Wednesday 18 December 2013

Tagged Under: , , ,

இரயில் பயணத்தில்....... ?

By: Unknown On: 19:56
  • Share The Gag



  • ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

    அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

    "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

    அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

    கொஞ்ச நேரம் கழித்து,

    " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

    இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

    "இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

    அதற்கு அந்த தந்தை சொன்னார்,

    "ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."


    "ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

    0 comments:

    Post a Comment