புரியும் என்று அடிக்கடி சவால்
     விடுவார்..

    அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
    ஒருநாள் நீங்க வீட்ல
     இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
    காலைல
     குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
    வீட்டுப் பாடங்கள்
     சொல்லிக்கொடுத்து
     சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
    அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
     செஞ்சுதான் பாருங்களேன்..
    என எதிர் சவால்விட்டாள்..

    கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

    அவன் வீட்டில்
     இருக்க..
    இவள் ஆபீஸ் போனாள்..
    ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

    முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
     கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

    வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
     வருபவர்களை கண்டித்தாள்..
    கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

    மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
     நினைத்தபோது,
    ஓர் அலுவலரின் மகள் திருமண
     வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
    பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
     மண்டபத்திற்கு சென்றாள்..

    கணவர் வராததற்கு பொய்யான காரணம்
     ஒன்றை சொல்லிவிட்டு,
    மணமக்களின்
     கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
    பந்தியில்
     உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
     வீட்டைப் பற்றியே..

    இலையில் வைத்த
    'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
     என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
    முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
     கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
    அவள் சாப்பிட்டதை விட,
    பிள்ளைகளுக்கும்
     கணவனுக்கும் என பைக்குள்
     பதுக்கியதே அதிகம்..

    ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
    கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
     இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

    இவளை பார்த்ததும்,
    பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
    அத்தனையும்
     குரங்குகள்..
    சொல்றதை கேட்க மாட்டேங்குது..
    படின்னா படிக்க மாட்டேங்குது..
    சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
    அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
     படுக்க வச்சிருக்கேன்..
    பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
     கெடுத்து வச்சிருக்கே
     என்று பாய..

    அவளோ,
    அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
    என்றவாறே
     உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

    உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
     பிள்ளைகள்..

    விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
    ‘ஏங்க..
    இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
    இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
    ஓஹோ ,
    அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

    அந்த நிலையில் இருவருக்கும்
     ஒன்று புரிந்தது..

    இல்லாள் என்றும் ,
    மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
     தொடங்கி நம் மூதாதையர்கள்
     சொல்வது சும்மா இல்லை...

    இல்லத்தைப் பராமரிப்பதிலும்
     பிள்ளைகளுக்கு வளமான
     வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
     ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

    அதுபோல,
    பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
     அளப்பரியது..

    ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
     இது ஆணுக்கு,
    இது பெண்ணுக்கு என்று
     குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
     இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

    இந்த சூழ்நிலையில்
     ஒரு குடும்பம்
     மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
     கணவன்மீது மனைவியோ,
    மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
     செலுத்தாமல்
     அன்பால் சாதிக்கும்
     மனநிலையை கொண்டிருந்தால்தான்
     எல்லா வளமும்
     பெற்று பல்லாண்டு வாழ
     முடியும்...

    திருமண பழமொழிகள்!

    By: Unknown On: 20:10
  • Share The Gag
  •  
     திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.

    - அமெரிக்கா

    மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

    - அரேபியா

     மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா

     கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.-

     செக்கோஸ்லோவேகியா


     திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.-

     டென்மார்க்



     திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.

    - வேல்ஸ்

     அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள். - ஜெர்மனி

     பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!-

    ஐரோப்பா

     திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது - ஸ்காட்லாந்து

     மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.- ஹாலந்து

     கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம் - தமிழ் நாடு

     இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்! - இலங்கை

    எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு கருத்தரங்கங்கில் பகீர்!

    By: Unknown On: 19:46
  • Share The Gag
  •  nov 22 - cyber crime

    “ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது.”என்று இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் லேரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்..

    இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இணையதள குற்றங்கள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு, இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் லேரி கிளிண்டன் தலைமை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகி ராமமூர்த்தி, சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அந்த கருத்தரங்கில் லேரி கிளிண்டன் பேசும்போது “உலக அளவில் இணைய தள குற்றங்கள் பெருகி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு எடுத்த புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது. விரும்பத்தகாத மெயில் (ஸ்பேம்) உருவாக்கி அனுப்புவதில் உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நம் நாடுகளில் இணைய தள குற்றங்கள் ஏற்படும்போது, அதுகுறித்து ஆராய்ந்து அந்த குற்றத்துக்கான நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்தி கொள்ளும் போக்கு இன்னும் இருந்து வருகிறது. அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இந்நிலையில் இணையதள குற்றங்களை தடுக்க இந்தியாவில் 600 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் சீனாவில் 1.2 லட்சமும், அமெரிக்காவில் ஒரு லட்சம் நிபுணர்களும் உள்ளனர். விஐபிக்கள் மற்றும் முக்கிய இணைய தளங்களை முடக்கும் செயல்களை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் அதிக நிதிகளை ஒதுக்கியுள்ளது. தனிப்பட்டவர்களின் இணைய தளங்களை பாதுகாக்க அதிக விலையிலான சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும். குறைந்த முதலீட்டில் கிடைக்கும் சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் பிரச்னைதான் வரும். இணைய தள குற்றங்களை தடுக்க உலக அளவிலான எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை”என்று லேரி கிளிண்டன் கூறினார்.

    கால்சியம் குறைபாடு இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிடுங்க!

    By: Unknown On: 19:32
  • Share The Gag
  •  nov 22 - health calcium_foods_

    மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. மேலும் தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமாகலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவதில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள்.

    இந்த கால்சியம் எலும்புகள், பற்களுக்கு மட்டுமல்ல, தசை இயக்கத்திற்கு நரம்புகள் இயக்கத்திற்கு ரத்தம் உறைவதற்கு தேவையான தாதுப்பொருள்.உடலுக்கு கால்சியம் வாழ் நாள் முழுவதும் தேவை. ஆனால் வளரும் பருவத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக அளவில் அவசியம் தேவை.
    உடலில் அதிகம் உள்ள தாதுப் பொருள் கால்சியம். ஒரு நன்கு வளர்ந்த ஆணிடம் 1200 கிராம் கால்சியமும், பெண்ணிடம் 1000 கிராமும் உள்ளது. உடல் எடையில் 1.5 லிருந்து 2.0 சதவிகிதம் கால்சியம் உடலில் உள்ள எல்லா தாதுப் பொருட்களில் 39% கால்சியம் தான். இதில் 99% எலும்பில் தான் (பற்களை சேர்த்து) இருக்கிறது. மீதி 1% ரத்தத்திலும், சில திசுக்களிலும் இருக்கும்.கால்சியத்தின் உற்ற தோழன் பாஸ்பரஸ். இவை இரண்டும் இணைந்து தான் கால்சியம் பாஸ்பேட்டாக (கால்சியம் கார்பனேட்டுடன்) எலும்புகளில், பற்களிலும் அமைந்திருக்கின்றன.

    இந்நிலையில் சூரிய ஒளியே படாத சூழலில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், பால், இறைச்சி போன்றவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை வரும். கால்சியம் குறைபாடானது, தசைகளை வலுவிழக்கச் செய்வதுடன், தசைகளில் வலியையும் உண்டாக்கும்.

    தசைகள் பலவீனமாவது, தசைப்பிடிப்பு, நாள்பட்ட கால்வலி, நாள்பட்ட முதுகு வலி, கால்களில் ஒருவித மதமதப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம். உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் மறைமுகக் காரணமாகலாம். வலி என்றதும் பெரும்பாலான மக்கள், உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொள்வார்கள். அதில் குணம் தெரியாவிட்டால், அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தாவி, ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை வரை போவார்கள்.

    எதிலுமே பலன் இருக்காது. சரியான வலி நிவாரண மருத்துவரை அணுகி, நோயின் அறிகுறியைச் சொல்லி, அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவை ரத்தத்தில் கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால், எலும்புகள் வலுவிழந்து நொறுங்கிப் போகலாம். வயதானவர்களாக இருந்தால், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். லேசான பொருளைத் தூக்கினாலே எலும்புகள் நொறுங்கலாம். சின்ன அடி பட்டாலே தொடை எலும்புகளும், முதுகெலும்பும் தானாகவே நொறுங்கலாம். முதுகெலும்பு நொறுங்குவதால் எலும்புகள் அழுத்தப்பட்டு, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

    இப்படி சாதாரண வலி முதல் வாழ்க்கையையே முடக்கிப் போடும் அபாய வலி வரை பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான கால்சியம் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே புத்திசாலித்தனம். 24 மணி நேரமும் ஏசி அறையிலேயே இருப்பது, வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது, சருமம் வெளியில் தெரியாமல் உடல் முழுக்க மூடிக் கொண்டு செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெயிலே படாமலிருந்தாலும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்…

    ஐநாவும் என்னை அழைத்தது... சுவர்ணலட்சுமி சாதனை!

    By: Unknown On: 18:40
  • Share The Gag
  •  

    சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

    மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

    சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.


    சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

    சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

     பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, சதுரங்கம் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

    இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
     இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

    குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

    இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.


    ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

    அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.


    இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

    இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

    இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
    ஆரம்பத்தில் என்னிடம் பல விடயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன.

    ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

    இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

    நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள்.

    முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999.

    (சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)

    பிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை...!

    By: Unknown On: 18:15
  • Share The Gag

  • ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் என்றால் அது தாய்மைப் பருவம் தான். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப்பிரசவமானால் 1 மாதமும், அறுவை சிகிச்சை என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம்.

    பிரசவித்த பெண் முழுமையாக மனதளவிலும்,உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அறுவை சிகிச்சை என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது. அது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

    குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும். தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்.

    குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சற்றே குறைகிறது மேலும் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கிறது. சருமம் பொலிவிழக்கிறது. அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது.

    இதெல்லாம் 18 மாதங்களுக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்பும் அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்!

    By: Unknown On: 17:52
  • Share The Gag
  • முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்து வந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்து போனதாலோ என்னவோ,  அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப் பட்டார்கள்.  இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

    ஆனால், இன்று நாடு பொருளாதார வளர்ச்சி கண்டு விட்டதாகச்  சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் பெற்றுக் கொள்கின்றனர். சிலருக்கு ஒன்றே ஒன்று போதும் என்ற எண்ணம்.

    பொருளாதார நெருக்கடி பற்றிய அச்சம், குழந்தை வளர்ப்பிலே முளைத்துள்ள அவநம்பிக்கை, வாழ்க்கையை அனுபவிக்க அதிகக் குழந்தைகள் தடையாகி விடுவர் என்ற தவறான எண்ணம்,  பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள துணிவின்மை, எல்லாவற்றையும்விட உலக மயமாக்கல் பெற்றெடுத்த நுகர்வுக் கலாசாரம் முதலான பிற்போக்கு அம்சங்களே ஒற்றைக் குழந்தை நாகரிகத்திற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

    வாரிசுகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகச் சுருங்கி விட்டதால்  பெற்றோரின் மொத்தப் பாசமும் ஒன்றிரண்டு குழந்தைகள் மீது மழையாகப் பொழிகிறது. பெற்றோரின அன்பு மழையில் குழந்தைகள் குளித்து, திக்கு முக்காடுகின்றனர். செல்லமோ செல்லம். கண்டிப்பு தேவைதான்; சிறிது பாசமும் காட்டுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் உபதேசித்த நிலை மாறி, பாசம் காட்ட வேண்டியதுதான்; கொஞ்சம் கண்டிப்பும் தேவை என்று உபதேசிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

    இளைய தலைமுறை பெற்றோர்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்;  பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறி வாங்கிக்கொடுக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்று கேட்பதுகூட இல்லை. அல்லது அப்படி கேட்கத் தயங்குகிறார்கள். எங்கே மகன், அல்லது மகள் நம்மை மதிக்கமாட்டார்களோ! நம்மீது கோபப்பட்டு விடுவார்களோ என்ற பயம்.

    பிள்ளைகள் எங்கே போகிறார்கள்; யாருடன் பழகுகிறார்கள்; வீட்டில்  சாப்பிடவோ நேரத்திற்கு உறங்கவோ வருவதில்லையே, ஏன்; ஒழுங்காகப் படிக்கிறார்களா? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்;  அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் சண்டைபோட்டு வாங்கும் பாக்கெட் மணியை என்ன செய்கிறார்கள்... என்றெல்லாம் விசாரிப்பதை, இளைய தாய் அல்லது தந்தை அநாகரிகமாகக் கருதுகின்றனர்; பிள்ளைகள் இந்த விசாரணையை அவமானமாகப் பார்க்கின்றனர்; தங்கள் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று எண்ணுகின்றனர்.

    இன்றைய பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வயப்படுவதும்  கொந்தளிப்பதும்  பெற்றோர்களின் இந்தக் கண்டுகொள்ளாமைக்கு ஒரு காரணம். இன்றைய புதிய தலைமுறைக்கு அறிவுரை என்றாலே நஞ்சு. ஏன் மதிப்பெண் குறைந்து போய்விட்டது என்று கேட்டுவிட்டால், தற்கொலை முயற்சி, தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. ஆசிரியர்   திட்டிவிட்டால் பழிவாங்கும் வெறி. நினைத்ததை அனுபவிக்க  முடியாவிட்டால், பார்ப்பவர் மீதெல்லாம் எரிச்சல். தவறான உறவுகள்,  நடத்தைகளைக் கூட யாரும் கண்டித்து விடக் கூடாது என்ற இறுமாப்பு.

    முடிவு, பொறுப்பற்ற ஒரு தலைமுறை உருவாகி விட்டது. நிதானமோ  விவேகமோ இல்லாத, வேகம், சுயநலம், கட்டுப்பாடற்ற போக்கு ஆகிய  விரும்பத் தகாத குணங்கள் கொண்ட ஒரு படை வளர்ந்து விட்டது.  மூத்தவர்கள் இவர்களின் நிலை கண்டு அஞ்சிக்கொண்டிருக்க, இவர்களின் வாரிசுகள் எப்படியிருப்பார்களோ என்ற கலக்கம்  சீர்திருத்தவாதிகளை  வாட்டிக்கொண்டிருக்கிறது.

    செலவினங்கள்

    தேவைக்காகச் செலவு செய்வது ஒரு ரகம்; தகுதியை உயர்த்திக் காட்ட, நண்பர்களைத் திருப்திப்படுத்த செய்யப்படும் ஆடம்பர வீண்செலவு இன்னொரு ரகம். இன்றைய பிள்ளைகளின் செலவினங்கள் இரண்டாம் ரகம்.

    அலைபேசி, அவசரத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. அலைபேசியில் சாதாரணமானது  முதல் சிறப்பம்சங்கள்  நிறைந்த உயர்தரமானது வரை தொகைக்கேற்ப பல ரகங்கள்  கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பிளாக்பெர்ரிதான் வேண்டும் என்று பிள்ளைகள்  அடம்பிடிக்கலாமா?

    அலைபேசியில், பேசப் பேச விநாடிக்கு விநாடி பணம் செலவாவதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அரட்டை அடிப்பதற்கெல்லாம்  அலைபேசியைப்  பயன் படுத்திவிட்டு, மாதந்தோறும் ரூ.800க்கும் 1000க்கும் ரீசார்ஜ் செய்யப் பெற்றோரிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? தவறான  பயன்பாடுகள் வேறு.

    வீட்டில் அறுசுவை உணவு காத்திருந்தாலும், உணவகங்களில்  சாப்பிடுவதை விரும்பும் பிள்ளைகளை என்ன சொல்ல?  அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்து விட்டுப் பிள்ளையை   எதிர்பார்த்திருக்கும் தாய்க்கு இவன் சொல்லும் பதில், நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டேன். ஏன்? என்று கேட்கக்கூடாது.  கேட்டுவிட்டால் வீட்டில் ஒரே களேபரம்.

    ஹோட்டல் உணவு பணத்திற்கு மட்டுமல்ல; உடல் நலத்திற்கும் கேடு. அங்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய், பொடிகள், தரமற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து இளமையிலேயே முதுமையை  உண்டாக்கிவிடும். இது தேவைதானா?

    மேற்கத்திய உணவு வகைகளெல்லாம் நம் நாட்டு சுகாதார  உணவுகளுக்கு முன்னால் நிற்காது. அந்த உணவுகளால் காசுதான் கரையுமே தவிர வயிறும் நிறையாது; ஊட்டமும் கிடைக்காது. போதாக்குறைக்கு, வயிற்றுக்குக் கேடுவேறு.


    பிறந்தநாள் கொண்டாட்டம் மேற்கத்திய காலாசாரத்திற்குத் தவறான வழியில் பிறந்த சவலைக் குழந்தை. இன்று பிள்ளைகள் தங்களின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் குடும்பத்துடன் கொண்டாடுவது மட்டுமன்றி, நண்பர்களின் பிறந்த நாளுக்காகச் சக்திக்கு மீறி பரிசுப் பொருட்களை  அன்பளிக்கின்றனர்.

    பரிசுப் பொருளாவது உபயோகமானதாக இருக்கிறதா என்றால், அதுவும்  இல்லை. உயர்ரக மது பாட்டில்கள், கேமராக்கள், ஆபாச புத்தகங்கள் என  மனிதனைக் கெடுக்கும் நச்சுப் பொருட்கள். பொதுவாக பிறந்தநாள்,  புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற களியாட்டங்களில் நண்பர்கள் ஒன்று கூடி விட்டாலே குடியும் கும்மாளமும்தான். இந்த அநியாயத்திற்கும் பெற்றோர் மறுக்காமல் பணம் தர வேண்டுமாம்!

    POCKET MONEY
    'கைச்செலவுக்கு' (Pocket Money) என்ற பெயரில் பிள்ளைகளுக்குப்  பெற்றோர்கள் தரும் பணம்தான் எல்லாத் தவறுகளுக்கும் பெரும்பாலும்  காரணமாகிறது. பெற்றோரின் வருவாய்க்குச் சம்பந்தமில்லாத தொகையைப் பிள்ளைகள் கேட்பதும் அதைப் பெற்றோர்கள்  வழங்குவதற்காகக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் ஒரு பகுதியைச் செல்லமாக ஒதுக்குவதும் இப்போது நாகரிகமாகி விட்டது.

    ஏதோ மாத ஊதியம் வழங்குவதைப் போன்று ஐயாயிரம், பத்தாயிரம் என்று  பாக்கெட் மணி தரக்கூடிய பெற்றோர்கள், பிள்ளைகளைத் தாங்களே படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்போது நீங்கள் காட்டும் செல்லம், நாளை உங்கள் செல்வங்களை மீளாத்  துயரத்தில் சிக்கவைத்து விடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!


    இவ்வாறு தகுதிக்கு மிஞ்சி செலவழித்துப் பழகிவிடும் பிள்ளைகள், ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் நிலைக்கு வந்து விடுகிறார்கள். பணம் கேட்க முடியாத நிலை ஏற்படும் போது, சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்து விடுகிறார்கள். தெரிந்தும் இதைக்  கண்டிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூறு, இருநூறு என்று  ஆரம்பிக்கும் இத்திருட்டு ஆயிரக்கணக்கை எட்டிவிடுவதுண்டு.

    பெற்றோரின் அனுமதியும் இசைவும் இன்றி வீட்டில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்; ஆயிரம் எடுத்தாலும் திருட்டுதான். சொந்த வீட்டில் குறைந்த தொகையில் தொடங்கும் திருட்டு உறவினர் வீடு, நண்பர்கள் வீடு, மாணவர் விடுதி என எல்லா இடங்களிலும் தொடர வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் முளையிலேயே இப்பழக்கத்தைக் கிள்ளி எறிய வேண்டும்.

    தீர்வுகள்

    பிள்ளைகள் புரிந்து கொள்ளாமலும் விவரமில்லாமலும்  நடந்து கொள்வதற்கு ஒருவகையில் பெற்றோர்களே காரணம்.  சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சில ஒழுக்க நடை முறைகளைச்  சொல்லி வளர்க்க வேண்டும்.

    முதலில் பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.  தந்தை பிள்ளையிடம் நட்போடு பழகி, ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கத் தான் படும் பாட்டைச் சொல்லிக் காட்ட வேண்டும்; அப்பணம் வீணடிக்கப்படும் போது தனக்கு ஏற்படும் வலியைப் புரிய வைக்க வேண்டும். நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரிய  வேண்டாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் முதல் தவறே. திட்டாமல், சபிக்காமல், பக்குவமாக, நளினமாக எடுத்துச் சொல்லும் போது எந்தப் பிள்ளையும் புரிந்து கொள்வான்.

    பணத்தைத் தேவைக்குமேல் செலவழிப்பது -அதாவது விரயம் செய்வது-  எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்கிக் கூற வேண்டும். அவ்வாறே, சிக்கனத்தின் சிறப்பையும் சேமிப்பின் அவசியத்தையும் உள்ளத்தில் பதிக்க வேண்டும்.

    பணம் கையாளும் முறை

    அடுத்து நிதியைக் கையாளும் முறையையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு செய்து அழித்து விடுவது பெரிதன்று; வேண்டிய தேவைகளுக்கு மட்டுமே செலவழிப்பதும் வேண்டாதவற்றைத் தவிர்த்துவிடுவதும்தான் பெரிய சாதனை ஆகும்.

    பெருமைக்காகச் செலவழிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. நண்பர்களும் உறவினர்களும் ஆச்சரியப்படும் அளவுக்குச் செலவு செய்வதால் யாருக்கு என்ன நன்மை? வீண் பிதற்றலுக்குத்தான் இது உதவுமே தவிர, உருப்படியான எந்தப் பயனும் இதனால் விளையப்போவதில்லை. அதே நண்பர்களும் உறவினர்களும் முன்னால் போகவிட்டுப் பின்னால் என்ன விமர்சனம் செய்வார்கள், தெரியுமா? தலைக்கனம் பிடித்தவன்; ஊதாரி; உருப்படாதவன் என்றுதான் உங்களை அவர்கள் எடைபோடுவார்கள்.

    இந்தியாவில் நுகர்பொருள் செலவின புள்ளி விவரக் கணக்கு (2007-08) ஒன்று கூறுவதைப் பாருங்கள்:

    இந்தியர் ஒருவர் செலவழிக்கும் 100 ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அத்தியாவசிய செலவாகும்; 48 ரூபாய் பகட்டுச் செலவுகள் ஆகும். கல்விக்கு ரூ. 2.60; மருத்துவம் ரூ. 5.70 செலவிடப்படுகிறதாம்; பகட்டுச் செலவுகளில் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும் ரூ. 10.50 செலவு செய்கின்றனராம்!

    நுகர்வுக் கலாசாரம், மேலைநாடுகளைப் பின்பற்றி அநியாயத்திற்குப் பிள்ளைகளை அலைக்கழித்து வருகிறது. ஊடகங்களில் செய்யப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து இளைய தலைமுறை சொக்கிப்போகிறது; ஏமாந்துபோகிறது. விளைவு பெற்றோரின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது.

    விளம்பரத்தில் எதைக் காட்டினாலும் அதை உண்மை என்று நம்பும் பேதமைதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடே. அவர்கள் கோடி கோடியாய் சம்பாதிப்பதற்காகச் சாமானிய மக்களை விளம்பரத்தால் கிறங்க வைக்கிறார்கள். விளம்பரங்கள் போலியானவை என்பதைப் புரியாத மக்கள் பணத்தை விரயம் செய்கிறார்கள்.

    ஆக, பணத்தின் அருமை, அதைச் சம்பாதிப்பதில் சிந்தும் வியர்வை, அதைக் கையாளும் முறை, சிக்கனத்தின் தேவை, சேமிப்பின் அவசியம், விரயத்தின் விளைவு, பகட்டின் படுதோல்வி போன்ற எதார்த்தங்களைச் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்; செய்முறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

    ஏன், பையன் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவனின் வரவு-செலவு கணக்கைப் பெற்றோரிடம் அவன் ஒப்படைப்பதே அவனது எதிர்காலத்திற்கு நல்லது.

    தயவு செய்து இதையெல்லாம் தாழ்வு என்று கருதாதீர்கள். பிள்ளைகளே! நிச்சயம் இதுதான் உயர்வுக்கு வழிவகுக்கும். 

    எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....

    By: Unknown On: 17:27
  • Share The Gag

  • எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....

    பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யாரேனும் முகம் தெரியாதவர்கள் உங்களது செல்போனை கேட்டால் கொடுப்பதை தவிர்ப்பதே நலம்.

    கடந்த மாதம் பாம்பேயில் ஒரு பயணியிடம் அடுத்திருந்த ஒருவர் தனது போனில் சார்ஜ் இல்லையென கூறி வாங்கி 2..3 ..முறை
     யாருடனோ பேசியுள்ளார்...

    இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் இந்த
     செல்போன் காரரின் வீடு தேடி போலிஸ் வந்து
     கைது செய்துள்ளனர், ஒரு பெண் கொலை
     செய்யப்பட்டுள்ளதாகவும் அவளின் செல்போனில்
     இவரது நம்பர் இலிருந்தே கடைசி 3 கால்கள் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    போன்காரர் காவல்துறையினரிடம், தனது போனை வாங்கி 2, 3முறை ஒருவர் பேரூந்தில் வாங்கி பேசியதை கூறியும் காவல்துறையினர் சந்தேகம் முழுவதுமாக நீங்கிய பாடில்லை.

    பிறகு பேசியவரின் குரலை பதிவு செய்து சோதனை
     செய்ததில் பேசியவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளார்கள்.

    ஆனால் இந்த போன்காரருக்கோ மராத்தி மொழியே
     தெரியாது, இன்னமும் வழக்கிலிருந்து பூரணமாக
     இவர் விடுபடவில்லை.

    உதவி செய்யப்போய் உபத்திரவமா?

    த்ரிஷாவின் கழுதை பாசம்!

    By: Unknown On: 16:45
  • Share The Gag
  • நாய் பாசத்தையடுத்து கழுதை மீதும் பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார் த்ரிஷா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து மணந்த அமலா, விலங்குகள் நலம் காக்கும் தொண்டு அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். விலங¢குகள் மீது பாசம் காட்டி அவைகளுக்கு சேவை செய்து வந்தார். அதேபோல் நாய்களை காக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் த்ரிஷா.

    கேட்பாரற்று திரியும் தெரு ஓர நாய்கள் மீது இவர் காட்டும் பாசத்தால் பல நாய்கள் காக்கப்பட்டிருக்கின்றன. விலங்குகள் அமைப்பான பீட்டாவின் சார்பில் தனது சேவையை அவர் தொடர்ந்து வருகிறார். தற்போது நாய் பாசத்துடன் கழுதைகள் மீது பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

    நாய்கள் தினம் கொண்டாடும் அவர் கழுதைகள் தினம் என்ற தலைப்பில் தனது இணையதள பக்கத்தில் கழுதைகளுக்கு உணவு தருவதுபோல் படம் வெளியிட்டிருக்கிறார். கழுதையின் வால் பகுதியில் தகரங்களை கட்டி நடுரோட்டில் ஓடவிட்டு அதன் கஷ்டத்தை ரசிக்கும் சிலரின் குரூர மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கருத்தும் வெளியிட்டிருக்கிறார்.

    கழுதைகளுக்கு த்ரிஷா உணவு தருவது போன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் அவரது அன்புக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். தற்போது த்ரிஷா தமிழில் என்றென்றும் புன்னகை, பூலோகம், பாண்டியன் இயக்கும் படம் என 3 படங்களில் நடித்து வருகிறார்.

    புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?

    By: Unknown On: 11:00
  • Share The Gag


  •  மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம்.

    1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

    2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும்.

    3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.

    4. இப்போது  Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும்.

    5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும்.

    6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும்.

    7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில்  தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள்.

    8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

    நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்

    By: Unknown On: 10:43
  • Share The Gag
  • நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

    புல எண் (Survey Number) :

    ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

    நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

    1. பதிவுத்துறை
    2. வருவாய்த்துறை


    அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

    1. பதிவுத்துறை :

    நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

    2. வருவாய்த்துறை :

    இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
    பட்டா (Patta)
    சிட்டா (Chitta)
    அடங்கல் (Adangal)
    அ' பதிவேடு ('A' Register)
    நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

    பட்டா (Patta) :

    நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.

    பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
    செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-

    1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
    2. பட்டா எண்
    3. உரிமையாளர் பெயர்
    4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
    5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
    6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

    சிட்டா (Chitta) :

    ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

    அடங்கல் (Adangal) :

    ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

    அ' பதிவேடு ('A' Register) :

    இப்பதிவேட்டில்
    1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
    2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
    3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
    4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
    5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

    நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :

    நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

    கிரயப் பத்திரம் (Sale Deed) :

    சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
    இருக்கும்.

    1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
    2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
    3. எவ்வளவு அளவு
    4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
    5. சொத்து விவரம்

    சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

    கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

    1. பதிவு எண் மற்றும் வருடம்
    2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
    3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
    4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
    5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
    சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
    6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
    7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
    8. மொத்தம் எத்தனை தாள்கள்
    9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

    Land document

    01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

    இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

    நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

    பதிவு செய்யும் முறை:

    நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .

    நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

    இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

    பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

    முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

    சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

    பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

    பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

    Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

    மேலும் சில முக்கிய குறிப்புகள்:-

    1 . முதலில் நீங்கள் வாங்க வேண்டிய சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் வாங்க இருக்கும் இடத்திற்கான பத்திரத்தின் ஒரு நகலை எடுத்து சம்மந்தப்பட்ட சர் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    2 . மிக முக்கியமான விஷயம்: முன்பணம் (அட்வான்ஸ்) மிகக்குறைந்த அதாவது 5000 முதல் 10000 வரை மட்டுமே முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு வேலை அதிகமாக முன்பணம் செலுத்த வேண்டி வந்தால் செக் அல்லது டிடி கொடுப்பத்டு சால சிறந்தது. உடன் வேர்ப்பனை உடன்படிக்கையையும் பெற்றுகொள்வது முக்கியம்.

    3 .சொத்தை பதிவு செய்யும் பொழுது மட்டுமே முழு தொகையையும் கொடுக்க வேண்டும். அதுவும் செக் அல்லது டிடி கொடுப்பது உசிதம்.

    4 .பதிவு செய்யும் முதல் நாள் கூட வில்லங்கம் எடுத்து பார்ப்பது நல்லது.

    5 .சொத்தை வாங்கி பிறகு பட்டா மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. பட்டா உங்கள் பெயரில் இருந்தால் வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ வேறு பிரச்சனைகளோ வருவதற்கு வாப்பு கிடையாது. 

    திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!

    By: Unknown On: 10:05
  • Share The Gag
  •  

    சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது.
    நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம்.

    சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான்.

    இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

    பாரதரத்னா பட்டம் பெற்றும் பந்தா இல்லாமல் சாதாரண டீக்கடைக்கு சென்ற சச்சின்!

    By: Unknown On: 09:34
  • Share The Gag
  •  
    200வது டெஸ்ட் ஆட்டத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கருக்கு சமீபத்து இந்தியாவின் மிக உயர்ந்த 'பாரதரத்னா' பட்டம் வழங்கப்பட்டது.

    பல ஆண்டு காலமாக ஓய்வின்றி நாட்டுக்காக விளையாடிய சச்சின், ஓய்வுக்காக குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாதலமான முசூரிக்கு சென்றுள்ளார். அங்கு 5 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள அவர் லால்டிப்பா பகுதியில் உள்ள தனக்கு பிடித்தமான டீக்கடைக்கு சென்றார்.

    சச்சின் முசூரிக்கு வரும் போதெல்லாம் தனது நண்பர் சஞ்சய் நரங் என்பவர் வீட்டில் தங்குவது வழக்கம். அப்போது நண்பருடன் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வந்த சச்சினுக்கு டீக்கடையின் உரிமையாளர் பிரத்யேகமாக தயாரித்து தரும் மசாலா டீ மிகவும் பிடித்தப் போனது.

    இஞ்சி, தேன், எலுமிச்சைப் பழம் சேர்த்து கடையின் உரிமையாளர் விபின் பிரகாஷ் அளிக்கும் டீயை ருசிப்பதற்காக மனைவி அஞ்சலியுடன் சச்சின் இந்த கடைக்கு மீண்டும் விஜயம் செய்தார்.

    பன் மற்றும் டீயை ருசித்த அவர் சுமார் 1/2  மணி நேரம் அங்கேயே இருந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    சச்சினின் வருகையை பற்றி மகிழ்ச்சியுடன் கூறும் விபின் பிரகாஷ், 'அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

    எவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனாலும் அவர் இப்போதும் சராசரி வாடிக்கையாளர் போல் தான் பழகுகிறார்' என்று தெரிவித்தார்.

    நெல்லிக்காய் ஜூஸ்...!

    By: Unknown On: 09:18
  • Share The Gag

  • 1.’காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ்,எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

    2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

    3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

    4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்னநெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

    5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவதுசாப்பிடலாம்.

    6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

    7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில்நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

    8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும்புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

    9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

    10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

    குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...

    By: Unknown On: 08:54
  • Share The Gag
  • நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்கான கிரீம்கள், மருந்துகளை வாங்கி வைத்தல் என ஏகப்பட்ட வழிமுறைகளில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே குளிர்காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது.

    குளிர்காலத்திற்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதைப் போலவே, நாம் வசிக்கும் வீட்டையும் தயார் செய்வது அவசியம். குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வீட்டை நாம் தயார் செய்ய வேண்டும். வழக்கமாகவே வீட்டை வெப்பமாக வைத்திருக்கவும், குளிருக்கு இதமாக வைத்திருக்கவும் இந்த வேலைகளை நாம் செய்வோம். அதற்காக நீங்கள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை, சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

    குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...
    குளிர்காலத்திற்கு உங்களுடைய வீட்டை தயார் செய்வதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

    சூடுபடுத்துங்கள் - மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாகவும் மற்றும் கதகதப்பாகவும் வைத்திருக்கும் வகையில், ஹீட்டர் அல்லது நெருப்பு மூட்டும் இடத்தை தயார் செய்து வைக்கவும். ஹீட்டர்களுக்கு போதுமான அளவு கேஸ் வைத்திருக்கவும் அல்லது மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர்களை பயன்படுத்தவும். உங்கள் வீட்டு சீலிங் ஃபேனை எதிர் திசையில் சுழலுமாறு இணைப்புகளை மாற்றிக் கொடுத்தால் போதும், வீட்டுக்குள் கதகதப்புக்கு நிறைய வழி கிடைத்து விடும்.

    திரைகள் - உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மொத்தமான திரைகளை பொருத்தவும். இதன் மூலம் வீட்டுக்குள் குளிரான ஊதைக்காற்று வருவதை பெருமளவு தவிர்த்திட முடியும். எனவே, குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் மொத்தமான மற்றும் ஃபேன்ஸியான திரைகளை ஜன்னல் மற்றும் கதவுகளில் பொருத்தி அலங்கரித்து வைக்கவும். மேலும், மொத்தமான பாய்கள் மற்றும் சோபா குஷன்களை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் டல்லாக இருக்கும் பருவநிலையை, பளிச் நிற திரைகளால் உற்சாகமான பொழுதுகளாக மாற்றுங்கள.

    பர்னிச்சர்கள் - வீட்டின் முக்கிய அங்கமாக இருப்பது அங்கிருக்கும் பர்னிச்சர்கள் தான். குளிர்காலத்திற்கு உங்கள் வீட்டை தயார் செய்யும்போது, பர்னிச்சர்களை முறையாக வைத்து, பராமரிப்பதும் முக்கிய பங்கு வகிக்கும். உட்காரும் இருக்கைகளை காலியான இடங்களில் வைக்காமல், ஹீட்டருக்கு சற்றே அருகில் இருக்குமாறு அமையுங்கள. மேலும், ஜன்னல்களை இறுக்கமாக மூடும் போது, காற்று உள்ளே வராமல் இருப்பதை உறுதி செய்யவும். இதன் மூலம் வீடு கதகதப்பாக இருக்கும். பெரிய பர்னிச்சர்களையும் மற்றும் மித வெப்பமாக இருக்கும் பொருட்களையும் பயன்படுத்தினால் வீடு வெப்பமாக பராமரிக்கப்படும்.

    ஒழுகல்களை அடைத்தல் - குளிர்காலம் வருவதற்கு முன்னர் ஓழுகும் குழாய்கள் மற்றும் குளியலறை சாமன்களை பழுதுபார்த்து தயார் செய்து விடவும். ஏனெனில், குளிரான நீர் உங்கள் வீட்டு குழாய் வழியாக வெளியேறும் போது, வீட்டின் வெப்பநிலை குறைந்து விடும். குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக வைத்திருக்க வேண்டியிருப்பதால், இது போன்ற ஒழுகும் குழாய்களை தவிர்ப்பது நல்லது.

    காப்பு வேலைகள் (இன்சுலேசன்) - உங்களுடைய பகுதியில் கடுங்குளிர் நிலவினால், பரண் மீதும், பிற இடங்களிலும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன்சுலேசன் செய்யுங்கள். இதன் மூலம் வீட்டுக்குள் வெப்பம் நிலைநிறுத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் முறையான டி-ஹைட் ப்ரீ இன்சுலேட்டர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் உண்டு. மேலும், குழாய்களை பாதுகாத்து வைத்திருந்து, அவை உறைந்து போவதையும் தவிர்த்திடவும். நாளுக்கு ஒருமுறை சூடான தண்ணீரை நிரம்பி ஓடச் செய்வதன் மூலமாக உங்களுடைய குழாய் உறைந்து போவதை தவிர்க்க முடியும்.

    குளிர்காலத்தில் உங்கள் வீட்டை வெப்பமாகவும், வசதியாகவும் வைத்திருக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். இவை மட்டுமல்லாமல் வெப்பமான குஷன்களையும் மற்றும் பாய்களையும் பயன்படுடுத்தியும், எல்லா மின்சாதனங்களையும் சோதித்து பார்த்தும், கூரைகளில் தண்ணீர் ஓடும் இடங்களை சுத்தம் செய்தும் இதமான குளிரை அனுபவித்திட முடியும்.

    நீங்கள் முன்கூட்டியே தயாராகி இருந்தால் குளிர்காலம் உங்களுக்கு இதமானதாக இருக்கும். உங்களுக்கு எதிரில் நெருப்பை மூட்டி விட்டு, போர்வையை போhத்திக் கொண்டு, ஈஸி சேரில் அமர்ந்தபடி காபியை குடித்து அனுபவிக்கும் குளிர்காலத்தை எண்ணிக் கனவு காணத் தொடங்குங்கள். எனவே, குளிரை தொந்தரவாக கருதுவதை விட்டு விட்டு, வீட்டை தயார் செய்யும் பணியை விரைந்து செய்யுங்கள்.
     

    போலீஸ் ஸ்டேஷனில் ஏடிஎம்(ATM) வைக்கலாம்!

    By: Unknown On: 08:08
  • Share The Gag
  •  

    பெங்களூர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண் அதிகாரியை வெட்டி பணத்தை பறித்து சென்ற கொடூர சம்பவம் கடந்த செவ்வாய் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, ஏடிஎம்களின் பாதுகாப்பு பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், சம்பவம் நடந்த 10 நாட்களில் அந்த விஷயம் கிணற்றில் விழுந்த கல்லாக மாறிவிடுகிறது. ஏடிஎம்களுக்கு செக்யூரிட்டிகளை நியமிப்பது, கேமராக்களை பொருத்துவது ஆகிய நடவடிக்கைகளால் பெருமளவில் செலவு ஏற்படுகிறது; அதனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
     
     இதற்கு மாற்று நடவடிக்கையாக, ஏடிஎம்களை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமைக்கலாம் என்று கடந்த ஆண்டில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்து ஏற்கத்தக்கதாக உள்ளது. பாதுகாப்புக்கு தனியாக செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டியதில்லை; பொதுமக்கள் எந்த நேரத்திலும் பணம் எடுக்க செல்லலாம்; வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஏடிஎம்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது.

    இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு கைமாறாக குறிப்பிட்ட தொகையை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வங்கிகள் செலுத்தினால் போதும். இரு தரப்புக்கும் லாபமாக அமையும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு யூனியன் பிரதேசங்களில் மத்திய உள்துறையும், மாநிலங்களில் அரசும் அனுமதி அளிக்க வேண்டும். சிறந்த திட்டமாக தெரிந்த போதும், இது என்ன ஆனது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. இப்போது மீண்டும் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் ஏடிஎம்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எல்லா மாநிலங்களில் இருந்தும் போலீஸ் அதிகாரிகளால் அறிக்கை, பேட்டி வெளியாகிறது.

    இதுவும் 10 நாட்களுக்கு பின்னர் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற மாநில பிரச்னைகளை விட்டு தமிழக ஏடிஎம்களை மட்டும் ஆராய்ந்தால், இங்குள்ள 60 சதவீதம் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றே இணையதளங்கள் கூறுகின்றன.

    கேமராக்களையே இன்னமும் வங்கிகளால் அமைக்க முடியாத நிலையில், 3 ஷிப்ட்களுக்கு செக்யூரிட்டிகளை போட்டு, அவர்கள் எப்படி ஏடிஎம்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கவே முடியவில்லை. வங்கிகளில் பணம் எடுத்து வரும் நிலை இருந்த போது, பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. ஏடிஎம்களில் பணம் எடுத்து செல்லும் நிலையில், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காரணம், பாதுகாப்பு. வங்கிகள், அரசுகள் கவனிக்க வேண்டிய விஷயம்.

    இந்தியா முழுக்க இலவசமாக பேசக்கூடிய Toll Free எண்கள் ...

    By: Unknown On: 07:53
  • Share The Gag

  • இந்தியா முழுக்க இலவசமாக பேசக்கூடிய Toll Free எண்கள் ...


    Airlines


     Indian Airlines – (1800 180 1407)
     Jet Airways – (1800 22 5522)
     Spice Jet – (1800 180 3333)
     Air India — (1800 22 7722)
     Kingfisher – (1800 180 0101)



     Banks

     ABN AMRO – (1800 11 2224)
     Canara Bank – (1800 44 6000)
     Citibank – (1800 44 2265)
     Corporation Bank – (1800 443 555)
     Development Credit Bank – (1800 22 5769)
     HDFC Bank – (1800 227 227)
     ICICI Bank – (1800 333 499)
     ICICI Bank NRI – (1800 22 4848)
     IDBI Bank – (1800 11 6999)
     Indian Bank – (1800 425 1400)
     ING Vysya – (1800 44 9900)
     Kotak Mahindra Bank – (1800 22 6022)
     Lord Krishna Bank – (1800 11 2300)
     Punjab National Bank – (1800 122 222)
     State Bank of India – (1800 44 1955)
     Syndicate Bank – (1800 44 6655)

     Automobiles


     Mahindra Scorpio – (1800 22 6006)
     Maruti – (1800 111 515)
     Tata Motors – (1800 22 5552)
     Windshield Experts – (1800 11 3636)


     Computers/IT


     Adrenalin – (1800 444 445)
     AMD – (1800 425 6664)
     Apple Computers – (1800 444 683)
     Canon – (1800 333 366)
     Cisco Systems – (1800 221 777)
     Compaq – HP – (1800 444 999)
     Data One Broadband – (1800 424 1800)
     Dell – (1800 444 026)
     Epson – (1800 44 0011)
     eSys – (3970 0011)
     Genesis Tally Academy – (1800 444 888)
     HCL – (1800 180 8080)
     IBM – (1800 443 333)
     Lexmark – (1800 22 4477)
     Marshal’s Point – (1800 33 4488)
     Microsoft – (1800 111 100)
     Microsoft Virus Update – (1901 333 334)
     Seagate – (1 800 425 4535)
     Symantec – (1800 44 5533)
     TVS Electronics – (1800 444 566)
     WeP Peripherals – (1800 44 6446)
     Wipro – (1800 333 312)
     Xerox – (1800 180 1225)
     Zenith – (1800 222 004)


     Indian Railway

     Indian Railway General Enquiry 131
     Indian Railway Central Enquiry 131
     Indian Railway Reservation 131
     Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
     Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9

     Couriers/Packers & Movers


     ABT Courier – (1800 44 8585)
     AFL Wizz – (1800 22 9696)
     Agarwal Packers & Movers – (1800 11 4321)
     Associated Packers P Ltd – (1800 21 4560)
     DHL – (1800 111 345)FedEx – (1800 22 6161)
     Goel Packers & Movers – (1800 11 3456)
     UPS – (1800 22 7171)

     Home Appliances


     Aiwa/Sony – (1800 11 1188)
     Anchor Switches – (1800 22 7979)
     Blue Star – (1800 22 2200)
     Bose Audio – (1800 11 2673)
     Bru Coffee Vending Machines – (1800 44 7171)
     Daikin Air Conditioners – (1800 444 222)
     DishTV – (1800 12 3474)
     Faber Chimneys – (1800 21 4595)
     Godrej – (1800 22 5511)
     Grundfos Pumps – (1800 33 4555)
     LG – (1901 180 9999)
     Philips – (1800 22 4422)
     Samsung – (1800 113 444)
     Sanyo – (1800 11 0101)
     Voltas – (1800 33 4546)
     WorldSpace Satellite Radio – (1800 44 5432)

     Travel

     Club Mahindra Holidays – (1800 33 4539)
     Cox & Kings – (1800 22 1235)
     God TV Tours – (1800 442 777)
     Kerala Tourism – (1800 444 747)
     Kumarakom Lake Resort – (1800 44 5030
     Raj Travels & Tours – (1800 22 9900)
     Sita Tours – (1800 111 911)
     SOTC Tours – (1800 22 3344)

     Healthcare

     Best on Health – (1800 11 8899)
     Dr Batras – (1800 11 6767)
     GlaxoSmithKline – (1800 22 8797)
     Johnson & Johnson – (1800 22 8111)
     Kaya Skin Clinic – (1800 22 5292)
     LifeCell – (1800 44 5323)
     Manmar Technologies – (1800 33 4420)
     Pfizer – (1800 442 442)
     Roche Accu-Chek – (1800 11 4546)
     Rudraksha – (1800 21 4708)
     Varilux Lenses – (1800 44 8383)
     VLCC – (1800 33 1262)

     Hotel Reservations

     GRT Grand – (1800 44 5500)
     InterContinental Hotels Group – (1800 111 000
     Marriott – (1800 22 0044)
     Sarovar Park Plaza – (1800 111 222)
     Taj Holidays – (1800 111 825)

     Teleshopping
     Asian Sky Shop – (1800 22 1800)
     Jaipan Teleshoppe – (1800 11 5225)
     Tele Brands – (1800 11 8000)
     VMI Teleshopping – (1800 447 777)
     WWS Teleshopping – (1800 220 777)

     Others

     Domino’s Pizza – (1800 111 123)

     Cell Phones

     BenQ – (1800 22 08 08)
     Bird CellPhones – (1800 11 7700)
     Motorola Moto Assist – (1800 11 1211)
     Nokia – (3030 3838)
     Sony Ericsson – (3901 1111)

    பெங்களூர் ஏடிஎம்மில் பெண்ணை வெட்டியவன் சைக்கோவா?

    By: Unknown On: 07:27
  • Share The Gag

  • பெங்களூர்: ஏடிஎம்மில் வங்கி பெண் அதிகாரியை வெட்டி பணம் பறித்த நபர் சைக்கோவா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூர், எல்.ஐ.சி அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் வங்கி அதிகாரி ஜோதியை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தாக்கி பையில் இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் அவரது செல்போனை எடுத்துச்சென்றான்.

    இவனைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் ஜோதியின் செல்போன் ஆந்திராவில் இருந்தது தெரியவந்தது. ஆந்திர போலீசார் உதவியுடன் அபுசார் என்பவரிடம் அந்த செல்போன் இருந்தை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் ஒருவர் அந்த செல்போனை 500க்கு விற்றது தெரிந்தது.அதில் மர்ம நபர் ஜோதியை கத்தியால் தாக்கிவிட்டு அவரது பையில் இருந்த துணியை எடுத்து கத்தியை சுத்தம் செய்துகொண்டு பின்னர் ஜோதியின் பையில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றது பதிவாகியிருந்தது.


    இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசாருக்கு புதிய சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது. மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த நகைகளை எடுக்கவில்லை. மேலும் அவரது செய்கைகளும் சற்று வித்தியாசமாக இருந்ததால் அவர் சைக்கோவா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜோதி தற்போது பேச முடியாத நிலையில் உள்ளதால் அவர் முழுமையாக குணமடைந்த பின்னர்தான் மர்மநபர் என்ன பேசினார் என்பது குறித்து தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    'ஜில்லா' படப்பிடிப்பு முடிவடைகிறது!

    By: Unknown On: 01:12
  • Share The Gag
  •  

    ஹைதராபாத்தில் 'ஜில்லா' காட்சிகள் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

    விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், மஹத், சம்பத் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.

    பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்து, விநியோக உரிமை முடித்து திரையரங்கு ஒப்பந்தங்களும் தொடங்கிவிட்டன.

    இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வந்தது. இன்றோடு படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் முடிவடைகிறது. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே காட்சிப்படுத்த இருக்கிறது.

    படத்தின் வில்லன்களோடு ஸ்கேர்லட் வில்சன் ஆடும் பாட்டிற்கு ராஜு சுந்தரம் நடனம் வடிவமைக்கிறார். படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் பங்குபெறும், முதல் பாடலையும் சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இவ்விரண்டு பாடலும் முடிந்துவிட்டால், படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது.

    ஒரு புறம் படப்பிடிப்பு நடந்துவந்தாலும், படத்தின் இதர பணிகள் மறுபுறம் படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே, பொங்கல் 2014ல் வீரத்தோடு சீறிப் பாய தயாராகி விட்டது 'ஜில்லா'.

    மரம் முழுவதும் மருத்துவம்!

    By: Unknown On: 01:00
  • Share The Gag

  • இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்டஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

     * வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

     * வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

     * நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

     * வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

     * புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

     * வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

     * வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

     * வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

     * சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

     * சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

     * வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

     * வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

     * வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

     * விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

     * அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

     * சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

     * ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

     * வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

     * மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
     * காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

     * பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

     * வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

     * புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

    எனவே, இந்த கற்பக மூலிகையின் பயனை அனுபவிக்க தவறாதீர்கள்.