Monday 19 August 2013

Tagged Under:

என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் ஜி.எஸ்.எல்.வி. டி -5 ராக்கெட் கவுன்ட் டவுன் திடீர் நிறுத்தம்!

By: Unknown On: 18:14
  • Share The Gag
  • ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.


    114 டன் எடையும், 160 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை, இன்று விண்ணில் செலுத்துவதற்கு ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் இருந்தபோது திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது.என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.


     இந்த ராக்கெட் மூலம் ஜிசாட் –14 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளும், இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படுத்த இருந்தது குறிப்பிடத்தக்கது.


           ISRO’s GSLV-D5 launch from Sriharikota put on hold
    ***************************************************************

     he much awaited launch of India’s geosynchronous satellite launch vehicle-D5 (GSLV-D5), with communication satellite GSAT-14 as payload, from Sriharikota rocket port in Andhra Pradesh was put on hold on Monday.GSLV-D5, one of the most crucial launches for the India Space Research Organisation (ISRO), was scheduled to blast-off at 4.50 pm but the space agency put it on hold at around 4 pm.Official announcement on the reasons behind move is awaited.


    0 comments:

    Post a Comment