Thursday 3 October 2013

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!

By: Unknown On: 20:48
  • Share The Gag
  • Natural medicine is growing in recent years. Statistics show that all disciplines of alternative medicine have grown and more people   prefer rather


    சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம்.

    இருமல்

    குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று.. குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து  விடுபட ஒமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு  முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஒய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்சனை வராமல்  தடுக்கலாம்.

    மேலும் இருமல் பிரச்சனைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு தரலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய  துணியில் ஈரமாக்கி குழந்தையின்  தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

    டயாபர் ஒவ்வாமை

    டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க  வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

    குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!

    By: Unknown On: 19:57
  • Share The Gag

  • Curankal child in the harsh curamakum kapavata. It will be higher. Severe breathing and pulse are tensions. In the binary is often dry.



    குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்

    என்னென்ன தேவை?
    நிலவேம்பு – 15 கிராம்
    சீந்தில் தண்டு – 15 கிராம்
    சிற்றரத்தை – 15 கிராம்
    திப்பிலி – 15 கிராம்
    கடுக்காய் – 15 கிராம்
    கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்
    பூனைக்காஞ்சொறி – 15 கிராம்
    கடுகு ரோகிணி – 15 கிராம்
    பற்பாடகம் - 15 கிராம்
    கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்
    கோஷ்டம் – 15 கிராம்
    தேவதாரு – 15 கிராம்
    சுக்கு – 15 கிராம்
    கண்டுபரங்கி – 15 கிராம்

    இவற்றை எல்லாம் பொடி செய்து சுத்த நீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டைக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க குணமாகும். தினசரி 3 வேளை இதை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் எளிதில் குணமாகும்

    முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)

    By: Unknown On: 19:50
  • Share The Gag


  •  
    கோபி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞன்.
     


    அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை...அதனால் மனம் சோர்ந்தான்.


    வருத்தத்துடன் காணப்பட்ட அவனை அவன் தந்தை அழைத்துக் காரணம் கேட்க அவனும் சொன்னான்.


    உடனே அவன் தந்தை பக்கத்திலிருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் கொடுத்து ...அதை கத்தியால் வெட்டச்சொன்னார்.


    அவனும் அப்படியே செய்தான்.


    இரண்டாகப் பிளந்த ஆப்பிளைக்காட்டி ..'இதனுள் எவ்வளவு விதைகள் இருக்கிறது பார்..' என்றார்.


    'நான்கைந்து விதைகள் இருக்கும்' என்றான். கோபி.


    'இந்த விதைகளில் ஒன்றோ....அல்லது பலவோ வேறு ஆப்பிள் மரங்கள் உருவாகக் காரணமாய் இருக்கப் போகின்றன....அல்லது எல்லா


    விதைகளும் நம்மால் தூக்கி எறியப்படப் போகின்றன.ஆனாலும்.. ஒவ்வொரு ஆப்பிளுக்குள்ளும் விதைகள் உருவாகிக் கொண்டுதானே இருக்கின்றன.


    பல வீணாகிப் போனாலும் ஏதேனும் ஒன்று ஆப்பிள் மரமாக ஆகத்தானே போகிறது.அதுபோலத்தான் நம் முயற்சிகளும்...


    வெற்றி கிடைக்காததால் ....அது பெரிய தோல்வியாக எண்ணாமல் ..அடுத்த முயற்சியில் ஈடுபடு...அப்போது என்றேனும் வெற்றி உனக்கு கிட்டும்'


    என்றார் கோபியின் தந்தை.


    கோபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.


    இதையே வள்ளுவர்


    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


    இன்மை புகுத்தி விடும் ...  என்றார்.
     

    முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை.முயற்சியே சிறந்த செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் என்பது பொருள்.
     
     

    உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?

    By: Unknown On: 19:47
  • Share The Gag

  • நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் நாடுகளை தரம் பிரித்து உலக மனித வள மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு (டபிள்யு.இ.எப்.) நியூயார்க் நகரில் 122 நாடுகளின் தரப் பட்டியல் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இடம்பெற்றுள்ளதாகவும். சீனா 43வது இடத் திலும் பிரேசில் 57வது இடத்திலும் உள்ளதாகவும் தென் ஆப்ரிக்கா இந்தியாவைவிட பின்தங்கி 86வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    3 - human-resources.



    இதற்கிடையில் ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான். முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் கூட இந்தியாவுக்கு கொடுக்கப்படும் இடத்தைப்பற்றி குறிப்பிட்டு அதனால் நாட்டையே ஒட்டு மொத்தமாக தாழ்வாக பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் நாட்டைப்பற்றி ஒரு தவறான எண்ணம் பலரது மனதிலும் ஏற்படுத்தப்படுகிறது.


    ஆனால் அப்படி பேசுபவர்கள் பலருக்கு உண்மையில் அந்த அறிக்கையின் அடிப்படைகள் மற்றும் அளவுகோல்கள் பற்றி சரியாகத் தெரியாது. சர்வதேச அறிக்கை என்றவுடனேயே அதற்கு அதிகப்படியான மரியாதை கொடுத்து அதிலுள்ள விபரங்களை மிகைப்படுத்தி கருத்துகளை சொல்லிவிடுகின்றனர். நாடுகளின் மனிதவளத்தை கணக்கிட அந்த அறிக்கை மூன்று காரணிகளை எடுத்துக்கொள்கிறது.


    முதலாவது, மனிதர்களின் சராசரி ஆயுள் பற்றிய விபரம். இரண்டாவது, கல்வி பற்றியது. அதற்காக இளைஞர்களின் படிப்பு விகிதம் மற்றும் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக வாழ்க்கைத்தரம் பற்றிய விபரம். அதற்காக நாட்டு மக்களின் சராசரி வருமானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு சராசரி வருமானம் கணக்கிடப்படுகிறது.
    அந்த அறிக்கையில் மனிதவள முன்னேற்ற குறியீட்டைத்தவிர ஏழ்மைக்கான குறியீடு, பாலின முன்னேற்றக்குறியீடு மற்றும் பாலின ஆளுமை குறியீடு ஆகியவையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகின்றன. பாலின குறியீடுகளில் பெண்கள் முன்னேற்றம், ஆட்சி மற்றும் அதிகார பொறுப்புகளில் அவர்களின் பங்கு, வருமானம் மற்றும் ஆண், பெண் இடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற விபரங்கள் 1995ம் ஆண்டு முதல் கொடுக்கப்படுகின்றன.


    மனிதவள குறியீட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட நாடுகளை இந்த ஆண்டின் அறிக்கை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டுள்ளது. அதன்படி 38 நாடுகள் மிக அதிக மனிதவளத்தை கொண்டதாகவும், 45 நாடுகள் அதிக வளத்தை கொண்டதாகவும், 75 நாடுகள் சுமாரான வளத்தை உடையதாகவும், 24 நாடுகள் குறைந்த வளத்தையே பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதில் உலகின் பணக்கார நாடுகள் மிக அதிக மனித வளத்தை பெற்றுள்ளதாகவும், ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த நாடுகள் மிகக்குறைந்த வளத்தை உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற நாடுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வருகின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசியப்பகுதி நாடுகள் சுமாரான மனிதவள முன்னேற்றமுடைய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.


    தற்போதைய பட்டியலில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளின் தனித்தன்மை வரையறையில் இந்தியா அதிக புள்ளிகள் பெற்றுள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர்களின் சுகாதாரம், வசதி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கி நிலையில் உள்ளது. தொழிலாளர்களின் உடல் நலம், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் மிகவும் குறைந்த புள்ளிகள் உள்பட வேறு சில காரணிகளும் மொத்த குறியீடு பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.


    எல்லா பிரிவுகளிலும் சிறப்பிடம் பெற்ற சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பின்லாந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, டென்மார்க், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


    உலக நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 122வது இடத்திற்கு யேமன் தள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் 112வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும், எப்படி தங்களின் மனித வள ஆற்றலை பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள பயன்படுத்தும் புதிய கணிப்புதான் மனித வள மூலதன குறியீடு. பின்னர் நீண்ட கால தொழிலாளர் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகள் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


    தொழிலாளர்களின் மேம்பாடு, உடல் நலன், கல்வி மற்றும் திறமை ஆகிய நான்கு பிரிவுகள் , கல்வி, உடல்நலன், சுகாதாரம், உழைப்பாளர் சக்தி, வேலைவாய்ப்பு, மேம்பாட்டு சூழல் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று உலக பொருளாதார அமைப்பின் நிர்வாக தலைவர் ஹலூஸ் ஸ்வாப் தெரிவித்துள்ளார்.

    மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்!

    By: Unknown On: 19:39
  • Share The Gag


  • உணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
    உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
    உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம்.



    சொக்லெட்


    சொக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும்.


    நட்ஸ்


    நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும்.


    கீரை வகைகள்


    பாப்பாய் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு பிடித்த ஸ்பினாச் என்ற பசலைக் கீரையில் மக்னீசியம் வளமையாக உள்ளது.


    இது மனதை அதீத செயலாற்றலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உணவில் இருந்தால், அதுவும் மனதை சாந்தமாக்கும்.


    பாஸ்தா


    முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இந்த மக்னீசியம் குறைபாடும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்.


    கோதுமை பிரட்


    முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோதுமை பிரட்டுகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு.


    அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் மன அழுத்தத்தை நீக்கலாம்.


    ப்ளூ பெர்ரி


    சுவைமிக்க பழமான இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.


    பாதாம்


    பாதாமில் ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், இதனையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.


    ஊட்டச்சத்துள்ள இந்த உணவு, மன நிலையை சீராக வைத்து டென்ஷனை குறைக்கும்.


    க்ரீன் டீ


    உங்களுடைய பொழுதை ஒரு கப் க்ரீன் டீயுடன் தொடங்கினால், அதை விட மன அமைதி வேறு எதிலும் கிடையாது. சொல்லப்போனால் பல பிரச்சனைகளுக்கு அது உடனடி நிவாரணம் அளிக்கிறது.


    மீன்


    சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலம் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை செலுத்தும். அதனால் மனம் அமைதியாக இருக்கும்.


    ஓட்ஸ்


    உடம்பில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால்,
    அது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.


    பால்


    பாலில் ட்ரிப்டோபைன் இருப்பதால், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மனதை ஆசுவாசப்படுத்தும்.


    வாழைப்பழங்கள்


    குறைவான நார்ச்சத்தை கொண்ட வாழைப்பழங்கள் வாய்வு இடர்பாட்டை குறைக்கும். அதனால் மனது அமைதி பெற்று, நாள் முழுவதும் மன சோர்வு இல்லாமல் இருக்கலாம்.


    சாதம்



    கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத்தை உடையவை. அதனால் சாதம் இதற்கு பெரிதும் துணை புரியும்.


    மேலும் குறைவான கொழுப்பை கொண்ட சாதம் செரிமானத்தையும் சுலபமாக்கும்.

    மேற்கூறிய சில உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
    அது மனக்கலக்கத்தை குறைக்க உதவும். இதனுடன் சேர்த்து அதிக அளவில் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

    செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டது!!!

    By: Unknown On: 19:19
  • Share The Gag




  •  இம்மாதம் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக்கோளான ‘மங்கல்யான்’, பெங்களூரில் இருந்து நேற்று கன்டெய் னர் லாரி மூலம் ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் செல்லப்பட்டது. ‘இந்த செயற்கைக்கோள் சிறப்பு கன்டெய்னர் லாரியில் வைத்து அனுப்பப்பட்டது’ என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். செயற்கைக்கோள் எடுத்துச் சென்ற கன்டெய்னரின் முன்னும் பின்னும், பாதுகாப்பு வாகனங்கள் சூழ்ந்து சென்றன.

    ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இன்று மாலை அந்த லாரி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் லாரி மெதுவாக ஓட்டிச் செல்லப்பட்டது. காந்தி ஜெயந்தி பொது விடுமுறை தினம் என்பதால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும். எனவே, செயற்கைக்கோளை கொண்டு செல்ல நேற்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளதாக சமீபத்தில் தேசிய நிபுணர் கமிட்டி ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து வரும் 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ உகந்த சூழ்நிலை நிலவுகிறதா, மீத்தேன் வாயு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ள இந்த செயற்கைக்கோள், செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்க ளையும் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்க உள்ளது.
    வானிலை ஒத்துழைத் தால் வரும் 28 மாலை 4 மணி 14 நிமிடம், 45 வினாடிகளுக்கு ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து பிஎஸ்எல்வி ,சி25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்ப டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எக்ஸ்ட்ரா தகவல்

    1,350 கிலோ எடை கொண்ட மங்கல்யான் செயற்கைக்கோள், பூமியில் இருந்து விலகிய பிறகு 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடையும்.

    லாலுக்கு 5 ஆண்டு சிறை!

    By: Unknown On: 18:49
  • Share The Gag




  •  கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முன்னதாக, சிறையில் உள்ள குற்றவாளிகள் 45 பேரும் வீடியோகான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். பீகாரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

    மாநிலத்தின் பல கருவூலங்களில் இருந்து போலி ரசீதுகள் மூலம் பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அப்போது பீகாருடன் இணைந்திருந்த ஜார்கண்டில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து, கால்நடை தீவனம் வாங்க போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி பெறப்பட்டது.

    இந்த ஊழல் தொடர்பாக முதல்வர்களாக இருந்த லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 56 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக கடந்த 1996ல் சிபிஐ விசாரணையை தொடங்கியது. அதன்பின் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 1997ம் ஆண்டு முதல்வர் பதவியை லாலு ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே வழக்கு விசாரணையின் போது 7 பேர் இறந்தனர். சிலர் அப்ரூவராக மாறினர். ஒருவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற கோரி, ஜார்கண்ட் ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் லாலு பிரசாத் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து, ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் லாலு தரப்பு வக்கீல், தனது தரப்பு வாதத்தை கடந்த 17ம் தேதி முடித்துக் கொண்டார். 17 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி பிரவாஸ் குமார் சிங் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா, 6 அரசியல்வாதிகள் (ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜகதீஷ் சர்மா உள்பட), 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கான தண்டனை விவரம் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து, சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.கே.சிங் வீடியோ முன்பாக அவர்கள் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    எம்.பி. பதவியை இழக்கிறார் லாலு

    மாட்டு தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கில் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழந்து விடுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதை செல்லாததாக்க அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஆனால், ராகுல் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த அவசரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், தண்டனை அறிவிக்கப்பட்ட லாலுவிற்கும் மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ஜகதீஷ் சர்மாவின் எம்.பி. பதவி பறிபோய் விடும்.

    வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ உங்களுக்கான தீர்வு!

    By: Unknown On: 17:16
  • Share The Gag





  •  



     தொழில்நுட்ப வளர்ச்சியானது தற்போது மூலை முடுக்கு எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றது.


    தற்போது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக முப்பரிமாண பிரிண்டிங் முறையில் பற்தூரிகை(Toothbrush) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


    இதனைப் பயன்படுத்தி வெறும் ஆறு செக்கன்களில் பற்களை மிகவும் துல்லியமான முறையில் சுத்தம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


    அத்துடன் நாக்கினை சுத்தம் செய்யும் டங் கிளீனராகவும் இது செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.

    3வது முறையாக உடைந்தது நயன்தாராவின் இதயம்!

    By: Unknown On: 17:11
  • Share The Gag

  • 3rd time broken Nayantara's heart


    மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம். நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள். பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பழையபடியே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார் என்கிறது ஸ்டுடியோ சரவுண்டிங்.



    சிம்புவுடன் காதல் முறிந்த பிறகு, உடைந்து போன அவரது இதயத்தை ஒட்ட வைத்தவர் பிரபு தேவா. திருமணம் வரை இவர்கள் காதல் போனது. பிறகு பிரபு தேவாவை நயன் பிரிந்ததும் நண்பராக மட்டுமே இருந்த ஆர்யா, நயனின் நெருங்கிய நண்பராகிப்போனார். இது எல்லாம் நடந்தது ராஜா ராணி ஷூட்டிங்கிற்கு இடையேதான். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு டாக் பரவிப்போனது. அந்த சமயத்தில்தான் நயன், மீண்டும் பழைய நயனாக மாறி கலகலப்பாக இருந்தார். வழக்கம்போல் ஆங்கில மீடியாவுக்கு மட்டுமாவது பேட்டிகளை கொடுத்தார். ராஜா ராணி ஷூட்டிங் முடிந்தபோதுதான் வந்தது சோதனை. அனுஷ்கா ரூபத்தில். ஐதராபாத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது தெரிந்து நயன்தாரா நொறுங்கிப்போனார் என்கிறது அவருக்கு வேண்டப¢பட்ட வட்டாரம். தன் மீது சிறிது அன்பு செலுத்துபவர்கள் மீது கண்மூடித்தனமாக பதிலுக்கு அன்பு செலுத்திவிடுகிறார் நயன். அவர்களை அதிகம் நம்பிவிடுகிறார். யதார்த்தம் வெளிப்படும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் இருக்கிறார் என்கிறது நயனுக்கு வேண்டப்பட்ட அதே வட்டாரம்.

    QR கோட்டினை சுயமாகவே உருவாக்கும் Google Docs!

    By: Unknown On: 16:50
  • Share The Gag





  •  



    சில இரகசியத் தரவுகள் உட்பட இணையத்தளங்களை மொபைல் சாதனங்கள் மூலம் விரைவாக பயன்படுத்துவதற்கு QR கோட் உதவிபுரிகின்றது.


    இந்த QR கோட்டினை உருவாக்குவதற்கு விசேட மென்பொருட்கள், ஒன்லைன் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.



    அதேபோன்று கூகுளின் பிரபல சேவைகளுள் ஒன்றான Google Docs இலும் QR கோட்டினை சுயமாகவே உருவாக்கிக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.


    இதனை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, அதனை இங்கே காணலாம்.

    ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்!!

    By: Unknown On: 16:47
  • Share The Gag
  • Viswaroopam choice for Oscar Award competition betrayal? Kamal answer


    விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது ஏமாற்றமா என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு சமீபத்தில் நடந் தது. இதில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களுடன் கமலின் விஸ்வரூபம் படமும் பங்கேற்றது. ஆனால் குஜராத் மொழியில் உருவான தி குட் ரோட் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வானது. விஸ்வரூபம் தேர்வாகவில்லை.



    இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் கமலுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, இதுவரை என்னுடைய படங்கள் 7 முறை ஆஸ்கர் போட்டிக்கு சென்றுள்ளது. விருது கிடைக்கிறதா என்பதைவிட இந்திய படவுலகின் திறமை அமெரிக்க படங்களின் போட்டி விழாவில் பங்கேற்பதே ஒருவிதத்தில் சிறப்பு. இந்த பாணியில்தான் சத்யஜித்ரே இந்திய படங்களை உலக அளவுக்கு கொண்டு சென்றார். அமெரிக்காவை பொறுத்தவரை நாம் இப்போது வெறும் பார்வையாளர்களாகவும், டூரிஸ்ட்டுகளாகவும் மட்டுமே இருக்கிறோம் என்றார்.

    நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!

    By: Unknown On: 08:36
  • Share The Gag

  • பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

    இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.
    அதுமட்டுமின்றி ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.

    இஞ்சி

    நரை முடியை கருமையாக்க வேண்டுமானால் இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
    குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

    செம்பருத்தி

    வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

    தேங்காய் எண்ணெய்

    சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

    ஹென்னா/மருதாணி பொடி

    விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும்.

    அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.

    கறிவேப்பிலை

    நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர்.
    அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும்.


    தயிர்

    தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும்.

    வெங்காயம்

    வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

    மிளகு

    நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும்.

    நெல்லிக்காய்

    கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய்.
    எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.

    ப்ளாக் டீ/காபி

    ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி.
    அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

    Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

    By: Unknown On: 08:07
  • Share The Gag



  • Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.



    141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. 


    இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது. 


    மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

    By: Unknown On: 08:04
  • Share The Gag


  • அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது.




    யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு இரண்டுமே பரஸ்பரம் பிடிவாதமாக தங்கள் நிலையில் இருப்பது மட்டுமின்றி, இனி சமரசத்துக்கு இடமே இல்லை என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக இருப்பதால், 1995ல் இருந்தது போன்று இல்லாமல், ஒரு வாரத்துக்கும் மேலாக கதவடைப்பு நீடிக்கும் என்று தெரிகிறது.




    3 - america


    அண்மையில் அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் ஒபாமா தனி சுகாதார காப் பீட்டு திட்டத்தை கொண்டு வர உள்ளார். ஜனவரி மாதம் 1ம் தேதி அமலாகிறது. மிதவாத எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள், ‘இப்படி அரசு பணத்தை வீணடிக்கக் கூடாது; அவரவர் வேண்டிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கட்டும்’ என்று கூறி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.


    கடந்த திங்கள் அன்று அமெரிக்காவில் நிதி ஆண்டின் கடைசி நாள். அன்று அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. பட்ஜெட்டில் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கும் ஒப்புதல் தர வலியுறுத்தியது. திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரி அதை ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறி 228 ,221 என்ற ஓட்டு கணக்கில் குடியரசு கட்சி வெற்றிபெறச் செய்தது.


    அதே திருத்தங்களை செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி 54 ,46 கணக்கில் தோற்கடித்தது. இந்த இழுபறி காரணமாக மீண்டும் பிரதிநிதிகள் சபையில் நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது. ஆனால், எந்த சமரசமும் ஏற்படவில்லை. செனட் சபையின் ஜனநாயக கட்சியும் பிடிவாதமாக இருந்தது.இதையடுத்து நள்ளிரவில் பேசிய ஒபாமா, நாளை அமெரிக்காவுக்கு பெரும் அவமானம் ஏற்படப்போகிறது. அரசு கஜானா முடங்கும். அந்த செயலை செய்த உங்களை மக்கள் மன்னிக்க மாட்டர்’ என்று கோபத்துடன் பேசினார்.


    நள்ளிரவை தாண்டிய நிலையில், அவசர நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிதி தொடர்பாக அவசர முடிவுகளை ஒபாமா எடுத்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், திட்டப்பணிகள், தேசிய இடங்கள் பராமரிப்பு, வெப்சைட்கள் பராமரிப்பு போன்றவற்றை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.


    இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் நாள் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதுபோல, வாஷிங்டன், நியூயார்க் உட்பட பல மாநிலங்களில் உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் காலவரையற்ற விடுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியத்துக்கு மேல் பலரும் தங்கள் லேப்டாப்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினர். முதியோர் காப்பகங்களும் மூடப்பட்டன. அவர்களுக்கு மாநில அரசு நிதி மட்டும் கிடைத்தது. மருத்துவ வசதிகளும் குறைக்கபப்ட்டன. பல இடங்களில் குப்பை அள்ளுவதும் பாதிக்கப் பட்டது.


    எல்லை பாதுகாப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உணவு துறை போன்ற பணிகளில் பாதிப்பில்லை. அந்த பணிகளில் உள்ள ஊழியர்கள் வேலை க்கு வந்தனர். பாஸ்போர்ட், விசா பணிகளும் கூட பெரிய அளவில் பாதிக்கவில்லை. மத்திய அரசின் ஊழியர்கள் எண்ணிக்கை 24 லட்சம். அதில் மூன்றில் ஒரு பங்கான 8 லட்சம் பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைக்கு வரவில்லை. எனினும், ஒபாமாவின் சுகாதார காப்பீடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வாங்கும் பணிகள் 1 ம் தேதியில் இருந்து திட்டமிட்டபடி தொடங்கின.


    200 கோடி ரூபாய் இழப்பு: கடந்த 2 நாளில் மட்டும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் முடக்கம், தேசிய பொது இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்காததால் மட்டும் 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கதவடை ப்பை முடிவுக்கு கொண்டு வர எந்த தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரஸ்பரம் இரு கட்சிகளும் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளன. ‘நாங்கள் கதவடைப்பை விரும்பவில்லை. திட்டமிட்டு அரசு தான் செய்துள்ளது’ என்று குடியரசு கட்சி சொன்னது. ‘மக்களை பாதிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறுத்திய செயலுக்கு குடியரசு கட்சி பதில் சொல்லியாக வேண்டும்’ என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது.


    பல வனவிலங்கு பூங்காவில் குவிந்த பெண்கள், குழந்தைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோல, அவசர தேவையற்ற நிர்வாக பணிகள் கவனிக்கும் பல அலுவலகங்கள், அரசு ஏஜன்சிகள் ஆகியவையும் சம்பளம், பராமரிப்பு நிதி ஒதுக்காததால் மூட அறிவுறுத்தப்பட்டன. இது போன்ற அரசு பணிகள் முடங்கின. ஊழியர்கள் எல்லாரும் பிரச்னை தீரும் வரை ஆபீஸ் வர வேண்டாம் என்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


    வெள்ளை மாளிகை: பெடரல் அரசு என்பது தான் மத்திய அரசு. அந்த அரசு பணிகள் தான் முடங்கின. வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபீஸ் பணிகளும் கூட முடங்கின. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வெறும் 1,200 பேர் மட்டும் முக்கிய பணிகளை கவனித்தனர். பாஸ்போர்ட், விசா பணிகள், தூதகர பணிகள் போன்றவை பாதிக்கவில்லை. மேலும், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றில் கட்டண வருவாய் இருப்பதால் அந்த பணிகளை கவனிக்கும் பணியாட்கள் வழக்கம் போல பணிக்கு வந்தனர் என்று என்பிசி செய்தி கூறியுள்ளது.


    In first day of U.S. shutdown, no sign how it will end

    ******************************** 


    President Barack Obama and congressional Republicans came no closer to ending a standoff on Tuesday that has forced the first government shutdown in 17 years and thrown hundreds of thousands of federal employees out of work.

    Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட வேண்டுமா?

    By: Unknown On: 07:51
  • Share The Gag






  • Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.


    ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.


    இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.


    இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.