Thursday 19 December 2013

Tagged Under: ,

சத்தமில்லாமல் நடந்த 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா!

By: Unknown On: 17:57
  • Share The Gag


  • இன்று சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி  கிரேண்ட் ஹோட்டலில் நடிகர் விஜய்  பத்திரிகையாளர்களை சந்தித்தார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் உடன் இருந்தார்.


    சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தன்னை வைத்து படம் எடுத்த நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்தார்.


    மூன்று தயாரிப்பாளர்களுக்கும், இரண்டு தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் வழங்கினார்.


    இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக, 'ஜில்லா' இசையை வெளியிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்தபோது 'ஜில்லா' இயக்குநர் நேசனும், இசையமைப்பாளர் இமானும் அரங்கத்தில் இல்லை.


    விஜய் மேடையேறியதும், நேசன், இமான் ஆகிய இருவரும் அரங்கத்துக்குள் வந்தனர்.


    விஜய் 'ஜிலலா' இசையை வெளியிட, ஐந்து தயாரிப்பாளர்களும் பெற்றுக்கொண்டனர். 21ல் 'ஜில்லா' இசை வெளியிடப்படும் என அறிவித்துவிட்டு, திடீரென இசை வெளியீட்டை நிகழ்த்தியது ஏன்? என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

    0 comments:

    Post a Comment