Tuesday 19 November 2013

Tagged Under: , , ,

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!

By: Unknown On: 08:08
  • Share The Gag


  • படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

    கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

    கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

    பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும்.

    ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

    மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

    தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

    பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்.
    ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

    இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

    மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

    இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

    0 comments:

    Post a Comment