Friday 13 December 2013

பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் ஆண் நட்பு...

By: Unknown On: 22:55
  • Share The Gag


  • பழகும் போதே மொத்தத்தில் ஆண் நண்பர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் தான் பெண்களுக்கு ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.


    பள்ளி வயதில் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு பெற்றோரை விட்டு தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது. கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது.


    இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் ஃபிரண்டாக` மாறி விடுகிறான். நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான் என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அன்பை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும் போது தான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.


    பல பெண்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வேறு ரூபத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள். பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை.


    மனைவி இயல்பாகவே தன் பாய் ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.


    இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய் ஃபிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேக அம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

    சப்போட்டா பழம் பற்றிய தகவல்.

    By: Unknown On: 22:43
  • Share The Gag



  • சத்தான பழம் என்றுதான்
     சப்போட்டா பற்றி அனைவரும்
     நினைத்து கொண்டிருக்கின்ற
     னர். ஆனால்
    சருமத்தை மிருதுவாக்கும்
     தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள்
     தெரிவித்துள்ளனர்.

    நம்
     இளமைக்கும் அழகுக்கும்
     சப்போர்ட் தரும் சப்போட்டா பழம்
     பற்றி சில சுவையான தகவல்கள்
     உங்களுக்காக.

    100 கிராம் சப்போட்டா பழத்தில் 28
    மில்லி கிராம் கால்சியமும், 27
    மில்லிகிராம் பாஸ்பரசும்
     உள்ளது. எனவே தினமும்
     இரண்டு சப்போட்டா பழம்
     சாப்பிட்டால்
     வளர்ச்சி அதிகரிக்கும்,
    எலும்புகள் வலுவடையும்,
    சருமம் பளபளப்பாகும்.

    சப்போட்டா உடம்பில் உள்ள
     தேவையில்லாத
     கொழுப்பை குறைக்கும்.
    சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட
     பிடிக்காதவர்கள்,
    இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர்
     பால் சேர்த்து, மிக்ஸியில்
     அடித்து மில்க் ஷேக்
     செய்து சாப்பிடலாம்.

    ஒல்லியாக
     தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக
     இருக்கும். அவர்கள் பூசினார்
     போல தோற்றப் பொலிவுடன் மாற
     சப்போட்டா பழம் மிகுந்த
     உதவிபுரிகிறது.

    தோல்
     நீக்கியா சப்போட்டா பழத்துடன்
     சிறிதளவு பால்
     சேர்த்து அரைக்கவும். அந்த
     விழுதுடன் 2 டீஸ்பூன்
     வெள்ளரி விதைப் பவுடன்
     கலந்து குளிப்பதற்கு முன் கை,
    முழங்கை விரல்களில் நன்றாக
     பூசி குளிக்கவும்.

    சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம்
     கைகளை பொலிவாக்கி,
    பூசினாற் போன்ற
     தோற்றத்தை ஏற்படுத்தும்.
    கன்னம் ஒட்டிப்போய்
     எலும்பு தூக்கிக்கொண்டிர
     ுக்கிறதா? கொழு,
    கொழு கன்னங்கள் பெற
     சப்போட்டா பழ
     சதையை எடுத்து அத்துடன்
     ரோஸ் வாட்டர், சிறிது சந்தன
     பவுடர் கலந்து கிரீமாக தயார்
     செய்து கொள்ளவும். இந்த
     கிரீமை முகம் முதல்
     கழுத்துவரை இட, வலமாக தடவ
     வேண்டும்.

    காய்ந்த பின்னர் இளம்
     சூடான நீரில் முகம் கழுவ
     வேண்டும். வாரம்
     இருமுறை இதுபோல
     செய்து வர பளபளவென கன்னம்
     மின்னும்.

    இவை இரத்த நாளங்களில்
     கொழுப்பு படிவதைத் தடுக்கும்
     சிறப்பு செயல்பாடு உடையன
     ஆகும். கொலஸ்டிரால்
     பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்.
    தினம் இரண்டு சப்போட்டா பழங்கள்
     சாப்பிடுவது நலன்
     பயக்கும்.

    இதயம் சம்பந்தமான
     கோளாறுகளுக்கு ஏற்ப
     பாதுகாக்கும் தன்மையும்
     சப்போட்டா பழத்திற்கு உண்டு என
     அமெரிக்காவில் மேற்கொண்ட
     ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது
    .சப்போட்டா பழச்சாறுடன்,
    தேயிலைச் சாறும் சேர்த்துப்
     பருகினால்,
    இரத்தபேதி குணமாகும்.

    சிந்தனைகள் பத்து..!

    By: Unknown On: 22:07
  • Share The Gag


  •  *படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள்,
    பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .


     *மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


     *உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


     *வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
    இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


     *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.


     *ஆசைகள் வளர வளர தேவைகள்
     வளர்ந்து கொண்டே போகும்.


     *எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
     அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.


     *மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


     *கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


     *அதிகம் வீணாகிய நாட்களில் நாம்
     சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

    ஆத்திச்சுடி மொத்தம் 108:-

    By: Unknown On: 21:41
  • Share The Gag


  • ஆத்திச்சுடி மொத்தம் 108:-

    1. அறஞ்செய விரும்பு.
    2. ஆறுவது சினம்.
    3. இயல்வது கரவேல்.
    4. ஈவது விலக்கேல்.
    5. உடையது விளம்பேல்.
    6. ஊக்கமது கைவிடேல்.
    7. எண்ணெழுத் திகழேல்.
    8. ஏற்ப திகழ்ச்சி.
    9. ஐய மிட்டுண்.
    10. ஒப்புர வொழுகு.
    11. ஓதுவ தொழியேல்
    12. ஒளவியம் பேசேல்.
    13. அஃகஞ் சுருக்கேல்.
    14. கண்டொன்று சொல்லேல்.
    15. ஙப்போல் வளை.
    16. சனிநீ ராடு.
    17. ஞயம்பட வுரை.
    18. இடம்பட வீடெடேல்.
    19. இணக்கமறிந் திணங்கு.
    20. தந்தைதாய்ப் பேண்.
    21. நன்றி மறவேல்.
    22. பருவத்தே பயிர்செய்.
    23. மண்பறித் துண்ணேல்.
    24. இயல்பலா தனசெயேல்.
    25. அரவ மாட்டேல்.
    26. இலவம்பஞ்சிற் றுயில்.
    27. வஞ்சகம் பேசேல்.
    28. அழகலா தனசெயேல்.
    29. இளமையிற் கல்.
    30. அறனை மறவேல்.
    31. அனந்த லாடேல்.
    32. கடிவது மற.
    33. காப்பது விரதம்.
    34. கிழமைப் படவாழ்.
    35. கீழ்மை யகற்று.
    36. குணமது கைவிடேல்.
    37. கூடிப் பிரியேல்.
    38. கெடுப்ப தொழி.
    39. கேள்வி முயல்.
    40. கைவினை கரவேல்.
    41. கொள்ளை விரும்பேல்.
    42. கோதாட் டொழி.
    43. கௌவை அகற்று.
    44. சான்றோ ரினத்திரு.
    45. சித்திரம் பேசேல்.
    46. சீர்மை மறவேல்.
    47. சுளிக்கச் சொல்லேல்.
    48. சூது விரும்பேல்.
    49. செய்வன திருந்தச்செய்.
    50. சேரிடமறிந்து சேர்.
    51. சையெனத் திரியேல்.
    52. சொற்சோர்வு படேல்.
    53. சோம்பித் திரியேல்.
    54. தக்கோ னெனத்திரி.
    55. தானமது விரும்பு.
    56. திருமாலுக் கடிமைசெய்.
    57. தீவினை யகற்று.
    58. துன்பத்திற் கிடங்கொடேல்.
    59. தூக்கி வினைசெய்.
    60. தெய்வ மிகழேல்.
    61. தேசத்தோ டொத்துவாழ்.
    62. தையல்சொல் கேளேல்.
    63. தொன்மை மறவேல்.
    64. தோற்பன தொடரேல்.
    65. நன்மை கடைப்பிடி.
    66. நாடொப் பனசெய்.
    67. நிலையிற் பிரியேல்.
    68. நீர்விளை யாடேல்.
    69. நுண்மை நுகரேல்.
    70. நூல்பல கல்.
    71. நெற்பயிர் விளை.
    72. நேர்பட வொழுகு.
    73. நைவினை நணுகேல்.
    74. நொய்ய வுரையேல்.
    75. நோய்க்கிடங் கொடேல்.
    76. பழிப்பன பகரேல்.
    77. பாம்பொடு பழகேல்.
    78. பிழைபடச் சொல்லேல்.
    79. பீடு பெறநில்.
    80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
    81. பூமி திருத்தியுண்.
    82. பெரியாரைத் துணைக்கொள்.
    83. பேதைமை யகற்று.
    84. பையலோ டிணங்கேல்.
    85. பொருடனைப் போற்றிவாழ்.
    86. போர்த்தொழில் புரியேல்.
    87. மனந்தடு மாறேல்.
    88. மாற்றானுக் கிடங்கொடேல்.
    89. மிகைபடச் சொல்லேல்.
    90. மீதூண் விரும்பேல்.
    91. முனைமுகத்து நில்லேல்.
    92. மூர்க்கரோ டிணங்கேல்.
    93. மெல்லினல்லாள் தோள்சேர்.
    94. மேன்மக்கள் சொற்கேள்.
    95. மைவிழியார் மனையகல்.
    96. மொழிவ தறமொழி.
    97. மோகத்தை முனி.
    98. வல்லமை பேசேல்.
    99. வாதுமுற் கூறேல்.
    100. வித்தை விரும்பு.
    101. வீடு பெறநில்.
    102. உத்தம னாயிரு.
    103. ஊருடன் கூடிவாழ்.
    104. வெட்டெனப் பேசேல்.
    105. வேண்டி வினைசெயேல்.
    106. வைகறைத் துயிலெழு.
    107. ஒன்னாரைத் தேறேல்.
    108. ஓரஞ் சொல்லேல்.

    உலக கோப்பை கபடி : இந்தியா பெண்கள் அணி கோப்பையை வென்றது!

    By: Unknown On: 21:31
  • Share The Gag



  • உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.


    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.


    இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்திற்கான போட்டியில் டென்மார்க் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித் தது குறிப்பிடத்தக்கது .

    உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?

    By: Unknown On: 19:59
  • Share The Gag



  •  உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.


    முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.


    உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.


    அப்படி நீக்கியும் கூட, உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்' என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.


    இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.


    டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)


    இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.


    கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.


    இதன் அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.


    மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:http://www.jamsoftware.com/treesize_free


    இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:


    2. WINDIRSTAT

    தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html

    3. XINORBIS

    தறவிக்கம் செய்ய: http://www.xinorbis.com/

    4. RIDNACS

    தறவிக்கம் செய்ய: http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html

    5. SPACE SNIFFER

    தறவிக்கம் செய்ய: http://www.uderzo.it/main_products/space_sniffer/


    குறிப்பு: டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.


    தரவிறக்கம் செய்ய: http://www.spamfighter.com/FULL-DISKfighter/Functions/Download.asp

    தோல்வி என்பது அபிப்ராயம்தான்!

    By: Unknown On: 19:38
  • Share The Gag


  • தோல்வி?? ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான். தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர்.


    தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம்.


    ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.


    வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள்.


    மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.


    ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி.


    ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.


    தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.


    தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?


    சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.


    ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.


    நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது.


    எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள்.


    அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

    மற்றவர்களை மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல!. உங்களுக்காக!

    By: Unknown On: 18:51
  • Share The Gag

  • உங்கள் மனம் லேசாக-- மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக-- உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்க-- நீண்டகாலத் துன்பம் முடிவடைய-- மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம்.


    ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள்.


    மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?


    உங்கள் மனம் லேசாகிறது:


    ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது.


    உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது.


    கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.


    உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:


    எதிர்மறை உணர்வுகளிலிருந்து எழுகிற அலைகள் நோய்களை உருவாக்க வல்லவை.


    தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே ஆவியும் எழுகிறது. ஐஸ்கட்டியும் உருவாகிறது. அதுபோல, உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவே உங்கள் உடலும் மனமும் இருக்கிறது.


    ஒருவரை மன்னிப்பதால் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. அதனால் உங்கள் ஆரோக்கியமும் முகப்பொலிவும் கூடுகிறது.


    மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள்:


    மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை.

    முள்ளம்பன்றியின் முட்கள்போல் அவை சிலிர்த்தெழுந்து வறட்டுப் பிடிவாதத்தின் நுனிகளை நீட்டுபவை.


    உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள்.


    நீண்டகாலத் துன்பம் முடிவடைகிறது:



    ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.


    யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்?


    அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.


    உங்களையே எத்தனை நாள் தண்டிப்பது? :




    ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை.


    திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம்.


    அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.



    நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.


    எப்படி மன்னிப்பது? :





    சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம்.


    சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.


    மற்றவர்களை மன்னியுங்கள்….. மற்றவர்களுக்காக அல்ல! உங்களுக்காக!!

    ஒரு சமயம் ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டது?

    By: Unknown On: 18:28
  • Share The Gag



  • ஒரு சமயம் ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டது .


    ஆயிரம் ருபாய் ,ஒருருபாயை நாணயத்தை பார்த்து ஏளனமாய் ,
     "நான் எப்போதுமே நடிகர்களிடமும் , பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இருப்பேன், தொழிலதிபர்களின் பெட்டியில்தான் தூங்குவேன், நட்சத்திர ஓட்டலில் விளையாடுவேன், விலையுயர்ந்த காரில்தான் பயணிப்பேன் , என் வாழ்க்கை எப்போதும் பரபரப்பாக இருக்கும் கவுரவமாக இருக்கும் நீ எதற்கு என்னருகினில் நிற்பதற்கெல்லாம் தகுதி இல்லை"
    என்றது தலைகனத்துடன்.


    அதற்கு ஒரு ரூபாய் நாணயம் அமைதியாக சொன்னது.


     "நான் எதற்கு நீ செல்லும் இடத்திற்கெல்லாம் போய் அவதிப்படவேண்டும் ,


     என்னை பாதுகாப்பதே கோவில் உண்டியளில்தான், மண் உண்டியலில் குழந்தைகள் என்னை பத்திரப்படுதுகிறார்கள்.


     குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு நானும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறேன்.


     வறியவரின் பசியை போக்க நான் சிறுதுளி வெள்ளமாக இருக்கிறேன்" என்றது.


    நான் என்ன சொல்லவறேன்னா:


    ஒரு வறியவனுக்கு தன்னைப்பற்றிய கம்பீரம் இருக்குமானால்


    பகட்டு மனிதனின் தலைகனமும் அடங்கிப்போகும்...




     யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லையே.

    எனக்கு ஒரு யோசனை தோன்றியது...

    By: Unknown On: 18:11
  • Share The Gag



  • எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


    இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்ப்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகிறது.

    அதனால் யாருக்கு என்ன பயன்?


    நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது.


    விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம்.


    அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்த கூடாது?



    • ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாக பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாய துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க வேண்டும்.


    • இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.


    • விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும்.


    • இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும்.


    • ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த வேண்டும்.


    • இயற்க்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும்.


    இவை நடந்தால்?


    • நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும்

    • உணவு ஏற்றுமதி அதிகரிக்கும்

    • விவசாயம் அழியாமல் பாதுகாக்க முடியும்

    • நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும்

    • வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.

    இன்னும் பல……………………………………..

    ஏன் அரசாங்கம் டாஸ்மாக் நடத்தும் போது விவசாயம் செய்ய முடியாதா?

    இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்!

    By: Unknown On: 17:45
  • Share The Gag



  • இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் இடம் பெற கிரிக்கெட் விளையாட்டிற்கும், சினிமா உலகிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.


    நேற்று வெளியான இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் சாதனையாளர் கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது.



    கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவிக்கு இப்பட்டியலில் 73-வது இடம் கிடைத்துள்ளது.100 பேர் கொண்ட இப்பட்டியலில் முதலிடத்தை ஷாருக்கான் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார். 2-வது இடத்தை கிரிக்கெட் வீரர் தோனியும், சல்மான்கான் 3-வது இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.



    இப்பட்டியலின் முதல் பத்து இடங்களிலிருந்து கிரிக்கெட் வீரர் ஷேவாக், கரினா கபூர் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ரன்பீர் கபீரும், ஹிருத்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளனர்.

    நட்சத்திர பழம் தரும் நன்மைகள் தெரியுமோ?

    By: Unknown On: 17:23
  • Share The Gag



  • பெரும்பாலான பழங்களின் மருத்துவப் பயன்கள் சொல்லிமாளாது அதிகபட்சமாக உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. இதற்கிடையில் நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில்தான் அதிகம் விளைவிக்கப் படுகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.


    இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர்.


    மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.


    குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர் காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.


    மலச்கிக்கலைப் போக்க


    ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.


    மூல நோயின் பாதிப்பு குறைய



    அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூலநோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.


    சரும பாதுகாப்பு


    மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.


    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க



    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


    நரம்புகள் பலப்பட


    ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.

    10 கிராம் ஸ்டார் பழத்தில்:

    கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்

     சர்க்கரை – 3.98 கிராம்

     கொழுப்பு – 0.33 கிராம்

     புரோட்டீன் – 1.04 கிராம்

     பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %

    போலேட் – 12 கிராம்

     வைட்டமின் சி – 34.4 கிராம்

     பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்

     பொட்டாசியம் – 133 மிலி கிராம்

     துத்தநாகம் – 12 மிலிகிராம்

    இந்த ‘ஸ்டார் பழம்’ தற்போது சென்னை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

    வெற்றியின் படிகள் மூன்று!

    By: Unknown On: 16:02
  • Share The Gag


  •  ஒரு செயலினை சிறப்பாக செய்து முடிப்பதற்கு தன்னறிவு, தன்னம்பிக்கை, சுய முயற்சி ஆகியவை தேவை. இவை மூன்றும் தான் வெற்றியின் முக்கிய மூன்று படிகள். எந்த வேலை தன்னறிவுடனும், ஆழ்ந்த ஈடுபாட்டு டனும் செய்யப்படுகிறதோ அந்த வேலையே மிகச்சிறந்த பலனைத் தருகிறது.


    தன்னறிவு



    தன்னைப் பற்றிய அறிவு, தனது தகுதிகள், திறமைகள், எல்லைகள் ஆகியவற்றை ஒருவன் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது எல்லோருக்கும் அவசியம். இது பற்றிய ஒரு பழமையான கருத்து உள்ளது.


    தெரியாது என்று தெரியாதவனுக்குத்

    தெரியாது – அவனை விட்டுவிடு

    தெரியாது என்று தெரிந்தவனுக்கு

    தெரியாது – அவனுக்குக் கற்றுக்கொடு

    தெரியும் என்று தெரியாதவனுக்குத்

    தெரியும் – அவனை விழிக்கச் செய்

    தெரியும் என்று தெரிந்தவனுக்கு

    தெரியும் – அவனைப் பின்பற்று.


    தன்னம்பிக்கை



    சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்களைப் பற்றி தெரியும். அவர்களும் வாழ்க்கையில் தோல்வி காண்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? தன்னம்பிக்கை இல்லாமை. அறிவையும் செயலையும் இணைக்கின்றசங்கிலி அது. நம்மைப் பற்றிய அறிவு நமது முயற்சிகளில் இணைந்து வெற்றியைத் தர வேண்டுமானால் தன்னம்பிக்கை வேண்டும்.


    தன்னம்பிக்கை என்றால் என்ன? நமது மனத்தை நம்புவது தான் தன்னம்பிக்கை.


    ஆனால் காமம், கோபம் போன்ற எதிர்மறைப் பண்புகள் பல நமது மன ஆழங் களில் உள்ளன. அப்படி இருக்கின்றமனத்தை எப்படி நம்புவது? இதனால்தான் பலர் தங்களை விட அடுத்தவர்களை அதிகமாக நம்புகின்றனர்.


    காமம் முதலானவை நம்மில் இருப்பது உண்மைதான். ஆனால் அதே மன ஆழங்களில்தான் அன்பு, கருணை, தூய்மை, சிறப்பு, ஆற்றல் போன்றநற்பண்புகளும் உள்ளன. அவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டும்.


    உலகம் உண்மையிலேயே நல்லது. நன்மையும் உண்மையும் எங்கே உள்ளனவோ அங்கே வெற்றி உறுதி என்பதனைப் பரிபூரணமாக நம்பினால் மன ஆழங்களில் உள்ள நற்பண்புகள் தாமாக வெளிப்படத் தொடங்கும். இந்த நற்பண்புகள் தீய பண்புகளைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தத் தொடங்கும். மனத்தைத் தூய்மை செய்தல் என்று இதையே நாம் சொல்கிறோம்.


    இவ்வாறு தீய பண்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு நாம் மனத்தை நம்பலாம். இது ஒருவிதமான தன்னம்பிக்கை.


    மற்றொரு தன்னம்பிக்கையும் உள்ளது. நம்மில் ஆழ்மனம் என்றஒன்று இருப்பது போலவே ஆன்மா என்றஒன்றும் உள்ளது. இது நமது உயர் பரிமாணம். இந்த ஆன்மா தெய்வத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம். இதுதானே ஒளிர்வது. ஆனந்த மயமானது. சுதந்திரமானது. எல்லா அறிவிற்கும் ஆன்மீக சக்திக்கும் இருப்பிடம் அதுவே. அதன் ஒளியைச் செலுத்துவதன் மூலம் மனத்தின் எந்தப் பகுதியையும் தூய்மையாக்கலாம், கட்டுப்படுத்தலாம்.


    இந்த ஆன்மாவே நமது உண்மை இயல்பு. இந்த ஆன்மாவில் நிலைபெற்று, அதைச் சார்ந்து வாழ்வதும் தன்னம்பிக்கைதான். இது உயர்நிலை தன்னம்பிக்கை.


    சுயமுயற்சி



    தன்னறிவும், தன்னம்பிக்கையும் ஒருவனை வெற்றிக்குத் தகுதியுடையவன் ஆக்குகின்றன. ஆனால் வெற்றி கிடைக்க வேண்டுமானால் மூன்றாவது ஒன்று அதற்கு வேண்டும். அதுவே சுயமுயற்சி.


    தன்னம்பிக்கை என்பது செயலில் பிரதி பலிக்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து ஒருவன் தனக்குள்ளே அமுங்கிப் போவதற்கான (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ள்ண்ர்ய்) வாய்ப்பு உண்டு. இது மனநலத்திற்கு மிகவும் ஊறு விளைவிப்பதாகும்.


    அறிவு, கல்வி போன்றவற்றிற்கு வாழ்க்கையில் உண்மையிலேயே பலன் உண்டு. ஆனால் அவற்றையே முதலும் முடிவுமாகக் கொண்டு அவற்றிலேயே மூழ்கிக் கிடப்பது ஒருவன் முயற்சிகளில் ஈடுபடாமல் தடுக்கிறது. அவனை எதற்கும் உதவாத சோம்பேறி ஆக்குகிறது.


    வாழ்க்கையில் செயல்படுத்தி, பரிசோதிக்கப் பட்டால் மட்டும் அறிவினால் பலன் உண்டு. அப்படி பரிசோதிப்பது எப்படி? வேலைகளின் மூலம் தான்.


    செயல்முறைஅறிவு இல்லாமல் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்ட ஒருவனிடம் யாரும் போய் உதவி கேட்க மாட்டார்கள். நடைமுறையில் வாழ்ந்து காட்டாதவனால் தனக்கும் பிரயோஜனம் (உபயோகம்) இல்லை, மற்றவர்களுக்கும் பயனில்லை. நமது துன்பங் களில் பாதி அறியாமையினால் உண்டாகிறது என்றால், மீதி, வேலை செய்யாமல் சோம்பேறி யாக இருப்பதால் உண்டாகிறது.


    நாம் ஏன் வேலை செய்யாமல் இருக்கிறோம்? எங்கே தவறுகள் நேர்ந்து விடுமோ என்ற பயத்தால்தான்.


    ஆனால் சும்மா இருப்பதால் இந்த பயம் போகாது. வேலைகள் செய்வதன் மூலமே இந்தப் பயத்தைக் கடக்க முடியும். எனவே வேலை செய்வதால் அதிக தவறுகள் உண்டாகும் என்றாலும் தயங்காமல் வேலை செய்தே தீர வேண்டும்.


    என்னுடைய மாணவர்களிடம் நான், “ஒரு தவறு செய்வது போதாது, ஏழு தவறுகளாவது செய்யுங்கள்” என்பேன். “எங்கே தவறு செய்து விடுமோமோ” என்று பயந்து கொண்டு இருப்பவன் நின்ற இடத்திலேயே நிற்கிறான். தயங்காமல், தவறுகளைப் பற்றி கவலைப் படாமல் செயல்படுபவன் முன்னேறிச் செல்கிறான்.


    ஆன்மிக வாழ்வு என்று வரும்போது இதனைப் பிரத்தியட்சமாக காணலாம். புத்தகத்திலிருந்து ஆன்மீக சாதனைகள் பற்றி படிக்கின்றோம். குருவிடமிருந்து கேட்கிறோம். ஆனால் இவற்றைவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.


    அதிகம் படிப்பதால் மனம் குழம்புகிறது. எல்லாவற்றையும் அடைந்து விட்டது போன்று பிரமை ஏற்படுகிறது. இது அறிவற்றவனாக இருப்பதை விட மோசமானது. அதனால்தான் “வெறுமனே சில வார்த்தைகளைப் படிப்பதான வெற்றறிவு ஓர் அடர்ந்த காடு. இந்தக் காடு மனித மனத்தை வெறுமனே அலைந்து திரிய வைக்கிறது” என்று கூறப்படுகிறது.


    ஞானம், பக்தி என்றெல்லாம் நாம் சொல்லிக் கொள்வதும் இந்தப் பிரிவிலேயே அடங்கும். பசித்தவனுக்கு உடனடியாக வேண்டியது உணவு. பசியைப் பற்றிய ஒரு கவிதையோ, சத்துணவைப் பற்றிய கட்டுரையோ அவனுக்குப் பயனற்றது.


    அதுபோலவே, கடவுளுக்காக ஏங்குகின்ற மனிதன் பக்தியைப் பற்றியோ ஞானத்தைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான். கடவுளுடன் எப்படி நேரடியாகத் தொடர்பு கொள்வது என்ற ஒரே நோக்கத்துடன் தீவிரமாகப் பாடுபடுவான். சுயமுயற்சியுடன் கூடிய தன்னறிவும் தன்னம்பிக்கையும் நிச்சயம் வெற்றியை ஈட்டித்தரும்.

    வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிமுறைகள்..!

    By: Unknown On: 11:41
  • Share The Gag


  • ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது. ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்

     அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண். 2. வங்கிக் கணக்கு.

    இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர் 1 முதல் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பின் படிப்படியாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் நான்கு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    எந்தெந்த மாவட்டங்களில் எப்போது?

    அக்டோபர் 2013 – அரியலூர்

     நவம்பர் 2013 – திருச்சி, மதுரை, புதுகோட்டை, நாகப்பட்டினம்.

    டிசம்பர் 2013 – கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.

    ஜனவரி 2014 – தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.

    தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்

     சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை , திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை.

    இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?

    1.மானியத்தைப் பெற முதலில் உங்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும். இதுவரை ஆதார் எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ,அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களையோ தொடர்புகொள்ளுங்கள்.

    ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும் எண் கிடைக்கப்பெறாதவர்கள்,

     https://eaadhaar.uidai.gov.in/ இத்தளத்திற்குச் சென்று பின்கோடு, தேதி, என்ரோல்மெண்ட் நம்பர் ஆகிய விவரங்களைப் பதிவிட்டால் உங்களுக்கான ஆதார் எண் வந்துவிடும் அல்லது விண்ணப்பத்தின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 1800 300 1947 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.

    2.வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். யார் பெயரில் எரிவாயு இணைப்பு உள்ளதோ அவர்கள் பெயரில் அந்த வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

    3.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும் இருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். ஒன்று வங்கிக்கு (படிவம் எண் 1) மற்றொன்று சிலிண்டர் விநியோகஸ்தருக்கு (படிவம் 2.)

    வங்கிக்கான படிவங்களை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது . <http://www.petroleum.nic.in/dbtl/bankacc.pdf> என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    படிவம் 2ல் உங்கள் ஆதார் அட்டையை குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வைத்து போட்டோ காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டோ காப்பி எடுத்த படிவத்தில் மற்ற விவரங்களை நிரப்பி, கடைசியாக காஸ் சிலிண்டர் வாங்கிய பில்லை இணைத்து விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும்.

    விநியோகஸ்தருக்கான படிவத்தை அவர்களிடமே பெற்றுக்கொள்ளலாம் அல்லது <http://www.petroleum.nic.in/dbtl/leaflet.pdf> என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏஜென்சியில் கொடுக்கலாம்.

    கால அவகாசம்…

    ஆதார் எண் இல்லாதவர்கள் நேரடி மானியம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை மானிய விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். இம்மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடனும், எரிவாயு இணைப்புடனும் இணைத்துவிட வேண்டும். கால அவகாசம் முடிந்த பிறகும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் சந்தை விலையிலேயே சிலிண்டர் விநியோகிக்கப்படும். எப்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுகிறார்களோ அப்போதிலிருந்து மானியத் தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.

    மானியம் எவ்வளவு?

    இத்திட்டத்தின்படி அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்ட பின் முதல் தவணையாக 435 ரூபாய் நமது வங்கிக் கணக்கில் வரவாகும். பின்னர் முதல் சிலிண்டர் பெறும்போது சந்தை நிலவரத்திற்கேற்ப மீதித் தொகையைக் கொடுத்து சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த சிலிண்டர் புக் செய்து வினியோகிக்கப்பட்டு 6 நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு அப்போதைய சந்தை நிலவரத்தின்படி 420 ரூபாயைக் கழித்துவிட்டு மீதித் தொகையை நமது கணக்கில் அரசு செலுத்திவிடும். ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் பெறலாம்.

    மேலதிக விவரங்களை <http://www.petroleum.nic.in/dbtl>என்ற இணையத்திலோ 1800 2333 555 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்திலோ பெறலாம்.

    திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

    By: Unknown On: 11:26
  • Share The Gag


  • 1. அமைதி

     திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

    2. அம்மா

     ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

    3. நண்பர்கள்


     பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

    4. ஆண் ஈகோ


     திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

    5. பணம்


     பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

    6. சுதந்திரம்


     முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

    கேவலமான உண்மைகள்

    By: Unknown On: 11:05
  • Share The Gag


  • 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால்
     சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!


    2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
     பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!


    3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான
     வட்டி 12 சதவிகிதம்..!!


    4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது
     பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


    5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு
     வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு
     பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும்
     இல்லை..!!


    6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன.
    ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!


    7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான
     இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
     இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!


    8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி
     சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று
     கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


    9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால்
     வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை
     பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!


    10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால்
     பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம்
     இல்லை..!!!


    11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில்
     வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக
     உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

    அட அப்பாவி முதலமைச்சரே...!!

    By: Unknown On: 09:53
  • Share The Gag



  • எங்களுக்காக எங்கும் கல்விக்
     கூடங்கள் திறந்தாய்...

    சீருடைத் திட்டத்தினால்
    பள்ளிகளில் ஏழை, பணக்காரன்
     பிள்ளைகள் என்கிற
     பாகுபாடுகள் நீக்கினாய்...

    இலவச மதிய உணவுத் தந்தாய்...

    அரசு செலவிலேயே ஆசிரியர்
     பயிற்சிகள் அளித்தாய்...

    எல்லாக் கிராமங்களிலும் இரவுப்
     பாடசாலைகள் திறந்தாய்...

    இன்னும்
     சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஆனால் அதில்
     எதிலாவது உனக்கான
     முத்திரையோ,
    அடையாளமோ உண்டோ...?

    எல்லாக் கல்விகூடங்களிலும் உன்
     படமாவது உண்டா...?

    உன்னால் படித்த எங்களை தவிர
     உனக்கு வேறு அடையாளம்
     உண்டா...?

    எம் "பச்சை தமிழரே"
    பார்த்தீரா இன்றைய
     தலைவர்களை,




    இவர்கள் அறிமுகம் படுத்தும்
     ஒவ்வொன்றிலும்
     இவர்களது அடையாளங்களை...

    சோனியின் 2 இன் 1 யூஎஸ்பி !

    By: Unknown On: 09:24
  • Share The Gag



  • பல ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மைக்ரோ யூ எஸ் பி என்னும் சார்ஜர் போர்ட் வழியாய் தான் மொபைல் சார்ஜும் டேட்டா பறிமாற்றமும் செய்து கொள்ள முடியும்.


    இந்த காரணத்தால் இது வரை ஒரு ஃபோனில் இருக்கும் விஷயங்களை காப்பி செய்ய முதலில் மைக்ரோ யூஎஸ்பியை ஸ்மார்ட் ஃபோனில் சொருகி பின்பு அதை கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து அதை பின்பு அந்த டேட்டாவை யூ எஸ் பி மற்றும் தம்ப் டிரைவ் மூலம் காப்பி செய்ய வேண்டும்.இதே மாதிரி கம்ப்யூட்டர் டேட்டா டூ மொபைல். இதை எளிதாக்கும் வண்ணம் 2 இன் 1 யூ எஸ் பியை சோனி அறிமுகபடுத்தியுள்ளது.


    இதன் மூலம் மைக்ரோ யூ எஸ் பி வழியே நீங்கள் மொபைல் டேட்டாவை ஏற்ற இறக்க முடியும்.


     அதே சமயம் சாதாரண கம்ப்யூட்டர் யூ எஸ் பி கூட யூஸ் செய்யலாம். இது இப்போதைக்கு ஆன்ட்ராயிட் ஃபோன்கள் மட்டும் யூஸ் செய்யலாம் ஆனால் நேற்று வின்டோஸ் ஃபோனிலும் / பிளாக்பெரியிலும் வேலை செய்தது என்பது கூடுதல் தகவல். 1200 ரூபாய் 16 ஜிபி / 2000 ரூபாய் 32 ஜிபி / 3200 ரூபாய் 64ஜிபி……………..ஜனவரி முதல் இந்தியாவிலும் கிடைக்கும்.

    செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்!

    By: Unknown On: 09:08
  • Share The Gag



  • செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.


    அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.


    இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.


    இத்தனை இலட்சததில் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு முதல்கட்டமாக தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர் என்றும் அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் என்றும் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.


    மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன்..


     பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!

    By: Unknown On: 08:56
  • Share The Gag



  • உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை.


    சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.


    இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப் பட்டியலில் சேர்கின்றன. ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் கூட குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பயனற்ற கழிவாகிறது. இவ்வாறு சேரும் கழிவுகளை முறையாக அழிப்பதற்கென, சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன.


    ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள் பெரும்பாலான இடங்களில், முறையாக அகற்றப்படாமல் அப்படியே குப்பையில் கொட்டப்படுகின்றன. குப்பையில் சேரும் மருத்துவக்கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதனால், ஒரு நோயாளியை குணமாக்கியதன் காரணமாக வெளியேற்றப்பட்ட மருத்துவக் கழிவுகள் பத்து நோயாளிகள் உருவாகக் காரணமாகின்றன.


    இது குறித்து மருத்துவ கழிவுகள் அகற்றம் பற்றி மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருத்துவமனைகளில் ஏற்படும் கழிவுகள் தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது. மனித உடற்கூறு கழிவுகள், நுண்ணுயிர் கழிவுகள், கூர்முனை கழிவுகள் (ஊசி) என 10 வகையான கழிவுகளை மருத்துவமனை ஊழியர்களே பிரித்து விடுவார்கள். இந்த கழிவுகள் மஞ்சள், சிகப்பு, கருப்பு மற்றும் புளூ அல்லது வெள்ளை கவரில் சேகரித்து வைக்கப்படும்.


    பின்னர் தனியார் ஊழியர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று அனைத்து கழிவுகளையும் சேகரித்து பாதுகாப்பான இடங்களில் எரித்தும், புதைத்தும் அழித்து விடுவார்கள். மருத்துவ கழிவுகளை சேகரித்து எரிப்பதற்காக, செங்கல்பட்டு, காட்பாடி, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 இடங்களில் நிலையங்கள் உள்ளன.


    தமிழகத்தில் தினமும் 26 டன் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒரு படுக்கைக்கு 250 கிராம் மருத்துவ கழிவுகள் சேரும். அவற்றை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். இது ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


    இந்திய மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளில், பாதிக்கும் மேற்பட்டவை முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், அவை நகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.இந்தியாவில் மருத்துவமனை களிலிருந்து நாள்தோறும் பல லட்சம் கிலோ அளவுக்கு மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.”என்று சொன்னார்


    மேலும் சில ஆண்டுகளுக்கு முன் புது தில்லியிலுள்ள குப்பைமேடு ஒன்றில் பழைய பொருள்களை சேகரித்த ஆறு பேருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குப்பையிலிருந்த மருத்துவக் கதிரியக்கப் பொருளை கையில் எடுத்ததால் வந்த பாதிப்பு என்பது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கும் மேற்பட்ட மருத்துவக் கழிவுகள் இந்தியாவில் எங்கும் முறையாக அழிப்பதில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அப்போது தெரிவித்தது.


    குப்பைகளில் போடப்படும் ஊசி, சிரிஞ்ச் போன்வை,பள்ளிக் குழந்தைகளின் கண்களில் படும்போது ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அறியாமல் டாக்டர் விளையாட்டு என குப்பையில் போடப்பட்ட ஊசியை எடுத்து பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.


    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரிக் கரையை ஒட்டி மருத்துவக் கழிவுகள் ஏராளமான அளவில் கொட்டப்பட்டு நீராதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை முறையாகக் கையாளவும், அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் பெரிய மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன. ஆனால் சிறிய மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகள் குறைவாகவே உள்ளன. எனவே மருத்துவக்கழிவுகளை முழுமையாக அழிப்பதற்கான “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.


    “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளில் “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.


    சிறிய மருத்துவமனைகளின் கழிவுகளை வாங்கி அழிக்க அரசும், தனியாரும் ட்ரீட்மெண்ட் பிளாண்ட்டுகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று, மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


    கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    ‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!

    By: Unknown On: 08:24
  • Share The Gag


  • டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில்
     ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம்


     போன்ற சிறப்புகள் வாய்ந்தது ‘மணல் நகரம்’.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,’ வைரஸ்’,’ கேரளோற்சவம் -2009′ ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மணல் நகரம்’ .


    சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். துபாயைச் சேர்ந்த வருணா ஷெட்டி புதுமுக நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஜெய்ஸ், வினோத்குமார் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ”இதுவரை நிறைய படங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது.ஆனால் அங்கு ஒரு பாடலோ அல்லது ஒருசில காட்சிகளோ தான் படமாக்கி வந்திருப்பர். முதல் முறையாக இங்கிருந்து சென்ற படக்குழுவினர் ஐம்பது நாட்கள் துபாயில் தங்கி படமாக்கி வந்திருக்கும் படம் மணல் நகரம். துபாயின் சட்டதிட்டங்களுக்கு நடுவே ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு என்பது சாத்தியமான காரியமல்ல. அதே நேரம் மணல் நகரத்தின் கதைக்களம் துபாயில் நடப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தியாக வேண்டியது கட்டாயமாயிற்று என்றார்..” ஒருதலை ராகம் புகழ் ஷங்கர்.


    ”நீங்கள் தமிழில் நடித்து நாளாயிற்றே?” என்றால், ”மலையாளத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சரியாக அமைந்தால் தமிழில் நடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மணல் நகரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். துபாயில் வசிக்கும் எனது நண்பர் முரளிராமன் இலாயத்தின் கதைக்கு எனது சென்னை நண்பரும் படத்தின் தயாரிப்பாளருமான எம். ஐ. வசந்த் திரைக்கதை அமைத்துத் தந்தார். நான் இயக்கியுள்ளேன். ”


    ”வேலைக்காக, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்கள் படும் பாடு மிகக்கொடியது. தவிர, கடுமையான சட்டதிட்டங்களுக்கு நடுவே அவர்கள் வாழும் வாழ்க்கை.. குடும்பத்தைப் பிரிந்து பாசத்தால் படும் அவதி பாதி, அங்கு வாழப்போராடும் அவர்களின் போராட்டம் மீதின்னு போகும்… திரைக்கதையில் அவர்களிடையே வரும் காதல், நட்பு இதையும் கலந்து சொல்லியிருக்கிறேன். ஐம்பது நாட்கள் துபாயில் படப்பிடிப்பு முடிந்தது.. இன்னும் பத்து நாட்கள் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மணல் நகரத்தை கமர்ஷியலாக, மிகப் பிரம்மாண்டமாக, மிகுந்த பொருட் செலவில் உருவாக்கியுள்ளோம்.


    ‘மணல் நகரம்’ – காதல் மற்றும் சில வலிகளையும் சுமந்து பேசும். அது நிறைய மனங்களுக்கு ஆறுதலையும் சொல்லும்,” என்றார் கவிதையாக!

    நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க டெல்லி ஹைகோர்ட் அனுமதி!

    By: Unknown On: 08:11
  • Share The Gag



  • வரி ஏய்ப்பு செய்த சென்னை நோக்கியா தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடை எதுவும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.


    வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


    நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களும் தங்கள் நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக இந்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது குறித்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் வரி தொடர்பான விசாரணை தனியாக தொடர்ந்து நடைபெறுமென்றும் இடைக்கால முன்வைப்புத் தொகையாக ரூ.2,250 கோடியை அரசுக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? அப்ப இதை படிங்க..!

    By: Unknown On: 06:34
  • Share The Gag



  • உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

    அப்ப இதை படிங்க..!


    கொசு ஒரு பிரச்சனையா?


    இது 100% வேலை செய்யும்...!


    உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!


    ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.


    ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!

    பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்!

    By: Unknown On: 06:15
  • Share The Gag




  • குறிப்பிட்ட நண்பர்களிடமிருந்து வரும் இடுகைகளையும், தகவல்களையும் தடை செய்வதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த “Hide All” என்ற பொத்தானுக்குப் பதிலாக இன்னும் வசதியாக “Unfollow” என்ற பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் வலைத்தளம்.


    இந்த “Unfollow” பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது இடுகைகள் மற்றும் தகவல்களை தடை செய்யலாம்.


    இதன் மூலம், எப்போதும் போல் அவர்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்களின் இடுகைகள் உங்களது “News Feed” பக்கத்தில் வராத வண்ணம் தடுத்து வைக்கலாம். தங்களது ”News Feed” பக்கத்தில் தேவையில்லாத விஷயங்களை படிப்பதைத் தவிர்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


    இந்த “Unfollow” என்ற பட்டன், பேஸ்புக் பக்கத்தில் மேற்புறத்தில், “Following”, “Like” ஆகிய பட்டன்களுக்கு அருகில் இருக்கும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட இடுகைகளை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்!

    By: Unknown On: 06:01
  • Share The Gag


  •  எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.


    விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர் வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.


    முன்னோர்தம் அறிவையும் அனுபவத் தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம் எதையும் எதிர்பார்க்க ôமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ.


    ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்஑ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.


    சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிறகருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிறநூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது.


    நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே. “நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக் கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே” (“ஙஹ் ய்ங்ஸ்ங்ழ் ச்ஹண்ப்ண்ய்ஞ் ச்ழ்ண்ங்ய்க்ள் ஹழ்ங் ற்ட்ங்ஹ் ஜ்ண்ற்ட் ஜ்ட்ர்ம் ஐ ஸ்ரீர்ய்ஸ்ங்ழ்ள்ங் க்ஹஹ் க்ஷஹ் க்ஹஹ்”) என்றார் கவிஞர் ராபர்ட் கதே.


    “வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” (“தங்ஹக்ண்ய்ஞ் ம்ஹந்ங்ற்ட் ஹ ழ்ங்ஹக்ஹ் ம்ஹய்”) என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற் றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும்.


    “காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்றபேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங் களின்பால் அச்சம் கொண்டவர்களை அடை யாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப் பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோ ராகவும் விளங்கினார்.


    நூல் படிக்கும் பழக்கம்


    பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் “அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.



    இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிறநல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்றசிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். “மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதாவிலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.


    கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்றபுரட்சியாளர் தூக்குக் கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.


    நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.


    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப் பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டு மல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரண மாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.


    இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய் வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள் கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.


    ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரி யாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.


    ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால் களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந் துணை யாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.


    வாங்கிப்படி : :::


    எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லிச் சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி சமாதானம் செய்தாராம்.


    நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை.


    ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது “புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையே” என்றாராம். தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிறதாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும்.


    “பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்! கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!” என்பார் கவிஞர் சுரதா.


    இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப் பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துச் சென்றஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத் தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனி களும் இணைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம்.


    இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன் மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம்.


    சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப் பவரது மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது.


    எனவே சிறந்த நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே. நமக்கு மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் உங்களது சந்ததியர்க்கும் அது வழி காட்டும், வாழ்வில் ஒளி காட்டும்