Saturday 28 September 2013

Tagged Under:

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நின்றோம்! பாரதிராஜா வேதனை!

By: Unknown On: 15:23
  • Share The Gag

  • தெலுங்கு– கன்னட நடிகர்களுக்கு தனி சங்கங்கள் இருப்பதுபோல் தமிழ் நடிகர்களுக்கு சங்கம் உருவாக வேண்டும்.நமக்கென்று தனி சங்கங்கள் இருந்திருந்தால் சினிமா நுற்றாண்டு விழா அழைப்பிதழ்கள் நம் வீடு தேடி வந்து இருக்கும்.”என்று டைரக்டர் பாரதி ராஜா வேதனை போங்க குறிப்பிட்டார்.


    இளைய தேவன் இயக்கிய ‘ஞான கிறுக்கன்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர்.



    sep 28 -cine mini

     


    விழாவில் பார்த்திபன் பேசும்போது, “சினிமாவில் ‘ஞான கிறுக்கன்’ போல் இருப்பவர் பாரதிராஜா. அவருக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. சினிமா மேல் பித்து பிடித்த கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் மலை.


    அப்படிப்பட்ட இவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் அவரை கவுரவிப்போம்” என்றார். பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கினார்.



    இதைத் தொடர்ந்து பாரதிராஜா பேசும்போது,”சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார். தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.


    சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில் இருந்தார்கள். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.


    கன்னட– தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடித்தது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.


    தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.”என்று பாரதிராஜா பேசினார்.

    0 comments:

    Post a Comment