Monday 21 July 2014

விஸ்வரூபம் 2 எப்போது வரும் விரிவான அலசல்..!

By: Unknown On: 23:26
  • Share The Gag
  • கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டு, அடுத்த படமான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கிலும் நடிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஆனால், விஸ்வரூபம் 2 படம் எப்போது வெளி வரும் என்பது மட்டும் இன்னும் உறுதியாகத் தெரியாமலே உள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் உத்தம வில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது உத்தம வில்லன் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. இந்த படமே விரைவில் வெளிவந்துவிடலாம் என்ற நிலையில் விஸ்வரூபம் 2 படத்தைப் பற்றிய சத்தத்தையே காணோம்.

    அதற்குக் காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. படத்தை வாங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் அவர்கள் தயாரித்துள்ள மற்ற படங்களின் வெளியீட்டை முடித்துவிட்டுத்தான் இந்த படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், சிலரோ தயாரிப்பு நிறுவனம் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததால் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள் என்கிறார்கள். இன்னும் சிலரோ கமல்ஹாசன் உத்தம வில்லன் படம் முதலில் வருவதை விரும்புகிறார், அதற்குப் பின்னர் விஸ்வரூபம் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

    உத்தம வில்லன் அநேகமாக செப்டம்பர் மாதம் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் அதற்குப் பின்னர் தீபாவளி நாளில் விஸ்வரூபம் 2 வரலாம் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். கமல்ஹாசன் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ள த்ரிஷ்யம் ரீமேக் படம் டிசம்பரிலோ, அல்லது பொங்கலுக்கோ வெளிவரும் என்கிறார்கள். ஒரே வருடத்தில் கமலின் மூன்று படங்கள் வர வாய்ப்புள்ளது ஆச்சரியமான ஒன்று.

    தல 55 எக்ஸ்க்ளூசிவ்! ஏழு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா!

    By: Unknown On: 21:04
  • Share The Gag
  • கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா,த்ரிஷா, நடித்து வரும் தலயின் 55 வது படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது..

    ஏ.எம்.ரத்னம் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். சமீபத்தில் த்ரிஷாவின் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

    இதில் அஜித் முதன்முறையாக ஏழு வயதுக் குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார். த்ரிஷா அம்மாவாக நடிக்கிறார்.

    அஜித்துடன்  மீண்டும் நடித்ததால்,  த்ரிஷா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் , ''என் மீது நம்பிக்கை வைத்து இந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு கௌதம் மேனனுக்கு நன்றி '' எனத் தெரிவித்துள்ளார்.

    'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களுக்குப் பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடிப்பது இது நான்காவது முறை.

    இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம் எது?

    By: Unknown On: 19:00
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் இந்த 1/2 வருடத்திலேயே பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இதில் எத்தனை படங்கள் நன்றாக ஓடியது என்றால் கேள்விக் குறி தான்.

    ஆனால் சமீபத்தில் சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த படங்கள் என ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்கள் பின் வருமாறு..

    1. வீரம் - ரூ 6.14 கோடி, 2. ஜில்லா -ரூ 5.68 கோடி

    3. கோச்சடையான் -ரூ 5.63 கோடி, 4. மான் கராத்தே -ரூ 4.80 கோடி

    5. இது கதிர்வேலன் காதலி -ரூ 3.71 கோடி


    பணத்திற்காக இப்படியா? வைரமுத்துவின் முகத்திரை கிழிந்தது!

    By: Unknown On: 17:43
  • Share The Gag
  • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து. தமிழ் ஆர்வமுள்ள பல இளைஞர்களின் ரோல்மாடல் யார் என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது இவர் தான் என்று.

    ஆனால் சமீபத்தில் இவரை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது, இவரை முன்னணி கல்லூரி ஒன்றிற்கு விருந்தினராக அழைத்த போது நான் வருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் ஒன்று செய்யவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

    அது என்னவென்றால் இவர் எழுதிய ரூ 240 மதிப்புள்ள புத்தகத்தை 500 வாங்க வேண்டும் என்று சொல்ல, அழைக்க சென்றவர்கள் அதிர்ந்துவிட்டார்களாம்.


    கோலிவுட்டிற்கு வருகிறார் ஹிரித்திக் ரோஷன்!

    By: Unknown On: 17:02
  • Share The Gag
  • பாலிவுட் திரையுலகில் பல பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் ஹிரித்திக் ரோஷன். இவர் ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இவர் பார்வை தென்னிந்திய சினிமா மீது விழுந்துள்ளது.

    இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விரைவில் ஒரு தமிழ் நேரடி படம் நடிப்பேன்’ என்று தெரிவித்திருந்தார். இதன் முதற் கட்டமாக க்ரிஷ் பட வரிசையை தமிழில் டப் செய்து வெளியிட்டார்.

    தற்போது மீண்டும் இவர் நடிக்கும் பேங் பேங் படத்தையும் தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் கூடிய விரைவில் இவர் தமிழ் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


    அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நடிகர் விஜய்!

    By: Unknown On: 08:09
  • Share The Gag
  • அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நடிகர் விஜய், அடுத்த மாதம், மதுரை தமுக்கம் மைதானத்தில் இதற்காக பிரமாண்ட விழா நடத்த தீர்மானித்திருக்கிறார். தீவிரமாகஅரசியலில் இறங்குவதற்கு, இந்த விழாவை அவர் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதால், அரசியல் அரங்கில், இந்த விழா குறித்து பரபரப்பாக பேசுகின்றனர்.

    இதுகுறித்து, நடிகர் விஜய் தரப்பில் கூறியதாவது:நடிகர் விஜய்க்கு தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது, அவருக்கு தீராத தாகம். அதனால் தான், அவர் ரசிகர் நற்பணி மன்றத்தை வேகமாக செயல்பட வைத்தார்.அரசியல் தலைவர்கள் போல அவர், தன்னுடைய பிறந்த நாள் விழாவை, நலத் திட்ட உதவிகள் மூலமாக கொண்டாடி வருவதும் இதற்காகத்தான்.

    ஆனால், அவருடைய அப்பா சந்திரசேகர், அவரை உடனே அரசியலுக்கு கொண்டு வந்து, விரைவிலேயே தமிழகத்தின் முதல்வராக்கி விட வேண்டும் என விருப்பப்பட்டு, சில காரியங்களை செய்ய, அது விஜய்க்கு எதிராக முடிந்தது.விஜய் நடித்து வெளியான, தலைவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதன் பின்னணி இதுதான்.

    அடுத்தடுத்தும், இப்படிப்பட்ட பிரச்னைகளை சந்திக்கக்கூடாது என்பதில், விஜய் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், தேர்தலுக்கு முன், நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பா.ஜ., கூட்டணிக்கு தன் ஆதரவையும் தெரிவித்தார். அப்போது, மோடியிடம் தமிழகத்தில் அரசியல் ரீதியில் இருக்கும் நெருக்கடிகள் குறித்து சொன்ன விஜய், பாதுகாப்பும் கோரினார்.
    மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என, நரேந்திர மோடி, விஜயிடம் சொன்னார்.

    அந்த தெம்பில், விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆர்வம் துளிர்த்திருக்கிறது. அதற்கு தேவையான காரியங்களை அவர் செய்ய ஆரம்பித்து விட்டார். அதன் முதல் கட்டம் தான், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது போல கருத்து கணிப்பு நடத்தி, அதில் தன்னை, அடுத்த சூப்பர் ஸ்டாராக முன்னிலைப்படுத்தினார்.அடுத்த கட்டமாக, இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து, ரசிகர்களை கூட்டி, விழா எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. விழாவை, அரசியல் விழா போல நடத்த திட்டமிட்டுள்ளார்.மதுரையில் நடக்கப் போகும் விழா, வெற்றியாக அமையுமானால், தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தவும் தீர்மானித்துள்ளார்.

    இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வாயிலாக மக்கள் செல்வாக்கை நிரூபிப்பதன் மூலம், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய, கத்தி படத்துக்கும் சிக்கல் எதுவும் இருக்காது என்றும் விஜய் நினைக்கிறார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

    தனுஷை வாழ்த்திய சிம்பு ! என்ன காரணம் சிம்பு..?

    By: Unknown On: 01:00
  • Share The Gag
  • தனுஷ், அமலா பால், சுரபி, சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி'. தனுஷிற்கு இது 25வது படம்.

    அனிருத் இசையில் வெளியான இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    கமர்ஷியல் அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிம்புவும் தனது ட்விட்டர் தளத்தில் தனுஷின் 25வது படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், "எனது சக போட்டியாளரும் நல்ல நண்பருமான தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' வெற்றியடைய வாழ்த்துகள், கலக்குங்க" என சிம்பு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

    படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும் பொழுது மிகவும் எனர்ஜியாக இருந்ததாகவும் மேலும் எனது சகோதரருக்கும், அனிருத்துக்கும் எனது வாழ்த்துகள் என தன் ட்விட்டர் தளத்தில் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

    உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்!!

    By: Unknown On: 00:50
  • Share The Gag
  •                   உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும்.

    உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங் கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது மற்றும் இது போன்று நிறைய கெட்ட பழக்கங்கள் அனைவரிடமும் உள்ளது. இத்தகைய செயல்களை மேற்கொள்ளும் போது, பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால், அதனை செய்யாதே என்று கண்டிப்பார்கள். ஆகவே பலர் அந்த பழக்கங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். இருப்பினும், தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவென்றால், அத்தகைய பழக்கங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது அந்த மாதிரியான சில நல்ல கெட்டப் பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அத்தகைய பழக்கம் இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.

    நகம் கடிப்பது

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான் நகம் கடிப்பது. இதை கெட்ட பழக்கம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆய்வு ஒன்று, நகங்களை கடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்கிறது. ஏனெனில், நகங்களை கடிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழக்கமாகும்.

    சொடக்கு எடுப்பது

    சொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக இருக்கலாம். மேலும் இது மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஏனென்றால், சொடக்கு எடுப்பதால், விரல் மூட்டுகள் நன்கு ரிலாக்ஸாவதோடு, விரல்கள் நன்கு செயல்படும்.

    துப்புதல்

     அடிக்கடி எச்சில் துப்புவது எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அது ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்வோம். ஆனால் எச்சில் துப்புதலும் ஒரு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு நல்ல பழக்கம் தான். எப்படியெனில், எச்சில் துப்பினால், சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்யும் போது, வாயில் அதிகப்டியான எச்சிலானது சுரக்கும். அவ்வாறு சுரக்கும் எச்சிலை உடனே துப்பினால், நன்கு நிம்மதியாக சுவாசிக்கலாம்.

    படபடப்புடன் இருப்பது

     எப்போதும் படபடப்புடன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கமும் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில், இவ்வாறு படபடப்புடன் இருக்கும் போது, மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைத்து, மூளை எப்போதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.

    அதிகமான தூக்கம்

     பெரும்பாலான வீடுகளில், விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும். பலர் இத்தகைய பழக்கத்தை ஆரோக்கியமற்ற பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு நீண்ட நேரம் தூங்கினால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

     பெட் காபி மற்றும் காலை உணவு


     சிலருக்கு படுக்கையிலேயே உணவை உண்ணும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தை மிகவும் மோசமான பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.

    உடற்பயிற்சியை தவிர்ப்பது

     ஆம், உண்மையில் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, திடீரென்று அவற்றை சிறிது நாட்கள் தவிர்த்தாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எப்படியெனில், இவ்வாறு உடற்பயிற்சியை திடீரென்று தவிர்க்கும் போது, உடற்பயிற்சியினால் தசைகளில் ஏற்பட்ட காயங்களானது குணமாகி, மறுமுறை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது வலுவுடன் செயல்பட முடியும்.

    ஏப்பம்

     ஏப்பம் விடும் போது சப்தமாக விட்டால், அது கெட்ட பழக்கம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவ்வாறு ஏப்பத்தை அடக்கி வைத்து விட்டால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே யாரேனும் ஏப்பம் விட்டால், அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.

    சூயிங் கம்

     கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.

    அஜித் இண்ட்ரோ பாடலில் சிம்பு!

    By: Unknown On: 00:46
  • Share The Gag
  • சிம்பு தீவிரமான அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இவர் எப்படியாவது அஜித்துடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

    ஆனால் இன்று வரை இவர் ஆசை நிறைவேறவில்லை. சமீபத்தில் சிம்புவை கௌரவ தோற்றத்தில் நடிக்க அழைத்த கௌதம் மேனன், பின் அந்த எண்ணத்தையும் கைவிட்டார்.

    தற்போது தல-55யில் இண்ட்ரோ பாடலில் சிம்புவும் வந்து நடனமாடுகிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.