Wednesday 30 October 2013

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

By: Unknown On: 23:52
  • Share The Gag
  • சத்துமாவு தயார் செய்ய… 


    தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.

    1. சத்துமாவு கஞ்சி 



    என்னென்ன தேவை?

    சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.
    எப்படிச் செய்வது?

    சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது, தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

    * கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்!

    2. சத்துமாவு உருண்டை 

    என்னென்ன தேவை?

    சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.
    எப்படிச் செய்வது?

    இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.
    வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

    3. புட்டு

    என்னென்ன தேவை?

    சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.
    எப்படிச் செய்வது?

    சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

    இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!

    By: Unknown On: 23:12
  • Share The Gag

  • உறவுகள் மட்டுமல்ல
     ஊரும் மரணத்திற்கு அழுதால்
     வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !
    -
    —————–
    -
    இறப்பு இல்லை
     இறந்தும் வாழ்கிறார்கள்
     பொதுநலவாதிகள் !
    -
    ——————
    -
    வராது நோய்
     பசித்த பின்
     புசித்தால் !
    -
    ———————
    -
    உச்சரிக்க வேண்டாம்
     முன்னேற்றத்தின் எதிரிகள்
     முடியாது தெரியாது நடக்காது !
    -
    ———————-
     -
    நாளை என்று
     நாளைத் தள்ளிட
     நாள் உன்னைத் தள்ளும் !
    -
    ——————
    -
    உடலை உருக்கும்
     உருவமில்லா நோய்
     கவலை !
    -
    ——————–
    -பெறுவதை விட
     கொடுப்பதே இன்பம்
     பொதுநலம் !
    பெறுவதை விட
     கொடுப்பதே இன்பம்
     பொதுநலம் !
    -

    உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

    By: Unknown On: 22:02
  • Share The Gag
  • உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.

    அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர் வாழ்கின்றனரா என்று சற்று யோசித்தால், ஆச்சரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.

    இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்...

    சிறுநீர் அடிமை

    கேர்ரி என்பவருக்கு சிறுநீரின் சுவை மிகவும் பிடித்துவிட்டது. எனவே அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது சொந்த சிறுநீரில் சுமார் 900 கேலன்களை குடித்துள்ளார்.

    கார் அடிமை

    அனைவருக்குமே கார் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கார் பிடிக்கும். அந்த வகையில் நதானியேல் என்பவர், தனது சிவப்பு நிற 1998 மான்டே கார்லோ என்ற காருக்கு சேஸ் என்று பெயரிட்டு, தனது வாழ்க்கையின் அன்பு கிடைத்துவிட்டது என்று அதனுடன் வாழ்கிறார். மேலும் அவர் அந்த கார் வாங்கிய தினத்தை அதற்கான பிறந்தநாளாக கருதி, அதற்கு பரிசுகளை வாங்கி மகிழ்வார்.
     
    பூனை அடிமை

    43 வயது பெண்மணியான லிசா என்பவர், தனது செல்லப்பிராணியான பூனையின் மயிர் சுவைக்கு அடிமையாக உள்ளார். மேலும் இவர் தனது சொந்த பூனையின் மயிரை மட்டுமின்றி, எந்த ஒரு பூனையின் மயிரையும் சாப்பிடுவார்.

    இரத்த அடிமை

    உண்மையிலேயே இரத்தக்காட்டேரியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், இரத்தத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் உண்டு. அதிலும் 29 வயதான மிச்செல் என்னும் பெண், மனித இரத்தம் மற்றும் பன்றியின் இரத்தத்தை கடந்த 15 ஆண்டுகளாக குடித்து வருகிறார்.

    அழுக்கு அடிமை


    இதுவும் வித்தியாசமான ஒரு அடிமைத்தனம் தான். அதிலும் ஹெய்டி சேரிகளில் வாழும் மக்கள், தினமும் அழுக்குகளை தண்ணீரில் கலந்து குடித்து வருகிறார்.

    இறுதிச்சடங்கு அடிமை

    என் புரியவில்லையா? சிலருக்கு மரண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பழக்கம் இருக்கும். அதில் 42 வயதான லூயிஸ் ஸ்குவாரிஸி என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக, அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் அனைத்து இறுதிச்சடங்கிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாதிரியான விருப்பம் உள்ளவர்களும் இவ்வுலகில் உண்டு

    ஐஸ் அடிமை

    ஐஸ் கட்டிகளை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதிலும் ஐஸ் கட்டிகளை இடைவெளியே இல்லாமல் சிலர் மென்று சாப்பிடுவார்கள். இவ்வாறு இதற்கு அடிமையாவதற்கு காரணம், உடலில் இரும்புச்சத்து அளவுக்கு குறைவாக இருப்பது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    காஸ்மெட்டிக் சர்ஜரி அடிமை

    உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். அதே சமயம், சில மில்லியன் மக்கள் அந்த காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக, இதில் ஒரு பிரபலமான அடிமை என்று சொன்னால் ஜாய்ஸ்லின் வில்டென்ஸ்டீன் என்பவர், காஸ்மெட்டிக் சர்ஜரிக்காக ஒரு வருடத்திற்கு 4,000,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.

    டாய்லெட் பேப்பர் அடிமை

    சிலருக்கு டாய்லெட் பேப்பரின் வாசனை மற்றும் சுவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதிலும் இத்தகைய பழக்கமானது சிறு வயதில் இருந்து தான் ஆரம்பமாகும்.

    டேனிங் அடிமை

    பெரும்பாலான மக்கள் கடற்கரை ஓரங்களில் செய்யப்படும் டேனிங்கிற்கு அடிமையாக இருப்பார்கள். இந்த அடிமைக்கு டேனோரேக்ஸியா என்று பெயர்.

    உடலில் துளையிடுதல்...


    தற்போதுள்ள மக்கள் ஃபேஷன் என்ற பெயரில், உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய விதவிதமான டாட்டூக்கள் மற்றும் தொப்புள் வளையம், நாக்குகளில் வளையம் போன்றவற்றிற்கு அடிமையாக உள்ளனர்.

    சமூக வலைதளங்கள்

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது மத்தியிலும் இருக்கும் ஒருவிதமான அடிமைத்தனம் தான் சமூக வலைதளங்களில் உலாவுதல். அதிலும் ஃபேஸ் புக், டுவிட்டர் போன்றவற்றில் இருப்பது மிகவும் பிரபலமானது.

    முடியை பிடுங்குதல்...

    உலகில் 11 மில்லியன் மக்கள், முடியின் நுனியில் உள்ள வெடிப்புக்களைப் பிடுங்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

    டிடர்ஜெண்ட் அடிமை

    எப்போதாவது டிடர்ஜெண்ட்டை சுவைத்துள்ளீர்களா? பொதுவாக டிடர்ஜெண்ட்டுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால், 19 வயதான டெம்பஸ்ட் என்பவர், டிடர்ஜெண்ட்டின் சுவைக்கு அடிமையாகியுள்ளார்.

    கண்ணாடி டம்ளர்கள்

    ஜோஷ் என்பவருக்கும் கண்ணாடி டம்ளர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உடனே ஒயின் குடிப்பதற்கு என்று நினைக்காதீர்கள். கண்ணாடி டம்ளர்களை சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 100 மேற்பட்ட கண்ணாடி டம்ளர்களையும், 250 பல்ப்புக்களையும் சாப்பிட்டிருப்பதாக சொல்கிறார்.

    மலமிளக்கும் மாத்திரை (Laxative)

    இந்த மாத்திரையானது 15 வயதான கிம்பர்லி என்னும் பெண்ணுக்கு சாக்லெட் போன்றது. அதிலும் ஒருநாளைக்கு 100 மாத்திரைகளை சாப்பிடுவார். இதனால் அவர் இரத்தப்போக்குடன் கூடிய அல்சர் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கற்கள்
    44 வயதான தெரேசா என்னும் பெண், கற்களின் சுவையானது பிடித்துவிட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனால் அவரது பற்கள் உடைந்து போய், கடுமையான வயிற்று வலிக்கு ஆளானாலும், கற்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

    நெயில் பாலிஷ்
    நெயில் பாலிஷை நகங்களுக்கு போடும் அடிமைத்தனம் இருக்கிறது என்று சொன்னால், நம்பலாம். ஆனால் 32 வயதான ஜேமிக்கு, நெயில் பாலிஷின் வாசனை மற்றும் சுவை பிடித்து விட்டது. இதனால் ஒரு நாளைக்கு 6 பாட்டில் நெயில் பாலிஷை குடித்து வருகிறார்.

    ஜானகியுடன் பாடிய தனுஷ்!

    By: Unknown On: 20:43
  • Share The Gag


  • வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.


    இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.


    தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது.




    ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார்.

    கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

    By: Unknown On: 20:22
  • Share The Gag
  • நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

    வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

    கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.

    நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைவதற்கு உழைப்பார்கள். அது மிகவும் நல்லதுதான் என்றாலும், அத்தகைய குறிக்கோள் உங்களுடைய கனவுக்கு வலிமை சேர்ப்பதாகவும், கனவுகளை நனவாக்குவதற்கான செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும்.

    கனவு நனவாகும் வரை நீங்கள் கவனமாகவும், மென்மையாகவும் செயல்பட வேண்டும். எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமாகவும் அன்பாகவும் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோபப்படுவதும், எரிச்சலடைவதும் கூடவே கூடாது. அத்துடன் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே சுயதிறனாய்வு செய்து தேவையற்ற மனோபாவத்தையும் குணங்களையும் நீக்கி விடுங்கள்.

    உதவி செய்தல், புன்னகை புரிதல், சாந்தமாகப் பேசுதல் போன்ற நற்பண்புகள் உங்களுடைய கனவை நனவாக்குவதற்கு நிச்சயம் உதவும். உங்களுடைய வாழ்வில் வரும் நல்ல சந்தர்பங்களை நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்தி உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்காட்டுங்கள். உங்களுடைய இலட்சியக்கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

    Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம்

    By: Unknown On: 18:34
  • Share The Gag

  • Xolo சமீபத்தில் Q தொடர் வரிசையில் Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999  விலையில் வெளியிட்டுள்ளது. புதிய Xolo ஸ்மார்ட்போன் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி ஏற்கனவே Xolo Q700, Xolo Q600, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q800 போன்ற ஃபோன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் Quad-core ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

    Xolo Q900: 312ppi பிக்சல் அடர்த்தி அதிகம் கொண்ட 4.7-இன்ச் ஹச்டி (720x1280 பிக்சல்) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடுகள் ஆதரிக்கின்றது. இது BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

    ஒரு 286MHz PowerVR SGX544 ஜி.பீ. யூ உடன் 1.2GHz Quad-core மீடியா டெக் 6589 ப்ராசசர். ரேம் 1GB, மற்றும் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB inbuilt சேமிப்பு உள்ளடக்கியுள்ளது. Xolo Q900 இல் 1800mAh பேட்டரி மற்றும் இணைப்பு விருப்பங்களான Wi-Fi, ப்ளூடூத், GPS / AGPS மற்றும் 3G ஆகியவை உள்ளன. கூடுதலாக, Xolo A600 பற்றி எந்த விலை நிர்ணயமும் இல்லாமல் Xolo இன் இணயதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    Xolo A600: 245ppi பிக்சல் அடர்த்தி அதிகம் கொண்ட 4.5-இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மாலீ 400 ஜி.பீ. யூ உடன் 1.3GHz dual-core மீடியா டெக் 6572W ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடுகள் ஆதரிக்கின்றது.

    எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டிருக்கிறது. 512MB ரேம் மற்றும் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய 4GB inbuilt சேமிப்பு உள்ளடக்கியுள்ளது. 1900mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த Xolo A600 ஸ்மார்ட்போன் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் சாதனம் கிடைக்கும் இடம் ஆகியவை பற்றி வெளியிடவில்லை.

    Xolo Q900 முக்கிய குறிப்புகள்:

    4.7-இன்ச் ஹச்டி (720x1280) டிஎஃப்டி டிஸ்ப்ளே
    286 மெகா ஹெர்ட்ஸ் PowerVR SGX544 ஜி.பீ. யூ உடன் 1.2GHz Quad-core மீடியா டெக் 6589 ப்ராசசர்
    1GB ரேம்
    MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய, 4GB inbuilt சேமிப்பு
    ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
    இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)
    BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா
    2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா

    Xolo A600 முக்கிய குறிப்புகள்:

    4.5-இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே
    1.3GHz dual-core மீடியா டெக் 6572W ப்ராசசர்
    512MB ரேம்
    ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
    MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய, 4GB inbuilt சேமிப்பு
    இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)
    எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா
    VGA முன் எதிர்கொள்ளும் கேமரா
    1900mAh பேட்டரி

    உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

    By: Unknown On: 18:21
  • Share The Gag
  • அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

    இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!


    லிப்ஸ்டிக்

    பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

    ஹெட்போன்
    தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

    இறால்

    கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

    நாக்கு
    எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

    பட்டாம்பூச்சி

    இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

    யானை

    பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
     

    ஆங்கில மொழி

    ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?


    நெருப்புக்கோழி

    உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

    புகைப்பிடித்தல்
    இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

    முழங்கை ட்ரிக்

    கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

    சிலந்தி

    உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

    தும்மல்

    சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


    பிறப்பு
    குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
     

    கம்ப்யூட்டர்
    கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
     

    முதலை

    பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.


    கரப்பான்பூச்சி

    வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.


    வெங்காயம்

    யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.


    தூசிப்படிந்த வீடு

    வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.


    கர்ப்பமான மீன்

    வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.

    கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

    By: Unknown On: 18:06
  • Share The Gag

  • பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம்.

    இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்"

    பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.

    இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்:

    பச்சை - இயற்கை
    நீளம் - இயற்கை + மருத்துவ குணம்
    சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
    கருப்பு - சுத்தமான ரசாயன கலவை

    உண்மை என்ன?

    இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இவைகள் "ட்யூபில் எங்கு வெட்ட வேண்டும், எங்கு மடக்க வேண்டும் என்பதனையும், ட்யூபிற்கு எந்த கலரை கொடுக்க வேண்டும் என்பதனையும்" மெசின்கள் தெரிவிக்கும்.

    இந்த கலர் குறியீடுகளை டூத்பேஸ்ட் மட்டுமின்றி, பல்வேறு க்ரீம் பாக்கெட்களிலும் நீங்கள் பார்க்கலாம்.

    தயவு செய்து யாரும் "உங்க டூத்பேஸ்ட்ல கலர் இருக்கா?" என்று கேட்டுடாதீங்க....

    மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

    By: Unknown On: 17:48
  • Share The Gag
  • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.


    1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.


    2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.


    3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.


    4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல


    5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல


    6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?


    7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்


    கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.


    8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.


    9.        கஷ்டம் தான் … ஆன முடியும்.


    10.      நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.


    11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?


    12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?


    13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.


    14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.


    15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?


    16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?


    17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.


    18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.


    19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.


    20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.


    21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.


    22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.


    23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.


    24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு


    வேலையை ஆரம்பி.


    25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு


    ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.


    26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,


    அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?


    27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?


    28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.


    29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?


    30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி


    இல்லையா?


    31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே


    போதும்.


    32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?


    ஆம், நண்பர்களே,



        * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்


        * ஒன்பது முறை விழுந்தவனுக்கு இன்னொரு பெயர் உண்டு- எட்டு முறை எழுந்தவன் எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

    நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில!

    By: Unknown On: 17:18
  • Share The Gag


  • அகங்காரம் - செருக்கு
    அக்கிரமம் - முறைகேடு
    அசலம் - உறுப்பு
    அசூயை - பொறாமை
    அதிபர் - தலைவர்
    அதிருப்தி - மனக்குறை
    அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
    அத்தியாவசியம் --இன்றியமையாதது
    அநாவசியம் -வேண்டாதது
    அநேகம் - பல
    அந்தரங்கம்- மறைபொருள்
    அபகரி -பறி, கைப்பற்று
    அபாயம் -இடர்
    அபிப்ராயம் -கருத்து
    அபிஷேகம் -திருமுழுக்கு
    அபூர்வம் -புதுமை
    அமிசம் -கூறுபாடு
    அயோக்கியன் -நேர்மையற்றவன்
    அர்த்தநாரி -உமைபாகன்
    அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
    அர்த்தம் -பொருள்
    அர்த்த ஜாமம் - நள்ளிரவு
    அர்ப்பணம் -படையல்
    அலங்காரம் -ஒப்பனை
    அலட்சியம் - புறக்கணிப்பு
    அவசரமாக - உடனடியாக, விரைவாக
    அவஸ்தை - நிலை, தொல்லை
    அற்பமான - கீழான, சிறிய
    அற்புதம் - புதுமை
    அனுபவம் - பட்டறிவு
    அனுமதி - இசைவு




    ஆச்சரியம் - வியப்பு
    ஆக்ஞை - ஆணை, கட்டளை
    ஆட்சேபணை - தடை, மறுப்பு
    ஆதி - முதல்
    ஆபத்து - இடர்
    ஆமோதித்தல் - வழிமொழிதல்
    ஆயுதம் - கருவி
    ஆரம்பம் -தொடக்கம்
    ஆராதனை -வழிபாடு
    ஆரோக்கியம் - உடல்நலம்
    ஆலோசனை - அறிவுரை
    ஆனந்தம் - மகிழ்ச்சி
     



    இஷ்டம் - விருப்பம்
    இங்கிதம் - இனிமை




    ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
    ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை



    உக்கிரமான - கடுமையான
    உபசாரம் - முகமன் கூறல்
    உபயோகம் - பயன்
    உதாசீனம் - பொருட்படுத்தாமை
    உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
    உத்தரவு - கட்டளை
    உல்லாசம் - களிப்பு
    உற்சாகம் - ஊக்கம்



    ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை



    கர்ப்பக்கிருகம் - கருவறை
    கர்மம் - செயல்
    கலாச்சாரம் - பண்பாடு
    கலாரசனை - கலைச்சுவை
    கல்யாணம் - மணவினை, திருமணம்
    கஷ்டம் - தொல்லை, துன்பம்
    கீதம் - பாட்டு, இசை
    கீர்த்தி - புகழ்
    கீர்த்தனை- பாமாலை, பாடல்
    கோஷம் - ஒலி



    சகலம் - எல்லாம், அனைத்தும்
    சகஜம் - வழக்கம்
    சகி - தோழி
    சகோதரி - உடன் பிறந்தவள்
    சங்கடம் - இக்கட்டு, தொல்லை
    சங்கதி - செய்தி
    சங்கோஜம் - கூச்சம்
    சதம் - நூறு
    சதா - எப்பொழுதும்
    சதி- சூழ்ச்சி
    சத்தம் - ஓசை, ஒலி
    சந்தானம் - மகப்பேறு
    சந்தேகம் - ஐயம்
    சந்தோஷம் - மகிழ்ச்சி
    சபதம் - சூளுரை
    சம்சாரம் - குடும்பம், மனைவி
    சம்பந்தம் - தொடர்பு
    சம்பவம் - நிகழ்ச்சி
    சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
    சம்பிரதாயம் - மரபு
    சம்மதி - ஒப்புக்கொள்
    சரணாகதி - அடைக்கலம்
    சரித்திரம் - வரலாறு
    சரீரம் - உடல்
    சருமம் -தோல்
    சர்வம் - எல்லாம்
    சாதாரணம் - எளிமை, பொதுமை
    சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
    சாதம் - சோறு
    சாந்தம் - அமைதி
    சாகசம் - துணிவு, பாசாங்கு
    சாராமிசம் - பொருட்சுருக்கம்
    சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
    சாவகாசம் - விரைவின்மை
    சாஸ்திரம் - நூல்
    சாசுவதம் - நிலை
    சிகிச்சை - மருத்துவம்
    சித்தாந்தம் - கொள்கை, முடிவு
    சித்திரம் - ஓவியம்
    சிநேகிதம் - நட்பு
    சிம்மாசனம் - அரியணை
    சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
    சிரமம் - தொல்லை
    சின்னம் - அடையாளம்
    சீக்கிரமாக - விரைவாக
    சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
    சுத்தமான - தூய்மையான
    சுபாவம் - இயல்பு
    சுலபம் - எளிது
    சுவாரஸ்யமான - சுவையான
    சேவை - பணி
    சேனாதிபதி - படைத்தலைவன்
    சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
    சௌக்கியம் - நலம்



    தசம் - பத்து
    தத்துவம் - உண்மை
    தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
    தரிசனம் - காட்சி
    தர்க்கம் - வழக்கு
    தர்க்க வாதம் - வழக்காடல்
    தாபம் - வேட்கை
    திகில் - அதிர்ச்சி
    திருப்தி - நிறைவு
    தினசரி - நாள்தோறும்
    தினம் - நாள்
    தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
    துரதிருஷ்டம் - பேறின்மை
    துரிதம் - விரைவு
    துரோகம் - வஞ்சனை
    துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
    தேகம் - உடல்
    தேசம் - நாடு
    தைரியம் - துணிவு
     


    நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
    நமஸ்காரம் - வணக்கம்
    நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
    நவீனம் - புதுமை
    நவீன பாணி - புது முறை
    நாசம் - அழிவு, வீண்
    நாசூக்கு - நயம்
    நாயகன் - தலைவன்
    நாயகி - தலைவி
    நிஜம் - உண்மை, உள்ளது
    நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
    நிச்சயம் - உறுதி
    நிச்சயதார்த்தம் - மண உறுதி
    நிதானம் - பதறாமை
    நித்திய பூஜை - நாள் வழிபாடு
    நிரூபி - மெய்ப்பி, நிறுவு
    நிருவாகம் - மேலாண்மை
    நிதி - பொருள்,செல்வம், பணம்
    நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை



    பகிரங்கம் - வெளிப்படை
    பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
    பரவசம் - மெய்மறத்தல்
    பராக்கிரமம் - வீரம்
    பராமரி - காப்பாற்று , பேணு
    பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
    பரிசோதனை - ஆய்வு
    பரிட்சை - தேர்வு
    பலவந்தமாக - வற்புறுத்தி
    பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
    பலாத்காரம் - வன்முறை
    பாணம் - அம்பு
    பாதம் - அடி
    பாரம் - சுமை
    பால்யம் - இளமை
    பிம்பம் - நிழலுரு
    பிரகாசம் - ஒளி, பேரொளி
    பிரகாரம் - சுற்று
    (அதன்)பிரகாரம் - (அதன்)படி
    பிரசங்கம் - சொற்பொழிவு
    பிரசுரம் - வெளியீடு
    பிரச்சினை - சிக்கல்
    பிரதிநிதி - சார்பாளர்
    பிரதிபலித்தல் - எதிரியக்கம்
    பிரதிபிம்பன் - எதிருரு
    பிரத்தியோகம் - தனி
    பிரபலம் - புகழ்
    பிரமாதமான - பெரிய
    பிரமிப்பு - திகைப்பு
    பிரயோகி - கையாளு
    பிரயோசனம் - பயன்
    பிரவாகம் - பெருக்கு
    பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
    பிரார்த்தனை - தொழுகை,
    பிரியம் - விருப்பம்
    பிரேமை - அன்பு
    பீடிகை - முன்னுரை
    புண்ணியம் - நல்வினை
    புத்தி - அறிவு
    புத்திரன் - புதல்வன்
    புனிதமான - தூய
    புஷ்பம் - மலர், பூ
    புஜபலம் - தோள்வன்மை
    பூஜை - வழிபாடு
    பூர்த்தி - நிறைவு
    பூஷணம் - அணிகலம்-
    போதனை - கற்பித்தல்



    மகான் - பெரியவர்
    மகாயுத்தம் -பெரும்போர்
    மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
    மத்தியானம் - நண்பகல்
    மந்திரி - அமைச்சர்
    மனசு - உள்ளம்
    மனிதாபிமானம் - மக்கட்பற்று
    மானசீகம் - கற்பனை
    மல்யுத்தம் - மற்போர்
     


    யந்திரம் - பொறி
    யூகம் - உய்த்துணர்தல்
    யூகி - உய்த்துணர்
    யோக்யதை - தகுதி



    ரதம் - தேர்
    ரத சாரதி- தேரோட்டி
    ராணி - அரசி
    ராத்திரி - இரவு
    ராச்சியம் - நாடு,மாநிலம்
    ராஜா - மன்னன்
    ரசம் - சாறு, சுவை

     ல


    லட்சம் - நூறாயிரம்
    லட்சணம் - அழகு
    லட்சியம் - குறிக்கோள்



    வதம் - அழித்தல்
    வதனம் - முகம்
    வம்சம் - கால்வழி
    வஸ்திரம் - துணி, ஆடை
    வாஞ்சை - பற்று
    வாயு - காற்று
    விக்கிரகம் - வழிபாட்டுருவம்
    விசாரம் - கவலை
    விசாலமான - அகன்ற
    விசித்திரம் - வேடிக்கை
    விஷேசம் - சிறப்பு
    விஞ்ஞானம் - அறிவியல்
    விஷயம் - செய்தி
    விதானம் - மேற்கட்டி
    விநாடி - நொடி
    வித்தியாசம் - வேறுபாடு
    விபூதி - திருநீறு , பெருமை
    விமோசனம் - விடுபடுதல்
    வியாதி - நோய்
    விரதம் - நோன்பு
    விவாகம் - திருமணம்
    விவாதி -வழக்காடு
    வேகம் - விரைவு
    வேதம் - மறை
    வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
    வேதியர் - மறையவர்



    ஜனநாயகம் - குடியாட்சி
    ஜனம் - மக்கள்
    ஜனனம் - பிறப்பு
    ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
    ஜாலம் - வேடிக்கை
    ஜூரம் - காய்ச்சல்
    ஜோதி - ஒளி
    ஜோடி - இணை
    ஜோடித்தல் - அழகு செய்தல்



    ஸந்ததி - கால்வழி
    ஸமத்துவம் - ஒரு நிகர்
    ஸமரசம் - வேறுபாடின்மை
    ஸமீபம் - அண்மை
    ஸம்ஹாரம் - அழிவு
    ஸோபை - பொலிவு
    ஸௌந்தர்யம் - பேரழகு
    ஸ்தாபனம் _ நிறுவனம்
    ஸ்தானம் - இடம்

    இப்படியும் சில பழமொழிகள்!

    By: Unknown On: 16:58
  • Share The Gag
  • * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்


    * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

    * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்


    * கார் ஓட டயரும் தேயும்


    * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு


    * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை


    * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்


    * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்


    * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது


    * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல


    * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்


    * முடியுள்ள போதே சீவிக்கொள்


    * பழகின செறுப்பு காலை கடிக்காது


    * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி


    * ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.

    ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்

    By: Unknown On: 07:30
  • Share The Gag

  • 1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

    2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

    3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

    4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

    5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

    6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

    7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

    8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

    9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

    10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

    # சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

    உலகின் முதல் பாஸ்வேர்டு!

    By: Unknown On: 07:19
  • Share The Gag

  • corbato











     
    பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொதுவான ஒரு பாஸ்வேர்டை வைத்து கொள்ளலாம் என்றால், எல்லாவற் றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது ஆபத்தானது என்கின்றனர்.அதே தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்திற்கு உட்பட்டிருக்க வேன்டும்.

    இவற்றை அலட்சியம் செய்யலாம் என்று பார்த்தால் அவப்போது படிக்கும் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய செய்திகள் கலக்கத்தை தருகின்றன.

    இப்படி பாஸ்வேர்டுகள் பாடாய் படுத்தும் போது,யார் தான் இந்த பாஸ்வேர்டை கண்டுபிடித்ததோ என்று கேட்கத்தோன்றும் அல்லவா?

    அனுமதி வழங்குவதற்கான சரி பார்க்கும் முறையான பாஸ்வேர்டுகள் ஆரம்ப காலம் முதலே இருக்கவே செய்கின்றன.அலிபாபா கதையில் வரும் திறந்திடு சிசே கூட ஒரு பாஸ்வேர்டு தான்.இருந்தும் நாம் அறிந்த வகையிலான பாஸ்வேர்டு,அதாவது கம்பயூட்டருக்கு திறவுகோளாக இருக்கும் மந்திர சொற்கள் 1960 களில் பயன்பாட்டுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

    இருந்தும் முதல் பாஸ்வேர்டு எது என்றோ இல்லை எவரால் உருவாக்கப்பட்டது என்றோ தெளிவாக தெரியவில்லை.ஆனால் அமெரிக்காவின் தொழில்நுட்ப மையமாக திகழும் எம்.ஐ.டி பல்கலைக்கழக்த்தில் தான் முதல் பாஸ்வேர்டு பிறந்த்தாக கருதப்படுகிறது.

    1960 களின் மத்தியில் இந்த பல்கலையில் ஆய்வாளர்கள் சிடிஎஸெஸ் எனும் டைம் ஷேரிங் கம்ப்யூட்டரை உருவாக்கினர்.ஆதிகால கம்ப்யூட்டர் போல பிரம்மாண்டமாக இருந்த இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்காக உலகின் முதல் பாஸ்வேர்டு உருவாக்கப்பட்டது.

    இந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பெர்னான்டோ கோர்படோ ஆம் நாங்கள் தான் முதல் பாஸ்வேர்டை உருவாக்கியது என மார் தட்டிக்கொள்ளவில்லை.இருக்கலாம் என்று சந்தேகமாகவே கூறும் அவர் மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் இந்த முறையை பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார்.

    ஏறக்குறைய இதே காத்தில் ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய டிக்கெட் விநியோக் நிர்வாகத்திற்கான சாப்ரே அமைப்பு கம்ப்யூட்டரிலும் பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டது.ஆனால் ஐபிஎம் நிறுவனமே நிச்சய்மாக சொல்வதற்கில்லை என்று கூறிவிட்டது.

    எனவே எம் ஐ டியில் தான் முதல் பாஸ்வேர்டு உதயமானதாக கருதலாம்.அந்த முதல் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு சிக்கலானதாக இருந்தது என்று தெரியவில்லை.ஆனால் அந்த பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்கவில்லை.அந்த பாஸ்வேர்டும் திருட்டுக்கு ஆளாது. இத எம் ஐ டி ஆய்வாளரான ஆலன் ஸ்கெர் 25 ஆண்டுகளுக்கு பின்னஅர் ஒப்புக்கொண்டார்.அப்போது கம்ப்யூட்டரை பயன்படுத்த ஓவ்வொரு ஆய்வாளருக்கும் குறிப்பிட்ட அளவே நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த நேரம் போதவில்லை என்று கருதிய ஸ்கெர் ஒரு ஆனைத்தொடரை உருவாக்கி கம்ப்யூட்டரில் இருந்த பாஸ்வேர்டை எல்லாம் அச்சிட்டு கொண்டார்.

    பாஸ்வேர்டு திருடிய குற்ற உண்ர்வை மறக்க அவர் தனது சகாக்களிடமும் அவற்றை கொடுத்திருக்கிறார்.அவரக்ளில் ஒருவரான லிக்லைடர் என்பவர், பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ளே நுழைந்து அப்போதை பல்கலை இயக்குனர் பற்றி விவகாரமாக குறிப்பெழுதி கடுப்பேற்றினாராம்.

    இப்படி இருக்கிறது பாஸ்வேர்டின் கதை.

    வயதானாலும் அழகைக் கூட்டலாம்!

    By: Unknown On: 07:15
  • Share The Gag
  • Anti-aging-beauty-tips

    தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ என நினைக்கவேண்டைம். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
    முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்.20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.

    சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும்  பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து  வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.

    30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே  சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம்.  கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.
    40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.

    50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்.  இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது.

    அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

    தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்,  மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம். மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.வால்நட்  மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை. தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி  ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

    'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)

    By: Unknown On: 07:09
  • Share The Gag



  • ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.

    தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான்.

    அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.

    அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர்.

    ;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான்.

    கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

    இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-09

    By: Unknown On: 06:44
  • Share The Gag
  • உபநிடதங்கள்
     
    வேத காலத்திற்கு பிறகு உபநிடதங்கள் தோன்றின. இவை வேதங்களின் கிளை நூல்கள் எனவும் கூறப்படுகிறது. உபநிடதங்கள் பண்டைய இந்தியாவின் தத்துவ நூல்கள் மேலும் இவை இந்துக்களின் ஆதார நூலாகவும் விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில்
    யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.



                  நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா கிளை நூல்களும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதத்தின் முடிவிலும் முடிவிலும் உபநிடதங்கள்  இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பல உபநிடதங்கள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவை கிடைத்துள்ளன. 


    வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், தெய்வத்திற்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள  பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிடதங்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. 



                     உபநிடதங்களில் சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் பல கேளிவிகளையும் அலசி பார்த்து ஒரு உன்னதமான முடிவை கூறியுள்ள நூல்கள் தான் உபநிடதங்கள். 




     
     
              மொத்தம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. ஆதிசங்கரர், இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர்.  பதினெட்டாம் நூற்றாண்டில் உபநிஷத்பிரம்மேந்திரர் என்னும் துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
     

    108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:


    10 முக்கிய உபநிடதங்கள்:

                  ஈசா வாச்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம்)

                 கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)

                கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)

                பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)

               முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)

               மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)

               ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)

               தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம்)

               பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம்)
     
     24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்

    20 யோக உபநிடதங்கள்

    17 சன்னியாச உபநிடதங்கள்

    14 வைணவ உபநிடதங்கள்

    14 சைவ உபநிடதங்கள்

    9 சாக்த உபநிடதங்கள்
     
    இவைகளில்,

    10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை

    32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை

    19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை

    16 சாம வேதத்தைச் சார்ந்தவை

    31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை.

                       உபநிடதங்களை தொடர்ந்து தோன்றியவை இதிகாசங்கள் எனப்படும் புராணங்கள் ஆகும். வேதம் மற்றும் உபநிடதனகளின் கருத்துக்கள் பல புராணங்களில் விளக்கப்பட்ட்ள்ளன மேலும் பின்பற்றப்பட்டன. இந்தியாவில் தோன்றிய புராணங்களை பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.