Sunday 1 December 2013

Tagged Under:

காட்சியும் அதன் கவிதையும்!

By: Unknown On: 17:36
  • Share The Gag

  •  
    இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
    ******************************
    உன் சிரிப்பின் அர்த்தம் ...
    புரியாமல் தனிமையில் ....
    தவிர்க்கிறேன் .....!!!
    இவன் என்னிடம் ...
    ஏமார்ந்து விட்டானே ...?
    என்று சிரிக்கிறாயா ...?
    நான் உன்னிடம் காதல் ..
    சொல்ல தாமதமாகியதற்கு ...
    சிரிக்கிறாயா ...?
    ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
    நன்றாக தெரிகிறது ...!!!
    இது காதல் அரும்பும்....
    சிரிப்பல்ல ...!!!



    நீங்கள் உணவு தந்தால் கூட
    நாங்கள் சாப்பிடும் சக்தியை
    இழந்து விட்டோம் ....!!!

    அப்படியென்றால்
    எதற்காக கைநீட்டுகிறாய்...?
    என்று கேட்கிறீர்களா ...?

    நீட்டி நீட்டியே எங்கள்
    கைகள் தானாக நீண்டு
    விட்டன ....!!!



    செல்கிறோம்
    வருத்தி வருத்தி
    உழைக்க செல்கிறோம்
    எதிர் பார்க்கையுடன்
    செல்கிறோம் ....!!!

    செல்லவதை மட்டுமே
    சொல்கிறோம்
    வருவதை மனிதநேயம்
    தான் சொல்ல வேண்டும் ....!!!

    நாங்கள் விடும் கண்ணீர்
    கடல் அன்னைக்கும்
    புரியாது கண்ணீரின்
    சுவையும் உவர்ப்புத்தானே ....!!!



    இந்தா பெண்ணே ...
    இப்போது என்றாலும்
    இதய கதவை திறந்து
    கொள் ....!!!


    சகோதரியே ...!!!
    இந்தவயதில் இருந்து
    சுற்றியல் பிடித்திட்டோமே
    சுற்றியலைவிட
    வண்மையாகிவிடும்
    நம் கைகள் -எம்மை
    வேலைக்கு அழைத்த
    முதலாளி எதையுமே
    பிடிக்காமல் எப்படி
    இதயம் இரும்பாகியது ..?
    அவருக்கு...?





    கட்டிட கலையின்
    அற்புத கலை நாங்கள்...!!!

    கட்டப்பட்ட கட்டிடத்தை
    ரசிப்பவர்களே ....!!!!

    கற்களை இப்படி
    அடுக்குவதும்
    ஒரு கலைதான் ...!!!

    மாயக்கண்கள்
    எம்மை கூலியாக தான்
    பார்க்கும் ....!!!



    அழகையும்
    சிரிப்பையும்
    பார்க்கும்
    உள்ளங்களே
    ஆபத்தும் உண்டு ....!!!
    மறந்து விடாதே ....!!!




    தனிமையில் இருந்தேன்
    தானாக வந்தாய்
    காதல் கொண்டாய்
    இப்போ
    தனிமைப்படுத்தி
    சென்று விட்டாய் ....!!!
    இரு எண்ணத்துடன் ..
    தனிமையாக
    இருப்பதில் சுகம்
    உண்டுதான் கண்ணே ....!!!




    அன்புக்கு கட்டுப்பட்டால்
    அது உனக்கொரு விலங்கு...!!!

    ஆசைக்கு கட்டுப்பட்டால்
    அதுவும் உனக்கு விலங்கு ....!!!

    கோபப்பட்டால் தானாக வரும்
    விலங்கு .....!!!

    வாழ்க்கையில் ஒரு
    விலங்கு வந்தே தீரும்
    விலக்கிக்கொண்டவன்
    ஞானி ....!!!




    தயவு செய்து எம்
    வீட்டை கலைக்காதீர்
    அழகுக்காக எம் வீட்டை
    அபகரிப்பவர்களே
    உங்கள் செயலால்
    அருகி வரும் இனத்தில்
    நாங்களும்
    ஒன்றாகி விட்டோம் ....!!!

    0 comments:

    Post a Comment