Sunday 15 September 2013

Tagged Under:

டி-சர்ட் அணிந்து அலுவலகம் வரத் தடை!: கர்நாடக அரசு அதிரடி!!

By: Unknown On: 17:11
  • Share The Gag


  • அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.அதில் “புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.



    sep 15 Karnataka State Secretariat

     


    அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார் ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் பாவாடை, டி-சார்ட் மற்றும் பேண்ட் ஆகியவற்றை அணிந்து அலுவலகங்களுக்கு வரக்கூடாது.அரசு வாகன டிரைவர்கள் மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீருடையை கட்டாயம் அணிய வேண்டும். அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.”என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


    Karnataka govt to enforce dress code for its employees.
     
    *********************************************** 


     Now a dress code for Karnataka government employees–pant and shirt/pyjama/kurta for men and saree or “chudidar” for women. The state government has announced enforcement of a dress code for its officials and staff after some were found to wear clothes “that did not bring any repute” to the offices. 

    0 comments:

    Post a Comment