Saturday 30 August 2014

Tagged Under:

பால் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருகிறது? தண்ணீர் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருவதில்லை?

By: Unknown On: 12:10
  • Share The Gag
  •  பாலில் தண்ணீர், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப்பொருட்கள் அடங்கி உள்ளன.

    பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.

    தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 டிகிரி செல்சியஸ். பாலில்
    உள்ள கொழுப்பு 50 டிகிரி செல்சியஸ்ல் உருக ஆரம்பித்து விடுகிறது.
    பாலை காய்ச்சும்போது 50 டிகிரி செல்சியஸ் நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது.

    எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப்படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கிவழிகிறது.
    பால் காய்ச்சும்போது தொடர்ந்து துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழி வதில்லை ஏன்?
    பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும். எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படு கிறது.
    தண்ணீர் காய்ச்சும்போது  ஏன்  பொங்கி வருவதில்லை?
    தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ கிடையாது. எனவே மேற்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.

    0 comments:

    Post a Comment