Monday 28 October 2013

ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்!

By: Unknown On: 23:15
  • Share The Gag

  • வ.எண்   -  ஆண்டு -     சிறப்புப்பெயர்

    1  -   முதல் ஆண்டு   -  காகித விழா


    2  -   இரண்டாம் ஆண்டு -    பருத்தி விழா
     

     3  -   மூன்றாம் ஆண்டு  -   தோல் விழா
     

    4  -   நான்காம் ஆண்டு   -  மலர், பழ விழா
     

    5   -  ஐந்தாம் ஆண்டு  -   மர விழா
     

    6    - ஆறாம் ஆண்டு   -  சர்க்கரை ,கற்கண்டு விழா
     

    7  -   ஏழாம்ஆண்டு -    கம்பளி, செம்பு விழா
     

    8  -   எட்டாம் ஆண்டு -    வெண்கல விழா
     

    9    - ஒன்பதாம் ஆண்டு  -   மண்கலச விழா
     

    10    - பத்தாம் ஆண்டு   -  தகரம் ,அலுமினியம் விழா
     

    11   -  பதினோறாம் ஆண்டு   -  இரும்பு விழா
     

    12   -  பனிரெண்டாம் ஆண்டு  -   லினன் விழா
     

    13    - பதிமூன்றாம் ஆண்டு  -   மின்னல் விழா
     

    14   -  பதினான்காம் ஆண்டு -    தந்த விழா
     

    15   -  பதினைந்தாம் ஆண்டு   -  படிக விழா
     

    16  -   இருபதாம் ஆண்டு    - பீங்கான் விழா
     

    17    - இருபத்தைந்தாம் ஆண்டு  -   வெள்ளி விழா
     

    18    - ஐம்பதாம் ஆண்டு  -   பொன் விழா
     

    19     -அறுபதாம் ஆண்டு    - வைர விழா
     

    20  -   எழுபத்தைந்தாம் ஆண்டு  -   பவள விழா
     

    21 -    நூறாம் ஆண்டு-    நூற்றாண்டு விழா

    தொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை அழிக்க சில டிப்ஸ்...

    By: Unknown On: 22:48
  • Share The Gag
  • பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். இந்த கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை.

    பெரும்பாலும் இந்த பூச்சிகள் தோட்டத்தில் அதிகம் உருவாவதோடு, அவை வீட்டின் உள்ளே எளிதில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஆகவே இவற்றை எளிதில் அழிக்க சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மேற்கொண்டு, கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.


    சோப்புத் தண்ணீர்

    கம்பளிப்பூச்சியை எளிதில் அழிக்க வேண்டுமெனில், அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்து, அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கலாம்.

    கள்ளிச்செடி

    கள்ளிச்செடியில் இருந்து வெளிவரும் பாலை, கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், கள்ளிச்செடியின் பாலில் இருந்து வெளிவரும் வாசனையால் அழிந்துவிடும்.


     தேங்காய் நார்

    தேங்காய் நாரைக் கொண்டு, சுவற்றில் இருக்கும் கம்பளிப்பூச்சிகளை ஒன்று சேர்த்து, அதன் மேல் தேங்காய் நாரை போட்டு எரித்தால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்.


    வெள்ளை வினிகர்


    வெள்ளை வினிகரை கம்பளிப்பூச்சியின் மீது தெளித்தால், அந்த வினிகரில் உள்ள ஆசிட், கம்பளிப்பூச்சியை உடனே கொன்றுவிடும்.


    பூண்டு


    பூண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் தட்டிப் போட்டு, அந்த நீரை கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், அவை இறந்துவிடும்.


    வெங்காயம்


    தோட்டத்தில் வெங்காயச் செடிகளை வளர்த்து வந்தால், அந்த வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாசனையால், கம்பளிப்பூச்சிகள் வராமல் இருக்கும்.

    ஜின்செங்


    ஜின்செங் என்னும் வேரில் உள்ள சாற்றை எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், அந்த வேரில் உள்ள கசப்புத் தன்மையால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்

     மிளகு


    மிளகை பொடி செய்து, அதனை தண்ணீரில் கலந்து, கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், கம்பளிப்பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்கலாம்.

    இது புகைப்பட பாஸ்வேர்டு.

    By: Unknown On: 22:10
  • Share The Gag
  • http---www.vaptim.com-picword-index 

    கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது.

     பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் மீது இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும் அல்லது புகப்படத்தின் மையத்தில் கிளிக் செய்ய வேண்டும் என தீர்மானித்து கொள்ளலாம்.


    அடுத்த முறை கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்யும் போது நாம் தேர்வு செய்த படம் ஸ்கிரின் சேவை போல வரவேற்கும். அதில் நாம் தேர்வு செயத வகையில் கிளிக் செய்தால் உள்ளே நுழைந்து விடலாம். வழக்கமான பாஸ்வேர்டை டைப் செய்யும் முறையை விட இது சுவாரஸ்யமானது. கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்வதற்கான நவீன வழி என்று இதை உருவாக்கிய வேப்டிம் தளம் வர்ணிக்கிறது.


    எந்த புகைப்படம் தேவை, அதில் எந்த வகையான இலக்குகளை கிளிக் செய்ய அமைக்க வேண்டும் என்பதை இஷ்டம் போல தீர்மானித்து கொள்ளலாம்.இந்த சேவையை புகைப்பட பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம்.ஒருவேளை புகைப்பட பாஸ்வேர்டு ம‌றந்து போய்விட்டால் பிரச்ச‌னையில்லை , இந்த சேவையை அன் லாக் செய்வதற்கான ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
    புதுமையான லாக் இன் முறை தேவை என்றால் டவுன்லோடு செய்து பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.


    டவுன்லோடு செய்ய: http://www.vaptim.com/picword/index.html



    பிக்வேர்டு எனும் பெயரிலேயே மற்றொரு டவுன்லோடு சேவையும் இருக்கிறது.


    இந்த சேவை பிலேஷ்கார்டு முறையில் பிற மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது.http://download.cnet.com/Picword/3000-2279_4-10223742.html

    பார்வையற்ற பெண்ணை காதலிக்கும் 5 ஹீரோக்கள்!

    By: Unknown On: 21:11
  • Share The Gag

  •  Blind woman in love heroes of 5



    பார்வையற்ற பெண்ணை 5 ஹீரோக்கள் காதலிக்கும் கதையாக உருவாகிறது உயிர்மொழி.

     இதுபற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது:


    5 வகை குணம் கொண்டவர்களாக மனிதர்களை பிரிக்கலாம்.


    இந்த 5 குணம் கொண்ட வாலிபர்கள் பார்வையற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள்.


    அவர்கள் அவள் மீது காதல் கொள்கின்றனர்.


     அவர்களின் பிடியில் சிக்கும் அப்பெண் படும்பாடுதான் கதை.


    ஐந்து குணம் கொண்டவர்களாக சர்தாஜ், சசி, சாம்ஸ், ராஜீவ், பாபி ஆண்டனி

     நடிக்க பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் கீர்த்தி.


    இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.


    கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது.


     அனைத்து பணிகளும் தற்போது முடிந்துவிட்டது.


    குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.


    ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் நிறுவனம் இணைந்து


    தயாரித்திருக்கிறது. இவ்வாறு இயக்குனர் ராஜா கூறினார்

    நோக்கியா ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகம்!

    By: Unknown On: 17:24
  • Share The Gag


  • அபுதாபியில் நடைபெற்ற விழாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நோக்கியா தனது ஆஷா சீரியஸ் மொபைலில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது. ஆஷா 501 ன் வெற்றியை தொடர்ந்து இந்த மொபைல்களுக்கு ஆஷா 500, 502, 503 என நோக்கியா பெயரிட்டுள்ளது.

    மூன்று ஆஷா ஃபோன்கள் பிளாக், பிரைட் ரேட், பிரைட் கிரீன், யெல்லோ, சியான் மற்றும் வைட் போன்ற ஐந்து வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த மூன்று மொபைல்களும் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் சந்தையில் கிடைக்கிறது. மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது. இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.

    இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது. ஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.

    ஆஷா மொபைல்களில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது. மேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல்லை. இதன் விலைகள் முறையே ஆஷா 500 ரூ.4,250, ஆஷா 502 ரூ.5,490, மற்றும் ஆஷா 503 ரூ.6,100 விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    நோக்கியா ஆஷா 500 முக்கிய குறிப்புகள்:

    2.8-அங்குல QVGA டிஸ்ப்ளே

    2 மெகாபிக்சல் பின்புற கேமரா

    இரண்டு வகைகளில்-ஒற்றை சிம் மற்றும் எளிதாக இடமாற்று இரட்டை சிம்

    MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு

    நோக்கியா ஆஷா 502 முக்கிய குறிப்புகள்:


    3 அங்குல QVGA டிஸ்ப்ளே

    எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா

    இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)

    MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு

    நோக்கியா ஆஷா 503 முக்கிய குறிப்புகள்:

    வளைந்த கொரில்லா கண்ணாடி 3 அங்குல QVGA டிஸ்ப்ளே

    எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல்

    இரண்டு வகைகளில்-ஒற்றை சிம் மற்றும் எளிதாக இடமாற்று இரட்டை சிம்

    MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு.

    ‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’

    By: Unknown On: 17:11
  • Share The Gag
  • தீபாவளி!


    குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்!


    தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள்,

    புது மகிழ்ச்சி,

    பலவகைப் பலகாரங்கள்,

    ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!.


    28 - diwali-alert


    ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.


    அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக அமைய உங்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்கள் :


    1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள் நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டு வைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.

    2. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.

    3. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளைத் தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.

    4. தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

    5. ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.

    6. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒரு போதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.

    7. குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.

    8. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.

    9. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

    10. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    11. பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.

    12. ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.

    13. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.

    14. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

    15. செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    16. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

    17. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.

    18. பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.

    19. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

    20. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.

    21. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால் பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.

    22. தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.

    23. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

    24. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாகச் செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக்கொளுத்தி விளையாட வேண்டும்.

    25. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..


    முதல் உதவிக் குறிப்புகள் :


    1. எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

    3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்க்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்ப்படும்.

    4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.

    5. ஒருவேளை உங்கள்மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.

    தவிர்க்க வேண்டிய தவறுகள்:

    பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.

    1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிற்ந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை.உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

    2. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.கண்களைக் கசக்குவதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.

    3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல் வேண்டும்.

    4. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்த்துச் செல்வதற்க்கு முன்னால் வலி நிவாரணியாக எந்த மருந்தினையும் கொடுக்கக்கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்க்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக்குழாய்களை மென்மையானதாக்கி விடும், எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.

    5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்துவார்கள்.இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..

    ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!

    பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!

    அனைவருக்கும் ஒளி மயமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்!

    By: Unknown On: 16:49
  • Share The Gag
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் http://www.elections.tn.gov.in/eregistration/என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.



    28 - voter list




    செப்.15- 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெயர் நீக்க, திருத்தம் செய்ய விரும்புபவர்களும் மனு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.


    இது குறித்து தகவல் தெரிவித்த பிரவீண்குமார்,”வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்கான மூன்றாவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான திருத்தங்களுக்காக விண்ணப்பித்தனர்.


    ஏற்கெனவே அக்டோபர் 7, 14 தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    சிறப்பு தொலைபேசி எண்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களைப் பெற கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 முதல் மாலை 6 மணி வரை தகவல்களைப் பெறலாம்.15 லட்சம் பேர் விண்ணப்பம்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இதுவரை மொத்தம் 12 லட்சத்து 68 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்காக 49,190 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


    பல்வேறு திருத்தங்கள் கோரி 1 லட்சத்து 59 ஆயிரத்து 524 பேரும், முகவரி மாற்றம் கோரி 60 ஆயிரத்து 687 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.இணையதளம் மூலமாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக 1 லட்சத்து 27 ஆயிரத்து 969 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்..” என்று தெரிவித்தார்.

    “காமராஜ்” திரைப்படமும் டிஜிட்டலில் ரீ- ரிலீஸ் ஆகிறது!

    By: Unknown On: 16:38
  • Share The Gag
  • கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் திரைக்கு வந்து ஓடிய பல்வேறு படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப் பட்டு திரும்பவும் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னர்தான் வெளியான காமராஜ் படமும் நவீன மயமாக்கப் பட்டு வெளி வர இருக்கிறது.


    IMG_8498


    கர்மவீரர் காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அத்துடன் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராகத் திகழ்ந்தவர்.

     

    கூகுளின் இரகசியமான நிலையம்!

    By: Unknown On: 08:00
  • Share The Gag
  • பல்வேறு இணைய சேவைகளை வழங்கிவரும் முதற்தர நிறுவனமான கூகுள் தொடர்ந்தும் தொழில்நுட்ப உலகில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது.
    இதன் மற்றுமொரு அங்கமாக மிதக்கும் தரவுப்பரிமாற்ற நிலையம் ஒன்றினை சன்பிரான்ஸிஸ்கோவில் அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கையானது 2011ம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டதாகவும் இந்த நிலையம் 250 அடிகள் நீளத்தையும், 72 அடிகள் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் 16 அடிகள் ஆழமானதாகவும் காணப்படுகின்றது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


     



     


     


     


     


     


    Google 'building secret floating data center in San Francisco Bay'

    A mystery structure being built on a barge floating off San Francisco's Treasure Island is fueling speculation that Google is turning its idea of a floating data center into a reality.
    While the Internet company won't confirm the development, CNET reports it has evidence suggesting the four-story 'secret project' could be a Google sea-faring data center.

    Google patented a 'water-based data center' in 2009, describing an environmentally friendly, sea-powered telecommunications and storage system.

    'A system includes a floating platform-mounted computer data center comprising a plurality of computing units, a sea-based electrical generator in electrical connection with the plurality of computing units, and one or more sea-water cooling units for providing cooling to the plurality of computing units,' Google wrote in the patent.

    Now, CNET investigative reporter Daniel Terdiman claims the mystery construction site floating in San Francisco Bay could belong to Google, drawing on evidence from lease agreements, expert consultations and interviews with locals.

    He said putting data centers inside shipping containers, as he claims Google is doing, is already a well-established practice.

    While some commentators have criticized the reporter's evidence as circumstantial, experts say it's plausible that Google would build water-based data facility.

    Joel Egan, the principal at Cargotecture, which designs custom cargo container buildings, said the structure looks like a data center.

    'The cutouts in the long walls of the containers, when they line up, they make hallways,' Egan told CNET. 'You could put all sorts of mainframes into the containers...It doesn't have enough windows for an office building.'

    Egan said that putting a data center on a barge would provide access to abundant water to help cool a large number of servers.

    Jonathan Koomey, a Stanford research fellow and expert on data centers, said companies such as Dell, Hewlett-Packard, Sun Microsystems, and Microsoft have been installing specially built data centers in shipping containers for some time because they're easy to deploy.

    Meanwhile, KPIX 5 reports that Google is actually building a floating marketing center at Hangar 3 for Google Glass, the cutting-edge wearable computer the company has under development.

    KPIX 5 claims sources say Google hopes to tow the completed structure from Treasure Island across the Bay to San Francisco’s Fort Mason, where it would be anchored and open to the public.
    The media outlet also reported that construction on the site, near the San Francisco Bay Bridge, stopped several weeks ago because Google does not have a permit to park the barge on the waterfront.

    Construction on the site commenced last year, and the work is being shielded by a high security fence.

    வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத் - சுற்றுலாத்தலங்கள்!

    By: Unknown On: 07:31
  • Share The Gag

  •      வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்

    சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும்.
     சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484ம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23ஆண்டுகள். மேலும் இந்தப்பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தை சாம்பனாருக்கு மாற்றியிருக்-கிறார். இப்படி அழகு பார்த்து அமைத்த சாம்பனார் பகுதி, 1535ம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றிருக்கிறது.

     இப்படியாக, பல வரலாற்றுப்-பக்கங்களை வசப்படுத்தி-யிருக்கும் சாம்பனார்- பாவாகத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிக்கமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க், 2004ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.
    எப்படிப் போகலாம்?
    குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இது அமைந்திருப்பதால் நல்ல சாலை வசதியைக் கொண்டுள்ளது. ரயிலில் செல்பவர்கள் கோத்ரா ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து போகலாம். வடோதராவில் விமானநிலையம் அமைந்திருக்கிறது. பாவாகத் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி உள்ளது. அதில் பயணிப்பது புதுமை அனுபவம். 

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!

    By: Unknown On: 07:25
  • Share The Gag

  • கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.

    கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

    கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

    1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

    1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

    அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

    ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )

    By: Unknown On: 07:17
  • Share The Gag


  • வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.

    அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

    வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

    அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.

    அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.

    அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.

    வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..

    2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்!

    By: Unknown On: 07:13
  • Share The Gag

  •  வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.


     2012, அக். 8ம் தேதி வரையிலான உலக டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தை பிடித்த அணிகள், சூப்பர் 10 சுற்றில் நேரடியாக இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டியில் (மார்ச் 16,21) மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளும் அடங்கும்.


    இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும். மார்ச் 21ம் தேதி மாலை நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


    இறுதிப் போட்டி ஏப். 6ம் தேதி நடக்க உள்ளது. எல்லா போட்டிகளும் சிட்டகாங், தாக்கா, சைலெட் மைதானங்களில் நடைபெறும். இதே தேதிகளில் மகளிர் டி20 உலக கோப்பையும் நடக்க உள்ளது. அதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சூப்பர் 10 சுற்றில் (ஆண்கள் பிரிவு) இடம் பெற்றுள்ள அணிகள் : பிரிவு 1: இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, தகுதி அணி பி1. பிரிவு 2: இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தகுதி அணி ஏ1.

    இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-07

    By: Unknown On: 06:54
  • Share The Gag


  •                        இந்திய வரலாறும் பழங்கால இந்திய வரைபடங்களும் என்ற தலைப்பில் ஆறு பதிவுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாரம் ஒரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறேன் வேலைபளு காரணமாக  குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவிட இயலவில்லை. ஏழாவது பதிவில் அடிஎடுத்துவைப்பதற்கு முன்பு இது வரை நாம் பார்த்து வந்த வரலாற்றின் காலக்கோடு (timeline) பார்த்து செல்வோம்.
    இப்பிரபஞ்சத்தில்,
    அண்டங்கள் உருவானது                                                   - 750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
    சூரிய குடும்பம் உருவானது                                           -  450 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு
    பாக்டீரியா                                                                                    -  350 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு
    முதல் உயிரினம்                                 -  100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
    டைனோசர் போன்ற ஊர்வன தோன்றியது   - 85 கோடி ஆண்டு 8 கோடி ஆண்டுகள் வரை
    எலி போன்ற பாலூட்டிகள் தோன்றியது        - 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு  
    மனிதன் தோன்றியது                  -                                         -6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 
    இந்தியாவில் மனிதர்களின் குடியேற்றம் தொடங்கியது- 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    பழைய கற்காலம்                     -                                          -கி.மு 5 லட்சம் முதல் கி.மு 10000 ஆண்டு வரை
    இடை கற்காலம்                                                - கி.மு10,000 முதல்  கி.மு6000 வரை
    புதிய கற்காலம்                                   -கி.மு6000 முதல்  கி.மு4000 வரை
    உலோக காலம்                                   - கி.மு4000 முதல்  கி.மு1500 வரை
    வேத காலம்                                       -கி.மு1500 முதல்

                             நிலையான வாழ்க்கை இல்லாமல் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நாகரீக  வாழ்வை பெற்றதும் வேதங்களூம், புராணங்களூம் உபநிதங்களூம் தோன்றியதாக கடந்த பதிவுகளில் பார்த்தோம் அங்கனமெ மதங்களும் தோன்றின. அப்படி இந்தியாவில் தோன்றிய பல மதங்களில் மிகவும் பழமையானது நம் ஹிந்து மதம். ஹிந்து மத்த்தை பற்றி இனி விரிவாக அலசுவோம்.

    ஹிந்து மதம்

    ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கின்றன. அதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பே ஹிந்து மதம் தோன்றியிருக்கிறது. அதாவது புதிய கற்காலத்தின் இறுதியில். உருவ வழிபாடு ஏதும் இல்லாமல் ஐம்பூதங்கலாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் கடவுளாக கொண்டு இருந்துள்ளனர். ஹிந்து மத்த்தில் முதன்முதலில் தோன்றிய பிரிவு பிராமணர்கள். கிமு10 நூற்றாண்டில் ஆரம்பித்து கிமு6 நூற்றாண்டு வரை ஹிந்து மத்த்தின் வேதங்கள், மந்திரங்கள் மற்றும் கொள்கைகள் என அனைத்தும் இவர்களாலேயே உருப்பெற்றது. இதற்கு பல சான்றுகள் ரிக் வேத்த்தில் கிடைக்கின்றன. பின்னர் ஹிந்து மதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும், வைணவமும் தோன்றியது.






    இந்தியாவில் தோன்றியகாலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று நம் ஹிந்து மதம்ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக விளங்குகிறது. நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கபூர், அமெரிக்கா, கனடா  மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

              பிற சமயங்கள் போல் இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லைஇதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லைபல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள்சடங்குகள்சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.





    ஹிந்து மத கோட்பாடுகள் ஆறு கிளைகளாக பிரிக்கபடுகிறது

    1.சம்க்யா(Samkhya),
    2.யோகா(yoga),

    3.நியாய(nyaya),

    4.வைஷேஷிகா(vaisheshika),

    5.மிமாச்யா(mimasya),

    6.வேதாந்தா(vedantha)

    சம்க்யா(Samkhya)

    ஹிந்து மத தந்திரங்களை பற்றி கூறுவது சம்க்யா. கபிலர் இதை தோற்றுவித்தார். இதில் மனம், அக ஆற்றல், ஆத்மா, மோட்சம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. உள்ளார்ந்த நினைவுகளில் சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் மூன்று நிலைகளும் இதில் வருகின்றன. கடவுள் பற்றியோ மோட்சத்திற்கு பிறகு என்ன என்ற குறிப்புகள் இல்லை.

    யோகா(yoga)
    யோகா மனித மனதை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வழிகாட்டி ஆகும். தியானம் முதல் சமாதி நிலை வரை பல நிலைகள் பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
    அஷ்டாங்க யோகா எட்டு நிலைகளை கொண்டது. இது தியானம் மூலம் மனிதன் முக்தி அல்லது சமாதி நிலையை அடைய வழிவகுப்பதாகும்
    1.யாமா(yama- அஹிம்சை, சத்யம், பிரம்மச்சரியம்):

    2.நியாமா(niyama- அகபுற தூய்மை, சந்தோசம், தவம், மத சார்பான புத்தகங்களை படித்தல் மந்திரங்களை தொடர்ந்து ஓதுதல், கடவுளிடம் தன்னை ஒப்படைத்தல்)

    3.ஆசனா(asana- இயல்பாக சுவாசித்தல், சிரசாசனம், பத்மாசனம்)

    4.பிரானயமா(pranayama- மனதையும் சுவாசத்தையும் ஒன்றாக்கி ஒருநிலைப்படுத்துதல்)
    பிராணயாமா மூன்று பெரும் நிலைகளை கொண்டது
    I) சுவாசத்தை உள்ளிழுத்தல்

    II)சுவாசத்தை வெளிவிடுதல்

    III)சுவாசத்தை நிலைப்படுத்துதல்
    சுவாசத்தை உள்ளிழுத்து நிலைபடுதுதல்
    சுவாசத்தை வெளிவிட்டு நிலைப்படுத்துதல்
    சுவாசத்தை நிலைபடுத்தி உள்ளிலுதல் வெளிவிடுதல்

    5.பிரத்யஹாரா(prathyahara- நினைவுகளிலிருந்து வெளிவருதல்)

    6.தர்ணா(dharna- மன ஒருமைப்பாடு)

    7.தியானா(dhayana- தியானம்)

    8.சமாதி(samathi- சமாதி நிலை)
    நியாய(nyaya)
    ஹிந்து மத ஆறு தத்துவங்களில் இதுவும் ஒன்று. ஹிந்து மத்த்தின் அடிப்படை நியாய தர்மங்களை பற்றி இது குறிப்பிடுகிறது.
    வைஷேஷிகா(vaisheshika)
    இது ஹிந்து மத்த்தில் அறிவியல் சம்பந்தமான கோட்பாடுகளை கொண்டது. அணு பற்றிய குறிப்புகள் கூட இதில் உள்ளன.
    மிமாச்யா(mimasya)
    மிமாச்யா என்பதற்கு விசாரணை என்று பொருள். இது ஹிந்து மதத்தில் உள்ள ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றியதர்க்கான குறிப்புகள் உள்ளன
    வேதாந்தா(vedantha)
            ஹிந்து மதத்தில் உள்ள வேதங்களை பற்றி இதில் குறிப்பிடுகின்றனர்
    ஆதி சங்கரர் முதன் முதலில் வேதங்களை தோற்றுவித்தார் பின்னர் அது பல கிளைகளாக பல்வேறு முனிவர்களால் பிரிந்தது
    இவ்வாறாக ஹிந்து மத தத்துவம் ஆறு கிளைகளாக உள்ளன. ஹிந்து மத தத்துவத்தை அடுத்து ஹிந்து மதத்தின் பிரிவுகளை பற்றி பார்ப்போம்.
    ஹிந்து மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது
    1.சைவம்
    2.வைணவம்
    3.ஸ்மார்த்தம்

    சைவம்

    சைவ சமயம் சிவ பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை.  இந்து சமயப் பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்படுகின்றது. ஆரம்பகால வரலாறு பற்றி சரியான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் பாண்டியர்கள் காலத்தில் நாயன்மார்கள் தோன்றி சைவத்தை எழுச்சி பெறச்செய்திருந்தனர். தமிழில்  பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவைஇந்தியாஇலங்கைநேபாளம்தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன
          
    மொகெஞ்சதாரோ - ஹரப்பா 

    அகழ்வாராய்ச்சிகளிலிருந்துஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்த்தென்றும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைத்தனஇதன் அடிப்படையில் ஜி.யு போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தெனிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அவர் கூறியவை பின்வருமாறு,
    சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும்இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.  சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்எனது அறிவுக்கு அக்கருத்துகள்வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வதுஅதாவது ஆன்மாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான்இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டதுஅவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லைகைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளதுமேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளதுஅதாவது பூமத்திய ரேகையின் மீதுமேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்தில்லைக்கு தெற்கே இராவணவன்ன ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள்தேவகள்அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (ஆராய்ச்சியாளர்கள் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்அரக்கர்களும்தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ்ஆரியன் என்ற சொல் சதாசிவனையும்அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும்செத்து சம்பலாகவும்புழுக்களானவர்களை குறிக்காதுஇன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறதுதிருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்.

    பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டு பண்பும்பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளனவாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனதுஇவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லைபாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாதுமூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளதுஇந்த நிலையே ஞானம் எனப்படுகிறதுஇந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

    வைணவம்

    வைணவ சமயம்விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறதுமேலும் இச்சமயம் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும்தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு.



    உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கைவைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்விஷ்ணு அவதாரங்களில் மச்சகூர்மவராகநரசிம்மவாமனபரசுராமஇராமபலராமகிருஷ்ணகல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றனஉபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.


    குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்ததுவைணவத்தில் வடகலைதென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
    வைனவர்களிடத்தில் திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
    • வடகலை திருமண்காப்புபாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்
    • தென்கலை திருமண் காப்புபாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்

      வடகலை
      தென்கலை
      திருமால் தெய்வம்
      திருமகளும் தெய்வம்
      வடமொழி வேத வழி
      நாலாயிர திவ்யபிரபந்தம் நூலும் போற்றப்படும்
      பிராமணர்களுக்கு முதன்மை
      மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை


      வடக்கிலுள்ள திருப்பதிக்கு தென்கலை நாமம்.
      தெற்கிலுள்ள திருவரங்கம் கோவிலுக்கு வடகலை நாம்ம்
      ஸ்மார்த்தம்
      ஸ்மார்த்தம் என்பது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகும்இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன்,சக்தி, திருமால், விநாயகர், சூரியன், மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்குகின்றனர்.


      ஸ்மார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும்ஆதிசங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார்தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்துஇதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷ்ணமதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார்இதன் படி சிவன்சக்திதிருமால்கணேசர்சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம்பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால்இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்என்றே வழங்கலாம்இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும்இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறதுஇன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.
      ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம்அதாவது இறைவன் ஈஸ்வரனும்நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்ம்மே.  மாயையில் சிக்குண்டதால்ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறதுஉயர் ஞானம் கிட்டுமாயின்இந்த வேறுபாடு தெளிந்திடும்முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞானம் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. இவ்வாறாக பிரிந்த ஹிந்து மதம் இன்று வரை தனித்தன்மையுடன் தலைதோங்கி நிற்கிறது.

      பின்னர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல மன்னர்களால் பின்பற்றப்பட்ட வந்த ஹிந்து மதம். இஸ்லாமியர்கள் வருகைக்கு பின்பு பல்வேறு இன்னல்களை சந்தித்தது. ஒரு மதத்தை தோற்றுவித்தவர் என்று யாரும் இல்லாமல், ஒரு தனி அமைப்பு என்று ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு மேல் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டும்,  300 வருடங்களுக்கு மேல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டும் ஹிந்து மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே அதன் தனி பெருமை.

      ஹிந்து மதத்தின் வரலாற்றை தொடர்ந்து வேதங்கள், வேதகாலத்தில் தோன்றிய புராணங்கள் மற்றும் உபநிடதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.