Wednesday 6 November 2013

Tagged Under: , ,

மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!

By: Unknown On: 17:32
  • Share The Gag
  • சமீப காலமாகவே மகாத்மா காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன. அந்த வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்ட போது அது ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

    nov 6 - gandhi-spinning

    இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி தனது ஆடைகளுக்கான துணியை சொந்த ராட்டையில் தாமாகவே நூலாக திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்தி வந்தார்.வெள்ளையர் ஆட்சி காலத்தில் சிறைவாசத்தை அனுபவித்த போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தவை புத்தகங்களும், நூல் நூற்பதற்காக பயன்படுத்திய ராட்டையும் மட்டும் தான்
    காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன.அவ்வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்டது.
    இதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 60 ஆயிரம் பவுண்ட்கள் என முல்லாக் ஏல நிறுவனம் அறிவித்திருந்தது.ஆனால், எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமாக அந்த ராட்டை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 878 ரூபாய்) ஏலம் போனது.
    வெள்ளையர் ஆட்சியின்போது அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் மக்களின் நலனுக்காக பாடுபட்ட அமெரிக்க பாதிரியார் ரெவரெண்ட் ஃப்லாயிட் ஏ பஃபர் என்பவருக்கு இந்த ராட்டையை காந்தி அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.ராட்டையுடன் காந்தி தன் கைப்பட எழுதிய இறுதி உயில், கடிதங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் என அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய 60 பழங்கால பொருட்களும் ஏலம் விடப்பட்டன.இதில், காந்தியின் இறுதி உயில் மட்டும் 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    Mahatma Gandhi’s charkha sold for Rs 1.1 crore at UK auction


    ***************************************


    Mahatma Gandhi’s over eight-decade old ‘charkha’ — spinning wheel — one of his most prized possessions that he used in Yerwada Jail during the ‘Quit India Movement’, was Tuesday auctioned in the UK for a whopping 110,000 pounds (Rs. 1.1 crore), nearly double the expected price.

    Read more at: http://indiatoday.intoday.in/story/mahatma-gandhi-gandhi-charkha-gandhi-charkha-auction-yerwada-jail/1/321803.html

    0 comments:

    Post a Comment