Thursday 5 December 2013

கண்களால் நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்!

By: Unknown On: 23:36
  • Share The Gag
  •  

    கடற்க்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், கடலும் வானமும் சேர்கின்றது அல்லவா? அதன் தூரம் 2.5 மைல்கள் தூரம். நீங்கள் உயரத்திற்குப் போகப் போக இன்னும் தொலைவுக்குப் பார்க்கலாம். காரணம் பூமி உருண்டையாக இருப்பதால்.


    20 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 6 மைல்கள்.
    300 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 23 மைல்கள்.
    350 உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 80 மைல்கள்.
    16.000 (விமானம்) உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 165 மைல்கள்.

    இதுவே இப்படி என்றால் நீங்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால் அதன் கதையே வேறு, சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவில் உள்ள சந்திரனைப் பார்க்க முடியும்! அது மாத்திரமா? அதோ அந்த நட்சத்திரம்? அது கோடிக்கணக்கான மைல் தொலைவில் இருக்கின்றது, அதையும் நாம் பார்க்கின்றோம்.


    அதற்காக ரொம்பத்தான் பெருமை கொள்ளாதீர்கள்.........


    காரணம், உங்கள் பார்வையின் சக்தி நீங்கள் பார்க்கின்ற பொருளில் இருந்து வரும் ஒளியைப் பொருத்தது. பொருட்களுக்கும் உங்கள் கண்ணுக்கும் இடையில் இருக்கும் மீடியம் இதுவும் முக்கியம். ஐரோப்பாவில் சில நாடுகளில் பனிப்படலம் சூழ்ந்து கொள்ளும்போது, பகல் பன்னிரண்டு மணிக்கு நீங்கள் பிடிக்கும் சிகரட் முனையே உங்கள் கண்களுக்குத் தெரியாது!

    இது எப்படி இருக்கின்றது

    பகிர்ந்துகொள்ள !! - 5

    By: Unknown On: 23:21
  • Share The Gag
  • ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.


    அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்


    அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “


    அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்

    பகிர்ந்துகொள்ள !! - 4

    By: Unknown On: 23:11
  • Share The Gag
  • ஹென்றி ஜீக்லண்ட் என்பவன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கடைசியில் கை விட்டு விட்டான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் கோபமடைந்த அவளது சகோதரன் தன் சகோதரியின் காதலனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தான். அவனைத் தேடிப் பிடித்துத் துப்பாக்கியால் சுட்டான்.


    அவன் இறந்துவிட்டான் என்று சகோதரன் நினைத்துத் தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அந்தக் காதலன் இறக்கவில்லை. சகோதரன் சுட்ட குண்டு காதலனின் முகத்தை லேசாக உரசிச் சென்று அருகிலிருந்த மரத்திற்குள் பாய்ந்துவிட்டது.


    பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் காதலன் ஜிக்லண்ட் குண்டு பாய்ந்திருந்த அந்த மரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்க்க தீர்மானித்தான். அந்த வெடிமருந்து வெடித்தபோது மரத்தில் தங்கியிருந்த குண்டு சிதறி ஜீக்லன்டின்

    தலைக்குள் பாய்ந்தது. அந்த இடத்திலேயே அவன் மரணமடைந்தான்.


    சகோதரன் அன்று கொல்ல முடியாததை மரம் நின்று கொன்றுவிட்டது!

    பகிர்ந்துகொள்ள !! - 3

    By: Unknown On: 22:58
  • Share The Gag

  • மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்.


    "உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"


    மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்"


    "வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?"


    "3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.


    அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?"


    அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?"


    நேர்முகம் செய்தவர் Huh?Huh???

    பகிர்ந்துகொள்ள !! - 2

    By: Unknown On: 22:47
  • Share The Gag
  • ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.

    ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.

    அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.

    மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது.

    கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார்.

    நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார்,

    "நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது"

    இப்படித்தான் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்.

    பகிர்ந்துகொள்ள !! - 1

    By: Unknown On: 22:37
  • Share The Gag
  • புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.



    ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.



    "என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்.

    பேயாவது பிசாசாவது!

    By: Unknown On: 22:18
  • Share The Gag
  • சின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும் மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளையிட்டால் இதயத்துடிப்பு எகிறும். இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல் அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.

    பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும், graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார் விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும் உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள், பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம். சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?

    பேய் என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம் வெள்ளை புகை போல கால்களின்றி. இந்த கற்பனை உருவம் ஓவியர்கள் புகையிலிருந்து உருவாக்கியது. காரணம் இறந்தவர்களின் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ ஒன்று பிரிந்து போவதாக நினைப்பது. அமைதி கிடைக்காத ஆத்மா பேயாக அங்குமிங்கும் அலைவது போன்ற கருத்து தான்.

    ஒரு மனிதனின் இறப்பு என்பது மூளையின் இறப்பு. மூளையில் பதிந்த ஞாபகங்களின் இழப்பு, அல்லாமல் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ பிரிந்து வெளியேறி சாந்தி அடையாமல் தவிப்பதெல்லாம் கிடையாது. உயிர் பிரிந்து விட்டது என்பார்கள். உயிர் பிரிவது என்பதை பொதுவாக மூளை உடம்பின் மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதைத் தான் குறிக்கிறது என்றாலும் ஒருவரது உயிர் அப்போது ஒரேயடியாகப் போய் விடுவதில்லை. உயிர் அவனது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. ரத்த ஓட்டம் தடைப் படுவதால் ஒவ்வொரு செல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும்.

    அப்படியே ஒரு பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி டீ குடிக்கப் போகும் டிரைவர் போல உடலை விட்டு ஆவி தனியாகப் போவதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். வெறும் பஸ் டிரைவர் நம் மீது மோதி ஒரு ஆக்ஸிடென்ட் ஏற்படாது. ஒரு பேய் செயல் பட வேண்டுமானால் அதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு ஒரு மூளை தேவை. மூளைக்கு சக்தி கொடுக்க இதயம், நுரை ஈரல் எல்லாம் தேவை. மூளையின் கட்டளைகளை செயல் படுத்த கை கால்களின் திசுக்கள், நரம்புகள் எலும்புகள் எல்லாம் தேவை இவை எதுவும் இன்றி தனித்து எப்படி ஆவி செயல் பட முடியும். ஒரு "software " கம்ப்யூட்டரின் மெரியிலிருந்து எடுக்கப்பட்டு ப்ரொசசரால் கையாளப்பட்டால் தான் அது செயல் படும். அந்த software ஐ ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் செயல் படுமா?
    அப்படி ஓர் ஆவி அல்லது பேய் இருக்குமானால் அது மிக பரிதாபத்திற்குரியது தான் அன்றி பயங்கரமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அதனால் பார்க்க முடியாது, கண்ணில்லை. நாம் அதை திட்டினாலும் கேட்க முடியாது, காதில்லை. நம்மைத் தாக்க முடியாது, ஏனென்றால் எலும்பும் சதையும் கொண்ட ஸ்ட்ராங்கான கை , காலில்லை, சிறகில்லை ஒரு அடி நகர முடியாது.

    இறந்த பின் அதீத சக்தி கிடைக்குமா? எல்லா அவயங்களும் உடன் இருக்கும் போதே கையாலாகாது இருப்பவன் அவற்றை எல்லாம் இழந்து இறந்த பின் எங்கிருந்து சக்தி கிடைக்கும். ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.

    ஒய்ஜா போர்டு ஆவிகளுடன் பேசுவது என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. பின் லேடன் எங்கிருக்கிறான் என்று எதாவது ஆவி குறிப்பிட்டு காட்டுமா? இறந்தவர்கள் பேயாக உலவ முடியும் என்றால் புஷ்ஷின் கழுத்தில் எத்தனையோ பேய்கள் கை வைத்திருக்கும்.

    சுடு காட்டில் பிணத்தை எரிக்கும் போது சில வேளை பிணம் எழுந்து உட்கார்வதுண்டு. இது தீயினால உண்டாகும் எஃபெக்ட். அடுப்பில் ஒரு ப்ளாஸ்டிக் துண்டைப் போட்டாலும் இப்படி நெளியும்.

    முன்பெல்லாம் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊரில் பேய் கதைகளை உலவ விடுவதுண்டு. வேண்டாதவர்களை அடித்துக் கொன்றும் பேய் மீது பழி போட்டார்கள். இரவில் தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஸ்ட்ரோக், அட்டாக் போன்றவை வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பழி்யையும் பேய்கள் ஏற்றுக்கொண்டது. கள்ளக் காதல் மாட்டிக்காமல் தொடரவும் பேய் துணை நின்றது.

    பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறு மன நோய் அல்லது பாசாங்கு வகையில் சேரும். இதனை பற்றி உளவியல் துறை விரிவாக விளக்கம் தரும். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்ல முடியாத உளப் போராட்டங்களின் பாதிப்பு, சமூகதால் பிற மனிதர்களால் உண்டான பாதிப்புகள் , அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் காரணம், உளச்சிதைவு, பிளவு பட்ட ஆளுமை போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

    தினமும் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்யும் கணவனை தண்டிக்க கூட பெண்களுக்கு பேய் பிடிக்கும். காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரெஸன் கூட பேய் பிடித்ததாக உணரப்படும். நல்ல மன நல மருத்துவரின் உதவி தேவை.

    உருவெளித் தோற்றங்கள் காணுதல், யாரோ காதில் பேசுவது போல் கேட்டல், எப்போதும் மவுனமாய் இருத்தல், ஆவேசமாக அட்டகாசம் புரிதல், அசுர பலத்துடன் செயல்படுதல், எப்போதோ இறந்து போன ஒருவரின் பெயர் சொல்லி அது நான் தான் என்று கூறுதல், தன்னை இன்னொருவராக,கடவுள் அவதாரமாக, கடவுள் சக்தி உள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் என இந்த லிஸ்ட் நீளும். மனித மனம் மிக விசித்திரமானது. பல மன நோயாளிகள் தான் நோயுற்றிருப்பதை அறியவோ நம்பவோ மாட்டார்கள். தனக்கும் மற்றவர்க்கும் பாதிப்பு உண்டாக்கும் எல்லா நடத்தைக்கும் மன நோய் தான் காரணம். பலர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும், குற்றம் செய்யவும் பேய் நாடகமாடலாம். சில பேயோட்டும் இடங்களில் காசுக்காக மற்றவர்களது பேயை தன் மீது ஏற்றுக்கொண்டு ஆடுவது போல் நடிப்பவர்களும் உண்டு. மன நோயளிகளை பேய் என்று கருதி பேயோட்டும் இடங்களில் கட்டி வைத்து சித்திரவதை செய்வது பாவம். அதுபோல அவர்களை குறி கேட்டாலும் சாமியார்கள் ஆக்கினாலும் நீங்கள் பாவம்.

    இன்னும் நம்பத் தகுந்த பலர் தான் பேயை கண்டதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். கண்ணால் காணும் காட்சியை பல சந்தர்ப்பங்களில் மூளை எளிதில் தவறாக பதிவு செய்து விடும். பனை மரத்தடியில் பால் குடித்தாலும் கள் குடித்ததாகவே காணுவர். நிலவில் பாட்டி நூல் நூற்பதை கண்டுபிடித்த நமக்கு மரத்தின் நிழல் பேயாக தெரிவதில் என்ன அதிசயம். சுவாரசியமான கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் இதற்கு காரணம். எங்கேயாவது ஒரு பேய் புரளி கிளம்பி விட்டால் ஆளாளுக்கு கை கால் மூக்கு எல்லாம் வைத்து கதை சொல்வார்கள். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் சில தற்செயலான நிகழ்வுகளுக்கெல்லாம் பேயை கூப்பிடப்படாது. ஆமாம். இருட்டான இடங்களை பார்க்கும் போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது. வெளிச்சம் சூழ்நிலை பற்றி அதிக நம்பகமான தகவல்களை பார்வை வழி தருவதால் குழப்பும் கற்பனைகள் நீங்கி விடுகிறது.

    எல்லா தரப்பு மக்களிடையேயும் பேய் கதைகள் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களுக்கும் பேய் கதைகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதற்கு நான் நினைக்கும் காரணம் அவர்களது மத ரீதியான ஆவி நம்பிக்கயும், இறந்து போனவர்களுக்கு அழியாத கல்லறை கட்டி அவர்கள் நினைவுகளை பாதுகாத்து வருவது தான்.

    சில புகைப்படங்களில் பேய் போன்ற உருவம் தோன்றலாம். டபுள் எக்ஸ்போஸர், படம் பதியும் நேரம் காமிரா அல்லது பொருள் அசைவது, டிஜிடல் காமிராக்களில் பதியும் இன்ஃப்ரா ரெட் ஒளிகள், சில நிழல்களின் பதிவு,சில கோனங்கள் என பல காரணங்களால் இப்படி ஏற்படும் அதற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பற்றிய பல வீடியோக்களும் இது போன்ற தந்திரக் காட்சிகளே.

    சிந்தனைக்கு!

    By: Unknown On: 22:07
  • Share The Gag
  • சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று,


    விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது.


    அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா. 


    ” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார்.


    போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

    ...
    “இல்லை அப்பா! எனக்கு எல்லாமே அதிகம்தான்! 


    நான் ஊனம் என்பதனாலேயே, ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அதனாலே என் உழைப்பு அதிகம்.


    என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்”.


    பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது.

    ஆரோக்கியமாக வாழ...!

    By: Unknown On: 21:42
  • Share The Gag
  •  * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்;
    பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

    சிறிது நேரம் வாய்க்குள்
     தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

     * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில்
     ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள்.
    அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள்
    போன்றவைகளை கண்டறியலாம்.

     * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான
     அளவு சேருங்கள்.

     * முடிந்த அளவு வாகன
     பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்;
    அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

     * தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது.
    அப்படி செய்தால்
     இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

     * குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும்
     தேய்த்து கழுவுங்கள்.

     * படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில்
     தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
    தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர்
     குடியுங்கள்.

     * முளைவிட்ட கடலை,
    சிறுபயறு போன்றவைகளை காலை உணவில்
     சேர்க்க வேண்டும்.

     * கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

     * உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

     * அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக்
     கொள்ளுங்கள்.

     * இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

     * இரவில் அதிக நேரம்
     விழித்திருப்பதும், பகலில் தூக்கம்
     போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

     * கொழுப்பு நிறைந்த
     எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும்,
    ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

     * தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு
     முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

     * தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

    பெரியவருக்கு பரம திருப்தி !! குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 21:34
  • Share The Gag
  • வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,

    ”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.

    இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!

    அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

    ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

    இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.

    மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.

    நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.

    இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

     "வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.” என்று கூறிச் சென்று விட்டனர்.

    பெரியவருக்கு இப்போது பரம திருப்தி !!!

    துன்பம்‏!

    By: Unknown On: 21:06
  • Share The Gag
  • பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்

    - ஸ்காட்லாந்து பொன்மொழி


    துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

    - கவியரசு கண்ணதாசன்


    உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.

    - வால்டேர்


    அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்

    - நெப்போலியன்

    ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.

     - ஆஸ்கார் ஒயில்ட்


    பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்

    - பெர்னாட்ஷா

    அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.

    - ஹாபர்ட்.

    பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

     - பாலஸ்தீனப் பழமொழி

    ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    - ப்ரெட்ரிக் நீட்சே

    நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

     - வின்ஸ்டர் லூயிஸ்

    தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


    குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்


    சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்


    வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் *) பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


    மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


    அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


    செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை


    நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

    பறக்க விரும்புபவனால் படர முடியாது.

    மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

    ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்

    கணவன், மனைவி நகைச்சுவை?

    By: Unknown On: 20:55
  • Share The Gag
  • கணவன், மனைவி நகைச்சுவை ,


    "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."



    "யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"



    "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

    சிந்தனைக்கு!

    By: Unknown On: 20:37
  • Share The Gag
  • நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது!



    நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்!



    பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறது!



    சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!

    குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

    By: Unknown On: 20:19
  • Share The Gag
  • எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும்.

    அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள்.

    ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை.

    எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள்.

    இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.

    ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

    · குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது.

    எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.

    · பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு.

    அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும்.

    இது ஒரு மாயத் தோற்றமே.

    · தன் குழந்தை “நன்றாக சாப்பிடுகிறது”

    என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும்

     என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் “என் குழந்தை

     சாப்பிடுவதே இல்லை” என குழந்தையின் முன்பாகவே

     பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.

    · குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள்.

    உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும்.

    அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும்.

    எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது.

    ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.

    · தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால்

    “உடல்பருமன்” ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும்

     போது அதுவே அவர்களுக்கு பெரிய

     பிரச்சனையாக மாறிவிடும்.

    எனவே உணவுப் பண்டங்களை திணித்து

     உடல் நோயை உண்டாக்க வேண்டாம்.

    கட்டை விரலின் மகத்துவம் - கட்டுரை!

    By: Unknown On: 20:02
  • Share The Gag

  •  புகைப்படம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு. குடும்ப அட்டை, நிறுவனத்தில் பணிபுரியும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை – எத்தனையோ விதங்களில் அடையாள நிரூபணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கட்டை விரல்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நம்    அடையாளம். உன்னையே நீ மறந்தாலும் ( மூளைச் சிதைவு நோயில் இது சாத்தியம் ) உன்னை உலகுக்கு அடையாளம் காட்டுவது உன் விரல் ரேகைதான்.

    கட்டைவிரலில் சாதாரண கொப்பளம் வந்தாலும் கூட,நாம்   சேமித்து வைத்த  நம்    பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. கட்டைவிரல் சரியில்  லை என்றால் கையெழுத்தும் சரியாக இருக்காது. அந்தக் கட்டை விரல் வெட்டுப்பட்டால்தான் பிற விரல்களின் ரேகைகள் தேவைப்படும் நம் . கட்டை விரலை இழப்பது நம்   அடையாளத்தை இழப்பதாகும்.

    ஏல்லோர்க்கும் தங்களை நேசிப்பதே மிகப் பெரிய விசயமாக இருக்கும். ‘ நாட்டை, குடும்பத்தை, நண்பர்களை, நேசிக்கிறேன், என்னைப் பற்றி அக்கறையே இல்லை ‘ என்று சொல்பவர்களும் அப்படி உண்மையாகவே நினைப்பவர்களும் உண்டு. நிஜத்தில், தன்னை நேசிக்காதவன் பிறரை நேசிக்க முடியாது. தியாகி கூட அந்தச் செயலில் ‘தனக்கு’ மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதால்தான தியாகம் செய்வான். ‘மற்றவர் மகிழ்ச்சிக்காக’ ஒரு காரியம் செய்தாகச் சொல்லிக் கொள்பவன் கூட உண்மையில் அதைத் ‘தன்’ சௌகரியத்திற்காக, ‘தான் தனத்னைப் பற்றி’ வகுத்துக் கொண்ட பிம்பத்திற்காகவே செய்வான். அப்படித் தன்னையே முக்கியமாக நேசிக்கும் மனிதன் – தன் உறுப்புகளிலேயே முதலில் சுவைப்பதும், சுவைப்பதால் ரசிப்பதும் தன் கட்டை விரலைத்தான். குழந்தைகள் கட்டை விரல் சூப்புவதும் இப்படித்தான். தாயின் மார்பு இதமான உணவு தரும் பாதுகாப்பு என்பதை அனிச்சையாக அறியும் குழந்தைகள், தாங்களாகவே வாயில் வைத்துக் கொள்வது கட்டை விரலைத்தான். இந்தக் கட்டை விரலுக்குத்தான் எவ்வளவு முக்கியம்?

    அவ்வளவு முக்கியமான கட்டை விரலை இழக்கலாமா? ஏகலைவனுக்கு அதுதான் ‘கதை’யில் நடந்தது. நாம் இப்பொது ஏகலைவன்களாக ஏமாறாமல் இருப்பதற்கே இது எழுதப்படுகிறது. ‘அது கதைதானே’ என்று ஒதுக்கி விட முடியாது – ராமன் பாலம் கட்டியதும் கதைதான். கதை சொல்வதும், அதைக் கேட்பதும் காலங்காலமாய் இருந்து வரும் உலகளாவிய கலாச்சார வழக்கம். கதைகளைச் சொல்பவர்கள் யாருமே தங்கள் கற்பனைத் திறனையும் மொழித் திறனையும் பறைசாற்ற மட்டுமே கூறுவதில்லை. உள்ளே ஒரு செய்தி பொதிந்ததுதான் கதை. ‘இதனால் அறியப்படுவது என்னவென்றால்….’ என்று அறம் போதிக்கும் முடிவுரை இல்லாவிட்டாலும் எல்லாக் கதைகளுமே ஒவ்வொரு செய்தியைக் கூறுகின்றன. செய்தியைச் சுவையாக ஆக்குவதே கதைதான். சில கதைகள், அவற்றை எழுதும் மனிதனின் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தாலும் அவையும் செய்திகள்தான். இப்படியெல்லாம ஒருவன் சிந்திக்க முடியும் என்ற செய்தியையே அவை சொல்கின்றன.

    செய்திகள் அவசியம்தான். நிலைமைகளையும் நிஜங்களையும் அவை நமக்குச் சுட்டிக் காட்டுவதால் அவசியம். ஆனால் நாம் உண்மைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை. சமுதாய மனநிலைக்கு ஒப்பனைகள் அலங்காரங்களாகவே தெரிகின்றன. தெருவில், வண்டியில் விற்கப்படும் மாம்பழத்தை விடவும், அழகான உறையில் அடைத்து பிரம்மாண்டமான கடையிலிருக்கும் மாம்பழத்தையே மக்கள் வாங்குகிறார்கள். இரண்டுமே நிஜ மாம்பழங்கள்தான். ஒன்று அப்பட்டம், இன்னொன்று ஆடம்பரம். கதைகளும் அப்படித்தான். அப்பட்டமான உண்மைகளைச் சொல்லும் செய்திகள் கூட அலங்கரிக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுவதால் அவைகள் கதைகளாகின்றன. மேலிருக்கும் உறையை எடுத்துவிட்டால் மாம்பழம் தோன்றும். அதுவரை அதைப் போர்த்தியிருந்த உறை அதன அடிப்படை எளிமையை மெருகேற்றியே காட்டும். அந்தப் பழத்தையும் தோலுரித்துத் தின்றுவிட்டு கொட்டையை வீசினால் – என்றாவது இன்னொரு மாமரம் முளைக்கும், பழம் தரும். கதைகளையும் இப்படி அணுகினால்தான அவை உதவும். ஒவ்வொரு கதையும் பழம்தான். ரசித்து சுவைத்து மறதிச் சகதிக்குள் வீசினாலும் உள்ளிருக்கும் அந்த ஆதாரச் செய்தி வருங்காலத்திற்கு மீண்டும் போய்ச் சேரும்.

    மீண்டும் ஏகலைவன் கதையைப் பார்ப்போம். வெறும் கதையாக மட்டுமல்லாமல் அதில் புதைந்திருக்கும் செய்தியை, உணைமையை, விளக்கத்தை, எச்சரிக்கையை பார்ப்போம். ஏகலைவனுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அவன் படிக்க நினைத்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதிலேயே மிகச்சிறந்த ஆசிரியன் துரோணன். வாத்தியாருக்கு ஊதியமும் சன்மானமும் தருவதற்கு வழியில்லாத மாணவன் ஏகலைவன் – ஏழை. அந்த வாத்தியாருக்கோ ராஜா விட்டுப் பிள்ளைகளெல்லாம் மாணவர்கள். வருமானத்தோடு மரியாதையையும் நிறைய சம்பாதிக்கும் அந்த வாத்தியாரிடம் ஏகலைவன் எப்படிப் பாடம் கற்றுக் கொள்ள முடியும்? எனவே அவரை ‘குரு’வாக்கிக் கொண்டு, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்பனை செய்து கொண்டு வித்தை பழகினான்.

    மேலோட்டமாக இல்லாமல் மனதாரா விரும்பி, சிரத்தையோடு பழகியதால் வித்தையில் சிறப்பாகவும் தேர்ச்சி அடைந்தான். வாத்தியாருக்கு இது தெரிந்து விட்டது. ஏகலைவனிடம் உன் படிப்பிற்கு என் சம்பளம் வேண்டுமென்றார். தன்னிடம் இருக்கும் எதையும் தருகிறேன் என்கிறான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலைத் தா’ என்கிறான் துரோணன். குரு என்று மனதில் நம்பிவிட்டதால் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன். அவன் கற்றது வில் வித்தை. கட்டை விரல் இல்லாமல் வில்லால் காற்றைக் கூட அடிக்க முடியாது. நமக்குச் சொல்லப்பட்ட கதை இதுதான். ஆனால் இது இவ்வளவுதானா? இதனுள் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எவ்வளவு விசயங்கள்!

    ஏழை – பணக்காரன், உயர்ந்த – தாழ்ந்த சாதி – இவை இந்தக் கதையில் எளிமையாகத் தெரியும் உண்மைகள். இந்தக் கதையில் சொல்லப்பட்ட இன்னொரு விவரம், இப்படியொரு சிறந்த வில் வித்தைக் கலைஞன் இருக்கிறான் என்பதைப் பொறாமையோடு ‘குரு’விடம் முறையிட்டவன் துரோணரின் பணக்கார உயர்சாதி மாணவன்! தம்மை விடத் தாழ்ந்த நிலையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டுமென்று தீவிரமாக நம்பும் மேலாதிக்க மனப்பான்மை இதில் தெரிகிறது. இது இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் இருந்து வந்த பேத வெறி. வளர்ந்து பெரியவர்களான பின்தான் இது வரவேண்டும் என்பதில்லை, வளரும், மாணவப் பருவத்திலேயே இது உள்ளூர பதிந்து விடுகிறது. இந்த சமூக அவலத்தையும் தவிர இந்தக் கதையில் இன்னொரு விசயமும் முக்கியமானது.

    ‘கட்டைவிரலை வெட்டித் தா’ என்று துரோணன் கேட்டான். ஏகலைவன் மனமுவந்து வெட்டிக் கொடுத்தான். அவன் கட்டை விரலில்லாமல் அம்பை எய்வது முடியாது. தெரிந்தே அந்த ‘குரு’ கேட்டான். எந்த வற்புறுத்தலுமில்லாமல் வலியவே சீடன் கொடுத்தான். கேட்டதும் கொடுத்ததும் கட்டை விரல் மட்டுமல்ல, ஒரு வருங்காலம், ஒரு வாழ்க்கை. இதிகாச காலத்தில் நடந்த இந்த அற்பத்தனத்திலும் ஒரு சின்ன நேர்மை இருந்தது, இருக்கிறது. அவன் நேரடியாகவே கேட்டான், இவன் தெரிந்தே கொடுத்தான். இன்று?

    கட்டை விரல் என்பது அடையாளம், சிந்தனை, செயல், இயக்கம், பண்பு எனும் கோணத்தில் பார்த்தால், இன்றும் கட்டை விரல்கள் கேட்கப்படுகின்றன, கொடுக்கப்படுகின்றன.

    இன்றைய ‘குரு’மார்கள் நேர்மையுடன் நேரடியாக “உன்னை முழுமையாய் எனக்கு கொடுத்துவிடு, கொடுத்ததன் மூலம் உன் சுய சிந்தனையை நெறியை, உழைப்பை, மனதை எனக்குக் கொடுத்து விடு”, எனும் அவர்களது விளம்பரங்களில் மோகித்து மக்கள் தாமாகவே தங்களைத் தந்து விடுகிறார்கள். வற்புறுத்தல் இல்லாமல் வலியவே தங்களை இழந்து விடுகிறார்கள். ஒன்றை இழந்தால்தான இன்னொன்றைப் பெற முடியும் எனும் போலி வியாபார வித்தை என்று வைத்துக் கொண்டாலும் தங்களையே இழப்பவர்கள் எதைப் பெறுகிறார்கள்? தன் அடையாளத்தையும் அறிவையும் இழந்தபின் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

    காதலிப்பதும் இப்படித்தான். ஒருவன் தன்னையே இழந்து காதலியிடமும், காதலிடமும் கலந்து விடுவான். அங்கேயும் சிந்தனை அலசப்படுவதை விட உணர்ச்சியே மேலோங்கி நிற்கும். காதலின் சரணடைதல் ஒரு வளர்ச்சியாக மாறலாம். சாமியார்களிடம் சரணடைவது எப்படி வளர்ச்சியாகும்? பக்தியும் காதலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் இயங்குபவை. இரண்டுமே பகுத்துப் பார்க்கும் அறிவுத் திறனை மறுப்பவை. சரியான நபருடன் ஏற்படும் காதலே வாழ்வில் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தரும். சரியான சாமியாரிடமும் அப்படி சாத்தியம் என்று வைத்துக் கொண்டால் அந்தச் ‘சரி’யான சாமியாரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

    ஆசையோடு காதலித்து அன்போடு திருமணம் செய்து கொண்ட பிறகும் சில தம்பதியார் வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கிறது. சமுதாயம் அங்கீகரிக்காவிட்டாலும் அனுசரித்துப் போகிறது. அப்படியிருந்தும் இனி இந்தத் திருமணம் தொடர்வதால் பயனோ பொருளோ இல்லை என்று தீர்மானித்த பலரும் அந்த பந்தத்தில் தொடர்கிறார்கள். முடிந்த வரை முயற்சித்துப் பார்க்கிறேன் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு உறவைத் தொடர்கிறார்கள். முயற்சி எப்போதுமே முழுதாய் முடிந்த வரைதான். ஒப்புக்குச் செய்வது முயற்சியே அல்ல. சுகமோ அமைதியோ இல்லாமல், அன்பும் அக்கறையும் கூட இல்லாமல் இப்படிப் பலர் போலியாகத் திருமண உறவில் தொடர்வது ஏன்? திருமணம் புனிதமானது என்று கூட இவர்கள் நினைப்பதில்லை. ஆனால் விவாகரத்து வெட்கப்பட வேண்டியதாக இவர்களுக்குத் தோன்றுகிறது. ‘நாளைக்கு எப்படி நாலுபேர் முன்னால் நிற்பது?’ என்றே பொய்யான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சாமியாரைப் பின்பற்றுவதிலதும் இதே நிலைக்கு உள்ளாகிறார்கள்.

    ஒத்துவரவில்லை விட்டு விடுகிறேன் என்று முடிவெடுக்க தைரியம் வேண்டும். அவசரமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதால் தைரியம் – அது நிதானமாக நிலைமையைத் தெளிவாக உணர்ந்து செயல்படத் தயாராகும் மனநிலை. சமூக அங்கீகாரம் என்பது மனிதர்களில் பலருக்கு மிகவும் அவசியமானது. அந்த அங்கீகாரத்திற்காக உண்மைகளை மறுக்கவும் ஒதுக்கவும் கூட மனது தயாராகும். நம்பி வழிபட்ட சாமியார் சிறைக்குச் செல்லுமளவு குற்றம் புரிந்தவன் என்று தெரிந்தவுடன் உணர்ச்சி மிகுந்து அவனைப் பழிப்பவர்கள் உண்டு. அந்தக் கட்டம் வருவதற்கு முன்னமேயே அந்தக் கயவனின் நடவடிக்கைகள் அவர்கள் மனதை நெருடியிருக்கும். அப்போதெல்லாம் ‘கண்டு கொள்ளாமலிருப்பதும்’, அதையெல்லாம் ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதும்’ பக்தியினால் அல்ல, மிகுந்த சுயநலத்தினால்தான். பலர் தங்கள் ‘கௌரவ’த்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போலிகளை உணர்ந்தும் பின்பற்றுகிறார்கள்.

    விவாகரத்து என்பது திருமணம் போன்றே மனம் தீர்மானிக்கும் முடிவு. இதைச் செயல்படுத்தப் பலர் தயங்குவது வெட்கத்தினால்தான். மணமுறிவை பகிரங்கமாக்கினால் தாங்கள் தோற்றுவிட்டதாகவே பலர் கருதுகிறார்கள். இதனால்தான் கசப்பையும் சகித்துக் கொள்கிறார்கள். தோற்றுவிட்டேன் என்பதன் உள்ளே தப்பாகக் கணக்கு போட்டுவிட்டேன் என்பதும் உள்ளது. போட்ட கணக்கு தப்பு என்பதை மனம் ஒப்புக்கொண்டால்தான் சரியான விடையைத் தேடும். சாமியார்கள் விசயத்திலும் இப்படித்தான். ‘போலியிடம் ஏமாந்தேன், அந்த நேரம் நான் முட்டாள்; போலி என்னை ஏமாற்றினான், அந்த நேரம் அவன் புத்திசாலி’ என்று தீர்மானிப்பதே தைரியம். நம்மில் பலருக்கு இந்த நேர்மையின் தைரியம் இல்லாததால்தான் திருட்டு சாமியார்களுக்கு இன்னும் ஏமாற்றலாம் என்ற தைரியம் வருகிறது.

    இது தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எந்த மனிதனும் அவ்வளவு தனியுமல்ல. அவனது குடும்பமும் சுற்றமும் – நெருக்கமாக இல்லாவிட்டாலும் – அவனையும், அவனாலும் பாதிப்பை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

    ஒரு சாமியாரை நான் நம்புவதால் ‘அவரு’டைய புகழ் பற்றி நிறைய பேசுவேன். என் நண்பர்களும் குடும்பமும் நான் பேசுவதாலேயே அதைக் கேட்பார்கள். நம்பிக்கையில்லாவிட்டாலும் அவர்கள் மனம் இந்த விசயத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் சற்றேயாவது பரிசீலிக்கும். ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களும் இந்த நம்பிக்கை உதவுமோ என்று ஏங்குவார்கள். யதேச்சையாக அப்போது எது நடந்தாலும் அது அவர்களது நம்பிக்கையையும் ஆசையையும் வலுப்படுத்தும். நான் தனியாக இல்லாமல் ஒரு சிறு கூட்டமாக மாறுவேன். சிறு கூட்டம் சமுதாயமாக மாறும். பெரும்பான்மை போகும் திக்கில் சமூகம் போகும். கேள்விகள் அப்போது எழுந்தாலும் உதாசீனப்படுத்தப்படும். பொய் உண்மை போலாகி விடும்.

    மகப்பேறு வேண்டி மரத்தைச் சுற்றி வரும் பெண்கள் இன்றும் உண்டு. கலாச்சாரம் சமூகத்தில் ஆழப் பதித்து விட்ட நம்பிக்கைகள் இன்றும் தொடர்வது உண்டு. மூட நம்பிக்கை என்பதை அறிவியல் நிரூபித்தாலும் தொடர்ந்து சில விசயங்களை நம்மில் பலர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ‘எதற்கு வம்பு’ என்று நினைப்பது அச்சம். ‘என்ன நஷ்டம்’ என்று கேட்பது தெளிவின்மை. மூட நம்பிக்கையோடு சில பழக்கங்கள் தொடரும் போது மனத்தினுள் சலனங்களும் சபலங்களும் வளரும். ஒருவேளை இப்படியே ஜெயித்து விடலாமே என்ற கோணல் எண்ணம் தோன்றும். ‘ஒரு நாள் பண்ணினா போதாது போலிருக்கு’ என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும். இதுதான் நஷ்டம். இதைவிடப் பெரிய நஷ்டம் எது?

    ப்ராண சக்தி! கட்டுரை!

    By: Unknown On: 19:45
  • Share The Gag
  •  உயிரின் மூலப்பொருள்.

    பிரபஞ்சம் ஆற்றல் வடிவமானது. பிரபஞ்சத்தின் ஆற்றல் பல வடிவங்களில் இருந்தாலும். அதன் மூலத்தன்மை ஒன்று தான். ஈஷாவாசிய உபநிஷத் இதை மிகவும் எளிய வடிவில் விளக்குகிறது. ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.

    ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம். பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்கள் தனியே பிரிந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஆற்றல் ஒருங்கிணைந்து பூமியை இயக்குகிறது. பஞ்சபூதத்தின் இயக்கம் உயிர் சக்தியாக மாற்றம் அடையும்பொழுது உடலின் வடிவத்திற்கு உருமாறுகிறது. இவற்றை விரிவாக கூற வேண்டுமாயின் பஞ்சபூதங்கள் ஐந்து விதமான பிராணசக்தியாக பிறப்பு எடுக்கிறது.

    இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்துல நிலைக்கு மற்றமடையும் பொழுது உடல் உறுப்புக்கள் மாற்றம் அடைகிறது கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவை உள்நிலை உறுப்புகளாகும். பார்வை - ஒலி - சுகந்தம் - சுவை - உணர்வு என்று வெளிநிலையில் இருப்பதும் ப்ரபஞ்ச சக்தியின் எளிய வடிவான ப்ராண சக்தியே ஆகும்.

    ப்ராணனின் இந்த ஒருங்கிணைவை உணர்ந்தவர்கள் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். ப்ராணன் பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இணைகிறதோ அங்கு உயர் தோற்றம் நிகழும் என்பதை உணரவேண்டும். பூமியை போல பிற பகுதிகளிலும் உயிர்கள் இருக்கலாம். எனும் கேள்வியின் சாத்தியத்தை இது உறுதியாக்கும்.

    நமது உடலில் ப்ராண சக்தி எப்பொழுது நிலை தவறுகிறதோ அப்பொழுது உடலில் நோய்களும், மனதில் அழுத்தமும் ஏற்படும். கர்ம வினையின் பதிவால் இயங்கும் நமது பிராண சக்திகள் உடல் செயலுக்கும் மனதின் செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் நமது வாழ்க்கை இயக்கங்கள் நடைபெறுகின்றன. நமது உடல் செயலுக்கு காரணமான ப்ராணசக்தி உடல் செயலால் நிலைத்தன்மை இழக்கும் என்பது உயிர் சக்தியின் ரகசியம். துப்பாகியிலிருந்து புறப்படும் குண்டு இலக்கை தாக்கும் முன்பு துப்பாக்கியில் ஓர் அதிர்வை ஏற்படுத்தும் அல்லவா? பூக்கூடையில் இருக்கும் பூவை எடுத்த பிறகும் அதில் பூவின் வாசம் இருக்கும் அல்லவா? அது போல ப்ராண சக்தியும் உடல் செயல் மூலம் கர்மாவை செயல்படுத்தும் முன்பு அந்த செயலின் அதிர்வை நமக்குள் ஏற்படுத்தும்.

    பிறருக்கு நன்மை செய்யும் பொழுது அந்த செயல் நடைபெறும் முன்பு நன்மையான ஓர் அதிர்வு உங்களுக்குள் ஏற்படும். பிறருக்கு தீமை செய்யும்பொழுது முதலில் அதில் பாதிக்கப்படுவது நீங்கள் தான் என்பதை உணருங்கள். இதை ரிஷிகள் உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் உணர்ந்தால் தான் பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதீர்கள் என்றனர்.

    தீர்த்த யாத்திரை செல்வது பிறருக்கு தான தர்மம் செய்வது போன்றவை எவ்வாறு புண்ணியமாக நமக்கு கிடைக்கும் என கேட்பவர்கள் ப்ராண சக்தியின் அதிர்வை புரிந்துகொண்டால் போதுமானது. தீர்த்த யாத்திரை மற்றும் தான தர்மம் செய்யும் சமயம் ஏற்படும் ப்ராண அதிர்வு உடனடியாக உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். இந்த மேன்மையே புண்ணியம் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பிறருக்கு செய்யும் தீமையான செயல் ஏற்படுத்தும் ப்ராண அதிர்வுகள் பாவமான செயலாக கருதப்படுகிறது. இந்த ப்ராண சக்தியின் செயல்கள் அனைத்தும் பாவ - புண்ணிய, கர்ம வினை போன்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்த்தும்.

    ப்ராண சக்தியின் அதிர்வுகள் பதிவுகளாக ஆன்மாவில் வடிவமைகிறது. ப்ராண சக்திகள் தனது இணைவுகளை விடுவிக்கும் பொழுது உடலை விட்டு ப்ராணன் வெளியேறுகிறது. ஆன்மா அதில் உண்டான அதிர்வுக்கு ஏற்ப மீண்டும் ஓர் வடிவை எடுக்கிறது. மீண்டும் ப்ராண சக்தியின் செயலும் உடல் செயல்களும் ஓர் தொடர் இயக்கமாக நிகழுகிறது.





    பிரம்மாண்டமான படைப்பின் ரகசியத்தை எளிமையான வடிவிலும் உண்மை வடிவிலும் விளக்கியிருக்கிறேன். மேலும் பல ரகசியங்கள் இதில் இருக்கிறது. இயற்கையுடன் ஒன்றுபடும்பொழுது ப்ராண சக்தியின் விஸ்வரூபத்தை கண்டு பிரமிக்கலாம். வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால் புத்தக வடிவில் தரிசிக்கலாம்.

    ப்ராண சக்தி ஐந்து நிலையில் உடலில் இயங்குகிறது. தலை பகுதில் உதானன், மார்பு பகுதியில் ப்ராணன், வயிற்று பகுதியில் சமானன், மர்ம ஸ்தானம் மற்றும் இடுப்பு பகுதியில் அபானன் உடலின் அனைத்து பகுதியிலும் வியானன் எனவும் ப்ராண சக்தி இயங்குகிறது. ஒவ்வொரு ப்ராண பிரிவையும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.


    ப்ராணா என்பது ஏதோ ஒரு வஸ்து என எண்ணிடலாகாது. அது நமது உயிர்சக்தி என புரிதல்வேண்டும். உலகில் அசையும் பொருளுக்கும் அசையா பொருளுக்கும் ப்ராணனின் இருப்பே வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. உயிரின் மூலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் ப்ராணனை தொடர்ந்தால் சில தகவல்கள் கிடைக்கலாம்.

    ப்ராணா என்பது உயிர்சக்தி என்றேன். இந்த உயிர்சக்தியை ரிஷிகளும், வேத சாஸ்திரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தவும், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தவும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். நிலைநிறுத்தும் செயலுக்கு ப்ரதிஷ்டா என பெயர். ப்ராணனை நிலைநிறுத்துதல் என்பதை ப்ராண பிரதிஷ்டா என்றனர்.

    ப்ராண சக்தியின் வகைகளை தெரிந்து கொள்ளும் முன் ப்ராணாவின் உண்மை நிலையை கூறும் வேத மந்திரத்தை பற்றி காண்போம். ப்ராணனை ஒரு குறிப்பிட்ட 'இடத்தில்' நிலைநிறுத்த பயன்படும் மந்திரம் ப்ராணாவின் சிறப்பை கூறுகிறது.



    ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
    ப்ரஹ்ம் விஷ்ணு மஹேஸ்வரா: ரிஷய: ருக் யஜூஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி ||
    ஸகல ஜதத் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹார காரிணி ப்ராண ஸக்தி:
    பரா தேவதா


    பொருள் :

    பிரம்மா,விஷ்ணு சிவனாகவும், வேத மந்திரங்களாகவும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றத்திற்கும், செயலுக்கும், அழிவுக்கும் (ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸ்ம்ஹாரம்) காரணம் ப்ராண சக்தியே.. அதுவே தெய்வ நிலையில் உன்னதமானது.





    இதற்கு மேல் ஏதாவது ப்ராண சக்தியை பற்றி சொல்லவேண்டுமா? ப்ராணனின் வகைகளை பார்ப்போம் வாருங்கள்.


    உதானன் :

    தலை உச்சியிலிருந்து கழுத்து பகுதியின் மையம் வரை உதாணனின் இருப்பிடம். நெருப்புக்கு இணையான சக்தி கொண்டது. நவ கிரகத்தில் சூரியன் இதை ஆட்சி செய்கிறார். அதிகமாக சிந்திக்கும் பொழுதும் கோப உணர்வு ஏற்படும்பொழுதும் தலை பகுதி சூடாவது உதானனின் எதிர்செயலாகும். ப்ராண சக்தியால் உதானனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் நெருப்பின் மேல் ஈர்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தீபம் மற்றும் புனிதவேள்வி நெருப்பு இவர்களை கவரும் செயலில் தளர்வாகவும், பேச்சில் விரைவாகவும் இருப்பார்கள்.

    ப்ராணா:


    கழுத்தின் மையத்திலிருந்து மார்பு பகுதிவரை ப்ராணனின் இருப்பிடம் . பலர் ப்ராணன் என்பது மூச்சு என தவறாக உருவகிக்கிறார்கள். பிராணன் பிரபஞ்சத்திலிருந்து உடலுக்குள் வருவதற்கும், உடலிலிருந்து வெளியேறுவதர்க்கும் சுவாசத்தை வாகனமாக பயன்படுத்துகிறது. சிலருக்கு இது வியப்பான மற்றும் புதிய தகவலாக இருக்கலாம். மயக்கமுற்ற நிலையில் இருப்பவர்களுக்கு செயற்கை முறையில் சுவாசம் கொடுப்பதை பார்த்திருக்கலாம் மயக்கமுற்றவர் சுவாசம் எடுக்க முடியாவிட்டாலும் ப்ராணன் வெளியிலிருந்து செயற்கை சுவாசம் மூலம் உள்ளே செல்கிறது. இதே செயற்கை சுவாசத்தை இறந்த உடலில் பொருத்தினால் ஏன் இறந்த உடல் சுவாசம் எடுப்பதில்லை. காரணம் இறந்த உடலில் பிராணன் இல்லை. இதன் மூலம் ப்ராணன் வேறு, மூச்சு வேறு என உணருங்கள்.

    இதை உணர்பவர்கள் இனிமேலாவது ப்ராணாயாமம் என்பதை மூச்சுப்பயிற்சி என மொழிபெயர்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பஞ்ச பூதத்தில் காற்றின் செயலை செய்கிறது ப்ராணன். நவ கிரகத்தில் சந்திரன் மற்றும் புதன் இதை குறிக்கிறது. உடலுக்குள் செல்லும் ப்ராணன் சந்திரனின் ஆதிக்கமும், உடலுக்குள் இருந்து வெளியே செல்லும் ப்ராணன் புதனின் ஆதிக்கமும் கொண்டது. அதிக எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது சுவாசம் அதிகமாக வருவதும், எண்ணங்களற்ற நிலையில் குறைந்து இருப்பதும் ப்ராணனின் செயலை குறிக்கும். காற்றின் மேல் மோகம் கொண்டவர்களாக ப்ராணனின் ஆதிக்கம் கொண்டவர்கள் இருப்பார்கள். நெருக்கமாக இருப்பதும், ஒரே இடத்தில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் எண்ணங்களில் வேகம் கொண்டவர்கள். அலைகடல் மற்றும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்கள் இவர்களை கவரும்.

    சமானா:

    மார்பின் மையத்திலிருந்து நாபி பகுதிவரை சமானனின் இருப்பிடமாக விளங்குகிறது. நீர் என்னும் பஞ்ச பூதத் தன்மையை சார்ந்தது. நீர் எவ்வாறு சமதளத்தை நோக்கி சென்று சமநிலை அடையுமோ அது போன்ற செயலை உடலுக்கு வழங்குகிறது. உடலின் சுவாசம், ஜீரணம், இன பெருக்கம் போன்ற செயல்கள் சிறப்பாக இருக்க இதன் செயல் பேருதவியாக இருக்கும். அஜீரணம் ஏற்படும் பொழுது செரிக்கப்படாத உணவை உணவுக்குழாய் மூலம் மேல்நோக்கி அதிக விசையுடன் செலுத்தும் பணி சமானனுடையதே ஆகும். செரிக்கப்படாத உணவை உடலைவிட்டு வெளியேற்றி உடலை சமநிலைபடுத்துவது போல பல உடல் செயல்களில் சமானனின் பங்கு உண்டு. நவ கிரகத்தில் சனியின் தன்மையாக செயல்படுகிறது. ப்ராணனில் சமானனின் ஆதிக்கம் கொண்டவர்கள் நேர்மையானவர்களாகவும், யாருக்கும் பாரபட்சமின்றி முடிவெடுப்பவர்களாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அருவிகள் , ஆறுகள் இவர்களை கவரும் இயற்கையான விஷயங்களாகும்.

    அபானா:

    நாபிப்பகுதியிலிருந்து மர்மஸ்தானத்திற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதிவரை அபானாவின் இடமாகும். பஞ்ச பூதத்தில் மண் தன்மையையும், நவகிரகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் குறிக்கும். நுரையீரல் சுவாசித்தல், உடலில் கழிவுப்பொருட்கள் வெளியேறுதல் போன்றவற்றிற்க்கும் காரணமாக இருப்பது அபானன். இனப்பெருக்கத்திற்காக மனதிலும், உடலும் ஓர் மாற்றத்தை உண்டாக்குவதில் அபானனின் பங்குஅதிகம். மனிதன் பிறந்து வளர்ச்சி அடையும் பொழுது பிற ப்ராணன்களை காட்டிலும் அபானன் அதிக அளவில் செயல்படுகிறது. புதிய சிந்தனை - கவிதை - ஓவியம் நாட்டியம் - சமூக புரட்சி போன்றவை அபானனின் ஆதிக்கம் கொண்டவர்களின் செயல்களாகும். காடுகள் இவர்களை கவரும் இயற்கை தன்மைகள் ஆகும்.

    வியானா:

    உடல் எங்கும் வியாபித்து இருப்பதால் இது வியானா என அழைகப்படுகிறது. தலை முதல் பாதம் வரை வியானா செயல்படுகிறது. ப்ராணனின் பிற பிரிவுகளுக்கு ஆற்றலை கடத்தும் பொருளாகவும், ப்ராண சக்தியை சமநிலையில் வைத்திருப்பதும் இதன் பணிகளாகும். தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது முதலில் தோன்றும் ப்ராணவகை வியானாவாகும். இதற்கு பிறகுதான் பிற நான்கு பிரிவுகளும் உருவாகிறது. இறக்கும் சமயத்தில் ப்ராணா வெளியேறிய உடன் உடல் செயல் முடிவடைகிறது. இறப்பிற்கு பின் குறைந்தது 48 மணி நேரத்திற்கு பிறகுதான் வியானா வெளியேறும். முதலில் உடலில் நுழைவதும் கடைசியில் உடலை விட்டு நீங்குவதும் வியானாவின் தன்மையாகும். பஞ்ச பூதத்தில் ஆகாயத்தின் தன்மையும், நவகிரகத்தில் குருவும் வியானாவை பிரதிபலிக்கிறார்கள்.

    அமைதியான மனநிலையும், எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றமற்ற மனநிலையும் வியானா ஆதிக்கம் கொண்டவர்களின்நிலையாகும். வியானா முழுமையான செயல் நிலையில் இருப்பவர்கள் உடல் ஒளிரும் தன்மையில் இருப்பதையும் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் ஆனந்தத்தையும் உணர முடியும். வெண்மேகங்கள் இல்லாத நீலவானம், மழைநின்றவுடன் இருக்கும் புதிய சூழ்நிலை போன்றவை வியானாவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த இயற்கை விஷயங்கள்.

    பஞ்ச ப்ராணன்கள் பற்றிய விளக்கம் உங்களை பல சிந்தனைக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன். ப்ராணனின் ஆதிக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் குணமும் , செயலும் வேறுபடுவதை உணரலாம். ஆன்ம விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் பஞ்ச பிராணன்களை சமநிலையில் வைத்திருப்பார்கள். அவர்கள் இயற்கை சூழ்நிலையான கடல், மலை, வானம் மற்றும் ஆறுகளின் அருகில் வசிப்பதை விரும்புகின்றார்கள். இவர்களுக்கு வியானன் சிறப்பாக செயல்படுவதால் கண்களிலும், உடலிலும் ஒளிவீசும் தன்மை ஏற்படும். இதைக் கொண்டு அவர்களின் ப்ராண நிலை சமநிலையில் இருப்பதை உணரலாம்.

    ஹட யோகத்தில் ப்ராணனை நல்வழிப்படுத்தும் பயிற்சியே ப்ராணாயாமம் எனப்படுகிறது. யாமம் என்பதற்கு செம்மையாக்குதல் - நிலைப்படுத்துதல் எனப்பொருள். நாடி, சுத்தி, ஷண்முகி முத்ரா ப்ராணாயாமம் மற்றும் பல உயர்நிலை ப்ராணயாம பயிற்சிகள் ப்ராணனை நெறிப்படுத்த உதவுகிறது. நவக்கிரக தியானம் ப்ராணனை, பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்து உயர்நிலைக்கு உயர்த்துகிறது. என்னிடம் யோக பயிற்சி கற்றவர்கள் ப்ராணனின் தன்மையை சிறிதேனும் உணர்ந்திருப்பார்கள்.

    ஹடயோகம் மட்டுமல்ல கர்மயோகமும், பக்தியோகமும் ப்ராணனை நல்வழிப்படுத்தும் சிறந்த வழிகளாகும். ப்ராணனின் நாத வடிவமான ஒளி வடிவமே 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதிலிருந்துதான் பிரபஞ்சமும் நாமும் உருவானோம்.

    Internet chat உஷார்!

    By: Unknown On: 19:13
  • Share The Gag
  • மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை (சாட்) அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

    நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...

    சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

    சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.

    அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....

    இதோ

    யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.

    டேட்டிங் மற்றும் சாட்டிங்கிலும் மிகுந்த பாதுகாப்பான இணையதளங்கள் உள்ளன. ஏனோதானோவென்று ஏதாவது ஒரு இணையதளத்தில் அல்லாமல் பாதுகாப்பான இணையதளத்தில் அரட்டை அடிப்பது நல்லது.

    மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

    இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)

    பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.

    நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.

    நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.

    பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.

    ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

    புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.

    கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

    பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.

    அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.

    இது நிஜமல்ல .. ஆனால் ?

    By: Unknown On: 18:50
  • Share The Gag
  • உலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை. 
     
     
    ஓவியக்கலைகளிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இதில் 2டி பெயிண்டிங், 3டி பெயிண்டிங் என பல புதுமைகள் உருவாகியுள்ளன.
     
     
     சிங்கபூரை சேர்ந்த கெங் லியி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் மேஜிக் நிபுணரும் கூட. இவரது 3டி பெயிண்டிங் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 
     
     
    இவர் வரைந்த 3டி பெயிண்டிங் ஓவியங்கள் நிஜமா இல்லை ஓவியமா? என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.
     


















    இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்!

    By: Unknown On: 18:36
  • Share The Gag
  •  

    எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

    இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம் பொருள்களை விற்பதற்கும் சேவைகளைத் தருவதற்கும் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன.

    அதேபோல, நைஜீரிய ஏமாற்று வித்தைகளையும் குறிப்பிடவேண்டும். ஏதோ ஓர் ஆப்ரிக்க நாட்டின் சர்வாதிகாரி பல நூறு மில்லியன் டாலர்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதைக் கைப்பற்ற உங்கள் உதவி தேவைப்படுகிறது என்றும், அந்த சர்வாதிகாரியின் துணைவி அன்புடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பார். ஒரே ஒரு சின்ன பிரச்சினை.. முதலில் நீங்கள் கொஞ்சம் பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பவேண்டும். பல நூறு மில்லியன் டாலரில் நம் பங்கு கணிசமாக வரும்போது கொஞ்சம் பணத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவானேன் என்று சிலர் பணத்தை அனுப்பியும் விடுவார்கள். இப்படித் தொடங்கி இன்னும் பல நூறு ஏமாற்று வித்தைகள் இணையத்தில் உலா வருகின்றன.

    மற்றொரு பக்கம், இணையத் தேடு பொறிகள் சர்வசக்தி வாய்ந்தவையாக ஆனபோது, ‘சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்’ என்னும் கருத்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கூகுளில் நீங்கள் ஒரு விஷயத்தைத் தேடும்போது ஒரு லட்சம் சுட்டிகள் கிடைக்கும். ஆனால் முதலில் வரும் சில சுட்டிகளைத் தாண்டி நீங்கள் போகமாட்டீர்கள். எப்படி முதல் சில சுட்டிகளில் ஒன்றாக நாம் வருவது என்ற நோக்கில் பலரும் தத்தம் இணையப் பக்கங்களில் சிறுசிறு மாற்றங்களைச் செய்யத் தொடங்கினர். இதைத் தடுக்கும் நோக்கில் கூகுள் போன்றோர் தங்கள் தேடுதல் அல்காரிதத்தில் பல மாற்றங்களைச் செய்து, உண்மையிலேயே உபயோகமான தளங்கள் மட்டும் முதலில் வருமாறு பார்த்துக்கொண்டனர். ஆனாலும் இந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டு இன்னும் தொடர்ந்து நடக்கிறது.

    இதுபோன்ற தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது சமூக வலைத்தளங்கள் குறித்து வெளியே கசியும் சில செய்திகள், இணைய ஊடகவெளி மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும்வண்ணம் உள்ளன. ஓர் இந்திய இணையதளம் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் இதுகுறித்து பல குறிப்புகளை நமக்குத் தருகிறது.

    ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களை சாதாரண மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லும் களமாகவும் நண்பர்களுடன் உரையாடும் இடமாகவும் வைத்திருக்கின்றனர். இது ஒருவிதத்தில் மக்களாட்சி முறைக்கு வலு சேர்க்கும் விதமாகவும் உள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகளும் தொழில் நிறுவனங்களும் இவற்றை வேறு கண்களுடன் பார்க்கின்றனர். அரசியல், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும் எதிரிகளை ஒழிக்கக் காய் நகர்த்தவும் இணையத்தைப் பயன்படுத்த இவர்கள் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களுக்கு உதவுவதற்கு என்றே பல இணைய மார்க்கெட்டிங் நிறுவனங்களும் முளைத்துள்ளன.

    ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளில் பாஜகவின் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் காங்கிரஸின் மத்திய அமைச்சர் சசி தரூரையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இவர்களுடைய ட்விட்டர் கணக்கில் இவர்கள் சொல்வதையெல்லாம் முறையே 28.8 லட்சம் பேரும் 19.8 லட்சம் பேரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இப்படிப் பின்பற்றுவர்கள் எல்லோருமே உண்மையானவர்கள்தானா? ட்விட்டர் ஆடிட் போன்ற சில தளங்கள், இம்மாதிரியான அரசியல்வாதிகளைப் பின்பற்றும் பல கணக்குகள் போலியானவை என்கின்றன. அதாவது அவை உண்மையான மனிதர்களாக இல்லாமல் வெறும் மாயக் கணக்குகளாக இருக்கலாம்.

    ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவென்றே மாயக் கணக்குகளை விலைக்கு விற்க பல ஏஜென்சிகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. இந்த ஏஜென்சிகள் ஒளிந்து மறைந்தெல்லாம் இயங்குவதில்லை. வெளிப்படையாகவே இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஸ்டிங் ஆபரேஷன் சொல்லும் தகவலும் இதுதான்.

    நிழல் உலக தாதா ஒருவரைச் சந்தித்து ‘என் தொழில்முறை எதிரியுடைய ஃபோட்டோவும் முகவரியும் இவைதான். இவரைப் போட்டுத்தள்ளிவிடு, இந்தா பணம்’ என்று ஒருவர் சொல்வதைப்போல, ஒரு தொழிலதிபர் ஓர் இணைய மார்க்கெட்டிங் ஏஜென்சியை அணுகி பிசினஸ் பேசலாம். பணம் கைமாறும். அந்த இணைய மார்க்கெட்டிங் ஏஜென்சி, அந்தக் குறிப்பிட்ட தொழிலதிபருடைய நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டை ஒரே நாளில் சில ஆயிரம் மாயக் கணக்குகள் பின்பற்றுமாறு செய்வார்கள். அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் தகவல்களுக்கெல்லாம் சில மாயக் கணக்குகள் பொய் லைக்குகள் போட்டுக்கொண்டே இருக்கும்.

    அதோடு விடமாட்டார்கள். எதிரி நிறுவனம் பற்றிப் பொய் வதந்திகளைப் பரப்பும் ஓர் இணையதளம் இரவோடு இரவாகத் தோன்றும். ஊர் பேர் போடாமல் தெருவில் ஒட்டப்படும் கண்டன போஸ்டர்போல அல்லது அலுவலகத்துக்கு வரும் மொட்டைக் கடுதாசிபோல. பின்னர், மாயக் கணக்குகள் இந்தப் பொய்த் தகவல்களை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பரப்பும். எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.

    இந்தத் தகவல்களை உண்மை என்று நம்பும் உண்மையான பலரும்கூட இவற்றை ஃபேஸ்புக்கில் லைக் செய்து, ட்விட்டரில் ரீட்வீட் செய்து மேலும் மேலும் பரப்புவார்கள். மின்னஞ்சல்மூலம் பல்லாயிரம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

    இன்று, ஓர் அரசியல்வாதியின் பிம்பத்தைக் கட்டி எழுப்புவது முதல், ஒரு முழு அரசியல் பிரச்சாரத்தையுமே இணையத்தின் மெய்நிகர் உலகில் செய்துவிட முடியும். அந்த அரசியல்வாதிக்கென்று ஓர் இணையதளத்தையும் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளையும் தொடங்குவதிலிருந்து இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கும். பின்னிருந்து இயக்கும் மார்க்கெட்டிங் ஏஜென்சியின் உதவியால் அரசியல்வாதியின் இணைய பிம்பம் வலுவாகிக்கொண்டே போகும். அவர் அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்வார். அறிக்கைகள் விடுவார். அவரது எதிரிகள் குறித்து இணையத்தில் வம்பும் வதந்தியும் பெருகும். இதன் நீட்சியாக அவர் தேர்தலில் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

    இவற்றையெல்லாம் புலன்விசாரித்து, உண்மையைக் கண்டுபிடிப்பது சாத்தியமே. ஆனால் நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேர்தலே நடந்து முடிந்துவிடலாம்.

    கெடுமதியாளர்கள் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகும் சமூக வலைத்தளங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட நேரிடும். ஒரு கட்டத்தில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும்.

    நிஜ வாழ்க்கையில்கூட எதை நம்பலாம் என்ற தெளிவு நம்மிடம் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் இணைய வாழ்க்கையில் எதை நம்புவது என்று தெரியாமல் தடுமாறும் நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ள இணையம், சாதாரண மக்களைவிட கிரிமினல் எண்ணம் கொண்டவர்களுக்குச் சாதகமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது!

    iOS சாதனங்களில் அழிந்த தரவுகளை மீட்பதற்கான மென்பொருள்!

    By: Unknown On: 18:20
  • Share The Gag
  •  

    கணனிகள் மற்றும் ஏனைய மொபைல் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகள் அழிந்துபோகுமிடத்து அவற்றினை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.


    இவ்வாறு iOS சாதனங்களில் அழிந்து போகும் தரவுகளை மீட்டு தருவதற்கென Leawo iOS Data Recovery எனும் மென்பொருள் காணப்படுகின்றது.


    இதன் மூலலம் இழக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழைப்புக்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றினை மீட்டுக்கொள்ள முடியும்.


    மேலும் இந்த மென்பொருளானது iPhone 5, iPad 4, iPad mini, iPod touch 5 போன்றவற்றிலும் iOS 6.1 இயங்குதளத்திலும் கொண்ட செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

    விளையாடுவதற்கு இதோ சுவாரஸ்யமான ஓர் கேம்.

    By: Unknown On: 18:04
  • Share The Gag
  •  

    இன்று ஒட்டுமொத்த பாலிவுட்டும் ஆவலாக இருப்பது அடுத்த மாதம் வெளியாக இருக்கும் தூம் 3 படத்துக்காக தான் அதன் முந்தைய இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றதே இதற்கு காரணமாகும்.


    தூம் 3யை வைத்து தற்போது புதிதாக ஒரு பைக் ரேஸ் கேம் ஒன்று வந்துள்ளது இதை அதிகளவில் தற்போது டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது இணையத்தில்.


    உண்மையில் இந்த கேம் மிகவும் சுவாரசியமாகவே போகிறது இதோ அந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்ய லிங்க கடைசில் கொடுக்கப் பட்டுள்ளது உங்களுக்காக. மேலும் இந்த படங்களை பார்த்தாலே உங்களுக்கு அந்த கேம் விளையாட வேண்டும் என்று நிச்சயம் தோன்றும் இதோ.....


    இதோ அந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்ய இதை



                                           கிளிக் செய்யுங்கள்

    சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி!

    By: Unknown On: 17:51
  • Share The Gag
  •  

    சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஜப்பானில் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.


    எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

    பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

    எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ‘ஷிமிஷூ கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார் பேனல்’ தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கு ‘ஜனா ரிங்’ என பெயரிட்டுள்ளனர்.

    இதன் மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035–ம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.

    தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

    சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்கள் அமைக்கும் பணியில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

    'மங்காத்தா 2' மனது வைப்பாரா அஜித்?

    By: Unknown On: 17:31
  • Share The Gag
  •  

    'மங்காத்தா 2'விற்கு தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருமே, அஜித்தின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார்கள்.

    அஜித், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க, வெங்கட்பிரபு இயக்கிய படம் 'மங்காத்தா'. தயாநிதி அழகிரி தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று, வசூலை அள்ளியது.

    அதனைத் தொடர்ந்தே, 'மங்காத்தா 2'க்கான பேச்சுகள் தொடங்கின. 'மங்காத்தா' படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, " 'மங்காத்தா 2'விற்கான கதை தயாரா இருக்கு. ஆனால், அஜித் இப்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்."என்று தெரிவித்தார்.

    இயக்குநர் வெங்கட்பிரபு, "‘மங்காத்தா 2’ இயக்க நான் தயாரா தான் இருக்கேன். ஆனால், அஜித் அடுத்த ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார். எல்லாம் நல்லபடியாக அமைந்தால் நான் இயக்க தயார்" என்று கூறியுள்ளார்.

    தயாரிப்பாளர், இயக்குநர் இருவருமே 'மங்காத்தா 2'விற்கு தயாராக இருக்கிறார்கள். இருவரும் எதிர்பார்ப்பது அஜித்திடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு, "'மங்காத்தா 2' கதையை தயார் பண்ணுங்க பிரபு. கால்ஷீட் தயாரா இருக்கு" என்று கூற வேண்டும். அஜித் கூறிய அடுத்த நிமிடம், இருவருமே குஷியாகி விடுவார்கள்.

    வெங்கட்பிரபுவிற்கு போன் செய்வாரா அஜித்.....?

    சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

    By: Unknown On: 17:16
  • Share The Gag
  •  

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி வருகிறார்.

    சூர்யா உடனான படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தினை முடித்துவிட்டு அஜித் நடிக்கும் படத்தினை பிப்ரவரி 15ம் தேதி முதல் இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    சிம்பு - கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடையாறு சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆனால், படத்தின் நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் படக்குழு தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில், சிம்புவிற்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார் என்று படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யார் என்று கேள்வி எழுந்தது.

    அக்கேள்விக்கு கெளதம் மேனன் தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்து இருக்கிறார். "ஏ.ஆர்.ரஹ்மான் சிம்பு படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார். டிசம்பர் 8ம் தேதி முதல் அப்பாடலை படமாக்க இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

    அப்போ.. இன்னொரு ஹிட் ஆல்பம் தயாராகிட்டு இருக்குனு சொல்லுங்க...

    டிசம்பரில் வெளியாகும் 14 படங்கள்!

    By: Unknown On: 17:03
  • Share The Gag
  • 2013ம் ஆண்டில் ரிலீஸுக்குத் தயாராக கிட்டத்தட்ட 40 படங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

    ஆனாலும், கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று தீயாய் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

    டிசம்பர் 6ல் 'ஈகோ', 'கல்யாண சமையல் சாதம்', 'தகராறு', 'வெள்ளை தேசத்தின் இதயம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் பிரசன்னா- லேகாவாஷிங்டனும், 'தகராறு' படத்தில் அருள்நிதி- பூர்ணாவும் நடித்துள்ளனர்.

    டிசம்பர் 13ல் விக்ரம்பிரபு நடித்த 'இவன்வேற மாதிரி',  நித்யாமேனன் நடித்த 'மாலினி 22 பாளையங்கோட்டை', ஓவியா நடித்த 'மதயானைக்கூட்டம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.

    'எங்கேயும் எப்போதும்' சரவணன் 'இவன் வேற மாதிரி' படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரீப்ரியா 'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தை இயக்கி உள்ளார். 'ஆடுகளம்' படத்துக்கு வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் 'மதயானைக்கூட்டம்' படத்தை இயக்கி உள்ளார்.

    டிசம்பர் 20ல் கார்த்தி- ஹன்சிகா நடித்த 'பிரியாணி', ஜீவா, த்ரிஷா. ஆண்ட்ரியா நடித்த 'என்றென்றும் புன்னகை' படங்கள் வெளியாகின்றன. இதேநாளில் சேரன் இயக்கிய 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை',  பாலுமகேந்திரா இயக்கிய 'தலைமுறைகள்', மகேந்திரன் ஹீரோவாக நடித்த 'விழா' ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

    டிசம்பர் 27ல் விஜய் சேதுபதி நடித்த 'ரம்மி', கஞ்சா கருப்பு தயாரிப்பில் மகேஷ் நடித்த 'வேல்முருகன் போர்வெல்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.

    ரொம்ப சுலபம் இ காமர்ஸ் செய்வது!

    By: Unknown On: 07:55
  • Share The Gag


  • செல்லிஸ் என்று ஒரு இணைய தளம் இருக்கிற‌து.எல்லோரையும் இ காமர்சிற்கு அழைத்து வரும் இணையதளம் இது.இ காமர்ஸ் என்றால் இனையம் மூலம் பொருட்களை வாங்குவது மட்டும் அல்ல இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதும் தான்.

    ஆம் இந்த தளம் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை மிகவும் சுலபமாக்கும் நோக்கோத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.அதை அழகாக நிறைவேற்றியும் தருகிற‌து.

    இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதென்றால் அதற்கென தனியே இணையதளம் அமைக்க வேண்டும்,அதிலும் பொருட்களை காட்சிபடுத்தும் வசதி மற்றும் பணம் செலுத்துவதற்கான வசதி கொண்ட தளத்தை அமைக்க வேண்டும்,இதெல்லாம் சாமான்ய இணையவாசிகளுக்கு சாத்தியமில்லை என்று மலைப்பாக இருக்கலாம்.

    ஆனால் இதெல்லாம் எதுவும் தேவையில்லை.செல்லிஸ் இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொன்டால் போதும் அடுத்த நொடி நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருட்களை பட்டியலிட்டு அதற்கான விலையை குறிப்பிட்டு விற்பனையை துவக்கி விடலாம்.

    சமூக வலைப்பின்னல் சேவைகளில் புகைப்படம் அல்லது தகவல்களை பதிவேற்றுவது போல இது மகிவும் எளிதானது.

    இதற்கு பொருளின் புகைப்படத்தை இடம் பெற செய்து அதற்கான விலையை குறிப்பிட்டால் போதுமானது.புத்தகங்கள்,கலைப்பொருட்கள்,இசை தட்டுக்கள் ,க‌ம்ப்யூட்டர்கள்,அறைகலன்கள் என எவற்றை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.புகைப்படங்கள்,வீடியோ,ஆடைகள் போன்ற‌வற்றையும் விற்பனை செய்யலாம்.

    பட்டியலிடப்படும் பொருட்கள் அழகாக அந்த அந்த பிரிவில் வகைப்படுத்தப்படுகின்ற‌ன.

    அதே போல ஒவ்வொருவருக்கும் ஒரு இணைய கடை போன்ற ஒரு இணைய பக்கம் உருவாக்கி தரப்படுகிறது அந்த பக்கத்தில் குறிப்பிட்ட நபர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    பொருட்களை வாங்க விரும்புகிறவர் செலுத்தும் தொகை நேரடியாக விற்பனையாளர் கணக்கிற்கே வந்து விடுகிறது.கமிஷன் போன்ற கழிவுகளும் கிடையாது.

    முகப்பு பக்கத்தில் விற்பனைக்கு உள்ள பொருட்கள் புகைப்படத்தோடு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த பொருளை கிளிக் செய்தால் மேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் விற்பனையாளரை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிற‌து.விற்பனையாளரின் மற்ற பொருட்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

    இந்த தளத்தில் விற்பனைக்கு பட்டியலிட்டு விட்டு அதற்கான இணைப்பை விற்பனையாளர்கள் தங்கள் வலைப்பதிவு ,டிவிட்டர்,பேஸ்புக் போன்ற்வற்றில் உள்ளீடு செய்து கொள்ளலாம்.இது விளம்பரம் போலவும் அமையும்.

    பொருட்களை வாங்க விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான் பொருள் விற்பனைக்கு உள்ளதா என தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

    எல்லோருக்குமான இணைய சந்தையை உருவாக்கி தரும் இந்த தளம் இ காமர்சை மேலும் ஜன‌நாயகமாயமாக்கி இருக்கிறது.

    இந்த தளம் மூலம் அமோக விற்பனை நடக்குமா என்படு தெரியவில்லை.ஆனால் மிக சுலபமாக பொருட்களை பட்டியலிட்டு உங்களுக்கான இணைய கடையை உருவாக்கி கொண்டு நீங்களும் இ காம‌ர்சில் ஈடுபடலாம்.

    இணையதள முகவரி;  https://sellies.com/

    உணவில் எந்த அளவிற்கு உப்பு சேர்ப்பது நலம்?

    By: Unknown On: 07:47
  • Share The Gag


  • உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள், அந்த வகையில் நாம் உண்ணும் உணவிற்கு ருசி உண்டாக்குவதில் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

    இருப்பினும் உப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, உணவில் சேர்த்தால் தான் அது உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். அளவிற்கு மீறி சேர்க்கும் போது அதன் விளைவாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய், நெஞ்சுவலி, இருதய கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

    உப்புசத்து குறைவான ரொட்டி(பிரட்), தானியங்களை காலை உணவில் சேர்க்கலாம். கடல்மீன், சிப்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே உப்பு சேர்ந்திருப்பதால் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும்.

    ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 கிராம்(ஒரு டீஸ்பூன்) எடை அளவிற்கே உப்பு இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் 8.6 கிராம் அளவிற்கு சேர்க்கிறார்கள்.

    ஆகவே குறைவான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வது தான் உடலுக்கு ஆரோக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தள்ளனர்.

    அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்!

    By: Unknown On: 07:41
  • Share The Gag
  • நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?

    அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்

    காலை உணவைத் தவிர்க்காதீர்!


    பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

    இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

    காபி, டீ குறையுங்கள்!

    காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

    வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்


    வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

    இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

    டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி


    அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

    மசாலா பொருட்களின் மகத்துவம்!

    By: Unknown On: 07:33
  • Share The Gag


  •  நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும், மசாலா பொருட்களும் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பவனவாகவும் சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துபவனாகவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவனாகவும் உணவின் தரத்தை மேம்படுத்துபவனாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.


    உடலின் எடையை குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும் மசாலா பொருட்களையும் பார்க்கலாம். வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. மஞ்சளுக்கு உடல் எடையை குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்பு திசுக்கள் உருவாவதை குறைக்க உதவுகிறது.


    இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. வரமிளகாயில் கேப்சைசின் எனும் பொருள் அடங்கி உள்ளது. இது கொழுப்பை எரித்து பசியுணர்வை அடக்கி வைக்கிறது. இலவங்கப்பட்டை உடலின் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இலவங்கப்பட்டையானது ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது.


    நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றாமல் பார்த்துக் கொள்கிறது. கொழுப்பினை விரைவாக செரிக்க செய்கிறது. இஞ்சியானது ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்கள் தேங்கி கிடக்காத வகையில் எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் சீரகம் உதவுகிறது. சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் எனும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகடிறது.


    நமது செரிமான சக்தியை தூண்டி கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஓட்டல்களில் சாப்பிட்ட பின்னர் சாம் சோம்பு சாப்பிட தருவார்கள். இதற்கு காரணம் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும் என்பது மட்டுமின்றி உணவு செரிமானத்துக்கு சோம்பு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும் கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

    கல்லெறிந்தவனுக்கும் கருணை!

    By: Unknown On: 07:27
  • Share The Gag
  • அந்த நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம் திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை.


    'பண பலமும் அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?' என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின் இருப்பிடத்துக்குச் சென்றான்.


    அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல் ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப் பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.


    ''ஏனப்பா என் மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம் பறிப்பதற்காகக் கல் எறிந்தேன்.


     அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!'' என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கூறினார்:


    ''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு, பழங்களைத் தருகிறது மரம். நாம் மட்டும் தண்டனை தரலாமா?''


    'பகைவனுக்கு அருளும் நல்லுள்ளம் உடையவரே உண்மையில் உயர்ந்தவர்!' என்பது அந்த மன்னனுக்குப் புரிந்தது.

    இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!

    By: Unknown On: 06:32
  • Share The Gag
  • காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என்றும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததையுடுத்து என் வாழ்நாளில், இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் சவால் விட்டுள்ளார்.
     
     nov 34 - kasmir 

    நேற்று காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர்,”காஷ்மீரை மையமாக கொண்டு இந்தியா,பாகிஸ்தான் நாடுகளிடையே எந்நேரமும் 4வது முறையாக அணுஆயுத போர் நடைபெறும்; இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளது; அதனால் பாகிஸ்தானும் அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது; காஷ்மீர் பிரச்னையை அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்க்க வேண்டும் எனவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா., தெரிவித்துள்ளது; ஆனால் இது நடக்காத காரியம்; இந்திய எல்லையில் பாக்., படைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது”என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.


    இப்படியொரு செய்தி பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகை ஒன்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து நவாஸ் ஷெரீப் அலுவலகம் உடனடியாக அச் செய்தியை மறுத்தது. ‘இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது, தீய உள்நோக்கம் கொண்டது. நவாஸ் ஷெரீப் இந்த வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான எந்த பிரச்சினைக்கும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதே நவாஸ் ஷெரீப்பின் கருத்து’ என்றெல்லாம் நவாஸ் ஷெரீப் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.


    இதற்கிடையில் நவாஸ் ஷெரீப் பேச்சு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் “–என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பு இல்லை”.என்று அவர் கூறினார்.