Tuesday 29 October 2013

Tagged Under:

அரியலூர் மாவட்டத்தின் வரலாறு!

By: Unknown On: 07:26
  • Share The Gag

  • அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.


    இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில்.


     இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.


    திருக்கோயில்கள்

    அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்

    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி, அரியலூர்

    அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்

    அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர்

    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர்

    முக்கிய ஆறுகள் : கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.

    முக்கிய நகரங்கள் : அரியலூர், ஜெயங்கொண்டம்.

    புகைவண்டி நிலையங்கள் : அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.

    அரியலூர் மாவட்டத்தின் சிறப்புகள்


    சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.


    மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
    வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.


    அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.

    பரப்பு - 1,949.31

    மக்கள் தொகை - 6,95,524 | ஆண்கள் - 3,46763 | பெண்கள் - 3,48761

    உயரம் - கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 249 மீட்டர் (820 அடி)

    0 comments:

    Post a Comment