Wednesday 11 December 2013

Tagged Under: , , , ,

கவலை என்பது எதுவரை? உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.!

By: Unknown On: 06:59
  • Share The Gag

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

    அகல உழுகிறதை விட ஆழ உழு.

    அகல் வட்டம் பகல் மழை.

    அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

    அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

    அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

    அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

    அடக்கமே பெண்ணுக்கு அழகு.

    அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

    அடாது செய்தவன் படாது படுவான்.

    அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

    அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

    அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

    அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

    அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

    அந்தி மழை அழுதாலும் விடாது.

    அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

    அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

    அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

    அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

    அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

    அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

    அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

    அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

    அழுத பிள்ளை பால் குடிக்கும்.

    அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

    அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

    அறச் செட்டு முழு நட்டம்.

    அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

    அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

    அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

    அறமுறுக்கினால் அற்றும் போகும்.

    அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

    அறிய அறியக் கெடுவார் உண்டா?

    அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

    அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

    அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

    அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

    அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

    அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

    அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

    அற்ப அறிவு அல்லற் கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

    அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

    அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

    அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

    அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

    ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

    ஆரால் கேடு, வாயால் கேடு.

    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

    ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

    ஆழமறியாமல் காலை இடாதே.

    ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

    ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

    ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

    ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

    ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

    ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

    ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

    ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

    ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

    ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

    ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

    ஆனைக்கும் அடிசறுக்கும்.

    ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

    ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே...

    இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

    இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

    இஞ்சி இலாபம் மஞ்சளில்.

    இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

    இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.

    இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

    இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

    இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

    இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

    இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

    இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

    இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில் கெட்டவனுமில்லை.

    இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

    இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

    இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

    இருவர் நட்பு ஒருவர் பொறை.

    இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

    இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

    இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

    இளங்கன்று பயமறியாது

    இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

    இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

    இறங்கு பொழுதில் மருந்து குடி

    இறுகினால் களி , இளகினால் கூழ்.

    இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

    இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

    இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

    இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

    ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

    ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

    ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

    ஈர நாவிற்கு எலும்பில்லை.

    உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

    உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

    உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

    உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

    உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

    உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

    உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

    உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

    உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

    உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

    உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

    உலோபிக்கு இரட்டை செலவு.

    உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

    உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

    உளவு இல்லாமல் களவு இல்லை.

    உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

    உள்ளது போகாது இல்லது வாராது.

    உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

    உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்

    உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

    உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

    ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.

    ஊண் அற்றபோது உடலற்றது.

    ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

    ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

    ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

    ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

    ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

    ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

    ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?

    ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

    ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

    ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

    ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

    ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

    ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

    ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்.

    ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

    ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

    ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

    ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

    ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

    ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

    ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

    ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

    ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

    ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

    ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

    ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

    ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

    0 comments:

    Post a Comment