Wednesday 13 November 2013

Tagged Under: ,

அஜீத்தை ரூமுக்குள் வைத்து நான் அடிச்சேன் என்பது பத்திரிகைகளின் கற்பனை! பாலா பதில்!

By: Unknown On: 17:14
  • Share The Gag
  •  

    ‘நான் கடவுள்’ படத்தின் போது அஜீத்துடன் மனஸ்தாபம் இருந்தது உண்மை என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் இயக்குனர் பாலா, தனியார் தொலைக் காட்சியில் நடிகை சங்கீதா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், சங்கீதாவின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார். ‘நான் கடவுள்’ படம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கும் அஜீத்துக்கும் என்ன பிரச்சனை? நீங்க அஜீத்தை ரூமுக்குள் வைத்து அடித்ததாக சொல்கிறார்களே?

    “நான் அடிச்சேன், மிதிச்சேன்னு சொல்றதெல்லாம் பத்திரிகைகளின் கற்பனை! மேலே தெரிஞ்சுக்கணும்னா.. நீங்க அல்ட்டிமேட்டுக்கிட தான் கேட்டுக்கணும்’. ஆனால் எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை.

    தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த மாலையை பற்றி கேட்கப்பட்டது.
    அதற்கு பாலா பின்வருமாறு பதிலளித்தார்…(கழுத்திலிருந்து மாலையை வெளியே எடுத்தப்படியே…) ‘இது அகோரி (பிணம் தின்பவர்கள்) கொடுத்தது. தினமும் ஒரு மனித பிணத்தை தின்பவர்கள். 108 மனிதர்களின் முதுகெலும்புகள், வெவ்வேறு மனிதர்களுடைய முதுகெலும்பின், ஒவ்வொரு துண்டுகளை கொண்டு மண்டை ஓடு வடிவில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    0 comments:

    Post a Comment