Monday 4 November 2013

Tagged Under: ,

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்!

By: Unknown On: 11:14
  • Share The Gag

  • Photo: பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்  செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .  பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.  வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.  சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்  “ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப் பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும் மின்னே விடுபூ முடி “  சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்  ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும் ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.  வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்  பகல் நீட்டிப்பை காண வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி டு என்பது ஆனி பூ என்பது ஆடி மு என்பது ஆவணி டி என்பது புரட்டாசி இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்  மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை  வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே வ = 1/4 நாழிகை வா= 1/4 நாழிகை வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம் இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது  ~பகல் நீட்டிப்பு~  வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம் ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம் ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்  ~இரவு நீடிப்பு~  கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம் மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம் மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்  நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.  தமிழ் திங்கள் (மாதம்) “““““““““““““““` பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக வழங்கி வந்தன.  அவை:–  மேழம் (சித்திரை) விடை (வைகாசி) ஆடவை (ஆனி) கடகம் (ஆடி) மடங்கல் (ஆவணி) கன்னி (புரட்டாசி) துலாம் (ஐப்பசி) நளி (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவம் (தை) கும்பம் (மாசி) மீனம் (பங்குனி)  இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.  தகவல் - இணையம்

     பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்


    செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .


    பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்... . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.


    வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.



    சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்



    “ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
    ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
    பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
    மின்னே விடுபூ முடி “


     
    சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

    ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
    ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.


    பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.



    வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

    பகல் நீட்டிப்பை காண


    வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் 


    வி என்பது வைகாசி
     

    டு என்பது ஆனி
     

    பூ என்பது ஆடி
     

    மு என்பது ஆவணி
     

    டி என்பது புரட்டாசி
     

    இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
     
    மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

    வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
     

    வ = 1/4 நாழிகை
     

    வா= 1/4 நாழிகை
     

    வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 
    நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
     

    இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது
     

    ~பகல் நீட்டிப்பு~

    வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
     

    ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
     

    ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
     

    ~இரவு நீடிப்பு~

    கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்


    மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
     

    மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
     

    பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

     

    நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

    தமிழ் திங்கள் (மாதம்)


    “““““““““““““““`
     

    பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
    வழங்கி வந்தன.

    அவை:–

    மேழம் (சித்திரை)


    விடை (வைகாசி)


    ஆடவை (ஆனி)


    கடகம் (ஆடி)


    மடங்கல் (ஆவணி)
     

    கன்னி (புரட்டாசி)
     

    துலாம் (ஐப்பசி)
     

    நளி (கார்த்திகை)
     

    சிலை (மார்கழி)
     

    சுறவம் (தை)
     

    கும்பம் (மாசி)
     

    மீனம் (பங்குனி)
     

    இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

    0 comments:

    Post a Comment