Monday 18 November 2013

அது என்ன பன்றி, பசு கதை!

By: Unknown On: 22:38
  • Share The Gag

  • ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.

    அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

    அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.

    துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார்.

    அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது.

    அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார்.

    பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்.

    இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்!

    By: Unknown On: 22:06
  • Share The Gag
  • 1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
     எல்லை மீறி தகாத வார்த்தைகளை
     வாய் தவறி கூட சொல்லமாட்டார்.

    2) உங்களின் மோசமானச்
     சமையலையும் சிரித்துக்
     கொண்டே சாப்பிடுவார்.

    3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார்.ஒவ்வொர சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

    4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
     மாட்டார்.உங்கள் குறைகளை நிறைகளாக்க
     முயற்சிப்பார்.

    5) உங்கள் மனதை ஆழமாய்
     நேசிப்பதால் ,எத்தனை அழகான பெண்கள்
     முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு
     அழகாய் தெரிவீர்கள்.

    6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் ,
    அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
     முடியாது.வேறு எந்த வேலையிலும்
     கவனம் செல்லாது .

    7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
     ஒப்பிட்டுப் பேச மாட்டார்.எந்த ஒரு பெண்ணைப்
     பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

    8)உங்களை தொலைவில் இருந்துப்
     பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள்
     மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
     மொழி பெயர்ப்பார்.

    9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
     பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார்.
    எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள்
     நடந்துக் கொள்ள உதவுவார்.

    10) உங்களை வேலைக்காரியாய் ,
    சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு ,
    குழந்தையாய் , தோழியாய் , தாரமாய் ,
    தாயாய் பார்ப்பார்.

    11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு , உங்கள்
     அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.நீங்கள்
     சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்....

    இந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது!

    By: Unknown On: 21:11
  • Share The Gag


  • சீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்...
    உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.

    ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும்போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது.ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.

    இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவிட்டார்கள்.

    உண்மையிலேயே அந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது.

    கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

    By: Unknown On: 20:28
  • Share The Gag

  • கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
    செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

    ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

    இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

    இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

    இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

    1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

    2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

    3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

    4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

    5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

    6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

    7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

    8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

    9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

    10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

    11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

    12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

    சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

    By: Unknown On: 20:14
  • Share The Gag
  • 1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

    2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

    3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

    4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

    5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

    6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

    7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

    8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

    9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

    10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

    11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

    12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

    13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

    14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

    15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

    16. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

    பிளாஸ்டிக் பையை ஒழிக்க...

    By: Unknown On: 19:56
  • Share The Gag


  • மும்பையில், ஒரு பிரபல டிபார்ட்மென்ட் கடையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, ஒரு நூதன முறையைப் பின்பற்றுவதைக் கண்டேன்.




    வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப துணிப் பைகளை, சைஸ் வாரியாக, 50ரூபாய், 100ரூபாய் என, டெபாசிட் செய்து பெற்றுக் கொண்டு, பொருட்களை பெற்றுச் செல்லலாம்.


    பின்னர், தாங்கள் எடுத்துச் சென்ற பையை திருப்பி தந்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


     இங்கு, பிளாஸ்டிக் பை உபயோகம் இல்லை. கடைக்காரர்களும், பையை திருப்பித் தர, வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை.


    வாடிக்கையாளர்களும், மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.




    எல்லாக் கடைகளிலும், இதைப் போலவே பின்பற்றலாமே?


    பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், மிகவும், குறைய வாய்ப்புள்ளது.

    அமிதாப், அக்ஷராஹாசனுடன் பாலிவுட்டில் நடிக்கும் தனுஷ்?

    By: Unknown On: 19:36
  • Share The Gag


  • 'பா' படம் இயக்கிய பால்கி தன் அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்கத் தயாராகிவிட்டார்.

    இதில் அமிதாப்பச்சனுடன் தனுஷும் நடிக்கிறாராம். தனுஷ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

    'ராஞ்சனா' படத்தின் மூலம் தனுஷை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால், தயக்கம் இல்லாமல் நடிக்க தனுஷ் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

    தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா நடிக்கிறாராம். அக்ஷராவை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர். தற்போதைக்கு நடிப்பு வேண்டாம் என்று உதவி இயக்குநராக இருக்கிறார் , அக்ஷரா.

    பால்கி சொன்ன கதையின் ஈர்ப்பால் அக்ஷரா நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக ஹீரோயினாக நடிக்கிறார், அக்ஷரா.

    படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார். அநேகமாக பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    2014ம் ஆண்டின் துவக்கத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது.

    விருதுகளை ஏற்க மறுத்த வித்தியாசமானவர்கள்!!

    By: Unknown On: 18:54
  • Share The Gag
  • விருதுகளை ஏற்க மறுத்த சிலரைப்பற்றிய சுவையான தொகுப்பு இது :

    ழான் பால் சார்த்தர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்க மறுத்தார்.  "எழுத்தாளன் ஓர் அமைப்பு. அவன் விருதுகளை ஏற்கக்கூடாது. மேற்கும், கிழக்கும் பிரிந்து சண்டைப்போட்டு கொண்டு இருக்கிறபொழுது  மேற்கு வழங்குகிற ஒரு விருதை என்னால் ஏற்க முடியவில்லை. எழுத்தாளன் விருதுகளால் தான் ஒரு அமைப்பாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது. அது அவன்  எழுத்தை பாதிக்கும். எனக்கும் முன்னரே நெரூடாவுக்கு அந்த விருது  வழங்கப்பட்டு இருக்க வேண்டும்" என்றார் அவர்.


    வியட்நாமில் அமைதியை கொண்டு வந்ததற்காக ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் லா  டேக் தோவுக்கு அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. லா டேக் தோவோ, "எங்கே அமைதி திரும்பி இருக்கிறது? அமெரிக்கா தன்னுடைய வாக்கைக் காப்பாற்றவில்லை!" என்று அப்பரிசை ஏற்க மறுத்தார்.


    மார்லன் பிராண்டோவுக்கு 'காட் பாதர்' படத்துக்கு ஆஸ்கர் விருது
     அறிவிக்கப்பட்டபொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக, தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார். அதே படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார்.


    சாகித்ய அகாடமி வழங்கிய விருதை ஏற்க மறுத்தார் அருந்ததி ராய்.
     "அமெரிக்காவுக்கு அடிபணிந்து நாட்டை மேலும் ராணுவமயமாக்குதல், தாரளமயமாக்குதல், தொழிலாளிகளை ஒடுக்குதல் ஆகியவற்றால் இவ்விருதை ஏற்க மறுக்கிறேன்!" என்றார்.


    அரசு அதிகாரிகள் விருதுகளை ஏற்க கூடாது என்று கே.சுப்ரமணியமும், என் துறை  சார்ந்த விருதுகளை தவிர மற்ற அமைப்புகளின் விருதுகளைப் பெறமாட்டேன் என்று  பத்திரிக்கையாளர் நிகில் சக்ரவர்த்தியும் பத்ம பூஷன் விருதை பெற மறுத்தார்கள். சீக்கிய பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஷ்வந்த் சிங்கும் இதே விருதை ஏற்க மறுத்தார். ஆனால், பின்னர்  பத்ம விபூஷன் வழங்கப்பட்டதும் அதை ஏற்றுக்கொண்டார்.


    மவுலானா அபுல் கலாம் ஆசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து ,"நானே தேர்வுக்குழுவில் இருக்கிறேன். எனக்கு எப்படி விருது?" என்று கேள்வி எழுப்பினார்.

    முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது!

    By: Unknown On: 15:51
  • Share The Gag
  •  
    ஒவ்வொரு முறையும் எலக்ட்ரிக் கார் வரும்போதெல்லாம் பைக் வச்சிருக்கவங்க நமக்கும இது மாதிரி ஒண்ணு வந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பாங்க. அதை மோப்பம் பிடிச்ச யமஹா இப்ப அவங்களுக்காகவே முழுமையான எலக்ட்ரிக் பைக்கை லான்ச் பண்ண போகுது.

    இது 100 கிலோ வெயிட் – ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஒரு முழு சார்ஜ்ல 155 – 260 கிலோமீட்டர் வரை போகலாம். அதிகபட்ச வேகம் 160 கிலோமீட்டர் வேற – இது வந்தா இது கிலோமீட்டருக்கு 20 காசு தான் செலவு மற்றும் ஆயில் / ஸ்பார்க் பிளக் லொட்டு லொசுக்கு செலவும் கிடையாது அது போக சுத்தமான எனர்ஜி வண்டியாக்கும் இது.

    Yamaha – full ELECTRIC bike

     ***************************************…
    It’s Yamaha’s latest electric bike concept, and at an unbelievably lightweight 100 Kg, it’s the electric motorcycle we’ve been waiting for. The battery pack is mounted in the middle and acts as a stressed member of the chassis, with the headstock and swing arm integrated into the exceptionally lithe frame. A brushless DC motor is fixed low in the body, with the rear shock below. The transmission is a fully automated box, with the ability to go from manual to automatic control with the flick of a switch. Despite the lack of indicators, mirrors, and a license plate holder, the PES1 looks remarkably production ready, although that gaping hole in the “tank” would be better used to pack a few extra kWh of battery cells, and we have no idea how Yamaha could keep the curb weight so low without severely limiting the range. expected to gve 155-260 kms in single charge. No more oil change / spark plug and other mechanical issues. Clean energy vehicle too.

    குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் – டெல்லியில் துவங்கியது!

    By: Unknown On: 15:37
  • Share The Gag
  •  nov 18 - child university.2

    ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி தலைமையில் செயல்பட்டு வரும் நவ்ஜோதி இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பு குழந்தைகளிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் விதமாக குழந்தைகளே நடத்தும் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை வடமேற்கு டெல்லி மாவட்டம், கராலா பகுதியில் தொடங்கியுள்ளது. இதற்கு நவ்ஜோதி பால குருக்குலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகம் குறித்து கிரண்பேடி “மற்ற பல்கலைக்கழகம் போல் இல்லாமல், குழந்தைகளிடம் ஒழுக்க நெறிகளை போதிக்கும் துறைகளை கொண்டு இந்த பல்கலை செயல்படுத்தப்படும். குறிப்பாக, தைரியம், ஆரோக்கியம், சுகாதாரம், ஒருமை ப்பாடு போன்ற துறைகள் இருக்கும். இந்த சிறுவர் பல்கலைக்கு துணைவேந்தர், பதிவாளர், துறைத்தலைவர்கள், ஆகியோர் 16 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளே இருப்பார்கள். அவர்களை சிறுவர்களே தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த துறைக்கு இளம் தலைவர்களாக செயல்படுவார்கள். இதே போன்று ஒவ்வொரு ஆண்டும், தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    அதில், தகுதி மற்றும் தலைமை பண்பு அடிப்படையில் சிறுவர், சிறுமியரே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், செல்ப் டீச்சிங், வழிபாடு, ஒழுக்க நெறிகளை கற்றுத்தரும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதன் முக்கிய காரணம், சிறுவர்களிடையே இணைந்து செயல்படுதல், கற்றுகொள்ளுதல் போன்ற செயல்கள் ஊக்கப்படுத்தப்படுத்துவது என்பது தான். இந்த பவுண்டேசனில் உள்ள பெரியவர்கள் ஆலோசகராகவும், தன்னார்வலராகவும், வருகை பேராசிரியராகவும் மட்டுமே செயல்பட்டு சிறுவர்களை வழிநடத்துவார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பள்ளி நேரம் முடிந்த பிறகே துவங்கும். அப்போது தான் சிறுவர்கள் அவர்களது நேரத்தை நற்பண்புகளை வளர்த்து கொள்வதற்கும், படிப்பின் அனுபவத்தை உணர்ந்து கொள்ளவும் பயன்படுத்த இயலும்.

    இதன் மூலம் சிறுவர்களுக்கு துணிவு, பெரியவர்களை மதிக்கும் குணம், சேவை உள்ளிட்ட பண்புகளை கற்றுக்கொள்வார்கள். சமூகத்தின் அனைத்து பிரிவுகளை சார்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இதில் இணைந்து கற்கும் வாய்ப்பினை சாதகமாக்குவோம். இதை இதற்கு முன்பே துவங்கி இருக்க வேண்டும். . மேலும், இக்னோ போல், இதுவும் ஆன்லைன் பல்கலையாக மாறும்.” இவ்வாறு அவர் கூறினார்.

    Children-led ‘university’ opens in Delhi

     ***************************************************

     Aiming to develop ethical values among children, a unique “university of the children and by the children” was today opened in the national capital with an emphasis on self-learning. The ‘Navjyoti Bal Gurukul’, set up in Karala area of North West district by former IPS officer Kiran Bedi-led Navjyoti India Foundation, would have “department of values” instead of regular departments of a varsity and the children would be taught values of courage, honesty and service.

    போயிங் 737 விமான விபத்தில் 50 பேர் பலி-வீடியோ

    By: Unknown On: 14:59
  • Share The Gag


  •   
    ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

    அந்த விமானம் நேற்று இரவு 7.25 மணிக்கு காசன் விமான நிலையம் அருகே சென்றது. பின்னர் அங்கு தரை இறங்க விமானி முயற்சி மேற்கொண்டார். ஆனால் உடனடியாக தரை இறங்க முடியவில்லை.தொடர்ச்சியாக 3 முறை முயற்சித்தார். எனினும், தரை இறங்க முடியவில்லை.

    4-வது முறையாக விமானத்தை காசன் விமானநிலைய ஓடு பாதையில் தரை இறக்க முயன்றபோது, அது தரையில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றும்படி அலறினார்கள். எனினும், விபத்து நடந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த 50 பேரும் உயிரிழந்தனர்.

     nov 18 - Russisa accident

     

    பி.எஸ்.என்.எல்: தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டாம்..

    By: Unknown On: 14:41
  • Share The Gag
  •  

    தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ பேட் மூலமாகவே இனி கட்டணத்தை செலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது.



    முதலில் ‘‘மை பி.எஸ்.என்.எல். ஆப்’ எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ-பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும்.



    இதனை ‘‘ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்’’ அல்லது ‘‘விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்’’ எனும் இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.



    இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்.-பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம்.



    இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    சச்சின் வேடத்தில் நடிக்க ஆசை!

    By: Unknown On: 14:19
  • Share The Gag


  • பாலிவுட்டில் வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் போனவர் ஆமிர்கான்.

    கமர்ஷியல் சினிமாவில் நடித்துக்கொண்டே, மாற்று சினிமாவுக்கும் முக்கியத்துவம் தரும் ஆமிர்கானின் சினிமா காதல் சொல்லித் தீராதது.

    ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று ஆமிர்கான் இப்போதும் விரும்புகிறார்.

    'லகான்' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்த ஆமிர்கானுக்கு சச்சின் மேல் பெரும் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

    சச்சின் ஓய்வு பெறும் இந்தத் தருணத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆமிர்கான்.

    ''சச்சின் பற்றி படம் எடுத்தால், அதில் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

    சச்சின் வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

    'கப்பலோட்டிய தமிழன்'வ.உ.சி நினைவு தினம் - சிறப்பு பகிர்வு!

    By: Unknown On: 13:56
  • Share The Gag

  • நவம்பர் 18 'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று.

    விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

    பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள் தலைவர்கள்.

    இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

    இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு.

    இவரும் குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது  தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

    பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை.

    தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
    முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

    கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

    மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
    நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

    விடுதலைபெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு. அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின் எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.

    சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார். அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார்.

    புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? அவசியம் படிக்கவும்!

    By: Unknown On: 13:14
  • Share The Gag
  •  
     
    சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....

    ஒரு நிமிஷம் இதப்படிங்க..

    Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

    ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

    அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

    இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

    அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!

    By: Unknown On: 11:38
  • Share The Gag
  • உங்களுடைய வேலையிலிருந்து சற்றே கிளம்பிச் செல்லவோ அல்லது அதனை மறக்கவோ ஒரு காரணம் வேண்டும் என்ற நீங்கள் நினைக்கிறீர்களா?

    ஏதாவதொரு வேலையை நமக்கு தேவையில்லை என்றோ அல்லது செய்ய முடியாது என்றோ நாம் தவிர்க்க நினைப்போம். வேலைக்காக நம்மை நம்பியிருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, அந்த வேலைகளை செய்யாமல் தவிர்க்க நமக்கு நல்ல காரணங்கள் தேவைப்படுகின்றன.

    வேலையை தவிர்க்க உடல் நலம் சரியில்லை, குடும்ப பிரச்சனைகள் மற்றும் சொந்த காரணங்களை சொல்வது மிகவும் தேய்ந்து போன பழைய காரணங்களில் ஒன்றாகும். ஆனால், இந்நாட்களில் இந்த காரணங்களின் உண்மைகளை எளிதில் கண்டறிந்து விட முடியும். எனவே தான், நாம் புதுமையான யோசனைகளின் துணையைத் தேட வேண்டியுள்ளது. அவை மிகவும் எளிதாக நம்பக் கூடியவையாகவும், மாறுபட்டதாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.

    அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!!!

    அது போன்ற சில யோசனைகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

    'தெய்வீக அருள் பெற்றவர்' வருகை - நீங்கள் உங்களுடைய பாஸிடம் சென்று தெய்வீகத்தன்மை கொண்ட ஒருவரை பார்க்கச் செல்வதாகவோ அல்லது உங்கள் நகரத்திற்கு வந்திருக்கும் மிகவும் மத நம்பிக்கை உள்ளவரை பார்க்கச் செல்வதற்காக உங்களுடைய சொந்த நகரத்திற்கு செல்வதாகவும் கூறலாம். இந்த காரணம் பெரும்பான்மையான நேரங்களில் சரிவர வேலை செய்யும். ஆனால், உங்களுடைய பாஸுக்கு கடவுளைப் பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை என்றால் மட்டுமோ அல்லது நீங்கள் ஒரு நாத்திகர் என்று அவருக்குத் தெரிந்திருந்தாலோ மட்டும் தான் இந்த காரணம் பயன்படாமல் போகும்.

    சட்டம் தொடர்பான காரணங்கள் - நம் நாட்டின் சட்ட அமைப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் ஒருமுறை போகாவிட்டால் கூட எந்த வேலையும் நடக்காது. எனவே உங்களுடைய சட்ட ரீதியான ஆவணம் சார்ந்த பணிக்கோ, சான்றிதழ் பெறவோ அல்லது வாக்குமூலம் கொடுக்க செல்வதாகவோ காரணம் சொல்லலாம். உங்களுடைய பாஸை சமாதானப்படுத்துவது தான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.

    கல்யாண வரன் பார்த்தல் - குறிப்பிட்ட வயதுக்கு பின்னர், உங்களுக்கு கல்யாண வரன் பார்க்கும் அறிவிப்புகள் வருவது இயல்பு தான். நீங்கள் இதனை ஒரு சிறந்த காரணமாக சொல்லி வேலை செய்வதை தவிர்க்கலாம். நீங்கள் உங்களுடைய வருங்கால வாழ்க்கைத் துணையை பார்க்கப் போவதாக சொல்லலாம். அடுத்த முறை, அந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று கேட்டால், ‘சரியில்லை' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தப்பி விடலாம்.

    நண்பரின் இறுதிச் சடங்கு - வேலைக்கு செல்வதை தவிர்க்க உங்களுடைய தாத்தா அல்லது சொந்தக்காரர்களை கொல்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்பொழுது, இதில் உங்கள் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாராவது ஒரு நண்பருடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், நண்பரின் இறுதிச் சடங்கிற்கு செல்வதாக சொல்லுங்கள். 'ஒவ்வொரு நண்பரும் முக்கியமானவரே' என்று சொல்வதைப் போல. ஆனால், மீண்டும் அதே நண்பரின் பெயரை சொல்லி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    'உதவி செய்யப் போகிறேன்' - நீங்கள் விபத்தில் மாட்டிக் கொணட ஒரு பெண்ணுக்கு உதவவோ அல்லது வேறொருவருக்கு உதவிக்காக லிப்ட் கொடுப்பதாகவோ சொல்லி உங்கள் வேலையைத் தவிர்க்கலாம். நீங்கள் அனைவருக்கும் உதவி செய்வது பயனுள்ளதாக இருக்கும், அதே வேளையில் வேலை செய்யாமலும் தவிர்க்க முடியும்.

    இவையெல்லாம் உங்கள் வேலையை தவிர்ப்பதற்கான, சற்றே வித்தியாசமான மற்றும் விளையாட்டான யோசனைகளாகும். இதே போன்ற பல புதுமையான யோசனைகளை நீங்களும் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இவையெல்லாம் புதிய யோசனைகள் மற்றும் பழையனவற்றை விட சற்றே திறன் மிக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பது தான் இவற்றின் சிறப்பு.

    விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது....?

    By: Unknown On: 10:04
  • Share The Gag
  • விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்விமானம் ஏதோ காரணத்தினால் கீழே விழும் பொழுது அதில் பயணம் செய்வோர் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிது. இருந்த போதிலும் அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் விமானத்தின் எப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் சற்றே பாதுகாப்பாக இருக்கும் என்பது தான் இந்த ஆய்வின் நோக்கம்.

    பிரிட்டனில் இருந்து செயல் படும் ஒரு தனியார் தொலைக்காட்சி போயிங்குடன் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. விமானம் ஒன்றில் கேமரா பொருத்தப்பட்டு, விமானத்தினுள் "மாதிரி" மனிதர்கள் அமர்த்தப்பட்டு அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது உள்ளே நிகழும் பாதிப்புகளை கண்டறிந்தனர். இவை மட்டும் இல்லது இதுபோன்ற கடந்த 30 வருடங்களாக பல்வேறு தருணங்களில்நடத்தப்பட்ட ஆய்வும் கருத்தில் கொள்ளப்பட்டது.

    அதன்படி விமானம் விபத்துக்கு உள்ளாகும் போது, விமானத்தில் முதல் வகுப்பு வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் தான் முதலில் மிகுந்த பாதிப்பு உள்ளாகிறது. அதாவது முதல் பதினொன்று இருக்கைகள் தங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து சிதறி விடுகின்றன. விமானம் வந்த வேகத்தில் தரையில் மோதும் போது முதல் 11 இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைகின்றன. எனவே இதில் பயணம் செய்தவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என கூறலாம். அதே நேரத்தில் விமானத்தில் பின்புறம் அதாவது எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்யும் பயணிகள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

    இந்த ஆய்வு குறிந்து கருத்து தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், விமானத்தில் எல்லா இருக்கையும் ஒரே அளவு பாதுகாப்பு உடையது தான். விமானம் விபத்துக்குள்ளாகும் போது எவ்வாறு தரையில் படுகிறது என்பதை பொருத்து தான் அதன் பாதிப்பு அமையும். மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு, எனவே பாதுகாப்பான விமான பயணத்திற்கு சீட் பெல்ட் தான் மிக அவசியம் என தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பான விமானம் விபத்துக்குள்ளாவதில்லை என்றும், அதுபோன்ற விமானத்தில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுவரை நடந்த விமான விபத்துக்களில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் விமானத்தில் எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்த்தியின் ‘பிரியாணி’ டிசம்பர் 20-ந் தேதி ரிலீஸ்!

    By: Unknown On: 09:33
  • Share The Gag


  • பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’, அஜீத்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தையும் பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், பெரிய ஜாம்பவான்களின் படங்கள் அன்றைய தினம் வெளியாகவுள்ளதால், அவர்களுடன் போட்டி போட முடியாது என நினைத்த இப்படக்குழு படத்தை டிசம்பர்-20ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ‘பிரியாணி’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்துள்ளார். பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

    சின்னதாய் யோசித்து பார்ப்போமா ?

    By: Unknown On: 09:12
  • Share The Gag
  • *கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள்
    என்பதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்றாகி
    விடுமா? இல்லவே இல்லை, ஏனென்றால் தம்பதியினர் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றார்கள்.இருந்தாலும் சில சமயங்களில் ஏன் சண்டை வருகின்றது.இப்படி சண்டை வருவதால் ஒருவரை
    ஒருவர் புரிந்து கொள்ளாது மணவாழ்கை தனை முறிந்துக்
    கொண்டு போகத்தான் வேண்டுமா என்பதனை சின்னததாய்
    யோசித்து சின்னதாய் திருந்தினால் என்ன...............

    *பொரும்பாலான தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும்
    கனிவுடனும் நடத்தவே விரும்பினாலும் ,எல்லோரும் கருத்து
    வேறுபாடு காரணமா, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
    தங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
    வாக்குவாதம் செய்து பெரிதாக கத்தி கூச்சல் போட்டு
    கெட்ட கெட்ட வார்தையால் திட்டி கடினமாக நடக்கின்றோமே
    இப்படி நடக்கத்தான் வேணுமா ?இப்படி ஒருவரை ஒருவர்
    காயப்படுத்துவதால் நாங்கள் எதை சாதிக்கின்றோம்.
    என சின்னதாய் இருவரும் யோசித்து பார்த்தால் என்ன?

    *கணவனும் மனைவியும் ஒரோ விதமான கருத்துக்களை
    பரிமாறிக்கொள்வோம் என்று இல்லை, பெரும்பாலும்
    இது நபருக்கு நபர் வேறுபடும். உதரணமாக, ஒருவர்
    ஒருவிடையத்தை கூறும் போது விரிவாய் கூறவிரும்பலாம்
    மற்றவர் அதனை சுருக்கமாக கேட்க விரும்பலாம், இதனை
    புரிந்து கொள்ளாது சண்டை ஏற்படும் போது உங்களை புரிந்து
    கொள்ள, உங்கள் மனதை சின்னாய் திறந்து ,சிந்திந்து சின்னதாய்
    ஒரு தரம் யோசிந்தால் என்ன?இப்படி யோசிந்து வரும்
    வாக்குவதை தவிப்பதற்காக ஒருவர் கலந்து பேசாது தவிர்க்கலாம்.
    இதனையும் புரிந்து கொள்ளாது மற்றவர் விடப்பிடியாக
    பேசமுயலும் போதும் அப்போதும் சண்டைவரலாம் இப்படி புரிந்து
    கொள்ளாது கூட குடும்பங்களில் சண்டை வரலாம்
    இதனை இருவரும் சின்னதாய் புரிந்து சின்னதாதய் யோசித்தால் என்ன?

    *கணவனும் மனைவியும் வெவ்வோறு சுழலில் வளர்ந்தவர்களாக
    இரு்ப்பதால் தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்ளவேண்டும்
    என்பது குறிந்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் .
    உதரணமாக, ஒருவர் அமைதியான வீட்டு சூழலில் வாழ்ந்து
    இருப்பார் மற்றவர் கலகலப்பான வீட்டு சூழலில் வாழ்ந்திருப்பார்
    இப்படியான வாழ்வியலில் இருந்து வரும் போது ஒருவர் தன்
    மனம் திறந்து பேச தெரியாமல் தவிப்பார் .மற்றவர் தன்
    மனம் திறந்து வெளிப்டையாக பேசுவார், இதனை புரிந்து
    கொள்ளாது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு
    ஒருவர் மேல் ஒருவர் கோவம் கொள்வதால் ஏற்படுபடும்
    கருத்து வேறுபாட்டால் வரும் சண்டையை தவிர்ப்பதற்கு
    சின்னததாய் மனம் திறந்து யோசிந்து பார்த்தால் என்ன?

    கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் அபூர்வ ‘வரிக்கழுதை’

    By: Unknown On: 08:51
  • Share The Gag
  •  
    உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அவ்வகையில், பல்வேறு கலப்பின உயிரினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக வரிக்கழுதை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

    விலங்கினங்களில் வரிக்குதிரை, கழுதை போன்றவை குதிரை இனத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. எனினும், உயிர் உற்பத்திக்கு தேவையான ‘குரோமோசோம்’களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு விலங்கினத்திலும் வேறுபாடு உண்டு.

    இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு ஆண் வரிக்குதிரை வேலியை தாண்டி தப்பிச் சென்று, வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த பெண் கழுதையுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதன் விளைவாக வரிக்குதிரையின் கால் மற்றும் கழுதையின் முகம் மற்றும் உடலமைப்புடன் இந்த அபூர்வ வரிக்கழுதை பிறந்துள்ளது.

    இதற்கு முன்னரும், வரிக்குதிரை – குதிரை, ஆண் கழுதை – பெண் குதிரை போன்றவை கலப்பினச் சேர்க்கையில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றுள்ளன.

    இருப்பினும், ஆண் வரிக்குதிரையும், பெண் கழுதையும் இணைந்து ஒரு குட்டியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    சும்மா’ என்ற சொல் கோபமூட்டும்!

    By: Unknown On: 08:04
  • Share The Gag
  • பேசும்போது சிலர் வழக்கமாக ஒருவித சொற்களை உச்சரிப்பார்கள், அது மற்றவர்களுக்கு பிடித்திருக்கலாம்; அல்லது எரிச்சல் தரலாம். அப்படி, நமது உரையாடலில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள் எவை?, அதில் அதிக எரிச்சலை மூட்டும் சொற்கள் எவை? என்பது பற்றி சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

    அந்த ஆய்வில், “வேறு என்ன?”, “அப்புறம்” என்ற சொற்கள் தான் அதிகமாக உறவு முறிவை, மனக்கசப்பை ஏற்படுத்தும் சொல் என்று தெரிய வந்துள்ளது. நியூயார்க் நகரிலுள்ள மாரிஸ்ட் கல்லூரி மாணவர்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்த ஆய்வில் 10-ல் நான்கு பேர், “வேறென்ன”, “ஏதாவது” என்ற சொற்கள்தான் தங்களுக்கு தொந்தரவு செய்யும் வார்த்தையென்று குறிப்பிட்டுள்ளனர். ஐந்தில் ஒருவர், “இந்த மாதிரி”, “உனக்குத் தெரியுமா” போன்ற வார்த்தைகள் தங்களுக்கு எரிச்சல் தரும் என்று கூறி இருந்தனர்.

    அதேபோல, “சும்மா”, “நிஜமாகவே” போன்ற வார்த்தைகள் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை ஊட்டுவதாகவும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. நீங்கள், மற்றவர்களுடன் சுமூகமான உறவை நீடிக்க விரும்பினால், “வேறு ஏதாவது பேசு”, “வேற ஒண்ணுமில்லையா?”, “அப்புறம்” என்ற வார்த்தைகளை குறைவாக உச்சரியுங்கள். “நீ இந்த மாதிரி தவறுகளை செய்கிறாய்,” “அவன் இந்த மாதிரிதான்”, “அது உனக்குத் தெரியுமா?” “என்னைப் பற்றித் தெரியுமா”, “அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”, “சும்மாதான் சொன்னேன்,” “விளையாட்டுக்குச் சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்” போன்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!

    By: Unknown On: 07:46
  • Share The Gag



  •  சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

    அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் தங்கள் திருமணத்தில் இந்த அதி நவீன ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இந்த வகையில், மாடு மேய்க்கவும் ரோபோக்களை ஆஸ்திரேலியாவில் உள்ள சில விஞ்ஞானிகள் வடிவமைத்து அசத்தி இருக்கிறார்கள்,

    இதற்காக இந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு ரோபோவை தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்லும். அது மட்டுமின்றி இரவில் மாடுகளை கண்காணிக்கும். விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் இந்த ரோபோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரோபோ முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

     nov 17 - tec robot-roundup.

    டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்!

    By: Unknown On: 07:18
  • Share The Gag
  •  nov 17 - tea biscut.Mini

    பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.” என்றார் இப்படி சூடு பறக்கும் தேநீர் பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `

    கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

    இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

    அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.

    வானில் 28 - 29-ந் தேதிகளில் வால் நட்சத்திரம் தோன்றும்!

    By: Unknown On: 07:00
  • Share The Gag


  • நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன.


    இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது.


    இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இது பூமியை நோக்கி நெருங்கி வருகிறது.


     குறிப்பாக தென்னிந்திய பகுதியை நோக்கி வருவதால்  இப்பகுதி மக்கள் இதை காண முடியும். 2 நாட்களிலும் மாலை 5 மணியளவில் இந்த நட்சத்திரம் காட்சியளிக்கத் தோன்றும்.


     மேகக் கூட்டங்களில் காண்பது கடினம். ஆகவே, சென்னை அறிவியல் மையத்தில் இதை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்னும் 6 சுற்றுகள்; என்ன செய்யப் போகிறார் ஆனந்த்?

    By: Unknown On: 06:44
  • Share The Gag
  •  

    அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்ததன் மூலம் கார்ல்ஸெனை விட 2 புள்ளிகள் பின் தங்கி உள்ளார் ஆனந்த். இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதி உள்ளது. அதனால், அனுபவம் வாய்ந்த ஆனந்த் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் இத்தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை முடிந்த 6 சுற்றுக்களின் முடிவில், நார்வேயின் கார்ல்ஸென் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 5-வது மற்றும் 6-வது சுற்றுக்களில் அடுத்தடுத்து அவர் 2 வெற்றிகள் பெற்றதே இதற்கு காரணம்.

    இத்தொடரில் 6.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தரவரிசையில் முதல் இடத்திலுள்ள கார்ல்ஸென் இன்னும் 2.5 புள்ளிகள் பெற்றால், உலக சாம்பியனாகி விடுவார்.

    ஓய்வுக்குப்பின் திங்கள்கிழமை 7-வது சுற்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆனந்த் தன் திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் முன், ஆனந்த் இவ்வளவு எளிதில் சரணடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் நான்கு சுற்றுகள் டிராவில் முடிந்தபோது நம்பிக்கையுடன் இருந்த ஆனந்த், அடுத்தடுத்த தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 6-வது சுற்றின் முடிவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

    5-வது சுற்றின் தோல்வி, 6-வது சுற்று ஆட்டத்தில் எதிரொலித்தது என்று ஆனந்த் தெரிவித்திருந்தார்.

    அடுத்தடுத்த தோல்விகளைக் கையாளும் விதம் குறித்து நார்வே பத்திரிகையாளர் ஒருவர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த், ""இன்னும் திறமையாக செயல்பட வேண்டும்'' என்றார்.

    பதிலை விரிவாகத் தெரிவிக்குமாறு அந்த நிருபர் வலியுறுத்தினார். அதற்கு ஆனந்த், ""திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு அர்த்தம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே. இந்த ஆங்கிலம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை எனத் தெரியவில்லை'' என்றார்.

    இதற்கு முன்பும் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்கள் இதுபோல ஆனந்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆனந்த் அப்போதெல்லாம் நிதானம் இழக்கவில்லை.

    7-வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறக் காய்களிலும் கார்ல்ஸென் திறமையை நிரூபித்து விட்டார். குறிப்பாக, கருப்பு நிறக் காய்களுடன் காரோ கான் மற்றும் பெர்லின் தடுப்பு முறைகளில் ஆனந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.

    புள்ளிகள் பட்டியல்

    சுற்று ஆனந்த் கார்ல்ஸென்

    1               0.5     0.5

    2               0.5     0.5

    3               0.5     0.5

    4                0.5    0.5

    5                    0      1

    6                     0     1

    * டிராவானால் தலா 0.5 புள்ளிகள்.

    * வெற்றி பெற்றால் 1 புள்ளி.