Wednesday 21 August 2013

Tagged Under:

கவிதைகள் சில...

By: Unknown On: 18:25
  • Share The Gag

  • முள்ளின் திறமையை பார்
    காலால்
    மிதித்தவனை
    கையால் எடுக்க
    வைக்கிறது!

    லுவான காரணங்கள்
    வலுவான வெற்றியை
    தேடி தரும்...

    வாழ்வில்
    தோல்வி அதிகம்
    வெற்றி குறைவு
    என வருந்தாதே ....
    செடியில் இலைகள்
    அதிகம் என்றாலும்,
    அதில் பூக்கும்
    ஒரு சில மலருக்கே
    மதிப்பு அதிகம்.

    ன் புன்னகையில்
    என் வாழ்கையை
    தொலைத்தேன்.
    உன் மௌனத்தில்
    என் இதயத்தை
    தொலைத்தேன்.
    ஆனால் ,
    உயிரே உன் நினைவுகளை
    மட்டும் தொலைக்க
    முடியவில்லை...

    லகத்தில்
    உறவுகள் இறுதி வரை
    வருமா என்று
    தெரியாது.
    ஆனால்,
    உண்மையான நட்பு
    இதயத்தின்
    ஓசை கேட்கும்
    வரை வரும்...

    மெளனமாக தான்
    அழுகின்றேன்
    ஆனாலும்,
    எப்படியோ தெரிந்துவிடுகிறது !
    என்
    கண்களுக்கு...

    வாழ்வதும் , வெல்வதும்
    ஒருமுறை தான்!
    அது
    யாருக்காக என்பது மட்டும்
    தெரிந்தால்
    வாழ்க்கையின்
    அர்த்தம்  புரிந்துவிடும்!


    கொண்டு செல்ல
    எதுவும் இல்லை
    உலகில்...
    கொடுத்து செல்ல
    எல்லாம் உள்ளது
    உடலில்.
    காலம் காத்திருப்பதில்லை
    ஆனால் நம்மை
    நேசிக்கும் உண்மையான
    இதயம் நமக்காக
    நிச்சயம் காத்திருக்கும்!

    0 comments:

    Post a Comment