Tuesday 10 December 2013

உயர்ந்த பெண்ணின் உன்னதமான கடமைகள்!

By: Unknown On: 23:21
  • Share The Gag

  • உயர்ந்த பெண்ணின் உன்னதமான  கடமைகள்

    பெண்கள் சிருஷ்டியில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே சக்தியின் வடிவங்கள். உலக இயக்கம் பெண்களாலேயே நடைபெற்று நிலை பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம் பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளாய் இன்னும் பல வகைகளில் உறவு உடையவளாகி நலம் செய்கிறாள்.


    சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாகச் செய்கிறாள். குடும்பம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குடும்பத் தலைவியின் கையில்தான் இருக்கிறது. கணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை அமைத்துக் கொள்ளும் பெண் வாழ்க்கையில் வெற்றி அடைகிறாள். கணவனை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோ அல்லது வேதனையில் ஆழ்த்துவதோ மனைவியின் கையில்தான் இருக்கிறது. நல்ல மனைவி எண்ணத்தால் கூட கணவனை விட்டு விலகி இருக்கக் கூடாது. மனித வாழ்வின் மகத்துவம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதிலேதான் இருக்கிறது. விட்டுக் கொடுத்தல் எனும் பண்பு குடும்ப வாழ்விற்கு மிகவும் முக்கியமானது என்பதை மனைவியே உணர வேண்டும். மேலும்,


    பெண்கள் எப்பொழுதும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.


    பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கத் துணிவு கொள்ள வேண்டும்.


    பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையில் திருவிளக்கேற்றி வைக்க வேண்டும்.


    பெண்கள் இரவில் விளக்கு வைத்தபின்பு அழக்கூடாது.


    திருமணமான பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.


    சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமத் திலகமிட்டுக் கொள்வது அவசியம்.


    வீட்டிற்கு யாரும் சுமங்கலிகள் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள் இவற்றுடன் குங்குமமும் கொடுக்க வேண்டும்.

    உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

    By: Unknown On: 22:54
  • Share The Gag



  • இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.


    இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்தி கூடும். மேலும் வாஸ்து மற்றும் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ்களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமையாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்...


    1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக் கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீயசக்திகளின் நுழைவாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.


    2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.


    3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.


    4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.


    5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.


    6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.


    7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.


    8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.


    9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.


    10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.


    11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்


    12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.


    13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.


    14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

    முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

    By: Unknown On: 22:45
  • Share The Gag

  • * வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

    * தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

    * முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

    * ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

    * கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

    * வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

    * முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

    * சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உ<ள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

    * தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்

    இயேசுவின் மொழிகள்!

    By: Unknown On: 22:38
  • Share The Gag
  • மனிதனை மாசுபடுத்துபவை

    மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.


    ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


    ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

    இம்மையில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.

    பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.

    மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியை தேவன் அளிப்பார்.

    மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.

    தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருபார்கள்.

    அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.

    நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுக்குரியது.

    உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும் பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய வெகுமதி உங்களுக்கு காத்திருக்கிறது.


    தட்டுங்கள் திறக்கப்படும்


    தொடர்ந்து கேட்டுக் கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டறிவீர்கள். தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக் கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.


    அனைவரையும் நேசியுங்கள்


    உங்களை நேசிக்கிறவர்களை மட்டும் நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களை விட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.


    மெய்வாழ்வுக்கான வாசல்


    பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில், நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கு வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டறிகிறார்கள்.

    இசை எனும் இன்பம் - கட்டுரை!

    By: Unknown On: 22:24
  • Share The Gag
  •  "கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம், பழி பாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கவிஞர் தாகூர்.


    இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழ்க்கு முன்னும், இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது. ஒசையும் நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிப்பது இசை. இசை மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது - கோபதாபங்களைத் தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களைத் தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது.


    -என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.


    இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது. இசை மூலம் இறைவனை அடையலாம் என்று நிருபித்தவர்கள் நம் பெரியோர்கள். சங்க காலம், தொல்காப்பிய காலம் அதற்கு பின் வேத காலம்; இடைக்காலம் என்றெல்லாம் வரலாற்று காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டுகின்றன. இசை மக்களுக்குக் காலம் காலமாக பண்பாட்டுக் காவல் கருவியாக ஆன்மீக உணர்வு - சமய நெறி - கோவில் வழிபாடு, நாட்டியம், மொழி உணர்வு என்று இருந்து வருகிறது. தமிழ் இசை வளர்ச்சி அடைந்தால் தமிழ்ப் பண்பாடும் வளர்ச்சியும் அடையும்.


    தமிழ் மூன்று வகை -  இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

    இயற்றமிழ்- சத்து,  இசைத்தமிழ் - சித்து,  நாடகத்தமிழ்- ஆனந்தம் என்பார்கள்.

    இசைத் தமிழின் ஏற்றம்

    முத்தமிழ் வித்தகத்தில் இசை நடுநாயகமாகத் திகழ்கிறது.

    "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே "    - என்கிறார் அப்பர் பெருமான்.

    ஒசையிலிருந்து உலகம் உண்டாயிற்று என்று ஞானநூல் கூறுகிறது.

    ஆட வல்லானுடைய திருக்கரத்தில் விளங்கும் உடுக்கையின் ஓசையில் உலகம் தோன்றியது.



    "தோற்றந் துடியதனில்" - உண்மை விளக்கம்.
    எங்கும் நீர்மயமாகி எல்லாம் ஒடுங்கியபோது சிவபெருமான் வீணை வாசித்து மீளவும் உலகத்தை மலரச் செய்தார் என்று அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்:



    ''பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
    இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
    கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
    வருங்கடல் மீளன் றெம்மிறை நல்விணை வாசிக்குமே "



    நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று திருஞான சம்பந்தனார் .


    " வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்
    உளமே புகுந்தவதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
    சனி பாம்பிரண்டுமுடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே "



    இறைவனை வேண்டித் தவஞ் செய்து அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தவர்கள் குண்டலமாகிச் சிவமூர்த்தியின் செவிகளில் அகலமாக இருந்து கொண்டு, இடையறாது இசைபாடி இறைவனை மகிழ்விக்கின்றார்கள்.


    யாழ் வாசித்து உதயணன் மதயானையை அடக்கினான் என்று உதயண காவியம் கூறுகின்றது.


    குழந்தையும், பாம்பும், பசுவும் இசை கேட்டுத் தம்மை மறந்து விடுகின்றன.


    உண்மையான இன்பம்



    இன்பத்தை விரும்பாத உயிர்களே இல்லை. எல்லா மதத்தவரும், எல்லாத் தேசத்தவரும் எல்லாக் காலத்தவரும், எல்லாக் கட்சியினரும் இன்பத்தை விரும்புகிறார்கள். எனக்குத் துன்பம் வேண்டும் என்று, எங்காவது, எவரேனும் கூறுகிறார்களா ? இன்பத்தை அடைந்தவர்கள் கோடிக்கொருவரும் இலர். ஏன்? இன்பத்தை விரும்புகிறார்களே அன்றி இன்பத்தைப் பெறும் வழியைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர் இல்லை.


    நம்மில் அநேகர் பொருளால் இன்பம் வரும் என்று பிழையாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பொருள் தேடி வாடி வருந்தி ஓடி அலைந்து உழன்று இன்பத்தைப் பெறாது துன்புற்று மாய்கிறார்கள். பெருந்தனம் படைத்தவர்கள் அல்லும் பகலும் துன்புற்று துடிப்பதைக் கண் கூடாகப் பார்க்கின்றோம். ஆதலால் பொன்னால் பொருளால் இன்பம் இல்லை. விளக்கைக் கனியெனக் கருதி அதில் வீழ்ந்து மாயும் மாந்தர் பலர் துன்புறுவதை எங்கும் காண்கிறோம்.


    "மதலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளுந் துன்பம்
    விதலை நோயடையில் துன்பம் வியன் பருவத்துந் துன்பம்
    கதமுறு காவர் வந்து கைப்பற்றில் கணக்கில் துன்பம்
    இதமுறு பாலர் தம்மால் எந்நாளுந் துன்பமாகும்...     - குசேல உபாக்யானம் .



    "மனைமக்கள் சுற்றம் என்னும் மாயா
    வலையைக்க அறியாதே
    வினையிற் செருக்கியடி நாயேன்
    விழலுக்கிறைத்து விடலாமே'.."        - திருப்புகழ்



    "கற்பகமரத்தின் கீழ்வாழும் பெருஞ்சுகத்தை விரும்பி நான் பெருந்துன்பம் அடைந்தேன் " என்று இந்திரனுடைய புதல்வன் ஆன்றான்.


    "தண்டேன் துளிக்குந் தருழற்கீழ் வாழ்க்கை வெஃகிக்
    கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோது என்றே கண்டேன்"



    ஆதலால் பொன்னாலும், பொருளாலும், நிலபுலங்களாலும் சுகமில்லை என்பது உண்மை. எங்கே, எதனால் இன்பம் எய்தும்? எங்கே மனம் ஒடுங்குகின்றதோ, அங்கேதான் இன்பம் விளைகின்றது.


    மனம் அடங்க இசை


    மனம் அடங்கியிருக்கும் இடம் சுகம் ஆரம்பம். இந்தச் சுகத்தை மறைகள் எல்லாம் முழங்குகிறது.


    "சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று கருதியெல்லாம்
    அம்மா நிரந்தரஞ் சொல்லவும் கேட்கும் அறிவின்றியே
    பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
    வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
    சும்மா இருக்குள் சுகம்...."                     - வள்ளலார்.



    இனிச் சும்மா இருப்பதாகிய மனம் அடங்கும் நிலை எவ்வாறு உண்டாகும் என்று சிந்திப்போம்.



    பேய் மனம் எளிதில் அடங்காது, ஒடுங்காது. எண்ணில்லாத காலமாக அலைந்து அலைந்து, அதன் கொட்டத்தை அடக்குவது மிகவும் கடினம். வடநாட்டில் மனம் அடங்கக் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை சில துறவிகள் கையாளுகின்றார்கள். நமது தென்னாட்டில் மனம் அடங்கக் கண்டு பிடித்த வழி இசைப் பாடலேயாகும்.


    சங்கீதம் தெரிந்தவர் தம்பூராவை மீட்டிப் பாட்டினால் கேட்டவர்கள் மனம் அப்படியே ஒருமைப்பாட்டை அடைந்து விடுகின்றது. சங்கீதத்தின் மூலம், இசை மூலம் பக்தி என்பது இறைவனோடு நம்மை இணைப்பதுடன் மனிதர்க்கு ஏற்படும் நோய்களையும் குறைபாட்டையும் இறைவன் அருளால் அகற்றிடும் மாமருந்தாகவும் திகழ்கிறது. பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்களோ அல்ல. அதற்கென்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சாஸ்திர விதிகளின்படி ஒரு சித்த புருஷன், ஒரு யோகி முயற்சி செய்தால் இசையின் வாயிலாகப் பிணிகள் அகற்றும் சாத்தியமுண்டு.


    1 ) கல்யாணி, வாசந்தி, கோசலம், அனுமத்தோடி, சிவரஞ்சனி, புராகாகிய இராகங்கள் பிரகிருதி தத்துவத்தின் மாசுபடாத தொனியாகக் கொண்டவை.


    2 ) நீலாம்பரி ராகம் சுகமான நித்திரை தரும்.



    3 ) ஸ்ரீராகம் நல்ல ஜீரண சக்தியைத் தரும்.



    4 ) சாமா மன உளைச்சலை தடுக்கும்.



    சங்கீத சிகிச்சையும் ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது. எனவே இனிய நாதம் மருந்தாக, ஓடி அலையும் மனத்தை ஒடுங்கச் செய்யும் பேராற்றலையுடையது. இசை உயிரையும் உய்விக்கும்; பயிரையும் வளர்க்கும். கயிலை மலையைப் பேர்த்த இராவணன் இசையால் பாடி உய்வு பெற்றான். நாயன்மார்கள், ஆழ்வார்கள் நாளும் இன்னிசையால் தமிழை வளர்த்தார்கள். தமிழ் வேதப் பாடல்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் இசைத்து வாசித்து உலகுக்கு இன்பத்தை வழங்கினார். [தமிழ் நாடு, ப.தண்டபாணியின் 'திராவிட இசை' என்ற குறிப்பிலிருந்து...]


    இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் திராவிட இசையினின்று தோன்றியவையே. தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன் கொண்டு சென்றனர். எனினும் அந்தந்தப்பகுதிகளின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்ப அது சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்துள்ளது எனக் கூறவேண்டும்.


     ச ரி க ம ப த


    இப்புவியெங்கும் வழங்கிவரும் இசைமுறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை ச, ரி, க, ம, ப, த என்னும் ஏழு சுரங்களே. இவற்றை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே. தமிழர்கள் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி.விளா தாரம் என்றழைத்த ஏழு இசை ஒலிகளுக்கும் முதலில் ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துகளைக் குறிகளாக வைத்தனர். காலப்போக்கில் அந்த ஏழு இசை ஒலிகளுக்கும் பொருத்தமான தமிழ் எழுத்துகளாகிய ச, ரி, க, ம, ப, த என்பனவற்றைக் குறியீடுகளாகத் தமிழர்கள் மாற்றியமைத்தார்கள். வாய்ப்பாட்டுக்கு மட்டுமல்லாது இசைக்கருவிளை வாசிக்கக்கூடத் தமிழர்கள் பின்னர் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அப்போது ஏற்பட்டவையே ச, ரி, க, ம, ப, த, என்னும் ஏழு தமிழ் குறியீடுகள். இது குறித்து சிகண்டி என்னும் முனிவரால் பண்டை நாளில் இயற்றப் பட்டுள்ள தமிழ் வெண்பா பின் வருமாறு எடுத்தியம்புகிறது.


    முற்காலத்தில் இசை வழங்கிய எல்லாக் குழற் கருவிகளுக்கும் 'வங்கியம்' என்னும் பொதுப் பெயர் உண்டு. வங்கியத்தின் ஏழு துளைகளிலிருந்தும் இசை பிறக்கும் பொழுது அது எழுத்தால் பிறக்கும். ச, ரி, க, ம, ப, த என்பன அந்த எழுத்துகள். அந்த ஏழு எழுத்துகளையும் மாத்திரை குறையாது வாசித்தால் அவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்


    குழலும் யாழும்.


    இன்று இசைக்குத் தாரச் சுருதியைக் கூட்டும் தம்புராவைப் பற்றி " கல்லாட்டம்" என்னும் பழைய பழந்தமிழ் இலக்கிய நூலில்தான் முதன் முதலில் தம்புராவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


    யாழ்களில் தும்புரு யாழ் என்று ஒரு வகை யாழ் முன்னால் தமிழகத்தில் இருந்தது. அதுவே பிற்காலச் சுருதிக் கருவிக்கு அடிப்படையாகும். அந்தத் "தும்புரு" என்னும் தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழியில் தம்புரா எனத் திரிந்து வழங்கப்பட்டது. குழலும் யாழும் இசைக் கருவிகளில் முதன்மையானவை. முதன்முதலாகக் குழல் வசித்தவர் குமாரக் கடவுள்.


    " குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் "   - திருமுருகாற்றுப்படை.



    முதன்முதலாக யாழ் வாசித்தவர் சிவபெருமான். இதற்கு "வீணா தட்சிணாமூர்த்தியே" சான்று.



    "குழலினிது யாழ் இனிது என்ப" என்கிறார் திருவள்ளுவர்.



    இறைவனை நமது தாய்மொழியால் பாடித் துதிப்பது மிகவும் சிறந்தது. பொருள் தெரிந்து பாடுகின்ற போது மனம் ஒன்றுகின்றது.


    இனிமையும் நீர்மையும் தமிழாகும்.மொழிகளில் சிறந்த மொழி தமிழ், ஏனைய மொழிகள் கனமானவை. தமிழ் இலகுவான மொழி. கனமான உடம்புடையவனும் மென்மையான உடம்புடைவனும் நடக்கத் தொடங்கினால் பருத்த உடம்புடையவன் பிந்துவான்; மென்மையுள்ளவன் முந்துவான். வன்மையான பிற மொழிகள் பிந்தும், மென்மையான தமிழ் முந்தும். அதனாலே,


     " முந்து தமிழ்மாலை கோடிக்கோடி " -என்கிறார் அருணகிரி சுவாமிகள்


    இறைவனுடைய செவியில் முந்திச் சென்று சேரும் மொழி தமிழ். அது இனிய மொழி. என்றுமுள்ள இளந்தமிழ், சாவாதது; மூவாதது, தேவாமிர்தம் போன்ற தித்திக்கும் மொழி. சித்திக்கும் முத்திக்கும் உரியது தமிழ். தேவாரம் முதலிய திருமுறைகளும், திருப்புகழ் தமிழ்மறைகளும் இசைமயமானவை. அகத்திய முனிவருடைய சீடர் பன்னிருவர்களில் ஒருவரான சிகண்டி முனிவர் 'இசை நுணுக்கம்' என்ற நூலைத் தந்தவர்.

    மனம் அடங்க - மனம் நிலை பெற , இசை எனும் இன்பத்தில் நாமும் மயங்கி மகிழ்வோம்.

    வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு...

    By: Unknown On: 22:11
  • Share The Gag



  •  நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.


    வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.


    வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.


    வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.


    தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

    குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்!"

    By: Unknown On: 21:53
  • Share The Gag



  •  மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.


    மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.


    மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.


    ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.


    மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..


    ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.

    உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!

    By: Unknown On: 21:43
  • Share The Gag



  • உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்


    10). மெக்ஸிக்கோ:


    பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும்.

    9). ஸ்பெயின்

     இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும்.

    8). கனடா:


    கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் 2.3% ஆகும்.

    7). இத்தாலி:

    இந்த நாட்டின் $ 1.120.000.000.000 GNI அளவு மற்றும் 3.7% என்ற GNI தொகை சதவீத $ 1.844.749.000.000 கொண்டிருக்கிறது.

    6). சீனா:

    GNI தொகை $ 1.130.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI அளவு விகிதம் சதவீதம் 3.8% ஆக $ 2.668.071.000.000 உள்ளது.

    5). பிரான்ஸ்:

    பிரான்ஸ் GNI தொகை $ 1.380.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4.6% ஆக GNI தொகை சதவீத $ 2.230.721.000.000 உள்ளது.

    4). ஐக்கிய ராஜ்யம்


     நான்காவது பணக்கார நாடு $ 1.480.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 2.345.015.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பிரிட்டன் உள்ளது மற்றும் GNI தொகை சதவீதம் 4.9% ஆகும்.

    3). ஜெர்மனி:


    GNI தொகை வீதம் $ 1.940.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு விகிதம் ஜெர்மனி $ 2.906.681.000.000 மற்றும் GNI சதவீதத்தில் 6.5% ஆகும்.

    2). ஜப்பான்:

    இந்த $ 4.520.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 4.340.133.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு இரண்டாவது பணக்கார நாடு உள்ளது மற்றும் GNI சதவீதம் 15.1% ஆகும்

    1). ஐக்கிய அமெரிக்கா


    GNI தொகை $ 9.780.000.000.000 மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 13.201.820.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் கூட மற்ற நாடுகளில், அதாவது, 32,7% ஆகும் அனைத்து பிற நாடுகளில் பணக்கார நாடாக உள்ளது.

    உங்கள் சமையல் அறையில் இருக்கிறது ஆண்மையே அதிகரிக்கும் பொருள்கள் !!

    By: Unknown On: 21:32
  • Share The Gag



  • வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

    உணவே மருந்து


     பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் போல் வாசனைப் பொருட்களின் மகத்துவத்தை அறியா மல் நாம் அதனை கறிவேப்பிலை போலவே பயன்படுத்தி வருகிறோம்.

    விவரம் அறிந்தவர்களைக் கேட்டால் அவற் றில் உள்ள பல விஷயங்கள் புரியவரும். அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப் போம்.

    பெருங்காயம்

     ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.

    ஏலக்காய்


     ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.

    ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.

    மிளகு

     மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

    லவங்கம்

     லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.

    பூண்டு


     பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    இஞ்சி

     இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.

    சாதிக்காய்


     சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின் றனர்.

    ஓமம்

     உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.

    வெங்காயம் , முருங்கை , பாதாம்

     இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

    பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.

    இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.

    உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

    By: Unknown On: 21:19
  • Share The Gag



  • கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.


    தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?


    சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.


    பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்


     ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.


    மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.


    மிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.


    காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.


    கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்


     கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்


     சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.


    நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.


    வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.


    ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.


    பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.


    பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.


    தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.


    சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.


    குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.


    ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.


    நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.


    தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.


    கம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.


    இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.


    சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.


    தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.


    கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.


    ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.


    முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.


    விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

    பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு

    By: Unknown On: 21:00
  • Share The Gag

  •  ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரைவாகவும் பல்திறனுடன் செயற்படக்கூடியது எனவும் பென்சில்வேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.


    பென்சில்வேனியாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு நுணுக்கமாக ஆராயப்பட்டது. ஒவ்வொருவரும் தொழிலில் ஈடுபடும்போது, பயணம் செய்யும்போது, நித்திரையின்போது என பல சந்தர்ப்பங்களில் எவ்வாறு இயங்குகிறார்கள், எதைச் சிந்திக்கிறார்கள் என்பவை கவனத்தில் கொள்ளப்பட்டன.


    அதனடிப்படையில் பெண்களின் மூளை சிறப்பாக செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    குறிப்பாக எப்போதோ சந்தித்தவர்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கும்போது மூளையின் இயக்கம் பெண்களுக்கே திறனாக இயங்குவதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


    ஆண்கள் ஒரு விடயத்தில் கவனம் எடுத்துச் செயற்படுகையில் மூளை சிறப்பாக இயங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்திறனுடன் செயற்படும் வகையில் பெண்களின் மூளையே இயங்குகிறது.


    உதாரணமாக நெரிசல் மிக்க நேரத்தில் குறைவான இடவசதியின்போது வாகனமொன்றை பின்னோக்கி செலுத்திவந்து சரியாக நிறுத்துவதற்கு மூளை பல்திறனுடன் செயற்பட வேண்டி ஏற்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பெண்கள் நிதானமாகவும் அதிக கவனத்துடன் செயற்படுவதற்கு மூளையின் இயக்கமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

    அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!

    By: Unknown On: 20:50
  • Share The Gag

  • காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...

    காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...

    கையை அறுத்துக்குங்க அதுவும்

     தப்பு இல்லை....

    ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....


    ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க


     தகுதியானவங்களா இருக்கணும்...!



    தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க

     உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும்

     முட்டாள் தனம்..

    அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்

     பண்ணாதிங்க...

    ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த

     காதலே அர்த்தமற்றதாகி விடும்.

    அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.

    பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான்

     காதல்...

    ஒருத்தங்களுக்குபிடிச்சிருந்தா அது வெறும் நேசம்

     நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க.

    நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்

     சிறகடிச்சுப் பறக்காம

     நடைமுறைக்கு சாத்தியமானதான்னு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.

    உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள நீங்கள்

     வருத்தி வாழுறத விட உங்கள பிடிச்சவங்களுக்காக

     உங்க தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க

     அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!

    அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

    இஞ்சிப் பால்..!

    By: Unknown On: 20:36
  • Share The Gag


  • கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.


    ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

    ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.


    அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.


    அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?


    1. நுரையீரல் சுத்தமாகும்.

    2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

    3. வாயுத் தொல்லை என்பதே வராது.

    4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

    5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

    6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

    7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

    8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

    9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

    10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

    அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

    3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

    ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.


    மீதிப்பேர் சாப்பிடலாம்.

    என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

    முதலமைச்சர் கணினித் தமிழ் விருது!

    By: Unknown On: 20:09
  • Share The Gag



  • வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ஏற்கனவே அறிவித்திருந்தார்.


    இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். 2013ஆம் ஆண்டிற்கான விருது எதிர்வரும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று (14.4.2014) வழங்கப்படவுள்ளது.


    போட்டிக்குரிய மென்பொருள்கள் 2010, 2011, 2012ஆம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2013-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


    விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரும் 31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!

    By: Unknown On: 19:49
  • Share The Gag

  • -
    “நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர்
     சொன்னா  கோபப்படுறியே   ஏன்?”
    -
    அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு
     கேலி பண்ணுவாங்கடா…!!
    -



    -
    “தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா
    “யாரு   இவர்?”
    -
    டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!
    -


    -
    நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம
     விட்டு வெச்சிருக்கே?”
    -
    “சார்! அது வாயில்லா பிராணி சார்!.”
    -


    -
    “நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு
     பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி
     கேட்டாங்க?”
    -
    “ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!!





    ” புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் நஷ்டமா
     போச்சா…ஏண்டி?
    -
    ” கை ரொம்ப நீளமா இருந்த நான்  பூ வியாபாரம்
     செஞ்சு தொலைச்சிட்டேன்…!!

    முஸ்லிம் இளவரசியாக அனுஷ்கா!

    By: Unknown On: 19:33
  • Share The Gag




  • அனுஷ்கா தற்போது 'ருத்ரம்மாதேவி', 'பாகுபாலி' படங்களில் நடித்து வருகிறார்.


    இந்தப் படங்களுக்காக பழங்கால சண்டைப் பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


    இந்த நிலையில், மேலும் சில தெலுங்குப்பட இயக்குனர்களும் சரித்திரக் கதைகளை தயார் செய்து கொண்டு அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


    அப்படி சில கதைகளை கேட்டு வைத்திருக்கும் அனுஷ்கா, ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வரும 'பாகுபாலி'யை முடித்ததும், 16ம் நூற்றாண்டு கதை ஒன்றில் நடிக்கிறார்.


    கோல்கொண்டா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த முகமது ஹூலி ஹூதுப் ஷா என்ற முஸ்லிம் மன்னனின் மனைவியைப்பற்றிய கதையில் அப்படம் உருவாகிறது.


    'பாஹ்மதி' என்று பெயர் வைத்திருக்கும் அப்படத்துக்காக முஸ்லிம் இளவரசியாக மாறுகிறார் அனுஷ்கா.

    அஜித் படத்துக்கு 1800 தியேட்டர்களா? குமுறும் தயாரிப்பாளர்கள்!

    By: Unknown On: 18:59
  • Share The Gag



  • அஜித்தின் 'வீரம்' படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின்  தயாரிப்பாளர்கள்.


    எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது? இதுதான் அவர்கள் கேட்கிற கேள்வி.


    படத்தை வெளியிடுவதும், எத்தனை தியேட்டர்களில் வெளியிடுகிறோம் என்பதும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் நமக்கென்ன பிரச்சனை என்று அமைதிகாக்க ஆரம்பித்துவிட்டார் அஜித்.


    'வீரம்' படத்திற்கு 1800 தியேட்டர்கள் என்றால் ஜில்லாவுக்கு? விஜய்க்கு நெருக்கமானவர்கள்.இப்படியொரு கேள்வியை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .


    ஒரு நாளுக்கு மட்டும்தான் இந்த 1800. ஒரு நாள் தள்ளி வெளியிடப்படும் 'ஜில்லா'வுக்கு அதில் பாதியை ஒதுக்கித் தந்துவிடுவார்களாம். கேட்டால் இதுவும் பெரிய பட்ஜெட் படமாச்சே என்கிறார்கள்.

    ஆலு வெந்தயக்கீரை தோசை - சமையல்!

    By: Unknown On: 18:42
  • Share The Gag






  • தேவையானவை:


    தோசைக்கான மாவுக்கு:


     இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப்,

     உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன்,

     உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - தேவையான அளவு.


    உருளைக்கிழங்கு மசாலுக்கு:


    சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ,

    தக்காளி - 1,

    வெங்காயத் தாள் - 1 செடி,

    பெரிய வெங்காயம் - 1,

    வெந்தயக்கீரை - 1 கட்டு,

     மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்,

    தூள் உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - 6 டீஸ்பூன்,

    வெண்ணெய் - 1 பாக்கெட்.


    செய்முறை:


    இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).



    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும்.


     வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.


    பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.


    வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.

    வெல்ல தோசை - சமையல்!

    By: Unknown On: 18:29
  • Share The Gag



  • தேவையானவை:


    கோதுமை மாவு - 2 கப்,


    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,


    பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்),


    தேங்காய் (துருவியது) - கால் மூடி,


    ஏலக்காய் - 4,


    எண்ணெய் - தேவையான அளவு.


    செய்முறை:


     ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.


     பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.


    தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    “மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!

    By: Unknown On: 18:13
  • Share The Gag

  • 1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…
    -
    டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும்
     தெரியலையே!
    -

    -
    2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”
    -
    “”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும்
     இல்ல… அதுதான் தகராறு..!
    -


    -
    3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில
     பிளேடு வெச்சுருக்கார்?
    -
    சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா
     அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!
    -



    4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?”
    -
    “”ஒரு மலை வேணும் சார்!”
    -



    5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?
    -
    மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!
    -



    6. “”பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம்
     உனக்கில்லை அப்பா!”

    -
    “”ஏண்டா அப்படிச் சொல்றே?”

    -
    “”பின்னே! அவன் அப்பா ஆபீஸிலிருந்து முழு பென்சில்
     கொண்டு வந்து அவனுக்குத் தர்றாரு. நீ துண்டுப்
     பென்சில்களையே தூக்கிக்கிட்டு வர்றே!”

    சிந்தனை சிதறல்கள்!

    By: Unknown On: 18:00
  • Share The Gag



  • மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!

    -

    மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்

    -

    மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!

    -

    மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

    -

    மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?

    -

    வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

    -

    வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்

    -

    அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு

    -

    மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது

    -

    முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா!

    கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?

    By: Unknown On: 17:46
  • Share The Gag


  • கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


    அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


    சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.



    வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


    ‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


    பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும்.

    பெண்களின் காதல் அழகு தான்!

    By: Unknown On: 17:33
  • Share The Gag

  • ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது
     தனக்கு பிடிக்காததை பேசினாலும்...


    ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே
     திரு திரு என முழிப்பது...


    தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய்
     அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...


    வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல்
     காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ...


    இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ...


    ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய் பேசுவது ...


    அவனோடு வேறொரு பெண் பேசினால் அதை நினைத்து தனிமையில் தானாய் பேசிக்கொள்வது


     பேசாமல் இருந்தவள்...பேசியே கொல்வது ...


    அவனை தூங்காமல் செய்துவிட்டு...தான் நிம்மதியாய்
     தூங்குவது ....


    தன்னை மடி சாய்த்து நெற்றியில் ஒரு முத்தம் வேண்டுவது ....


    போதும்..போதும்...


    எல்லாமே அழகு தான்...


    ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

    உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

    By: Unknown On: 17:22
  • Share The Gag



  • நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.


    Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும்


     சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்


    1.முதலில் இங்கு சென்று Virtual Router http://virtualrouter.codeplex.com/  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.


    2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்


     அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
    Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்


    3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

    தோல்வியே வெற்றி!

    By: Unknown On: 17:11
  • Share The Gag

  • கலகமில்லா உலகமில்லை
     ரத்தமில்லா யுத்தமில்லை
     தோல்வியில்லா வெற்றியில்லை


    நண்பனே!


    உனக்குத் தோல்வியே வந்தாலும்
     தொடர்ந்து நீ போராடு
     நீயும் ஒரு நாள்
     வெற்றி பெறுவாய்


    உனது வெற்றியின் வாசல் கதவுகள்
     உனக்கென கண்டிப்பாக திறக்கும்.
    தொடர்ந்து நீ போராடு
     உனது வெற்றி தொடர போராடு

    வெற்றி பெற்றவர்களின் தனித் தன்மைகள்!

    By: Unknown On: 16:47
  • Share The Gag
  •    
    வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்


    இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.


    அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.


    இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களை துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவை :


    1.) நடைமுறை அறிவு


    சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள். நடைமுறை அறிவு தேவை என்பதையும் அறிந்து இருந்தார்கள். அதில் 61 விழுக்காட்டினார் நடைமுறை அறிவுதான் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதைனையும் அறிந்து இருந்தார்கள்.


    2.) தான் மேற்கொண்ட துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல்:


    நடைமுறை அறிவுக்கு அடுத்த இடத்தை பெறுவது ஒருவர் தான் எடுத்துக் கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுவதாகும். சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதனை முக்கியப் பண்பாகக் கருதுகின்றனர்.


    3.) தன்னம்பிக்கை :



    மிகச் சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான் தங்கள் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.


    4.) புத்திசாலித்தனம் :


    வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம் முக்கியம் என 43 விழுக்காட்டினர் கூறினர். 52 விழுக்காட்டினர் புத்திசாலித்தனம் தான் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டனர்.


    5.) எடுத்த செயலை முடிக்கும் திறன் :


    நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை முடிக்கும் தங்களின் தனித் திறனே காரணம் என்று குறிப்பிட்டனர்.


    வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் உண்மையாகவும் கடினமாகவும் தொடர்ந்தும் விடாப்பிடடியாகவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்கிறார் ஒரு பேராசியர்.


    நடைமுறை அறிவு, தொழில் துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகள் மட்டுமின்றி, தலைமைத் தன்மை, ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன், மற்ற மனிதர்களோடு நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கமான உறவு, சில வேளைகளில் சிறிது அதிஷ்டமும் தேவையானவையாகும்.


    இருப்பினும் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து பண்புகளுக்கு சாதனை நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.

    நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை!

    By: Unknown On: 16:37
  • Share The Gag

  • உறுதியான நம்பிக்கை, 


    நம்பிக்கை, 


    எதிர்பார்ப்புடன் நம்பிக்கை


    இந்த மூன்று வார்த்தைகளையும் அவதானித்தால் மூன்றிலையுமே
    கூறப்படுவது ஒன்றை தான் அது நம்பிக்கை. ஆங்கிலத்தில் இந்த
    மூன்றையும் வெவ்வேறு வார்த்தைகளினால் விவரிக்கபடுகிறது.

    Confidence, 

    Trust

     and Hope.



    ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் வறட்சியால்
    வாடினார்கள் அவர்கள் மழைக்காக பிரார்த்திப்பதாக முடிவு
    செய்தார்கள். அப்போது அங்கு ஒரு சிறு பையன் குடையோடு
    வந்தான். இது அவனது உறுதியான நம்பிக்கை (Confidence).



    சிலர் சிறு குழந்தையை கொஞ்சும் போது தூக்கி போட்டு பிடித்து
    விளையாடுவார்கள். அப்போதும் அந்த குழந்தை சிரித்து கொண்டே
    இருக்கும். நீங்கள் கீழே விட மாட்டிர்கள் என்ற நம்பிக்கை.
    இது அந்த சிறு குழந்தை உங்கள் மேல் கொண்ட நம்பிக்கை (Trust).



    ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் பொது காலையில்
    மீண்டும் கண் விழிப்போமா என்று நமக்குதெரியாது. இருப்பினும்
    விழிப்போம் என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் செய்ய வேண்டிய
    வேலைகளை நினைக்கிறோம் இது எதிர்பார்ப்புடன் நம்பிக்கை (Hope).

    நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!

    By: Unknown On: 08:02
  • Share The Gag

  • ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
     


    அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.


    அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.


    ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.


    ஒருநாள்...


    அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.


    தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.


    அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


    பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.


    நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.


    ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
     


    உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
     


    1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
     


    2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
     


    3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
     
     

    4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

    அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

    By: Unknown On: 07:52
  • Share The Gag


  • அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


    1 ஏங்க எங்க போறீங்க?

    2 யார்கூடப் போறீங்க?

    3 ஏன் போறீங்க?

    4 எப்படி போறீங்க?

    5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

    6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?

    7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

    8 நானும் உங்ககூட வரட்டுமா?

    9 எப்ப திரும்ப வருவீங்க?

    10 எங்க சாப்பிடுவீஙக?

    11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

    12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

    13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

    14 பதில் சொல்லுங்க ஏன்?

    15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

    16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

    17 நான் அனி திரும்ப வரமாடடேன்

    18 ஏன் பேசாம இருக்கீங்க ?

    19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?

    20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?

    21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

    22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


    இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????

    ஆசிரியரும் நானும்!

    By: Unknown On: 07:37
  • Share The Gag

  •   ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியாமலில்லை.   தன் ஆசிரியரை போலவே தானும் ஆசிரியன் ஆகவேண்டும் என்று  ஈர்க்கப்பட்டு தாங்களும் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து செம்மையாக பணியாற்றிவரும் மாணவர்கள் இப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


        ஆனாலும்  நான் என்றுமே ஒரு ஆசிரியனாக ஆகவேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் அண்ணன் என்னை ஆசிரியருக்கான படிப்பு படி, நீ விரைவில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்  என்று என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும்  நான் ஆசிரியராகிவிடக் கூடாது  என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.  இவ்வளவிற்கும்,   மற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதிலும் அவர்களின் வினாவிற்கு விடை அளிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.  இப்படி கற்பித்தலில் ஆர்வம் இருந்தும் ஆசிரியர் பணி ஏன் என்னை ஈர்க்கவில்லை?.  இவை எல்லாவற்றிற்கும்  ஆசிரியர்களில் மேல் எனக்கிருந்த வெறுப்புதான் காரணம். என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் சரி, கல்லூரி வாழ்க்கையிலும் சரி ஒரு உண்மையான ஆசிரியருக்கான குணங்களைக் கொண்ட ஆசிரியர் ஒருவரைக்கூட நான் சந்திக்கவே   இல்லை என்பதுதான்  இந்த சொல்லொண்ணா வெறுப்பிற்கான காரணம்.


         என் பள்ளி நாட்களில் ஆசிரியர் என்றாலே அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பும் அவர் கொடுக்கும் அடிகளும் தான் என் நினைவிற்கு வரும்.  பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையாக எனக்கு காட்சியளித்தது. பள்ளிக்கூடம் போகக்கூடாது  என்பதற்காக நான் சுடுகாட்டில் பதுங்கிக்கொண்ட அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.  சுடுகாட்டைவிட பள்ளிக்கூடம் எனக்கு அதிக பயத்தை அளித்தது.  ஏன் இப்படி? இவை எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்தும் அவலம்  என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த கட்டுரையை நான் எழுதுவதன்   நோக்கம் ஆசிரியர்களை குறைக்கூறுவதற்க்கன்று. மாறாக, ஆசிரியர்களிடம் என்னை போன்ற மாணவர்கள் எப்பண்புகளை எதிர்பார்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தத்தான்.


         ஒரு நல்ல ஆசிரியருக்கு கையில் பிரம்பு தேவையே இல்லை.  ஒரு மாணவனை அடிப்பதன் மூலம் அவனை படிக்க வைத்துவிடமுடியும் என்று நினைப்பது அறிவீனம்.  ஒரு மாணவனை அடிப்பதால் அவனுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத சில ஆசிரியர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். தன் இசையாலும், பாட்டாலும், சிரிப்பாலும், விளையாட்டாலும், ஆர்விமிக்க தகவல்களாலும் மாணவர்களை கவரத்தெரியாத ஆசிரியர்களே பிரம்பின் உதவியை நாடுகிறார்கள்.  மாணவரைக்கவரும்  இவ்வுத்திகளை  தெரியாதவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது அபத்தம்.


         ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடம்  மாணவனுக்கு   புரியாமல் போனால் அது    மாணவனின் குறையில்லை.  மாறாக, அது ஆசிரியரின் குறை. எந்த மாணவனுக்கு எந்த முறையில் விளக்கினால் அவனுக்கு  விளங்கும் என்பதை கண்டறிந்து அம்முறையில் கற்பிப்பதுதான்  கைதேர்ந்த ஆசிரியரின் கடமை. அதை விட்டுவிட்டு அடியாள் மாதிரி கம்பை கையில் எடுப்பது ஒரு சிறந்த ஆசிரியருக்கு அழகல்ல.


         ஒரு மாணவன் ஒழுக்கக் குறைவான செயல்களை செய்யும்போதும், பல முறை சொல்லியும் கேட்காமல் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும்போதும் கண்டித்து தண்டிக்கபட வேண்டியவனாகிறான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.  ஆயினும்,  "இம்மாணவன்  நான்  சொல்லிக்கொடுப்பதை விளங்கிக்கொள்வதே இல்லை",  "இவன் குறைவான மதிப்பெண் வாங்குகிறான்", "இவன் படிப்பில் மந்தம்"  என்ற இதுபோன்ற சில காரணங்களுக்காக மாணவர்கள் அடிக்கப்படுவதை  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  இக்காரணங்களை நானாக கண்டுபிடித்து எழுதவில்லை. இவை எல்லாமும்  என் பள்ளி வாழ்க்கையில் நான் கண்ணால் கண்டதும் காதால் கேட்டவையும் தான் .


         ஒரு நல்ல ஆசிரியரானவர்  மாணவரோடு  மாணவராக சேர்ந்து  தானும் ஒரு மாணவனாகவே மாறி அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.  மாணவர்களுக்கு அவர் ஒரு முன் மாதிரியாக நடந்து மாணவர்களையும் அவ்வழியில் நடக்க அறிவுரை வழங்குகிறார். பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமல்லாமல் வாழ்கைக்குவேண்டிய நெறிகளையும்  வேறு சில இன்றியமையாத செய்திகளையும்   சேகரித்து மாணவர்களுக்கு போதிக்கிறார்.  மாணவர்களிடம் எப்போதும் அன்பாகவே நடக்கிறார். இதை ஆசிரியர்கள் கவனிப்பார்களா?

    தனிமனிதனும் சமுதாயமும்!

    By: Unknown On: 07:29
  • Share The Gag


  • இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது!


    சிறைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான். எதை நோக்கி ? பணம் , புகழ், அதிகாரம், அந்தஸ்து இப்படி பட்டியல் நீள்கிறதே அதை நோக்கி.


    எவரும் தம்முடைய வாழ்க்கையை தாம் தீர்மானிப்பதாக தெரியவில்லை. அதிலும் இந்தியா கலாச்சாரம் மிக்க நாடு என்ற பெருமை கொண்டுள்ளது. சமுதாயம் கலாச்சாரம, பண்பாடு என்று பழம் பெருமை பேசியே தனிமனித சுதந்திரத்தை காலங்காலமாய் விழுங்கி வருகிறது.


    புதியதாய் மணம் முடித்துக் கொண்ட இளம் தம்பதியினர் சந்தோஷமாய் இருக்கின்றனர். சுற்றி இருப்பவரோ ‘ என்னது ‘ இரண்டு வருடங்களாகியும் ஒரு புழு பூச்சி இல்லாமல் போயிற்றே ? என ஆரம்பித்து அவர்களை கேள்வி கேட்டே அழ வைத்துவிடுவர்.


    கல்வித் துறையில் உள்ள சீர்கேட்டை பெரும்பாலோர் அறிவர். இருந்தும் பட்டம் பெற்ற இளைஞனைப் பார்த்து மக்கள் இன்னும் வேலைக்கு போகலையா? என்றே 90 வயது முதியவர் வரை கேட்டுக்கேட்டே தனிமனிதனை அழித்துவிடுகின்றனர்.


    தந்தை சொல்கிறார் ” நாள் சொல்கிற படிப்பே படி. நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கலாம். வாழ்க்கை என்றால் பணம் தான். மற்ற விஷயங்கள் பணம் வந்துவிட்டால் தாமாக வந்துவிடும். ” மகன் தனக்கு விருப்பமானதை படிக்க முடிவதில்லை. நாங்கள் சொல்கிற பெண்ணை கல்யாணம் கட்டிக்கொள். இல்லையேல் என்னை பிணமாகத்தான் பார்ப்பாய் . இது அன்னையின் வாக்கு.


    சொத்தில் சல்லிக் காசும் தரமாட்டோம். இது அப்பா. இது எனக்கு பிடிக்காத சங்கீதம். இதை நீ எப்போதும் கேட்கக் கூடாது – இது கணவன்.


    நீங்கள் பொதுச் சேவையில் இனி ஈடுபட்டால் நான் என் அம்மா வீட்டுக்கு போய்விடுவேன் – இது மனைவி


    நாம் முதலாளியாக இருந்து கொண்டு இன்று நறுக்கென்று நாலு வார்த்தை திட்டிப் பேசினால்தான் நாளை அவன் நம்மை மதிப்பான். பயம் வரும், – இது முதலாளியின் மனம்.


    குறைவான வருமானம் இருந்தும் கலர் டி.வி. வாங்க திட்டமிட்டு தவனை முறையில் வாங்கி சமுதாய அந்தஸ்து வேண்டுமாம்.


    கடன் வாங்கியாவது ஆடம்பர திருமணம் நம்மலையும் நாலு பேர் மதிக்க வேண்டுமாம்.


    நன்கு தெரிந்த பையனுக்கு தம் பெண்ணைத் தர விரும்பியும் முடியவில்லை. ஜாதகம் பொருந்தவில்லையாம்.


    ஆம் இன்றைய நிலையில் சமுதாயம் ( மற்றவர்கள் ) தனி மனிதனை நெருக்குகின்றன. உண்மையில் நாம் நாமாக வளரவில்லை. வாழவில்லை. பிறர் தீர்மானிப்பதை நாம் செய்து வருகிறோம். பெற்றோர் சொல்வதை குழந்தைகள் பின்பற்றுவது மாதிரியே வயது வந்த பின்னும் பிறருடைய விருப்பங்களுக்கே வாழ்கிறோம். எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு பகவான் ஓஷோ சொல்கிறார். உங்களுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க விட்டு விடாதிர்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே சொந்தம்.


    நான் லிங்கனைப் போன்றோ, நெப்போலியனைப் போன்றோ ஆவதல்ல என்னுடைய விருப்பம் என்னுடைய விருப்பம் என்னுடைய பலம் எவ்வளவு செயலாக்கப்படுகிறது பலவீனம் எப்படி சரிகட்டப்படுகிறது என்பதில்தான் என்னுடைய வாழ்க்கை உள்ளது.


    டாக்டர் மு. வரதராசனார் சொல்கிறார் ” இந்த சமுதாயத்துக்கு பயந்தவன் தனக்கும் சரி, தன்னைச் சுற்றி இருப்போர்க்கும் சரி ஒரு நாளும் நன்மையானதைச் செய்ய மாட்டான்”.


    செம்மறியாடுகள் போன பாதையிலேயே போய் மாயட்டும். சிந்தனை மிக்க இளஞ்சிங்கங்களாகிய நாம் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இருக்கும் சில மாணிக்கங்களை மட்டும் பொறுக்கிக் கொண்டு எஞ்சியவற்றை கரியாக்கி விடுவோம்.


    என்னுடைய சந்தோஷத்தில் அடுத்தவரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது மட்டும் சமுதாயம் பேசட்டும். அந்த மொழியை என் காதுகள் பணிவோடு கேட்கும். அன்போடு அதனை பரிசீலனை செய்வேன். சமுதாயத்தின் குரல் சரியென்றால் அந்த நிமிடமே நான் என்னை மாற்றிக் கொள்வேன். என்றெண்ணி எந்நாளும் இன்பமாய் வாழ்வோம்.