Saturday 2 November 2013

Tagged Under:

நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)

By: Unknown On: 07:15
  • Share The Gag



  • கந்தனும், முருகனும் நண்பர்கள்.

    கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.

    ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.

    உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.

    அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான் என்று சொல்லாதே...நாம் புதையலைக் கண்டோம்..என்று சொல்' என்றான்.

    தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.

    அவர்கள் சிறிது தூரம் சென்றதும்...அந்த மூட்டைக்கு உரியவன் ...கந்தனும்,முருகனும் தனக்கு சொந்தமான மூட்டையை எடுத்து செல்வதைப் பார்த்து அவர்களை நோக்கி
    'திருடன்..திருடன்' என ஓடி வந்தான்.

    உடன் கந்தன் முருகனிடம் ' நாம் ஒழிந்தோம்' என்றான்.

    அதற்கு முருகன் 'இல்லை நண்பா...நீ முன்னால் சொல்லியபடியே சொல்..நீயே மூட்டையை கண்டெடுத்தாய். நாம்..இல்லை...என்று ஓடிவிட்டான்.

    நமக்கு ஆதாயம் வரும்போது நம்முடனும்...ஆபத்து வரும்போது நம்மை விட்டு விலகி இருப்பவனையும் நாம் நண்பனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
    அவர்கள் நம் விரோதியை விட கொடியவர்கள்.

    0 comments:

    Post a Comment