Friday 27 December 2013

Tagged Under: ,

கமலுடன் நடிப்பதற்காகவே விஷ்வரூபத்தில் நடிக்கிறேன் - சேகர் கபூர்

By: Unknown On: 20:27
  • Share The Gag


  • பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ள சேகர் கபூர் உலகநாயகன் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தில் நடித்திருந்தார். விஷ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமான விஷ்வரூபம்-2 படத்திலும் நடித்துவருகிறார்.

    பாலிவுட் படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களையும் இயக்கிவரும் உலகப் பிரபலமான சேகர் கபூர் விஷ்வரூபம் பட வரிசைகளில் “காலனெல் ஜெகநாதனாக” நடித்துவருகிறார்.

    விஷ்வரூபம் படத்தில் தான் நடிப்பதற்கான காரணத்தைப் பற்றிக் கூறியுள்ளார். விஷ்வரூபம் படம் தனக்கு நம்பமுடியாத வாய்ப்பான கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை வழங்கியதாலேயே தான் விஷ்வரூபம் படத்தில் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி நடித்துவரும் விஷ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரலில் வெளியாகலாம் என்று
    எதிர்பார்க்கப்படுகிறது.

    0 comments:

    Post a Comment