Wednesday 27 August 2014

வாழ்க்கையின் பய‌னுள்ள குறிப்புகள்!

By: Unknown On: 22:06
  • Share The Gag

  • 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்


    2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.


    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


    10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


    11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


    12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


    13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


    14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை


    15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


    16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்


    17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்



    18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்



    19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்


    20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


    21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


    22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


    23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்


    24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


    25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


    26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


    27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்


    28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


    29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


    30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்


    31. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

    மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the World

    By: Unknown On: 22:06
  • Share The Gag
  • மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை....


     எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.


    மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


    சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


    ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.


    நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


    பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.


    காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.


    நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


    எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல் உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.


    இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும் ஒரு பழக்கம் தான்.

    படித்ததில் பிடித்தது!

    By: Unknown On: 22:06
  • Share The Gag

  • பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.


    துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.


    உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.


    அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.


    ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.


    பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!


    பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


    மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.


    நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.


    செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.


    பறக்க விரும்புபவனால் படர முடியாது.


    ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

    பிரசண்டேஷன் தேவையா?

    By: Unknown On: 16:54
  • Share The Gag

  • Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.


    ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது.  இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.


    அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன.  பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான்.


      அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.


    நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும்.  மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள்.


    அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது.  ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.


    கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம்.


    இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

    ஆண்மை அதிகரிக்கும் குடைமிளகாய்

    By: Unknown On: 08:34
  • Share The Gag
  •  100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து:

    மாவுப்பொருள் 4.64 g
    சர்க்கரை 2.40 g
    நார்ப்பொருள் 1.7 g
    கொழுப்பு 0.17 g
    புரதம் 0.86 g
    தயமின் 0.057 mg 4%
    ரிபோஃபிளாவின் 0.028 mg 2%
    நியாசின் 0.480 mg 3%
    பான்டோதெனிக் அமிலம் 0.099 mg 2%
    உயிர்ச்சத்து பி6 0.224 mg 17%
    இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 10 μg 3%
    உயிர்ச்சத்து சி 80.4 mg 134%
    கால்சியம் 10 mg 1%
    இரும்பு 0.34 mg 3%
    மக்னீசியம் 10 mg 3%
    பாசுபரசு 20 mg 3%
    பொட்டாசியம் 175 mg 4%
    துத்தநாகம் 0.13 mg 1%

    பொதுவாக துத்தநாக சத்து உள்ள உணவுப்பொருள்கள் ஆண்மை அதிகரிக்கும்
    தன்மையை கொண்டுள்ளன.குடைமிளகாய், பச்சைக் காயாக 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து ஆற்றல் 20 kcal 80 kJ

    கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது.

    சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது.

    இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

    இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது.

    குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும்.

    அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

    கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

    இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

    ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

    By: Unknown On: 08:15
  • Share The Gag
  • எர்ணாகுளம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ 10 லட்சம் காப்புத் தொகை செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

    மோகன் லால் - மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

    இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நாயகனாக கமல் ஹாஸன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் கவுதமி.

    ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

    இந்த நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும், மற்ற மொழிகளில் ரீமேக் செய்த போது தனக்கு விவரம் தெரியவில்லை. எனவே தமிழ் ரீமேக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் எழுத்தாளர் சதீஷ் பால் மனுத்தாக்கல் செய்தார்.

    சதீஷ் பால் நாவலைப் படித்துவிட்டு த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த நீதிபதி, இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், காப்புரிமை சட்டப்படி குற்றமாகும் என்கு கூறி தமிழ் ரீமேக்குக்கு தடை விதித்தார். படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றால் ரூ 10 லட்சத்தை காப்புத் தொகையாகக் கட்டிவிட்டு தொடங்கலாம் என்று படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டார்.

    இதனை ஏற்று ரூ 10 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர் கமல் மற்றும் படக்குழுவினர்.

    சலீம் யாருக்கு? உரிமை பிரச்சனையில் உதறல் எடுத்த விஜய் ஆன்ட்டனி

    By: Unknown On: 07:40
  • Share The Gag
  • ஏதோ சொந்த பணம் போட்டு படம் எடுப்பதை போல கோடம்பாக்கத்தில் கோதா பண்ணிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி, முதல் படத்திலும் சரி. இரண்டாவதான ‘சலீம்’ படத்திலும் சரி! ஓவராக உள்ளே நுழைந்து படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் டெக்னீஷியன்களை. அவர்களின் சாபமோ என்னவோ? பிரச்சனை இப்போது அவரை படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறதாம்.

    உண்மையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வேறொருவர். இவர் ஏற்கனவே தமிழில் ‘மாசாணி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அவர்தான் விஜய் ஆன்ட்டனியை தொழில் பார்ட்டனராக சேர்த்துக் கொண்டு இந்த ‘சலீம்’ படத்தை தயாரித்து வருகிறார். நடுவில் ஒட்டிக் கொண்டது ஸ்டுடியோ 9 என்ற நிறுவனம். சுமாரான அளவே பணம் போட்டு உள்ளே இறங்கிய இந்த நிறுவனம், இப்போது முழு படத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முயல்கிறதாம். முதலில் பணம் போட்ட மவராசன் அதை அனுமதிப்பாரா? ‘பிரதர்… நீங்க உங்க பணத்தை வாங்கிட்டு ஒதுங்கிருங்க’ என்று ஸ்டுடியோ 9 ஐ வற்புறுத்த, அந்த நிறுவனமோ ‘முடியவே முடியாது. நீங்க ஒதுங்குங்க’ என்று மல்லுக்கு நிற்க, இவர்கள் சண்டையில் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்கிற மண்டை குடைச்சல் வந்துவிட்டதாம் விஜய் ஆன்ட்டனிக்கு.

    இசையமைக்கிற வாய்ப்புகள் க்யூ கட்டி நின்ற போதும் அதிலும் கவனம் செலுத்தாமல், சம்பளமே கூட வாங்காமல் இந்த படத்தில் நடிச்சிருக்கேன். ‘ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு எனக்கு வர வேண்டிய பணத்துல முக்காடு போட்றாதீங்க’ என்று கதற ஆரம்பித்திருக்கிறாராம். ‘இவங்க மூணு பேரோட சண்டை முடிந்த பிறகுதான் படத்தின் ரிலீஸ் வேலையில் மெனக்கெடுவார்கள். இதுல எங்களை எங்க கவனிக்க போறாங்க?’ என்று விநியோகஸ்தர்கள் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

    சகுனம் நல்லாதான் இருக்கு! விஜய் ஆன்ட்டனியோட ஆர்மோனிய பொட்டிய எதுக்கும் துடைச்சு எண்ணை போட்டு வைங்கப்பா. சலீமுக்கு பின்னாடி தேவைப்படும்!

    வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி..?

    By: Unknown On: 06:55
  • Share The Gag
  • வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

    வாஷிங்மெஷினில் அதிகமாக நுரை தள்ளும் சோப்புகளை பயன்படுத்தக்கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும். வாஷிங்மெஷினில் கிழிந்த துணிகளை போட்டு துவைக்க வேண்டாம் ஏனெனில் மேலும் துணிகள் கிழிந்து விடும். வாஷிங்மெஷினில் துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், மின்சார சப்ளை மெயினை ஆப் செய்துவிடவும்.

    வாஷிங்மெஷினில் துணிகளை சலவை செய்யும் போது நீலத்தை அதனுடன் கலக்கக்கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் சுற்றலாம் என உள்ளேதோ அத்தனை சுற்றுகள் தான் சுற்றவேண்டும்.

    வாஷிங்மெஷினை உபயோகித்து முடித்ததும் நன்கு துடைத்து உலரச் செய்ய வேண்டும். மேல் பகுதியில் உள்ள ரப்பர் ரிம்மை துடைக்க வேண்டும்..ஹோசில் ஆங்காங்கே கிளாம்ப் போடவேண்டும்.

    புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...

    By: Unknown On: 06:53
  • Share The Gag
  • * டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில்,   connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..

    * இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது.. அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்.. மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் . (அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க )

    * புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று முதல் ஒரு மாசம் வர இருக்கும் மன அழுத்தத்தை புரிந்து எதிர்கொள்ள வேண்டும்..வீட்டில் செல்லமாக வளர்ந்த "குழந்தைகள்" ஜாக்கிரதை... ரூமுக்குள் அடைபட்டு கிடைக்காமல் முடிந்தவரை வெளியே இருந்தால் நல்லது.. குளிராக, வெயிலாக இருக்கும் பட்சத்தில் ரயில், பஸ்களில் பிரயாணிக்கலாம்..

    * வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது தான் முதல் வேலை.. போன், இன்டர்நெட், காஸ், மின்சாரம் என்று பல இதை சார்ந்தே இருக்கும்.. மாணவர்களாக இருந்தால் உங்கள் கல்லூரியின் அடையாள அட்டை தேவை.. வேலை செய்யும் பட்சத்தில் இது ரொம்ப சுலபம்.. அவர்களே பார்த்துகொள்வார்கள்...

    * தயங்காமல் எந்தவொரு விஷயத்தையும் கேட்டு செய்யுங்கள்.. நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்தா காசு வீணாயிடும்.. ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும் காசு வீணாயிடும்.. டாக்சிக்களை தவிர்த்து அரசு வாகனங்களை பயன்படுத்துங்கள்..

    * சக இந்தியர்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.. சில பேரு அவங்க சொத்தை நீங்க எழுதி வாங்கிடுவீங்களோன்னு கண்டும்காணமா இருப்பாங்க.. ஆனா விடாதீங்க.. விஷயங்களை இயல்பாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. அவர்களை சந்திக்க சிறந்த இடம் பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு இடங்கள், (வேலை இடம், கல்லூரி தவிர).. உணவு, இருப்பிடம், உடை பற்றிய சிறந்த அறிவுரைகளை அவர்களை தவிர வேறு யாரும் தர முடியாது.. இந்திய காய்கறிகள், மசாலாக்கள் அநேகமாக எல்லா வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.. ஆனால் preservatives அதிகமாக இருப்பதால் சுவை மாறுபடும்..

    * மேற்கத்திய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளில் மக்களிடையே technology acceptance ரொம்ப அதிகம்.. எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அங்கு 500 Mbps இன்டர்நெட் உபயோகிக்கிறார்... விலையும் அதிகமில்லை.. நல்ல இன்டர்நெட் இணைப்பு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மொக்கையாக வாங்கிவிட்டு.. contract இல் நுழைந்துவிட்டு சங்கடப்படாதீர்கள்... இந்தியாவிற்கு பேச இன்டர்நெட் கண்டிப்பாக தேவை... உங்கள் வீட்டிலும் இன்டர்நெட் கொடுத்து பெற்றோர்களுக்கு கற்றுகொடுப்பது ரொம்ப முக்கியம்.. டிவி இணைப்பும் (ADSL) பெரும்பாலும் சேர்ந்து வருவதால் டிவியும் வாங்கிடலாம்..

    *பஸ், ரயில் என்று எங்கு சென்றாலும் ஸ்மார்ட்கார்டுகள் தான்..போக்குவரத்துக்கு சலுகை அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு விசேஷ சலுகைகள் உண்டு.. எல்லாமே நேரத்துக்கு நடப்பதால் தாமதமா வந்தால் தர்மசங்கடங்கள் நிச்சயம்...

    * வசிக்கும் நாட்டில் வரி பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்... சில சமயம் நம் நாடு திரும்பும்போது கட்டிய வரி பணத்தில் சிலதை திரும்ப பெறலாம்.. வளைகுடாவில் வரி கிடையாது

    * இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம்.. பல்லுக்கு தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.. இது இல்லையென்றால் தீட்டி விடுவார்கள்..
    * இந்தியாவுக்கு கொண்டு செல்ல Electronic பொருட்கள் வாங்கும்போது அது இந்தியாவில் என்ன விலை என்று தெரிந்து வாங்குங்கள்..உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட சில பொருட்கள் விலை அதிகம்.. இந்தியா புறப்பட ரெண்டு மாதங்களுக்கு முன் taxfreeயாக வாங்கலாம்.. பிரிக்கமுடியாதபடி சீல் செய்து தருவார்கள்.. இந்தியா எடுத்து வந்து உபயோகிக்கலாம்...

    * கல்லூரி மாணவர்களுக்கு: ஜெராக்ஸ் எடுப்பது, மாற்று சாவி செய்வது எனக்கு தெரிந்து ஸ்வீடன், பின்லாண்டு, நார்வேயில் ரொம்ப கஷ்டம்... பிரிட்டனில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.. அதனால் தயாராக இந்தியாவில் வாங்கி வந்து விடுங்கள் .. ஏனென்றால் புத்தகங்கள் விலை அதிகம்..

    * பிரிட்டன், scandinavia போல் இல்லை...ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் வந்தால், பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தது போல் இருக்கும்..பிரிட்டனில் possibilities அதிகம்..நவீன இந்தியா மாதிரி இருக்கும்..எல்லா பொருளும் கிடைக்கும்.. பொது இடங்களில் ஆண்-பெண் நெருக்கங்கள் ஸ்வீடனில் மிக அதிகம்..யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.. topless ஆகா குளிக்கவும் சட்டபடி முடியும்.. பிரிட்டனில் அப்படி இல்லை... முத்தமே சில நேரங்களில் தான் ... ஸ்வீடனில் என்னால் சொல்ல முடியவில்லை.. நான் சொல்ல வருவது என்னவென்றால்.. இதையெல்லாம் நீங்களும் கண்டு காணமல் இருக்க வேண்டும் என்பதே...staring is considered indecent .. (அப்ப அவங்க பண்றது என்னவாம்ன்னு கேக்காதீங்க..)

    * Pub களில் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிடுங்கள்..அதுக்கு மேல் அடியெடுத்து வைக்காதீர்கள்...சோக்காளியா இருந்தா சீக்காளியா ஆயிடுவீங்க..

    * கடைசியாக...இந்தியா வரும்போது, ஸீன் போடுவதை தவிர்த்து, நம் நாட்டில் இருக்கும் சிறப்புக்களை எண்ணி பாருங்கள்... இந்தியாவை அடிக்கடி compare செய்து எரிச்சலூட்டாதீர்கள்..  நண்பர்களுக்கு தண்ணி, தம் வாங்கி வருவதை விட ஷூக்கள், துணிகள் வாங்கி வந்து கொடுங்கள்... கண்டிப்பாக பெற்றோரை அழைத்து செல்லுங்கள்.."


    கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

    By: Unknown On: 06:51
  • Share The Gag
  • திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? 


    அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், 


    அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

    துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

    By: Unknown On: 06:51
  • Share The Gag
  • சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே. ஆயினும், துணியாலான சோஃபாக்களில் கிடைக்கக்கூடிய கதகதப்பு, அவற்றில் காணப்படும் விதவிதமான ரகங்கள் மற்றும் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதி போன்ற அம்சங்கள் துணிப் பிரியர்களின் மனதை வெகுவாக கவர்கின்றன.


    கிங் ஃபர்னிச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த உள்நாட்டு நாகரீக கலாச்சார நிபுணரான ட்ரையானா ஓடோன் கூறுகையில், துணியாலான சோஃபாக்களின் தேர்வு பெரும்பாலும் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவர்தம் வாழ்க்கை முறையைப் பொறுத்தே அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோஃபாவிற்கு ஏற்ற துணியை தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை, அதன் பராமரிப்பிலும் காட்ட வேண்டியது அவசியம்.



     1. துணியாலான சோஃபாக்களை சீரான இடைவெளிகளில் அப்ஹோல்ஸ்டரி இணைப்புடன் கூடிய குறைவான உறிஞ்சியை உபயோகித்து வாக்யூம் க்ளீனரினால் சுத்தப்படுத்த வேண்டும்.

    2. சோஃபாவில் தேன் சிந்தி விட்டாலோ அல்லது கறை பட்டு விட்டாலோ, அதனை உடனே துடைத்து விடுங்கள். ஏனெனில் இவ்வாறு படியும் கறைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், அவற்றை அகற்றுவது மிகவும் கடினம்.

    3. சாதாரண வீட்டு சுத்திகரிப்பு திரவங்கள் துணிகளை சேதப்படுத்தவோ அல்லது துணியை சாயம் போகவோ செய்துவிடும். அதனால், கறைகள் மற்றும் படிமங்களை அகற்றுவதற்கு கிங்-கேர் ஃபேப்ரிக் க்ளீனரை பயன்படுத்துங்கள். சோஃபா துணியில் காணப்படும் தகுந்த பராமரிப்பு முறைக்கான லேபிளை பார்க்கத் தவறாதீர்கள்.

    4. துணியை இழுத்தோ அல்லது கிழித்தோ சேதமாக்கி விடக்கூடிய வெல்க்ரோ மற்றும் வளையங்கள், பக்கிள்கள் போன்ற கூர்மையான பொருட்கள் சோஃபாவின் மீது படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

    5. அழுக்கு மற்றும் லூசாக இருக்கக்கூடிய நூலை அகற்றும் பொருட்டு, அடிக்கடி வாக்யூம் க்ளீனரை உபயோகிப்பதனால் வரக்கூடிய பில்லிங்கை தவிர்க்கப் பாருங்கள்.
    அப்படியே பில்லிங் நேரும் பட்சத்தில், அனைத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கக்கூடிய ஃபேப்ரிக் பில் ரிமூவர் உபயோகிப்பது, துணிக்கு பாதுகாப்பானது.

    6. துணியை வெளுக்க வைத்து, அதன் நூல்களை வலுவிழக்கச் செய்யக்கூடியதான நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து சோஃபாவை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    7. திரவம் ஏதேனும் மேற்புறத்தில் சிந்தினாலும், அது பரவாமல் உறிஞ்ச வழி வகை செய்து, துணியின் ஆயுளை நீட்டிக்கும் வகையில், சோஃபாவின் உருவாக்கத்தின் போதே அதன் துணியை பாதுகாக்க மெனக்கிடுங்கள்.

    8. சோஃபாவை நன்கு பராமரிக்க வேண்டுமெனில், வருடத்திற்கு ஒரு முறை அப்ஹோல்ஸ்ட்ரி க்ளீனர் ஒருவரைக் கொண்டு தொழில்முறையிலான சுத்திகரிப்பை மேற்கொள்வது அவசியம்.

    திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

    By: Unknown On: 06:50
  • Share The Gag
  • திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
    ஒருவர் இன்னொருவரிடம்
    பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
    தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
    அரிசி, நெல் முதலானவற்றை
    கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.




    பணமாயிருந்தால் தட்டு.
    இது எதனாலென்றால்,
    கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
    மேல்கீழாய் இருந்தாலும்
    அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.




    வெறுமனே கையால் கொடுத்தால்,
    கொடுப்பவர்கை மேலும்
    வாங்குபவர்கை கீழுமிருக்கும்.



    இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
    நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
    எப்பொருளை கொடுத்தாலும்
    தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர்
    நம் முன்னோர்கள்.



    இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
    # அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
    கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.