Sunday 31 August 2014

கமல் வழியை பின்பற்றலாமே!- முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் யோசனை

By: Unknown On: 23:15
  • Share The Gag
  •  நடிகர் கமல்ஹாசன் வழியை பின்பற்றலாமே என்று முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் யோசனை தெரிவித்துள்ளார்.

    சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'காவியத்தலைவன்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஃபேஸ்புக் இணையத்தில் எப்போதும் தீவிரமாக இயங்கும் இயக்குநர் வசந்தபாலன், தற்போது கமல்ஹாசனைப் பற்றி ஒரு நிலைத்தகவலை வெளியிட்டுள்ளார்.

    "இன்று தற்செயலாக கமல்ஹாசன் அவர்களின் imdp யை நோண்டிக்கொண்டிருந்தேன். தன் காலத்தில், கமல் அவர்கள் ஒரு பக்கா கமர்சியல் படத்திற்கு நடுவே நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ஒரு தரமான அழகான கலையம்சம் கொண்டு க்ளாஸிக் படத்தையும் பண்ணியுள்ளார்.

    அந்த படங்கள் தான் கமல் அவர்களை வளர்த்தது. மற்றவர்களில் இருந்து அவரை பிரித்து காட்டியது. இன்றுவரை நடிகர் கமல் அவர்களை பற்றி நம்மை பேச வைத்துள்ளது. அவருடைய நடிப்புத்திறமையையும் வெளியே கொண்டு வந்துள்ளது. நடிகர் திலகத்திற்கு பிறகு உலக நாயகன் தான் என்று சொல்ல வைத்தது.

    1982 மூன்றாம்பிறை \ சகலகலாவல்லவன்

    1983 தூங்காதே தம்பி தூங்காதே\ சலங்கை ஒலி

    1984 ஒரு கைதியின் டைரி\ ஜப்பானில் ஒரு கல்யாணராமன்

    1985 காக்கி சட்டை \ சிப்பிக்குள் முத்து

    1986 விக்ரம்\ புன்னகை மன்னன்

    1987 நாயகன் \ வெற்றி விழா \ காதல் பரிசு

    1992 தேவர் மகன்\ சிங்காரவேலன்

    1993 கலைஞன் \ மகராசன்\ மகாநதி

    1996 குருதிப்புனல்\ இந்தியன் \ அவ்வை சண்முகி

    இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தமிழ் கதாநாயகர்கள் கமல் அவர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு கமர்சியல் படங்களும் கிடைக்கும், நல்ல படங்களும் கிடைக்கும். அவர்களும் நடிப்புத்திறமையை நிருபிக்கக்கூடிய படங்களில் நடித்தது போல் ஆகிவிடும்.

    பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் யார் கமல் அவர்களை பின்பற்றுகிறார்கள்." என்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த தடவை தமன்னா - சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஸ்பெஷல்

    By: Unknown On: 21:56
  • Share The Gag
  • வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இப் படத்துக்கு பிறகு மான் கராத்தே படத்தின் மூலம் முதன்முறையாக ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைளுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

    தற்போது டாணா படத்தில் ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடி சேருகிறார்.

    இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார், நவம்பர் கடைசி வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இப் படத்துக்கு பிறகு மான் கராத்தே படத்தின் மூலம் முதன்முறையாக ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைளுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.
    தற்போது டாணா படத்தில் ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடி சேருகிறார்.
    இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார், நவம்பர் கடைசி வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107923/#sthash.auGBflIo.dpuf

    வயிற்று நோய்கள் நீங்க...

    By: Unknown On: 21:36
  • Share The Gag
  •  சர்க்கரையுடன் தேன் மெழுகு தடவிவர பால் பருக்கள் உதிர்ந்து விடும்.

    அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலைபாரம், தலைவலி நீங்கும்.

    இயற்கை அன்னை நமக்கு அளித்த அருமருந்தாக திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், கருவபட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஆ

    திப்பிலி இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து, ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

    ஜாதிக்காயை தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் வயிற்று நோய்கள் நீங்கும். ஜாதிக்காய் விதைகளை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

    தாதிரிப்பூவை தூளாக்கி நல்லெண்ணை கலந்து தேய்த்தால் தோல் நோய்கள் அண்டாது. பொடி செய்து தயிருடன் கலந்து குடித்து வந்தால் நன்கு ஜீரணம் ஆகும்.

    கடுகு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் ஆறி விடும். தாமரைப்பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் படை, புள்ளிகள் நீங்கும். சருமம் ஜொலி ஜொலிக்கும்

    ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர்

    By: Unknown On: 21:09
  • Share The Gag
  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆனதுக்கு பிறகு முதன்முறையாக உலக பிரயாணம் தற்போது மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த உள்ளாராம் ,இதனிடைய ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து .

    ஒரு ரசிகர் தன் உடம்பு முழுவதும் ரஜினி படத்தை போட்டு ஊர்வலம் வந்தாராம்.இதை கவனித்த மோடி அந்த ரசிகனை கூப்பிட்டு இவர் யார் என்று தெரியுமா என்று கேட்டதுக்கு சூப்பர் ஸ்டார் என்றும் ,பாட்ஷா படத்தில் வரும் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்று டயலாக் சொல்லி காட்டினராம், அது மட்டுமில்லாமல் பல ரஜினி ரசிகர்களை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி .

    இதை வைத்து அவரை அரசியலில் கொண்டு வரலாமே என்று மோடியின் சிஷ்யர்கள் மோடிக்கு யோசினை தெரிவித்துள்ளனர்.

    எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

    By: Unknown On: 19:07
  • Share The Gag
  • 1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

    2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

    3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

    5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

    6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

    7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

    8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

    9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

    மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

    பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்

    By: Unknown On: 17:35
  • Share The Gag
  • தற்போது பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அறிந்த விஷயம். ஆனால் இப்படம் உருவாவதற்கு பாலா போட்ட மாஸ்டர் பிளானில் ஆடிபோனார் மிஷ்கின்.

    அதாவது போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், ரமேஷின் மூத்த மகன் ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனால் அறிமுகமானார்.

    ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு தொடங்குவதற்கு முன்பு பாலா அலுவலகத்துக்கு சென்று உங்க படத்தில் நான் நடிக்க வேண்டும் எவ்ளோ செலவு என்றாலும் ஓகே என்றாராம். முதலில் நான் சொல்ற இயக்குனரிடம் நடி பிறகு என் படத்தில் நடிக்கலாம் என்று சொல்லி உடனே பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்.

    ஏற்கனவே பாலாவிடம் பிசாசு கதை சொல்லி காத்திருந்த மிஷ்கினே கூப்பிட்டு தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி.

    அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

    வேறு வழியில்லாமல் படத்தை இயக்கி கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்

    தற்போது பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அறிந்த விஷயம். ஆனால் இப்படம் உருவாவதற்கு பாலா போட்ட மாஸ்டர் பிளானில் ஆடிபோனார் மிஷ்கின்.
    அதாவது போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், ரமேஷின் மூத்த மகன் ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனால் அறிமுகமானார்.
    ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு தொடங்குவதற்கு முன்பு பாலா அலுவலகத்துக்கு சென்று உங்க படத்தில் நான் நடிக்க வேண்டும் எவ்ளோ செலவு என்றாலும் ஓகே என்றாராம். முதலில் நான் சொல்ற இயக்குனரிடம் நடி பிறகு என் படத்தில் நடிக்கலாம் என்று சொல்லி உடனே பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்.
    ஏற்கனவே பாலாவிடம் பிசாசு கதை சொல்லி காத்திருந்த மிஷ்கினே கூப்பிட்டு தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி.
    அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
    வேறு வழியில்லாமல் படத்தை இயக்கி கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/gossip/107916/#sthash.LqzdwPqg.dpuf

    சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்! திரைவிமர்சனம்!

    By: Unknown On: 08:46
  • Share The Gag

  • "நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.

    நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!!

    கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்!

    விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல!

    புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.

    சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

    விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்!

    கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது!

    மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!

    உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன்..?

    By: Unknown On: 08:11
  • Share The Gag

  • கால்களை உதைத்து
     கர்ப்பப்பையை
     கிழித்தாகிவிட்டது.

    தொப்புள்கொடியை
     யாரோ
    அறுத்தனர்.

    முதல் பால் அருந்த
     முன்வரிசையில்
     காத்திருந்தேன்.

    யாரும் என்னை
     கவனிப்பவராக இல்லை.

    விட்டேன் ஒரு
     குவா குவா
     சத்தம்

     சாதம் ரெடி !

    ஓ பிள்ளைக்கு
     பசிக்குது
     நீங்களே பால் குடுங்க
     நாங்கள் வெளியில் நிக்கிறோம்.

    கண்ணை மூடியிருந்த
     இருட்டிலும்
     ஏதோ கரங்கள் என்னை தூக்கி
     மார்போடு அணைத்தது
     அப்பொழுது எரிந்தது
     என்னிடம் முதல் முறையாக
     அகல் விளக்கு.

    பன்னீர்க்குடத்து
     நீரையெல்லாம்
     பகல் இரவாய் குடித்த எனக்கு
     பத்தினியின் முலைமார்பில்
     முதல் விருந்து
     முதல் அமிர்தம்.

    யாரப்பா அது
     எனக்கு நீ பால் தர

     எல்லாமே
     இருட்டாயிருக்கே
     எப்படித் தேடுவது அவளை
     என்றிருக்கையில்

     என் செல்லம்
     என் குஞ்சு
     முத்த முத்திரைகளை
     முகமெல்லாம்
     குத்தியவர் யார்

     பஞ்சு விரல்கள் என்
     உடலை வருடி
     தென்றல் காற்றை பிடித்து என்
     தேகமெல்லாம் விட்டது யார்

     பிரசவ வலியென்னும்
     மிச்சமிருக்கையில்
     கொஞ்சிக்கொண்டே
     தாலாட்டு தமிழில் பாடியவர் யார்

     வந்த களைப்பில்
     உறங்கிக் கொண்டிருந்த
     மார்பு யாருடையது.
    இலவம் பஞ்சைவிட
     அதுவேன் மென்மையாக
     இருந்தது

     கண்ணை விழிதொருநாள்
     கறுப்பு வெள்ளையில்
     படம் பார்த்தேன்
     பக்கத்தில் நின்றவள்
     ஈன்றவள்
     இவளா என் .. அம்மா

     உன்னை
     இன்றும் அம்மா என்று கூப்பிட
     ஆசை வருதே ஏன்

     உன் முலைப்பாலில்
     முதல் பாலில்
     முழு அன்பையும் கரைத்தது
     உன்னுடைய இரகசியம்

     அதுவே இந்த
     வசியம்.
    வாத்தியமாய் இசைக்கிறேன்
     விடியும் வரை
     முடியும் வரை
     அம்மா அம்மா ..

    பெண்களின் பெருமைகள்!

    By: Unknown On: 08:10
  • Share The Gag

  • 1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

     3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

     4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

    5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

    6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

    7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

    8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

    9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

    10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

    11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

    12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

    13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

    14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

    15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

    16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

    17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி சானியாமிர்ஸா.

    18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

    19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

    20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

    21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

    22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

    23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

    24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

    25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.

    வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!

    By: Unknown On: 08:09
  • Share The Gag

  • காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


    சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


    நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


    ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்


    நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

    பிரஸ்ஸல்ஸ்

    முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

    சோளம்

    சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

    ப்ரோக்கோலி

    முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

    முட்டைக்கோஸ்

    முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

    பீன்ஸ்
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

    பீட்ரூட்

    சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

    மறந்து போன மருத்துவ உணவுகள்....?

    By: Unknown On: 08:08
  • Share The Gag

  •                                                பிரண்டைச் சத்துமாவு

     தேவையானவை:

    நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ,

    புளித்த மோர் – ஒரு லிட்டர்,

    கோதுமை – ஒரு கிலோ,

    கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


    செய்முறை:


    பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.

    பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.

    இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


    மருத்துவப் பயன்:


    உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.

    கர்ப்பிணிகளுக்கு நல்ல தூக்கம் வர வழிகள்!

    By: Unknown On: 00:24
  • Share The Gag
  • கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும்.  வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது. மேலும் தூங்குவதற்கு வசதியே இருக்காது. அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் தூங்குவதில் அவஸ்தை ஏற்படுகிறது.

    அதில் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.

    ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது. கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு முயற்சி செய்தாலும் தூங்க முடியவில்லையா அப்படியானால் கீழே கொடுக்கப்பட்ட சில டிப்ஸ்களைப் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

    • பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது..

    • கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    • கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.

    • தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் மற்றும் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும். நல்ல தூக்கமும் வரும்.

    • குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால், அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது.

    • கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரில்  குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.

    எப்படியெனில் வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.

    தலைவலி அடிக்கடி வருதா?

    By: Unknown On: 00:23
  • Share The Gag
  • அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

    அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

    இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி;


    ஈரமான கூந்தல்


    காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

    அளவுக்கு அதிகமான வெப்பம்

    வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

    வாசனை திரவியங்கள்

    உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

    கம்ப்யூட்டர் திரை

    கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

    தொலைக்காட்சி திரை

    கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

    படுக்கையில் படித்தல்


    படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதிக குளிர்ச்சி

    அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

    ஆல்கஹால்


    ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

    சரியான தூக்கம்
    தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    நீண்ட தூர பயணம்
    பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

    குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...

    By: Unknown On: 00:22
  • Share The Gag

  • நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்றவற்றை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும். சொல்லப்போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிடமாட்டோம். அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சளி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவர்.

    இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். ஏனெனில் உடலில் சத்துக்கள் இல்லாவிட்டால், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் கடைகளுக்கு ஒரு முறை பர்சேஸ் செய்யப் போகும் போதே, எந்த உணவுப் பொருட்களையெல்லாம் மறக்காமல் வாங்க வேண்டும். மேலும் எதற்கு அவற்றை தவிர்க்காமல் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!


    ஆரஞ்சு


    குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் போன்றவை அதிகம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது. அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பசலைக் கீரை

    பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

    வேர்க்கடலை


    வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

    கொய்யாப்பழம்

    இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

    கேரட்

    கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

    கிவி


    இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

    சிக்கன் சூப்

    சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

    கொக்கோ

    கொக்கோவை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய்க்கு வராமல் தடுக்கும். ஆகவே இந்த கொக்கோவை, உணவு உண்ட பின்பு சிறிது குடிப்பது நல்லது.

    நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

    சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால், உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட, உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.

    மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

    By: Unknown On: 00:20
  • Share The Gag

  • முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

    வாயு தொல்லை நீங்க?
    Drumstick bark, root mukkarattai, umattan leaf, garlic and add equal amounts, grind on joint swelling parrupமுருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி  ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

    நரம்பு தளர்ச்சி நீங்க?

    முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம்  ஆகும்.

    நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

    நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக்  கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில்  கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம்  சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

    முழங்கால் வாதம் ?


    ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம்  இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில்  வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

    எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு  அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

    மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு  வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம்  கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

    சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!

    By: Unknown On: 00:20
  • Share The Gag

  • சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.

    ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

    சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது?
    சூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.

    அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.

    குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும்.

    ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது.