Wednesday 14 August 2013

Tagged Under:

இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! பேச்சுப் போட்டி!

By: Unknown On: 22:13
  • Share The Gag


  •  இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!!






    ஆண்டவன் படைச்சதுலயே
    ரெண்டு சிறந்த விஷயம்.

    ஒண்ணு - இந்தியா
    இன்னொன்னு - இந்தியன்ஸ்..

    2020-ல இந்தியா வல்லரசு ஆகணும்.
    அது நம்ம கனவு, இலட்சியம்.

    சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..?

    1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.?
    2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?
    3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?
    இல்ல..
    4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?

    இப்படி இருந்தா தான் வல்லரசா..?

    No..!!

    எந்த ஒரு நாடு
    1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்.,
    4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்பு

    இந்த 5 துறைலயும் தன்னிறைவு
    அடைஞ்சி இருக்கோ அதுதான்
    வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு..

    இதுவரைக்கு இருந்த வல்லரசெல்லாம்
    ஒரே மாதிரி - ஆனா இனிமே
    இந்தியா தான் உலகத்துக்கே முன்மாதிரி

    ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சியை,
    அந்த நாட்டில் இருக்குற குழந்தைகளோட
    கல்விதான் நிர்ணயிக்குது..

    கல்விதுறை வளர்ந்தாலே மத்த
    எல்லா துறையும் தானா வளர்ந்துடும்..

    இவரு பணக்காரரா இருந்தாரு..
    இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
    இவரு பலசாலியா இருந்தாரு..
    இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
    ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
    இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.?

    கல்வி தான் அழியாத சொத்து..

    அதனால நாம எல்லோரும்
    நல்லா படிக்கணும்..

    அது மட்டும் போதுமா நம்ம நாட்ல
    இன்னும் 4 கோடி குழந்தைகளுக்கு
    சரியான கல்வி கிடைக்கல..

    அந்த நிலைமை மாறணும்..

    "எண்ணிய முடிதல் வேண்டும்,
    நல்லனவே எண்ண வேண்டும்.
    பாரதி சொல்றரு..

    இந்த நிலைமை மாறணும்னு
    நல்ல எண்ணம் இருந்தா மட்டும்
    போதாது. நாமளும் எதாவது பண்ணனும்..

    என்ன பண்ணலாம்..?

    நாம எல்லோரும் லீவ் நாள்ல
    பக்கத்தில இருக்கிற கிராமத்துக்கு
    போயி அங்கே இருக்குற குழந்தைகளுக்கு
    எழுத படிக்க Help பண்ணணும்..

    அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
    கம்மியா Home work குடுத்து
    நமக்கு Help பண்ணனும்..

    நம்ம வீட்டை சுத்தி, ஸ்கூலை சுத்தி
    மரம் நட்டு வளர்க்கணும்..

    நம்ம நாடு வளர இந்த மாதிரி
    சின்ன சின்ன விஷயங்கள
    நாம செஞ்சாலே போதும்..

    இதெல்லாம் நீங்க பண்ண
    போறீங்களான்னு சந்தேகமா பாக்காதீங்க..
    கண்டீப்பா பண்ணுவோம்

    நாங்கல்லாம் ஒரு தடவை முடிவு
    பண்ணிட்டா.. எங்க பேச்சை நாங்களே
    கேக்க மாட்டோம்..

    சரி.. இப்ப கஷ்டப்பட்டு நல்லா
    படிச்சிட்டோம்.. அது மட்டும் போதுமா.?

    இனிமே தான் இருக்கு முக்கியமான
    மேட்டர்..

    இன்னிக்கு இந்தியா தான் உலகிலயே
    மிக இளமையான நாடு..

    117 கோடி மக்கள்ல 54 கோடி பேர்
    இளைஞர்கள்..

    திறமையும், உழைப்பும் இருக்குற
    பெரிய இளைஞர் சக்தி நம்ம பலம்..

    ஆனா இந்த மாபெரும் இளைஞர் சக்தி
    " டாலர் " கனவுல தன் அறிவையும்
    உழைப்பையும் வேற நாட்டு
    வளர்ச்சிக்காக பயன்படுத்திட்டு இருக்கு..

    அமெரிக்கா டாக்டர்கள்ல - 38% இந்தியர்கள்..

    நாசா விஞ்ஞானிகள்ல - 36 % இந்தியர்கள்..

    பில்கேட்ஸ் கம்பியூட்டர் கம்பெனியில
    - 34 % இந்தியர்கள்..

    நம்ம ஆளுங்களால தான் அமெரிக்கா
    இன்னிக்கு வல்லரசா இருக்கு..

    இப்ப புரியுதா..
    இந்தியா தான் டாப்பு..
    அமெரிக்கால்லாம் வெறும் டூப்பு..!!

    உலகத்தையே கட்டி ஆளுற திறமை
    இருக்கிற இந்திய இளைஞர்கள்
    நம்ம நாட்டு வளர்ச்சியில அக்கறை
    காட்டினா நாம தானே அடுத்த வல்லரசு..

    நேற்றைய உலகம் அமெரிக்கா கையில்......!
    இன்றைய உலகம் சைனா கையில்......!
    நாளைய உலகம் நம் கையில்......!!

    ஜெய் ஹிந்த்..!!

    0 comments:

    Post a Comment