Saturday 28 December 2013

Tagged Under: ,

அந்த மூன்றாம் நாள்

By: Unknown On: 23:43
  • Share The Gag




  • ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான்

     மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்..

    ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.

    இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.

    மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான்.

     "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு"

    மகன் மெல்லக்கேட்டான்:

     "மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"

    0 comments:

    Post a Comment