Friday 6 December 2013

Tagged Under: , , ,

குளிர்கால ஆலோசனைகள்!

By: Unknown On: 23:28
  • Share The Gag
  • * காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது
     குளிர் காலத்திற்கு பொருத்தமானது.


    * வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை
     உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால
     நோய்கள் ஏற்படாது.


    * ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில்
     ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர
     குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.


     * குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில்
     குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட
     வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
    சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம்.
    கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


    * குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே
     இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு
     வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர
     மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.


    * குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த
     வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள்,
    தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.


    * இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை
     தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய்
     அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.


     * காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது.
    இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்கும்.


    * மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப்
     பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே அணியவும்.


     * அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான
     எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில்
     குளித்தலே நல்லது.


    * குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக்
     கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர்
     தாக்காது.

    0 comments:

    Post a Comment